Sunday, September 27, 2009

ஹாம் கப்பல் பயணம்

கடந்த ஆண்டு மாமல்லபுரத்தில் நடைபெற்றது போன்று இந்த ஆண்டு கேரளாவில் உள்ள கடலூரில் உள்ள கலங்கரை விளக்கத்தில் இருந்து சிறப்பு கலங்கரை விளக்க ஹாம் வானொலி AT8LHC என்ற பெயரில் செயல்பட்டது. அந்த சிறப்பு நிலையத்தின் புகைப்படங்களைக் காண சொடுக்கவும் http://picasaweb.google.co.in/lionajoy/AT8LHCKadalurPointLightHouseCentenaryILLW#

Ham Radio Cruise 2010 ஆண்டுக்கான ஹாம் கப்பல் பயணத்தினை அமெரிக்க நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது. ஐந்து நாட்கள் கப்பலிலேயே செல்லும் போதே வானொலிகளை உபயோகப்படுத்தவும் ஏற்பாடு செய்துள்ளனர். வித்தியாசமான இந்த நிகழ்வு பற்றி விரிவாக அறிந்து கொள்ள தொடர்புகொள்ள வேண்டிய முகவரி: Cruises by Ashley, 505, New Zealand Reach, Chesapeake, VA 23322, USA. Alt: 757-410-2510, Fax: 757-410-2510, or MOAA Vacations at 1-800-211-5107, Email: ashleytravel@cox.net, http://www.hamradiocruises.com/Contac-2010.html

ஆனைமலை அமெச்சூர் ரேடியோ கிளப்

ஆனைமலை அமெச்சூர் ரேடியோ கிளப் வரும் அக்டோபரில் ஹாம் தேர்வினைப் பொள்ளாச்சியில் நடத்த உள்ளது. அதில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: ANAMALAI AMATEUR RADIO CLUB, SHRI KRISHNAA VITHAYAALAYAM MATRIC SCHOOL, Divansha pudur (Post), Pollachi, Coimbatore (Dt), Tamilnadu. (K.Ibrahim, VU3IRH – 98420 63686)

Sunday, September 20, 2009

ஹாம் பக்கம்

திருச்செங்கோடு அமெச்சூர் சொசைட்டி சமீபத்தில் ஏற்காட்டில் உள்ள ரிபீட்டரை எக்கோ லின்க்குடன் இணைத்துள்ளது. இதன் மூலம் இனி உலக நாடுகளின் ஹாம் உபயோகிப்பாளர்களும் இந்த ரிபீட்டரைப் பயன்படுத்தலாம். அதேப் போன்று இந்த ரிபீட்டரைப் பயன்படுத்தும் ஹாம்களும் பல்வேறு நாடுகளின் ஹாம்களைத் தொடர்பு கொள்ள ஒரு வாய்ப்பாக இது இருக்கும். Echo Link is connected to VU2TCD Repeater.VU2TCD Morning Net 07:00 am to 07:45 am, Evening Net 09:15 pm to 09:45 pm. VU HAM's Thank OM.Paneer VU2PCP taking more efforts to connect the Repeater on Echo Link Round a clock. (VU3IRH- Ibrahim)

Friday, September 18, 2009

நாமக்கல் மாவட்டத்தில் பி.ஜி.பி சமுதாய வானொலி

நாமக்கல் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பி.ஜி.பி கல்வி நிறுவனங்களுக்கு மத்திய அரசானது சமுதாய வானொலி தொடங்க அனுமதி வழங்கியுள்ளது. "பி.ஜி.பி சமுதாய வானொலி" என்ற பெயரில் இயங்க உள்ள இந்த வானொலியானது சமுதாய முன்னேற்றத்திற்கு தேவையான நிகழ்ச்சிகளை ஒலிபரப்ப உள்ளது. இந்த வானொலி பற்றிய மேலதிக விபரங்களுக்கு..

