Friday, April 24, 2015

தமிழோசை வானொலி- புதிய சிற்றலை வரிசைகள்

பிபிசி தமிழோசை வானொலியை சிற்றலை வரிசைகள் மூலம் கேட்கும் நேயர்கள் அடுத்த அறிவிப்பு வரும் வரை, எமது வானொலி நிகழ்ச்சியை கீழ்க்கண்ட சிற்றலை வரிசைகள் மூலம் கேட்கலாம்.
பிபிசி தமிழோசை வானொலி நிகழ்ச்சிகளை சிற்றலை மூலம் கேட்கும் நேயர்கள் மறு அறிவித்தல் வரும் வரை, நமது அலைவரிசைகளை புதிய அலைவரிசைகளான 31 மீட்டரில் , 9,900 கிலோ ஹெர்ட்ஸிலும், 22 மீட்டரில், 13,830 கிலோ ஹெர்ட்ஸிலும், 19 மீட்டரில் 15,330 கிலோ ஹெர்ட்ஸிலும் கேட்கலாம்.

Sunday, April 19, 2015

கைதிகள் நடத்தும் வானொலி நிலையம்

மகாராஷ்டிரா மாநிலம், நாசிக் சிறையில் கைதிகளுக்காக கைதிகளே நடத்தும் "சுதார்வாணி' என்ற வானொலி நிலையம் வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது.
இந்த நிலையத்தை மகாராஷ்டிர உள்துறை இணையமைச்சர் ராம் ஷிண்டே தொடங்கிவைத்துப்பேசியதாவது:
கைதிகள் இந்த வானொலியில் வரும் நிகழ்ச்சிகளைக் கேட்பதன் மூலம் நல்ல விஷயங்களைக் கற்றுக்கொண்டு, சிறையிலிருந்து விடுதலையாகும்போது நல்ல குடிமகன்களாக மாறமுடியும் என்றார்.
இந்த வானொலியில் தினசரி காலை 10.30 மணியிலிருந்து மதியம் 1.30 மணி வரை கவிதைகள், பாடல்கள், பலகுரல் திறன், பஜனைப் பாடல்கள் போன்ற நிகழ்ச்சிகள், கைதிகள் பங்குபெற்று கைதிகளாலேயே தயாரித்து வழங்கப்படும். மேலும் அந்தந்தத் துறை நிபுணர்களால் சட்டம், சுகாதாரம் தொடர்பான நிகழ்ச்சிகளும் ஒலிபரப்பப்படும் என்று சிறை கண்காணிப்பாளர் ஜே.எஸ். நாயக் கூறினார்.
Source: http://www.dinamani.com/ First Published : 31 January 2015

Sunday, April 12, 2015

சென்னை லயோலா கல்லூரி சார்பில் திருநங்கைகள் உள்பட 12 பேர்களுக்கு இலவச ரேடியோ வழங்கப்பட்டன

சென்னை லயோலா கல்லூரி செயலாளர் பாதிரியார் ஆல்பர்ட் வில்லியம், கல்லூரியின் முதல்வர் பாதிரியார் ஜோசப் அந்தோணி சாமி ஆகியோர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

சென்னை லயோலா கல்லூரி கல்விக்கோவிலாக விளங்கி வருகிறது. கல்லூரியின் நோக்கம் மாணவர்களுக்கு கல்வி புகட்டுவது மட்டுமல்ல. சமுதாயத்திற்கு சேவை செய்வதும்தான்.

முதலில் கல்லூரியைச்சுற்றி சூளைமேடு, சூசைபுரம், மாகலிங்கபுரம், நெல்சன் மாணிக்கம் சாலை, சேத்துப்பட்டு, எழும்பூர் , பூபதி நகர், நரசிங்கபுரம் ஆகிய இடங்களில் வசிக்கும் மக்கள் குறிப்பாக ஏழை மக்களுக்கு சேவை செய்வதை குறிக்கோளாக கொண்டுள்ளோம்.

