பிபிசி உலக சேவை வானொலியானது பிபிசியின் சாம்ராஜ்ஜிய சேவையாக 1932ஆம் ஆண்டு ஆரம்பித்திருந்தது. அந்தக் காலத்தில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்டிருந்த சிற்றலை ஒலிபரப்பு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தொலைதூரப் பிரதேசங்களுக்கு இந்த வானொலி ஒலிபரப்பப்பட்டது. இந்த வானொலியில் வரும் செய்திகள் சிறப்பாகவோ சுவாரஸ்யமாகவோ இருக்காது என்று பிபிசியின் அந்நாளைய தலைமை இயக்குநர் ஜான் ரீத் கணித்திருந்தாலும், அக்கணிப்பு பொய்யாகிப்போய் லண்டனின் பிராட்காஸ்டிங் ஹவுஸில் இருந்து ஒலிபரப்பபட்ட இந்த வானொலிக்கு நல்ல வரவேற்பும் பாராட்டுகளும் கிடைத்தன. பிபிசி உலக சேவையின் வரலாற்றினை பறை சாற்றும் மேலதிக 9 அறியப் புகைப்படங்களை கிழ்கண்ட தொடுப்பில் காணலாம்.
சர்வதேச வானொலிகளை கேட்பதில்/அறிந்துகொள்வதில் ஆர்வம் கொண்ட ஒவ்வொருவரும் கண்டிப்பாக பார்த்து படிக்க வேண்டிய வலைப்பூ. இந்தக் குழுவில் இணைவதன் மூலம் உடனுக்குடன் சர்வதேச வானொலிகளைப் பற்றிய தகவல்களைப் படித்து பயன்பெறலாம்.
Saturday, March 03, 2012
பிபிசி உலக சேவை பற்றி தமிழோசையின் முன்னாள் தயாரிப்பாளர்கள்
பிபிசி தமிழோசை எண்பது வயதை எட்டும் இத்தருணத்தில் தமிழோசையின் முன்னாள் ஆசிரியர்களான மஹாதேவன், சம்பத்குமார் மற்றும் மூத்த தயாரிப்பாளரான ஆனந்தி ஆகியோர் பிபிசி உலக சேவையில் பணியாற்றிய தமது அனுபவங்களைப் பகிர்ந்துகொள்கின்றனர். அவர்களின் குரலை கீழ்கண்ட தொடுப்பில் கேட்கலாம்.
Monday, February 27, 2012
காலநிலையை மட்டும் அறிவிக்க வானொலி
ஆஸ்திரேலியா: உலகெங்கும் காலநிலையை மட்டும் அறிவிக்க என்று
தனியாக வானொலிகள் செயல்பட்டு வருகின்றன. ஒரு சில சமயம்
சிற்றலையிலும் இந்த வானொலிகளைக் கேட்கலாம். இந்த வானொலிகளின் முக்கிய நோக்கமே கடலில் பயணிக்கும் மாலுமிகள் மற்றும் மீனவர்களுக்கு இவர்கள் அவ்வப்போதைய காலநிலைகளை அறிவித்த வண்ணம் இருப்பர்.
இந்த வானொலிகளை இங்கு தமிழ்நாட்டிலும் அவ்வப்போது கேட்கலாம். ஆங்கிலத்தில் ஒலிபரப்பாகும் இந்த வானொலிக்கு நிகழ்ச்சி தர அட்டவணை அனுப்பினால், அருமையான வண்ண அட்டையை லேமினேஷன் செய்து அனுப்புகின்றனர். அவர்களது ஒலிபரப்பினை இந்திய நேரம் காலை 8
மணிக்கு (0230 UTC) ஆங்கிலத்தில் 11030, 13920 அலைஎண்கள் 25 மீட்டரில்
ஒலிபரப்பாகிறது. தொடர்பு கொள்ள இவர்களது முகவரி:
GPO Box 1289,
Melbourne, VIC
3001C, Australia.
(700 Collins Street, Docklands)
Web: http://www.bom.gov.au/inside/offices/
(Alokesh Gupta)
Tuesday, February 21, 2012
அமெரிக்கா WTJC இருந்து வண்ண அட்டை
WTJC Family Christian Radio தனது நேயர்களுக்கு தற்பொழுது அமெரிக்காவில் இருந்து வண்ண அட்டையை உடனுக்குடன் அனுப்பி வருகிறது. இவர்களது நிகழ்ச்சியானது இந்திய நேரம் காலை 8 மணிக்கு (0130 UTC) ஆங்கிலத்தில் 9370 அலைஎண்கள் 31 மீட்டரில் ஒ−பரப்பாகிறது. தொடர்பு கொள்ள இவர்களது முகவரி:
WTJC, Fundamental Broadcasting Network,
#520, Roberts Road, Newport,
NC 28570,
USA.
