Wednesday, August 06, 2008

ஆன்டனாவைப் பற்றி...

மெரிக்கன் ரேடியோ ரிலே லீக் (ARRL) 21-ஆவது பதிப்பாக The Antenna Book-ஐ வெளியிட்டுள்ளது. ஆன்டனாவைப் பற்றி ஒன்றுமே தெரியாதவர்கள் கூட அடிப்படை அறிவை வளர்த்துக் கொள்ளும் வகையில் தயாரிக்கப்பட்டதே இந்தப் புத்தகம். இந்த ஆண்டு முழுமையான புத்தக மாக வெளிவந்துள்ளது.

வானொலி நிலையத்தில் பணியாற்றுவோருக்கு மட்டுமின்றி, வானொலி ஒலிபரப்புகளைக் கேட்பவர்களுக்கும் பயன் அளிக்கும் வகையில் இந்த புத்தகம் தயா ரிக்கப்பட்டுள்ளது. எளிமையான ஆன்டனா முதல் சமீபத்தில் வெளிவந்த ஆன்டனா வரை அனைத்து வகை ஆன்டனாக்களும் இந்தப் புத்தகத்தில் உள்ளது.

சிற்றலை ஒலிபரப்பினைக் கேட்கத் தேவையான ஆன்டனா முதல் ஹாம் வானொலியினைக் கேட்கப் பயன்படும் ஆன்டனா வரை இந்தப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன. இந்த புத்தகத்தில் இடம் பெற்றுள்ள ‘ஸ்குரு டிரைவ்’ (Screw driver) ஆன்டனா அனைவரையும் கவர்ந்துள்ளது.

புத்தகத்தில் உள்ள அனைத்துத் தகவல் களும் குறுந்தகடு வடிவிலும் வெளியிடப் பட்டுள்ளதால் தேவையான நேரத்தில் நகல் எடுத்துக் கொள்ள வசதியாக உள்ளது. மேலும் இந்த சி.டியில் Yagi for windows, Antenna modeling for windows போன்ற கூடுதல் தகவல்களும் உள்ளன.

ரூ. 1800-க்கு விற்பனைக்கு வந்துள்ள இந்தப் புத்தகத்தினைப் பெறத்தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
American Radio Relay League Inc.,
225, Main Street,
Newington,
CT 06111 – 1494,
USA.
E.Mail: tis@arrl.org

Tuesday, August 05, 2008

நேயர் உறவுகளுடன் வத்திக்கான் வானொலி தமிழ்பிரிவு

கோடை காலத்தில் இதமாக இருந்த நாளான கடந்த 25 மே 2008 ஞாயிறு அன்று திருச்சி தூயவளனார் கல்லூரி அரங்கத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட நேயர் உறவுகளுடன் வத்திக்கான் வானொலி தமிழ்பிரிவு சார்பில் நேயர் சந்திப்பு விழா வெகுசிறப்பாக நடைபெற்றது.

விழாவிற்கு ரோமிலிருந்து அருட்சகோதரி தெரேசா அவர்களும், வத்திக்கான் வானொலி இந்தியஅலுவலகத்தின் இயக்குனர் அருட்பணி சேவியர் ராஜன் மற்றும் திரு. ஜார்ஜ் அவர்களும் வருகை தந்து சிறப்புற நடத்தினர். நீண்டகால நேயர்கள், வளமையான நேயர்கள், பிற மாநிலங்களில் இருந்தும் வந்திருந்த நேயர்கள் மற்றும் புதிய அறிமுக நேயர்கள் என பல தரப்பு நேயர்களும் வருகை தந்து விழாவினை சிறப்பித்து கொடுக்கும் முகமாக தங்களது கருத்துக்களை எடுத்துரைத்தனர்.


தொடர்ந்து நிகழ்ச்சிகள் பற்றிய பொதுவான விமர்சனக் கருத்துக்களை நேயர்கள் நேரடியாக பகிர்ந்து கொண்டனர். நேயர்களின் ஐயங்களுக்கு அருட்சகோதரி தெரேசா அவர்களும், திரு. சேவியர் ராஐன் அவர்களும் உடனுக்குடன் விளக்கமாக பதில் அளித்தனர்.