PGP GROUP OF EDUCATIONAL INSTITUTIONS
NH-7, Namakkal - Karur Main Road,
Namakkal - 637207
Tamilnadu, India
Phone : 00 91 4286 267592
E-mail : contact@pgpedu.ac.in

Wednesday, September 16, 2009

தென்கச்சி கோ.சுவாமிநாதன் மறைந்தார்

பிரபல எழுத்தாளரும் ரேடியோ-தொலைக்காட்சி பேச்சாளருமான தென்கச்சி கோ. சுவாமிநாதன் காலமானார்.

சில காலமாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த அவர்சென்னைில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந் நிலையில் இன்று அவர் காலமானார்.

அரியலூர் மாவட்டம் தென்கச்சிப்பெருமாள் நத்தம் என்ற ஊரில் பிறந்த கோ.சுவாமிநாதன் வேளாண்மைப் பட்டதாரி ஆவார்.

தென்கச்சியார் என்று வாசகர்களாலும், வானொலி நேயர்களாலும் அன்புடன் அழைக்கப்பட்ட இவர் தமிழ்நாடு அரசுப் பணியில் விவசாய அலுவலராக வாழ்க்கையைத் தொடங்கி, பின்னர் 1977ம் ஆண்டு முதல் 1984ம் ஆண்டு வரை திருநெல்வேலி வானொலி நிலையத்தின் பண்ணை இல்ல ஒலிபரப்புப் பிரிவில் உதவி ஆசிரியர் பணியாற்றினார்.

பின்னர் அதே பிரிவின் ஆசிரியராகிசென்னைவானொலிக்கு வந்து, அதன் உதவி இயக்குனராக பதவி உயர்வு பெற்று பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.

எளிய குட்டிக்கதைகள் மூலம், வானொலியிலும் தொலைக்காட்சியிலும் இவர் வழங்கிய 'இன்று ஒரு தகவல்' நிகழ்ச்சி தமிழர்களிடையே மிகப் பிரபலம்.

இந்த நிகழ்ச்சியை இவர் நாள் தவறாமல் 14 ஆண்டுகள் தொடர்ந்து வழங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தனது ஊரில் ஊராட்சி மன்றத் தலைவராகவும் இருந்தவர். செல்வ வளம் கொண்ட இவர் எளிமையாக வாழந்தார். மனைவியுடன் சென்னையில் வாழ்ந்து வந்த இவருக்கு ஒரு மகள் உள்ளார்.

சில வாரங்களுக்கு முன் இனிய உதயம் இதழுக்கு பேட்டியளித்த இவரிடம், சிரிக்கச் சிரிக்க கதை சொல்கிறீர்கள்? ஒரு குட்டிக்கதை மூலம் வாசகர்களைக் கண் கலங்கச் செய்ய முடியுமா? என்று நிருபர் கேட்டதற்கு தென்கச்சி சொன்ன பதில்:

நல்ல இதயமுள்ள வாசகர்களைக் கண்கலங்கச் செய்ய இன்றைக்குக் குட்டிக்கதை கூடத் தேவையில்லை. ஒரு வார்த்தை போதும்.

''ஈழத் தமிழர்கள்!''
(Source: http://thatstamil.oneindia.in)

அம்பலம் மின்னிதழுக்கு கொடுத்தப் பேட்டி

வானொலியில் 'இன்று ஒரு தகவல்' மூலம் இலட்சக்கணக்கானவர்கள் மனங்களில் இடம் பிடித்தவரும் சென்னை வானொலி நிலையத்தின் உதவி நிலைய இயக்குநருமான தென்கச்சி கோ.சுவாமிநாதன் அவர்களைச் சந்தித்தோம். அவரது நேர்காணல் இங்கே.

தென்கச்சியைப் பற்றிச் சொல்லுங்கள்?

