Friday, May 08, 2015

IBC தாசீசியஸ் மாஸ்டர் தாவல்

தாசீசியஸ் மாஸ்டர் தாவல்: தவித்த IBC நிறுவனம் தலையில் கை வைத்தது ஏன் ?


லண்டனில் ஐ.பி.சி வானொலி தனது தொலைக்காட்சி சேவையின் ,ஆரம்ப நிகழ்வை விமர்சையாக கொண்டாடியது. அதில் கலந்துகொண்டு உரையாற்றிய தாசீசியஸ் மாஸ்டரின் தாவல் ,ஏற்பாட்டாளரை பெரும் தவிப்பில் கொண்டுபோய் விட்டுள்ளது. கிளிப்பிள்ளைக்கு சொல்லிக் கொடுப்பதுபோல ,செல்லிக்கொடுத்து மேடைக்கு அனுப்பினாலும், கிளி குரங்காக மாறிய கதை தான். இந்த சுவாரசியமான விடையம் என்ன என்பதனை பார்க முன் , இன்னொரு விடையத்தைப் பார்ப்போம் !
ஊரில் , 60 மற்றும் 70வதுகளில் "சிங்கன்" என்னும் நாடகத்தை மேடையில் அரங்கேற்றி வந்தார்கள். யாழில் இந்த நாடகத்தைப் பற்றி அறியாதவர்கள் இருக்கவே முடியாது எனலாம். சிங்கன் என்னும் பெயரை விட "மயிரச் செத்தான் சிங்கன்" என்று சொன்னால் தான் அனைவருக்கும் தெரியும். அப்படியா ? அது என்ன ? என்று நீங்கள் கேட்ப்பீர்கள். அது என்னவென்றால் , சிங்கன் ஒரு மன்னன். அவன் இறுதியில் ஒரு போரில் ,எதிரி நாட்டு மன்னனோடு போர் புரிந்து , வாளால் குத்துண்டு இறக்கிறான். அத்துடன் நாடகம் முடிவடையும். ஆனால் ஒரு நாள் சிங்கனாக நடிக்கும் நபர் , சற்று வெறியைப் போட்டுவிட்டு வந்துவிட்டார். குடிபோதையில் சிங்கன் இருக்கிறார் என்று தெரிந்தும் நாடக கம்பெனி அவரை நடிக்க அனுமதித்தார்கள். இறுதிவரை நன்றாக நடித்த சிங்கன் , எதிரி நாட்டு மன்னனுடன் வாள் சண்டை வரும்போது மட்டும் ,விடாமல் சண்டை பிடிக்க ஆரம்பித்துவிட்டான்.
இதனால் எதிரி நாட்டு மன்னனாக நடித்தவரால் சிங்கனை கத்தியால் குத்துவது போன்று நடிக்க முடியவில்லை. ஏன் என்றால் சிங்கன் நிஜமான போர் நடப்பதுபோல விடாமல் அடிபட ஆரம்பித்துவிட்டார். இன் நிலையை புரிந்துகொண்ட நாடக கம்பெனி ஆட்கள் ,முன்னால் உள்ள திரைச் சீலையை இழுத்து மூடி, "இவ்வாறு நடந்த போரில் சிங்கன் உயிரிழந்தார்" என்று அறிவித்தார்கள். ஆனால் அதனைக் கேட்ட சிங்கன், அப்படியே திரைச் சீலையை விலக்கி மக்கள் மத்தியில் தோன்றி "மயிரைச் செய்த்தான் சிங்கன்" என்று கூறி நின்றார். அது அன்று நடந்த மாபெரும் பகிடி. இதனைக் கூறி இன்று கூட பலர் சிரிப்பார்கள் என்றால் பாருங்களேன் ! அந்த அளவு அவர் அன்று வெறியில் இருந்துள்ளார். சரி விடையத்திற்கு வருவோம் ,
