Showing posts with label SLBC. Show all posts
Showing posts with label SLBC. Show all posts

Sunday, March 22, 2026

வானொலி உலகின் வசீகரக் குரல்


விகடன் 'பொக்கிஷம்' பகுதியில் கே.எஸ். ராஜா!

பழைய ஆவணங்களையும், இதழ்களையும் புரட்டிக் கொண்டிருக்கும்போது எதிர்பாராத விதமாக ஒரு அரிய தகவல் கிடைத்தால் அது தரும் மகிழ்ச்சியே தனி. அப்படித் தேடியபோது கிடைத்த ஒரு பொக்கிஷம்தான், ஈழத்து வானொலியின் லெஜண்ட் கே.எஸ். ராஜா அவர்களின் இந்தப் பேட்டி.

19 அக்டோபர் 1986 அன்று 'ஆனந்த விகடன்' இதழில் வெளிவந்த இந்தப் பேட்டி, நீண்ட இடைவேளைக்குப் பிறகு 4 ஜூலை 2012 அன்று விகடனின் "பொக்கிஷம்" பகுதியில் மறுபதிப்பு செய்யப்பட்டுள்ளது. பி. இளங்கோவன் மற்றும் ஆர். தேன்மொழி ஆகியோர் இந்தப் பேட்டியை எடுத்திருந்தனர்.



இலங்கை வானொலியின் அலைவரிசைகளில் தனது காந்தக் குரலால் உலகத்தமிழர்களைக் கட்டிப்போட்டவர் கே.எஸ். ராஜா. ஈழப் போராட்டச் சூழலால் நீண்ட காலம் அவரது குரலைக் கேட்க முடியாமல் தவித்த ரசிகர்களுக்கு, அவர் மதுரைக்கு வந்த செய்தி ஒரு இனிப்பான அதிர்ச்சியாக அமைந்தது.

மதுரை காந்தி மியூசியம் திறந்தவெளி அரங்கில் ஈழப் போராட்ட நிதி திரட்டுவதற்காக அவர் நேரடி நிகழ்ச்சியைத் தரப்போகிறார் என்றதும், மதுரை மாநகரமே அங்கு திரண்டது. நிகழ்ச்சி ஏற்பாடு செய்தவர்களே எதிர்பார்க்காத அளவுக்கு ரசிகர் கூட்டம் அலைமோதியது.

"பராக் சொல்வது போல் முதலில் ஒருவர் 'வருகிறார்... வருகிறார்...' என்று அறிவிக்க, கே.எஸ். ராஜா மேடைக்கு வந்தபோது எழுந்த கரகோஷம் இன்னும் நம் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது."



 "சாகுமவரை அறிவிப்பாளராகவே இருக்க விரும்புகிறேன்!" இந்தப் பேட்டியின் தலைப்பு ஒன்றே போதும், அவருக்கு வானொலித் துறையின் மீது இருந்த தீராத காதலையும் அர்ப்பணிப்பையும் விளக்குவதற்கு. "சாகுமவரை அறிவிப்பாளராகவே இருக்க விரும்புகிறேன்..!" என்ற அவரது வரிகள், ஒரு கலைஞன் தனது கலையின் மீது வைத்திருந்த ஆகச்சிறந்த காதலைப் பிரதிபலிக்கிறது.

கே.எஸ். ராஜாவின் சிறப்பம்சங்களில், அதுவரை இருந்த கணீர் என்ற முறையான அறிவிப்புப் பாணியை மாற்றி, நேயர்களுடன் ஒரு நண்பனைப் போல உரையாடும் புதிய பாணியை அறிமுகப்படுத்தியவர்.

"வணக்கம், வணக்கம், வணக்கம்..." என்று அவர் தொடங்கும் போதே வானொலிப் பெட்டியின் முன் ஒரு பெரும் கூட்டமே தவம் கிடக்கும். பாப் இசை மற்றும் திரை இசையின் வல்லுனர். இலங்கை வானொலியின் பொற்காலத்தை உருவாக்கியதில் இவருக்குப் பெரும் பங்கு உண்டு.

ஒரு காலத்தில் தென்னிந்தியத் திரையுலகைச் சார்ந்த பெரிய நட்சத்திரங்களே கே.எஸ். ராஜாவின் குரலுக்கும், அவர் மூலம் பாடல்கள் ஒலிபரப்பப்படுவதற்கும் ஆவலாக இருந்த காலம் இருந்தது. அப்படிப்பட்ட ஒரு ஆளுமையின் பேட்டியை மீண்டும் வாசிப்பது, நம்மை 80-களின் அந்த வசீகர வானொலி காலத்திற்கே கொண்டு செல்கிறது.

இன்று டிஜிட்டல் ஊடகங்கள் பெருகிவிட்ட நிலையிலும், வானொலிப் பித்தர்களிடையே கே.எஸ். ராஜாவின் பெயர் ஒரு மந்திரச் சொல்லாகவே நீடிக்கிறது. ஆனந்த விகடன் இந்தப் பேட்டியை மறுபதிப்பு செய்தது உண்மையிலேயே பாராட்டுக்குரிய ஒரு வரலாற்றுப் பணி.

காலங்கள் மாறினாலும், தொழில்நுட்பங்கள் வளர்ந்தாலும் கே.எஸ். ராஜா போன்ற கலைஞர்கள் விட்டுச் சென்ற தடம் அழியாதது. இத்தகைய அரிய பொக்கிஷங்களை ஆவணப்படுத்துவது நமது கடமையாகும்.

Saturday, January 10, 2026

மதுரக்குரல் மன்னனின் மௌனமான இறுதிப் பக்கம்

 நூற்றாண்டு காணும் இலங்கை வானொலி: சிறப்பு கட்டுரைத் தொடர் - 31

 


Monday, January 05, 2026

இலங்கை வானொலிப் புத்தகங்கள்: அப்துல் ஜப்பார்எழுதிய காற்று வெளியினிலே...

 நூற்றாண்டு காணும் இலங்கை வானொலி: சிறப்பு கட்டுரைத் தொடர் - 30


இலங்கை வானொலிக் காற்றின் தூதுவன் என்றே இவரைக் கூறலாம். சாத்தான்குளம் அப்துல் ஜப்பாரின் "காற்று வெளியினிலே..." - ஓர் இலங்கை வானொலி இலக்கியப் பேருரையாக வெளிவந்தது.

ஒலியின் ஓவியம் என்றால் அது அப்துல் ஜப்பார் அன்றி வேறு யார்? வானொலி என்பது ஒரு மாயக்கண்ணாடி. அதன் வழியே கேட்கும் குரல்கள் நமக்குள் உருவங்களைச் சமைக்கின்றன, உணர்ச்சிகளைத் தூண்டுகின்றன. காலங்காலமாக வானொலித் துறையில் எத்தனையோ குரல்கள் வந்து மறைந்திருந்தாலும், ஒரு சில குரல்கள் மட்டுமே காலத்தின் சுவடிகளில் அழியாத தடங்களை விட்டுச் செல்கின்றன. அத்தகையதொரு ஆளுமைதான் சாத்தான்குளம் அப்துல் ஜப்பார். 

அவரது ஊடகப் பயணத்தின் அனுபவப் பெட்டகமாகத் திகழும் "காற்று வெளியினிலே..." (மித்ர ஆர்ட்ஸ் & கிரியேஷன்ஸ் வெளியீடு) நூல், வெறும் நினைவலைகள் மட்டுமல்ல; அது ஒரு இலங்கை வானொலி காலத்தின் வரலாற்று ஆவணம்.

பன்முக ஆளுமையின் பரிமாணங்களை இந்த நூலின் ஊடாக அறி முடிகிறது. அன்புக் கவிஞர் அறிவுமதி குறிப்பிடுவது போல, ஜப்பார் அவர்கள் "தரையில் குத்தி மணிலாக்களைப் போடும் விளைந்த சிந்தனைகள் கொண்டவர்". அவரது ஆளுமை பல தளங்களில் விரிந்து கிடக்கிறது.

இலங்கை வானொலியில் டகக் கலைஞராக அவர் இருந்த காலத்தை மறக்கத்தான் முடியுமா?  இலங்கை வானொலியில் 'எஸ்.எம்.ஏ. ஜப்பார்' என்ற பெயரில் நாடகத் துறையில் தடம் பதித்தவர். பி.ஹெச். அப்துல் ஹமீது போன்ற இளைய தலைமுறை கலைஞர்களுக்கு ஒரு உந்துசக்தியாகவும், முன்மாதிரியாகவும் விளங்கியவர்.

விளையாட்டு வர்ணனையாளராக முத்திரைப் பதித்தவர். கிரிக்கெட் மைதானத்தின் விறுவிறுப்பைத் தனது சொற்களால் நேயர்களின் வரவேற்பறைக்கே கொண்டு வந்தவர். "விளையாட்டு வர்ணனைகளில் விளையாடிப் பார்த்தவர்" என்ற அறிவுமதியின் கூற்று மிகையானதல்ல.

லண்டன் ஐ.பி.சி (IBC) வானொலி மற்றும் தீபம் தொலைக்காட்சி வாயிலாக உலகத் தமிழர்களிடையே அரசியல் விமர்சகராக மட்டுமல்லாது ஓர் அரசியல் ஆய்வாளராகப் பரிணமித்தவர். தற்கால அரசியலைத் தனது 'சாட்டை' போன்ற சொற்களால் வெளுத்து வாங்கும் துணிச்சல் மிக்கவர்.

இவர் ஒரு வானொலி அனுபவப் பல்கலைக்கழகம். 184 பக்கங்களைக் கொண்ட இந்த நூல், அப்துல் ஜப்பார் அவர்கள் 'தினகரன்' வாரமஞ்சரியில் தொடராக எழுதிய கட்டுரைகளின் தொகுப்பாகும். கலைமாமணி வி.கே.டி. பாலன் கூறுவது போல், இது அவரது "அனுபவப் பல்கலைக் கழகத்தின் சுவைமிகு வகுப்பு".

புலம்பெயர் உறவுகளுடனான பிணைப்பாக இருந்தவர். பிரிட்டன், ஐரோப்பா, கனடா, ஆஸ்திரேலியா எனப் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களுக்கு ஜப்பார் ஒரு உறவினராகவே மாறிவிட்டார். "இரண்டையும் (நினைவாற்றல் மற்றும் தமிழாற்றல்) குழைத்து இவர் புலம்பெயர்ந்த எம் தமிழ் உறவுகளிடம் உரையாடுகிற வெற்றி வரலாற்று வெற்றி" என அறிவுமதி இதனைச் சிலாகிக்கிறார்.

அரங்கம் அந்தரங்கம் நிகழ்ச்சியைத் தான் மறக்க முடியுமா? லண்டன் தீபம் தொலைக்காட்சியில் இவர் நடத்திய நேர்காணல்கள், ஒரு மனிதரின் ஆளுமையை மட்டும் வெளிப்படுத்தாமல், அவரது ஆழ்மனது உணர்வுகளையும் பதிவு செய்தன. இந்த நூலில் அத்தகைய சந்திப்புகளின் சுவாரசியமான பின்னணிகள் விவரிக்கப்பட்டுள்ளன.

தொன்மமும் நவீனமும் கொண்டத் தமிழாளுமை. ஜப்பாரின் மிகப்பெரிய பலம் அவரது மொழி. அவர் "அதிபுதிய வானூர்தியின் வேகத்தில் தொன்மத் தமிழைத் தூவி விடுபவர்". பழமையான இலக்கணச் செழுமையும், நவீன ஊடக வேகமும் அவரிடம் ஒருங்கே சங்கமிக்கின்றன.

அறிவிப்பாளர் பி.ஹெச். அப்துல் ஹமீது தனது முன்னுரையில் ஒரு முக்கியமான கருத்தைப் பதிவு செய்கிறார்: "தமிழைச் சரியாக உச்சரிக்கிறோம் என்று நினைத்துக் கொண்டு கடித்துக் குதறாமல், தெளிவான குரலில் இனிமையுடன் தமிழை ரசித்து அழகுற உச்சரிக்கும் பாங்கு" ஜப்பாரிடம் இருந்தது. இதுவே அவரை ஈழத் தமிழ் மக்களிடமும், உலகத் தமிழர்களிடமும் கொண்டு சேர்த்தது.

இந்த நூல் இலங்கை வானொலி வரலாற்றுப் பதிவின் அவசியமாகக் கருதப்படுகிறது. காற்றலையில் கலை படைப்பவர்கள், அந்தக் காற்று கலைந்து போவது போல் காலத்தால் மறக்கப்பட்டு விடுவார்கள் என்ற ஆதங்கம் அப்துல் ஹமீதுக்கு உண்டு. அந்தத் துர்ப்பாக்கியத்தைப் போக்கும் முயற்சியே இந்த நூல்.

இலங்கையின் இலக்கியப் பிதாமகன் எஸ்.பொ அவர்களின் பெருமுயற்சியால், மித்ர வெளியீடாக இது அச்சு வாகனத்தில் ஏறி வெளிவந்தது. இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் ஏ.எச்.எம். அஸ்வர் மற்றும் பி.ஹெச். அப்துல் ஹமீது ஆகியோரின் நீண்ட கால விருப்பம் இந்த நூலின் மூலம் நனவாகியது.

ஒரு சுவைமிகு பயணம் தான் இந்த "காற்று வெளியினிலே..." நூல், சாத்தான்குளம் அப்துல் ஜப்பார் எனும் ஒரு மனிதரின் வாழ்வை மட்டும் பேசவில்லை; அது தமிழ் வானொலித் துறையின் பொற்காலத்தை, அரசியல் மாற்றங்களை, மற்றும் ஒரு கலைஞனின் நேர்மையை நுட்பமாகப் பதிவு செய்கிறது. "அன்பூறிய நெஞ்சத்தின் ஒளிவு மறைவற்ற எளிய வியப்பு" இந்த நூல் முழுவதும் பரவிக் கிடக்கிறது.

