Tuesday, April 30, 2013

SBS வானொலி தமிழ் ஒலிபரப்பிற்கு வாழ்த்துக்கள்!

SBS Radio
SBS தமிழ் ஒலிபரப்பு இன்று (29 ஏப்ரல் 20013 - திங்கள்கிழமை) முதல் வாரத்தில் நான்கு நாட்கள் ஒலிபரப்பை துவக்கியுள்ளது. SBS வானொலி நிர்வாகிகளும், ஆஸ்திரேலியாவில் இயங்கும் தமிழ் வானொலிகளின் நிகழ்ச்சி தயாரிப்பாளர்களும், பிரதிநிதிகளும், இயக்குனர்களும் SBS தமிழ் ஒலிபரப்பை இப்படி வாழ்த்துகின்றனர். வாழ்த்துக்களைக் கேட்க இங்கே சொடுக்கவும்

Friday, April 12, 2013

எஸ் எல் பி சி வழியான பி பி சி வானொலி ஒலிபரப்பு இடைநிறுத்தம்


பிபிசி வானொலி நிகழ்ச்சிகளை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன பண்பலை சேவை மூலம் ஒலிபரப்புவதென்பதை 26 மார்ச் செவ்வாய்க்கிழமை முதல் பிபிசி இடைநிறுத்திக்கொள்கிறது.
இத்தகவலை பிபிசி உலக சேவையின் இயக்குநர் பீட்டர் ஹோரக்ஸ் வெளியிட்டார்.
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தினால் பிபிசி தமிழோசை நிகழ்ச்சிகள் தொடர்ந்து இடையில் தடுக்கப்படுவது மற்றும் வேறு நிகழ்ச்சிகள் ஒலிபரப்பாவது போன்றவை தொடர்ந்து நடந்ததை அடுத்து இந்த நடவடிக்கை வருகிறது.
"இலங்கையில் எமது நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து கேட்டுவரும் நேயர்களுக்கு இந்த சேவை தரப்படுவதில் ஏற்பட்டிருக்கும் இத்தடை குறித்து நாங்கள் வருந்துகிறோம், ஆனால் எங்களது நிகழ்ச்சிகளை குறிவைத்து இது போன்ற இடைஞ்சல்கள் நடப்பது, அந்த நேயர்கள் எங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை பாரிய அளவில் மீறுவதான ஒரு செயல் இதை பிபிசி அனுமதிக்கமுடியாது." என பீட்டர் ஹோரக்ஸ் தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.
பீட்டர் ஹோரக்ஸ் மேலும் கூறுகையில், "இது போன்ற நிகழ்ச்சித் தடங்கல்கள் கடந்த வாரம் மார்ச் 16 , 17 மற்றும் 18ம் தேதிகளில் நடந்த போது இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துடன் பேசினோம். அவர்கள் எங்களுடன் கொண்டிருக்கும் ஒலிபரப்பு ஒப்பந்த்த்தை மீறும் ஒரு செயல் இது என்று அவர்களுக்கு எச்சரித்தோம். ஆனால் மார்ச் 25ம் தேதி திங்கட்கிழமை மற்றுமொரு தடங்கல் சம்பவம் நடந்ததால், இந்தச் சேவையை உடனடியாக இடைநிறுத்துவதைத் தவிர பிபிசிக்கு வேறு வழிகள் இல்லாமல் செய்துவிட்டது" என்றார்.
"பிபிசியின் நிகழ்ச்சிகள் எவை பற்றியும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்கு குறிப்பான புகார்கள் இருந்தால், பிரச்சினைகளை எங்களிடம் நேரடியாகக் கொண்டுவரவேண்டும் என்று நாங்கள் கோரியிருந்தோம். எங்களால் ஏற்கமுடியாதபடிக்கு ஒலிபரப்பில் நேரடியாக இடைஞ்சல்கள் செய்வது மற்றும் எங்களது நேயர்களை ஏமாற்றுவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடாமல் இருக்க வேண்டும் என்று நான்கள் கேட்டிருந்தோம்" என பீட்டர் ஹோரக்ஸ் தெரிவித்துள்ளார்.
இது போன்ற நடவடிக்கை ஒன்றை பிபிசி 2009ம் ஆண்டில், அதன் சேவைகள் இடைஞ்சலுக்கு உள்ளான போதும் எடுத்திருந்தது.

சிற்றலையிலும் இணையதளம் வழியாகவும் கேட்கலாம்

இலங்கயில் உள்ள எமது நேயர்கள் எமது நிகழ்ச்சிகளை இனி சிற்றலை வரிசைகள் மூலமாகவும், இணைய தளம் மூலமாகவும் கேட்கலாம்.
பிபிசி தமிழோசை ஒலிபரப்பை நேயர்கள் சிற்றலை ஒலிபரப்பு வரிசைகள்
  • 25 மீட்டர் பேண்டில், 11965 கிலோஹெர்ட்ஸ்,
  • 31 மீட்டர் பேண்டில் 9855 கிலோஹெர்ட்ஸ்
  • 49 மீட்டர் பேண்டில் 6135 கிலோஹெர்ட்ஸ் மற்றும்
  • 41 மீட்டர் பேண்டில் 7600 கிலோஹெர்ட்ஸ்
ஆகையவை மூலம் வரும் மார்ச் 30ம் தேதிவரை கேட்கலாம்.
மார்ச் 31 முதல் புதிய அலைவரிசைகள் அமலுக்கு வரும். அப்போது புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகும்.
எமது இணையதளம் வழியாகவும் தமிழோசை நிகழ்ச்சிகளை நேயர்கள் கேட்கலாம்.
நன்றி!

ஈழம் தொடர்பில் வானொலி

வானொலி சேவை ஆரம்பத்துடன் ஈழம் தொடர்பில் அடுத்த கட்ட நகர்வை ஆரம்பித்துள்ளனர் தமிழக மாணவர்கள்!


ஈழ ஆதரவு மாணவர் போராட்டம் தற்போது அடுத்தகட்டத்திற்கு நகரவுள்ளது. இதுதொடர்பான தகவலை தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பின் மணிகண்டன் விடுத்துள்ள அறிக்கையில் தமிழீழ விடுதலைக்காக நடைபெற்றுக் கொண்டிருக்கும் மாணவர்களின் போராட்டமானது ஒரு மாதம் நிறைவடைந்துள்ள நிலையில் ஐநா வாக்கெடுப்புக்குப் பி்ன்னர் மாணவர்களது போராட்டமானது ஈழத்தில் நடந்தவற்றை அதன் வரலாற்றை போராட்ட களத்தில் கலந்து கொள்ளாத சக மாணவர்களுக்கு எடுத்துச் செல்லும் பணியை அனைத்து மாவட்டங்களிலும் திறம்பட செய்து கொண்டுள்ளோம்.
  
அவ்வகையில் கல்லூரி திறந்த நாள் முதல் தினமும் காலை 11மணியிலலிருந்து 11:02 வரையிலான இரண்டு நிமிடங்களுக்கு இருக்கும் இடத்திலேயே எழுந்து நின்று மௌனம் கடைபிடிக்கிறோம். இது இறந்த தமிழர்களுக்கான அஞ்சலி அல்ல. நம் தமிழ் இனம் பட்ட வலியை இவ்வுலகம் உணர்வதற்காக நடத்தப்படும் மௌனப் போராட்டம். ஐநா மன்றம் மூடிய காதுகளை திறக்கும் வரையில் இந்த மௌன போராட்டம் தொடரும். ஐ.நா.மன்றம் தன்னுடைய பொறுப்பை தட்டிக்கழிப்பதாகவே உணர்கிறோம். எனவே அடுத்தகட்டமாக ஐ.நா.வை வலியுறுத்தி எங்கள் போராட்டத்தை துவக்கப் போகிறோம். ஈழத்தில் நடந்த கொடுமைகளையும் வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டியதன் தேவையையும் மனித நேயம் கொண்ட உலக பொதுமக்கள் மற்றும் உலக மாணவர்களிடம் எடுத்துசெல்கிறோம்.
 
அடுத்த வாரம் மாணவ கூட்டமைப்பை சேர்ந்த சில மாணவர்கள் தலைநகர் டெல்லி சென்று அங்குள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்திற்கு சென்று மாணவர்களிடம் ஈழத்தில் வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டிய நியாயமான கோரிக்கைகளை எடுத்துரைத்து மௌன போராட்டத்திற்கு அந்த மாணவர்களின் ஆதரவையும் கோரவுள்ளோம். தொடர்ந்து அடுத்த கல்வியாண்டு தொடக்கத்திலிருந்து இதே போன்று அனைத்து மாநில மாணவர்களை சந்திப்பதற்கான திட்டத்தை வடிவமைப்போம். தமிழக மாணவர்களின் முறையீட்டு மடல் 20க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு அனைத்துலக மாணவ சமுதாயத்திடம் கொண்டு சேர்க்கும் பணியை தொடர்ந்து மேற்கொள்வோம்.
 
பல்வேறு கல்லூரியில் தொடர்ந்து நடத்தப்பட்டுக்கொண்டிருக்கும் மாணவர்களின் இந்த அறவழியிலான நூதன போராட்டத்திற்கு சில கல்லூரி நிர்வாகம் தடை போடுகிறார்கள். மாணவர்களின் இந்த அறவழி போராட்ட முறையில் சில கல்லூரி நிர்வாகங்களுக்கு நம்பிக்கையில்லாமல் போவது வருந்தத்தக்க கண்டிக்கத்தக்க செயல். இந்த மௌன போராட்டத்திற்கு தடை விதிக்கும் கல்லூரிகளின் பட்டியல் விரைவில் வெளியிடப்படும். அந்தக் கல்லூரிகளை அந்த மாவட்டத்திலுள்ள மற்ற கல்லூரி மாணவர்கள் முற்றுகை போராட்டம் நடத்துவார்கள்.
 
கடந்த 60 ஆண்டு கால ஈழ வரலாற்றை தாங்கி நிற்கும் www.supporttamileelam.org என்ற இணைய முகவரியையும் வாக்கெடுப்பு நடத்துங்கள் (We Want Referendum) என்ற வாசகத்தையும் கொண்ட பேட்ஜ் அணிந்து கல்லூரி செல்வோம். இலங்கையில் தமிழ் இனப்படுகொலை நடத்திமுடிக்கப்பட்டதாக சொல்லப்படும் மே மாதம் 18ம் தேதி அனைத்து மாவட்ட தலைநகரிலும் மாணவர்கள் மற்றும் ஆதரவாளர்கள் பங்கேற்கும் பேரணி நடத்தப்படும். மாலை 4 மணிக்கு தொடங்கும் இந்தப் பேரணி அந்தந்த மாவட்டங்களில் எந்த இடத்தில் தொடங்கி எந்த இடத்தில் முடியும் என்பது பின்னர் அறிவிக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.
 
இதற்கிடையே, தமிழ் நாடு மாணவர் கூட்டமைப்பு சார்பாக வரும் 13ம் தேதி சென்னை எழும்பூர் இம்பீரியல் ஹோட்டலில் தமிழகம் முழுவதிலிருந்தும் அனைத்து மாவட்ட மாணவர் கூட்டமைப்பு பிரதிநிதிகள் கலந்து கொள்ளவுள்ளனர்.
 
மாணவர்களின் வானொலி
 
இந்த நிலையில் தமிழீழ மாணவர் அமைப்பு வானொலி ஒன்றை தொடக்கியுள்ளது. மக்கள் மத்தியில் மாணவர் போராட்டம் குறித்தும் இலங்கை இனப்படுகொலை குறித்தும் தகவல்களை கொண்டு சேர்க்கும் விதமாக இணையதள வானொலி ஒன்றை தொடஙகியுள்ளனர். இந்த வானொலி தற்போது ஒலிபரப்பை தொடங்கி நடத்தி வருகிறது.
 
இதற்கிடையே தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு சார்பாக கோவையில் வருகிற 20,21 தேதிகளில் நடைபெற இருக்கும் போற்குற்றமல்ல இனப்படுகொலையே. இலங்கை அல்ல தனி தமிழீழமே என்ற புகைப்பட ஓவிய கண்காட்சி , காணொளி திரைகாட்சி மற்றும் கருத்தருங்கினை ஏற்பாடு செய்வதில் மாணவர்கள் முழுவீச்சில் தங்களை ஈடுபடுத்தி கொண்டுள்ளனர்.
 
மேலும் இக்கண்காட்சியில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளோடு கையெழுத்து இயக்கம் மற்றும் மாதிரி பொது வாக்கெடுப்பு நடத்த இருப்பது குறிப்பிடத்தக்கது. இக்கண்காட்சியின் நோக்கம் மாணவர் போராட்டத்தை மக்கள் போராட்டமாக மாற்றுவதோடு மட்டுமல்லாமல் தமிழீழம் பற்றிய விழிப்புணர்வை அனைத்து தரப்பு மக்களிடமும் கொண்டு சேர்ப்பதற்காக முதற்கட்ட பணியாக தொடங்க உள்ளனர்.

சீன-தெற்காசிய பொருட்காட்சித் தலைப்புப் பாடல் தேர்வு



இவ்வாண்டு ஜுன் திங்கள் முதலாவது சீன-தெற்காசிய பொருட்காட்சி சீனாவின் யுன்னான் மாநிலத்தின் குன்மிங் நகரில் நடைபெறும். இதை முன்னிட்டு, சீனாவுக்கும் தெற்காசிய நாடுகளுக்கும் இடையில் பண்பாட்டுப் பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பைத் தூண்டும் வகையில், இப்பொருட்காட்சிக்குத் தலைப்புப் பாடல் சேகரிப்பு நடவடிக்கை அதிகாரப்பூர்வமாகத் துவங்கியுள்ளது. சீன வானொலி நிலையமும் குன்மிங் நகரமும் தெற்காசிய பிரதேசத்தின் பல்வேறு துறையினர்களிடையில் தலைப்புப் பாடலையும் பாடல் வரிகளையும் சேகரிக்கும்.இந்தப் பாடல் மற்றும் பாடல் வரிகள், அருமையான இராயகமும் ஆழ்ந்த அர்த்தமுள்ள உள்ளட்டக்கமும் கொண்டு, ஒன்றுக்கொன்று திறப்பு, நடைமுறை ஒத்துழைப்பு, ஒன்றுக்கொன்று நலன் மற்றும் கூட்டு வெற்றி, இசைவான வளர்ச்சி ஆகியவை படைக்கும் சீன-தெற்காசிய பொருட்காட்சியின் தலைப்பை வெளிப்படுத்த வேண்டும். யுன்னான் மற்றும் தெற்காசிய நாடுகளின் வண்ணமயமான தேசிய இனப் பண்பாட்டையும் பண்பாட்டுடன் நெருங்கிய பழக்கவழக்கங்களையும் வெளிப்படுத்த வேண்டும். மொழி, பாணி மற்றும் வடிவம் எந்த கட்டுப்பாடுமின்றி உயர் கலை வெளிப்பாட்டுடன், வேறுபட்ட பண்பாட்டுப் பின்னணியிலுள்ள இரசிகர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டு பரவது போல இப்பாடல் அமைய வேண்டும்.தமிழ் நண்பர்களை இந்தப் பாடல் சேகரிப்பு நடவடிக்கையில் ஆக்கமுடன் கலந்து கொள்ள வரவேற்கின்றோம். உங்கள் படைப்பை இவ்வாண்டு ஏப்ரல் 26ஆம் நாளுக்கு முன் வான் அல்லது மின்னஞ்சல் மூலம் சீன வானொலி தமிழ்ப் பிரிவுக்கு அனுப்பலாம்.

