Wednesday, August 13, 2008

என் அருமை நண்பன்-நேஷனல் RX-M50

ண்பர்களை நாடுகிறோம். ஆனால் நண்பர்கள் எப்போதுமே நம் அருகில் இருப்பதில்லை. எனவேநாம் வானொலி, தொலைக்காட்சி, தொலைப்பேசி, கணினி போன்ற சாதனங்களை நாடுகிறோம். நான்சிறுவனாக இருந்தபோது வானொலிப் பெட்டியைத்தான் பெரும்பாலான மக்கள் பயன்படுத்தி மகிழ்ந்தனர். நான் உங்களுக்கு ஒரு நண்பனை அறிமுகம் செய்ய உள்ளேன். அந்த நண்பன் வேறு யாருமில்லை.

நான் பயன்படுத்தி வரும் “நேஷனல்/பானாஸோனிக் ரேடியோ-கேசட் ரெக்கார்டர்” ஆகும். அதன் மாடல் எண் “RX-M50 ” இந்த நண்பனைப் பற்றி எழுதுவதற்கு ஒரு காரணம் உண்டு.2006-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் வெளியான “சர்வதேச வானொலி” இதழில் முத்திரை நேயர்கள்வரிசையில் என்னைப்பற்றியும், இளமைக்காலத்தில் வானொலி கேட்ட அனுபவங்களைப் பற்றியும் ஒருகட்டுரை வெளியானது. இதன் மூலம் எனக்குப் பல புதிய நண்பர்கள் கிடைத்தார்கள். சிலர் என்னைநேரிலும் சந்தித்துப் பேசினார்கள். அவர்கள் பெரும்பாலும் கேட்ட கேள்வி என்னவெனில் “நான்ஏதேனும் விலை உயர்ந்த, பல வசதிகள் கொண்ட டிஜிட்டல் வானொலிப்பெட்டி வைத்துள்ளேனா?”என்பதுதான்.

நான் வெகுதொலைவில் உள்ள வானொலிகளான ரேடியோ நார்வே, °ஸ்வீடன், டென்மார்க், பின்லாந்து, அர்ஜென்டீனா, ஆஸ்திரேலியா, நியூஜிலாந்து, ஈக்வடார், ஆஸ்திரியா, ஜெர்மனி,நெதர்லாந்து போன்றவைகளை கேட்டுள்ளதால் அவ்வாறு எண்ணினார்கள். சிலர் நான் பதிவு செய்துவைத்திருந்த ஒலிநாடாக்களை (கேசட்டுகளை) கேட்டுவிட்டு மிகவும் வியந்தனர். இன்னும் சிலர் நான்பயன்படுத்திவரும் ஆன்டெனாவைப் பற்றி அறிய விரும்பினார்கள். எனவே பலரது ஐயங்களை நீக்கிடஇந்த நண்பனின் தகவல்களை வழங்குகிறேன்.

நேஷனல் RX-M50 (NATIONAL RX-M50) ரேடியோ கேசட் ரெக்கார்டரில் அனலாக் (ANALOG)எனும் டயல்முறை ட்யூனிங் (அலை எண் திருத்தும் முறை) பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில் நான்கு அலைவரிசைகள் (Wave Band) உள்ளன. பண்பலை, ஆறு மத்திய அலை சிற்றலை 1 & 2ஆகியவை உள்ளன. இன்றும் ஒருசில நாடுகள் நெட்டலையை உள்நாட்டுச் சேவைக்குப் பயன்படுத்தி வருகின்றனர். வெளிநாட்டு வானொலிகளைக் கேட்க சிற்றலை வரிசை மிக முக்கியமானது.

நேஷனல் RX-M50 மாடல் ஜப்பானில் உள்ள ஒஸாகா நகரில் மாட்ஸீ ஷீட்டா எலக்ட்ரிக் இன்ட°டிரியல் கம்பெனியால் தயார் செய்யப்பட்டதாகும். முதலில் “நேஷனல்” என்ற பெயரிலும், பிற்காலத்தில் “பானாசோனிக்” என்ற பெயரிலும் பல மாடல்கள் தயாரிக்கப்பட்டு விற்கப்படுகின்றது. (தொடரும்..)
- சென்னை வி. பாலு

Tuesday, August 12, 2008

இலங்கை வானொலியில் தமிழ் ஒலிபரப்பு நிறுத்தம்: கடலூர் நேயர்கள் கண்டனம்

லங்கை வானொலியில் தமிழ்ஒலிபரப்பு நிறுத்தப்பட்டதற்கு கடலூர் நேயர்கள் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

