Showing posts with label வண்ணை கே. ராஜா. Show all posts
Showing posts with label வண்ணை கே. ராஜா. Show all posts

Wednesday, July 29, 2009

பாஸ்கர் நெப்போலியன்


தஞ்சை மண்ணின் உயர்ந்த மனிதன் நீ!
உலக சிற்றலை வானொலியின் காதலனும் நீ!
ஓய்வு நேரத்திலும் ஓய்வின்றி வானொலி கேட்கும் ரசிகனும் நீ….!
வானொலி உலகின் முத்திரை நேயரும் நீ!
உன் வாழ்க்கை ஒரு தொடர் வண்டி பயணம்
உன் வாழ்வோடு இணைந்து வந்த இணைப்பு பெட்டிகளை கழட்டி விட்டு சென்றது ஏனோ?!
ஆம்! ஓயாது உன் காதோரம் ஒலித்த வானொலிப் பெட்டி உன்னை காணாமல் ஏங்குகிறது!
விண்ணோக்கி செல்லும் டிஸ்கவரி ஓடம்கூட பத்திரமாய் பூமி வந்திறங்குகிறது
நீ சென்ற வாகனமோ உன்னை விண்ணோக்கி அனுப்பிவிட்டு வீதியில் கிடக்கிறதே?
திருச்சி உறவு சங்கமத்திற்கு வந்து அனைவருக்கு ஹாய்…! என்றாய்
நிரந்தரமாய் பூமியை விட்டுச் சென்று விடுவாய் எனத் தெரியாமல் யாருக்கும் பை… பை… சொல்ல மறந்து போனாய்!
வாழ்க்கைப் பயணம் அலுத்துவிட்டதா?
உன் வானொலி தேடல் களைத்து விட்டதா?
காற்றுள்ள வரை ஒலி இருக்கும்
நெஞ்சிருக்கும் வரை உன் நினைவிருக்கும்!
ரயில் சிநேகம் பயணம் முடியும் வரை
உன் வானொலி சிநேகம் எங்கள் வாழ்வு முடியும் வரை
கடல் அலை ஓயாது
உன் நினைவலை மறையாது
நிதம் உன்னை நினைத்து பார்க்க நாங்கள் இருக்கிறோம்
நேரில் பேச நீ இல்லையே!
- வானொலி நேசன் வண்ணை கே. ராஜா

Sunday, September 07, 2008

SMS விடு தூது...

SMS -குறுந்தகவல் செய்திப் பரிமாற்றம் - தற்போதைய வாழ்க்கையில் தவிர்க்க முடியாத விஷயமாகஉள்ளது. காரணம், காலை முதல் இரவு வரை பல்வேறு காரணங்களுக்காக மாணவர்கள் முதல் தொழிலதிபர்கள் வரை எளியமுறையில் விரைவாக செய்திகளைப் பரிமாறிக்கொள்ள SMS வசதியைப் பயன்படுத்துகிறார்கள். அந்த வகையில் வானொலி நேயர்கள் மத்தியில் SMS Net பிரபலமாகஉள்ளது.

SMS Net(எஸ்.எம்.எஸ் நெட்) என்றால் என்ன? நீங்கள் தமிழகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் நெட் அமைப்பாளரிடம் உங்கள் கைத்தொலைபேசி எண்ணைப் பதிவு செய்துவிட்டால் போதும். தினமும் தகவல்கள் உங்கள் விரல்நுனிக்கு வந்து சேர்ந்து விடும். ஒவ்வொரு தகவலும் அனைத்து உறுப்பினர்களுக்கும் எந்த விதத் தடையுமின்றி வந்துசேரும்.