சீன-தெற்காசிய பொருட்காட்சித் தலைப்புப் பாடல் தேர்வுப் படிவம்
பாடல் தலைப்பு:

பாடல் அறிமுகம்:

பெயர்:

குடியுரிமை:

அடையாள அட்டை:

அடையாள அட்டை எண்:

பங்கெடுப்பு: □இசையமைப்பு □பாடல் வரி □பாடகர்/பாடகி

முகவரி:

அஞ்சல் எண்:

மின்னஞ்சல்:

தொலைபேசி/கைபேசி:

தொலைநகல்:

கையொப்பம்:

தேதி:

சீன வானொலி கட்டுரை போட்டி

                                                                             அன்புள்ள நண்பர்களே, இவ்வாண்டின் ஆகஸ்ட் திங்கள் முதல் நாள் சீன வானொலி தமிழ்ப் பிரிவு தனது பொன் விழா நாளை கொண்டாடவுள்ளது. இதனை முன்னிட்டு, தமிழ்ப் பிரிவின் பொன்விழாவுடன் நட்புறவு எனும் கட்டுரை போட்டியை நடத்துகின்றோம். இப்போட்டிக்கான கட்டுரைகளை மே திங்கள் 31ம் நாளுக்குள் அனுப்பி வைக்க வேண்டும். தமிழ்ப் பிரிவுடன் உங்களது சுவைமிகு அனுபவங்களை எழுதி எங்களுக்கு அனுப்புங்கள். கிடைக்கப் பெற்ற கட்டுரைகளிலிருந்து சிறந்தவற்றைத் தேர்ந்தெடுத்து தமிழ்ப் பிரிவின் இணையத்தளம் மற்றும் வானொலி நிகழ்ச்சியில் வழங்குவோம். 

மொத்தம், 3 முதல் பரிசுகள், 5 இரண்டாம் பரிசுகள், 10 மூன்றாம் பரிசுகள் வழங்கப்படும். இணையத்தளத்தில் மிகவும் விரும்பும் கட்டுரைக்கு வாக்களிக்க வேண்டுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நடப்புப் போட்டியில், அதிக வாக்குகளைப் பெற்ற கட்டுரையை எழுதியவருக்கு சிறப்புப் பரிசை வழங்குவோம்.
மேலும், ஏதாவது ஒரு தமிழ் ஊடகத்தில் உங்கள் கட்டுரை வெளியிடப்பாட்டால், அந்தக் கட்டுரைக்கு ஒரு சிறப்புப் பரிவு உண்டு.
நண்பர்களே, கட்டுரைப் போட்டியில் உற்சாகத்துடன் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

