Showing posts with label சமுதாய வானொலி. Show all posts
Showing posts with label சமுதாய வானொலி. Show all posts

Thursday, July 30, 2026

சமுதாய வானொலி நிலைய மேம்பாட்டுக்கு ரூ.50 கோடி நிதி


 இந்து தமிழ் திசை 30-7-26


தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் செயல்படும் சமூக வானொலி நிலைய மேம்பாட்டுக்கு ரூ.50 கோடி நிதி

மக்களவையில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தகவல்

தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் செயல்படும் சமூக வானொலி நிலைய மேம்பாட்டுக்கு ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள் ளதாக, மக்களவையில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.

தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் செயல்படும் வானொலி நிகழ்ச்சிகளின் செயல்திறன், நிலையான நிதி சார் நடவடிக்கைகள் தொடர் பான ஆய்வுகளை மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் மதிப்பீடு செய்கிறது.

நாட்டில் தமிழகம் உள்பட பல மாநிலங்களில் உள்ள சமூக வானொலி நிலையங்களை வலுப்படுத்தும் வகையில், பல் வேறு முன்முயற்சிகளை மத் திய அரசு மேற்கொண்டு வரு கிறது. இதன் ஒரு பகுதியாக, இந்தியாவில் சமூக வானொலி நிலைய மேம்பாட்டுக்கான ஆதரவு திட்டத்தை மத்திய அரசின் திட்டமாக விரிவுபடுத் தப்பட்டு, 2026-ம் ஆண்டு முதல் 2030-ம் ஆண்டு வரை அடுத்த 5 ஆண்டுகளுக்கு ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள் ளது.

இத்திட்டத்தின் கீழ், இந்த வானொலி நிலையங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கான சம்பளம், கருவிகள் மற்றும் உபகரணங்களை கொள்முதல் செய்வது, சூரியமின் உற்பத்தி அமைப்பை நிறுவுதல் ஆகிய வற்றுக்காக இந்த நிதி செல விடப்படும்.

தமிழகத்தில் செயல்பட்டு வரும் 6 சமூக வானொலி நிலை யங்களுக்கு கடந்த 3 ஆண்டு களில் ரூ.52.59 லட்சம் நிதியுதவி விடுவிக்கப்பட்டுள்ளது. இதில், தருமபுரி சமூக வானொலி நிலையத்துக்கு ரூ.10 லட்சம் நிதியுதவியும் அடங்கும்.

சமூக வானொலி நிலையங்களின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுகள் தொடர் பான அறிவிக்கையை மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத் தின் அதிகாரப்பூர்வ இணை யதளத்தில் (https://mib.gov. in/) பதிவேற்றம் செய்யப்பட் டுள்ளன. அனைத்து வானொலி நிலையங்களின் விவரங்கள் இந்த இணையதளத்தின் மூலம் பெற்றுக் கொள்ள முடியும். மக்களவையில் கேள்வி ஒன் றுக்கு எழுத்து மூலம் அளித் துள்ள பதிலில், மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை இணை யமைச்சர் எல்.முருகன் இதனை தெரிவித்துள்ளார்.


Friday, April 10, 2026

கலசலிங்கம் சமுதாய வானொலியில் அறிவிப்பாளர் பயிற்சி பட்டறை


கிருஷ்ணன்கோவிலில் உள்ள கலசலிங்கம் பல்கலைக்கழகத்தின் கலசலிங்கம் வானொலி நிலையம் சார்பில், காட்சி சார் அறிவியல் துறைத் தலைவர் முனைவர். கற்பக சுந்தரம் ஏற்பாட்டில் ஏப்ரல் 11, 2026 அன்று வானொலி அறிப்பாளர் குறித்த ஒரு நாள்  பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இந்தப் பயிற்சி வகுப்பில், வானொலித் துறையின் நுணுக்கங்கள் மற்றும் நேரடி அனுபவங்களை மாணவர்களுக்கு வழங்கினோம்.  தனித்துவமான குரலால் வானொலித் துறையில் முத்திரை பதிக்க நினைப்பவர்களுக்கு, ஒரு அருமையான வாய்ப்பாக இருந்தது.





















