சர்வதேச வானொலிகளை கேட்பதில்/அறிந்துகொள்வதில் ஆர்வம் கொண்ட ஒவ்வொருவரும் கண்டிப்பாக பார்த்து படிக்க வேண்டிய வலைப்பூ. இந்தக் குழுவில் இணைவதன் மூலம் உடனுக்குடன் சர்வதேச வானொலிகளைப் பற்றிய தகவல்களைப் படித்து பயன்பெறலாம்.
Showing posts with label இராஜேஸ்வரி சண்முகம். Show all posts
Showing posts with label இராஜேஸ்வரி சண்முகம். Show all posts
Saturday, March 24, 2012
இலங்கை வானொலியின் குயில் ராஜேஸ்வரி சண்முகம்
முன்னொரு காலத்தில் ராமேஸ்வரம் தீவில் ஒரு வழமை இருந்தது. மணமகள் மறுவீடு செல்லும் போது சீர்வரிசையில் அஞ்சரைப் பெட்டி இருக்குமொ இல்லையோ கண்டிப்பாக ஒரு பிலிப்ஸ் வானொலிப் பெட்டி இருக்கும். அதனை அந்த மணமகளும் மிகச் சிரத்தையோட வானொலிப் பெட்டியில் ஒலிக்கின்ற குரலை தன் தாய் தந்தையின் குரலாகவே பாவிக்க ஆரம்பித்து விடுவாள். இவ்வாறான பந்தம் இன்று தீவில் இல்லை. வானொலி பெட்டிக்கு பதிலாக பெரிய அளிவலான தொலைக்காட்சி பெட்டிகளை சீர்வரிசையில் சேர்த்து விடுகின்றார்கள்.
சமீபத்தில் தீவில் சென்றபோது தனுஸ்கோடி சென்றிருந்தென். இலங்கை வானொலியின் வர்த்தக ஒளிபரப்பு நிறுத்தப்பட்டு 5 ஆண்டுகள் ஆகின்றன. ஆயினும் தனுஸ்கோடி மக்களுக்கு இலங்கை இருந்து கடல் கடந்து வரும் சக்தி பண்பலையும், தென்றல் பண்பலையையும் கேட்பதை கவனித்தேன்.
தனுஸ்கோடி மக்களுக்கு என்று உள்ள ஒரெ ஊடகம் வானொலிப் பெட்டிகள் மட்டுமெ. அவர்கள் செய்திகள் கேட்பதற்கு தமிழ்நாடு வானொலிகளையும், பொழுதுபோக்கிற்கு இலங்கை வானொலியையுமும் நாடுகிறனர். முன்பு வானொலி கேட்பது போல் இன்று இலங்கை வானொலிகள் இல்லை எனவும், மிகுந்த இறைச்சலாக இருப்பதாகவும், ஆனால் வானொலி கேட்கும் பழக்கத்தை மாற்ற முடியவில்லை என்று தெரிவித்தார் ஒரு தனுஸ்கோடிவாசி என்னிடம்.
நேற்று மாலை பிரபல இலங்கை வானொலி அறிவிப்பாளர் ராஜேஸ்வரி சண்முகம் காலமானார் என்ற தகவலை இலங்கை வலைத்தளங்களில் வாசித்தவுடனெயெ அவருடன் பணியாற்றிய ஜெயசீலன் ஐயாவிடம் கைபேசி வாயிலாக தெரிவித்தேன். மேலும் விரிவாக படிக்க சொடுக்கவும்
Rameswaram Rafi
கலையகத்தில் இராஜேஸ்வரி சண்முகம்
இலங்கை வானொலி கலையகத்தில் கடந்த வாரம் செய்திவாசிக்கும் தருனத்தில் சிவராசா தக்கீசன் அவர்களால் எடுக்கப்பட்ட பிரத்தியோகப் புகைப்படம்.
விடைபெற்றார் இராஜேஸ் அக்கா
வணக்கம் கூறி விடைபெறுவது
இராஜேஸ்வரி சண்முகம் என்று
கணீரென்று காற்றலையில் நிறைவுசெய்வாயே
இன்று-
உலகத்தைவிட்டு விடைபெற்றும்
உன் வாழ்கையை நிறைவு செய்தும்
வானலையில் கரைந்து விட்டாயே அக்கா!
எழுபதுகளில் நீ புகழின் உச்சத்தில் இருந்தபோது
நான் வானொலிக்குள் வந்தேன்.
உன்னோடு சேர்ந்து பணிபுரிந்தபோது ஏற்பட்ட
உற்சாகத்திற்கும் புத்துணர்ச்சிக்கும் அளவே இல்லை அக்கா..
ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தில் என்னுடன் எல்லோரும் அன்புதான்
ஆனால் உனது அன்பு அளப்பெரியது..
வானொலி அறிவிப்போடு மட்டுமல்லாமல்
நாடகம், இலக்கியம் என்றெல்லாம் நீ
நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்கி பல லட்ச
நேயர்கள் நெஞ்சில் நின்று....
நீங்காத இடத்தைப் பெற்றீர்...
'பிரியா பாட்டி' என்ற தலைப்பில்
வரிவரியாய் நான் எழுதித்தர...
பிரதி சனி தோறும் பிரமாதமாய் நடித்து
நேரடி ஒலிபரப்பு செய்த ஒருத்தி என்றால்
அது நீதான் என்பேன்....