தமிழ் பேசும் சீன வானொலி

"தேமதுரத் தமிழோசை உலகமெங்கும் பரவும் வகை செய்தல் வேண்டும்" என்ற மகாகவியின் கனவினை மெய்பிக்கும் விதமாக வேற்று நாட்டினர் மொழியினைக் கற்று, திறம்படக் கையாண்டு, தமிழோசையைப் பரப்புவது சிறப்பான விஷயமல்லவா? இப்பணியை தான் தொடர்ந்து 50 வருடங்களாக செம்மையாக செய்து வருகின்றனர் சீன வானொலியின் தமிழ்ப் பிரிவினர். 61 உலக மொழிகளில், ஹிந்தி, வங்காளம், தமிழ் என்ற மூன்று இந்திய மொழிகளில் நாள்தோறும் குறிப்பிட்ட நேரங்களில் நிகழ்ச்சிகளை தருகிறது சீன வானொலி. தமிழ் பேசும் சீன வானொலி தமிழ் வர்ணனையாளர்கள் ஒவ்வொருவரும் தனி ரகம். அவர்கள் புத்தாண்டு நிகழ்ச்சியில் தத்தம் விருப்பங்களைச் சுவையான முறையில் தரும் போது, தமிழை மேன்மேலும் கற்றுச் சிறக்க வேண்டும் என்று கூறியதைக் கேட்ட போது, தமிழொலியும் தமிழோசையும் பரப்பும் இந்தத் தமிழ்க் காவலர்களைப் பல்லாண்டு வாழ வேண்டும் என்று வாழ்த்தத் தோன்றியது.
எத்தனை தான் கணிப்பொறியும் தொலைக்காட்சியும் இருந்த போதும், தமிழகம் மட்டுமின்றி உலகெங்கிலும் அதைப் பலரும் கேட்டுப் பயன்பெறுவதை மின்னஞ்சல் மூலமும் நேருக்கு நேர், நேயர் நேரத்தில் குரல்களின் மூலம் கேட்கும் போது, அவர்களது தமிழ்ப் பணி மேலும் சிறப்பாகத் தொடர நல்வாழ்த்துக்களை தமிழ் விரும்பும் அனைத்து நெஞ்சங்களின் சார்பாகக் கூற விரும்புகின்றேன். வானொலியின் பணி தொடர்ந்து, தமிழ் நேயர்களுக்கு சீனா பற்றிய செய்திகள் பலவற்றையும் அறியும் வாய்ப்பினை ஏற்படுத்தி, மேன்மேலும் வளர யாவரும் வாழ்த்துக் கூறுவோம்.தற்போது இவ்வானொலியின் பொன்விழாவினையொட்டி ஒரு கட்டுரை போட்டியையும் அறிவித்துள்ளனர். சீன வானொலியுடனான நட்பினை வெளிப்படுத்தும் படியான கட்டுரையாக இது இருக்க வேண்டும். மே மாதம் 31 ம் தேதி வரை கட்டுரைகளை அனுப்பலாம்.
- நமது செய்தியாளர் சித்ரா சிவக்குமார்
நன்றி: http://www.dinamalar.com

இவ்வாண்டின் ஆகஸ்ட் திங்கள் முதல் நாள் சீன வானொலி தமிழ்ப் பிரிவு தனது பொன் விழா நாளை கொண்டாடவுள்ளது. இதனை முன்னிட்டு, தமிழ்ப் பிரிவின் பொன்விழாவுடன் நட்புறவு எனும் கட்டுரை போட்டியை நடத்துகின்றோம். இப்போட்டிக்கான கட்டுரைகளை மே திங்கள் 31ம் நாளுக்குள் அனுப்பி வைக்க வேண்டும். தமிழ்ப் பிரிவுடன் உங்களது சுவைமிகு அனுபவங்களை எழுதி எங்களுக்கு அனுப்புங்கள். கிடைக்கப் பெற்ற கட்டுரைகளிலிருந்து சிறந்தவற்றைத் தேர்ந்தெடுத்து தமிழ்ப் பிரிவின் இணையத்தளம் மற்றும் வானொலி நிகழ்ச்சியில் வழங்குவோம். மொத்தம், 3 முதல் பரிசுகள், 5 இரண்டாம் பரிசுகள், 10 மூன்றாம் பரிசுகள் வழங்கப்படும். இணையத்தளத்தில் மிகவும் விரும்பும் கட்டுரைக்கு வாக்களிக்க வேண்டுமாறு கேட்டுக்கொள்கின்றோம். இணையதள முகவரி: ://tamil.cri.cn வான் அஞ்சல் முகவரி: TAMIL SERVICE CRI-9, CHINA RADIO INTERNATIONAL P.O.Box 4216, BEIJING P.R.CHINA 100040 மின்னஞ்சல் முகவரி: tamil@cri.com.cn
- Nilaani Beijing,china

Thursday, February 14, 2013

சீன வானொலி பொது அறிவுப்போட்டி முடிவுகள்


கவர்ந்திழுக்கும் ஹெய்நான் எனும் பொது அறிவுப்போட்டி கடந்த ஆண்டின் அக்டோபர் முதல் நாள் தொடக்கம் நவம்பர் 30ம் நாள் வரை நடைபெற்றது. கடந்த நவம்பர் திங்களின் நடுப்பகுதி முதல் டிசம்பர் திங்களின் இறுதி வரை, பொது அறிவுப் போட்டிக்காக அனுப்பிய பல்வகை விடைத்தாட்களின் மொத்த எண்ணிக்கை, 61ஆயிரத்து 857ஆகும். அவற்றில், வானஞ்சல் மூலமாக கிடைத்த விடைத்தாட்களின் எண்ணிக்கை, 46ஆயிரத்து 677ஆகும். மின்னஞ்சல் மூலமாக அனுப்பிய விடைத்தாட்களின் எண்ணிக்கை, 8279 ஆகும். இணையத்தளத்தில் நேரடியாக எழுதிய விடைத்தாட்களின் எண்ணிக்கை, 8279ஆகும். குறுகிய தகவல் மூலமாக அனுப்பிய விடைத்தாட்களின் எண்ணிக்கை 79ஆகும். இந்தப் பொது அறிவுப் போட்டியில் கலந்துகொண்டோர்களிலிருந்து, 20 பேர் முதல் பரிசு பெற்றனர். 80 பேர் இரண்டாம் பரிசு பெற்றுள்ளனர். 100 பேர் மூன்றாம் பரிசுகள் பெற்றனர். 

