Showing posts with label Community Radio. Show all posts
Showing posts with label Community Radio. Show all posts

Sunday, March 22, 2026

செயற்கை நுண்ணறிவு காலத்தில் சமுதாய வானொலிகள்

ஊட்டியில் நடைபெற்ற சிறப்பு கருத்தரங்கில் உரையாற்றுகிறார் திரு.ஸ்டாலின்

தொழில்நுட்பம் அசுரவேகத்தில் வளர்ந்து வரும் இன்றைய சூழலில், ஊடகங்களின் பங்கு மற்றும் சவால்கள் குறித்து விவாதிப்பது காலத்தின் கட்டாயமாகும். அந்த வகையில், மார்ச் 14 மற்றும் 15, 2026 ஆகிய தேதிகளில், மலைகளின் அரசியான ஊட்டியில் "செயற்கை நுண்ணறிவு காலத்தில் சமுதாய வானொலிகள்" (Community Radios in the Age of AI) எனும் தலைப்பில் இரண்டு நாள் கருத்தரங்கு மிகச்சிறப்பாக நடைபெற்றது.

ஏர்மீடியா (AirMedia) நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த இக்கருத்தரங்கில், வானொலித் துறையின் வல்லுநர்கள், ஆர்வலர்கள் மற்றும் சமுதாய வானொலி பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.

தலைமை உரை: திரு. ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதல்

இந்த நிகழ்வின் சிகரமாக அமைந்தது கோவை மற்றும் சென்னை அகில இந்திய வானொலியின் முன்னாள் இயக்குனர் திரு. ஸ்டாலின் அவர்களின் தலைமை உரை. வானொலித் துறையில் நீண்ட அனுபவம் கொண்ட அவர், தற்போதைய டிஜிட்டல் யுகத்தில் சமுதாய வானொலிகளின் இருப்பு மற்றும் அதன் எதிர்காலம் குறித்து ஆழமான கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.

அவரது உரையின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு: சமுதாய வானொலியின் தனித்துவத்தை அவர் விரிவாக விளக்கினார். பொது சேவை வானொலிகள் (Public Service Broadcasters) ஒட்டுமொத்த தேசத்திற்கும் அல்லது மாநிலத்திற்கும் பொதுவான செய்திகளை வழங்குகின்றன. ஆனால், சமுதாய வானொலிகள் ஒரு குறிப்பிட்ட வட்டாரத்தின் மொழி, பண்பாடு மற்றும் தேவைகளை மையமாகக் கொண்டு இயங்குபவை.

மக்களுக்கான ஊடகமாக சமுதாய வானொலி திகழ்கிறது. "மக்களால், மக்களுக்காக நடத்தப்படும் ஊடகம்" என்பதே சமுதாய வானொலியின் ஆன்மா என்பதை அவர் வலியுறுத்தினார்.

AI-ன் தாக்கம் பற்றி அவர் கூறுகையில், செயற்கை நுண்ணறிவு (AI) வளர்ந்து வரும் சூழலில், வானொலி நிலையங்கள் எவ்வாறு தங்களை நவீனப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதையும், அதே சமயம் மனித உணர்வுகளையும் உள்ளூர் தொடர்பையும் எவ்வாறு தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்பதையும் விளக்கினார்.

ஏர்மீடியாவின் சிறப்பான ஏற்பாடு

ஊட்டியின் இதமான சூழலில் இந்தக் கருத்தரங்கை ஏர்மீடியா நிறுவனம் நேர்த்தியாகத் திட்டமிட்டிருந்தது. செயற்கை நுண்ணறிவு போன்ற நவீன தொழில்நுட்பங்களைச் சமுதாய வானொலிகள் எவ்வாறு ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்தலாம் என்பதற்கான ஆலோசனைகள் இக்கருத்தரங்கில் முன்வைக்கப்பட்டன. சமுதாய வானொலியைத் தொடஙக விரும்புபவர்கள் நிச்சயமாக ஏர்மீடியாவைத் தொடர்பு கொள்ளலாம்.

நவீன காலத்தில் வானொலி என்பது வெறும் ஒலிபரப்பு சாதனம் மட்டுமல்ல, அது ஒரு சமூக மாற்றத்திற்கான கருவி என்பதை இக்கருத்தரங்கு மீண்டும் உறுதிப்படுத்தியது.

தொழில்நுட்பங்கள் மாறினாலும், அடிமட்ட மக்களின் குரலை உலகிற்கு கொண்டு செல்லும் சமுதாய வானொலிகளின் தேவை என்றும் குறையாது. திரு. ஸ்டாலின் போன்ற அனுபவமிக்கவர்களின் ஆலோசனைகள் இத்துறைக்கு ஒரு புதிய திசையைக் காட்டியுள்ளது.