அந்த ஏழை மக்களுக்காகவும் அந்த பகுதியில் வசிக்கும் மாணவர்களுக்காக லயோலா கல்லூரியில் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு சமுதாய வானொலி தொடங்கப்பட்டது. அந்த வானொலி மூலம் கல்விச்செய்திகள், மருத்துவ தகவல்கள் ஆகியவற்றை பரப்பி வருகிறோம். பார்வைற்ற மாணவர்கள் பலருக்கு லயோலா கல்லூரியில் வேலைவாய்ப்பை தரக்கூடிய பட்டப்படிப்பை கொடுக்கிறோம்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

பின்னர் அவர்கள் சூளைமேட்டைச்சேர்ந்த திருநங்கைகள் அஸ்வினி, அனுஸ்ரீ மற்றும் பூ விற்கும் பெண்கள் நாகம்மாள், சாந்தி உள்பட மொத்தம் 12 பேருக்கு இலவச ரேடியோ கொடுத்தனர். இந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் பேராசிரியர் ராமமூர்த்தி, பேராசிரியர்கள் எஸ்.வின்செண்ட், பாதிரியார் ஜேக்கப், பேராசிரியைகள் ரேவதி ராபர்ட், அமலி உள்பட பலர் பேசினார்கள்.

Sunday, April 05, 2015

லயோலா கல்லூரி சமூக வானொலி திட்டம்: பல்கலை. மானிய குழு ரூ.10 லட்சம் நிதி

லயோலா கல்லூரியின் சமூக வானொலி திட்டத்துக்கு பல்கலைக்கழக மானிய குழு ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கியுள்ளது. லயோலா கல்லூரியில் சமூக வானொலி திட்டம் கடந்த பத்து ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இத்திட்டத்தின் மூலம் லயோலா கல்லூரியில் 15 கி.மீ சுற்று வட்டாரத்தில் இருக்கும் பகுதி மக்கள் பயனடையும் வகையில் வானொலி சேவை நடத்தப்படுகிறது. இதில் குழந்தை கள், கல்வி, வேலைவாய்ப்பு, மருத்துவம், கலை உள்ளிட்ட பல தலைப்புகளில் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

லயோலா கல்லூரியை சுற்றி யுள்ள சூளைமேடு, நுங்கம்பாக் கம் பகுதியை சேர்ந்த ஏழை எளி யோருக்கு இலவச வானொலிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட ஆய்வுகள் துறை முதல்வர் டாக்டர்.எஸ்.வின்சென்ட் கூறியதாவது:
பத்தாண்டுகளில் இத்திட்டத் தின் வளர்ச்சியை பார்த்து பல்கலைக்கழக மானிய குழு அடுத்த ஐந்தாண்டுகளுக்கு ரூ.10 லட்சம் நிதி தர ஒப்புக் கொண்டுள்ளது. முதல் கட்ட மாக மூன்று லட்சம் ஒதுக்கப் பட்டுள்ளது. இதனால், மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையுடன் இணைந்து செயல்படவும் வாய்ப்பிருக்கிறது. வேறு எந்த சமூக வானொலித் திட்டத்துக்கும் பல்கலைக்கழக மானிய குழு நிதி தருவதில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

கல்லூரியின் முதல்வர் ஜோசப் ஆண்டனி சாமி கூறும்போது, “மாணவர்கள் படிக்கும் போதே தங்களை சுற்றியுள்ள சமூகத்தைப் பற்றி கற்றுக் கொள்ள இத்திட்டம் உதவும் ,”என்றார்.
இத்திட்டத்தின் இணை இயக்கு நர் டாக்டர் ரேவதி ராபர்ட் கூறும்போது, “இந்த ஆண்டு முதல் லயோலா ரேடியோ கிளப் என்பது தொடங்கப்பட்டு மாணவர் களுக்கு வானொலி நிகழ்ச்சி கள் நடத்த பயிற்சி அளித்து மதிப்பெண்கள் அளிக்கப்படு கிறது” என்றார்.

இந்நிகழ்ச்சியில் அஸ்வினி, அனுஸ்ரீ ஆகிய இரண்டு திருநங்கைகள் உட்பட 12 பேருக்கு இலவச வானொலி கள் வழங்கப்பட்டன. மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் நிகழ்ச்சியில் மேலும் 200 பேருக்கு வானொலிகள் வழங்கப்படவுள்ளன.

Source: http://tamil.thehindu.com/ 
Published: February 13, 2015 11:37 IST