உதாரணமாக உங்களுக்கு அடுத்தவாரம் பிறந்தநாள் வர இருக்கலாம். இந்தத் தகவலை நெட் ஆபரேட்டரிடம் பதிவு செளிணிதுவிட்டால் போதும். உங்கள் பிறந்த நாளன்று அனைத்து நேயர்களுக்கும் எஸ்.எம்.எஸ் மூலம் சென்றடையும். அனைவரும் உங்களை வாழ்த்தும் போது நீங்கள் அடையும் மகிழ்ச்சியை அளவிட முடியாது. இதுபோன்ற நினைவூட்டல்கள் பிறந்தநாளுக்கு மட்டுமல்ல, முக்கிய வானொலி நிகழ்ச்சி ஒலிபரப்பாகும் நேரம், வானொலிப் பேட்டிகள், வானொலி ஆண்டுவிழா, சிறப்பு நிகழ்ச்சிகள்ஒலிபரப்பாகும் நேரம் போன்றவற்றையும் நினைவூட்டத் தவறுவதில்லை. திருமணநாள், பிறந்தநாள் வாழ்த்துக்களை நேயர்களிடம் பரிமாறிக் கொள்ளும் வகையில் செயல்பட்டு நட்புறவை வளர்க்கும்எஸ்.எம்.எஸ் நெட் பற்றி என்னவென்று சொல்வது!

சிற்றலை வானொலி கேட்போருக்குப் பிரபல வானொலிகள் ஒலிபரப்பாகும் நேரம், அலைவரிசை, முகவரி போன்றவற்றைத் தேடிக்கண்டுபிடிப்பது மிகவும் சிரமமான விஷயம். இந்தத் தகவல்கள் தெளிவாக அனைத்து நேயர்களுக்கும் எஸ்.எம்.எஸ் நெட் மூலமும் சென்றடைகின்றன.பிரபல சிற்றலை வானொலிகளில் அவ்வப்போது நடத்தப்பெறும் போட்டிகள் பற்றியும், அதில் பங்குபெறும் முறையும் உடனுக்குடன் எஸ்.எம்.எஸ் செய்திகளாகப் பரிமாறப்படுகின்றன. முகம் தெரியாத பல்வேறு முகவரிகள்இந்த SMS Net மூலம் தகவல்களைப் பெறுவதோடு நட்புறவை வளர்த்துக்கொண்டு பல்வேறு சமூக நலப்பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

SMS Net -உங்கள் வாழ்வில் புது அனுபவங்களை ஏற்படுத்தித் தருகின்றன. பங்கேற்க மறந்த வானொலிப் போட்டிகள் இப்போது இல்லை. எல்லாமே SMS Net தரும் தகவல் மழையால்தான்.வானொலி கேட்பதில் தகவல் பெறலாம், இசை கேட்கலாம், அதையும் தாண்டி தமிழக நேயர்களிடையே நட்புறவை வளர்க்கும் SMS Net என்ற உறவுப்பாலங்கள் மென்மேலும் வளர்ந்தால்தான் வானொலித் துறையும் வளரும். நேயர்களிடையே ரசனை மட்டுமல்ல, நட்புறவும் வளரும். வயது, கல்வித்தகுதி, ஜாதி, மதம் தாண்டி நம்மை இணைக்கும் வானொலி கேட்கும் ஆர்வம் பெருக நட்பு வட்ட சங்கிலி (SMS Net) நிறையப் பெருகவேண்டும். தமிழகத்தில் உள்ள SMS Net-களின்விபரம் நாளை.. -வண்ணை கே. ராஜா

Saturday, September 06, 2008

தமிழகத்தைச் சேர்ந்த ஹாம்களுக்கு அழைப்பு; சாருஹாசன் பேட்டி - பாகம் 4

ஆந்திர அரசு தங்களுக்குக் கொடுத்த விருது பற்றி?
ஒரு சமயம் இரவு 12 மணிக்கு ஆந்திர கலெக்டர் அலுவலகத்தில் இருந்து ஹாமில் தமிழகத்தைச் சேர்ந்த ஹாம்களுக்கு அழைப்பு வந்தது. அந்த சமயத்தில் நான் மட்டுமே அந்த அலைவரிசையில் இருந்தேன். ஆந்திராவில் புயலின் காரணமாக உணவுப்பொருட்களை ஏற்றிக் கொண்டு பெங்களூரில் இருந்து வரும் ஹெலிகாப்டருக்கு சென்னையில் பெட்ரோல் போட வேண்டும் என்று கூறினார்.நானும் உடனே அவர்களை அலைவரிசையிலேயே இருக்கச் சொல்லி, எங்களது வீட்டின் கீழ்த் தளத்தில் அதிர்ஷ்டவசமாக அந்த சமயத்தில் இந்தியன் ஆயில் உதவி பொது மேலாளர் தங்கியிருந்தார். அவரை அழைத்து அலைவரிசையில் பேசச் சொல்லி, நானே ஆந்திர கலெக்டரின் சார்பில் கடிதம் எழுதி, ஹெலிகாப்டருக்கான எரி பொருளை வாங்கிக் கொடுத்தோம். இந்த சேவைக்காக எனக்கு ஆந்திர அரசு விருதினைக் கொடுத்தது. இதுவும் ஹாம் வானொலியில்மட்டுமே அன்று சாத்தியமாக இருந்தது.