இந்தக் கருத்தரங்கு குறித்த உங்களின் கருத்துக்களைக் கீழே உள்ள கமெண்ட் பகுதியில் பகிருங்கள்!




Saturday, March 21, 2026

ஊட்டி சமுதாய வானொலிக் கருத்தரங்கு

சென்னையில் சுட்டெரிக்கும் வெயில் தொடங்கிய வேலையில் நாங்கள் ஊட்டியில் சமுதாய வானொலித் தொடர்பான கருத்தரங்கில்...


ஊடகத்துறையில் செயற்கை நுண்ணறிவு (AI) ஏற்படுத்தி வரும் வேகமான மாற்றங்களுக்கு மத்தியில், உதகமண்டலத்தில் (ஊட்டி) உள்ள விநாயகா இன் பாப்பீஸ் ஹோட்டலில் மார்ச் 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் “செயற்கை நுண்ணறிவு யுகத்தில் சமுதாய வானொலி” என்ற தலைப்பில் இரண்டு நாள் கருத்தரங்கம் ஏர்மீடியா ஏற்பாட்டில் நடைபெற்றது. சமுதாய வானொலிகளின் வளர்ச்சி, சமூக பங்களிப்பு மற்றும் வானொலி ஒலிபரப்பில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்கள் கொண்டு வரும் புதிய மாற்றங்கள் குறித்து விவாதிப்பதே இக்கருத்தரங்கின் முக்கிய நோக்கமாக அமைந்தது. மேலும், சமுதாய வானொலி நிலையங்களை தொடங்க ஆர்வம் உள்ள தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் ஊடக ஆர்வலர்களுக்கு வழிகாட்டும் வகையில் இந்நிகழ்வு ஏர்மீடியாவால்  ஒருங்கிணைக்கப்பட்டது



இந்தக் கருத்தரங்கில், யாம்  எழுதிய “சமுதாய வானொலிக் கையேடு” (Community Radio Handbook) என்ற புத்தகம் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. ஏர்மீடியா பிராட்காஸ்ட் சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் (Airmedia Broadcast Solutions Private Limited) நிறுவனத்தால் பதிப்பிகப்பட்டுள்ள இப்புத்தகம், புதிய வானொலி நிலையங்களைத் தொடங்க விரும்புபவர்களுக்கும், ஏற்கனவே இயங்கி வருபவர்களுக்கும் ஒரு முக்கிய வழிகாட்டியாக அமையும். இதில் தமிழகம் முழுவதும் இயங்கி வரும் சமுதாய வானொலி நிலையங்கள் குறித்த தொகுக்கப்பட்ட தகவல்களும் இடம்பெற்றுள்ளன.



நிகழ்வில் எளிமையான ஒரு  உரையை ஆற்றினேன். அதில், இங்கிலாந்தில் நடைமுறையில் உள்ள 'ரெஸ்ட்ரிக்டட் சர்வீஸ் லைசென்ஸ்' (Restricted Service License - RSL) முறையைப் போன்ற ஒரு அமைப்பை இந்தியாவிலும் அறிமுகப்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினேன். இத்திட்டத்தின் கீழ், “பொங்கல் எஃப்.எம்” அல்லது “ரம்ஜான் எஃப்.எம்” போன்ற சிறப்புச் சேவைகளுக்காக ஒரு மாதம் போன்ற குறுகிய காலத்திற்கு உரிமங்களை வழங்கலாம் என்றும், இது புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதுடன் வானொலி ஒலிபரப்பின் வளர்ச்சியை ஊக்கப்படுத்தும் என்றும் விளக்கினேன்.



 கருத்தரங்கின் ஒருங்கிணைப்பாளர் திரு. பி. விஜயகுமார் பேசுகையில், சமுதாய வானொலி நிலையங்களை நிறுவுவதற்கு மத்திய அரசு தற்போது 12.5 லட்சம் ரூபாய் வரை மானியம் வழங்குவதைக் குறிப்பிட்டார். இந்த மானியத்தைப் பெறுவதற்கான நடைமுறைகள் மற்றும் எளிதான முறையில் வானொலி நிலையத்தைத் தொடங்குவது குறித்த தொழில்நுட்ப ஆலோசனைகளையும் அவர் வழங்கினார். மேலும், ரத்தினம் கல்லூரி (ரத்தினவாணி எஃப்.எம்) மற்றும் கலசலிங்கம் பல்கலைக்கழகம் (கலசலிங்கம் எஃப்.எம்) ஆகியவற்றின் பிரதிநிதிகள் தங்களது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டதுடன், ஏர்மீடியா நிறுவனம் வழங்கி வரும் தொழில்நுட்ப ஆதரவு குறித்தும் விளக்கினர்.

இரண்டாம் நாள் அமர்வில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி 24 மணிநேர தானியங்கி ஒலிபரப்பு மற்றும் உள்ளடக்கத் தயாரிப்பை மேம்படுத்துவது குறித்து விரிவான விளக்கங்கள் அளிக்கப்பட்டன. அதில் குறிப்பாக டி.ஜி.வைணவக் கல்லூரியின் இதழியல் துறைத் தலைவர் முனைவர்.பிரஹதி விரிவானதொரு உரையைக் காட்சிகளுடன் வழங்கினார். மேலும், வரும் டிசம்பர் மாதம் திட்டமிடப்பட்டுள்ள சர்வதேச ஊடக மாநாட்டிற்கான ஆயத்தப் பணிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. இதில் ராமகிருஷ்ணா கல்லூரியைச் சேர்ந்த முனைவர் சி. பிரவீன்குமார் மற்றும் சென்னை டி.ஜி. வைணவக் கல்லூரி இதழியல் துறை பேராசிரியர் முனைவர் அர்ச்சனா ஆகியோர் கலந்து கொண்டு கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர். ஊடக வல்லுநர்கள், கல்வியாளர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்களை ஒன்றிணைத்த இந்த மாநாடு, சமுதாய வானொலிகளின் எதிர்காலத்திற்கான ஒரு முக்கியத் தளமாக அமைந்தது.

Wednesday, December 03, 2025

சோனா எஃப்.எம்: மலைவாழ் மக்களின் தோழன்




தினமும் 16 மணி நேரங்கள் ஒலிபரப்பாகும் இந்த வானொலிக்கு சேலம் மாவட்டம் முழுவதும் அத்தனை நேயர்கள். சமீபத்தில் அந்த வானொலியின் மூன்றாம் ஆண்டு விழாவில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. நிகழ்ச்சியை இலக்கியா அவ்வளவு அழகாகத் தொகுத்து வழங்கினார். திட்ட இயக்குநர் திரு.சுப்ரமணியம் மிகச் சிறப்பாக நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து இருந்தார். 



வள்ளியப்பா அறக்கட்டளையின் தலைவர் திரு.சி.வள்ளியப்பா  ஆற்றிய உரையில் நேரடியாக நேயர்களின் தேவைகளைக் கேட்டறிந்து, நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களிடம் குறிப்பெடுத்துக் கொள்ளச் சொன்னார். கூடுதலாக நேரடியாக அனைத்து அறிவிப்பாளர்கள், நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களையும் நேயர்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். 




ஒரு சமுதாய வானொலியால் என்னவெல்லாம் செய்யமுடியும்? மலை வாழ் மக்களுக்கு சாலை வசதி, மருத்துவ உதவி, அத்தியாவசிய தேவைகளைப் பூர்த்தி செய்து வருகின்றது என்றால் நம்ப முடிகிறதா. ஏற்காடு மலை மீது அமைந்துள்ள 36 கிராம மக்களுக்கான ஒரே ஊடகமாக இந்த சேலம் சோனா எஃப்.எம் செயல்பட்டுவருகிறது. 



எழுத்தாளர், ஆகாஷ்வாணியின் முன்னாள் பணியாளர் அகிலனோடு நெருங்கியத் தொடர்பு கொண்டவர் என்பதில் மிக்க மகிழ்ச்சி. தமிழகத்தில் வெற்றிகரமாக இயங்கிவரும் ஒருசில சமுதாய வானொலிகளில் இதுவும் ஒன்று என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. 





















Sunday, March 02, 2025

20 ஆண்டைக் கொண்டாடும் எம்.ஓ.பி. சமுதாய வானொலி 107.8 MHz

எம்.ஓ.பி. வைஷ்ணவ் மகளிர் கல்லூரி (தன்னாட்சி) தனது எம்.ஓ.பி. சமுதாய வானொலி நிலையம் 107.8 MHz. சார்பில் தேசிய வானொலி கருத்தரங்கை  நடத்துகிறது. "சமுதாய சேவையை கொண்டாடும் 20வது தேசிய வானொலி கருத்தரங்கு" என்ற தலைப்பில் இந்த கருத்தரங்கு  நடைபெற உள்ளது.

