Showing posts with label சீனப் பெருஞ்சுவர். Show all posts
Showing posts with label சீனப் பெருஞ்சுவர். Show all posts

Wednesday, January 16, 2013

தியென்மென் சதுக்கத்திலும் அரண்மனை அருங்காட்சியகத்திலும்



மூன்றாவது நாள் நான் சென்ற இடங்களைக்கூறும் முன் இரண்டாம் நாள் நான் சீனப் பெருஞ்சுவரில் கண்ட அந்த அதிசயக் காட்சி பணி. ஆம், அந்தச் சுவர்களின் ஓரத்தினில் மலைகளின் மீது பணிக்கட்டிகள் உறைந்து காணப்பட்டது. சீனப் பெருஞ்சுவரின் மேலே செல்லச் செல்ல பணிகாற்றின் வேகம் அதிகமானது. மூச்சு விடவும் கொஞ்சம் சிரமமாக இருந்தது. அதனை விரிவாக பிரிதொருப் பதிவில் உங்களோடு நிச்சயம் பகிர்ந்து கொள்கிறேன். அன்று மதியம் நாங்கள் சென்ற இடம் ஒலிம்பிச் போட்டிகள் நடைபெற்ற பறவைக் கூடு மைதானம். பணியுடன் அதிகமானக் காற்று அடித்ததால் விரிவாகக் காண முடியவில்லை. ஆனாலும் ஒரு பிரம்மாண்ட கட்டிடத்தினை பார்த்த மகிழ்ச்சி மனதில்.

மூன்றாம் நாள் பயணம் பீஜிங் நகரத்தில் மேற்கொண்டோம். காலையில் சென்ற இடம் ஒரு வாரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தத் தெரு. சீனாவின் பண்டைய காலத்தில் வியாபாரத்திற்காக பயன்படுத்தப்பட்ட அந்தத் தெருவினை இன்றும் அதேப் போன்று பாதுகாத்து வருகின்றனர். தியென்மென் சதுக்கத்திற்கு அருகில் அமைந்துள்ள அந்தத் தெருவில் அன்றைய காலகட்டத்தில் கிடைத்த உணவுகளை இன்றும் அந்த உணவு விடுதிகளில் தாயாரிக்கப்பட்டு வினியோகிக்கப்படுகின்றன. அங்கே இருந்த அஞ்சல் தலை சேகரிப்பாளர்கள் அலுவலகத்தில் சீனாவில் வெளியிடப்பட்ட அரியத் தபால் தலைகளைப் பார்வையிட்டேன். இரண்டு அஞ்சல் அட்டைகளை அங்கு வாங்கி இந்தியாவிற்கு அந்தத் தெருவின் நினைவாக அனுப்பினேன். அதன் பின் நாங்கள் சென்றது அதன் அருகில் உள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தியென்மென் சதுக்கம். மிகவும் அருமையாகப் பராமரிக்கப்பட்டுவரும் அந்த இடத்தினில் மாசெதுங் அவர்களின் நினைவிடம் உள்ளது. நாங்கள் மதியம் 12.30க்கு சென்றதால் அதனை மூடிவிட்டார்கள். 

Sunday, December 23, 2012

பல நூறு ஆண்டுகளின் பழமை


சீனப் பெருஞ்சுவர் பற்றி ஏராளம் சொல்ல வேண்டும். வாரலாற்றுத் தகவல்கள் உங்களுக்கு இணையத்தில் கிடைக்கும். ஆனால் அனுபவப் குறிப்புகள் கிடைப்பது மிகவும் அறிது. எனது அனுபவத்தினில் மனிதாராக பிறந்த ஒவ்வொருவரும் கட்டயாம் தனது வாழ்நாளில் பார்த்தே தீரவேண்டிய ஒரு சில இடங்களை நினைத்து வைத்திருப்போம். அதில் நிச்சயம் இந்த இடத்தினையும் நாம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.


பெருஞ்சுவரில் ஏறுவதற்கான அந்தப் படிகள் பல நூறு ஆண்டுகளின் பழமையான தன்னோடு சேர்த்து பதிய வைத்து இருந்தது. காரணம் அதன் சுவடுகள் மற்றும் பல லட்சம் மக்களின் கால் தடம் பட்டு அவை தேய்ந்து போய் காணப்பட்டது.

மேலே ஏற ஏற காற்றின் வேகம் கூடிக்கொண்டே சென்றது. இதனால் காற்று முகத்திற்கு நேராக பட்டு நமது தோளினை உளர்த்தியது. அந்த சமயத்தில் படிக்கட்டின் மேலே பார்த்தபோது ஒரு அதிசயம் காத்து இருந்தது. அது என்ன! அறிய காத்திருங்கள். சந்திப்போம் நாளை. - தங்க.ஜெய்சக்திவேல் (எழுதி முடித நேரம் நள்ளிரவு 12.45)

Saturday, December 22, 2012

பூஜ்ஜியத்திற்கு குறைவாக நான்கு டிகிரி செல்சியஸ்


தலைநகர் பெய்ஜிங்கில் இருந்து ஒரு மணிநேர மகிழ்வுந்து பயணத்தினை அடுத்து நாங்கள் அடைந்தோம் சீனப் பெருஞ்சுவருக்கு. மிகவும் குளிராக இருந்தது. காற்றும் பலமாக அடித்தது. 40 யுவான் கொடுத்து சீனப் பெருஞ்சுரவிரின் மேல் ஏறுவதற்கான அனுமதி சீட்டினை வாங்கினோம். இங்கு ஒரு மகிழ்ச்சியான விடையம் என்னவென்றால், நாம் கொண்டு செல்லும் வீடியோ மற்றும் டிஜிட்டல் கேமராக்களுக்கு தனியாக பணம் செலுத்த வேண்டியது இல்லை.


நாங்கள் சுவரின் மேல் ஏறுவதற்கு முன் பார்த்த ஒரு அதியசய மிருகத்தினப் பற்றி இங்கு உங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். அது சீன ஒட்டகம். ஆம் அந்த ஒட்டகம், நமது நாட்டில் உள்ளது போன்றது அல்ல. அது சற்றே வேறுபட்டு காணப்பட்டது. அதன் முதுகு சற்றே மேல் தூக்கியவாறும் அதன் முடிகள் பணிபிரதேசத்திற்கு ஏற்றது போன்று அதிகமாக இருந்தது. ஆனால் பாவம் அதன் கண்கள் எதனையோ பரிதாபமாகத் தேடிக்கொண்டு இருந்தது.

சீனப் பெருஞ்சுவரின் மீது ஏறத்துவங்கினோம். காற்று சற்றே அதிகமாக வீசியதில். மோகன் சொன்னார், "இன்று பூஜ்ஜியத்திற்கு குறைவாக நான்கு டிகிரி செல்சியஸ்" என்று. எனக்கு தூக்கி வாரிப்போட்டது. காரணம் நான் ஊட்டி கொடைக்கானல் போன்ற இடங்களில் 18 டிகிரி செல்சியஸை மட்டுமே அனுபவித்து உள்ளோம், அதுவே நமக்கு மிகவும் குளிராக இருந்துள்ளது. இன்னும் சொல்லப் போனால் எனது ஹரித்துவார் மற்றும் சண்டிகர் பயணத்தின் போது கூட10 டிகிரியில் இருந்துள்ளேன். அப்பொழுது எல்லாம் அதுவே மிகுந்த குளிர் என்று நினைத்து உள்ளேன். ஆனால் முதன் முறையாக பூஜ்ஜியத்திற்கும் குறைவான டிகிரியில் இருப்பது மகிழ்ச்சியாகவும் அதே சமயத்தினில் நடுக்கமாகவும் இருந்தது. 

Friday, December 21, 2012

ஓவியாவுடன் சீனப் பெருஞ்சுவருக்கு

எனது சீனப் பயணத்தின் இரண்டாவது நாளில் நான் இன்று சென்றது உலகின் மிகவும் புகழ்பெற்ற இடமான சீனப் பெருஞ்சுவருக்கு. காலை எட்டு மணிக்கு தாயாராகி காலை உணவினை ஓவியாவுடன் இணைந்து சாப்பிட்டோம். இன்றைய காலை உணவும் சீன வானொலியின் பணியாளர்கள் சாப்பிடும் உணவகம் தான். மிகவும் தூய்மையாக வைக்கப்பட்டுள்ள அந்த உணவகத்தில் சீன மற்றும் வெளிநாட்டு பணியாளர்களுக்காக வெளிநாட்டு உணவு வகைகளும் தயாரித்து விற்கப்படுகின்றன.


இன்றைய எனது காலை உணவினை சற்றே சுவையானதாக சாப்பிட விரும்பினேன். அதனால் சீனாவின் பாரம்பரிய ஒரு வகையான அரிசி கஞ்சிஅதனுடன் கீரை ரொட்டி மற்றும் சீன பிரட் ஆம்லெட் ஆகியவற்றினை சாப்பிட்டோம். அதன் பின் ஹிந்திப் பிரிவில் தெரிவு செய்யப்பட்ட சிறப்பு நேயருடன் எனது சீனப் பெருஞ்சுவர் பயணம் துவங்கியது. நேற்றய பயணத்தில் இல்லாத சிறப்பு ஒன்று இன்றைய பயணத்தில் இருந்தது. காரணம் நேற்று என்னுடன் தமிழ் பிரிவில் இருந்து நிறைமதி மட்டுமே வந்தார்கள். ஆனால் இன்று என்னுடன் இரண்டு பேர் தமிழ் பிரிவில் இருந்து இணைந்து கொண்டனர். ஒருவர் ஓவியா மற்றொருவர் மோகன். இன்றைய தினம் என்னுடன் இருவர் சேர்ந்துகொள்ளக் காரணம், சீனப் பெருஞ்சுவரை மையப்படுத்தி ஒரு சிறு ஆவணப்படம் எடுக்க உள்ளோம்.

மேலும் ஒரு நண்பர் என்னுடன் இன்றைய பயணத்துடன் இணைந்து கொண்டார். அவர் நான் ஏற்கனவே கூறிய திரு.ரவிசங்கர் போஸ், ஹிந்திப் பிரிவின் சிறப்பு நேயராக மேற்கு வங்காளத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்டு இன்றைய தினம் முதல் என்னுடன் பெய்ஜிங் சுற்றுலாவில் கலந்துகொள்ள உள்ளார். இதில் எனக்கு என்ன ஒரு மகிழ்ச்சி என்றால், அவரை நான் ஏற்கனவே சந்தித்து உள்ளேன். நீண்ட காலமாக சர்வதேச வானொலிகளைக் கேட்டுக்கொண்டு இருப்பவர்...