Email: fbn@fbnradio.com
Web: www.fbnradio.com
(Babul Gupta)
Monday, February 20, 2012
செய்தி சாம்ராஜ்யத்தின் மன்னன் – பகுதி 1
நீண்ட நாட்களாக ஒரு எண்ணம். பி.பி.சி-யில் பணிபுரியும் போதே இந்த எண்ணம் இருந்தாலும் அதனை நடைமுறைப்படுத்த இவ்வளவு நாட்கள் ஆயிற்று. ஆம், செய்தி சாம்ராஜ்யத்தின் மன்னன் என அனைவராலும்
புகழ்ந்து கூறப்படும் பி.பி.சி. உலக சேவை பற்றிய முழுமையான வரலாறு தமிழில் இல்லை. எனவே அதை எழுத இந்த களம் சரியாக இருக்கும். மேலும்
பல வானொலி நேயர்களின் எண்ண ஓட்டங்களையும் இந்தத் தொடர் நிச்சயம் நிறைவேற்றும் என நம்பலாம்.
நீங்கள் அறிந்திராத பல வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தகவல்களை தாங்கி வரவுள்ள இதில் நிச்சயம் நீங்கள் அதிசயிக்கக் கூடிய பி.பி.சி. பற்றிய பல அறியத் தகவல்கள் இருக்கும்.
1920
ஸ்ரான்ட் பகுதியில் இருந்த மார்க்கோணி ஹவுஸில் பி.பி.சி.-யின் ஒலிபரப்பு தொடங்கப்பட்ட போது அதன் மொத்த பணியாளர்களின் எண்ணிக்கை என்ன தெரியுமா?. வெரும் நான்கு அலுவலர்கள். அப்பொழுது பி.பி.சி.-க்கு பெயர் பிரிட்டிஸ் புராட்காஸ்டிங் கம்பெனி. அதன் பின்னரே பி.பி.சி.யானது கார்ப்பசேனாக மாறியது.வரலாற்றில் முதன் முறையாக செய்தி அறிக்கைகள் பி.பி.சி.-யில் இரண்டு முறை ஒலிபரப்பப்பட்ட பின் தான் அந்த தகவலினை அங்கு வெளிவந்த புகழ்பெற்ற நாளிதழ் ‘டெய்லி நியூஸ்’ வெளியிட்டது. வயர்லெஸ் உபகரணங்களைத் தயாரிப்பவர்கள் இந்த நிலையத்தினை வடிவமைத்த இரண்டு வாரங்களில் வானொலி ஒலிபரப்பானது தொடங்கப்பட்டது.
முதலில் இரண்டு செய்தி அறிக்கைகள் வாசிக்கப்பட்டது. முதல் செய்தி அறிக்கையானது மெதுவாகவும், அடுத்த செய்தி அறிக்கையானது வேகமாகவும் வாசிக்கப்பட்டது. இதனை வாசித்தவர் அன்றை பி.பி.சி.-யின் நிகழ்ச்சிகளுக்கு இயக்குனராக இருந்த ஆர்தர் பாரோவ்.
“அன்றைய தினம் செய்தி வாசித்தது பல்வேறு புதிய அனுபவங்களைக் வழங்கியது. காரணம் புதிய பெயர்களை உச்சரிக்கும் போது எந்தத் தவறுகளையும் செய்துவிடக்கூடாது என்ற கவனத்தில் குழந்தைகள் படிப்பது போன்று எழுத்துக்கூட்டி படித்தேன்.” அந்த சமயத்தில் தேர்தல் முடிவுகள் பிரிட்டிμல் வெளியாகிக் கொண்டு இருந்தது. அந்த காலகட்டத்தில்
மொத்தமே தோராயமாக 30,000 மக்களிடம் மட்டுமே வானொலிக் கேட்பதற்கான உரிமம் இருந்தது. தேர்தல் முடிவின் போது அனைத்து அரசியல் கட்சியினரும் வானொலியைக் கேட்டவாறு இருந்தனர் என ‘த டைம்ஸ்’ இதழ் செய்தி வெளியிட்டது.
*****
செய்திகளுக்குத் தடைசெய்திகள் என்றாலே பி.பி.சி. என்ற ஒரு நிலை இருந்த தொடக்க காலகட்டம். ஆனால் பி.பி.சி. செய்திகளுக்கே ஒரு காலகட்டத்தில் தடை விதிக்கப்பட்டது என்றால் நம்புவீர்களா?. அந்த கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் எல்லாம் காரசாரமாக பேசிக்கொண்டு இருந்தனர்.
கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அனைவரும் பத்திரிகை ஆசிரியர்கள் மற்றும் முதலாளிகள் ஆகும். அவர்களில் ஒரு மூத்த பத்திரிகையாளர் “இனி பி.பி.சி. வானொலியில் செய்திகளை படிக்கக்கூடாது” என்று தனது வாதத்தினை வைத்துக்கொண்டு இருந்தார்.
அவரது அந்தக் கூற்றினை அங்கே கூட்டத்தில் இருந்த அனைவரும் ஆதரித்தனர். பி.பி.சி.யில் செய்திகளை வாசிக்கக்கூடாது என்று அவர்கள் கூறியதற்கான காரணத்தனை கேட்டால், இன்றைய காலகட்டத்தில் நகைச்சுவையாக இருக்கும். ஆம், அவர்கள் கூறியது இது தான், “பி.பி.சி. செய்திகளை முன்கூட்டியே ஒலிபரப்பி விடுவதால் எங்களது நாளிதழின்
விற்பனை சரிந்து வருகிறது. தொடர்ந்து இது போன்று ஒலிபரப்பினால் நாங்கள் அனைவரும் நாளிதழ்களை மூடிவிட்டு செல்ல வேண்டியது இருக்கும்.”
இதற்காக ஒரு தீர்வினையும் அவர்களே வழங்கினர். அதாவது நாளிதழ்கள் அனைவருக்கும் கிடைத்த பின்னரே செய்தி அறிக்கைகள் வாசிக்கப்பட வேண்டும் என்பது அவர்கள் தரப்பு வாதம். அந்த வாதத்தினை ஏற்றுக்கொண்ட அன்றைய பி.பி.சி. பொது மேலாளர் ஜான் ரீத், “செய்திகளை அவ்வளது சீக்கரத்தில் ஒலிபரப்புவதால் நேயர்களும் நன்மையில்லை” என்றார்.
33 வயதே ஆன ஜான் ரீத் பொது மேலாளர் பதவி ஏற்றதும் சந்தித்த முதல் பிரச்சனை இது. ‘பொது செய்தி அறிக்கை’ எனும் நிகழ்ச்சி தொடங்கப்பட்டு ஒரு வாரம் ஆகிய நிலையிலேயே இந்தப் பிரச்சனை பூதாகாரமானது. காரணம் நாளிதழ்களில் வரும் அனைத்து செய்திகளும் இதில் வாசிக்கப்பட்டது. ஆனால் இதற்கு பி.பி.சி.-யின் சர் வில்லியம் நோபுள் கூறிய காரணம் ஒரு சில பத்திரிகையாளர்களை யோசிக்க வைத்தது.
“பி.பி.சி.-யின் பொது செய்தி அறிக்கையை கேட்கும் நேயர்கள் கூடுதல் செய்திகளுக்காக நாளிதழ்களை தொடர்ந்து வாங்குவர். அதனால் நாளிதழ்களின் விற்பனையும் கூட அதிகரிக்கும்” என்றார். செய்திகளை வழங்கிய ஏஜன்சிகளும் நாளிதழ்களுக்கு சாதகமாகவே இருந்தன. காரணம்
பி.பி.சி.யைத் தவிர வேறு வானொலிகள் செய்திகளை நியூஸ் ஏஜன்சிகளிடம் இருந்து வாங்குவதில்லை.
மாறாக ஏராளமான நாளிதழ்கள் அவர்களின் வாடிக்கையாளர்களாக
இருந்தனர். “இனால் செய்திகளுக்கு விலை மிக அதிகம் கொடுத்து வாங்க
வேண்டியிருந்ததாக” ஜான் ரீத் தனது சுய சரிதையில் கூறுகிறார். அந்த காலகட்டத்தில் மற்றும் ஒரு பிரச்சனையும் பி.பி.சி.க்கு இருந்தது. அதாவது செய்திகளை ஒலிபரப்பும் போது, இந்த செய்தியானது காப்புரிமை
செய்யப்பட்டது என வானொலி ஒலிபரப்பின் போதேக் கூறவேண்டும்.
இன்னும் தெளிவாக சொல்வதானால், “இந்த செய்தியானது ராய்டர், பிரஸ் அசோசியேசன், எக்ஸ்சேன்ஜ் டெலிகிராப் மற்றும் சென்ட்ரல் நியூஸ்
ஆகிய நிறுவனங்களின் காப்புரிமைக்கு பாத்தியப்பட்டது” என ஒவ்வொரு செய்தி அறிக்கையின் ஆரம்பத்திலும் முடிவிலும் கூறவேண்டியிருந்தது.