முதலாவது பரிசு பெற்றவரின் பெயர் பட்டியல்
1        மயிலைபட்டாபி       சென்னை
2        P.A .நாச்சிமுத்து        ஈரோடு
3        P.T.சுரேஷ்குமார்        ஈரோடு
4        ஜெ.அண்ணாமலை  ஆரணி
5        K.K.போஜன்      நீலகிரி
6        p.s.சுந்தர்ராஜன் திமிரி
7        K.வேலுச்சாமி  திண்டுக்கல்
8        C.முருகன்         கரூர்
9        Albert Fernando    அமெரிக்கா
10      P.கதிரேசன்        மதுரை
11      பொன்.தங்கவேலன் திருவண்ணாமலை
12      கே.சந்தில்         நாமக்கல்
13      ஞா. கேசவன்   வேலூர்
14      M பிச்சைமணி திருநெல்வேலி
15      எஸ்.செல்வம்  வளவனூர் புதுப்பாளையம்
16      M.கிரிஷ்ணமூர்த்தி   புதுக்கோட்டை
17      P.முத்து    தார்வழி
18      F M P மாறன்      சென்னை
19      S.M.இரவிச்சந்திரன்  நாமக்கல்-சேந்தமங்கலம்
20      k.அருன்    நாமக்கல்-மீனாட்சிபாளையம்

இராண்டாவது பரிசு பெற்றவரின் பெயர் பட்டியல்

1        கே.இந்திராணி திருவண்ணாமலை
2        எஸ்.செந்தில் குமார்         பெள்ளாச்சி தேவநல்லூர்
3        எ.மன்னாதன்    சேலம்
4        கே.கே.ஞானமுருகன்        திருவண்ணாமலை
5        எம்.தமிழ்செல்வி      இலவம்பாடி தார்வழி
6        என்.சண்முகம் மணச்ச நல்லூர்
7        பல்லவி கே.பரமசிவன்    ஈரோடு பெருந்துறை
8        மா.உலகநாதன்         கும்பகோணம் திருநீலக்குடி
9        சு.கலைவாணன் ராதிகா  அரியலூர் உத்திரகுடி
10      எஸ்.பாண்டியராஜன்         மதுரை எம்.ஜி.நகர்
11      எஸ்.பிரேமா     காஞ்சிபுரம்
12      க.ராகம் பழனியப்பன்        ஊத்துக்குளி
13      எம்.ஜெயகாந்தன்      ஊத்தங்கரை
14      பி.எஸ்.சேகர்    நாகப்பட்டினம்,பரசலூர்
15      எ.எம்.சுப்பிரமணியன்       நெய்வேலி
16      எஸ்.சுப்பு மணிகண்டன்  நாமக்கல்
17      ற்றி.கே.பி.ஐஸ்வர்யா        இலவம்பாடி,தார்வழி
18      என்.எஸ்.பாலமுரளி         தஞ்சாவூர்,செந்தலை
19      கே.குணசேகரன்        நாமக்கல்
20      பிரின்ஸ் இராபர்ட்சிங்      கன்னியாகுமரி,நாகர்கோயில்
22      P.ஜோதிலட்சுமி         அரியலூர்-தேவனூர்
23      A. இருதயராஜ் பி. காம்    தேனி
24      M.C.பூபதி  ஈரோடு
25      T.K.பொன்னுசாமி     தார்வழி
26      S.சண்முகம்      விழுப்புரம்
27      N.K.PRABHAHARAN    நாமக்கல்
28      கே.குணசேகரன்        நாமக்கல்
29      K.சுப்பைய்யன் நாமக்கல்
30      மீ.மு. றிபாஸ்  இலங்கை 
31      M.சிவகுமார்               நாமக்கல்
32      எஸ்.சேகர்                            விழுப்புரம்
33      T. செல்வம்                           மதுரை
34      S.ஜெயராஜ்                           வேலூர்
35      M.A.M.அசாட்              இலங்கை-காத்தான்குடி
36 ஒ.எல்,ராமசாமி ஈரோடு
37 எஸ்.வீ.துரைராஜா இலங்கை-காத்தான்குடி
38 M பிரவீன்குமார்திருச்சி
39 அ.பா.சஹானிஇலங்கை
40 கவி.செங்குட்டுவன்ஊத்தங்கரை
41 P.ஜெயச்சந்திரன்பண்டிச்சேரி
42 R.AMUTHA RANI, மதுரை
43 M. கண்ணகிகரூர்
44 M.K.M.ஃபாஸ்மின்இலங்கை-ஓட்டமாவடி
45 G.சசிகுமார்சேலம்
46 M.செல்வகுமரன்தஞ்சாவூர்
47 N.M.பாத்திமா லீனாஇலங்கை-கல்முனை
48 N.M.F.ஜனாஸ்இலங்கை-கல்முனை
49 M.R.இராம சுபரமணிய ராஜா, Rajapalaiyam
50 க.சுப்பிரமணியன்திருப்பூர்
51 S.சதிஸ்குமார கரூர்
52 G.வசந்தா திருச்சி
53 P.குருநாதன் திருச்சி
54 L.தேவராசன் முனுகப்பட்டு
55 D.பிரபு திருகாற்றுபள்ளி
56 K.மைதிலி இலங்கை-மட்டக்களப்பு
57 முகமட் ரஃபீக் இலங்கை
58 M.H.M றிஜான் இலங்கை-சம்மாந்துறை
59 M.M.ஆச்சி முஹமட் இலங்கை-ஓட்டமாவடி
60 R.M.றிகாஸ் இலங்கை-மட்டக்களப்பு                               
61 M.H.M.ஆஸிர் இலங்கை-சம்மாந்துறை
62 V.குமார் வேலூர்
63 E.S.A.சாய்ஃபுதீன் வேலூர்
64 செல்வி சுபா கடலூர்
65 P.R.கார்த்திகேயன் நாமக்கல்
66 சு ராகவி பொய்யாமணி
67 S.ஜெயா கரூர்
68 M.P. மூர்த்தி இலங்கை-கினிகதேனை
69 C.மல்லிகா தேவி சென்னை மறைமலை நகர்
70 R.சுப்ரமணி நாமக்கல்
71 சோ.சண்முகசுந்தரம் மதுரை
72 வி.டி.இராவிச்சந்திரன் திருச்சி அண்ணாநகர்
73 R.விஜெயகுமார் சேலம்
74 R.ஆனந்த கிருஷ்ன்ன் ஈரோடு
75 N.S.ரஹ ரவி தஞ்சாவூர்
76 D.பரஹு தஞாசாவூர்
77 R.முத்துக்கமலேஷ் சென்னை
78 ஆர்.விஸ்ணுபிரியா தார்வழி
79 P.செந்திர சேகரன் பாண்டிச்சேரி
80 S.M.இரவிச்சந்திரன் நாமக்கல்-சேந்தமங்கலம்