தற்போதைய பெரம்பலூர் மாவட்டத்தின் கொள்ளிடக் கரையோரத்துச் சிற்றூர். தென்காஞ்சிபுரம் என்பது பழைய பெயர். காஞ்சி பல்லவ மன்னனின் படைவீரர்களின் ஒரு பகுதியினர் குடியேறி உருவான ஊர் இது என்று எங்கள் முன்னோர்கள் சொல்கிறார்கள். அதற்கு ஆதாரமாக பழங்கால கத்திகள் கேடயங்கள் இப்போதும் எங்கள் வீடுகளில் உண்டு.

தென்கச்சி கோ.சுவாமிநாதனைப் பற்றிச் சொல்லுங்கள்?

எங்கள் பகுதியில் சுவாமிநாதன்கள் நிறையபேர் உண்டு. சுவாமிமலை பக்கத்தில் இருப்பது ஒரு காரணம்.

கும்பகோணத்தில் படிக்கிறபோது ஒரே வகுப்பில் நிறைய சுவாமிநாதன்கள் இருந்தோம். அடையாளம் தெரிவதற்காக வகுப்பு ஆசிரியர் ஊர்ப் பெயரையும் சேர்த்துவிட்டார்.

'இன்று ஒரு தகவல்' - என்ற சிந்தனை எப்படி வந்தது?

இந்த சிந்தனை எனக்கு வரவில்லை. சென்னை வானொலி நிலைய இயக்குநர் கோ.செல்வம் அவர்களுக்கு வந்தது.

இதுவரைக்கும் எத்தனை இன்றுகளைக் கடந்திருக்கிறீர்கள்?

இதுவரைக்கு 11 ஆண்டுகளைக் கடந்திருக்கிறேன்.

மறக்க முடியாத இன்று எது?

இன்று ஒரு தகவலை இன்றோடு முடித்துக் கொள்ளுங்கள் என்று என்றைக்கு என்னுடைய அதிகாரிகள் சொல்கிறார்களோ அன்றுதான் எனக்கு மறக்கமுடியாத இன்று.

கதை இல்லாமல் தகவலே சொல்வதில்லையே. தனியாகச் சிறுகதையோ நாவலோ எழுதியதுண்டா?

ஆரம்பகாலத்தில் என்னுடைய இளம் வயதில் ஒருசில சிறுகதைகள் எழுதியது உண்டு. என்னைவிட சிறப்பாக பலபேர் எழுதுவதைப் பார்த்ததும் நான் எழுதுவதை நிறுத்திக்கொண்டேன்.

கொஞ்சம் இழுத்துப் பேசுகிற இந்த கிராமிய பாணிப்பேச்சு எப்போது வந்தது?

இழுத்துப் பேசுவதாக உங்களுக்குத் தோன்றுகிறது. ஆனால் உண்மையில் எனக்குள் நடப்பது என்ன தெரியுமா? மூச்சு வாங்குகிறது. அவ்வளவுதான்.

உங்கள் கிராமிய வாழ்க்கைக்கும் பட்டண வாழ்க்கைக்கும் என்ன வேறுபாடு?

கிராமிய வாழ்க்கையில் பட்டணங்களைக் கனவு கண்டு கொண்டிருந்தேன். பட்டண வாழ்க்கையில் கிராமங்களைக் கனவு கண்டு கொண்டிருக்கிறேன்.

உங்கள் கிராமத்தில் உங்களை மிகவும் கவர்ந்த மனிதர் யார்?

அப்படி ஒருவர் இப்போதும் இருக்கிறார். அவரைத் தினமும் சந்தித்துக்கொண்டிருக்கிறேன் - நிலைக்கண்ணாடியில்!

அரசியலில் கூட்டணி பற்றி ஒரு கதை சொல்ல முடியுமா?

அரசியலைப் பற்றி ஒரு கதை சொல்கிறேன். ஒரு அரசியல்வாதி பேசுகிறார்:

"பொதுமக்களே! நாங்கள் ஆட்சிக்கு வந்தால் முதல் ஐந்தாண்டு திட்ட முடிவில் உங்கள் எல்லாருக்கும் ஆளுக்கு ஒரு சைக்கிள் கொடுப்போம். இரண்டாவது ஐந்தாண்டு திட்ட முடிவில் ஆளுக்கு ஒரு கார் கொடுப்போம். மூன்றாவது ஐந்தாண்டு திட்ட முடிவில் ஆளுக்கு ஒரு விமானம் கொடுப்போம்...!"

கூட்டத்தில் ஒருவர்: "விமானத்தை வைத்துக்கொண்டு நாங்கள் என்ன செய்வது?"

அரசியல்வாதி : "என்ன இப்படி சொல்லிட்டீங்க... இப்போ.. மதுரையிலே ரேஷன் கடையிலே மண்ணெண்ணெய் ஊத்தறதாக கேள்விப்படறீங்க.. உடனே நீங்க உங்க விமானத்துலே ஏறிப்போய்... அங்கே கியூவுலே முதல் ஆளா நின்னுக்கலாமே!"

உங்களுக்கு மிகவும் பிடித்தமான திரைப்பட பாடல் எது? ஏன்?

"பத்தினிப்பெண்' என்கிற படத்தில் வாணி ஜெயராம் பாடியிருக்கிற 'உலகம் என்பது ஒரு வீடு' என்கிற பாடல். காரணம் : அதன் அருமையான கருத்து அற்புதமான இசை.. இனிமையான குரல் எல்லாமும்தான்!

உண்மையைப் போன்ற ஒரு கற்பனையையும் கற்பனையைப் போன்ற ஓர் உண்மையையும் சொல்ல முடியுமா?

இது, விசு அல்லது அறிவொளி ஆகியோரிடம் கேட்க வேண்டிய கேள்வி. முகவரி மாறி என்னிடம் வந்துவிட்டது.

உங்களுக்கு மிகவும் பிடித்தமான நகைச்சுவை நடிகர் யார்? எந்தக் காட்சியில் நீங்கள் வயிறு குலுங்கச் சிரித்தீர்கள்?

நாகேஷ்.

'மெட்ராஸ் டு பாண்டிச்சேரி' என்கிற படம் பார்த்தபோது அப்படிச் சிரித்த அனுபவம் உண்டு.

நீங்கள் வீட்டில் இருக்கும்போது ஏதேனும் ஜோக் அடித்ததுண்டா?

ஜோக் அடிக்க வேண்டும் என்பதற்காக வீட்டை விட்டு வெளியே வருவதுண்டு.

உங்கள் திரையுலக அனுபவம் எப்படி இருந்தது?

திரையுலகத்தில் நீண்ட அனுபவம் ஏதுமில்லை. 'பெரிய மருது' - என்கிற படத்தில் டணால் தங்கவேலுக்குப் பின்னணிக் குரல் கொடுத்தேன். 'காதலே நிம்மதி' - என்கிற படத்தில் நீதிபதியாக கொஞ்சநேரம் வந்தேன்.

அதன் விளைவு -
அதற்குப் பிறகு யாருமே என்னை நடிக்கக் கூப்பிடுவதில்லை!

உங்களுக்குப் பிடித்தது எது? பிடிக்காதது எது?

எனக்கு.. கேட்பது பிடிக்கும்! பேசுவது பிடிக்காது!

உங்களுக்கு மிகவும் பிடித்த சுவாமிநாதன் யார்? பேச்சாளரா? எழுத்தாளரா? உதவிநிலைய இயக்குநரா? குடும்பத் தலைவரா? நடிகரா?

படுத்துத் தூங்குகிற சுவாமிநாதனைத்தான் எனக்கு ரொம்பப் பிடிக்கும். ஏனென்றால் அவரால் யாருக்கும் எந்தவித இடைஞ்சலும் இல்லை!