அன்றைய காலகட்டத்தில் செய்திகளை வானொலியில் ஒலிபரப்புவது ஒன்றும் அவ்வளவு எளிதானதாக இருந்துவிடவில்லை.
ஒரு பிரச்சனை முடிந்த பின் மீண்டும் ஒரு பிரச்சனை தலைத்தூக்கியது. ஆம், இனி பி.பி.சி.-யில் விளையாடடு செய்திகளை நேரடியாக ஒலிபரப்பக் கூடாது என்பது தான் அது. அதற்கும் பி.பி.சி. வளைந்து கொடுத்து சென்றது.அதன் பின் 1926-ல் டெர்பியில் நடந்த ஒரு விளையாட்டுப் போட்டியை நேரடியாக ஒலிபரப்பியது. ஆனால் அந்த நேரடி ஒலிபரப்பு விசித்திரமாக இருந்தது. விளையாட்டு மைதானத்தில் இருந்த ரசிகர்கள் செய்த ஆரவாரமும் கைத்தட்டல்களுமே ஒலிபரப்பப்பட்டது. ஆனால் அந்த ஆரவாரம் எதற்கானது என்று அறிந்து கொள்ள நேயர்கள் அன்றைய இரவு பொது செய்தி அறிக்கை வரைக் காத்திருக்க வேண்டும்.
இப்படியெல்லாம் காத்திருந்து வானொலியைக் கேட்டுள்ளனர் அந்த கால பிரிட்டிஷ் மக்கள். இந்த பிரச்சனை முடிந்து ஆறுவதற்குள் மற்றும் ஒரு பிரச்சனையானது பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் பூதாகாரமானது. 1926 ஏப்ரல் 30, சுவாரஸ்யமான இசை நிகழ்ச்சி ஒன்றினை நேயர்கள் ரசித்துக்கொண்டு இருந்தனர். தீடிரென பாடலின் இடையே ஒரு அறிவிப்பு. அறிவிப்பு கொடுத்தவரின் குரல் அனைவருக்கும் பரிச்சியமாக இருந்தது.
பிரிட்டிஷ் சுரங்கத் தொழிளாலர்களின் வேலை நிறுத்தம் பற்றியது தான் அந்த பிளாஷ் நியூஸ். அந்த செய்தியனை வானொலியில் நேரடியாக அறிவித்தவர் வேறு யாருமல்ல, ஜான் ரீத். செய்தியை ஒலிபரப்பியது தான் தாமதம். அரசியல் கட்சிகள் சும்மா விடுமா என்ன? சர்ச்சில் தலைமையிலான அரசு எதிர்கட்சிகளுக்கு பதில் சொல்ல முடியாமல் திண்டாடியது.
அது தவறான செய்தி என ஆளுங்கட்சி வாதாடியது. அப்படி சொன்னதோடு மட்டுமல்லாமல் தற்பொழுது பி.பி.சி தவறான செய்திகளையும் ஒலிபரப்ப ஆரம்பித்து விட்டது என்றார்கள். எனவே பி.பி.சி இனி ‘பிரிட்டிஷ் புராட்காஸ்டிங் கார்பரேசன்’ எனக்கூறுவதை விட ‘பிரிட்டிஷ் பால்ஸ்காட்டிங் கார்பரேசன்’ எனக் கூறலாம் என்றனர்.
அந்த வேலை நிறுத்தத்தின் நிறைவில் அந்த பிரச்சனையும் முடிவுக்கு வந்தது. அந்த செய்தியைப் பற்றி நாளிதழ்களும் பலவாறு செய்திகளை வெளியிட்டன. அன்றை பிரிட்டிஷ் பேரரசின் பிரதமர் ஸ்டான்லி பால்ட்வின் பி.பி.சி.-யைப் பாராட்டி கடிதம் ஒன்றை எழுதினார். அதில் அவர் கூறிய கருத்தின் சாராம்சம் இது தான், “பி.பி.சி. என்றுமே அரசுக்கு சாதகமாகவே செயல்பட்டு வந்துள்ளது.”
பெயர் மாற்றம் உலகின் எந்த மூலையில் இருந்தும் செய்திகளை பெற்று உடனுக்குடன் ஒலிபரப்பக் கூடிய திறனை 1927-ல் பெற்றது பி.பி.சி. 1927 ஜனவரி 1-ல் தனது பெயரிலும் ஒரு மாற்றத்தினை செய்தது பி.பி.சி. அது நாள் வரை பிரிட்டிஷ் புராட்காஸ்டிங் கம்பெனி என அழைக்கப்பட்டு வந்த பி.பி.சி.யானது இனி பிரிட்டிஷ் புராட்காஸ்டிங் கார்ப்பரேசன் என அழைக்கப்படும் என அறிவித்தார் ஜான் ரீத்.
ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சிக்கு மட்டுமே இயக்குனராக இருந்த ஜான் ரீத் அவர்களின் பதவியும் உயர்தப்பட்டு டைரக்டர் ஜெனரலாக பணியமர்தப்பட்டார். செய்தி அறிக்கைகளும் அதிகரிக்கப்பட்டன. செய்தி நிறுவனங்கள் மற்றும் நாளிதழ்களிடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தினை அடுத்து விளையாட்டு செய்திகள் நேரடியாக ஒலிபரப்பப்பட்டன.
அதுநாள் வரை அரசின் ஒரு சில கொள்கைகளில் பி.பி.சி.-க்கு உடன்பாடு இல்லாவிட்டாலும் அவற்றை ஆதரித்து வந்தது. ஆனால் அது உண்மை செய்திகளுக்கு உலை வைப்பதாகவே இருந்தது. இந்த பிரச்சனைகளுக்கு 1928-ல் ஒரு முடிவு கிடைத்தது. அது வரை அரசியல், தொழில் மற்றும் மதசார்ந்த செய்திகளுக்கு இருந்த கட்டுப்பாடு தளர்த்தப்பட்டது. 1929 அடுத்தக்கட்ட பயணத்திற்கு தயாரானது பி.பி.சி. ஆம் தொலைகாட்சியின் வரவு பி.பி.சி.-யை
வெகுவாக மாற்றும் என்று அவர்களே அன்றைய காலகட்டத்தில் நினைக்கவில்லை. தொழில்நுட்பமானது அசுர வேகத்தில் வளர்ச்சியடைந்தது.
1930
உலக நாடுகள் பலவும் சிற்றலையில் சீறிப்பாய்ந்த நேரமது. உலகையே தன் கைக்குள் வைத்திருந்த பிரிட்டிஸ் பேரரசு மட்டும் சும்மா இருக்குமா என்ன. அதுவும் அந்த காலகட்டத்தில் சிற்றலை ஒலிபரப்பின் வீச்சு அபாரமானதாக இருந்தது. அதற்கு காரணம் இல்லாமல் இல்லை, சிற்றலைத் தொழில்நுட்பமானது தொலைதூர நாடுகளையும் சென்றடைவதாக இருந்தது. ஐரோப்பிய நாடுகள் பலவும் ஏற்றகனவே தனது சர்வதேச சிற்றலைச் சேவையை செய்யத் துவங்கியிருந்தன.அப்படியிருக்க பேரரசு சும்மா இருக்குமா என்ன? பிரிட்டிஸ் அரசாங்கம் சிற்றலை வானொலியைத் தொடங்க அனுமதியளித்த அதே சமயத்தில் பிரிட்டிஸ் ஆட்சிக்குட்பட்ட நாடுகளும் இதற்கு ஆதரவு அளித்தன. 1927ல் நடைபெற்ற காலனிய கருத்தரங்கம் பி.பி.சி. ஆரம்பிக்க முழு மனதாக ஆதரவு வழங்கினாலும் அதற்கான பணத்தினை வழங்க யோசித்தது.
அப்படியே பணம் போட்டாலும் அந்த ஒலிபரப்பானது உலகம் முழுமைக்கும் கேட்குமா என்ற சந்தேகமும் இருக்கத்தான் செய்தது. குறிப்பாக அந்த ஒலிபரப்பானது காலனிய நாடுகளுக்கு கிடைக்க வேண்டும் என்பதில் கவனமாக இருந்தது.
ஒரு காலை நேரத்தில் தனது வழக்கமான பணிகளுக்கு நடுவே ஒரு சிந்தனை தோன்றியது அவருக்கு. ஆம், பி.பி.சி-யின் முதல் இயக்குனராக பணியமர்த்தப்பட்ட சர் ஜான் ரீத் ஒரு முடிவுக்கு வந்தார். அவரது முடிவு ஒரு சிலருக்கு ஆச்சர்யத்தினை ஏற்படுத்தியது. ஆனால் ஒரு சிலர் அதனை வரவேற்றனர். அப்படி எடுக்கபட்ட முடிவு ஆண்டுகள் பல கடந்தும் இன்றும்
நடைமுறையில் உள்ளது ஆச்சர்யம் அளிக்கிறது. “பிரிட்டிஸ் ஆளுகைக்கு உட்பட்ட அனைவரும் வானொலி வைத்திருந்தால் ஆண்டிற்கு ஒரு முறை வரி செலுத்த வேண்டும். மேலும் பெறப்படும் அந்த வரியின் மூலமே பி.பி.சி ஒலிபரப்பிற்கு தேவையான செலவினங்களைப் பூர்த்தி செய்து கொள்ளவேண்டும்” என முடிவெடுக்கப்பட்டது.
ஜான் ரீத் ஒரு உறுதி மொழியையும் அப்பொழுது வழங்கினார். அதாவது, “பி.பி.சி-யின் நிகழ்ச்சிகள் அனைத்தும் உங்கள் அனைவரையும் தெளிவாக வந்தடையும். ஆனால் அதே சமயத்தில் அதில் ஒலிபரப்பாகும் அனைத்து நிகழ்ச்சிகளும் உங்களுக்கு பிடித்தமானதாக இருக்க வேண்டும் என்று எண்ணிவிட வேண்டாம்” என்று கண்டிப்பாக கூறினார். இது தான்
இன்றளவும் பி.பி.சி-யின் தனித்துவத்திற்கு காரணமாக இருக்கிறது. அரசாங்கம் பணம் கொடுக்கிறதே என்பதற்காக அரசாங்கம் செய்கின்றத் தவறுகளைச் சுட்டிக்காட்டத் தவறியதில்லை பி.பி.சி.
அவர் அவ்வாறு கூறியதற்கு காரணம் இல்லாமல் இல்லை, “பணம் கட்டி நிகழ்ச்சிகளை கேட்கும் எங்களுக்கு பிடித்தமான நிகழ்ச்சிகள் இல்லாத பட்சத்தில் நாங்கள் பணம் கட்ட முடியாது” என்று அங்கொன்றும் இங்கொன்றுமாக குரல்கள் ஒலித்தவண்ணம் இருந்தது. இதன் காரணமாக அவர் ஒரு சிலவற்றை மக்களுக்குத் தெளிவுப்படுத்த வேண்டி இருந்தது.
(தொடரும்..)
Sunday, February 19, 2012
சந்தைக்கு புதுசு
| INQUIRE NOW |
FOB Price: Get Product Price
Shenzhen Xinhao Precise Groupware Co. Ltd
ஒலி அலைகலைத் தேடி
வாய்ப்பு ஒரு முறைதான் கிடைக்கும். அந்த வாய்ப்பினை சரியான
வகையினில் பயன்படுத்திக் கொண்டால், அந்த அனுபவமானது நமது
நினைவுகளோடு தொடர்ந்து பயணிக்கும். இந்தியாவின் மெட்ரோபொலிட்டன் நகரங்களாக நான்கு நகரங்களைக் கூறுகிறோம். ஆனால் எனது அதிர்ஷ்டமோ முப்பது வயதிற்கு பிறகு தான் இந்தியத் தலைநகர் உட்பட நான்கு மெட்ரோபொலிட்டன் நகரங்களைப் பார்ப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அந்த வாய்ப்பும் நிறைய நண்பர்களுக்கு கிடைப்பதில்லை.
இன்னும் நமது தமிழகத்தின் தலைநகரான சென்னையைக் கூட நேரில் சென்று பார்க்க இயலாதவர்கள் பலர் உள்ளனர். அதற்கு காரணம் இல்லாமல் இல்லை. ஒவ்வொருவருக்கும் சூழ்நிலை பல்வேறு வகைகளில் விளையாட்டு காட்டுகிறது. அந்த வாய்ப்பு கிடைக்காதவர்களுக்கு இந்த கட்டுரை ஒரு விதத்தில் அந்த இடங்களுக்கு செல்லாமலேயே, அங்கு சென்று வந்த அனுபவத்தினை ஏற்படுத்தும். அந்த நோக்கத்திலேயே இந்த மாத ஒலி
அலைகளைத் தேடி உங்களை நாடிவருகிறது.
வானில் செல்லும் விமானங்களைப் பார்க்கும் பொழுது, பொதுவாக நம் எல்லோறுக்கும் என்னத் தோன்றுமோ, அதுவே தான் எனக்கும் தோன்றியது. 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தது போன்று, இன்று விமானத்தில் செல்வது ஒன்றும் குதிரைக் கொம்பான காரியம் இல்லை. நமது சொந்த பணத்திலேயே விமான டிக்கெட் எடுத்து இன்று விமானத்தில் செல்வது சாத்தியமாகியுள்ளது. அந்த வகையில் எனது முதல் விமானப் பயணம் சென்னையில இருந்து புது தில்லிக்கு செல்வதாக அமைந்தது.
