tag:blogger.com,1999:blog-37400054.post7860474064319038748..comments2024-02-15T07:56:19.145+05:30Comments on சர்வதேச வானொலி: சீன வானொலி பொது அறிவுப் போட்டிUnknownnoreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-37400054.post-11794533003401846532008-12-26T17:54:00.000+05:302008-12-26T17:54:00.000+05:30வெற்றி எப்.எம். இன் உத்தியோகபூர்வ இணையத்தளம்!வெற்...வெற்றி எப்.எம். இன் உத்தியோகபூர்வ இணையத்தளம்!<BR/>வெற்றி எப்.எம். இன் உத்தியோகபூர்வ இணையத்தளம்!<BR/>வெற்றி எப்.எம். ஒலிபரப்பை இப்பொழுது நேயர்கள் இணையத்தினூடாகவும் கேட்டுமகிழ முடியும். வெற்றி எப்.எம்.இன் உத்தியோகபூர்வ இணைய ஒலிபரப்பு இணைப்பு முகவரி : www.vettri.lkAnonymoushttps://www.blogger.com/profile/04477078673084039715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37400054.post-39885816694095887942008-12-26T17:53:00.000+05:302008-12-26T17:53:00.000+05:30வானொலி வறுவல்கள் 2- நள்ளிரவில் புதியவர்களின் கூத்த...வானொலி வறுவல்கள் 2- நள்ளிரவில் புதியவர்களின் கூத்துக்கள்<BR/>ஒன் எயார்/மைக்ஸ் ஒன்<BR/><BR/>வானொலிகளில் கலையகத்தில் நாங்கள் நிகழ்ச்சி அறிவிப்புக்களில் ஈடுபடும்போது, ஒலிவாங்கிகளை இயங்கக் செய்ய முதல் கலையகத்துக்குள் இருக்கும் மற்றவர்களை எச்சரிக்க பயன்படுத்தும் சமிங்க்ஜை வார்த்தை தான் "மைக்ஸ் ஒன்" அல்லது "ஒன் எயார்"(mic s on/on air).<BR/>இந்த சொல்லுக்குப் பிறகு எல்லோரும் மௌனம் சாதிக்கவேண்டும்-ஒலிவாங்கியில் பேசுவது தவிர.. அத்துடன் கலையகத்துக்கு வெளியே உள்ள சிவப்பு சமிக்ஞ்சை விளக்கு ஒன்று ஒளிர்ந்து உள்ளே ஒலிவாங்கியானது இயங்கிக் கொண்டிருக்கிறது, யாரும் உள்ளே இப்போது பிரவேசிக்கப் படாது என்று சொல்லும்.<BR/><BR/>சொல்லி சொல்லிப் பழகியதால் தனியாக நிகழ்ச்சி செய்யும்போதும், கலையகத்தில் யாரும் இல்லாத போதும் கூட நாங்கள் "ஒன் எயார்" சொல்லி மைக் ஒன் செய்வதுண்டு..<BR/>பழகி விட்டதே,,<BR/><BR/>ஆனாலும் சூரியனில் நான் இணைந்தபின் பத்துக்கும் மேற்பட்ட பயிற்சி அறிவிப்பாளர்கள் புதிதாக சேர்த்துக் கொள்ளப்பட்ட போது அவர்களுக்கு பயிற்சி அளிக்கும் சுகமான சுமை எனக்கும் வந்தது.<BR/><BR/>தேடல் உள்ளவர்களாகவும்,அதிக ஆர்வம் உள்ளவர்களாகவும் இருந்ததால் எங்கள் வேலை இலகுவாக இருந்தது.<BR/>வழமையாக மாதக் கணக்கில் எடுக்கும் பயிற்சியில் ஒரு சில நாட்களிலேயே தேறியவர்கள் இவர்கள்..<BR/><BR/>அப்படியும் சில சுவாரஸ்ய சறுக்கல்கள்.. <BR/><BR/>சில பேர் முதல் தடவை அறிவிப்பில் ஈடுபட்டு விடை பெறும் போது தங்கள் பெயரையே மறந்து போனார்கள்..<BR/>இன்னும் சிலர் சந்தோஷப் பரபரப்பிலே செய்வதறியாது பேசவே தயங்கினர்.<BR/>இன்னும் ஒரு சிலர் செய்தது தான் வேடிக்கையின் உச்சக் கட்டம்.<BR/><BR/>"ஒன் எயார்" சொல்லாமல் ஒலிவாங்கியைத் திறக்க கலையகத்தில் இருந்த மற்றவர்களின் உரையாடல்கள் எல்லாம் சத்தமாகவோ,சன்னமாகவோ ஒலிபரப்பாகியது.. <BR/><BR/>"சரியான குளிர் என்ன.. "<BR/>"அடுத்த பாட்டு ரெடியா?"<BR/>"நான் ஸ்டார்ட் பண்ணுறன்.. நீர் நேயருக்கு வணக்கம் சொல்லும்"<BR/>"கொத்து ரொட்டி ஒத்து வரல்ல போல"<BR/><BR/>இப்படிப் பல சுவாரஸ்யமான உரையாடல்களை அன்று நள்ளிரவு வேளையில் நீங்கள் கேட்டிருக்கலாம்.