திடீர் நிறுத்தம்
இலங்கை சர்வதேச வானொலியில் 84 ஆண்டுகளாக தமிழ் ஒலிபரப்பு நடந்து வந்தது. இந்த ஒலிபரப்பை தமிழக நேயர்கள் விரும்பி கேட்டு வந்தனர். இந்த நிலையில் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி திடீரென இலங்கை வானொலியின் தமிழ் ஒலிபரப்பு நிறுத்தப்பட்டது. இதற்கு கடலூர் வானொலி நேயர் மன்றத்தைச்சேர்ந்த சிதம்பரம் ரமணி ராஜேஷ், கே.தமிழ்வாணன், பெரியசாமி ராஜா, வைத்தீசுவரன்கோவில் தாமரைச்செல்வி ஆகியோர் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது.

முதல் தமிழ்ஒலிபரப்பு
கடந்த 1924-ம் ஆண்டு இலங்கை சர்வதேச வானொலி தொடங்கப்பட்டது. தூய தமிழில் புதுமையான நிகழ்ச்சிகளை வழங்கி தமிழகத்தில் தனக்கென்று நேயர்கள் வட்டத்தை உருவாக்கிய பெருமை இலங்கை வானொலிக்கு உண்டு.

சர்வதேச அளவில் லண்டன் பி.பி.சி., சிங்கப்பூர், மலேசியா, பாகிஸ்தான், வாய்ஸ் ஆப் அமெரிக்கா, ஜெர்மன் ரேடியோ, ஆஸ்திரேலியா போன்ற வெளிநாட்டு வானொலி நிலையங்கள் தமிழ் நிகழ்ச்சிகளை ஒலிபரப்புகின்றன என்றாலும், முதன் முதலில் தமிழ் ஒலிபரப்பை தொடங்கிய பெருமையும் இலங்கை வானொலிக்கு உண்டு.

டி.வி.க்கள் இல்லாத காலத்தில் பட்டிதொட்டியெங்கும் இலங்கை வானொலி தான் பொழுது போக்கு சாதனமாக இருந்தது. இந்த நிலையில் எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் தமிழ் ஒலிபரப்பை இலங்கை வானொலி நிறுத்தியது நேயர்களிடையே கடும் வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே மீண்டும் தமிழ்ஒலிபரப்பை தொடங்க வேண்டும் என்று தினமும் எஸ்.எம்.எஸ். மூலமாக வற்புறுத்தி வருகிறோம்." இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Thanks to முதுவை ஹிதாயத், http://satrumun.com/localnews/?p=660

Monday, August 11, 2008

தனியார் பண்பலைகள்: கடிவாளம் இல்லாத குதிரை - 3

முதாயத்தில் நேர்மறை மாற்றங்களை முன்னெடுத்து செல்லும் வழிகாட்டியாக, அறிவு புகட்டும் கருவிகளாகப் பண்பலைகள் செயல்படுத்தல் அவசியமாகின்றது. அதனைக் கருத்தில் கொண்டு ஒரு நிகழ்ச்சி ஒலிபரப்பு எத்தகைய தாக்கங்களை ஏற்படுத்தும் என்ற நிலையில் சிந்தித்து நிகழ்ச்சிகளை வடிவமைத்து வழங்குதல் வேண்டும்.

வணிகமயமாகிவிட்ட பண்பலைகள் மொழி, பண்பாடு, சமூகக் கண்ணோட்டம், இளைஞர்களின் எதிர்காலம், மக்களின் யதார்த்த வாழ்க்கை உறவுகள் ஆகியவற்றைப் பற்றி கிஞ்சித்தும் சிந்திப்பதில்லை. ஆனால் இனிமேலாவது தன்னம்பிக்கையை வளர்க்கும் சிந்தனையின் புதிய பரிமாணங்களை இளைஞர்களுக்கு உணர்த்திடும் வகையிலும், உணர்வுகளை, உறவுகளைக் கொச்சைப்படுத்தா நிலையிலும் சமூகப் பொறுப்புணர்வுடன் தன் நிகழ்ச்சிகளை மாற்றியமைக்கவேண்டும்.

அந்த வகையில் 24 மணி நேரமும் தொடர்ச்சியாக திரைப்படப் பாடல்களை மட்டுமே ஒலிபரப்பாமல் மாற்றாக பொதுவிவாத மேடை, இலக்கிய நிகழ்வுகள், கல்வி, வேலைவாய்ப்பு தொடர்பான நிகழ்ச்சிகள், பொது அறிவு போன்ற பல்வேறு வகையான நிகழ்ச்சிகளை வழங்கிடும் வேலையில் இடையிடையே பொழுது போக்கு நிகழ்வுகளும் இருப்பதில் தவறில்லை.

பண்பலைகளின் பண்பாட்டுச் சிதைவுகளைத் தடுத்து நிறுத்தி சமூக அரங்கில் அதன் மீதான மதிப்பும், பார்வையும் சரித்திரமாகப் பதிவு செய்யப்படவேண்டுமானால் பண்பலை ஒலிபரப்பைக் கண்காணிக்கவும் கட்டுப்படுத்திடவும் ஒருகட்டுப்பாட்டு அமைப்பை உருவாக்குவது காலத்தின் கட்டாயமாகும். அதற்கென ஒழுங்கு முறை அமைப்போ தனி வாரியமோ அமைப்பது சாத்தியமா இல்லையா என்பது ஒரு புறமிருந்தாலும் பண்பலைகள் தன்னளவில் சமூகக் கட்டுப்பாட்டுணர்வுடன் சில கட்டுப்பாட்டு விதிமுறைகளைப் பின்பற்றுதல் கட்டாயமாக்கப்படவேண்டும்.

“பசுமை பண்பலை” போல கருத்தாழமிக்க நிகழ்ச்சிகளை, இளைஞர்களிடையே விழிப்புணர்வை உருவாக்கும் நிகழ்ச்சிகளை வழங்கிட முன் வருமானால் பொழுதுபோக்கிற்காக பண்பலை கேட்கும் நேயர்களைக் குறிப்பாக இளைஞர்களை அறிவுசார் நிகழ்ச்சிகளையும் கேட்க வைத்த பெருமை பண்பலைகளுக்கு உண்டு என்று எதிர்காலச் சமூகம் பாராட்டினை நல்குவதோடு மக்கள் மத்தியில் பண்பலைகளின் செல்வாக்கும், மதிப்பும் நாளும் உயரும் என்பதில் ஐயமில்லை.
- ரா. வெங்கடேஷ். (ஜூலை 2008 சர்வதே வானொலி இதழில் இருந்து...)

Sunday, August 10, 2008

உங்களுக்காக..

தைவான் : ரேடியோ தைவான் இண்டர்நேசனல்: ஒவ்வொரு ஆண்டும் இந்த வானொலியானதுநேயர்களிடம் ஏதேனும் ஒரு வகையில் கருத்தாய்வினை நடத்தும், அந்த வகையில் இந்த வருடத்திற்கான கருத்தாய்வானது தற்பொழுது நடைபெற்று வருகிறது. கருத்தாய்வில் கலந்து கொள்பவர்களுக்கு நினைவுப்பரிசினை வழங்க உள்ளது. கருத்தாய்வில் கலந்துகொள்ள விரும்புபவர்களும்,கருத்தாய்வுப் படிவத்தினைப் பெற்றவர்களும் உடனே பூர்த்தி செய்து அனுப்ப வேண்டிய முகவரி. English Section, Radio Taiwan International, P.O Box: 4914, Safdarjung Enclave, New Delhi - 110 029.

அமெரிக்கா: அட்வெண்டிஸ்ட் உலக வானொலி: சிற்றலை நேயர்கள் மத்தியில் புகழ் பெற்ற ‘வேவ்ஸ்கேன்’ நிகழ்ச்சி இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு ஒரு புதிய போட்டியை அறிவித்திருந்தது. போட்டியில் பங்கு பெறுபவர்கள் தங்களிடம் உள்ள QSL வண்ண அட்டையில் A to Z வரிசையில் 26 எழுத்துக்களை கொண்டதாகத் திரட்ட வேண்டும். உதாரணமாக A, என்றால் என்றால் Australia, B என்றால் Bangladesh என்ற வகையில் திரட்டி அனுப்ப வேண்டும். புதுமையான இந்தப் போட்டிக்கு உலக அளவில் நேயர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு.

இந்தியா : ஃபீபா வானொலி : நம்மில் பலருக்கு இந்த வானொலி தமிழில் ஒலிபரப்பி வருவது தெரியும். அதே போன்று தமிழில் வெளிவரும் ‘செய்திமடல்’ பற்றியும் தெரியும். ஆனால் பெரும்பாலான நேயர்களுக்கு, இவர்கள் ஆங்கிலத்தில் அனுப்பிவரும் News Letter பற்றித் தெரியாது. முற்றிலும் இலவசமாக நேயர்களுக்கு அனுப்பப்படும் இந்த இதழைப்பெற ஆங்கிலத்தில் தொடர்பு கொள்ளவேண்டிய முகவரி : News Bullettin, FEBA India, P.O.Box: 25066, Bangalore - 560 025. E.Mail : febaindia@vsnl.com

Saturday, August 09, 2008

சீன ரேடியோ இண்டர்நேசனல் (சிஆர்ஐ)

தென்னிந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான வர்த்தக இணைப்புகள் மத்திய காலத்திலிருந்து ஏற்பட்டு வந்ததாகும். இதன் பயனாகப் பல தமிழ் கல்வெட்டுகள் - 9 ஆவது, 13 ஆவது நூற்றாண்டு காலத்தவை - குவான் ஜோ துறைமுகத்தைப் போன்று கடலோர சீனாவின் சில பாகங்களில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. பெரும்பாலோருக்குத் தொ¢யாத இந்த மத்திய காலத் தொடர்பு நவீன காலவடிவத்தில் - அதாவது சிற்றலை வானொலியில தொடர்கிறது - அரசுக்குச் சொந்தமான சீன ரேடியோ இண்டர்நேசனல் (சிஆர்ஐ), ஒவ்வொரு நாளும் மாலையில் பெய்ஜிங்கிலுள்ள தனது கலைக்கூடத்திலிருந்து - ஒரு மணி நேரத் தமிழ் ஒலிபரப்பைச் செய்கிறது - இதன் வாயிலாகக் கடந்த பல ஆண்டுகளில் இந்த வானொலி, இலங்கை மற்றும் தென்கிழக்கு ஆசியாவின், மிகவும் சிறப்பாக, தமிழ் நாட்டிலேயே தமிழ் பேசும் மக்களிடையில் ஆர்வம் மிக்க கேட்பாளர்களின் ரசிகர் மன்றங்களைத் தோற்றுவித்துள்ளது. இந்த வானொலி நிலையம் முதன் முதலில் 1941 இல் தமிழ் ரசிகர்களுக்கு உலகெங்கும் சீனச் செய்திகளையும், கருத்துகளையும் ஒலிபரப்புவதற்காகத் தொடங்கப்பட்டது. கடந்த ஆண்டு இந்த வானொலி நிலையத்தின் தமிழப் பி¡¢வு ரசிகர்களிடமிருந்து திகைக்க வைக்கும் மிகப் பொ¢ய அளவான 5 இலட்சத்து 30 ஆயிரம் கடிதங்களைப் பெற்றது. சிஆர்ஐ - யின் தமிழ்ப் பி¡¢வில் 15 சீனர்களும், 2 தமிழர்களும் இருந்து வருகின்றனர். இந்தப் பி¡¢வில் உள்ள சீனர்கள் தூய தமிழில் பேசுவது வியக்க வைக்கிறது. இவர்கள் பேசுகிற தமிழ் இலக்கணச் சுத்தமாக, கலப்பற்ற தூய்மையான தமிழக இருக்கிறது. இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு சீன தமிழ் ஒலிபரப்புகளைக் கேட்கலாம்
நன்றி : தென் ஆசியச் செய்தி - சூலை 2008 Thanks to Pollachi Nasan http://www.thamizham.net/web190708/suvai52.htm

Friday, August 08, 2008

உங்களுக்காக..

பல்கேரியா : ரேடியோ பல்கேரியா சமீபத்தில் தனது நேயர்களுக்கு ஒரு கருத்தாய்வினை நடத்தியது. இதில் கலந்துகொண்ட அனைத்து நேயர்களுக்கும் இது, பல்கேரிய இசையினை மையப்படுத்திய குறுவட்டினை அனுப்பியது. தற்பொழுதும் தனது நேயர்களுக்கு அந்த குறு வட்டினை அனுப்பிவருகிறது. தேவைப்படும் நேயர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: English Section, Radio Bulgaria, P.O.Box: 900, 1000 Sofia, Bulgaria. E.Mail: radiobulgaria@bnr.org

சீனா : சைனா ரேடியோ இண்டர்நேசனல்: இந்த வானொலி ஒவ்வோரு முறையும் நேயர்களுக்குப் புதுமையான வகையில் நினைவுப்பரிசுகளை அனுப்பிவருகிறது. அந்தவகையில் ஆங்கிலப்பிரிவானது தற்பொழுது தனது நேயர்களுக்கு சீனாவின் வரைபடத்தினை போஸ்டர் வடிவில் அனுப்பிவருகிறது. தேவைப்படும் நேயர்கள் உடனே அவர்களை வான் அஞ்சலில் தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம். முகவரி: English Section, China Radio International, 16A, Shijing shan Road, Beijing 100 040, P.R. China, E.mail : crieng@crifm.com

Thursday, August 07, 2008

தனியார் பண்பலைகள்: கடிவாளம் இல்லாத குதிரை - 2

‘காதல் காதல்’ என்றொரு நிகழ்ச்சி, இந்நிகழ்ச்சியில் தொகுப்பாளினியைத் தொலைபேசி வழியாகத் தொடர்பு கொள்ளும் நேயரிடத்தில் நீங்கள் எத்தனை ஆண்டுகளாகக் காதலிக்கின்றீர்கள்? யார் காதலை முதலில் வெளிப்படுத்தியது? காதல், திருமணம் வரை வெற்றி பெறுமா? காதலை வெளிப்படுத்தியவுடன் கிடைத்த முதல் பரிசு என்ன? முதன்முதலாக அழைத்துச்சென்ற இடம் என்ன? இருவரும் பார்த்து மகிழ்ந்த முதல் திரைப்படம் என்ன? இப்படி அடுக்கடுக்கான கேள்விகள்.

இறுதியில் வாழ்த்துகளுடன் முடிவுறுகிறது. ஒருவேளை தோல்வி ஏற்பட்டிருக்குமானால், அல்லது காதல் பிணக்குகளில் நின்று போயிருக்குமானால் நேயரிடத்தில் வருத்தமும் ஆறுதலும் தெரிவிக்கப்படுகின்றது. இத்தகைய நிகழ்ச்சிகளால் இன்றைய வளரும் தலைமுறை எதைக் கற்றுக் கொள்ளப்போகிறது? பண்பலைகள் சமுதாயத்திற்கு எதைக்கற்றுத்தரப் போகின்றது? இதுபோல் எத்தனையோ நிகழ்ச்சிகள்.

உதாரணமாக இரகசிய சினேகிதி, வயாராகா, பிளேடு நம்பர் ஒன், ஊர் சுற்றலாம் வாங்க,டோட்டல் உடான்ஸ், கூட்ஸ் வண்டி. வெவ்வேறு தலைப்புகளில் ஒரே பாணியிலானநிகழ்ச்சிகளை வழங்குவதோடு மட்டுமன்றி 24 மணிநேரமும் திரைப்படப் பாடல்கள், திரைப்படம்தொடர்பான செடீநுதிகளை ஒலிபரப்பி இளைஞர்களின் சிந்தனையைத் திசைதிருப்பும் தீர்க்கமானபணியைத் திறம்படச் செடீநுது வருகின்றன.

மேலைநாடுகளில் வானொலிகள் அந்தந்த நாடுகளுக்குரிய பண்பாடு மற்றும் கலாச்சாரப்படிபொழுதுபோக்கு, ஆரோக்கியமான சிந்தனைகளுக்கு முன்னுரிமை தந்தே நிகழ்ச்சிகளைத் தயாரித்துஒலிபரப்புகின்றன. நாட்டின் பண்பாடு, கலாச்சாரம், மொழி ஆகியவற்றிற்கு சிதைவுகளை ஏற்படுத்திடும் எந்தவொரு நிகழ்ச்சியும், மேலைநாடுகளில் இடம்பெற இயலாது. மேலும் பொழுதுபோக்கு நிகழ்ச்சி இடையிடையேதான் ஒலிக்கின்றதே தவிர நம் பண்பலைகளைப்போல் இடைவிடாமல் ஒலிப்பதுமில்லை.

செறிவான ஆற்றல் கொண்ட இளைஞர்களை வெறும் பொழுதுபோக்குச் சிந்தனை உடையவர்களாக, உணர்ச்சிப் பிழம்புகளாக மாற்றி இச்சமூகத்திற்குப் பயனற்றவர்களாகச் செய்யும் பண்பலைகள் தொடர்ந்து பயணிக்கும் பாதையில் மாற்றம் தேவைப்படுகின்றது. அதற்காக பொழுதுபோக்கும், கேளிக்கை நிகழ்வுகளும் அறவே வேண்டாம் என்று சொல்லவில்லை, அவற்றிற்கு ஒரு வரைமுறை வேண்டும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் அவசியம்.
(தொடரும்...)
- ரா. வெங்கடேஷ் ஜூலை 2008 சர்வதே வானொலி இதழில் இருந்து...