சென்னை விமான நிலையத்திற்கு பலமுறை நண்பர்களையும் உறவினர்களையும் வழியனுப்பவும், வரவேற்கவும் சென்று வந்துள்ளேன். ஒரு கட்டத்தில், என்று நான் விமானத்தில் பயணம் செய்கிறேனோ, அப்பொழுது தான் விமான நிலையத்தின் வாசலை மிதிப்பேன், அதுவரை, அந்த வழியாக போனால் கூடப் பார்க்கக்கூடாது என்று மனதளவில்
சபதம் ஏற்றதுண்டு. ஆனால் அதனை நடைமுறைப்படுத்தவில்லை என்பது வேறுவிஷயம்.
ஆனால் இந்த முறை நான் பயணம் செய்வதற்காக விமான நிலையத்திற்கு உள்ளே நுழைகிறேன்; என்றபோது சற்றே மகிழ்வாக இருந்தேன் என்பதை மறைக்கக்கூடாது. பொதுவாக விமானப் பயணத்திற்கான திட்டமிடல் மிகப்பெரிதாக இருந்த காலமெல்லாம் சென்றுவிட்டது. உங்களிடம் இணையத்தொடர்புடன் கூடிய கைப்பேசி இருந்தாலே விமான டிக்கெட்டை எடுத்துக் கொள்ளலாம். அந்த அளவிற்கு எளிமையாகி விட்டது.
எனது விமான டிக்கெட்டும் அப்படியே எடுக்கப்பட்டது தான். அதாவது நாளை மதியம் புறப்படும் விமானத்திற்கு இன்று மதியம் டிக்கெட்டை எடுக்கிறேன். அதுவும் மிகக் குறைந்த கட்டணத்தை எந்த நிறுவனம் கொடுக்கிறதோ அந்த விமானத்தில் டிக்கெட் எடுத்துக் கொள்வதற்கும் வாய்ப்பினை வழங்குகிறது இணையம். இன்னும் சொல்லப்போனால், நமக்கு விமானத்தினில் எந்த சீட் வேண்டும், விமானத்தினில் எந்த வகையான உணவு வேண்டும் என்பதனைக்கூட முன் கூட்டியே பதிவுசெய்துகொள்ளும் வசதிகள் வந்துவிட்டன.
நான் புது தில்லி செல்ல தேர்வு செய்த விமான நிறுவனத்தின் பெயர் ஸ்பைஸ் ஜெட். “மிளகாய் வேகம்” எனத் தூயத் தமிழில் சொல்லலாமா? இவர்களைத் தேர்வு செய்யக் காரணம் மற்ற நிறுவனங்களை விட ஸ்பைஸ் ஜெட் குறைந்த கட்டணத்தினில் டிக்கெட்டினை வழங்கியது. பயணத்தின் முதல் நாளில் புக் செய்த டிக்கெட் என்பதனால் ரூ. 6050 என டிக்கெட் வழங்கப்பட்டது. இதனையே மூன்று மாதத்திற்கு முன் முன்பதிவு செய்திருந்தால் ரூ.3000-க்கும் குறைவாகவே டிக்கெட்டினை எடுத்திருக்கலாம்.
இங்கு இன்னும் ஒன்றையும் கூறியாக வேண்டும். நான் பயணம் செய்யத்
தேர்வு செய்த விமானம் சன் டி.வி குழுமத்திற்கு சொந்தமானது ஆகும்.
எனது பயணத்திட்டமானது ஒரு நாளுக்கு முன்னதாகத் தான்
முடிவானது. காரணம் எங்களது பல்கலைக்கழகம் இந்தியா முழுவதும்
இளங்களை மற்றும் முதுகலைத் தேர்வுகளை நடத்தி வருகிறது. அங்கே தேர்வு நடக்கும் இடங்களைப் பார்ப்பதற்காக எங்களைப் போன்ற துணை பேராசிரியர்களை “பறக்கும் படை” அதிகாரிகளாக நியமித்து இருந்தது.
கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) இல்லாமலேயே உள்நாட்டு விமானங்களில் பயணிக்கலாம். இருந்தாலும் அடையாளத்திற்காக கடவுச்சீட்டினை எடுத்துக்கொண்டு 11.30 விமானத்திற்கு 10.30-க்கு சென்னை காமராஜர் உள்நாட்டு விமான முனையத்திற்கு சென்றேன். கட்டுமானப்பணிகள் நடைபெறுவதால் வழக்கமான பாதைகள் மாற்றி அமைக்கப்பட்டு
இருந்தன. உள்ளே செல்லும் முன் எனது விமான டிக்கெட் மற்றும் அடையாள அட்டை சோதிக்கப்பட்டது.