ஊடகத் துறையில் நுழைய விரும்பும் மாணவர்களுக்கும், இலங்கை மற்றும் உலக அரசியல் வரலாற்றில் ஆர்வம் உள்ளவர்களுக்கும், தமிழ் மொழியின் சுவையை நுகர விரும்புபவர்களுக்கும் இது ஒரு பொக்கிஷம். 

நூல் தகவல்கள்:
தலைப்பு: காற்று வெளியினிலே...
ஆசிரியர்: சாத்தான்குளம் அப்துல் ஜப்பார்
வெளியீடு: மித்ர ஆர்ட்ஸ் & கிரியேஷன்ஸ்
பக்கங்கள்: 184
தொடர்புக்கு: 044 24721336


Sunday, January 04, 2026

இலங்கை வானொலிப் புத்தகங்கள்: இளையதம்பி தயானந்தா எழுதிய வானலையின் வரிகள்

 நூற்றாண்டு காணும் இலங்கை வானொலி: சிறப்பு கட்டுரைத் தொடர் - 29


பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்களின் நுணுக்கமான அவதானிப்புகளை அடிப்படையாகக் கொண்டு, இளையதம்பி தயானந்தா அவர்களின் "வானலையின் வரிகள்" நூல் குறித்த விரிவான விமர்சனத்தைக் காணலாம். வானொலியின் செவிநுகர் வனப்பில் ஒரு புதிய பரிமாணமாக இந்த "வானலையின் வரிகள்" நூல் உள்ளது எனலாம்.

ஊடகப் பண்பாட்டில் வானொலியின் பங்களிப்பு மகத்தான ஒன்றாகும். இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில், குறிப்பாக 1960-களில் இருந்து 'தொடர்பியல்' ஒரு முக்கியமான சமூக ஆய்வியல் துறையாக உருவெடுத்தது. சந்தைப் பொருளாதாரத்தின் எழுச்சியும், பூகோள மயமாக்கலும் ஊடகங்களை ஒரு பெரும் சக்தியாக மாற்றின. இந்த மாற்றத்தின் விளைவாக 'வெகுசனப் பண்பாடு' என்பது 'ஊடகப் பண்பாடாக' பரிணமித்தது. இந்த வரலாற்றுச் சக்கரத்தில் வானொலி என்பது வெறும் தகவல் கருவியாக மட்டும் நில்லாமல், மக்களின் உணர்வுகளோடும் வாழ்வியலோடும் கலந்த ஒரு கலை வடிவமாக மாறியது. இந்த கலை வடிவத்திற்கு புதிய அர்த்தம் கற்பித்தவர்களில் இளையதம்பி தயானந்தா முக்கியமானவர்.

இலங்கை வானொலியின் பொற்காலமும் வீழ்ச்சியும் இங்கு பதிவு செய்தே ஆகவேண்டும். தென்னாசியாவில், குறிப்பாக இந்தியா மற்றும் இலங்கையில் வானொலியின் தாக்கம் என்பது ஒரு ஏகாதிபத்தியத்திற்கு இணையானது. 'ரேடியோ சிலோன்' என்றழைக்கப்பட்ட இலங்கை வானொலியின் வர்த்தக ஒலிபரப்பு, அனைத்திந்திய வானொலியையே தன் பாணியை மாற்றிக்கொள்ள வைத்த பெருமைக்குரியது. மயில்வாகனன் போன்ற ஆளுமைகள் வர்த்தகப் பிரிவில் கோலோச்சிய அதேவேளை, தேசிய ஒலிபரப்பில் சிவபாதசுந்தரம், சானா சண்முகநாதன் போன்றோர் தமிழ் மொழியின் செழுமையைப் பேணி வளர்த்தனர்.

இருப்பினும், 70-களுக்குப் பின் ஏற்பட்ட அரசியல் சூழல்கள் மற்றும் அரசின் சந்தேகப் பார்வைகளால், வளம் மிக்க தமிழ்த் தேசிய ஒலிபரப்பு மெல்ல மெல்ல நலிவடையத் தொடங்கியது. செய்திகளுக்கும், மரண அறிவிப்புகளுக்கும் மட்டுமேயான ஒரு வறண்ட ஊடகமாக வானொலி சுருங்கிப் போன தருணத்தில், ஒரு 'கோடை மழை'யாகத் தோன்றியவர் இளையதம்பி தயானந்தா.

தயானந்தா: ஒரு புதிய குரலின் வருகையாகப் பார்க்கப்பட்டது. சென்னை கிறிஸ்தவக் கல்லூரியின் பட்டதாரியான தயானந்தா, 90-களின் தொடக்கத்தில் இலங்கை வானொலியில் இணைந்தார். வறண்டு கிடந்த வானொலித் தளத்தில் அவரது வருகை ஒரு புதிய பாய்ச்சலை ஏற்படுத்தியது. தயானந்தாவின் தனித்துவம் என்பது அவரது 'செவிநுகர் வனப்பு'. வெறும் தகவல்களை வாசிப்பவராக இல்லாமல், அந்தத் தகவல்களுக்கு உயிரூட்டும் ஒரு கலைஞராக அவர் திகழ்ந்தார்.

நேர்காணல்களில் உலகத்தரத்தினைக் கொண்டுவந்தவர். "வானலையின் வரிகள்" நூலின் மிக முக்கியமான அடிநாதமாகத் திகழ்வது தயானந்தா அவர்கள் இலங்கை வானொலிக்காக மேற்கொண்ட நேர்காணல்கள். பேராசிரியை சிவத்தம்பி குறிப்பிடுவது போல, தயானந்தாவின் நேர்காணல்கள் உலகத் தரமானவை.

அவரின் ஆளுமை வெளிப்பாடு இந்த நூலில் காண முடிகிறது. வழக்கமான நேர்காணல்கள் என்பது நேர்காணப்படுபவரைப் புகழ்வதிலோ அல்லது வெறும் தகவல்களைப் பெறுவதிலோ முடிந்துவிடும். ஆனால், தயானந்தா நேர்காணப்படுபவரைச் சற்று 'மடக்கிப் பிடிக்கும்' உத்தியைக் கையாண்டார். இது நேர்காணப்படுபவரின் ஆளுமையை விட, அவரது மனிதத்துவ உயிர்ப்பை வெளிக்கொணர உதவியது.

ஆழ்ந்த தயாரிப்புக்கு பின் தான் நேர்காணல் செய்பவர். தான் பேசப்போகும் பொருள் பற்றியும், நபரைப் பற்றியும் ஆழமான அறிவு கொண்ட ஒருவராகவே அவர் ஒலிவாங்கி முன் அமர்கிறார். இதனால் பதிலளிப்பவர் மிகுந்த விழிப்புணர்வுடனும், பொறுப்புடனும் பேச வேண்டிய சூழல் உருவாகிறது.

ஒரு கலைஞனின் படைப்புகளைத் தாண்டி, அந்தப் படைப்புக்கு பின்னால் இருக்கும் வலி, பயம் மற்றும் ஆதங்கங்களை இவரது கேள்விகள் வெளிச்சமிட்டுக் காட்டின.

வானொலியின் வலிமையை இவர் நன்கு உணர்ந்து இருந்தார். திரைப்படத்திற்கும் தொலைக்காட்சிக்கும் இல்லாத ஒரு தனிச்சிறப்பு வானொலிக்கு உண்டு. அது கேட்பவரின் கற்பனைத் திறனைத் தூண்டுவது. தயானந்தாவின் ஒலிபரப்பு அணுகுமுறை, கேட்பவர்கள் தங்கள் மனக்கண்ணில் ஒரு பிம்பத்தை உருவாக்கிக் கொள்ள வழிவகுத்தது. நேர்காணப்படுபவரின் உணர்ச்சிகளை வார்த்தைகளின் வழியாகக் கடத்தி, அவர்களை நேயர்களின் கண்முன்னே நிறுத்துவதில் அவர் வெற்றி பெற்றார்.

"வானலையின் வரிகள்" என்பது வெறும் எழுத்துகளின் தொகுப்பல்ல; அது ஒரு இலங்கை வானொலிக் காலத்தின் குரல் பதிவு. இலங்கை வானொலி நேயர்களுக்கும், ஊடகத் துறையில் ஆர்வம் உள்ளவர்களுக்கும், தொடர்பியல் மாணவர்களுக்கும் இது ஒரு பாடப்புத்தகம் போன்றது. ஒரு அறிவிப்பாளர் எப்படி ஒரு சமூகத்தின் பண்பாட்டுத் தூதுவராக மாற முடியும் என்பதற்கு தயானந்தாவின் வாழ்வும் இந்தப் படைப்பும் சாட்சி.

இளையதம்பி தயானந்தா போன்ற ஆற்றல் மிக்க ஊடகவியலாளர்கள் வளர்க்கப்பட வேண்டியது ஒரு ஆரோக்கியமான சமூகத்தின் அடையாளம். அவரது எழுத்தும் குரலும் இலங்கைஊடகப் பரப்பில் என்றும் நிலைத்திருக்கும்.

நூல் விவரம்:
நூல்: வானலையின் வரிகள்
ஆசிரியர்: இளையதம்பி தயானந்தா
கிடைக்குமிடம்: அரபி பதிப்பகம் (044 - 24261 6761)


Saturday, January 03, 2026

இலங்கை வானொலிப் புத்தகங்கள்: விசாலாட்சி ஹமீது எழுதிய ஒலி அலையில் என் நினைவலைகள்

  நூற்றாண்டு காணும் இலங்கை வானொலி: சிறப்பு கட்டுரைத் தொடர் - 28


ஒலி அலையில் ஒரு பொற்காலப் பயணமாக விசாலாட்சி ஹமீதுவின் நினைவலைகள் இருந்தது. இலங்கை வானொலியின் வரலாறென்பது வெறும் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி மட்டுமல்ல; அது பல ஆளுமைகளின் குரல்களால் நெய்யப்பட்ட ஒரு கலைப் பனுவல். அந்தப் பனுவலின் மிக முக்கியமானதொரு அத்தியாயம், திருமதி விசாலாட்சி ஹமீது அவர்கள். அவரது ஐம்பதாண்டு கால வானொலிப் பயணத்தையும், வாழ்வியல் அனுபவங்களையும் தாங்கி வெளிவந்த "ஒலி அலையில் என் நினைவலைகள்" நூல், ஓர் அறிவிப்பாளரின் சுயசரிதை என்பதைத் தாண்டி, ஒரு காலத்தின் ஆவணமாகத் திகழ்கிறது.

குரலால் கோர்த்த தமிழ் மாலையாக இந்தப் புத்தகத்தைக் கூறலாம். கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் தனது அணிந்துரையில் குறிப்பிட்டது போல, விசாலாட்சி ஹமீது அவர்கள் பிறப்பால் மலையாளியாக இருந்தாலும், தமிழால் வளர்ந்தவர்; தமிழை வளர்த்தவர். ஒரு மொழியின் மீது கொண்ட தீராத காதலும், முறையான பயிற்சியும் ஒருவரை எப்படி உச்சாணிக் கொம்பில் ஏற்றும் என்பதற்கு விசாலாட்சி அவர்களின் வாழ்வே சாட்சி.

அவரது குரல் வளம் வெறும் ஒலி சார்ந்ததல்ல; அது அறிவும், தெளிவும் கலந்ததொரு கலவை. ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கை வானொலியின் காற்றலையில் அவர் பதிவு செய்த முத்திரை, இன்றைய தலைமுறை அறிவிப்பாளர்களுக்கு ஒரு பாடப்புத்தகம். வைரமுத்து அவர்கள் சொல்வது போல், "தமிழுக்குக் குரல் கொடுத்த தங்க மகள்" என்று இவரை அழைப்பது மிகப்பொருத்தம்.

துணிச்சலும் கடமையுணர்வும் கொண்டவர் விசாலாட்சி ஹமீது. இந்த நூலில் பதிவாகியுள்ள வரலாற்றுச் சம்பவங்கள் இலங்கை வானொலி நேயர்களை வியப்பிலும் மலைப்பிலும் ஆழ்த்துகின்றன. குறிப்பாக, இலங்கையின் இனக்கலவரக் காலத்தில், நிரந்தர அறிவிப்பாளர்கள் விடுப்பில் சென்றபோது, துணிச்சலோடு 45 நாட்கள் தமிழ் ஒலிபரப்பைத் தொய்வின்றி நடத்திய அவரது அசாத்தியத் திறன் பாராட்டுக்குரியது.

"வானொலி நிலைய வளாகத்தில் வெடிகுண்டு இருப்பதாகத் தகவல் வந்தபோதும், உயிரைப் பணையம் வைத்துத் தன் கடமையை ஆற்றிய விசாலாட்சி அவர்களின் மன உறுதி, இன்றைய ஊடகவியலாளர்களுக்கு ஒரு பெரும் பாடம்.

"மதங்களைக் கடந்த மனிதம் கொண்டவர் விசாலாட்சி. அவர்களின் வாழ்க்கை ஒரு அழகான கவிதை போன்றது. இந்து மதத்தைச் சேர்ந்த கேரளாப் பெண்ணான இவருக்கும், இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த தமிழகத்துப் பின்னணி கொண்ட வணிகப் பிரமுகரான திரு. ஹமீது அவர்களுக்கும் இடையே பாலமாக இருந்தது 'முத்தமிழ்'.

கலாசூரி அருந்ததி ஸ்ரீரங்கநாதன் அவர்கள் தனது வாழ்த்துரையில் குறிப்பிடுவது போல, இவர்களது இல்லறம் என்பது மதங்களைக் கடந்து கலையாலும், பண்பாலும் பிணைக்கப்பட்டது. 1974-களில் ஒரு பல்கலைக்கழக மாணவியாக அருந்ததி அவர்கள் விசாலாட்சியைப் பார்த்தபோது எழுந்த வியப்பு, இன்று ஒரு வரலாற்றுப் பதிவாக மாறியிருக்கிறது. பெயரில் இருந்த குழப்பம், அவர் பேசும் தூய தமிழைக் கேட்டுத் தெளிவடைந்ததாக அருந்ததி குறிப்பிடுவது, விசாலாட்சி அவர்களின் மொழிப் புலமைக்குச் சான்று.