இதற்கிடையே விழா அரங்கிற்கு வெளியே வத்திக்கான் தலைமை கலையகத்திலிருந்து தொலைபேசி வழியாக தொடர்பு கொண்ட திரு. கிருஸ்டோபர் அவர்கள், விழா நடைபெறும் விதம் பற்றி கேட்டறிந்து, சிறப்பு நிகழ்ச்சிக்காக நேயர்களின் கருத்துக்களை தொலைபேசி வழியாகஒலிப்பதிவு செய்து கொண்டார்.


ஒலிபரப்பு தரம் பற்றி நேயர்கள் விவாதித்த வேளையில் வானொலி கேட்பதில் நீண்டகால அனுபவம்பெற்ற விழுப்புரம் திரு. ஜமீல்அகம்மது அவர்கள் சிற்றலை ஒலிபரப்பின் தன்மை குறித்தும் தொழில் நுட்பம் சார்ந்தும் பலவித விசயங்களை விரிவாக விளக்கிக் கூறினார்.
மேலும் சிற்றலை ஒலிபரப்பை கேட்பதில் அனைத்து நேயர்களும் அறிய வேண்டிய அடிப்படைநுணுக்கங்கள் பற்றி தனது நேரடி அனுபவங்களுடன் எளிமையாக எடுத்துக் கூறியது சிற்றலையில் இன்னும் அறிய வேண்டியது எவ்வளவோ உண்டு என்பதை அறிய முடிந்தது.


அடுத்து உரையாற்றிய திருச்சி அகில இந்திய வானொலி அறிவிப்பாளர் புலவர் கோ.சந்திரசேகர் அவர்கள் ஏறக்குறைய 48 ஆண்டுகள் தன் வாழ்வோடு இரண்டறக் கலந்து விட்ட வானொலி ஊடகம் பற்றிய பல அரிய தகவல்களை நகைச்சுவை நயம்பட எடுத்துக் கூறியது, கலந்து கொண்ட நேயர்களின் மனதில் வானொலி கேட்பதை தீவிரப்படுத்த வேண்டும் என்கின்ற தாக்கத்தை ஏற்படுத்தும் விதமாக அமைந்தது. இதுபோல வானொலி செவிமடுப்பது தொடர்பான விளக்கங்களை விழா நடத்தும்ஒவ்வொரு வானொலியும் தனது விழாவின் ஒரு பகுதியாக ஏற்பாடு செய்து கொடுத்தால், வானொலிநேயர்களை இன்னும் ஊக்கப்படுத்தும் விதமாக அமையும். மேலும் பல புதிய நேயர்களை உருவாக்கவழிவகுக்கும்.


நிறைவாக நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. தூய வளனார் கல்லூரியின் அருட்பணி திரு. லாசர்அவர்களின் ஆசியுடன் கூடிய நிறைவுரை மற்றும் சிதம்பரம் திரு. விஜயராகவன் அவர்களின் நன்றியுரை யுடன் மாலை 4 மணிக்கு விழா இனிதே நிறை வடைந்தது.

- மின்னகல் செல்வராஜ்.

Monday, August 04, 2008

வானொலி உலகம்

லண்டன் ஐ.பி.சி. தமிழ் வானொலி தனது 11 ஆண்டுகளை நிறைவுச் செய்து கடந்த 9 ஜூன் 2008 ல் 12-ஆவது ஆண்டில் அடி எடுத்து வைத்துள்ளது.


  • இங்கிலாந்தில் இருந்து ஒலிபரப்பாகிவரும் ரேடியோ கரோலின் இண்டர்நேசனலைத் தொடர்பு கொள்ள.
    studio@radiocaroline.co.uk

  • காரைக்கால் பண்பலையை தொடர்பு கொள்ள 04368-231500, 231550

  • வத்திகான் வானொலி தமிழ் பிரிவின் புதிய மின் அஞ்சல் முகவரி vradio@loyolacollege.edu

  • வேரித்தாஸ் தமிழ்பணியின் தொலை நகல் எண் 0063 293 81940

  • ஏற்காடு பண்பலை 5 ஜூன் 2008 முதல் 90.4 மெகா ஹெர்ட்சுக்கு பதிலாக 103.7 மெகா ஹெர்ட்சுக்கு மாற்றப்பட்டுள்ளது.