தற்பொழுது விமான டிக்கெட் என்பது பத்து ஆண்டுகளுக்கு முன்பு பார்த்தது போன்ற புத்தகமாக இல்லை. சாதாரண ஏ4 தாளில் பிரின்ட் எடுக்கப்பட்டது. நமது ரயில் பயணத்திற்கு இணையத்தில் பதிவு செய்தால் எப்படி டிக்கெட்டை பிரின்ட் எடுக்கிறோமோ, அதே வடிவில் தான் இந்த டிக்கெட்டும் உள்ளது.
விமான நிலையத்தில் நாளிதழ்களும், பத்திரிகைகளும் ஆங்காங்கே வைக்கப்பட்டு இருந்தது.
வேண்டியவற்கள் எடுத்து படித்துக் கொள்ளலாம். எனது சோல்டர் பேக் தவிர மற்றவற்றை குறிப்பிட்ட விமான நிறுவனத்தின் கவுண்டரில் ஒப்படைத்துவிட வேண்டும். அவை நேரடியாக நாம் செல்லும் விமானத்திற்கு சென்றுவிடும். நான் ஏறவேண்டிய விமானத்திற்கு இன்னும் ஒரு மணி நேரம் இருந்ததால், விமான நிலையத்தினுல் ஒரு நடை போட்டேன்.
அங்கு விற்கும் பொருட்கள் எதனையும் நம்மைப் போன்ற நடுத்தர மக்கள் வாங்கக்கூடிய விலையில் இல்லை. வெருமனே நோட்டம் விட்டேன்.
விமானம் புறப்பட வேண்டிய நேரமான 11.30 ஆகியும், எந்த அறிவிப்பும் இல்லை. எனவே மனதளவில் சிறிது பயம் தொற்றிக்கொண்டது. விமான நிலையத்தினில் வைக்கப்பட்ட தொலைக்காட்ச்சியில் பதிவு செய்யப்பட்ட என்.டி.டி.வி நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வந்தது.
எனது காதுகளைக் கூர்மையாக்கிக் கொண்டு ஏதேனும் அறிவிப்பு கொடுக்கப்படுகிறதா என கவனித்தேன். ஆனால் எந்த அறிவிப்பும் இல்லை.
அறிவிப்பு ஏதும் இல்லாததால் நேரடியாக ஸ்பைஸ் ஜெட் உதவியாளர் நின்ற இடத்திற்கு சென்று காரணத்தினை விசாரித்தேன். குழைவான ஆங்கில வார்த்தைகள் அவரது குரலில் இருந்து வழுக்கி விழுந்தன. இன்னும் பத்து நிமிடத்தில் விமானம் வந்துவிடும் எனக் கூறியப்பின்னரே மனநிம்மதி அடைந்தேன்.
விமானம் வரும் வரை சற்றே பின்னோக்கி செல்வோம்….ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு கொல்கத்தாவிற்கு சென்றதை இதே ஒலி அலைகளைத் தேடியில் எழுதியுள்ளேன். அதுவே எனது மெட்ரே நகர பயணங்களில் சென்னையை அடுத்த பெரிய நகரம். புது தில்லி மற்றும்
மும்பை நகரங்களுக்கு செல்வதற்கான வாய்ப்பு கிடைப்பதற்கு அடுத்த ஐந்து ஆண்டுகள் காத்திருக்க வேண்டியதாயிற்று.
பல்கலைக்கழக பணியில் அமர்ந்த பின் ஒரு வருடத்தில் மும்பை, புனே, அஹமதாபாத், காந்தி நகர், விஜயவாடா, புது தில்லி, சண்டிகர், டேராடூன் மற்றும் ஹரித்துவார் போன்ற நகரங்களுக்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. இது பி.பி.சி-யில் இருந்த போது கிடைக்கவில்லை. எனவே தான் கூறினேன், வாய்ப்பு கிடைக்கும் போது சரியான வகையில் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். பயன்படுத்திக் கொண்டேன்.
விமான நிலையத்தில் உள்ள ஒலி பெருக்கி ஸ்பைஸ் ஜெட் எனக் கூறக் கேட்டு கனவு உலகில் இருந்து மீண்டு வந்தேன். புது தில்லி செல்ல உள்ள ஸ்பைஸ் ஜெட் விமானம் வந்து விட்டதாகவும், அதில் செல்ல உள்ளவர்கள் செல்லும் வழியையும் அறிவித்துக் கொண்டு இருந்தனர். அவர் குறிப்பிட்ட அந்த வழியில் சென்ற போது எனக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. வாயிலில் நின்ற காவலாளி என்னை உள்ளே அனுமதிக்க மறுத்துவிட்டார். அதற்கான காரணத்தினை அவர் கூறியபோது தான் அறிந்தேன் என்னுடையத் தவறினை.
(தொடரும்…)
Subscribe to:
Posts (Atom)