மூன்றாவது பரிசு பெற்றவரின் பெயர் பட்டியல்
1        தார்வழி, பி.ஜெயசுதாகர்
2        தார்வழி, எல்.பப்பிதா
3        தார்வழி, ஆர்.சுப்ரு
4        கோவை எஸ்.தீபா
5        விழுப்புரம் எஸ்.பி.லதா
7        ஈரோடு கவிந்தபாடி பி.கே. பழனிசாமி
8        திருச்சி எம்.சநதோஷ் குமார்
9        புதுக்கோட்டை சுப்பிரமணியபுரம் ஜி.மாதவி
10      கோவை, அசோக் நகர் ஆர். சுப்பையா
11      புதுச்சேரி பெரியகாலாப்பட்டு ஜெ.ஜெயப்பிரியா
12      புதுக்கோட்டை சுப்பிரமணியபுரம் எம்.எஸ்.கோவிந்தராஜன்
13      திருநெல்வேலி பதுக்குடி காரகுறிச்சி ஆர்.பாலகிருஷ்ணன்
14      விழுப்புரம் ஆர்.கிருஸ்ணமூர்த்தி
15      திருச்சி குருவம்பட்டி டி.குமார் 
16      திருச்சி குருவம்பட்டி பி. தாண்டவன்
17      ஈரோடு பெருந்துறை கே.நிர்மலா
18      திருச்சி இடா தொரு எ.எம்.நஜ்முல் ஆரிஃபான்
19      சென்னை மறைமலைநகர் எஸ்.காமராஜ்
20      இலங்கை காத்தான்குடி 2 எம்.எஸ்.ஃபௌசுல் ஹித்தாயா
21      இராமநாதபுரம் எ.ஆர்.மூர்த்தி
22      கோவை சாவித்திரி நகர் எ.வி.தர்மலிங்கம்
23      சேலம் மோகன்நகர் எ.வேலு
24      கோவை சாவித்திரி நகர் என்.வெங்கடாசலம்
25      விழுப்புரம் ஆலத்தூர் அ.சிவசங்கர்
26      இலங்கை புஸ்ஸல்லாவ் ப. சுபாஷினி
27      இலங்கை காத்தான்குடி,நூ.மு.பா.நஷீதா
28      ஈரோடு P.கற்பகம்
29      சென்னை பி.குமரேசன்
30      சேலம் பாலாஜி நகர் ஆர்.பத்ரி
31 இலங்கை காத்தான்குடி, M.S.F. SUHA
32 இலங்கை திரிகோணமலை முஜாகிதா முகமட்
33 இலங்கை கல்முனை முகமட் ரஃபீக் ராம்ஸித் ஸிஹான்
34 இலங்கை கல்முனை என்.எம்.எ. நாஜாஹ்
35 சென்னை கல்பாக்கம் மும்பை எம்.சுகுமார்
36 திருப்பூர் காங்கேயம் எஸ்.சீனிவாசகன்
37 நாமக்கல் வெள்ளாளப்பட்டி ச.தமிழ்மணி
39 காஞ்சிபுரம் எஸ்.செந்தில்
40 இலங்கை மட்டகளப்பு எம்.எ..பாஸீதா
41 இலங்கை புதிய காத்தான்குடி எம்.ஆர்.எப். அக்கீலா
42 திருச்சி மணச்சநல்லூர் ரா.மகேந்திரன்
43 திருச்சி மணச்சநல்லூர் எம்.சிவசங்கரி
44 இலங்கை திருகோணமலை ரிஸ்னா ராபைதீன்
45 இலங்கை கினிகத்தேனை எம்.சதீஷன்
46 முனுகப்பட்டு எம்.பத்மா
47 விழுப்புரம் ஜி.கே.வெங்கடேஷ்
