Showing posts with label செய்தி ஒலிபரப்பு. Show all posts
Showing posts with label செய்தி ஒலிபரப்பு. Show all posts

Tuesday, July 01, 2014

தனியார் எப். எம் .ரேடியோக்களில் செய்தி ஒலிபரப்ப அரசு முடிவு

தனியார் எப்.எம் ரேடியோக்களில் செய்திகளை ஒலிபரப்பு வதற்கு மத்திய அரசு அனுமதி அளிக்கும் என கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவேத்கர் கூறியதாவது:
24மணி நேரமும் ஒளிபரப்பாகும் செய்தி தொலைக்காட்சிகள் இருக்கின்றன. அதேபோன்று எப்.எம் ரேடியோக்களில் செய்தி ஒலிபரப்புவதற்கு ஏன் கட்டுப்பாடு என்று தெரிய வில்லை.அகில இந்திய வானொலி செய்தி சாராம்சத்தை மட்டும் ஒலிபரப்ப வேண்டும் என நிர்ப்பந்திக்க வேண்டும்? 3-4 முறையில் உள்ள வாய்ப்புகளை ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளோம். இதுகுறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும்.ஊடகம் மற்றும் பொழுது போக்கு தொழில்துறையின் தலைமைச்செயல் அதிகாரிகள் கூட்டத்தில் பேசுகையில் அமைச்சர் இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் போது, அகில இந்திய வானொலி செய்தி சாராம்சம் எப்எம் ரேடியோக்களில் செய்தி இடம் பெறலாம் தெரிவிக்கப்பட்டிருந்தது.தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் மேலும் 20நகரங்களில் 800எப்.எம் வானொலிகளை துவக்குவதற்கு ஏலும் விட முடிவு செய்துள்ளது. அதற்கான பணிகள் விரைவு படுத்தப்பட்டுள்ளன என்று பிரகாஷ் ஜாவேத்கர் தெரிவித்தார்.
- See more at: http://newsalai.com/