மோர்ஸ் குறியீட்டினைப் பயன்படுத்தியபோது ஏதேனும் மறக்க முடியாத அனுபவம்?
1960களில் பெரும்பாலான ஹாம் உபயோகிப்பாளர்கள் மோர்ஸ் குறியீட்டினைப் பயன்படுத்தியே வெளிநாட்டில் உள்ள ஹாம் வானொலி ஒலிபரப்பாளர்களைத் தொடர்பு கொண்டு வந்தனர். ஒருசமயம் நான் கீயில் ஒலிபரப்பி வரும்போது ஸ்காட் என்ற பெயரில் ஒருவர் மறுமுனையில் இருந்து எனக்கு பதில் அனுப்பினார். உடனே அவரிடம், நீங்கள் விண்வெளிவீரர் ஸ்காட்தானே?Óஎன்று கேட்டேன். உடனே, அவர் Òநீங்கள்தான் முதல் தடவையாக என்னைக் கண்டு பிடித்துள்ளீர்கள். நான் எத்தனையோ முறை இந்த மோர்ஸ் ஒலிபரப்பில் வந்துள்ளேன். ஆனால் முதன்முறையாக நீங்கள்கண்டு பிடித்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சிÓ என்றார். அந்த கால கட்டங்களில் ஸ்காட் மிகப் பிரபலம்.

ஹாம் வானொலியின் வருங்காலம் எப்படி இருக்கும்?
பலர் நினைக்கிறார்கள், தொழில் நுட்பம் வளர்ந்து வருவதால் ஹாம் வானொலியும் மறைந்துவிடும் என்று. ஆனால் அது மறைந்து விடாது. காரணம் புதிய தொழில்நுட்பங்களோடு இணைந்துசெல்லவல்லது இந்த ஹாம் ரேடியோ. உதாரணமாக இணையத்தோடு இணைந்து இன்று ஹாம் வானொலியைக் கேட்கலாம், என்ற அளவிற்கு இதன் தொழில்நுட்பம் வளர்ந்துள்ளது.

தொலைதூர நேயர்களோடு பேசிய அனுபவம் ஏதேனும் உண்டா?
நிறைய உண்டு. சுவாரஸ்யமான சம்பவம் கூட ஒன்று உண்டு. நான் எனது ஹாம் ரேடியோவில் எப்.எம் அலைவரிசையைக் கேட்டுக் கொண்டிருந்தபோது, சீனாவில் இருந்து ஒருவர் அதே அலைவரிசை யில் வந்தார். எனக்கு ஆச்சரியம் என்னவெனில் எப்.எம் அலைவரிசை 80 கிலோமீட்டருக்கு மேல் போகாது. அப்படியிருக்க இது எப்படி சாத்தியம்? அதன்பிறகு எனது நண்பர் மூலம் இதற்குத்தீர்வு கிடைத்தது. அயனி மண்டலத்தில் இரண்டு லேயர் நெருங்கும்போது அதனுள் இந்த எப்.எம் அலைவரிசை புகுந்து, எங்கு ஓட்டை உள்ளதோ, அங்கு அது இறங்கிவிடும். அது போன்றே இன்று ஏராளமானோர் ஒரு சில சமயங்களில் தொலைதூரப் பண்பலையைக் கேட்க முடிகிறது.
சந்திப்பு: தங்க. ஜெய்சக்திவேல், வண்ணை கே. ராஜா (முற்றும்)