Showing posts with label திருமதி. கலைமகள். Show all posts
Showing posts with label திருமதி. கலைமகள். Show all posts

Monday, January 13, 2014

சீன வானொலி பொன்விழா மலர்

கடந்த 15 ஆண்டுகளில் முதல் முறையாக முழுவதும் வண்ணப் பக்கங்களில்  நமது சர்வதேச வானொலி வெளியாவது இதுவே முதல் முறை. அதற்கு வழிவகுத்த சீன வானொலித் தமிழ் பிரிவுக்கும் நிச்சயமாக ஒரு நன்றியைக் கூறியே ஆக வேண்டும். 

சீன வானொலியின் பொன் விழா சிறப்பு கருத்தரங்கம் வரும் 25 ஜனவரி 2014 அன்று பெருந்துறையில் வைத்து நடைபெற உள்ளது. இதில் இந்த பொன் விழா மலர் வெளியிடப்பட உள்ளது. மலரின் அட்டைப் படத்தினைத் தான் இங்கே நீங்கள் பார்கிறீர்கள்.


நிச்சயம் உங்கள் அனைவருக்கும் இந்த இதழ் பிடிக்கும் என நம்புகிறோம். இந்த இதழ் வெளியாவதற்கு காரணமாக இருந்த சீன வானொலித் தமிழ் பிரிவின் அனைத்து பணியாளர்களுக்கும், குறிப்பாக தமிழ்ப் பிரிவின் தலைவர் திருமதி. கலைமகள் அவர்களுக்கு நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
 


Saturday, January 11, 2014

தமிழகத்தில் சீன வானொலித் தமிழ்ப் பிரிவின் தலைவர்


சீன வானொலித் தமிழ்ப் பிரிவின் தலைவர் திருமதி. கலைமகள் வரும் 17 ஜனவரி 2014 அன்று மாலை சென்னைப் புத்தகக் காட்சியில் பேச உள்ளார்கள். புத்தகக் காட்சி நடக்கும் இடம் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானம். இதில் சீன வானொலி நேயர்கள் அனைவரும் கலந்து கொள்ளலாம். கீழே புத்தக்காட்சியின் சிறப்பு இணைய தளம்...


                                     


22 ஜனவரி 2014 அன்று கோவையில் தமிழ் பண்பாட்டு மையம் ஏற்பாடு செய்துள்ள “சர்வதேச கருத்தரங்கில்” திருமதி. கலைமகள்  பேச உள்ளார்கள்.