  • வானொலி, தொலைகாட்சி மற்றும் செயற்கைக்கோள் பற்றிய புதிய செய்திகளுக்கு சொடுக்கவும்
    http://www.mediaworldasia.dk/

தனியார் பண்பலைகள்: கடிவாளம் இல்லாத குதிரை

உலகை உள்ளங்கைக்குள் அடக்கும் உன்னதக் கணிப்பொறித் தொழில்நுட்பம் விண்வெளி ஆராய்ச்சியில் வியத்தகு முன்னேற்றம். ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்று கருதப்படுகின்றஊடகத்துறையில் எத்தனையோ மாற்றங்கள்.
இவற்றிற்கிடையில் இன்றும் வானொலியின் குரல் ஓங்கி ஒலித்துக் கொண்டிருப்பது வானொலிக்குக்கிடைத்த வெற்றியாகும். வெள்ளை ஏகாதிபத்தியத்திற்கெதிரான விடுதலைப் போராட்டத்தில் மண்ணின் மைந்தர்களிடையே தேசப்பற்றை, விடுதலை வேட்கையை ஊட்டி உணர்வு பெறச் செய்ததில் வானொலிக்கு அளப்பரிய பங்கு உண்டு.
அந்த வகையில் ஏழை, எளிய மக்களின் உயிர்மூச்சாக, செய்திப் பெட்டகமாக விளங்கிய வானொலி அண்மைக்காலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப புரட்சி காரணமாக தன் உண்மை முகத்தை இழந்து அல்லது மறைத்து பொழுதுபோக்கு எனும் முகமூடி அணிந்து ‘பண்பலை’ என்னும் புதிய அவதாரம் எடுத்துள்ளது.
வானொலியின் புதிய அவதாரமான பண்பலைகளின் எண்ணிக்கை கிராமங்கள், நகரங்கள்,பெருநகரங்கள் என்ற வேறுபாடின்றி பல்கிப் பெருகிய தோடு மட்டுமன்றி ‘வானொலி ஒலிக்காதவீடே இல்லை’ என்ற நிலையை மாற்றி ‘பண்பலை ஒலிக்காத வீடே இல்லை’ என்ற சூழல் தற்போதுஉருவாக்கி உள்ளது.
இதன் காரணமாகவோ என்னவோ, எப்படி கடிவாளம் இல்லாத குதிரை தாறுமாறாக ஓடுகின்றதோ அதைப் போல கட்டுப்பாடு எனும் கடிவாளம் இல்லாமல் தனியார் பண்பலைகள் சமூகத் தளத்திலிருந்து விலகி இளைஞர்கள் மத்தியில் சிந்தனைச் சிதறல்களை உருவாக்கி பண்பாட்டுச் சிதைவுகளைப் பதியவைக்கும் வரம்பு மீறிய நாகரிக மோசடியை நாளும் நிகழ்த்தி வருவது வானொலியின் உண்மை நேயர்களை வேதனைக்குள்ளாக்குகின்றது.