Sunday, March 22, 2026

செயற்கை நுண்ணறிவு காலத்தில் சமுதாய வானொலிகள்

ஊட்டியில் நடைபெற்ற சிறப்பு கருத்தரங்கில் உரையாற்றுகிறார் திரு.ஸ்டாலின்

தொழில்நுட்பம் அசுரவேகத்தில் வளர்ந்து வரும் இன்றைய சூழலில், ஊடகங்களின் பங்கு மற்றும் சவால்கள் குறித்து விவாதிப்பது காலத்தின் கட்டாயமாகும். அந்த வகையில், மார்ச் 14 மற்றும் 15, 2026 ஆகிய தேதிகளில், மலைகளின் அரசியான ஊட்டியில் "செயற்கை நுண்ணறிவு காலத்தில் சமுதாய வானொலிகள்" (Community Radios in the Age of AI) எனும் தலைப்பில் இரண்டு நாள் கருத்தரங்கு மிகச்சிறப்பாக நடைபெற்றது.

ஏர்மீடியா (AirMedia) நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த இக்கருத்தரங்கில், வானொலித் துறையின் வல்லுநர்கள், ஆர்வலர்கள் மற்றும் சமுதாய வானொலி பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.

தலைமை உரை: திரு. ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதல்

இந்த நிகழ்வின் சிகரமாக அமைந்தது கோவை மற்றும் சென்னை அகில இந்திய வானொலியின் முன்னாள் இயக்குனர் திரு. ஸ்டாலின் அவர்களின் தலைமை உரை. வானொலித் துறையில் நீண்ட அனுபவம் கொண்ட அவர், தற்போதைய டிஜிட்டல் யுகத்தில் சமுதாய வானொலிகளின் இருப்பு மற்றும் அதன் எதிர்காலம் குறித்து ஆழமான கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.

அவரது உரையின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு: சமுதாய வானொலியின் தனித்துவத்தை அவர் விரிவாக விளக்கினார். பொது சேவை வானொலிகள் (Public Service Broadcasters) ஒட்டுமொத்த தேசத்திற்கும் அல்லது மாநிலத்திற்கும் பொதுவான செய்திகளை வழங்குகின்றன. ஆனால், சமுதாய வானொலிகள் ஒரு குறிப்பிட்ட வட்டாரத்தின் மொழி, பண்பாடு மற்றும் தேவைகளை மையமாகக் கொண்டு இயங்குபவை.

மக்களுக்கான ஊடகமாக சமுதாய வானொலி திகழ்கிறது. "மக்களால், மக்களுக்காக நடத்தப்படும் ஊடகம்" என்பதே சமுதாய வானொலியின் ஆன்மா என்பதை அவர் வலியுறுத்தினார்.

AI-ன் தாக்கம் பற்றி அவர் கூறுகையில், செயற்கை நுண்ணறிவு (AI) வளர்ந்து வரும் சூழலில், வானொலி நிலையங்கள் எவ்வாறு தங்களை நவீனப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதையும், அதே சமயம் மனித உணர்வுகளையும் உள்ளூர் தொடர்பையும் எவ்வாறு தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்பதையும் விளக்கினார்.

ஏர்மீடியாவின் சிறப்பான ஏற்பாடு

ஊட்டியின் இதமான சூழலில் இந்தக் கருத்தரங்கை ஏர்மீடியா நிறுவனம் நேர்த்தியாகத் திட்டமிட்டிருந்தது. செயற்கை நுண்ணறிவு போன்ற நவீன தொழில்நுட்பங்களைச் சமுதாய வானொலிகள் எவ்வாறு ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்தலாம் என்பதற்கான ஆலோசனைகள் இக்கருத்தரங்கில் முன்வைக்கப்பட்டன. சமுதாய வானொலியைத் தொடஙக விரும்புபவர்கள் நிச்சயமாக ஏர்மீடியாவைத் தொடர்பு கொள்ளலாம்.

