Showing posts with label வெ.நல்லதம்பி. Show all posts
Showing posts with label வெ.நல்லதம்பி. Show all posts

Saturday, September 21, 2024

ஒலியலை ஓவியர்கள் - புத்தக வெளியீட்டு விழா




18.09.2024 அன்று சென்னைப் பல்கலைக்கழக வளாகத்தில் 
மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் திரு. மு. பெ. சாமிநாதன் அவர்கள் சென்னைப் பல்கலைக்கழகம், இதழியல் மக்கள் தொடர்பியல் துறை மற்றும் சென்னை இந்திய ஒலி ஒளிபரப்பாளர் மன்றம் இணைந்து நடத்திய, முனைவர் வெ. நல்லதம்பி அவர்கள் எழுதிய “ஒலியலை ஓவியர்கள்” என்ற நூலினை வெளியிட்டார். இந்நிகழ்ச்சியில் அமெரிக்க துணைத் தூதரகம் உதவித் தூதர் திருமிகு. ஜீன் பிரகன்டி, சென்னை பல்கலைக்கழகத்தின் பதிவாளர் பேராசிரியர் ஏழுமலை, பெரியார் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் முனைவர் மு. தங்கராசு, இதழியல் மக்கள் தொடர்பியல் துறை இணைப் பேராசிரியர் & துறைத் தலைவர் முனைவர் டி.ஆர். கோபாலகிருஷ்ணன், (பொறுப்பு), சென்னை பல்கலைக்கழகத்தின் இதழியல் துறை உதவி பேராசிரியர் ஜெயசக்திவேல், சென்னை வானொலி நிலையத்தின் முன்னாள் இயக்குநர் திரு கமலநாதன், தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் முனைவர் ந. அருள் ஆகியோர் பங்கேற்றனர்.

#






























பத்திரிகை செய்தி:

 சென்னைப் பல்கலைக்கழக இதழியல்,  தொடர்பியல் துறையும், சென்னை இந்திய ஒளி,ஒலிபரப்பாளர் மன்றமும் இணைந்து முனைவர்.வெ.நல்லதம்பி எழுதிய "ஒலியலை ஓவியர்கள்" புத்தக வெளியீட்டு விழாவிற்கு உங்களை அன்புடன் அழைக்கிறோம்.  இந்த நிகழ்வு, செப்டம்பர் 18, 2024 புதன்கிழமை அன்று காலை 10:30 மணிக்கு சென்னைப் பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு கட்டிடத்தில் உள்ள F50 அரங்கத்தில் நடைபெறும்.  இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு தமிழக அரசின் தமிழ் வளர்ச்சி மற்றும் தகவல் துறை அமைச்சர் உட்பட பல சிறப்புப் பேச்சாளர்கள் கலந்துகொண்டு, நூலின் முதல் பிரதியை வெளியிடவுள்ளனர். 


 #

Tuesday, February 15, 2022

வானொலி தொடர்பான மூன்று புத்தகங்கள்

 

 பல்கலைக் கழக மானியக் குழு வைக்கும் தேசிய தகுதித் தேர்வில் (National Eligibility Test) வானொலி புத்தகங்கள்  தொடர்பாக ஒரு கேள்வி கேட்கப்பட்டது குறித்து சமீபத்தில் எழுதியிருந்தேன்.

அதில், வானொலித் தொடர்பான புத்தகங்களை எழுதிய திரு.கோ.செல்வம் (உங்கள் வானொலி), திரு.வெ.நல்லதம்பி (உலகமேலாம் தமிழோசை) மற்றும் தங்க.ஜெய்சக்திவேல் எழுதிய  "உலகவானொலிக
ள்" உள்ளிட்ட புத்தகங்களில் "உலக வானொலிகள்" புத்தகத்தினை தவிர மற்ற இரண்டு புத்தகங்களை பற்றி எந்த விபரமும் இணையத்தில் கிடைக்கவில்லை என்று JNU தமிழ் துறை மாணவர் தமிழ் பாரதி கேட்டிருந்தார். அவருக்காக இந்தப் பதிவு.

 

வானொலி நிகழ்ச்சி தயாரிப்பு பற்றி இலங்கையில் பிறந்து, பிற்காலத்தில் இந்தியாவில் வசித்த சிவ பாதசுந்தரம் எழுதிய "ஒலிபரப்புக் கலை" புத்தகத்திற்கு பிறகு நீண்ட காலமாக வானொலி நிகழ்ச்சி தயாரிப்புக்காக எந்த ஒரு புத்தகமும் வெளியாகவில்லை.

அந்த குறையைப் போக்க வந்த புத்தகம் தான் இந்த கோ.செல்வம் அவர்கள் எழுதிய "உங்கள் வானொலி". 300 பக்கங்களுக்கும் மேல், விரிவாக எழுதப்பட்ட இந்த புத்தகம் தான் ஒரு காலத்தில் வானொலி இதழியல் பயில்வோருக்கு கையேடாக இருந்தது. இன்று இந்த புத்தகம் விற்பனைக்கு கிடைக்கவில்லை என்பது ஒரு வருத்தமான செய்தி.

 


அடுத்து வெ.நல்லதம்பி அவர்கள் எழுதிய "உலகமெலாம் தமிழோசை". இந்த புத்தகம் 2010 வாக்கில் வெளிவந்ததால், ஒரு சில வானொலி ஆர்வலர்களிடம் இருக்க வாய்ப்புண்டு. நமது சர்வதேச வானொலி மாத இதழில் இந்த புத்தகத்தின் மதிப்புரையை எழுதியதால், ஒரு சில நேயர்களும் வாங்கினர். இன்னும் ஒரு சில புத்தக விற்பனையாளர்களிடம் இந்த புத்தகம் கிடைக்க வாய்ப்புள்ளது. சென்னைப் புத்தகக்காட்சியில் துணிந்து தேடலாம்.

இந்த மூன்று புத்தகங்களின் அட்டைப்படத்தினை மாணவர் தமிழ் பாரதிக்காக இங்கே பதிவு செய்கிறேன். "ஒலிபரப்பு கலை" புத்தகத்தினைப் பற்றி விரிவாக மற்றொருப் பதிவில் எழுதுகிறேன்.