Tuesday, July 29, 2008

இலங்கை வானொலியின் 2500 மீட்டர் உயரமுள்ள ஆன்டனா


இலங்கை ரூபவாஹினி கார்பரேசன் தனது சக்தியை அதிகரிக்க உள்ளதாக புராட்காஸ்ட் ஆசியா இதழ் செய்தி வெளியிட்டுள்ளது. கொழும்புக்கு அருகில் உள்ள பிதிருடலகா மலையின் உச்சியில் சக்தி வாய்ந்த ஜம்ப்ரோ வகை ஆன்டனாவை நிறுவ உள்ளது. இந்த மலையானது 2500 மீட்டர் உயரமுள்ளதால், இலங்கை முழுவதும் இந்த ஒரு இடத்தில் இருந்தே இலங்கை முழுவதும் ஒலிபரப்ப முடியும். பண்பலை ஒலிபரப்பினை இந்த ஆன்டனா மூலம் செய்தால், தமிழக நேயர்களும் இலங்கை வானொலியின் நிகழ்ச்சிகளை கேட்டக வாய்ப்புள்ளது.

Friday, July 18, 2008

சர்வதேச வானொலி - ஜூன்/ஜூலை 2008

வெளிவந்து விட்டது இந்த மாத சர்வதேச வானொலி இதழ். பத்தாவது ஆண்டுமலராக அதிக பக்கங்களுடன் மலர்ந்துள்ளது இதில், ஆண்டுமலர் சிறப்புப் போட்டி ஒன்றை வைத்துள்ளோம். அனைவரும் இதில் கலந்துகொள்ள அன்புடன் அழைக்கிறோம். இதழைப் படிக்க கீழ்கண்ட தொடுப்பினைச் சொடுக்கவும்.

Tuesday, July 08, 2008

சிங்கப்பூர் வானொலி நிறுத்தப்பட உள்ளது...

இன்று காலை மின் அஞ்சலில் சிங்கப்பூர் வானொலியின் தலைமை நிகழ்ச்சித் தயாரிப்பாளர் எழுதியிருந்த கடிதத்தில் வரும் ஜூலை 31, 2008-டன் அனைத்து சிற்றலை சேவைகளையும் நிறுத்த வுள்ளனராம், அது தொடர்பாக ஒரு சிறப்பு நிகழ்ச்சியில் தொலைப்பேசி ஊடாக நான் பேச வேண்டும் என கேட்டனர். அது ஒரு புரம் இருக்க.. தொடர்ந்து உலக அளவில் சிற்றலை வானொலிகள் நிறுத்தப்பட்டு வருவது வருத்தமளிக்கிறது.

Thursday, June 26, 2008

பிபிசியின் ருமேனிய சேவை நிறுத்தப்படுகிறது

69 ஆண்டுகளாக ஒலிபரப்பாகிவரும் பிபிசியின் ருமேனிய மொழி வானோலி சேவை எதிர்வரும் ஆகஸ்ட் முதல் திகதியுடன் மூடப்படும் என்று பிபிசி உலக சேவை அறிவித்துள்ளது.
உலக சேவையின் இயக்குனர் நைஜல் சேப்மேன், தடையற்ற, சுதந்திரமான தகவல்களை தருவதில் ருமேனிய சேவை முன்னணியில் இருந்ததாக புகழாரம் சூட்டியுள்ளார்.
ருமேனியாவில் அதிகரித்துள்ள ஊடகங்களுக்கு இடையேயான போட்டி மற்றும் ருமேனிய சேவை கேட்கும் நேயர்கள் குறைந்தமை, உலக சேவையின் அனைத்துப் பிரிவுகளிலும் பணத்தை சேமிக்க வேண்டிய கட்டாயம் போன்றவைதான் இந்த முடிவுக்கு காரணங்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மூடப்படும் ருமேனிய சேவையின் ஊழியர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நேஷ்னல் யூனியன் ஆப் ஜேர்னலிஸ்ட் அமைப்பு இந்த முடிவு ஏற்க முடியாத ஒன்று என்று கூறியுள்ளது.

Monday, June 02, 2008

கொழும்பு சர்வதேச வானொலி நிறுத்தப்பட்டது.

80 ஆண்டுகளுக்கும் மேலாக தனது சேவையைச் செய்து வந்த கொழும்பு சர்வதேச வானொலி தன து மத்திய அலை ஒலிபரப்பை (873 கி.ஹெ) நேற்று 01 ஜூன் 2008 முதல் நிறுத்தி விட்டது. இதற்கு விளம்பர வருவாய் குறைந்ததேக் காரணமாக இருக்கலாம் என அறியப்படுகிறது. தமிழக வானொலிகளில் கூட இல்லாத பாடல்களைக் கொண்ட ஒலிக்களஞ்சியம் இந்த வானொலியில் உள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.

இந்த வானொலி நிறுத்தப்பட்டதற்கு மற்றும் ஒரு காரணமாக தமிழக தனியார் பண்பலை வானொலிகள் உள்ளன. கொழும்பு சர்வதேச வானொலியில் கொடுக்கப்பட்ட விளம்பரங்கள் அனைத்தும் தற்பொழுது தமிழக தனியார் பண்பலை வானொலிகளில் ஒலிபரப்பாகிறது.

ஒரு காலகட்டத்தில் தமிழக நேயர்களை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த இந்த வானொலியின் சகாப்தம் முடிந்துவிட்டது. மயில்வாகணன், சிவபாத சுந்தரம், சுந்தா சுந்தரலிங்கம், கே.எஸ். ராஜா, பி. ஹெச். அப்துல் ஹமீது போன்ற ஜாம்பவான்களின் குரல் ஒலித்த இந்த வானொலி மீண்டும் உயிர் பெற நேயர்களாகிய நாம் என்ன செய்யப் போகிறோம்?!
-தங்க. ஜெய்சக்திவேல், சென்னை.

Saturday, May 24, 2008

அகில இந்திய வானொலிக்கு சர்வதேச பரிசு

ஈரானில் நடைபெற்ற 9-வது சர்வதேச வானொலி விழாவில் அகில இந்திய வானொலியின் நிகழ்ச்சிக்கு முதல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.அகில இந்திய வானொலியின் ஒரிசா சம்பல்பூர் ஒலிபரப்பு நிலையம் தயாரித்த 'ஜனிபா, ஆமே கமா கரிபா' (உலகளாவிய சிந்தனையும், உள்ளூர் செயல்பாடும்) என்ற சிறுவர்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சி ஈரானில் நடந்த சர்வதேச வானொலி விழாவில் ஒலிபரப்பப்பட்டது. பத்மலோசன்தாஸ் என்ற நிகழ்ச்சித் தயாரிப்பாளர் ஒரிய மொழியில் இந்த நிகழ்ச்சியை தயாரித்திருந்தார்.வானிலை மாற்றங்கள், நாட்டின் வளங்களை பாதுகாத்தல் போன்ற விஷயங்களை தனது இரண்டு குழந்தைகளுக்கு ஒரு தாய் தாலாட்டாக போதிப்பது போன்று இந்த நிகழ்ச்சி அமைக்கப்பட்டிருந்தது. இதற்கு விழாவில் பெரும் வரவேற்பு கிடைத்த நிலையில் சிறந்த நிகழ்ச்சிகளுக்கான முதல் பரிசையும் தட்டிச் சென்றது.இதையொட்டி தயாரிப்பாளர் பத்மலோசன் தாஸுக்கு 2000 யூரோ ரொக்கப்பரிசும், தங்க விக்கிரகமும் பரிசளிக்கப்பட்டது. கடந்த 2007ல் எய்ட்ஸ் விழிப்புணர்வுக்காக ஈரான் வானொலி நடத்திய போட்டியிலும் சிறந்த நிகழ்ச்சிக்கான முதல் பரிசையும் தாஸ் வென்றது குறிப்பிடத்தக்கது. (Thanks to Thatstamil.oneindia.in)

Thursday, May 22, 2008

சர்வதேச வானொலி 16 மே - 15 ஜூன் 2008

நமது சர்வதேச வானொலியின் 16 மே - 15 ஜூன் 2008 இதழ் தயாராகிவிட்டது விரைவில் இது உங்கள் கரங்களை வந்தடையும். இந்த இதழில் நடிகர் மற்றும் அமெச்சூர் வானொலி ஒலிபரப்பாளார் சாருகாசன் சிறப்புப் பேட்டி இடம் பெற்றுள்ளது. மாத இதழின் ஆண்டு சந்தா: 100/- தொடர்புகளுக்கு: தங்க. ஜெய்சக்திவேல், 59, அன்னை சத்யா நகர், அரும்பாக்கம், சென்னை - 600 106, பேச: 98413 66086. மின் அஞ்சல்: