Showing posts with label 'வானொலி' என்று ஒரு பத்திரிகை. Show all posts
Showing posts with label 'வானொலி' என்று ஒரு பத்திரிகை. Show all posts

Monday, December 15, 2014

'வானொலி' என்று ஒரு பத்திரிகை

''அந்தக் காலத்தில் 'வானொலி' என்று ஒரு பத்திரிகையைச் சென்னை வானொலி நிலையம் வெளியிட்டு வந்தது. தேதி வாரியாக நிகழ்ச்சிகள் அதில் பிரசுரமாகும். முக்கியமான கச்சேரிகளில், என்னென்ன ராகங்களில் என்னென்ன பாடல்கள் இருக்கும் என்ற விவரங்களும் அதில் இருக்கும். அந்தத் தகவலை படித்து வைத்துக்கொண்டு திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளையின் கச்சேரியைக் கேட்காமலேயே கேட்ட மாதிரி எழுதிவிட்டார் விமர்சகர்!

அவருடைய தவறை வாசகர்கள் பலரும் சுட்டிக் காட்டினார்கள். அந்தப் பத்திரிகையின் ஆசிரியர் எல்லாக் கடிதங்களையும் பிரசுரித்தார். அதன் இறுதியில் 'இந்த சங்கீத விமரிசனப் பகுதி போரடிக்கிறது, யாரும் படிப்பதில்லை என்று சிலர் சொன்னார்கள். அது எவ்வளவு தூரம் உண்மை என்பதைக் கண்டறிவதற்காக, வேண்டுமென்றே அப்படிப் போட்டோம். ஏராளமான வாசகர்கள் படிக்கிறார்கள் என்று இப்போது தெரிகிறது. ரொம்ப சந்தோஷம்' என்ற குறிப்பு எழுதி விட்டார்!

(இது நான் கேள்விப்பட்ட விஷயம்.)

- இசை விமர்சனம் எனும் கட்டுரையில் திரு. வாதுலன்  அப்புசாமி டாட் காம் இணைய தளத்தில் எழுதியது

மேலும் படிக்க: http://www.appusami.com/v267vathoolan.asp
நன்றி: appusami.com