Saturday, September 21, 2024

ஒலியலை ஓவியர்கள் - புத்தக வெளியீட்டு விழா




18.09.2024 அன்று சென்னைப் பல்கலைக்கழக வளாகத்தில் 
மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் திரு. மு. பெ. சாமிநாதன் அவர்கள் சென்னைப் பல்கலைக்கழகம், இதழியல் மக்கள் தொடர்பியல் துறை மற்றும் சென்னை இந்திய ஒலி ஒளிபரப்பாளர் மன்றம் இணைந்து நடத்திய, முனைவர் வெ. நல்லதம்பி அவர்கள் எழுதிய “ஒலியலை ஓவியர்கள்” என்ற நூலினை வெளியிட்டார். இந்நிகழ்ச்சியில் அமெரிக்க துணைத் தூதரகம் உதவித் தூதர் திருமிகு. ஜீன் பிரகன்டி, சென்னை பல்கலைக்கழகத்தின் பதிவாளர் பேராசிரியர் ஏழுமலை, பெரியார் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் முனைவர் மு. தங்கராசு, இதழியல் மக்கள் தொடர்பியல் துறை இணைப் பேராசிரியர் & துறைத் தலைவர் முனைவர் டி.ஆர். கோபாலகிருஷ்ணன், (பொறுப்பு), சென்னை பல்கலைக்கழகத்தின் இதழியல் துறை உதவி பேராசிரியர் ஜெயசக்திவேல், சென்னை வானொலி நிலையத்தின் முன்னாள் இயக்குநர் திரு கமலநாதன், தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் முனைவர் ந. அருள் ஆகியோர் பங்கேற்றனர்.

#






























பத்திரிகை செய்தி:

 சென்னைப் பல்கலைக்கழக இதழியல்,  தொடர்பியல் துறையும், சென்னை இந்திய ஒளி,ஒலிபரப்பாளர் மன்றமும் இணைந்து முனைவர்.வெ.நல்லதம்பி எழுதிய "ஒலியலை ஓவியர்கள்" புத்தக வெளியீட்டு விழாவிற்கு உங்களை அன்புடன் அழைக்கிறோம்.  இந்த நிகழ்வு, செப்டம்பர் 18, 2024 புதன்கிழமை அன்று காலை 10:30 மணிக்கு சென்னைப் பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு கட்டிடத்தில் உள்ள F50 அரங்கத்தில் நடைபெறும்.  இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு தமிழக அரசின் தமிழ் வளர்ச்சி மற்றும் தகவல் துறை அமைச்சர் உட்பட பல சிறப்புப் பேச்சாளர்கள் கலந்துகொண்டு, நூலின் முதல் பிரதியை வெளியிடவுள்ளனர். 


 #

No comments: