Showing posts with label கலைக்கோலம். Show all posts
Showing posts with label கலைக்கோலம். Show all posts

Monday, June 21, 2010

'கலைக்கோலம்" சற்சொரூபவதி நாதன்

.

கல்வி

சற்சொரூபவதி நாதன் என்பவர் இலங்கையில் 40 வருடகாலம் ஒலிபரப்புத்துறையில் அறிவிப்பாளராகவும், செய்தி வாசிப்பாளராகவும் விளங்கும் ஒரே தமிழ்ப் பெண் ஆவார்

ஆரம்பக் கல்வியை யாழ் இந்து மகளிர் கல்லூரியிலும், உயர் கல்வியை சென்னைப் பல்கலைக் கழகத்திலும் பெற்று விஞ்ஞானப் பட்டதாரியானவர். பின்னர் பெளத்த மகளிர் கல்லூரியில் விஞ்ஞான ஆசிரியையாக பணியாற்றியவர்.

ஒலிபரப்புத்துறை

1965ல் ஒலிபரப்புத்துறையில் இணைந்து கொண்டு அறிவிப்பாளரானார். நாடகத்துறை, பூவையர் பூங்கா, பாடசாலை மாணவர் கல்வி நிகழ்ச்சி என்பனவற்றோடு, 'கலைக்கோலம்" சஞ்சிகை நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கினார். 1970ம் ஆண்டில் சிறந்த அறிவிப்பாளராக தெரிவு செய்யப்பட்டு, ஜனாதிபதி விருதைப் பெற்றவர். ஒலிபரப்பாளருக்கான 'உண்டா' விருதையும் பெற்றிருக்கிறார்


கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.