லண்டனில் புதிதாக ஐ.பி.சி என்னும் TV ஐ ஆரம்பிக்கிறோம் என்று கூறி அன் நிறுவனம் ஒரு விழாவை ஏற்பாடு செய்தது. ஐ.பி.சி வானொலி மற்றும் TV க்குப் பின்னால் லிபரா மோபைல் நிறுவனமே நின்று நிதி உதவியைச் செய்கிறது என்பது ஊரறிந்த விடையம். ஆனால் கேட்டால் , அவர்கள் வேறு நாம் வேறு என்று சொல்வார்கள் அங்கே வேலைசெய்யும் ஆட்கள். இதனை வெளிக்காட்ட லிபரா மோபைல் நிறுவனமும் விரும்பவில்லை. ஞாயிற்றுக் கிழமை அன்று , மேடையில் பேச தாசீசியஸ் மாஸ்டர் தயாராக இருந்தார். அந்த நேரத்தில் அவரை அணுகிய சிலர், அண்ணா "லிபரா" பற்றி வாய் திறக்க வேண்டாம். ஐ.பி.சி யைப் பற்றி மட்டும் பேசுங்கள். தயவு செய்து லிபரா பற்றி பேசவேண்டாம் என்று பாடம் நடத்தினார்கள்.
அவரும் ஓம் .. ஓம் என்று தலையசைத்துவிட்டு மேடைக்குச் சென்றார். அவருக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தை மீறி அவர் பேசிக்கொண்டு இருக்க , உங்கள் நேரம் முடிந்துவிட்டது என்ற வாசகம் அடங்கிய சிறிய துண்டுகளை சிலர் கொண்டுபோய் ,அவரது மைக்கிற்கு முன்னால் வைத்தார்கள். ஆனால் மனுஷன் பேச்சை நிறுத்திய பாடாக இல்லை. கடைசியில் எதனைச் சொல்லவேண்டாம் என்று சொல்லி அனுப்பினார்களோ அதில் கை வைத்துவிட்டார் போங்கள். "லிபரா" தான் ஐ.பி.சியை இயக்குகிறது. அவர்களுக்கு பூ போட்டு கும்பிடவேண்டும் என்று எல்லாம் அலட்டி , இறுதியாக எல்லாவற்றையும் போட்டு உடைத்துவிட்டார். மேடைக்கு பின்னால் நின்ற ஏற்பாட்டாளர்கள் பலர் தலையில் கைவைத்துக்கொண்டு ,முக்காடு போடாத குறையாக இருந்துள்ளார்கள்.
இதில் இன்னும் ஒரு விடையம்... இனி என்ன பேசப்போகிறார் என்பது தெரியாமல் அவர்கள் மண்டையை போட்டு உடைத்துக்கொண்டு இருந்துள்ளார்கள். உள்ளக விடையங்களை , அல்லது சீக்கிரெட்டான விடையங்களை இவர் எங்கே மோடையில் சொல்லிவிடுவாரோ என்று , ஏற்பாட்டாளர்கள் திணறியுள்ளார்கள். சில தமிழர்களிடத்தில் ஒரு பழக்கம் உள்ளது. மைக் (ஒலி வாங்கியை) கொடுத்தால் போதும் , மணித்தியாலக் கணக்கில் பேசுவார்கள். இந்த ரகத்தை சேர்ந்த தாசீசியஸ் மாஸ்டரை , விழாவுக்கு அழைத்து அவர் வாயால் வாங்கிக் கட்டியுள்ளார்கள். ஏன் மக்களுக்கு விடையங்களை மறைக்கவேண்டும் ? அப்படி மறைக்க முற்பட்டால் உண்மை ஏதோ ஒரு ரூபத்தில் வெளியாகும் என்பார்கள். அது இவர் ரூபத்தில் நின்று நேற்று கோர தாண்டவம் ஆடியுள்ளது.
அதிர்விற்காக ,
வல்லிபுரத்தான். 
Source: http://www.athirvu.com/, Apr 21, 2015

Friday, May 01, 2015

அகில இந்திய வானொலி நிலையத்தை வெளியேற்ற தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் தடை

குத்தகை நிலத்தில் இருந்து அகில இந்திய வானொலி நிலையத்தை வெளியேற்ற தமிழக அரசுக்கு தடை விதித்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை மெரீனா கடற்கரை, கலங்கரை விளக்கத்துக்கு எதிரே அகில இந்திய வானொலி நிலையம் உள்ளது. இந்த நிலையம், 1954-ஆம் ஆண்டு தமிழக அரசுக்குச் சொந்தமான 54 கிரவுண்ட் நிலத்தில், 30 ஆண்டு குத்தகை அடிப்படையில் ஒப்பந்தம் செய்யப்பட்டு தொடங்கப்பட்டது.
பின்னர், 1983-ஆம் ஆண்டு இந்த ஒப்பந்தம் மேலும் 30 ஆண்டுகளுக்கு புதுப்பிக்ககப்பட்டது.
இந்த நிலையில், இந்த இடத்தில், பத்திரப்பதிவு, வணிக வரித்துறை அலுவலகத்தை அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக நிலத்தை திரும்ப பெற அரசு முடிவு செய்தது. இதுகுறித்து 2014-ஆம் ஆண்டு நவம்பர் 26-ஆம் தேதி ஒப்பந்தத்தை ரத்து செய்வது குறித்து தீர்மானமும் இயற்றியது.
இதன் அடிப்படையில், சென்னை மாவட்ட ஆட்சியர், கடந்த ஜனவரி 27-ஆம் தேதி அகில இந்திய வானொலி நிலையத்துக்கு ஒரு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில், ஒப்பந்தத்தில் விதிக்கப்பட்ட நிபந்தனைகள் பலவற்றை அகில இந்திய வானொலி நிலையம் மீறியுள்ளது. அனுமதியின்றி, தனியார் வானொலி நிலையத்துக்கு சொந்தமான ஒலிபரப்பு கோபுரத்தை வளாகத்துக்குள் நிறுவப்பட்டுள்ளது.
கட்டடமும் சேதமடைந்துள்ளது. வளாகம் முழுவதும் முள்புதர்கள் நிரம்பி உள்ளன. எனவே, குத்தகை நிலத்தை திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த நோட்டீசை ரத்து செய்யக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் பிரசார்பாரதி தலைமைச் செயல் அதிகாரி, அகில இந்திய வானொலி நிலைய இயக்குநர் ஜெனரல் உள்பட 4 அதிகாரிகள் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.
அந்த மனுவில், தமிழக அரசு சுமத்தும் குற்றச்சாட்டுகள் எதுவும் உண்மை இல்லை. கட்டடம், வளாகமும் ஒப்பந்த நிபந்தனைகளின்படி நிர்வகிக்கப்பட்டு வருகிறது. எனவே, மாவட்ட ஆட்சியர் உத்தரவை ரத்து செய்யவேண்டும் என்று கூறியிருந்தனர்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி டி.எஸ்.சிவஞானம், அகில இந்திய வானொலி நிலையம் அமைந்துள்ள இடத்தின் தற்போதைய நிலையே தொடர வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவினால், அகில இந்திய வானொலி நிலையத்தை, குத்தகை நிலத்தில் இருந்து வெளியேற்ற தடை ஏற்பட்டுள்ளது.
Source: Dinamani, First Published : 03 April 2015

Friday, April 24, 2015

தமிழோசை வானொலி- புதிய சிற்றலை வரிசைகள்

பிபிசி தமிழோசை வானொலியை சிற்றலை வரிசைகள் மூலம் கேட்கும் நேயர்கள் அடுத்த அறிவிப்பு வரும் வரை, எமது வானொலி நிகழ்ச்சியை கீழ்க்கண்ட சிற்றலை வரிசைகள் மூலம் கேட்கலாம்.
பிபிசி தமிழோசை வானொலி நிகழ்ச்சிகளை சிற்றலை மூலம் கேட்கும் நேயர்கள் மறு அறிவித்தல் வரும் வரை, நமது அலைவரிசைகளை புதிய அலைவரிசைகளான 31 மீட்டரில் , 9,900 கிலோ ஹெர்ட்ஸிலும், 22 மீட்டரில், 13,830 கிலோ ஹெர்ட்ஸிலும், 19 மீட்டரில் 15,330 கிலோ ஹெர்ட்ஸிலும் கேட்கலாம்.

Sunday, April 19, 2015

கைதிகள் நடத்தும் வானொலி நிலையம்

மகாராஷ்டிரா மாநிலம், நாசிக் சிறையில் கைதிகளுக்காக கைதிகளே நடத்தும் "சுதார்வாணி' என்ற வானொலி நிலையம் வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது.
இந்த நிலையத்தை மகாராஷ்டிர உள்துறை இணையமைச்சர் ராம் ஷிண்டே தொடங்கிவைத்துப்பேசியதாவது:
கைதிகள் இந்த வானொலியில் வரும் நிகழ்ச்சிகளைக் கேட்பதன் மூலம் நல்ல விஷயங்களைக் கற்றுக்கொண்டு, சிறையிலிருந்து விடுதலையாகும்போது நல்ல குடிமகன்களாக மாறமுடியும் என்றார்.
இந்த வானொலியில் தினசரி காலை 10.30 மணியிலிருந்து மதியம் 1.30 மணி வரை கவிதைகள், பாடல்கள், பலகுரல் திறன், பஜனைப் பாடல்கள் போன்ற நிகழ்ச்சிகள், கைதிகள் பங்குபெற்று கைதிகளாலேயே தயாரித்து வழங்கப்படும். மேலும் அந்தந்தத் துறை நிபுணர்களால் சட்டம், சுகாதாரம் தொடர்பான நிகழ்ச்சிகளும் ஒலிபரப்பப்படும் என்று சிறை கண்காணிப்பாளர் ஜே.எஸ். நாயக் கூறினார்.
Source: http://www.dinamani.com/ First Published : 31 January 2015

Sunday, April 12, 2015

சென்னை லயோலா கல்லூரி சார்பில் திருநங்கைகள் உள்பட 12 பேர்களுக்கு இலவச ரேடியோ வழங்கப்பட்டன

சென்னை லயோலா கல்லூரி செயலாளர் பாதிரியார் ஆல்பர்ட் வில்லியம், கல்லூரியின் முதல்வர் பாதிரியார் ஜோசப் அந்தோணி சாமி ஆகியோர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

சென்னை லயோலா கல்லூரி கல்விக்கோவிலாக விளங்கி வருகிறது. கல்லூரியின் நோக்கம் மாணவர்களுக்கு கல்வி புகட்டுவது மட்டுமல்ல. சமுதாயத்திற்கு சேவை செய்வதும்தான்.

முதலில் கல்லூரியைச்சுற்றி சூளைமேடு, சூசைபுரம், மாகலிங்கபுரம், நெல்சன் மாணிக்கம் சாலை, சேத்துப்பட்டு, எழும்பூர் , பூபதி நகர், நரசிங்கபுரம் ஆகிய இடங்களில் வசிக்கும் மக்கள் குறிப்பாக ஏழை மக்களுக்கு சேவை செய்வதை குறிக்கோளாக கொண்டுள்ளோம்.

அந்த ஏழை மக்களுக்காகவும் அந்த பகுதியில் வசிக்கும் மாணவர்களுக்காக லயோலா கல்லூரியில் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு சமுதாய வானொலி தொடங்கப்பட்டது. அந்த வானொலி மூலம் கல்விச்செய்திகள், மருத்துவ தகவல்கள் ஆகியவற்றை பரப்பி வருகிறோம். பார்வைற்ற மாணவர்கள் பலருக்கு லயோலா கல்லூரியில் வேலைவாய்ப்பை தரக்கூடிய பட்டப்படிப்பை கொடுக்கிறோம்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

பின்னர் அவர்கள் சூளைமேட்டைச்சேர்ந்த திருநங்கைகள் அஸ்வினி, அனுஸ்ரீ மற்றும் பூ விற்கும் பெண்கள் நாகம்மாள், சாந்தி உள்பட மொத்தம் 12 பேருக்கு இலவச ரேடியோ கொடுத்தனர். இந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் பேராசிரியர் ராமமூர்த்தி, பேராசிரியர்கள் எஸ்.வின்செண்ட், பாதிரியார் ஜேக்கப், பேராசிரியைகள் ரேவதி ராபர்ட், அமலி உள்பட பலர் பேசினார்கள்.

Sunday, April 05, 2015

லயோலா கல்லூரி சமூக வானொலி திட்டம்: பல்கலை. மானிய குழு ரூ.10 லட்சம் நிதி

லயோலா கல்லூரியின் சமூக வானொலி திட்டத்துக்கு பல்கலைக்கழக மானிய குழு ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கியுள்ளது. லயோலா கல்லூரியில் சமூக வானொலி திட்டம் கடந்த பத்து ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இத்திட்டத்தின் மூலம் லயோலா கல்லூரியில் 15 கி.மீ சுற்று வட்டாரத்தில் இருக்கும் பகுதி மக்கள் பயனடையும் வகையில் வானொலி சேவை நடத்தப்படுகிறது. இதில் குழந்தை கள், கல்வி, வேலைவாய்ப்பு, மருத்துவம், கலை உள்ளிட்ட பல தலைப்புகளில் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

லயோலா கல்லூரியை சுற்றி யுள்ள சூளைமேடு, நுங்கம்பாக் கம் பகுதியை சேர்ந்த ஏழை எளி யோருக்கு இலவச வானொலிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட ஆய்வுகள் துறை முதல்வர் டாக்டர்.எஸ்.வின்சென்ட் கூறியதாவது:
பத்தாண்டுகளில் இத்திட்டத் தின் வளர்ச்சியை பார்த்து பல்கலைக்கழக மானிய குழு அடுத்த ஐந்தாண்டுகளுக்கு ரூ.10 லட்சம் நிதி தர ஒப்புக் கொண்டுள்ளது. முதல் கட்ட மாக மூன்று லட்சம் ஒதுக்கப் பட்டுள்ளது. இதனால், மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையுடன் இணைந்து செயல்படவும் வாய்ப்பிருக்கிறது. வேறு எந்த சமூக வானொலித் திட்டத்துக்கும் பல்கலைக்கழக மானிய குழு நிதி தருவதில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

கல்லூரியின் முதல்வர் ஜோசப் ஆண்டனி சாமி கூறும்போது, “மாணவர்கள் படிக்கும் போதே தங்களை சுற்றியுள்ள சமூகத்தைப் பற்றி கற்றுக் கொள்ள இத்திட்டம் உதவும் ,”என்றார்.
இத்திட்டத்தின் இணை இயக்கு நர் டாக்டர் ரேவதி ராபர்ட் கூறும்போது, “இந்த ஆண்டு முதல் லயோலா ரேடியோ கிளப் என்பது தொடங்கப்பட்டு மாணவர் களுக்கு வானொலி நிகழ்ச்சி கள் நடத்த பயிற்சி அளித்து மதிப்பெண்கள் அளிக்கப்படு கிறது” என்றார்.

இந்நிகழ்ச்சியில் அஸ்வினி, அனுஸ்ரீ ஆகிய இரண்டு திருநங்கைகள் உட்பட 12 பேருக்கு இலவச வானொலி கள் வழங்கப்பட்டன. மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் நிகழ்ச்சியில் மேலும் 200 பேருக்கு வானொலிகள் வழங்கப்படவுள்ளன.

Source: http://tamil.thehindu.com/ 
Published: February 13, 2015 11:37 IST