48 ஆரணி கொசப்பாளையம் மஞ்சுளா செல்வராஜ்
49 இலங்கை புத்தளம் மன்னார் எஸ்ஃஎப்.அகீலா
50 திருவண்ணாமலை பி.தரணியம்மாள்
51 ஈரோடு சென்னி மலை ச.மா.முத்துக்குமார்
52 சென்னை அரும்பாக்கம் டி.வசந்தமணி
53 வளவனூர் என்.உமா சங்கர்
54 மதுரை அண்ணாநகர் ஆர்.ராஜ்குமார்.
55 திருநெல்வேலி எஸ். ராஜேஸ்வரி
56 மேற்குவங்காளம் முர்ஷிதாபேட் நாஜிமுதீன்
57 சேலம் அம்மாபேட்டை ஜி.சாதனா
58 திருநெல்வேலி எஸ்.பொருனைபாலு
59 இலங்கை மட்டகளப்பு ஆர்.எம்.பாஹிம்
60 விழுப்புரம் வண்டிமேடு எஸ்.மகாலட்சுமி
61 இலங்கை புத்தளம் எஸ்.எப்..மஹீஸா
62 இலங்கை கந்தள்ளா ஜே.எம்.அஸார்
63 இலங்கை கல்முனை எம்.எ.எப். முஸ்னா
64 பெருந்துறை எஸ்.திருமூர்த்தி
65 இலங்கை காத்தான்குடி டி.எப்.டி.ஹானி
66 இலங்கை காத்தான்குடி எ.எச்.எம். சாரோன்
67 திருச்சி அல்லூர் ஆர்.திருவேங்கடம்
68 இலங்கை நாரமலா எம்.எப்.எப்.பாஸ்லா பலூலுல்லாக்
69 இலங்கை காத்தான்குடி எம்.எஸ்.எம்.மாசூத்
70 இலங்கை காத்தான்குடி எம்.எஸ்.எம்.மாஃபாஸ்
71 விழுப்புரம் வளவனூர் உ.ஜோதிலட்சுமி
72 வளவனூர் சி.டி.முத்துசிவகுமரன்
73 விழுப்புரம் ஜே.கே. வெங்கடேஷ்
74 விழுப்புரம் வளவனூர் யு.உமா காயத்திரி
75 விழுப்புரம் வளவனூர் வி.யு.கல்பனா
76 ஆரணி சரோஜா
77 இலங்கை கொழும்பு ஷிஹாரா சாஃபீக்கான்
78 விழுப்புரம் கே.எஸ். ஜாண்பாஷா
79 இலங்கை காத்தான்குடி எ.எ.எம்.ஆர்மி
80 ஈரோடு அண்ணாநகர் கே.எஸ்..ஹாருன்
81 இலங்கை காத்தான்குடி முகமட் ரிஃபாஸ்
82 இலங்கை காத்தான்குடி கே.எம்.கியாஸ்
83 இலங்கை மாவத்தை எ.எச்.எம். சாஜீத்
84 இலங்கை-ஏறாவூர்  S.M.F.றம்சானா
85 இலங்கை வாகரை கந்தசாமி குமாரசிவம்
86 சேலம், S. கோபால்
87 காங்கேயம்,ஜெ. ரவிக் குமார்
88 CUDDALORE,V.S.Kumaran
89 இலங்கை காத்தான்குடி,M.H.A.SABRY
90 இலங்கை காத்தான்குடி, SM.Mawjooth
91 திருவேலு, எஸ்.கண்ணன்
92 பண்டிச்சேரி, V.GOVINDARAJ
93 பங்காலூர், m.Ramu
94 சந்தமங்கலம், k.candaran.
95 ஈரோடு, S.சுதர்ஷன்
96 நாகப்புத்தினம் A.K.DHEVENDRAN 
97 புதுக்கோட்டை, வி என் சங்கரபாண்டி
98 இலங்கை,ஓட்டமாவடி, MBU.Zakkiya
99 முனுகப்பட்டு பி.கண்ணன்சேகர்
100 இராசிபுரம் M.குருசாமி