(நாம் புதியவர்களைத் தயார்படுத்த நள்ளிரவு நேரங்களைத் தெரிவு செய்தது அவர்களின் அதிக தடுமாற்றங்களை வெளிப்படுத்தாமல் இருக்கவே)<BR/><BR/>இன்னும் சில நேரம் ஒலி வாங்கி திறக்கப்பட்ட பின்னர் "ஒன் எயார்" சொன்னதும் உண்டு.. வெளியே இருந்து கேட்டுக் கொண்டிருக்கும் நமக்கு பற்றிக் கொண்டு வரும் கோபமும் எரிச்சலும்.. <BR/><BR/>முதலில் சொல்லாமல் ஒலி வாங்கி திறந்ததுக்காக பிறகு "ஒன் எயார்" சொன்னாங்களோ..<BR/><BR/>ஆனால் இதே காலத்தில் இன்னொரு வானொலியில், செய்தி அறிக்கைக்கு முன்னர் ஒலிவாங்கியைத் திறந்து "மைக்ஸ் ஒன்" சொன்ன சுவாரஸ்யமான கதை உண்டு..<BR/><BR/>#################<BR/><BR/>முதலில் வழங்கியவன்<BR/><BR/>சூரியன் வானொலியில் நாம் பணிபுரிந்த காலத்திலே புதிய பாடல்களை யார் (எந்த வானொலி)முதலில் தருவது என்ற போட்டி சூடுபிடித்திருந்தது..(இப்போதும் இருந்தாலும், வெற்றியில் நாம் அதை பெரிது படுத்துவதும் இல்லை,நேயர்களுக்கும் அது எரிச்சல் ஏற்படுத்துவதை உணர்ந்து கொண்டோம்)<BR/><BR/>இந்தப் போட்டியில் நாமே அடிக்கடி வென்று கொண்டிருந்தோம்.. (இது வேரயா என்று கேட்காதீர்கள்.. அந்தக் காலத்தில் இது ஒரு திரில்)<BR/>புதிய பாடல் போட்டதும் "இந்தப்பாடலை முதலில் வழங்கியவன் உங்கள் முதல்வன் சூரியன் என்று நீட்டி முழங்குவோம்.." (பாடலுக்கிடையிலும் பறை தட்டி முழக்குவோம்)<BR/><BR/>பின்னர் அதை ஒரு பதிவு செய்யப்பட்ட ஒலிக்குறியாக பயன்படுத்த ஆரம்பித்தோம்(அடியேனின் குரலிலே தான்)<BR/><BR/>அதி தீவிர நேயர்களுக்கு (சூரிய வெறியர்கள் என்றே அன்பாகச் சொல்லலாம்) புதிய பாடல்களுக்கிடையில் இந்தக் குரல் ஒலிக்கும் பொது ஷக்தியை வென்றுவிட்ட சந்தோசம்.<BR/><BR/>இதற்காக நாம் முதலாவதாக ஒளிபரப்பாத பாடல்களுக்கிடையிலும் இந்த குரலை ஒலிக்கச் செய்து போட்டி வானொலி நண்பர்களை எரிச்சல் அடையச் செய்வதும் உண்டு.<BR/><BR/>(எத்தனை அநியாயம் செய்திருக்கிறோம்..)<BR/><BR/>இந்த நேரம் தான் வந்த ஒரு சில புதிய அறிவிப்பாளர்களை பழக்குவதற்காக இப்போது என்னோடு வெற்றியில் இருக்கும் அறிவிப்பாளர் ஒருவரை நியமித்தேன்.. (அவரு யாருன்னா ஹீ ஹீ.. நான்கு எழுத்துப் பெயருள்ள ஒரு கணினிக் கெட்டிக்காரர்)<BR/><BR/>அவரும் எல்லாம் சொல்லிக் கொடுத்து இப்போதும் பிரபலமாகவுள்ள (இவர்களும் இப்போது சூரியனில் இல்லை) நண்பர்களை தனியாக நிகழ்ச்சி செய்ய விட்டிருக்கிறார். <BR/><BR/>அதிகாலை மூன்று மணிக்குப் பழைய பாடல்கள் ஒலிக்கும் நிகழ்ச்சியை தற்செயலாக தூக்கத்தில் எழும்பிக் கேட்டுக் கொண்டிருந்த எனக்கு அதிர்ச்சி..<BR/>டி.எம்.எஸ்சும், பீ.பீ.ஸ்ரீநிவாசும் பாடும் பாடல்களுக்கிடையில் "இந்தப் பாடலையும் முதன் முதலாக வழங்கியவன் உங்கள் முதல்வன் சூரியன்"என்று எனது குரல் பைத்தியக்காரத் தனமாக ஒலிக்கிறது..<BR/><BR/>தொலைபேசியில் அழைத்து வானொலியில் பாவிக்க முடியாத வார்த்தைகளால் அர்ச்சனை செய்த பிறகே என் கோபமும் நின்றது.. என் குரலும் நின்றது.. <BR/><BR/>இன்னும் கொஞ்ச வறுவல் பிறகு வரும்.. (நான் இந்த வறுவல் எல்லாம் வறுக்கலையா என்று நண்பர்கள் சிலர் கேட்டிருந்தார்கள்.. ஹீ ஹீ .. அதெல்லாம் இப்பவே சொன்ன எப்படி.. பிறகு சொல்லணுமில்ல)Anonymoushttps://www.blogger.com/profile/04477078673084039715noreply@blogger.com