இந்த கருத்தரங்கின்  தொடக்க விழா கல்லூரியின் இரண்டாம் தளத்தில் உள்ள கலையரங்கில் மார்ச் 12, 2025 காலை 9.30 மணிக்கு நடைபெறுகிறது. தமிழக அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் அதிகாரமளிப்புத்துறை அமைச்சர் திருமதி பி. கீதா ஜீவன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கருத்தரங்கைத்  தொடங்கி வைக்கிறார். மேலும், சமுதாய வானொலி முன்னோடி டாக்டர். ஸ்ரீதர் ஆர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்கிறார்.


இந்த மாநாட்டின் ஒரு பகுதியாக, "சமுதாய வானொலிக்கான பயனுள்ள திட்ட மேலாண்மை" மற்றும் "சமுதாய ஈடுபாடு மூலம் மக்களுடன் பாலங்களை உருவாக்குதல்" என்ற தலைப்புகளில் திறன் மேம்பாட்டுப் பட்டறைகள் நடத்தப்படுகின்றன.

* முன்னாள் இயக்குனர் திரு. எம்.எஸ். பெருமாள், தூர்தர்ஷன் கேந்திரா, சென்னை அவர்கள் "சமுதாய வானொலிக்கான பயனுள்ள திட்ட மேலாண்மை" என்ற தலைப்பில் உரையாற்றுகிறார்.

* சென்னை பல்கலைக்கழகத்தின் இதழியல் மற்றும் தகவல் தொடர்புத் துறையின் உதவிப் பேராசிரியர் திரு. ஜெய்சக்திவேல் அவர்கள் "சமுதாய ஈடுபாடு மூலம் மக்களுக்களுடன் பாலங்களை உருவாக்குதல்" என்ற தலைப்பில் உரையாற்றுகிறார்.

இந்த கருத்தரங்கு  சமுதாய வானொலியின் முக்கியத்துவம் மற்றும் அதன் பங்களிப்பு குறித்து விவாதிக்க ஒரு தளமாக அமையும். மேலும், சமுதாய வானொலி துறையில் உள்ள சவால்கள் மற்றும் வாய்ப்புகள் குறித்து நிபுணர்கள் மற்றும் பங்கேற்பாளர்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்கிறார்கள்.

இந்த கருத்தரங்கில்  கலந்து கொள்ள வானொலி நேயர்கள்  அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும், இது தொடர்பான கூடுதல் தகவல்களைப் பெற கல்லூரியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்வையிடலாம்.


 

Friday, August 23, 2024

சென்னையின் AIR BAND ஒலிபரப்புகள்

 


சென்னையின் வானொலிகளை ஆவணப்படுத்தும் நோக்கில் நடந்த சென்னைத் தினத்தின் மூன்றாவது நாள் கருத்தரங்கில் அண்ணா எஃப்.எம், ஞானவாணி, எம்.ஓ.பி எஃப்.எம், லொயோலா எஃப்.எம், முத்துச்சரம், தென்றல் எஃப்.எம் மட்டுமல்லாமல், சென்னையின் வான் வெளியில் ஒலிபரப்பாகிக் கொண்டு இருக்கின்னற ஒலி அலைகளையும் ஆவணப்படுத்தும் விதமாக ஹாம் வானொலி மற்றும் AIR BAND ஒலிபரப்புகளைப் பற்றியும் விவாதித்த அற்புத நிகழ்ச்சி எனலாம் இதை.

நம்மில் எத்தனைப் பேர் 124.45 MHzல் ஒலிபரப்பாகிவரும் AIR BAND தகவல் தொடர்பினைக் கேட்டிருப்போம். ஒவ்வொரு நாள் காலையும் மாலையும் மெரினா கடற்கரை மேலே வட்டமிடும் விமானங்களில் இருந்து, சென்னை விமான நிலையத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொள்ளும் இந்த அலைவரிசை Dxers மத்தியில் புகழ்பெற்றது. அடுத்த முறை, மெரினா கடற்கரைக்கோ அல்லது  St.Thomas Mountக்கு செல்லும் போது மற்றக்காமல் உங்களிடம் உள்ள AIR BANDகளை எடுக்கக்கூடிய XHDATA D-808 போன்ற வானொலிப் பெட்டியை எடுத்துச்செல்ல மறவாதீர்கள்!

இந்த நிகழ்வின் முத்தாய்ப்பாக முனைவர்.சுரேஷின் உரை அமைந்தது எனலாம். Culture, Cultural தொடங்கி Stuart Hallல் கொண்டு வந்து வானொலியை இணைத்தது மிகச்சிறப்பு. வானொலியின் பிரதியை (text) முன் வைத்து செய்த இவரின் முனைவர் பட்ட ஆய்வு சர்வதேச வானொலிகளுக்கு ஒரு மணிமகுடம் எனலாம்.