கல்வி, விவசாயம், வேலைவாய்ப்பு, இசை, இலக்கியம், நாடகம், நாட்டியம், பொழுதுபோக்கு என்று பல்துறை நிகழ்ச்சிகள் பண்பாட்டு, கலாச்சார சீரழிவின்றி வானொலியால் வழங்கப்பட்டு வருகின்றது. ஆனால் எந்த அளவிற்குப் புதிது, புதிதாக பண்பலைகள் (தனியார்) உருவாகின்றதோ அதேபோல்எவ்விதக் கட்டுப்பாடும் இல்லாமல் நிகழ்ச்சிகளும் ஒலிபரப்பப்படுவதால் பண்பாடும், கலாச்சாரமும் இன்று கேலிக்கூத்தாக்கப்பட்டுள்ளன.
மக்களின், இளைஞர்களின் பொழுதை எவ்வாறேனும் போக்கடிப்பது குறிக்கோள் என்ற ரீதியில் 24 மணி நேரமும் பண்பலைகளின் குரல் ஓய்வின்றி ஒலித்து வருகின்றது. புதிய புதிய நிகழ்ச்சிகளை அறிமுகம் செய்யும் ஆர்வத்தில் மேற்கத்திய கலாச்சார நடைமுறைகளை அப்படியே தங்களுக்கேற்ற பாணியில் மாற்றம் செய்து ஒலிபரப்புகின்றனர்.
மேலும் வணிக ரீதியிலான போட்டி, ஒலிபரப்பில் முன்னணி பெற்றிட முயலும் துடிப்பு காரணமாகபண்பலைகள் அடிக்கும் லூட்டி நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவது கவலையளிப்பதாகஉள்ளது.
எந்த பண்பலையானாலும் இளைஞர்கள்தான் அதன் மையப்புள்ளி. இளைய சமுதாயத்தைச் சுற்றியேஅனைத்து நிகழ்ச்சிகளும் உருவாக்கப் படுகின்றன. இளைஞர்களைக் கவர்வதற்காகப் பொருந்தாத நிகழ்ச்சிகளைக்கூடப் பண்பலைகள் ஒலிபரப்பத் தயங்குவதில்லை,
கேலிக்கூத்துக்கு மகுடம் சூட்டும் வகையில் ‘ரேடியோ ஜாக்கிகள்’ எனும் தொகுப்பாளினிகளின் புன்னகை கலந்த புரிதலற்ற பேச்சு, ஆங்கிலக்கலப்புடன் கூடிய வார்த்தை ஜாலம், சிந்திக்கத்தூண்டாதபுதிர் வினாக்கள் பொது அறிவிற்குப் பொருந்தாக் கேள்விகள்...இப்படிப்பல!
பேசுபவர்க்கும் கேட்பவர்க்கும் என்னவென்று புரியாமல் போகும் நிகழ்ச்சிகளால் சமூகத்திற்கு என்ன பயன் கிட்டும் என்பது தெரியவில்லை. இளைஞர்களைத் தங்கள் பண்பலை நோக்கி கவரஇப்படிப்பட்ட பண்பாட்டுச் சீர்குலைவு நிகழ்ச்சிகளை வழங்கிட இவர்களிடம் யார் கேட்டது?
(தொடரும்...)
- ரா. வெங்கடேஷ் ஜூலை 2008 சர்வதே வானொலி இதழில் இருந்து...