நவீன காலத்தில் வானொலி என்பது வெறும் ஒலிபரப்பு சாதனம் மட்டுமல்ல, அது ஒரு சமூக மாற்றத்திற்கான கருவி என்பதை இக்கருத்தரங்கு மீண்டும் உறுதிப்படுத்தியது.

தொழில்நுட்பங்கள் மாறினாலும், அடிமட்ட மக்களின் குரலை உலகிற்கு கொண்டு செல்லும் சமுதாய வானொலிகளின் தேவை என்றும் குறையாது. திரு. ஸ்டாலின் போன்ற அனுபவமிக்கவர்களின் ஆலோசனைகள் இத்துறைக்கு ஒரு புதிய திசையைக் காட்டியுள்ளது.

இந்தக் கருத்தரங்கு குறித்த உங்களின் கருத்துக்களைக் கீழே உள்ள கமெண்ட் பகுதியில் பகிருங்கள்!




Tuesday, January 06, 2026

இந்தியாவில் சமுதாய வானொலிகளின் வளர்ச்சி (2020-2024)

 

இந்தியாவில் சமுதாய வானொலி நிலையங்களின் (Community Radio Stations - CRS) வளர்ச்சி மற்றும் பரவல் குறித்த இந்த ஆய்வு, கடந்த ஐந்து ஆண்டுகளில் (2020-2024) ஏற்பட்டுள்ள மாற்றங்களை மையமாகக் கொண்டுள்ளது. இந்திய அரசின் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் (MIB) தரவுகளின்படி, சமுதாயத்தின் விளிம்புநிலை மக்களுக்கான தகவல் தேவையைப் பூர்த்தி செய்வதில் இந்த ஊடகம் முக்கியப் பங்கு வகிக்கிறது. குறிப்பாக, ஜனநாயகத்தின் குரலாகக் கருதப்படும் சமுதாய வானொலிகள், 2020 முதல் 2024 வரையிலான காலகட்டத்தில் இந்தியா முழுவதும் 194 வெவ்வேறு மாவட்டங்களில் மொத்தம் 212 புதிய நிலையங்களாக விரிவடைந்துள்ளன

புள்ளிவிவர ரீதியாகப் பார்க்கும்போது, 2020 ஆம் ஆண்டில் 20 நிலையங்கள் தொடங்கப்பட்ட நிலையில், 2021 இல் அது 24 ஆகவும், 2022 இல் 59 ஆகவும் அதிகரித்தது. இந்த வளர்ச்சியானது 2023 ஆம் ஆண்டில் அதன் உச்சத்தை எட்டி, ஒரே ஆண்டில் 81 புதிய நிலையங்கள் நிறுவப்பட்டன. இருப்பினும், 2024 ஆம் ஆண்டில் இதன் வேகம் சற்று குறைந்து 28 நிலையங்கள் மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன. மாநில ரீதியான ஆய்வில், உத்தரப் பிரதேசம் இந்தியாவிலேயே முதன்மையான இடத்தைப் பிடித்துள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் அங்கு மட்டும் 35 புதிய நிலையங்கள் 33 மாவட்டங்களில் நிறுவப்பட்டுள்ளன. இதற்கு அடுத்தபடியாக மகாராஷ்டிரா (26 நிலையங்கள்) மற்றும் ஒடிசா (26 நிலையங்கள்) ஆகிய மாநிலங்கள் சமுதாய வானொலிப் புரட்சியில் முன்னிலை வகிக்கின்றன.

தென்னிந்தியாவைப் பொறுத்தவரை, தமிழ்நாடு கடந்த ஐந்து ஆண்டுகளில் 17 புதிய சமுதாய வானொலிகளைப் பெற்றுள்ளது. ஆந்திரப் பிரதேசத்தில் 5 நிலையங்களும், கர்நாடகாவில் 6 நிலையங்களும் நிறுவப்பட்டுள்ளன. வடகிழக்கு மாநிலங்களில் மணிப்பூர் (4 நிலையங்கள்) மற்றும் அசாம் (2 நிலையங்கள்) ஆகிய மாநிலங்கள் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் கண்டுள்ளன. அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள், லடாக் போன்ற மிகத் தொலைதூர மற்றும் சவாலான புவியியல் அமைப்பைக் கொண்ட பகுதிகளிலும் 2023 ஆம் ஆண்டில் தலா ஒரு நிலையம் தொடங்கப்பட்டது, சமுதாய வானொலிகளின் உள்ளடக்கிய வளர்ச்சியை (Inclusive Growth) உறுதிப்படுத்துகிறது.

ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில், மத்தியப் பிரதேசம் (7 நிலையங்கள்), பீகார் (7 நிலையங்கள்), மற்றும் சத்தீஸ்கர் (12 நிலையங்கள்) போன்ற மாநிலங்களிலும் சமுதாய வானொலிகளின் வருகை அதிகரித்துள்ளது. இந்த வானொலி நிலையங்கள் பெரும்பாலும் உள்ளூர் மொழிகளிலும் கிளைமொழிகளிலும் தகவல்களைப் பரப்புவதால், கல்வி, சுகாதாரம் மற்றும் வேளாண்மை சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் பெரும் பங்காற்றுகின்றன. 194 மாவட்டங்களைச் சென்றடைந்துள்ள இந்த ஊடகம், இந்தியாவின் கிராமப்புற மற்றும் பின்தங்கிய பகுதிகளின் வளர்ச்சிக்கு ஒரு வலுவான அடித்தளமாக மாறியுள்ளது.

 Reference Books

  1. Pavarthan, K. (2018). Community Radio in India: Heritage, Processes and Governance. Routledge.

  2. Ministry of Information and Broadcasting. (2024). Community Radio Policy Guidelines and Impact Reports. Government of India.


 

Saturday, October 18, 2025

சமுதாய வானொலி: உலக அரங்கில் ஒரு கண்ணோட்டம்


SRM பல்கலைக்கழகத்தில் BRIDGE 2025 – வளர்ச்சி, ஆளுமை, மற்றும் அதிகாரம் வழங்குவதற்கான வானொலி முயற்சிகளை கட்டமைத்தல் என்ற தேசிய கருத்தரங்கில் "சமுதாய வானொலி: உலக அரங்கில் ஒரு கண்ணோட்டம்" என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினேன்.






எஸ்.ஆர்.எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் (SRMIST-KTR) முத்துச்சரம் சமுதாய வானொலி நிலையம் (90.4 MHz) ஏற்பாடு செய்திருந்த இந்த கருத்தரங்கு, கொள்கை வகுப்பாளர்கள், ஊடக வல்லுநர்கள், மற்றும் கல்வியாளர்கள் மத்தியில் உரையாடல் மற்றும் ஒத்துழைப்புக்கான ஒரு சிறப்பான தளமாக அமைந்தது.




ஆளுமைக் கட்டமைப்பு, உள்ளடக்க உருவாக்கம், உரிமம் வழங்குதல், மற்றும் திறன் மேம்பாடு போன்ற முக்கியமான அம்சங்களை இந்த நிகழ்வு மையப்படுத்தியது. வெளிப்படைத்தன்மை, அனைவரையும் உள்ளடக்கும் தன்மை, மற்றும் அடித்தட்டு மக்களின் வளர்ச்சியை மேம்படுத்துவதில் சமுதாய வானொலியின் முக்கியப் பங்கினை இது வலியுறுத்தியது.

சமுதாய வானொலியின் சர்வதேச நிலப்பரப்பு குறித்த எனது பார்வைகளைப் பகிர்ந்துகொண்டபோது, உலகளாவிய நடைமுறைகள் மற்றும் கூட்டு மாதிரிகள் எவ்வாறு உள்ளூர் அதிகாரமளித்தலையும் ஊடகப் பன்முகத்தன்மையையும் வலுப்படுத்த முடியும் என்பதை நான் முக்கியமாக எடுத்துரைத்தேன்.

(படத்தில்: கருத்தரங்க அமர்வில் இருந்து ஒரு தருணம்.)


#