பண்முகத்தன்மை கொண்ட ஆளுமை விசாலாட்சி ஹமீது. இவர்களை வெறும் அறிவிப்பாளராக மட்டும் நாம் சுருக்கிப் பார்த்துவிட முடியாது. இவர் ஒரு சிறந்த பாடகர், ஆற்றல்மிக்க நடிகை, எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு தேர்ந்த ஓவியர்.

இந்த நூலில் இடம்பெற்றுள்ள அவரது கணவரின் உருவப்படம் விசாலாட்சி அவர்களாலேயே வரையப்பட்டது என்பது பலருக்குப் புதிய தகவல். அவரது குடும்பம் இன்று நான்கு மதங்களையும், நான்கு மொழிகளையும் தழுவி ஒரு 'மினியேச்சர் உலகமாக' விரிந்து கிடப்பது, அவரது பரந்த மனப்பான்மைக்கும், அன்பிற்கும் சான்றாகும்.

தொழில்முறை நுட்பங்கள் கொண்டது இந்த நூல். இந்நூல் ஏன் ஒரு கையேடாகக் கருதப்படுகிறது என்பதற்குக் கலாசூரி அருந்ததி அவர்களின் அவதானிப்பு முக்கியமானது. இசைச்சித்திரங்கள் மற்றும் உரைநடை வாசிப்பில் விசாலாட்சி அவர்கள் காட்டும்: சொற்தெளிவு குரல், ஏற்ற இறக்கம்,  பொருத்தமான இடங்களில் நிறுத்தம் இவை அனைத்தும் வானொலிக் கலையில் ஈடுபட விரும்பும் எவருக்கும் அரிய தகவல்கள். 

எதனையும் அரைகுறையாகச் செய்யாமல், முழு ஈடுபாட்டுடன் செய்யும் அவரது பாங்கு, அவரது ஒவ்வொரு நிகழ்ச்சியையும் ஒரு கலைப்படைப்பாக மாற்றியது எனலா,. 

"ஒலி அலையில் என் நினைவலைகள்" ஒரு சாதாரண நினைவுக்குறிப்பு அல்ல. இது ஒரு பெண்ணின் விடாமுயற்சி, மொழியின் மீதான பற்று, இக்கட்டான சூழலில் காட்டிய துணிச்சல் மற்றும் மத நல்லிணக்கத்தின் அடையாளம்.வைரமுத்து அவர்கள் சொல்வது போல, "இலங்கை வானொலியின் வரலாற்றுப் பொன்னேடு" விசாலாட்சி அவர்களின் சேவையைத் தப்பாமல் குறித்துக்கொள்ளும். 

தமிழை நேசிக்கும் ஒவ்வொருவர் இல்லத்திலும், வானொலிக் கலையை நேசிக்கும் ஒவ்வொருவர் உள்ளத்திலும் இந்நூல் இடம்பிடிக்க வேண்டியது அவசியம்.விசாலாட்சி ஹமீது எனும் அந்த மெல்லிடைப் பெண்ணின் குரல், காலவெளியைத் தாண்டி இன்னும் ஒலித்துக்கொண்டே இருக்கும்.

புத்தகம் தேவைப்படுவோர் தொடர்புகொள்ள வேண்டிய முகவரி: விசாலாட்சி  ஹமீது, 567/2ஏ, ஹெவ்லாக் சாலை, கொழும்பு - 6, இலங்கை. பக்கங்கள் 140, விலை ரூ.50. 

Friday, January 02, 2026

இலங்கை வானொலிப் புத்தகங்கள்: சுந்தா எழுதிய மனஓசை

 நூற்றாண்டு காணும் இலங்கை வானொலி: சிறப்பு கட்டுரைத் தொடர் - 27


இந்தக் கட்டுரை சுந்தா அண்ணரின் நினைவுகளையும், இலங்கை வானொலி உலகின் பெருமையையும் காலத்திற்கும் நிலைபெறச் செய்யும் ஒரு சிறு முயற்சியாகும். ஒரு வானொலிக் கலைப் பயணத்தின் காலப்பதிவாக இந்த "மனஓசைப்" புத்தகம் அமைந்துள்ளது. இலங்கை வானொலி என்பது ஒரு காலகட்டத்தின் பண்பாட்டு அடையாளம். அந்த அடையாளத்தின் பின்னணியில் உழைத்த ஆளுமைகள் ஏராளம். அவர்களில் 'சுந்தா அண்ணா' என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் வி.ஏ.சுந்தரலிங்கம் அவர்கள் மிக முக்கியமானவர். அவரது வானொலி அனுபவங்கள் 'மனஓசை' என்ற நூலாக வடிவம் பெற்ற விதம் ஒரு சுவாரசியமான வரலாறு. 

இது வெறும் புத்தகமல்ல; ஒரு இலங்கை வானொலிக் கலைஞனின் ஆன்மா, காலத்தின் சுவடுகளைத் தேடிச் செய்த பயணம் எனலாம். சென்னை அடையாறில் 1998-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இந்த புத்தகத்தின் விதை நடப்பட்டது.  சென்னை அடையாறில் இருந்த சுந்தா - பராசக்தி தம்பதிகளின் இல்லத்தில் தான் இந்தப் புத்தகம் எழுதப்பட்டது. ஒரு காலத்தில் காலிலே சக்கரம் கட்டிக்கொண்டு பம்பரமாகச் சுழன்று வேலை செய்தவர் சுந்தா அண்ணர். கலகலப்பான பேச்சும், ஓடி ஆடிப் பிறரை மகிழ்விக்கும் குணமும் கொண்ட அவர், அன்று சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்து அதை எழுதியதை எண்ணும் போது மனது கனத்தது என்கிறார் பேராசிரியர் மெளனகுரு.

அவரது சுறுசுறுப்பான பழைய நினைவுகள் நிழலாடினாலும், உடல் நலிவுற்றிருந்த அந்த நிலையிலும் அவரிடமிருந்த பழைய கலகலப்பும், நகைச்சுவை உணர்வும் அப்படியே இருந்தன. 'மனஓசை' என்ற நூல் உருவாவதற்கான கருவை விதைத்தது அவரது சென்னை வாழ்க்கை.

பேச்சு நூலாக மாறிய கதை சுவாரஷ்யமானது. சுந்தா அண்ணரின் வானொலி அனுபவங்கள் ஆவணப்படுத்தப்பட வேண்டும் என்பது அனைவரின் ஆவலாக இருந்தது. ஆனால், எழுத்து தனது துறையன்று என்றும், பேச்சே தனது பலம் என்றும் அவர் தயங்கினார். அவரது பலத்தையே ஆதாரமாகக் கொண்டு ஒரு நூலை உருவாக்கத் திட்டமிட்டு உருவாக்கிய நூல் இது எனலாம். 

அவரது நினைவுகள் அனைத்தும் ஒலிப்பதிவு செய்யப்பட்டன. அந்த ஒலிப்பதிவு நாடாக்களை இலங்கைக்குக் கொண்டு சென்று, அவரது மாணவரும் பேராசிரியர்  மெளனகுருவின் சக விரிவுரையாளருமான க. இன்பமோகன் அவர்களின் உதவியுடன் எழுத்துருவாக்கம் செய்யப்பட்டது. பின்னர் பராசக்தி அக்கா அந்த எழுத்துப் படிகளைத் திருத்தினார்கள். 

ஒரு தேர்ந்த ஒலிபரப்பாளரின் பேச்சு, இங்கே எழுத்து வடிவம் பெற்று 'மனஓசை' என்ற நூலாக மலர்ந்தது. இலங்கை ஒலிபரப்புக் கலை வரலாற்றின் ஆவணமாக இந்தப் புத்தகம் திகழ்கிறது. ஈழத்து வானொலித் துறையைப் பொறுத்தவரை ஜோர்ஜ் சந்திரசேகரம், விக்கினேஸ்வரன் போன்றோர் தங்களின் அனுபவங்களைப் பதிவு செய்துள்ளனர். 

சோ. சிவபாதசுந்தரம், கே.எஸ். நடராஜா ஆகியோர் ஒலிபரப்புக் கலை பற்றி நுட்பமான நூல்களை எழுதியுள்ளனர். இந்த வரிசையில் சுந்தாவின் 'மனஓசை' ஒரு தனித்துவமான இடத்தைப் பிடிக்கிறது. இலங்கை வானொலியின் ஆரம்ப காலங்கள், தமிழ் மற்றும் சிங்கள ஒலிபரப்பாளர்கள் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் உதவியுடன் சகோதரத்துவத்தோடு பணியாற்றிய பொற்காலத்தை இந்நூல் விவரிக்கிறது. 

அந்த இனிய காலங்கள் மீண்டும் வராதா என்ற ஏக்கத்தைச் சுந்தா அண்ணர் இந்நூலில் அடிக்கடி வெளிப்படுத்துகிறார். இது ஒரு கலைஞனின் தாகம் மட்டுமல்ல, ஒரு மனிதாபிமானியின் ஆழ்ந்த வேண்டுதலும் கூட.

அனைவருக்கும் அண்ணரான சுந்தா1970-களில் ஈழத்தில் ஏற்பட்ட கலை எழுச்சியில் இளைஞர்களோடு தோளோடு தோள் நின்று உழைத்தவர் சுந்தா அண்ணர். வயது வித்தியாசம் பாராது அவர் இளைஞர்களுடன் பழகியதால், அவர் அனைவருக்கும் 'சுந்தா அண்ணர்' ஆனார். அவரது இல்லம் ஒரு கலைக்கூடமாகவே திகழ்ந்தது. பராசக்தி அக்காவின் இன்முகமும், அவர் அன்போடு தரும் சுவையான கோப்பியும், ஆழமான உரையாடல்களும் அந்த வீட்டை இளைஞர்களின் புகலிடமாக மாற்றின என்கிறார் பேராசிரியர்.

1970-களின் நடுப்பகுதியில் அவரது வீட்டின் ஒரு பகுதியில் பேராசிரியர் மெளனகுரு குடியிருந்தபோது, ஒரு குடும்ப நண்பராக அவரது ஆளுமையை உள்ளிருந்து உணரும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்ததாகக் கூறுகிறார் இந்த நூலில். தானும் மகிழ்ந்து, பிறரையும் மகிழ்விக்கத் திடீர் திடீரெனச் சுவாரசியமான காரியங்களைச் செய்யும் அவரது குணம் வியப்பிற்குரியது.

ஒலிபரப்பாளரின் மொழிநடைக்கு இந்த நூல் ஒரு சான்றாகும். ஒரு சிறந்த வானொலித் தயாரிப்பாளர் நேயர்களுடன் தனிப்பட்ட முறையில் உரையாடுவது போலப் பேச வேண்டும் என்பது ஒலிபரப்புக் கலையின் அடிப்படைப் பாடம். கேட்ட மாத்திரத்தில் புரியக்கூடியதாகவும், ஆர்வத்தைத் தூண்டக்கூடியதாகவும் இருக்க வேண்டிய அந்த விசேட அம்சத்தை 'மனஓசை' நூலில் காணலாம்.

சுந்தா அண்ணர் தனது அனுபவங்களை, சம்பவங்களை மிகச் சுவைபட விவரிக்கும் விதம் 'கேட்டார் பிணிக்கும் தகைமையதாக' அமைந்துள்ளது. சுயவிமர்சனத்தோடும், நிதானமான முதிர்ச்சியோடும் தனது தவறுகளையும் வெற்றிகளையும் அவர் இதில் பதிவு செய்துள்ளார்.

பராசக்தி அக்கா, சுந்தாவின் உந்துசக்தி என்றால் மிகையில்லை. இந்த நூல் உருவானதில் பராசக்தி அக்காவின் பங்கு மிக முக்கியமானது. அவர் சுந்தா அண்ணரின் மனைவி மட்டுமல்ல; அவரது உந்துசக்தியாகவும், பரம ரசிகையாகவும், அதே சமயம் ஒரு நேர்மையான விமர்சகராகவும் இருந்தார். இந்த அழகான இணைப்பின் பலமே 'மனஓசை' புத்தகத்தின் வெற்றிக்குக் காரணம்.

ஈழத்து நாடகத் துறை, இலங்கை வானொலித் துறை மற்றும் கலைத்துறையில் ஈடுபாடு கொண்டவர்களுக்கு இந்நூல் ஒரு அரிய தகவல் பெட்டகமாகும். சாதாரண நேயர்களுக்கும் இது ஒரு சுவையான வாசிப்பு அனுபவத்தைத் தருகிறது. இலங்கையின் ஒலிபரப்புத் துறை வரலாற்றின் இன்னொரு பக்கத்தைத் தெரிந்துகொள்ள விரும்பும் எவரும் தவறவிடக்கூடாத ஒரு படைப்பு இது.

நூல் விவரம்:

தலைப்பு: மனஓசை
ஆசிரியர்: வீ. சுந்தரலிங்கம் (சுந்தா)
பக்கங்கள்: 330
வெளியீடு: தி பார்க்கர், 293, அஹமத் காம்ளக்ஸ், இரண்டாவது தளம், இராயப்பேட்டை நெடுஞ்சாலை, சென்னை - 600014



Thursday, January 01, 2026

இலங்கை வானொலிப் புத்தகங்கள்: சானா எழுதிய ப.பரமர்

 நூற்றாண்டு காணும் இலங்கை வானொலி: சிறப்பு கட்டுரைத் தொடர் - 26


"இலங்கை வானொலியில் நாடகங்கள்" என்ற மையக்கருத்தைச் சுற்றியும், சானா அவர்களின் வானொலி ஆளுமை மற்றும் அவரது 'ப. பரமர்' நூல் குறித்த தகவல்களையும் இந்தக் கட்டுரையில் காணலாம். இலங்கை வானொலியில் நாடகங்கள் ஒரு காலத்தில் நேயர்கள் மத்தியில் புகழ்பெற்று விளங்கின. 

இலங்கை வானொலி என்பது உலகத் தமிழர்களின் இதயத்துடிப்பாக விளங்கிய ஒரு காலமுண்டு. அங்கு ஒலிபரப்பான வர்த்தகச் சேவையும், நாடகங்களும் கடல் கடந்தும் தமிழ் மக்களைக் கட்டிப்போட்டிருந்தன. அந்தப் பொற்காலத்தில், வானொலி நாடகங்கள் வழியாகத் தமிழ் மக்களின் வீடுகளுக்கே சென்று சேர்ந்த பெயர் சானா (சண்முகநாதன்). 

இன்று அவரை ஒரு புகழ்பெற்ற நகைச்சுவை நடிகராகவும், நாடகத் தயாரிப்பாளராகவும் பல இரசிகர்கள் அறிந்திருந்தாலும், அந்த ஆளுமை உருவான விதத்தையும், அவரது எழுத்துப் பயணத்தையும் 'பரியாரி பரமர்' (ப. பரமர்) என்னும் நூல் மிக நுட்பமாகப் பதிவு செய்கிறது. ஓவியராகத் தொடங்கி ஒலிபரப்பாளராக மலர்ந்த பயணம்பலருக்குத் தெரியாத ஒரு செய்தி என்னவென்றால், சானா அவர்கள் வானொலிக்குள் நுழைவதற்கு முன்பே ஒரு சிறந்த ஓவியராகத் திகழ்ந்தவர். 

யாழ்ப்பாணம் பரமேஸ்வராக் கல்லூரியில் படிக்கும் போதே, பாடங்களைக் காட்டிலும் சித்திரம் வரைவதில் மிகுந்த ஈடுபாடு கொண்டவராகத் திகழ்ந்தார். இதற்காகவே சென்னை அரசு சித்திரக் கல்லூரியில் ஐந்து ஆண்டுகள் பயின்று, பின்னர் இலங்கை டெக்னிக்கல் கல்லூரியிலும் பயிற்சி பெற்றார்.

1937-ல் 'ஈழகேசரி' இதழில் ஒரு சைத்திரிகனாக (ஓவியராக) இணைந்தபோது, அங்கு ஆசிரியராக இருந்தவர் புகழ்பெற்ற சோ. சிவபாதசுந்தரம் (சோசி) அவர்கள். லண்டன் பி.பி.சி-யில் 'தமிழோசை'யைத் தொடங்கி உலகெங்கும் தமிழ் முழக்கம் செய்த அந்தப் பெரியவர் தான், சானாவிற்குள் இருந்த எழுத்தாற்றலைத் தட்டி எழுப்பினார். 

"பத்திரிகைக்கு எழுதுங்காணும்" என்ற அவரது விடாப்பிடியான வற்புறுத்தலே, சானாவைத் தூரிகையைக் கீழே வைத்துவிட்டுப் பேனாவைக் கையில் எடுக்க வைத்தது. சானாவை வானொலி நாடகங்களின் முன்னோடி எனலாம். சானா அவர்கள் இலங்கை வானொலியில் தயாரித்த நகைச்சுவை நாடகங்களுக்கு ஒரு தனிப் பாணி உண்டு. அந்தப் பாணியின் தொடக்கப் புள்ளியை நாம் 'பரியாரி பரமர்' நூலில் காணலாம். 

1939 முதல் 1945 வரையிலான காலகட்டத்தில் ஈழகேசரியில் வெளிவந்த இந்தக் கட்டுரைகள், உண்மையில் ஒரு நாடகத்திற்கான அனைத்துக் கூறுகளையும் கொண்டிருந்தன. நூலாசிரியர் தமிழை முறையாகப் பயிலாததால் முதலில் தயங்கினாலும், சோசியிடம் முறையாகத் தமிழ் கற்ற பின்பு, அவரது எழுத்து நடை ஒரு புதிய பரிமாணத்தைப் பெற்றது. 

'மரியாதை எதற்கு?' என்பது போன்ற இவரது ஆரம்பகால எழுத்துக்கள், பின்னர் வானொலி நாடகங்களில் நாம் கேட்ட அந்த இயல்பான உரையாடல் முறைக்கு அடித்தளமிட்டன. ஈழத்துத் வானொலித் தமிழின் இனிமையையும், அதில் பொதிந்துள்ள நையாண்டியையும் ஒருசேரக் கலப்பதில் சானா வல்லவர் என்பதற்கு இந்த 96 பக்கச் சிறுநூல் சான்றாகிறது.

பரியாரி பரமர்: ஓர் அங்கதப் பாத்திரம். வானொலி நாடகங்களில் நாம் ரசித்த கதாபாத்திரங்களைப் போலவே, இந்த நூலில் வரும் 'பரியாரி பரமர்' என்ற பாத்திரமும் வாசகர்களின் மனதில் ஆழமாகப் பதிகிறது. அக்கால ஈழத்துச் சமூகத்தின் முரண்பாடுகள், சடங்குகள் மற்றும் எளிய மனிதர்களின் மனநிலையைத் தனது அங்கதச் சுவையால் சானா தோலுரித்துக் காட்டுகிறார்.

 சித்திரக் கலைஞனாக இருந்ததால், ஒரு காட்சியினை விவரிக்கும்போது அதை ஒரு வானொலி நாடகம் போலக் காட்சிப்படுத்தும் திறன் இவருக்கு இயல்பாகவே கைவந்தது. இலங்கை வானொலி நாடகங்களில் சானா கையாண்ட அதே யதார்த்தமான நகைச்சுவை, இந்தத் தொகுப்பிலும் இழையோடுகிறது. 1940-களில் போர்ச் சூழலுக்கு மத்தியில் வாழ்ந்த மக்களின் துயரங்களுக்கு மருந்தாக அமைந்த இந்த எழுத்துக்கள், பிற்காலத்தில் அவர் தயாரித்த பல நகைச்சுவை நாடகங்களுக்கு ஊற்றாக அமைந்தன என்பதில் ஐயமில்லை.

ஒரு கலைக் குடும்பத்தின் கூட்டு முயற்சி இந்த நூல். இது வெளிவருவதற்குப் பின்னால் ஒரு பெரிய நட்புறவுப் பட்டாளமே இருந்திருக்கிறது. குரும்பசிட்டி சன்மார்க்க சபை நூல் நிலையத்திலிருந்து பழைய கட்டுரைகளைச் சேகரித்துக் கொடுத்த ஏ.ரி. பொன்னுத்துரை, நூலாக வெளியிடத் தூண்டிய ரசிகமணி கனக-செந்திநாதன் மற்றும் ஆக்கபூர்வமான ஆலோசனைகளை வழங்கிய எஸ். பொன்னுத்துரை (எஸ்.பொ) என அனைவரும் ஈழத்து கலை உலகின் தூண்கள். இவர்களின் முயற்சியால், இன்று இலங்கை வானொலி வரலாற்றின் ஒரு முக்கியப் பகுதி ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.

அரசு வெளியீட்டின் அதிபர் ஜனாப் எம். ஏ. ரஹ்மான் அவர்கள் இதனை நேர்த்தியாகப் பதிப்பித்துள்ளார். இலங்கை வானொலித் துறையில் ஆர்வம் உள்ளவர்களும், ஈழத்து நகைச்சுவை இலக்கியத்தை நேசிப்பவர்களும் தவறவிடக்கூடாத படைப்பு இது.

"இலங்கை வானொலியில் நான் தயாரிக்கும் நாடகங்களைக் கேட்டு மகிழும் பல இரசிகர்களுக்கு இந்தச் சானாவை நன்கு தெரியாது" என்று நூலாசிரியர் குறிப்பிடுவது போல, அவரது பன்முகத் திறமையின் ஆதிமூலத்தை நாம் இந்த நூலில் தரிசிக்கலாம். ஓவியக் கலை, பத்திரிகைத் துறை, அதன் பின் உலகளாவிய வானொலித் துறை எனச் சானா பயணித்த பாதை மலைப்பிற்குரியது.

ஈழத்துத் தமிழ் இலக்கியமும், வானொலி நாடகக் கலையும் இணைந்த ஒரு புள்ளியாக 'பரியாரி பரமர்' திகழ்கிறது. இந்த அரிய பொக்கிஷத்தை வாசிக்க விரும்புவோர் மித்ர வெளியீடு வாயிலாகப் பெற்றுக்கொள்ளலாம் (தொடர்புக்கு: 044 24721336). வானதி பதிப்பக வெளியீடுகளைப் போன்றே நேர்த்தியான உள்ளடக்கத்தைக் கொண்ட இந்த நூல், ஒவ்வொரு இலங்கை வானொலிப் பிரியரின் சேகரிப்பிலும் இருக்க வேண்டியது அவசியம்.


Wednesday, December 31, 2025

இலங்கை வானொலிப் புத்தகங்கள்: சோ.சிவபாதசுந்தரம் எழுதிய ஒலிபரப்புக் கலை

 நூற்றாண்டு காணும் இலங்கை வானொலி: சிறப்பு கட்டுரைத் தொடர் - 25

1950களில் வெளிவந்த முதல் பதிப்பும் சமீபத்தில்
வெளிவந்த புதிய பதிப்பும் 

இலங்கை வானொலியில் பணியாற்றியவர்கள் எழுதிய புத்தகங்களில் இது மிக முக்கியமான புத்தகம் எனலாம். சோ.சிவபாதசுந்தரம் அவர்களின் பன்முகத்தன்மையை நாம் கூறித் தெரிய வேண்டியதில்லை. வானொலி உலகின் தமிழ் முழக்கம் என்றே அவரைக் கூறலம். சோ.சிவபாதசுந்தரம் அவர்களின் வாழ்வும் பணியும் வானொலிச் சார்ந்ததாகவே இருந்தது எனலாம். வானதி பதிப்பகத்தின் வெளியீடாக, 330 பக்கங்களில் மிளிரும் இந்தப் 'ஒலிபரப்புக் கலை' எனும் நூல், தமிழ் வானொலி இலக்கிய உலகிற்கு ஒரு முக்கியமான புத்தகமாகும்.

இந்நூலின் ஆசிரியர் சோ.சிவபாதசுந்தரம் அவர்கள், இலங்கையின் யாழ்ப்பாண மண்ணில் பிறந்தவராயினும், தமிழக வாசகர்களுக்கு மிகவும் அறிமுகமான ஒரு மூத்த வானொலி ஆளுமை. சட்டக் கல்லூரியில் பயின்று, பின்னர் பத்திரிகைத் துறையில் தடம் பதித்த இவர், சிறுகதைகள், இலக்கிய விமர்சனங்கள் மற்றும் பயணக் கட்டுரைகள் எனத் தமிழ் இலக்கியத்தின் பல்வேறு தளங்களில் தனது முத்திரையைப் பதித்தவர். 

குறிப்பாக, 'மாணிக்கவாசகர் அடிச்சுவட்டில்' என்ற இவரது நூல், பயண இலக்கியத் துறையில் ஒரு புதிய உத்வேகத்தையும் வழியையும் உருவாக்கிய பெருமைக்குரியது.சோ.சிவபாதசுந்தரம் அவர்களின் ஆளுமையில் மிக முக்கியமான பகுதி அவரது வானொலித் துறை சார்ந்த அனுபவங்கள். பத்து ஆண்டுகளுக்கும் மேலாக வானொலி ஒலிபரப்புத் துறையில் அரும்பணியாற்றியவர். 

இலங்கை வானொலியில் தனது பணியைத் தொடங்கி, அதன் பின்னர் லண்டன் பி.பி.சி (BBC) நிலையத்திற்குச் சென்று, அங்கிருந்து 'தமிழோசை' என்ற புகழ்பெற்ற தமிழ் வானொலியைத் தொடங்கி வைத்த பெருமை இவரைச் சாரும். இதன் மூலம் உலகெங்கிலும் வாழும் தமிழர்களிடையே தமிழ் மொழியின் பெருமையை முழங்கச் செய்தவர் இவர். 

ஒரு வகையில், உலகளாவிய ரீதியில் தமிழ் ஒலிக்க அடித்தளமிட்ட முன்னோடிகளில் இவரும் ஒருவர். இவர் இலங்கை வானொலியோடு தொடர்புடியவர் என்பதில் நமக்கும் பெருமை. இவரது அனுபவம் வெறும் ஒலிபரப்போடு மட்டும் நின்றுவிடவில்லை. லண்டன், பாரிஸ், லக்ஸம்பர்க், ஜெனீவா, ரோமாபுரி போன்ற ஐரோப்பிய நகரங்களில் உள்ள உலகத்தரம் வாய்ந்த வானொலி நிலையங்களுக்கும், தமிழ்நாட்டின் பல்வேறு வானொலி நிலையங்களுக்கும் நேரில் சென்று, அவற்றின் நிர்வாக முறைகளையும் தொழில்நுட்ப நுணுக்கங்களையும் மிக ஆழமாக ஆராய்ந்தவர். 

இந்த உலகளாவிய தேடலும், ஒப்பிட்டுப் பார்க்கும் நோக்கும் இவரது எழுத்துக்களில் ஒரு முதிர்ச்சியையும், உலகளாவிய பார்வையையும் கொண்டு வந்துள்ளது. ஒரு சிறந்த ஆய்வாளராகவும், நிர்வாகியாகவும் இவர் பெற்ற அனுபவங்களே இந்த ஒலிபரப்புக் கலை எனும் நூலின் அடித்தளமாக அமைந்துள்ளன.இந்தப் புத்தகத்தின் 330 பக்கங்களும் ஆசிரியரின் நீண்ட கால அனுபவத்தையும், அவர் கண்ட உலகத்தையும் நமக்குக் காட்சிப்படுத்துகின்றன. 

சட்டக் கல்வியின் தர்க்கமும், பத்திரிகைத் துறையின் வேகமும், வானொலித் துறையின் நயமும் ஒருசேரக் கலந்த ஒரு தனித்துவமான நடை இவருக்கு வாய்த்திருக்கிறது. யாழ்ப்பாணத்துத் தமிழும், தமிழகத்துத் தமிழும் கைகோர்க்கும் ஒரு பாலமாக இவரது எழுத்துக்கள் திகழ்கின்றன. குறிப்பாக, ஒரு பயணக் கட்டுரையை எப்படி ஒரு வரலாற்று ஆவணமாகவும், இலக்கியப் படைப்பாகவும் மாற்ற முடியும் என்பதற்கு இவரது முந்தைய நூல்களைப் போலவே இந்தப் படைப்பும் சான்றாக நிற்கிறது.

வானதி பதிப்பகம் இத்தகைய வரலாற்றுப் பின்புலமும், ஆழமான அனுபவமும் கொண்ட ஒரு படைப்பாளியின் நூலை வெளியிட்டிருப்பது பாராட்டுக்குரியது. இலங்கை வானொலி, மீது பற்றுதல் கொண்டவர்களுக்கும், ஒலிபரப்புத் துறையில் ஆர்வம் கொண்டவர்களுக்கும், இலக்கியப் பயணங்களில் நாட்டம் உள்ளவர்களுக்கும் இந்த நூல் ஒரு சிறந்த வழிகாட்டியாக அமையும். 

ஒரு மனிதர் தனது வாழ்நாளில் ஈட்டிய அனுபவங்களை, அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்க்கும் ஒரு சீரிய முயற்சியாகவே இதைக் கருத வேண்டும். தொழில்நுட்பங்கள் மாறினாலும், அடிப்படைத் தமிழ் உணர்வும், பண்பாட்டுப் பதிவுகளும் மாறாதவை என்பதை இந்நூல் உணர்த்துகிறது.இந்த அரிய படைப்பை வாசிக்க விரும்புவோர் வானதி பதிப்பகத்தை நேரடியாகவோ அல்லது 044 24342810 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம். 

சோ.சிவபாதசுந்தரம் போன்ற ஆளுமைகளின் எழுத்துக்களைப் போற்றுவது என்பது, நமது மொழிக்கும் பண்பாட்டிற்கும் மட்டுமல்லாது இலங்கை வானொலிக்கும் நாம் செய்யும் பெருமையாகும். இலங்கை வானொலிப் பிரியர்கள் தவறவிடக்கூடாத இந்த 330 பக்கப் பொக்கிஷம், உங்கள் வீட்டு நூலகத்தில் ஒரு முக்கிய இடத்தைப் பிடிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

Tuesday, December 30, 2025

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் வர்த்தகப் பிரிவு

 நூற்றாண்டு காணும் இலங்கை வானொலி: சிறப்பு கட்டுரைத் தொடர் - 24

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் (SLBC) தனது வருவாயைப் பெருக்குவதற்காகவும், வர்த்தக நிறுவனங்களை ஈர்ப்பதற்காகவும் ஒரு முறையான மற்றும் கவர்ச்சிகரமான விளம்பரக் கட்டமைப்பை வைத்திருந்தது.

மார்ச் 5, 2019 அன்று சந்தைப்படுத்தல் பிரிவினால் எழுதப்பட்ட இந்த ஆவணம், குறிப்பாக 'தென்றல் FM' (104.7 / 104.9 MHz) போன்ற தமிழ் அலைவரிசைகளில் நேரடி நிகழ்ச்சிகளை நடத்துவதற்கான "சிறப்பு நிகழ்ச்சித் தொகுப்பு" (Special Programme Package) குறித்த முழுமையான விபரங்களை வழங்குகிறது.

ஒரு வர்த்தகர் தனது நிறுவனத்தைப் பிரபலப்படுத்த வாரந்தோறும் வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணி முதல் 6.00 மணி வரை ஒதுக்கப்பட்ட ஒரு மணிநேர நேரடி ஒலிபரப்பைப் பயன்படுத்திக்கொள்ளும் வசதி இதில் வழங்கப்பட்டது.

இந்த ஒரு மணிநேரத் தொகுப்பின் கீழ், விளம்பரதாரர்களுக்குப் பல கூடுதல் சலுகைகள் வழங்கப்பட்டன. அந்த ஒரு மணிநேர நேரடி நிகழ்ச்சியில் மட்டும் தலா 60 விநாடிகள் கொண்ட ஐந்து வர்த்தக விளம்பரங்களை ஒலிபரப்ப அனுமதி அளிக்கப்பட்டது.

மேலும், நிகழ்ச்சியின் தொடக்கத்திலும் இறுதியிலும் 30 விநாடிகள் கொண்ட சிறப்பு விளம்பரங்கள் இடம்பெற்றன. இவை அனைத்திற்கும் மேலாக, நேயர்களிடையே அந்த நிகழ்ச்சிக்கான எதிர்பார்ப்பை உருவாக்க 20 விநாடிகள் கொண்ட 28 முன்னோட்ட விளம்பரங்கள் (Trailers) ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் முன்னதாகவே ஒலிபரப்பப்பட்டன.

நிதியியல் ரீதியாகப் பார்க்கும்போது, 2019 காலப்பகுதியில் ஒரு நிகழ்ச்சிக்கான அடிப்படை முதலீடாக 40,000 ரூபா மற்றும் வரி நிர்ணயிக்கப்பட்டிருந்தது. வெறும் ஒலிபரப்புக் கட்டணத்துடன் நிற்காமல், நிகழ்ச்சியைச் செம்மைப்படுத்த அறிவிப்பாளர், தயாரிப்பாளர், தொழில்நுட்ப உதவியாளர் (OA) மற்றும் வசன ஆசிரியர் ஆகியோருக்குத் தனித்தனியாகக் கட்டணங்கள் வசூலிக்கப்பட்டன. குறிப்பாக கிரியேட்டிவ் கதைக்கு 3,000 ரூபாவும், அறிவிப்பாளர் மற்றும் தயாரிப்பாளருக்குத் தலா 2,500 ரூபாவும், அலுவலக உதவியாளருக்கு 1,500 ரூபாவும் கட்டணமாகப் பெறப்பட்டது. இது வானொலி விளம்பரங்களின் தரத்தைப் பேணுவதில் கூட்டுத்தாபனம் காட்டிய அக்கறையை வெளிப்படுத்துகிறது.

SLBC தனது விளம்பர வீச்சை அதிகரிக்கப் பல்வேறு மொழி மற்றும் துறை சார்ந்த அலைவரிசைகளை விளம்பரதாரர்களுக்குத் தயார் நிலையில் வைத்திருந்தது. தென்றல் FM மட்டுமன்றி, பாரம்பரியமான தமிழ்ச் சேவை (102.1 / 102.3 MHz), இளையோரைக் கவரும் சிட்டி FM (89.6 / 89.8 MHz), மற்றும் ஆங்கில மொழி நேயர்களுக்கான ரேடியோ ஸ்ரீலங்கா (97.4 / 97.6 MHz) ஆகிய அலைவரிசைகளிலும் விளம்பர வாய்ப்புகள் வழங்கப்பட்டன.

இவை தவிர, சிங்கள மொழியில் சுதேசிய சேவை மற்றும் வெளுந்த சேவை (94.3 / 94.5 MHz) ஆகியவற்றுடன், விளையாட்டுச் செய்திகளுக்கெனத் தனியாக ஸ்போர்ட்ஸ் சேவை (107.3 / 107.5 MHz) மற்றும் கல்விச் சேவைகளுக்கான அலைவரிசைகளும் விளம்பரதாரர்களின் தெரிவுக்காகப் பட்டியலில் இடம்பெற்றிருந்தன. அத்துடன் ரஜரட்ட, கந்துரட்ட போன்ற பிரதேச சேவைகளும் இந்த வலைப்பின்னலில் இணைக்கப்பட்டிருந்தன.

விளம்பரங்களைப் பெறுவதற்கான நடைமுறைகள் "முதலில் வருபவருக்கே முதலிடம்" என்ற கொள்கையின் அடிப்படையில் அமைந்திருந்ததுடன், அனைத்துக் கட்டணங்களும் முன்கூட்டியே செலுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. காசோலைகள் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் பெயரிலேயே வழங்கப்பட வேண்டும் என்பதுடன், விளம்பரம் செய்யப்படும் விடயங்கள் தொடர்பான சட்டச் சிக்கல்களுக்கு விளம்பரதாரரே முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும் என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டது.

சந்தைப்படுத்தல் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் நாயகத்தின் மேற்பார்வையில் இயங்கிய இக்கட்டமைப்பு, 2019 ஆம் ஆண்டில் ஒரு நம்பகமான வணிகப் பங்காளராக விளம்பரதாரர்களுக்குத் தேவையான அனைத்துத் தொழில்நுட்ப மற்றும் படைப்பாற்றல் வசதிகளையும் ஒரே கூரையின் கீழ் வழங்கியது எனலாம்.

Monday, December 29, 2025

வானோசை: ஒலிபரப்புக் கலையின் உயிர்நாடி

நூற்றாண்டு காணும் இலங்கை வானொலி: சிறப்பு கட்டுரைத் தொடர் - 23

வெகுசன ஊடகங்களில் வானொலி என்பது ஒரு மந்திரக் கருவி போன்றது. கண்ணுக்குத் தெரியாத ஒரு குரல், கோடிக்கணக்கான மக்களின் கற்பனையில் உருவங்களைச் செதுக்கும் விந்தையை வானொலி நிகழ்த்துகிறது. அத்தகைய சிறப்புமிக்க ஒலிபரப்புக் கலைக்கு ஒரு முறையான வழிகாட்டியாகவும், பயிற்சியாளராகவும் திகழ்வது "வானோசை" எனும் நூல். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் (SLBC) பயிற்சி நெறியாளர் ஸ்ற்றுவாற் உவேவல் (Stuart Wavell) ஆங்கிலத்தில் எழுதிய இந்த நூலை, மெருக குறையாமல் தமிழில் தந்துள்ளார் சி.வி. இராஜசுந்தரம். 1970-களில் வெளியான போதிலும், இன்றுவரை இலங்கையில் ஒலிபரப்புத் துறையில் ஈடுபாடு கொண்டவர்களுக்கு இது ஒரு பாடப்புத்தகமாகவே திகழ்கிறது.

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் ஒரு மாற்றத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருந்த 1970-களில், வெறும் தொழில்நுட்பக் கலைஞர்களை உருவாக்குவதை விடுத்து, ஆழமான அறிவுப் பின்னணியும் கலைத் தாகமும் கொண்ட முழுமையான ஒலிபரப்பாளர்களை உருவாக்க வேண்டும் என்ற உயரிய நோக்கில் இந்நூல் உருவானது. இதனை இயக்குநர் நாயகம் திரு. நெவில் ஐயவீர தனது முன்னுரையில் மிக அழகாகக் குறிப்பிடுகிறார். "ஒலிபரப்பாளர் வெறும் தொழில்நுட்பர்கள் அல்லர்; அவர்கள் முழுமையான மனிதர்கள்" என்ற அவரது வரிகள், ஒரு ஊடகவியலாளர் சமூகத்தின் மீது கொண்டிருக்க வேண்டிய பொறுப்பை உணர்த்துகின்றன.

நூலாசிரியர் ஸ்ற்றுவாற் உவேவல் தென்கிழக்கு ஆசியாவில் 16 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து, இப்பகுதியின் பண்பாட்டோடு ஒன்றிப்போனவர். 20 ஆண்டுகால ஒலிபரப்பு அனுபவம் கொண்ட அவர், ஒரு செவ்வரத்தம் பூவில் இருந்து மரச்சிற்பம் வரை அனைத்தையும் வியப்போடும் நுணுக்கத்தோடும் நோக்கும் ஆற்றல் கொண்டவர். அந்த ஆர்வமே இந்நூலின் ஒவ்வொரு அதிகாரத்திலும் தெறிக்கிறது. சி.வி. இராஜசுந்தரம் அவர்களின் தமிழாக்கம், இது ஒரு மொழிபெயர்ப்பு நூல் என்ற உணர்வே ஏற்படாத வண்ணம், இயல்பான தமிழ் நடையில் ஒலிபரப்புத் தமிழைப் பிரதிபலிக்கிறது.

இந்நூலில் உள்ள 15 அதிகாரங்களும் தலைப்பிலேயே வாசகர்களை ஈர்க்கின்றன. "செய்தியின் சூட்சுமம்" மற்றும் "சொற்கள் பாய்ந்துவிட்டன" போன்ற பகுதிகள், வானொலியில் பேசப்படும் ஒவ்வொரு சொல்லுக்கும் இருக்கும் வலிமையை உணர்த்துகின்றன. அச்சு ஊடகத்தைப் போலன்றி, காற்றில் கலந்துவிடும் சொற்களைத் திருத்த முடியாது என்பதால், சொற்களைத் தேர்ந்தெடுப்பதில் இருக்க வேண்டிய கவனத்தை ஆசிரியர் வலியுறுத்துகிறார்.

"முறுவலிக்கும் அறிவிப்பாளர்" என்ற தலைப்பு மிகவும் முக்கியமானது. மைக்ரோபோன் முன்னால் அமர்ந்திருக்கும் ஒருவரின் புன்னகை, அவரது குரல் வழியாக நேயர்களைச் சென்றடையும் என்ற உளவியல் உண்மையை இது விளக்குகிறது.

"ஒரு சம்பவத்துடன் தொடங்குங்கள்" என்ற அறிவுரை, இன்றைய நவீன கால 'Hook' எனப்படும் உத்திக்கு அன்றே அடித்தளம் இட்டது. நேயர்களை முதல் நொடியிலேயே கட்டிப்போடும் வித்தையை இது கற்பிக்கிறது.

"உற்றுக் கேட்கும் மைக்கிரபோன்" மற்றும் "நாடா ஒலித்தொகுப்பு" ஆகிய பகுதிகள் ஒலிப்பதிவுத் தொழில்நுட்பத்தின் நுணுக்கங்களைப் பேசுகின்றன. மைக்ரோபோன் என்பது வெறும் கருவி அல்ல, அது ஒரு ரகசியத்தைக் காது கொடுத்துக் கேட்கும் ஒரு நண்பனைப் போன்றது என்ற பார்வை வியக்கத்தக்கது.

இந்நூலின் தனித்துவமே அதன் தலைப்புகள்தான். "அலாடினும் மாயவிளக்கும்", "நாயின் வாயிலிலே சேவலின் கூவல்", "டியூறியன் பழமும் புலியும்", "மலைப்பாம்பின் மலர்மினுக்கம்" எனப் பெயரிடப்பட்ட அதிகாரங்கள், வாசகர்களின் ஆர்வத்தைத் தூண்டுவதோடு மட்டுமல்லாமல், கலைப்படைப்பின் சுவாரஸ்யத்தோடு ஒலிபரப்பு நுட்பங்களை விளக்குகின்றன. "மாவலி கங்கையின் மீதினிலே" போன்ற பகுதிகள் இலங்கை மண்ணின் சூழலோடு பாடங்களை இணைக்கின்றன.

ஆழமான பின்னணியுடைய கலைஞர்கள்

வெறுமனே பட்டன்களை அழுத்தும் "ஒலி வல்லார்கள்" (Technicians) நமக்குத் தேவையில்லை, மாறாக வாழ்வின் விழுமியங்களைப் புரிந்துகொண்ட "கலைஞர்கள்" தேவை என்ற ஆசிரியரின் கருத்து இக்கால ஊடகவியலாளர்களுக்கும் பொருந்தும்.

ஒரு ஒலிபரப்பாளர் என்பவர் சமூகத்தின் கண்ணாடியாகவும், அதே சமயம் வழிகாட்டியாகவும் இருக்க வேண்டும் என்பதை இந்நூல் வலியுறுத்துகிறது.

பொதுவாகப் பயிற்சிக் கைந்நூல்கள் (Manuals) வறண்ட மொழிநடையில், வாசிப்பதற்குச் சிரமமாக இருக்கும். ஆனால் "வானோசை" ஒரு நாவலைப் போன்ற வேகத்துடனும், ஒரு கவிதையைப் போன்ற அழகுடனும் எழுதப்பட்டுள்ளது. இதனை வாசிக்கும் எவருக்கும் "நானும் ஒரு ஒலிபரப்பாளர் ஆக வேண்டும்" என்ற வேட்கை பிறக்கும் என்பது மிகையல்ல. அனுபவம் வாய்ந்தவர்களுக்குத் தங்கள் கலையை மெருகேற்றிக்கொள்ளவும், புதியவர்களுக்கு ஒரு சிறந்த வழிகாட்டியாகவும் இது அமைகிறது.

இலங்கை ஒலிபரப்புத் துறையின் பொற்காலத்தை நினைவுபடுத்தும் "வானோசை", வெறும் வரலாற்று ஆவணம் மட்டுமல்ல, அது ஒரு வாழும் கலைப் பொக்கிஷம். தொழில்நுட்பம் இன்று டிஜிட்டல் மயமாகி, போட்காஸ்ட் மற்றும் சமூக வலைதளங்கள் பெருகிவிட்ட காலத்திலும், "வானோசை" கற்றுத்தரும் அடிப்படை அறங்களும், குரல் வள நுட்பங்களும் என்றும் மாறாதவை. ஒலிபரப்புத் துறையில் தடம் பதிக்க விரும்பும் எவரும் கண்டிப்பாகப் படிக்க வேண்டிய ஒரு 'வேத நூல்' என்று இதைக் குறிப்பிடலாம்.

Saturday, December 27, 2025

தபால் முத்திரைகளில் இலங்கை வானொலி

நூற்றாண்டு காணும் இலங்கை வானொலி: சிறப்பு கட்டுரைத் தொடர் - 21


 தெற்காசியாவின் வானலை ராஜா: தபால் முத்திரைகளில் இலங்கை வானொலியின் பொற்கால வரலாறு

தபால் தலை சேகரிப்பு (Philately) என்பது வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்ல, அது ஒரு நாட்டின் வரலாறு, கலாச்சாரம் மற்றும் சாதனைகளை ஆவணப்படுத்தும் ஒரு கலை வடிவமாகும். தபால் துறையில் பயன்படுத்தப்படும் 'வாசக முத்திரை ரத்து' (Slogan Cancellation) என்பது கடிதங்களில் ஒட்டப்படும் தபால் தலைகளை மீண்டும் பயன்படுத்த முடியாதபடி ரத்து செய்யும்போது, அஞ்சல் அலுவலகங்கள் பயன்படுத்தும் ஒரு தனித்துவமான முறையாகும். இது ஒரு குறிப்பிட்ட செய்தி, விளம்பரம் அல்லது பொதுநல விழிப்புணர்வை மக்களிடம் கொண்டு சேர்க்கப் பயன்படுத்தப்படுகிறது.

தபால் துறையில் ஒரு கடிதம் அஞ்சல் நிலையத்திற்கு வரும்போது, அதன் மீதான முத்திரை செல்லாததாக்கப்பட வேண்டும். இதற்காகப் பயன்படுத்தப்படும் முத்திரைகளில் வெறும் தேதி மற்றும் ஊர் பெயர் மட்டுமே இல்லாமல், ஒரு பிரத்யேக வாசகம் அல்லது விளம்பரம் இடம்பெற்றால் அது 'வாசக முத்திரை' எனப்படுகிறது.

இது தபால் தலை சேகரிப்பாளர்களிடையே மிகவும் மதிப்புமிக்க ஒன்றாகக் கருதப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட காலக்கட்டத்தில் ஒரு நாடு எதற்கு முக்கியத்துவம் அளித்தது என்பதை இத்தகைய முத்திரைகள் மூலம் அறியலாம். உதாரணமாக, குடும்பக் கட்டுப்பாடு, போர்க்கால நிதி சேகரிப்பு அல்லது ஒரு நாட்டின் மிக முக்கியமான வானொலி நிலையத்தைப் பற்றிய விளம்பரம் போன்றவை இதில் இடம்பெறும்.

1950-கள் மற்றும் 1960-களில் இலங்கை (அன்று சிலோன்) தெற்காசியாவின் தகவல் தொடர்புத் துறையில் ஒரு மாபெரும் சக்தியாக விளங்கியது. அந்த காலகட்டத்தில் இலங்கை வானொலி தெற்காசியாவின் 'வானலைகளின் ராஜா' என்று போற்றப்பட்டது. இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் இதன் ஆதிக்கம் மிக அதிகமாக இருந்தது.

படத்தில் உள்ள கடித உறையை உற்று நோக்கினால், அது ஏப்ரல் 24, 1954 அன்று கொழும்பிலிருந்து அனுப்பப்பட்டது என்பது தெளிவாகத் தெரிகிறது. அந்த கடிதத்தின் முத்திரையில் "LISTEN TO RADIO CEYLON" (இலங்கை வானொலியைக் கேளுங்கள்) என்ற வாசகம் பெரிய எழுத்துக்களில் அச்சிடப்பட்டுள்ளது. இதன் மூலம், அப்போதைய இலங்கை அரசாங்கம் தனது வானொலி சேவையை உலகளாவிய ரீதியில் விளம்பரப்படுத்த தபால் துறையைப் பயன்படுத்தியது என்பதை அறிய முடிகிறது.

இந்த முத்திரையில் வானொலி நிலையத்தின் பெயரைத் தாண்டி, சில முக்கியமான தொழில்நுட்ப விவரங்களும் இடம்பெற்றுள்ளன. அந்த வாசகத்திற்கு கீழே 13M. 19M. 25M. 31M. 41M. 49M ஆகிய எண்கள் குறிக்கப்பட்டுள்ளன. இவை இலங்கை வானொலி ஒலிபரப்பப்பட்ட சிற்றலை  மீட்டர் பேண்ட்களைக் குறிக்கின்றன.

வானொலிப் பெட்டிகள் இன்றும் அரிதாகப் பயன்படுத்தப்படும் ஒரு காலத்தில், 1950-களில் இதுவே மக்களின் பிரதான தகவல் மற்றும் பொழுதுபோக்கு சாதனமாக இருந்தது. இலங்கை வானொலியின் துல்லியமான ஒலிபரப்பும், நேயர்களைக் கவரும் நிகழ்ச்சிகளும் இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் அதைப் பிரபலமாக்கின. இதைக் கேட்பதற்காகவே மக்கள் குறிப்பிட்ட நேரங்களில் வானொலிப் பெட்டிகளைச் சுற்றித் திரண்டிருந்தனர்.

இலங்கை வானொலியின் இந்த வெற்றிக்கு பின்னால் பல திறமையான அறிவிப்பாளர்கள் இருந்தனர். 1950 மற்றும் 1960-களில் தெற்காசியாவில் புகழின் உச்சியில் பல அறிவிப்பாளர்கள் இலங்கை வானொலியில் இருந்தனர். அவர்களது காந்தக் குரலும், தெளிவான உச்சரிப்பும், நேயர்களுடன் அவர்கள்  உரையாடும் விதமும் அவர்களுக்குப் பெரும் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கித் தந்தது.

இலங்கை வானொலியின் வர்த்தக சேவை இந்தியா போன்ற நாடுகளில் மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்றதற்கு பி.ஹெச்.அப்துல் ஹமீது போன்றவர்களின் பங்களிப்பு மிக முக்கியமானது. வானொலியின் இந்த அசுர வளர்ச்சியைத் தான், படத்தில் உள்ள தபால் முத்திரை நமக்கு நினைவூட்டுகிறது.

படத்தில் உள்ள இந்த 1954-ஆம் ஆண்டின் தபால் உறை, இலங்கை வானொலியின் பொற்காலத்தை நமக்குக் காட்டும் ஒரு வரலாற்றுச் சான்றாகும். தபால் தலை சேகரிப்பில் இத்தகைய 'வாசக முத்திரைகள்' மிகக் குறைந்த காலமே புழக்கத்தில் இருக்கும் என்பதால், இவை சேகரிப்பாளர்களால் பொக்கிஷமாகக் கருதப்படுகின்றன.

1950-களின் இலங்கை வானொலி என்பது வெறும் பொழுதுபோக்கு நிலையம் மட்டுமல்ல, அது தெற்காசிய கலாச்சாரப் பரிமாற்றத்தின் ஒரு மையமாக விளங்கியது. கே.எஸ்.ராஜா போன்ற ஆளுமைகளும், "Listen to Radio Ceylon" போன்ற தபால் முத்திரைகளும் அந்த உன்னதமான காலத்தின் அடையாளங்களாகும்.

ஒரு காலத்தில் ஒரு நாட்டின் தபால் துறையே ஒரு வானொலியை விளம்பரப்படுத்தியது என்றால், அந்த வானொலி எத்தகைய செல்வாக்கைக் கொண்டிருந்திருக்கும் என்பதை நாம் கற்பனை செய்து பார்க்கலாம். 

Wednesday, December 24, 2025

இலங்கை வானொலி வெளியிட்ட "வானொலி வெளியீடு"

 நூற்றாண்டு காணும் இலங்கை வானொலி: சிறப்பு கட்டுரைத் தொடர் - 19


இலங்கை வானொலி வெளியிட்ட "வானொலி மஞ்சரி" எனூம் இதழை நாம் அறிவோம். ஆனால் சமீபத்தில் எம் கண்ணில் பட்ட இந்த "வானொலி வெளியீடு" எனும் இந்த இதழை முதல் முறையாகப் பார்க்கிறேன். இந்த இதழின் அட்டைப்படம் மட்டுமே நமக்குக் கிடைத்தது. முழுமையான இதழை  இந்தக் கட்டுரைப் படிப்பவர்கள் யாரேனும் வைத்திருந்தால் அனுப்பி உதவுங்கள். நிச்சயம் அது ஒரு வரலாற்று ஆவணமாகத் திகழும். 

இலங்கை வானொலி கூட்டுத்தாபனத்தினால் (SLBC) 1963 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ‘வானொலி வெளியீடு’ (Radio Times) இதழின் இந்த அட்டைப்படம், இலங்கையின் ஒலிபரப்பு வரலாற்றில் ஒரு முக்கியமான காலத்தை நமக்கு நினைவூட்டுகிறது. அக்காலத்தில் வானொலி என்பது வெறும் பொழுதுபோக்குச் சாதனமாக மட்டும் இல்லாமல், மக்களின் அன்றாட வாழ்வியலோடும் கலாச்சாரத்தோடும் பின்னிப் பிணைந்த ஒரு அங்கமாகத் திகழ்ந்தது. 

இந்த இதழ் தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் தலைப்புகளைக் கொண்டு விளங்குவது, இலங்கையின் பன்முகத்தன்மையையும் அன்றைய அரசு ஊடகங்கள் கடைபிடித்த சமத்துவப் போக்கையும் பறைசாற்றுகிறது. குறிப்பாக, ‘வானொலி வெளியீடு’ என்ற தமிழ்ப் பெயர், தமிழ் பேசும் மக்களிடையே இந்த இதழ் கொண்டிருந்த செல்வாக்கையும், கலை மற்றும் இலக்கியத் தகவல்களைப் பகிர்ந்து கொள்வதில் அது ஆற்றிய பங்கையும் தெளிவுபடுத்துகிறது.

இந்த இதழின் முகப்பில் உள்ள கருப்பு-வெள்ளை ஒளிப்படம், இலங்கை வானொலியின் வரலாற்றுப் புகழ்பெற்ற அறிவிப்பாளரான வேர்னன் கொரியா (Vernon Corea) முன்னிலையில் அமர்ந்திருப்பதை அவதானிக்க முடிகிறது. 1960-களில் தெற்காசியாவின் மிகச்சிறந்த வானொலி ஆளுமைகளில் ஒருவராகக் கருதப்பட்ட அவர், ஒரு கன்சோல் சாதனம் முன்பாக அமர்ந்து பணியாற்றிக் கொண்டிருப்பதை இந்தப் படம் காட்டுகிறது. அவரது தொழில்முறை ஈடுபாடும், ஒரு நிகழ்ச்சியைத் தயாரிப்பதில் அல்லது நேரலையில் வழங்கும்போதும் அவர் கடைபிடித்த நேர்த்தியும் அவரது உடல் மொழியில் பிரதிபலிக்கிறது. அவருக்குப் பின்னால் நின்று கொண்டிருக்கும் அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்கள் அவரது செயல்பாட்டை உன்னிப்பாகக் கவனிப்பது, அக்கால வானொலி நிலையங்களில் நிலவிய ஒரு கூட்டுப்பணி கலாச்சாரத்தையும், வேர்னன் கொரியா போன்ற முன்னோடி அறிவிப்பாளர்களுக்கு வழங்கப்பட்ட மரியாதையையும் வெளிப்படுத்துகிறது.

வேர்னன் கொரியா இலங்கை வானொலியின் பொற்காலத்தை உருவாக்கியவர்களில் முதன்மையானவர். ஆங்கில நேயர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றிருந்த அவர், குறிப்பாக இசை மற்றும் நேர்காணல் நிகழ்ச்சிகளில் ஒரு புதிய பாணியை அறிமுகப்படுத்தினார். இந்தப் படத்தில் அவர் ஒரு கன்சோலை இயக்கிக் கொண்டிருக்கும் காட்சி, ஒரு அறிவிப்பாளர் வெறும் குரல் கொடுப்பவராக மட்டும் இல்லாமல், தொழில்நுட்ப ரீதியாகவும் எவ்வளவு ஆளுமை கொண்டிருந்தார் என்பதைப் பறைசாற்றுகிறது. 1963 ஆம் ஆண்டின் இந்த 'வானொலி வெளியீடு' அட்டைப்படம், வேர்னன் கொரியாவின் ஆரம்பகாலப் பணிகளையும், இலங்கை வானொலி ஒரு சர்வதேச ஒலிபரப்பு நிறுவனமாக வளர்ந்ததில் அவரது பங்களிப்பையும் நினைவுகூரும் ஒரு பொக்கிஷமாகத் திகழ்கிறது. வேர்னன் கொரியா இலங்கை வானொலியில் வழங்கிய புகழ்பெற்ற இசை நிகழ்ச்சிகளை இன்றும் மறக்க முடியாது. 

1963 செப்டம்பர் 23 முதல் அக்டோபர் 6 வரையிலான காலப்பகுதிக்கான நிகழ்ச்சிக் குறிப்புகளை உள்ளடக்கிய இந்த இதழ், வெறும் காகிதத் தொகுப்பாக இல்லாமல், ஒரு வரலாற்று ஆவணமாகவே கருதப்படுகிறது. மேலைநாட்டு உடைகளுடனும் சுதேச உடைகளுடனும் இருக்கும் நபர்கள், இலங்கையின் சமூக மாற்றத்தை ஒருங்கே பிரதிபலிக்கிறார்கள்.

இலங்கை வானொலியின் சின்னம் இடதுபுறம் பொறிக்கப்பட்டு, ‘ரேடியோ சிலோன்’ (Radio Ceylon) என்ற பெயருடன் காட்சியளிப்பது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. தெற்காசியாவிலேயே பழமையான மற்றும் செல்வாக்குமிக்க வானொலி நிலையமாகத் திகழ்ந்த இலங்கை வானொலி, இந்தியா போன்ற அண்டை நாடுகளிலும் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது. ‘வானொலி வெளியீடு’ இதழின் மூலம் நேயர்கள் தங்களுக்குப் பிடித்தமான பாடல்கள், நாடகங்கள் மற்றும் செய்திகளின் ஒலிபரப்பு நேரத்தைத் தெரிந்துகொண்டனர். இந்த இதழ்கள் அக்காலத்தில் வீடுகளின் வரவேற்பறையை அலங்கரித்ததோடு, வானொலிக்கும் நேயர்களுக்கும் இடையிலான ஒரு பாலமாகச் செயல்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

அட்டைப்படத்தின் மேல் பகுதியில் உள்ள சிவப்பு நிற பின்னணியில் வெள்ளை நிற எழுத்துக்கள், நவீன இதழியல் வடிவமைப்பிற்கு ஒரு சிறந்த உதாரணமாகத் தெரிகிறது. அக்காலத்திலேயே இதழியல் துறையில் நிறத் தேர்வுகள் மற்றும் எழுத்துருக்களில் காட்டிய அக்கறை பாராட்டுதலுக்குரியது. இந்த இதழின் விலை 25 சதங்களாகக் குறிப்பிடப்பட்டிருப்பது, அன்றைய பொருளாதார நிலையையும் எளிய மக்களும் இந்த அறிவுக் கருவியை அணுகக்கூடிய வகையில் இருந்ததையும் காட்டுகிறது. தபால் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட ஒரு செய்தித்தாளாக (Registered as a Newspaper) இது அங்கீகரிக்கப்பட்டிருந்தது, இதன் நம்பகத்தன்மையையும் சட்டப்பூர்வமான முக்கியத்துவத்தையும் உறுதிப்படுத்துகிறது.

இன்று நாம் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் பல மாற்றங்களைக் கண்டிருந்தாலும், இதுபோன்ற பழைய இதழ்கள் நமது வேர்களை நமக்கு உணர்த்துகின்றன. 1960-களில் வானொலி என்பது ஒரு மந்திரப் பெட்டியாகக் கருதப்பட்ட காலத்தில், அதன் பின்னணியில் உழைத்த கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்பவியலாளர்களின் முகங்களை இந்த ‘வானொலி வெளியீடு’ வெளிச்சமிட்டுக் காட்டியது. இது போன்ற வரலாற்று ஆவணங்களைப் பாதுகாப்பது, வருங்காலச் சந்ததியினருக்கு இலங்கையின் ஊடகப் பரிணாம வளர்ச்சி மற்றும் தமிழ் மொழி வானொலி சேவையின் மகத்துவத்தை எடுத்துச் சொல்ல உதவும். இந்த அட்டைப்படம் ஒரு காலத்தின் சாட்சியாகவும், இலங்கைத் தமிழர்களின் கலைப் பயணத்தில் ஒரு மைல்கல்லாகவும் இன்றும் ஒளி வீசுகிறது.


Sunday, December 21, 2025

இலங்கை வழியாக பிபிசி

   நூற்றாண்டு காணும் இலங்கை வானொலி: சிறப்பு கட்டுரைத் தொடர் - 16


பிபிசி தூர கிழக்கு அஞ்சல் நிலையம்: SLBC இலங்கை வழியாக தற்காலிக அஞ்சல் சேவை

இலங்கையின் எக்கலாவில் ஒரு பெரிய சிற்றலை ஒலிபரப்பு நிலையத்திற்கான ஆரம்பக் கருத்தாய்வு 1941 ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது. அப்போது, ​​சிலோன் மற்றும் ஆசியாவின் பிற பகுதிகளில் உள்ள நேயர்களுக்காக ரேடியோ சிலோனின் ஒலிபரப்பு வரம்பை விரிவுபடுத்துவதற்காக ஒரு சிற்றலை வசதிக்கான ஆரம்பத் திட்டங்கள் வகுக்கப்பட்டன. ஆரம்பத்தில், இந்த புதிய நிலையத்தின் பணிகள் மெதுவாகவே நடந்தன, ஆனால் 1944 இல் அட்மிரல் லார்ட் லூயிஸ் மவுண்ட்பேட்டன் களத்தில் இறங்கியபோது, ​​இந்தத் திட்டத்திற்கான பணிகள் உயர் முன்னுரிமை பெற்றன.

கொழும்பிலிருந்து 10 மைல் வடக்கே உள்ள எக்கலாவில் அமைக்கப்பட்ட குறுகிய அலை நிலையத்தின் வடிவமைப்பு, மலாய் தீபகற்பத்தின் தெற்கு முனையில் உள்ள டெப்ராவில் அமைந்திருந்த பிரம்மாண்டமான பிபிசி சிற்றலை நிலையத்தின் வடிவமைப்பை மிகவும் ஒத்திருந்தது. எக்கலா நிலையத்திற்கான பெரும்பாலான மின்னணு உபகரணங்கள் இங்கிலாந்தில் உள்ள மார்கோனி தொழிற்சாலையிலிருந்து அனுப்பப்பட்டன, ஆனால் அந்த கப்பல் சிலோன் கடற்கரைக்கு அப்பால் ஒரு நீர்மூழ்கிக் குண்டால் தாக்கப்பட்டு மூழ்கடிக்கப்பட்டது. அசல் ஆண்டெனா கோபுரங்கள் ஐல் ஆஃப் வைட் தீவிலிருந்து வந்தவை, எதிரி நடவடிக்கையின் விளைவாக கப்பல் மூழ்கியபோது அவையும் தொலைந்து போயின.

இரண்டாவது தொகுதி மின்னணு உபகரணங்கள் இங்கிலாந்திலிருந்து அனுப்பப்பட்டன, மேலும் அவை எக்கலாவில் உள்ள புதிய ஒலிபரப்பி கட்டிடத்தில் நிறுவப்பட்டன. 100 கிலோவாட் திறன் கொண்ட ஒரு சிற்றலை  ஒலிபரப்பிக்கும், (மார்கோனி மாடல் SWB18) மற்றும் 7.5 கிலோவாட் திறன் கொண்ட மூன்று ஒலிபரப்பிகளுக்கும் (அமெரிக்கன் RCA மாடல் ET4750) ஏற்பாடு செய்யப்பட்டது; இந்த மூன்றில் ஒன்று அருகிலுள்ள RAF ஒலிபரப்பி நிலையத்திலிருந்து மாற்றப்பட்டது.

எக்கலாவில் உள்ள ஆண்டெனா அமைப்பில் நான்கு திரை ஆண்டெனாக்களும் மூன்று கிராஸ் இருமுனை ஆண்டெனாக்களும் இருந்தன, மேலும் இவை ஆறு உயரமான ஆண்டெனா கோபுரங்களிலிருந்து கட்டப்பட்டிருந்தன. மொத்தம் நான்கு டீசல் மின்னாக்கிகள் ஒரு தனி கட்டிடத்தில் நிறுவப்பட்டன, மூன்று வழக்கமான பயன்பாட்டிற்கும், ஒன்று மாற்று அலகாகவும் பயன்படுத்தப்பட்டன. இந்த பெரிய புதிய சிற்றலை ஒலிபரப்பு நிலையம், போர்க்கால SEAC, மவுண்ட்பேட்டனால் உருவாக்கப்பட்டது.

ஒரு சிற்றலை வாங்கி நிலையம், அருகருகே இருந்த இரண்டு ஒலிபரப்பி நிலையங்களான RAF (ராயல் ஏர் ஃபோர்ஸ்) மற்றும் SEAC ஆகிய இரண்டிற்கும் சேவை செய்தது. இந்த வாங்கி நிலையம், அருகருகே இருந்த இரண்டு ஒலிபரப்பி நிலையங்களிலிருந்து சுமார் 10 மைல் தொலைவில் உள்ள ஹோராஹேனாவில் அமைந்திருந்தது, மேலும் SEAC எக்கலா செயல்படத் தொடங்குவதற்கு முன்பே இது செயல்பாட்டில் இருந்தது.

இந்த வாங்கி வசதியில் மூன்று வாங்கிகள் கொண்ட இரண்டு தொகுதிகள் இருந்தன, அவை அமெரிக்கன் RCA மாடல் AR88 வாங்கிகள் ஆகும், மேலும் பெறும் ஆண்டெனாக்கள் மூன்று கம்பி திசைசார் வைர வடிவ ராம்பிக் ஆண்டெனாக்களாக இருந்தன. பெறப்பட்ட சிக்னல் கொழும்பில் உள்ள  ஸ்டுடியோ வளாகத்திற்குத் தரைவழித் தொலைபேசி மூலம் இணைக்கப்பட்டது. முக்கிய சிற்றலை ஒலிபரப்பு நிகழ்ச்சிகள் பிபிசி லண்டன், அகில இந்திய வானொலி டெல்லி, ரேடியோ ஆஸ்திரேலியா மெல்போர்ன் மற்றும் வாஷிங்டன், டி.சி.யில் உள்ள வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா ஆகியவற்றிலிருந்து வந்தன.

1945-ல் எக்காலாவில் உள்ள புதிய SEAC கட்டிடத்தில் நிறுவப்பட்ட முதல் அலகு, 7.5 kW திறன் கொண்ட புதிய RCA ET4750 மாடல் டிரான்ஸ்மிட்டர் ஆகும். இந்த டிரான்ஸ்மிட்டரிலிருந்து சோதனை ஒலிபரப்புகள் முன்கூட்டியே தொடங்கப்பட்டன, மேலும் இது பெரிய 100 kW அலகுடன் சேர்ந்து மே 1, 1946 அன்று வழக்கமான சேவைக்குக் கொண்டுவரப்பட்டது.

அதேபோல், இந்த 100 kW அலகு 1945 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் நிறுவப்பட்டது, மேலும் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அதன் ஆரம்பகட்ட சோதனை ஒலிபரப்புகள் கவனிக்கப்பட்டன. இந்த அலகும் மே 1 (1946) அன்று, சிறிய RCA அலகுடன் சேர்ந்து வழக்கமான சேவைக்குக் கொண்டுவரப்பட்டது. இரண்டு டிரான்ஸ்மிட்டர்களும் ஒரு வாரம் கழித்து, மே 8 அன்று, ஒரு தொடக்க விழாவுடன் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டன.

மூன்றாவது சிற்றலை டிரான்ஸ்மிட்டர், 7.5 kW திறன் கொண்ட மற்றொரு அமெரிக்க RCA அலகு, முந்தைய 1945 ஆம் ஆண்டில் எக்காலாவில் தொடங்கப்பட்ட அருகிலுள்ள ராயல் ஏர் ஃபோர்ஸ் தகவல் தொடர்பு நிலையத்திலிருந்து மாற்றப்பட்டது; மேலும் நான்காவது, அதுவும் 7.5 kW திறன் கொண்ட மற்றொரு RCA அலகு, 1947 இல் நிறுவப்பட்டது.

கொழும்பில் SEAC ஒலிபரப்புக்காக 10 kW மத்தியலை  டிரான்ஸ்மிட்டர் ஒன்றும் சேவைக்குக் கொண்டுவரப்பட்டது, மேலும் இது 1948 ஆம் ஆண்டின் இறுதி காலகட்டத்தில், வழக்கமான அழைப்புக் குறியீடான ZOJ-இன் கீழ் 920 kHz அலைவரிசையில் தொடங்கப்பட்டது. இந்த டிரான்ஸ்மிட்டர் எங்கு அமைந்திருந்தது என்பது தெரியவில்லை, இருப்பினும் அது எக்காலாவிலோ அல்லது வெலிகடாவிலோ இருந்திருக்கலாம், பெரும்பாலும் வெலிகடாவில்தான் இருந்திருக்கலாம் என்று நாங்கள் கருதுகிறோம்.

எக்காலாவில் உள்ள இந்த சிற்றலை நிலையம் தொடங்கப்பட்ட நேரத்தில், அதாவது மே 1, 1946 அன்று, பிபிசி நிகழ்ச்சிகளின் பகுதி நேர ஒலிபரப்பு இந்த நிலையம் வழியாகத் தொடங்கியது.

பின்னர் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, ஏப்ரல் 1949 இல், பிபிசி சிங்கப்பூரில் உள்ள ஜூராங் நிலையத்தின் பயன்பாட்டை படிப்படியாக நிறுத்தியது. இந்த நேரத்தில், அவர்கள் ஏற்கனவே ஏப்ரல் 1 ஆம் தேதி கொழும்பில் ஒரு அலுவலகத்தைத் திறந்திருந்தனர், மேலும் மூன்று நாட்களுக்குப் பிறகு (ஏப்ரல் 3) அவர்கள் எக்காலாவில் உள்ள சிற்றலை நிலையத்தின் கட்டுப்பாட்டைத் தங்கள் வசம் எடுத்துக்கொண்டனர். இருப்பினும், எக்கலாவின் வழியாக ஒலிபரப்புகளை நிர்வகிப்பதற்காகவும், மலேசியாவின் தெப்ராவில் உள்ள புதிய சிற்றலை ஒலிபரப்பு நிலையத்தை மேம்படுத்துவதற்காகவும் பிபிசி தனது அலுவலகத்தை சிங்கப்பூரில் தக்க வைத்துக் கொண்டது.

அக்காலத்தில், எக்கலாவில் நான்கு சிற்றலை ஒலிபரப்பிகள் இயங்கி வந்தன; ஒன்று 100 கிலோவாட் திறனிலும், மற்ற மூன்று 7.5 கிலோவாட் திறனிலும் இருந்தன. இருப்பினும், பிபிசி இந்த ஒலிபரப்பிகளில் இரண்டை மட்டுமே பயன்படுத்தியது; அவை வரலாற்றுச் சிறப்புமிக்க மார்கோனி 100 கிலோவாட் ஒலிபரப்பி மற்றும் 7.5 கிலோவாட் திறனுள்ள அமெரிக்க RCA அலகுகளில் ஒன்று ஆகும். அதே நேரத்தில், கொழும்பு பெருநகரப் பகுதியில் வசிக்கும் நேயர்களுக்காக, மத்திய அலை வரிசையான ZOJ-ம் பிபிசியின் ஒலிபரப்பை வழங்கியது.

லண்டனில் உள்ள பிபிசியின் நிகழ்ச்சிகள் ஹோராஹேனாவில் சிற்றலை  வரிசையில் பெறப்பட்டன. அவை அவர்களின் வெளிநாட்டு சேவை மற்றும் ஆசியாவில் உள்ள குறிப்பிட்ட நாடுகளுக்கான பல வேறுபட்ட மொழிச் சேவைகளைக் கொண்டிருந்தன. ஆங்கிலத்தில் ஒலிபரப்பப்பட்ட அடையாள அறிவிப்பு இவ்வாறு கூறியது: இது பிபிசி உலக சேவை ஒலிபரப்பு. (தகவல்: வேவ்ஸ்கேன்)

Saturday, December 20, 2025

இலங்கையில் இருந்து ஒலித்த DX நிகழ்ச்சிகள்

   நூற்றாண்டு காணும் இலங்கை வானொலி: சிறப்பு கட்டுரைத் தொடர் - 15


SLBC எக்கலாவிலிருந்து DX நிகழ்ச்சிகள்

உலகப் புகழ்பெற்ற வருடாந்திர வெளியீடான, 1969 ஆம் ஆண்டுக்கான 'வேர்ல்ட் ரேடியோ டிவி ஹேண்ட்புக்' (World Radio TV Handbook), இலங்கையில் உள்ள எக்கலாவில் இருந்த சிற்றலை வரிசை நிலையத்தின் வழியாக ஒலிபரப்பான முதல் DX நிகழ்ச்சி குறித்த இரண்டு பதிவுகளைக் கொண்டுள்ளது. "DX பனோரமா" என்ற தலைப்பில், பதினைந்து நிமிடங்கள் நீடித்த இந்த நிகழ்ச்சி, ஒவ்வொரு மாதமும் இரண்டாவது மற்றும் கடைசி சனிக்கிழமைகளில் இருமுறை ஒலிபரப்பப்பட்டது.

சிலோன் சிற்றலைவரிசை கேட்போர் மன்றத்தைச் சேர்ந்த விக்டர் குனதிலகேவும் சரத் அமகோட்டுவாவும் இந்த நிகழ்ச்சிக்கான ஆய்வுகளை மேற்கொண்டு அதை எழுதியதாகவும், ஒவ்வொரு நிகழ்ச்சியும் ரேடியோ சிலோனின் தென்கிழக்கு ஆசிய சேவை மற்றும் ஐரோப்பிய சேவை ஆகிய இரண்டிலும் இருமுறை ஒலிபரப்பப்பட்டது. இந்த DX நிகழ்ச்சிக்கான உரையை திருமதி மிர்ல் வல்பொல வில்லியம்ஸ் மற்றும் நிஹால் பாரதி ஆகியோர் வாசித்தனர், மேலும் இது மிகவும் பாராட்டப்பட்ட 'ரேடியோ ஜர்னல்' என்ற நிகழ்ச்சியில் சேர்க்கப்பட்டது.

கொழும்பிலிருந்து சிற்றலைவரிசையில் ஒலிபரப்பான இந்த முதல் DX நிகழ்ச்சியான "DX பனோரமா" பற்றிய பதிவுகள், WRTVHB-இன் 1969, 1970 மற்றும் 1971 ஆகிய மூன்று தொடர்ச்சியான ஆண்டு மலர்களில்  இடம்பெற்றுள்ளன.

கொழும்பிலிருந்து சிற்றலைவரிசையில் ஒரு DX நிகழ்ச்சியை ஒலிபரப்புவதற்கான இரண்டாவது முயற்சி 1974 இல் நடந்தது, இது அந்த ஆண்டுக்கான WRTVHB பதிப்பில் பதிவு செய்யப்பட்டுள்ளது. "DX கார்னர்" என்ற புதிய தலைப்பில் வந்த இந்த புதிய நிகழ்ச்சி, நிஹால் பாரதியுடன் இணைந்து 'ரேடியோ ஜர்னல்' நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக அரை மணி நேர நிகழ்ச்சியாக ஒலிபரப்பத் திட்டமிடப்பட்டது. இருப்பினும், விக்டர் கூனதிலக்க கூறுவது போல், மீண்டும் தொடங்கப்பட்ட DX நிகழ்ச்சி திட்டமிடல் கட்டத்தைத் தாண்டி ஒருபோதும் செல்லவில்லை.


இருப்பினும், ஏட்ரியன் குடும்பம் இலங்கையின் கொழும்பில் குடியேறிய சிறிது காலத்திலேயே, இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் நிகழ்ச்சி இயக்குநர் ஜிம்மி பருச்சாவைத் தொடர்புகொண்டு, அவர்களின் 'ரேடியோ ஜர்னல்' நிகழ்ச்சியில் ஒரு வழக்கமான பகுதியாக வாராந்திர DX நிகழ்ச்சியைத் தயாரித்து வழங்குமாறு பரிந்துரைக்க விக்டரை (ஏட்ரியன் பீட்டர்சன்) அழைத்தார். இவ்வாறுதான் "ரேடியோ மானிட்டர்ஸ் இன்டர்நேஷனல்" என்ற புதிய DX நிகழ்ச்சி பிறந்தது, இது ஆரம்பத்தில் கொழும்பில் உள்ள SLBC டோரிங்டன் சதுக்க ஸ்டுடியோக்களில் பதிவு செய்யப்பட்டது. வெறும் பத்து நிமிடங்கள் நீடித்த இந்த முதல் ஒலிபரப்பு, 1971 ஆம் ஆண்டு ஜூன் 1 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று ஒலிபரப்பப்பட்டது.

சில மாதங்களுக்குப் பிறகு, ஏட்ரியன் இந்தியாவின் புனேவுக்கு மாற்றப்பட்டார், அங்கு ஏற்கனவே ஒரு வானொலி ஒலிப்பதிவு ஸ்டுடியோ செயல்பட்டு வந்தது. எனவே, "ரேடியோ மானிட்டர்ஸ் இன்டர்நேஷனல்" நிகழ்ச்சியின் தயாரிப்பு SLBC கொழும்பிலிருந்து இந்தியாவின் புனேயில் உள்ள AWR-ஆசியாவிற்கு மாற்றப்பட்டது. இந்த டிஎக்ஸ் நிகழ்ச்சியின் பதிவுகள் இந்தியாவின் புனேயிலிருந்து இலங்கையின் கொழும்புக்கு விமான அஞ்சல் மூலம் அனுப்பப்பட்டன.

பிப்ரவரி 19, 1978 அன்று, "ரேடியோ மானிட்டர்ஸ் இன்டர்நேஷனல்" ஒரு பதினைந்து நிமிட முழுமையான நிகழ்ச்சியாக மாறியது. இது ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் SLBC எக்காலாவிலிருந்து, ஆசிய சேவை மற்றும் தென்கிழக்கு ஆசிய சேவைகளில் இருமுறை ஒலிபரப்பப்பட்டது. ஒரு வருடம் கழித்து, இந்த டிஎக்ஸ் நிகழ்ச்சி அதன் நேயர்களால் அன்புடன் அழைக்கப்பட்ட RMI, ஒவ்வொரு வாரமும் அரை மணி நேர கால அளவிற்கு விரிவுபடுத்தப்பட்டது.

ஒவ்வொரு நிகழ்ச்சியின் இரண்டாம் பாதிக்கும் 'விண்டோ ஆன் தி வேர்ல்ட்' என்ற சிறப்புத் தலைப்பு வழங்கப்பட்டது. மேலும், நிகழ்ச்சியின் இந்தப் பகுதியில் மற்ற நன்கு அறியப்பட்ட டிஎக்ஸ் நிகழ்ச்சிகளின் பதிவு செய்யப்பட்ட ஒலிப்பதிவுகள் சேர்க்கப்பட்டன, அவற்றுள்:

ரான் மேயர்ஸ் வேர்ல்ட் டிஎக்ஸ் நியூஸ் - அட்வென்டிஸ்ட் வேர்ல்ட் ரேடியோ ஐரோப்பா

இயன் மேக்ஃபார்லேண்ட் டிஎக்ஸ் லிசனர்ஸ் டைஜஸ்ட் - ரேடியோ கனடா இன்டர்நேஷனல்

ஜொனாதன் மார்க்ஸ் மீடியா நெட்வொர்க் - ரேடியோ நெதர்லாந்து

டேவிட் ஹெர்ம்ஜெஸ் ஷார்ட்வேவ் பனோரமா - ORF வியன்னா ஆஸ்திரியா

தி டூ பாப்ஸ் SW மெர்ரி-கோ-ரவுண்ட் - ஸ்விஸ் ரேடியோ இன்டர்நேஷனல்

1980 ஆம் ஆண்டில் ரேடியோ மானிட்டர்ஸ் இன்டர்நேஷனல் நிகழ்ச்சியில் டிஎக்ஸ் ஒலிபரப்பை விரிவுபடுத்தும் விதமாக, வழக்கமான அரை மணி நேர நிகழ்ச்சி இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் உள்நாட்டு சேவையின் மத்திய அலை, சிற்றலை மற்றும் எஃப்எம் ஒலிபரப்புகளில் சேர்க்கப்பட்டது. அதே நேரத்தில், இந்த ஒலிபரப்பின் கால் மணி நேரப் பதிப்பு மத்திய கிழக்கு நாடுகளுக்கான SLBC சேவையிலும் சேர்க்கப்பட்டது. மேலும், அப்போதைய ஜெஃப் ஒயிட் தனது முந்தைய ரேடியோ எர்த் நிகழ்ச்சியின் மூலம், டொமினிகன் குடியரசில் உள்ள ரேடியோ கிளாரினின் சிற்றலை ஒலிபரப்பில் ரேடியோ மானிட்டர்ஸ் இன்டர்நேஷனலைச் சேர்த்திருந்தார்.

அப்போது, ​​டிஎக்ஸ் தொகுப்பாளரான ஏட்ரியனைத் தவிர, நிகழ்ச்சியில் இரண்டு அறிவிப்பாளர்கள் இருந்தனர். ஒருவர் சோனியா கிறிஸ்டோ போடார், இவர் இப்போது இங்கிலாந்தில் வசிக்கிறார். எக்காலாவில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க சிற்றலை ஒலிபரப்பு நிலையத்தின் நினைவாக அவர் SLBC-க்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறார். மற்ற அறிவிப்பாளர் மேக்சின் பெல், இவர் இப்போது அமெரிக்காவில் எங்கோ வசிக்கிறார்.

ரேடியோ மானிட்டர்ஸ் இன்டர்நேஷனல் ஒலிபரப்புகளுக்காக பல ஆயிரம் QSL அட்டைகள் வழங்கப்பட்டன. உண்மையில், அந்த நாட்களில் ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சிக்கு மொத்தம் 900 கடிதங்கள் பெறப்பட்டன என்றால், மறக்கத்தான் முடியுமா? (Source: Wavescan)