Saturday, August 02, 2008

தெரிந்தே தொலைத்த பொக்கிஷம்

காலம் காலமாக தமிழர்களின், தமிழ்ப் பாடல்களின் அடையாளமாக இருந்த இலங்கை வானொலி (கொழும்பு சர்வதேச வானொலி) கடந்த 31-05-2008 அன்று நிறுத்தப்பட்டுவிட்டது. ஏதோ ஒரு வானொலிக்கு எதையோ ஒன்று எழுதிப் போட்டுவிட்டு ‘டி’சர்ட் வாங்குவதற்காக அல்லாமல், ‘டூர்’ கூட்டிட்டு போவாங்க’ என்று அலையும் கூட்டமாகவும் அல்லாமல், ‘கலாச்சாரத்தை’ தெரிந்து கொள்கிறேன் பேர்வழி என்று சம்பந்தமே இல்லாமல் எங்கோ சென்று சந்தோசத்தில் வாழ்க்கையை நான்கு நாட்களில் அனுபவித்து முடித்த சிரிப்பை சிந்துகின்ற, அரிதாரங்கள் பூசியவர்களாக அல்லாமல், கொடுக்கிற நாலணா பேனாவில் நாட்கள் முச்சூடும் போற்றிப் பாதுகாக்கிற
கூட்டமாகவும் அல்லாமல் இருந்த ஒரு பண்பாட்டு வட்டம், பாட்டுக் கூட்டம் காலக் கொடுமையில் கால எல்லைகளைக் கடந்து கற்கால மனிதன் போல நடந்து கொண்ட விதம் இன்று, தான் எந்த ஜென்மத்திலும் திரும்ப பெறமுடியாத தெய்வ வரத்தை இழந்து தவிக்கிறது.
என்னதான் விளம்பரங்கள் மூலம் கிடைத்த கணிசமான வருமானங்கள் குறைந்து போனாலும், இத்தனை வருடங்களாக நம்மை நம்பியிருக்கும் தமிழக நேயர்களை ஏமாற்றக் கூடாது என்ற ஒரே உள்ளக்கிடக்கையில் 1990-களில் “கொழும்பு சர்வதேச வானொலி” அற்புதமான பல நிகழ்ச்சிகளை வழங்கியது, அதில் “கவிதை செண்டு, முத்தமிழ் ஆரம், இன்றைய நேயர், உங்கள் விருப்பம், வானொலி மலர், நெஞ்சில் நிறைந்தவை, ஆனந்த கானங்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், கதம்பம், இசை இன்பம், பாட்டும் பதமும்” ஆகியவற்றை நேயர்களை மனதில் வைத்து ஒலிபரப்பியது. (உலக தமிழ் வானொலிகளில் இந்த மாதிரி பெயரையாவது யாருக்காவது வைக்கத் தெரியுமா?)
இதற்கொரு பெரிய சரித்திரம் இருக்கிறது, 1956-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இலங்கை வானொலியின் மத்திய அலை ஒலிபரப்பு, 1980-களில் இனப் பிரச்னையின் போது நிறுத்தப்பட்டது. பிறகு அது சிற்றலை மற்றும் பண்பலைக்கு சென்று அங்கு நிலை கொண்டது. அதற்கு பெயர் “வர்த்தகச் சேவை”, அதன் பிறகு “தென்றல்” ஆனது. இது இப்பொழுதும் வந்து கொண்டுள்ளது. ஆனால், இண்டெர்நெட்டில் நமக்கு தற்பொழுது www.slbc.lk-ல் கேட்கலாம்.
அன்று “வானொலி பிதாமகன்” எ°ஸ்.பி. மயில்வாகனன், கே.எ°ஸ். ராஜா, பி. ஹெச். அப்துல் அமீது, திருமதி ராஜேவரி சண்முகம் ஆகியோர் கலக்கிக்கொண்டு இருந்த இலங்கை வானொலி அதன் பிறகு வர்த்தகச் சேவை என பெயரிடப்பட்டது. முன்பே குறிப்பிட்ட, மத்திய அலையில் நமது தமிழக நேயர்களுக்காக 1990-களில் ஆரம்பிக்கப்பட்ட ஒலிபரப்பு, ‘பரீட்சார்த்த ஒலிபரப்பு’ “மத்திய அலை சிறப்பு ஒலிபரப்பு என மருவி, 90- களின் மத்தியில் “கொழும்பு சர்வதேச வானொலி”
