தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் செயல்படும் சமூக வானொலி நிலைய மேம்பாட்டுக்கு ரூ.50 கோடி நிதி
மக்களவையில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தகவல்
தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் செயல்படும் சமூக வானொலி நிலைய மேம்பாட்டுக்கு ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள் ளதாக, மக்களவையில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.
தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் செயல்படும் வானொலி நிகழ்ச்சிகளின் செயல்திறன், நிலையான நிதி சார் நடவடிக்கைகள் தொடர் பான ஆய்வுகளை மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் மதிப்பீடு செய்கிறது.
நாட்டில் தமிழகம் உள்பட பல மாநிலங்களில் உள்ள சமூக வானொலி நிலையங்களை வலுப்படுத்தும் வகையில், பல் வேறு முன்முயற்சிகளை மத் திய அரசு மேற்கொண்டு வரு கிறது. இதன் ஒரு பகுதியாக, இந்தியாவில் சமூக வானொலி நிலைய மேம்பாட்டுக்கான ஆதரவு திட்டத்தை மத்திய அரசின் திட்டமாக விரிவுபடுத் தப்பட்டு, 2026-ம் ஆண்டு முதல் 2030-ம் ஆண்டு வரை அடுத்த 5 ஆண்டுகளுக்கு ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள் ளது.
இத்திட்டத்தின் கீழ், இந்த வானொலி நிலையங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கான சம்பளம், கருவிகள் மற்றும் உபகரணங்களை கொள்முதல் செய்வது, சூரியமின் உற்பத்தி அமைப்பை நிறுவுதல் ஆகிய வற்றுக்காக இந்த நிதி செல விடப்படும்.
தமிழகத்தில் செயல்பட்டு வரும் 6 சமூக வானொலி நிலை யங்களுக்கு கடந்த 3 ஆண்டு களில் ரூ.52.59 லட்சம் நிதியுதவி விடுவிக்கப்பட்டுள்ளது. இதில், தருமபுரி சமூக வானொலி நிலையத்துக்கு ரூ.10 லட்சம் நிதியுதவியும் அடங்கும்.
சமூக வானொலி நிலையங்களின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுகள் தொடர் பான அறிவிக்கையை மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத் தின் அதிகாரப்பூர்வ இணை யதளத்தில் (https://mib.gov. in/) பதிவேற்றம் செய்யப்பட் டுள்ளன. அனைத்து வானொலி நிலையங்களின் விவரங்கள் இந்த இணையதளத்தின் மூலம் பெற்றுக் கொள்ள முடியும். மக்களவையில் கேள்வி ஒன் றுக்கு எழுத்து மூலம் அளித் துள்ள பதிலில், மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை இணை யமைச்சர் எல்.முருகன் இதனை தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment