Saturday, September 21, 2024

ஒலியலை ஓவியர்கள் - புத்தக வெளியீட்டு விழா




18.09.2024 அன்று சென்னைப் பல்கலைக்கழக வளாகத்தில் 
மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் திரு. மு. பெ. சாமிநாதன் அவர்கள் சென்னைப் பல்கலைக்கழகம், இதழியல் மக்கள் தொடர்பியல் துறை மற்றும் சென்னை இந்திய ஒலி ஒளிபரப்பாளர் மன்றம் இணைந்து நடத்திய, முனைவர் வெ. நல்லதம்பி அவர்கள் எழுதிய “ஒலியலை ஓவியர்கள்” என்ற நூலினை வெளியிட்டார். இந்நிகழ்ச்சியில் அமெரிக்க துணைத் தூதரகம் உதவித் தூதர் திருமிகு. ஜீன் பிரகன்டி, சென்னை பல்கலைக்கழகத்தின் பதிவாளர் பேராசிரியர் ஏழுமலை, பெரியார் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் முனைவர் மு. தங்கராசு, இதழியல் மக்கள் தொடர்பியல் துறை இணைப் பேராசிரியர் & துறைத் தலைவர் முனைவர் டி.ஆர். கோபாலகிருஷ்ணன், (பொறுப்பு), சென்னை பல்கலைக்கழகத்தின் இதழியல் துறை உதவி பேராசிரியர் ஜெயசக்திவேல், சென்னை வானொலி நிலையத்தின் முன்னாள் இயக்குநர் திரு கமலநாதன், தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் முனைவர் ந. அருள் ஆகியோர் பங்கேற்றனர்.

#






























பத்திரிகை செய்தி:

 சென்னைப் பல்கலைக்கழக இதழியல்,  தொடர்பியல் துறையும், சென்னை இந்திய ஒளி,ஒலிபரப்பாளர் மன்றமும் இணைந்து முனைவர்.வெ.நல்லதம்பி எழுதிய "ஒலியலை ஓவியர்கள்" புத்தக வெளியீட்டு விழாவிற்கு உங்களை அன்புடன் அழைக்கிறோம்.  இந்த நிகழ்வு, செப்டம்பர் 18, 2024 புதன்கிழமை அன்று காலை 10:30 மணிக்கு சென்னைப் பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு கட்டிடத்தில் உள்ள F50 அரங்கத்தில் நடைபெறும்.  இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு தமிழக அரசின் தமிழ் வளர்ச்சி மற்றும் தகவல் துறை அமைச்சர் உட்பட பல சிறப்புப் பேச்சாளர்கள் கலந்துகொண்டு, நூலின் முதல் பிரதியை வெளியிடவுள்ளனர். 


 #

Saturday, August 31, 2024

விஸ்வவாணி: அறிவிப்பாளருக்கு சிறப்பு கடித உறை

 இந்திய அஞ்சல் துறை ஆச்சார்யா ஆர்ஆர்கே மூர்த்தி அவர்களுக்கு சிறப்பு  அஞ்சல் உறை வெளியிட்டு கௌரவித்துள்ளது.


புகழ்பெற்ற வானொலி மற்றும் தொலைக்காட்சி ஆளுமை ஆச்சார்யா ஆர்ஆர்கே மூர்த்தியின் பாரம்பரியத்தை கௌரவிக்கும் சிறப்பு அஞ்சல் உறையை இந்தியா போஸ்ட் 2022இல் வெளியிட்டது.  ரேடியோ பெட்டியைக் கவனம் செலுத்தும் வகையில் ஒரு தனித்துவமான ரத்துசெய்தல் (Cancellation) அஞ்சல் உறையில் இடம்பெற்றுள்ளது, இதன் மூலம் மூர்த்தியின் போதனைகள் எண்ணற்ற நேயர்களைச்  சென்றடைந்தது.


பிப்ரவரி 29, 1928 இல், ஆந்திரப் பிரதேசத்தின் குண்டூர் மாவட்டத்தில் உள்ள கோவிந்தபுரம் கிராமத்தில் பிறந்த ஆச்சார்யா ஆர்.ஆர்.கே மூர்த்தி, ஒரு திறமையான பேச்சாளர், எழுத்தாளர், போதகர் மற்றும் பாடல் இசையமைப்பாளர் ஆவார்.  விஸ்வ வாணி என்று அழைக்கப்படும் டிரான்ஸ் வேர்ல்ட் ரேடியோ மூலம் 25 ஆண்டுகால பைபிள் கற்பித்ததற்காக அவர் பெரும் புகழ் பெற்றார்.  மூர்த்தியின் ஈடுபாடும், நுண்ணறிவும் நிறைந்த பிரசங்கங்கள் அனைத்து மதத்தினரையும் சேர்ந்த நேயர்களிடம் எதிரொலித்தது, அவருக்கு மிகுந்த மரியாதையையும் பாராட்டையும் பெற்றுத் தந்தது.



அவரது வானொலிப் பணிகளைத் தாண்டி, மூர்த்தியின் பங்களிப்பு இலக்கியம் மற்றும் இசைக்கும்  நீடித்தது.  அவர் பல புத்தகங்களை எழுதியுள்ளார் மற்றும் ஏராளமான பாடல்களையும் இயற்றினார், ஆன்மீக மற்றும் கலாச்சார நிலப்பரப்பில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தினார்.  அவரது மாதாந்திர ஆன்மீக இதழான "ஸ்பந்தனா" அவரது செல்வாக்கை மேலும் உறுதிப்படுத்தியது மற்றும் அர்ப்பணிப்புள்ள வாசகர்களுடன் அவரை இணைத்தது.


வானொலி ஒலிபரப்பு, கல்வி மற்றும் ஆன்மீகம் ஆகியவற்றில் ஆச்சார்யா ஆர்ஆர்கே மூர்த்தியின் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளுக்கு இந்திய அஞ்சல் துறை மூலம் வெளியிடப்பட்ட சிறப்பு அஞ்சல் உறை பொருத்தமான அஞ்சலியாகும்.  இது அவரது நீடித்த மரபு மற்றும் எண்ணற்றவர்களின்  வாழ்வில் அவர் ஏற்படுத்திய ஆழமான தாக்கத்தை நினைவூட்டுகிறது.


#

Friday, August 23, 2024

சென்னையின் AIR BAND ஒலிபரப்புகள்

 


சென்னையின் வானொலிகளை ஆவணப்படுத்தும் நோக்கில் நடந்த சென்னைத் தினத்தின் மூன்றாவது நாள் கருத்தரங்கில் அண்ணா எஃப்.எம், ஞானவாணி, எம்.ஓ.பி எஃப்.எம், லொயோலா எஃப்.எம், முத்துச்சரம், தென்றல் எஃப்.எம் மட்டுமல்லாமல், சென்னையின் வான் வெளியில் ஒலிபரப்பாகிக் கொண்டு இருக்கின்னற ஒலி அலைகளையும் ஆவணப்படுத்தும் விதமாக ஹாம் வானொலி மற்றும் AIR BAND ஒலிபரப்புகளைப் பற்றியும் விவாதித்த அற்புத நிகழ்ச்சி எனலாம் இதை.

நம்மில் எத்தனைப் பேர் 124.45 MHzல் ஒலிபரப்பாகிவரும் AIR BAND தகவல் தொடர்பினைக் கேட்டிருப்போம். ஒவ்வொரு நாள் காலையும் மாலையும் மெரினா கடற்கரை மேலே வட்டமிடும் விமானங்களில் இருந்து, சென்னை விமான நிலையத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொள்ளும் இந்த அலைவரிசை Dxers மத்தியில் புகழ்பெற்றது. அடுத்த முறை, மெரினா கடற்கரைக்கோ அல்லது  St.Thomas Mountக்கு செல்லும் போது மற்றக்காமல் உங்களிடம் உள்ள AIR BANDகளை எடுக்கக்கூடிய XHDATA D-808 போன்ற வானொலிப் பெட்டியை எடுத்துச்செல்ல மறவாதீர்கள்!

இந்த நிகழ்வின் முத்தாய்ப்பாக முனைவர்.சுரேஷின் உரை அமைந்தது எனலாம். Culture, Cultural தொடங்கி Stuart Hallல் கொண்டு வந்து வானொலியை இணைத்தது மிகச்சிறப்பு. வானொலியின் பிரதியை (text) முன் வைத்து செய்த இவரின் முனைவர் பட்ட ஆய்வு சர்வதேச வானொலிகளுக்கு ஒரு மணிமகுடம் எனலாம்.