என கொடிகட்டி பறந்து, நான்கைந்து வருடங்களுக்கு முன் ஆரம்பிக்கப்பட்ட தமிழ்நாட்டின் சூரியன் எப். எம் தாக்கத்தினாலும், அரசு பண்பலையான எப். எம் ரெயின்போவினாலும் சாரம் இழந்தது. இருப்பினும், தொடர்ந்து இலங்கை வானொலியின் கொழும்பு சர்வதேச வானொலியின் நிகழ்ச்சிகள் நமக்கு நேரம் குறைக்கப்பட்ட நிலையில் வந்து கொண்டே இருந்தன. அப்பொழுதுதான் இந்த ஆபத்து வந்தது.
நமது நாட்டின் பண்பலைகளில் நாகரீகமாகவும், ஒழுங்காகவும் பேசிக்கொண்டு இருக்கும் நமது நேயர்கள் இலங்கை வானொலி அறிவிப்பாளர்களுடன் பேசும்போது மட்டும் எங்கோ மனசாட்சியைக் கழட்டி வைத்துவிட்டு செல்கிறார்கள்.இது மட்டும்தான் காரணமா என்றால், ஆமாம் இதுவே பிரதான காரணம். இலங்கை வானொலியும் அதன் அறிவிப்பாளர்களும் நேயர்களுக்காக எது வேண்டுமானாலும் செய்வார்கள். ஆள் இல்லாமல் பாட்டுகூட போடுவார்கள், நிகழ்ச்சி நடத்துவார்கள் ஆனால் நேயர்கள் வாய்க்கு வந்தமாதிரி பேசுவதை கேட்டுவிட்டு சும்மா இருக்கமாட்டார்கள்....
தமிழா.... உனக்கு என்னவொரு நல்ல பழக்கம்.... காலங்காத்தால எழுந்தவுடன் 7.00 மணிக்கு இண்டர்நேஷனல் கால் போட்டு வாய்க்கு வந்த மாதிரி பேசுவது! இதில் அரசியல் வேறு “அவரின் பெயர் இத்தனை தடவை வந்து விட்டது. என் பெயர் மட்டுமே இனி வர வேண்டும், அவனை அழுத்தி வைக்க என்ன சூழ்ச்சி செய்யலாம்”.
தாங்காது சாமி, கொழும்பு சர்வதேச வானொலி மட்டுமல்ல, எந்த ஊடகமும் தாங்காது. சரி , உங்களுக்கு Phon-லாவது பேசத் தெரியும!? செலவாயிடும் என்றால் ஏன் பேசுறீங்க? எதிரில் இருக்கும் அறிவிப்பாளரை பேச விடாமல், பெரும்பாலான நேயர்கள் மூச்சை கட்டி பேசி தன் சொந்த பந்தம், சிநேகிதம், உலகில் உள்ள அத்தனை பேரையும் சொல்லி முடிச்சு, சொல்லாமல் கொள்ளாமல் ‘கட்’ செய்து விடுகிறார்கள், இவற்றையெல்லாம் இத்தனை நாள் அவர்கள் பொறுத்துக் கொண்டு தான் இருந்தார்கள்.
நான் இந்தக் கட்டுரையில் சொல்லியதெல்லாம் கொஞ்சம் தான். முழுவதும் எழுதினால் தாங்காது நெஞ்சம்!! நேயர்களுக்காக வானொலி நிகழ்ச்சிகளை வழங்குகிறார்கள் என்றால் நேயர்கள் எதுவேண்டுமானாலும் செய்யலாம்., எல்லாவற்றையும் அவர்கள் பொறுத்துக்கொண்டு இருக்க வேண்டுமா என்ன?
இதற்கு அந்த ‘டி’ சர்ட் வாங்குபவரும், ‘கலாச்சார’ டூர் போகிறவரும் எவ்வளவோ பரவாயில்லை. ஒழுங்காக ழைய பாடல்கள் வழங்கி, அரிதான முத்துச்சரங்கள் கோர்த்து அழகு பார்த்து நேயர்களை தலைமேல் தூக்கிவைத்த ஒரு வானொலியை, உலகிலேயே பழமை வாய்ந்த பெரும் அமைப்பை சிதைத்து சின்னாபின்னாபடுத்திவிட்டு, சில்மிஷ சிரிப்பை உதிர்த்து கொண்டிருக்கிற இந்த மூடுவிழா மன்னர்களுக்கு மன்னிப்பேகிடையாது.
இலங்கை வானொலி சாதித்ததும்ஏராளம், நேயர்களை சாதிக்க வைத்ததும் ஏராளம்.இப்பவும் கூறுகிறேன், ஒலிபரப்பை நிறுத்தி விட்டதால் தரத்தில் மட்டும் இலங்கை வானொலி எப்பொழும் தாழ்ந்துவிடாது. இதற்கு இணையான வானொலி இப்பொழுது மட்டுல்ல, எப்பொழுதும் இல்லை. காலம் நம்மை மன்னிக்கட்டும் - விஜயராம் எ. கண்ணன்.

ரேடியோ ஆஸ்திரேலியாவில் தமிழ்

1975 வரையில் ரேடியோஆஸ்திரேலியாவில் தமிழ் ஒலிபரப்பானது 41 மீட்டரில் செய்யப்பட்டு வந்தது. உலகச்செய்திகள், விளையாட்டுச்செய்திகள், ஆங்கில இசை, அறிவியல் செய்திகள், நேயர்களின்மடல்களுக்கு பதில் வழங்குதல், தமிழ்திரைப்படப் பாடல்கள் ஒலிபரப்பு போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளை ஆஸ்திரேலிய வானொலி ஒலி பரப்பியது. ரேடியோ ஆஸ்திரேலியாவில் கிரிக்கெட் வர்ணனையாளராகப் பணிபுரிந்தவர் தமிழகத்தைச் சார்ந்த வி.எம்.சக்ரபாணி ஆவார். இவருடைய குரல் வளத்தில் அனுதினமும்இந்திய நேரப்படி இரவு 9.55 முதல் 10.15 மணி வரையில் தமிழ்திரைப்படப் பாடல்களை ஒலிபரப்பி சிறப்புச் செய்தார். இந்த நிகழ்ச்சியில் அடிக்கடி எம்.ஜி.ஆர் பாடல்களைக்கேட்கலாம். அதிலும் குறிப்பாக அடிமைப் பெண்,குடியிருந்த கோயில், ஆயிரத்தில் ஒருவன், காதலிக்க நேரமில்லை போன்றப் படப் பாடல்களை ஒலிபரப்பினார். உலகிலுள்ள வெளிநாட்டு வானொலி நிலையங்களிலிருந்து நேயர்களுக்கு தரச் சான்று அறிக்கை தவறாதுஅனுப்பி வைப்பார்கள். அவ்வறிக்கையைப் பூர்த்திச் செய்து நேயர்கள் திருப்பி அனுப்பி வைப்பார்கள். அங்கிருந்து நேயர்களுக்கு ஸ்டிக்கர், நாள்காட்டி, டைரி, கீ-செயின்மற்றும் புத்தகங்களையும் அனுப்பி மகிழ்விப்பார்கள்.1975-ஆம் ஆண்டு ரேடியோ ஆஸ்திரேலியாவும், அமெரிக்காவும் தமிழ் நிகழ்ச்சிகளின் ஒலிபரப்பை நிறுத்திவிட்டன. பின்பு மாஸ்கோ வானொலியும், சமீபத்தில் பாகிஸ்தான் வானொலியும் தமிழ் ஒலிபரப்பினை நிறுத்தி விட்டன. 31-05-2008-டன் இலங்கை வானொலி சர்வதேச ஒலிபரப்பை நிறுத்திவிட்டன. கடந்த 84 ஆண்டுகளாக தமிழ் நிகழ்ச்சிகளை இலங்கை வானொலி ஒலிபரப்பி வந்தது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. - பத்தமடை எஸ். கந்தசாமி (+91 94872 44449)

Thursday, July 31, 2008

பெர்சூயஸ்: புதிய சிற்றலை மென் பொருள்

து நாள் வரை நாம் வானொலிப் பெட்டிமூலமே சிற்றலை ஒலிபரப்புகளை கேட்டுவந்துள்ளோம். இதன் அடுத்த கட்டமாக நாம் கம்ப்யூட்டர் மூலம் வானொலிகளை கேட்கத்துவங்கினோம், இப்பொழுது இன்னும் ஒரு படிமேலே சென்று சிற்றலை வானொலிகளை கம்ப்யூட்டருடன் இணைத்து கேட்பதற்காகவே தனியான மென்பொருட்கள் விற்பனைக்கு வந்துள்ளன.இத்தாலிய நிறுவனமான மைக்ரோ டெலிகாம் பெர்சூயஸ் புதிய சிற்றலை மென் பொருளை ICOM-க்கு போட்டியாக விற்பனைக்கு கொண்டுவந்துள்ளது. இதன் மூலம் 10 KHz முதல் 30 KHz வரையிலான வானொலிகளின் ஒலிபரப்புகளைக் கேட்கலாம். எந்த வானொலிப் பெட்டிகளுடனும் ஒப்பிட முடியாதத் தொழில் நுட்பத்துடன் வெளிவந்துள்ள இந்த வானொலிப் பெட்டியைக்கேட்க கம்ப்யூட்டர் அவசியம் தேவை.

Spectrum எனப்படும் ஒலிக்கற்றைகளைத் தெளிவாகக் காணும் வசதியுடன் இந்த மென்பொருள் தயாரிக்கப்பட்டுள்ளது. நல்ல ஸ்பீக்கர்இணைக்கப்பட்டால், முழுமையாக இதன் ஒலித்தரத்தினை அனுபவிக்கலாம். அடிப்படைவசதிகள் உள்ள அனைத்து கம்ப்யூட்டர்களிலும் இந்த வானொலி மென்பொருளை இணைத்துக் கேட்கலாம்.இந்த சிற்றலை வானொலி மென்பொருளின்விலை ரூ 52,000/- கிடைக்குமிடம்: Martin Lynch &Sons Ltd, Outline House, 73, Guild Ford Street,Chertsey, Surrey, KT16 9AS, UK. Email: sales@hamradio.co.uk