(நன்றி : அம்பலம் மின்னிதழ் / 31-10-1999)
Via
http://annakannan-interviews.blogspot.com/2005/08/blog-post_112399634088432220.html

Monday, September 14, 2009

சர்வதேச வானொலி - செப்டம்பர் 2009



இந்த இதழில்...
  • இலங்கை வானொலி− ஹட்சன் சமரசிங்கே சிறப்பு செவ்வி
  • ஜெகத்கஸ்பரின் வீரம் விளைந்த ஈரம் - விமர்சனம்
  • விமானங்கள் பயன்படுத்தும் வானொலி அலைவரிசைகள்
சந்தாதாரர்களுக்கு அஞ்சலில் அனுப்பப்பட்டுள்ளது
முழுமையான இதழைப் படிக்க தொடர்பு கொள்ளவும் +91 98413 66086

Sunday, September 13, 2009

புதிய ஐ.ஆர்.சி அறிமுகம்

சர்வதேச வானொலி கேட்கின்ற பெரும்பாலான நேயர்கள் கடிதம் எழுதும் பொழுது இந்த ஐ.ஆர்.சி-யை இணைத்து அனுப்புவர். அது சரி, ஐ.ஆர்.சி என்றால் என்ன? ஆங்கிலத்தில் இண்டர்நேசனல் ரிப்ளே கூப்பன் என்பதன் சுருக்கமே ஐ.ஆர்.சி. இதனை ஐக்கிய நாடுகள் சபையினர் வெளியிடுகின்றனர். உலகின் அனைத்து நாடுகளின் தபால் துறையினரும் இந்த ஐ.ஆர்.சி-யை ஏற்றுக்கொண்டு அந்த அந்த நாட்டின் தபால் தலையை வழங்குவர்.ஒரு சில வானொலிகள் ஐ.ஆர்.சி-யை அனுப்பினால் மட்டுமே வண்ண அட்டை மற்றும் நிகழ்ச்சி நிரல் பட்டியல்களை அனுப்புவர். காரணம் பொருளாதார நெருக்கடி காரணமாக இவை ஐ.ஆர்.சி-யை நேயர்களிடம் கேட்கின்றனர்.

பத்து ஆண்டுகளுக்கு முன்பு சிறிய அளவில் இருந்த ஐ.ஆர்.சி தற்பொழுது தபால் அட்டை அளவில் வெளியிடப்பட்டு வருகிறது. சமீப காலமாக நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை புதிய ஐ.ஆர்.சி-யை வெளியிட்டு வருகின்றது.பாப்புவா நியு கினியா, மத்திய ஆப்பிரிக்கா மற்றும் கிரீன்லாந்து போன்ற நாடுகளின் வானொலிகளுக்கு எழுதும் போது ஐ.ஆர்.சி-யை இணைத்து அனுப்பினால் மட்டுமே பதில் அனுப்புவர். தற்பொழுது உள்ள ஐ.ஆர்.சி வரும் டிசம்பர் 2009-டன் நிறைவடைகிறது.இந்தியாவில் உள்ள தபால் நிலையங்களில் ஒரு ஐ.ஆர்.சி-க்கு ரூ. 15-க்கான தபால் தலைகளை வழங்குவர்.

ஆனால் அதே ஐ.ஆர்.சி-யை இங்கு வாங்க வேண்டும் என்றால் ரூ. 50 கொடுக்கவேண்டும். ஆனால் தற்பொழுது ரூ. 50 கொடுத்தாலும் ஐ.ஆர்.சி கிடைப்பதில்லை.மாநிலத்தின் தலைநகரில் உள்ள தலைமைத் தபால் நிலையங்களில் கூட இன்று ஐ.ஆர்.சி கிடைப்பது அரிதாக உள்ளது. அடுத்த ஆண்டு வெளி வருகின்ற புதிய ஐ.ஆர்.சி-யாவது இந்தியாவில் கிடைக்குமா?வெளிநாடுகளில் உள்ள ஹாம்கள் இந்த ஐ.ஆர்.சி-யை விற்பனை செய்கின்றனர். தேவைப்படுவோர் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரிகள்: Emails: EA5KB@telefonica.net, EA7FTR@gmail.com, EB7AEY@gmail.com