Showing posts with label எப்.எம். வானொலி. Show all posts
Showing posts with label எப்.எம். வானொலி. Show all posts

Wednesday, July 31, 2013

திகார் சிறையில் வானொலி நிலையம் திறப்பு

நாட்டின் மிகப்பெரிய சிறைச்சாலையான திகார் சிறையில், எப்.எம். வானொலி நிலையம் தொடங்கப்பட்டுள்ளது. ‘டி.ஜே. எப்.எம். ரேடியோ’ என்ற இந்த வானொலி நிலையத்தை, சிறைத்துறை டைரக்டர் ஜெனரல் விம்லா மேஹ்ரா இன்று தொடங்கி வைத்தார். 

பொழுதுபோக்கு மற்றும் கைதிகளுக்கு ரேடியோ ஜாக்கி பயிற்சி அளிக்கும் வகையில் இந்த வானொலி நிலையம் தொடங்கப்பட்டுள்ளது. இதனால் கைதிகள் தங்களின் படைப்புத் திறனை வளர்த்துக்கொள்ள முடியும். கைதிகள் தங்களுக்கு பிடித்தமான பாடல்களை ஒலிபரப்ப விரும்பினால், அத்தகவலை முன்கூட்டியே ஆர்.ஜே.வுக்கு அனுப்ப வேண்டும் என்று சிறை செய்தித் தொடர்பாளர் கூறுகிறார்.

வானொலி நிலையம் தவிர கைத்தறி பிரிவையும், சிறைத்துறை டைரக்டர் ஜெனரல் மேஹ்ரா இன்று தொடங்கி வைத்தார். 10 நைஜீரிய கைதிகள் மற்றும் பிற வெளிநாட்டு கைதிகளும் இந்த கைத்தறி தயாரிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Source: http://www.maalaimalar.com