உகந்தைமலை முருகன் பக்திப்பாடல்...
இலங்கையில் முதல் வெளிவந்த தனிக்கோவில் பாடல்
நான் இசையமைத்து பாடியபோது...
கோவில் வரலாற்றையும், பாடல்பற்றிய குறிப்பாக
உனது ஈரடி கவிகொண்டு உன் கம்பீரக் குரலினால்
முன்னுரையும், முடிவுரையும் முன்னின்று தந்தாயே..அக்கா
கோவிலூர் என்று சொல்லி கொள்ளை ஆசையுடன் அழைப்பாய்
நீவி வகுடெடுத்து நெற்றியில் போட்டுவைத்து
ஆடம்பரமில்லாமல் அழகாக நீ இருப்பாய்...
எண்ணிப்பார்க்கின்றேன் இதயம் கனக்கிறது..
சொல்லில் அடங்காத துயரம் வருகிறது...
உன் குரலில், உன் குணத்தில், உன் அன்பில்
நான் கரைந்தவன்...
இன்று உன் இழப்பில் நான் என்னையே மறந்தவன்...
அக்கா உன் ஆத்மா சாந்தி அடையட்டும்...
ஓம்.சாந்தி.
(http://www.koviloor.com/2012/03/blog-post_23.html)
இராஜேஸ்வரி சண்முகம் என்று
கணீரென்று காற்றலையில் நிறைவுசெய்வாயே
இன்று-
உலகத்தைவிட்டு விடைபெற்றும்
உன் வாழ்கையை நிறைவு செய்தும்
வானலையில் கரைந்து விட்டாயே அக்கா!
எழுபதுகளில் நீ புகழின் உச்சத்தில் இருந்தபோது
நான் வானொலிக்குள் வந்தேன்.
உன்னோடு சேர்ந்து பணிபுரிந்தபோது ஏற்பட்ட
உற்சாகத்திற்கும் புத்துணர்ச்சிக்கும் அளவே இல்லை அக்கா..
ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தில் என்னுடன் எல்லோரும் அன்புதான்
ஆனால் உனது அன்பு அளப்பெரியது..
வானொலி அறிவிப்போடு மட்டுமல்லாமல்
நாடகம், இலக்கியம் என்றெல்லாம் நீ
நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்கி பல லட்ச
நேயர்கள் நெஞ்சில் நின்று....
நீங்காத இடத்தைப் பெற்றீர்...
'பிரியா பாட்டி' என்ற தலைப்பில்
வரிவரியாய் நான் எழுதித்தர...
பிரதி சனி தோறும் பிரமாதமாய் நடித்து
நேரடி ஒலிபரப்பு செய்த ஒருத்தி என்றால்
அது நீதான் என்பேன்....
உகந்தைமலை முருகன் பக்திப்பாடல்...
இலங்கையில் முதல் வெளிவந்த தனிக்கோவில் பாடல்
நான் இசையமைத்து பாடியபோது...
கோவில் வரலாற்றையும், பாடல்பற்றிய குறிப்பாக
உனது ஈரடி கவிகொண்டு உன் கம்பீரக் குரலினால்
முன்னுரையும், முடிவுரையும் முன்னின்று தந்தாயே..அக்கா
கோவிலூர் என்று சொல்லி கொள்ளை ஆசையுடன் அழைப்பாய்
நீவி வகுடெடுத்து நெற்றியில் போட்டுவைத்து
ஆடம்பரமில்லாமல் அழகாக நீ இருப்பாய்...
எண்ணிப்பார்க்கின்றேன் இதயம் கனக்கிறது..
சொல்லில் அடங்காத துயரம் வருகிறது...
உன் குரலில், உன் குணத்தில், உன் அன்பில்
நான் கரைந்தவன்...
இன்று உன் இழப்பில் நான் என்னையே மறந்தவன்...
அக்கா உன் ஆத்மா சாந்தி அடையட்டும்...
ஓம்.சாந்தி.
(http://www.koviloor.com/2012/03/blog-post_23.html)
குயில் ஓய்ந்தாலும் அதன் குரல் எம்முள் எப்போதும் கேட்டுக்கொண்டே இருக்கும் (சிறப்புத் தொகுப்பு)
மார்ச்சு 16 1940 தொடக்கம் மார்ச் 23 2012 வரை வாழ்நாள் காலத்தைக்கொண்ட இராஜேஸ்வரி சண்முகம், இலங்கையில் புகழ்பெற்ற வானொலி அறிவிப்பாளரும் நாடகக் கலைஞரும் ஆவார்.
1950 களில் இலங்கை வானொலியில் சானா சண்முகநாதன் நாடகத் தயாரிப்பாளராக இருந்தபொழுது வானொலி நாடகங்களில் நடிப்பதற்காக இவர் வானொலித்துறைக்கு வந்து தொடர்ந்து நீண்ட காலமாக நடித்தவர்.
ஆரம்பத்தில் தற்காலிக அறிவிப்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு பின்னர் தமிழ் வர்த்தக சேவையில் நிரந்தர அறிவிப்பாளராக நியமிக்கப்பட்டார்.
வாழ்க்கை வரலாறு - அம்மா அண்ணாமலையம்மாள், அப்பா பிச்சாண்டிபிள்ளை ஆகியோரின் மூத்த மகள். இரண்டு சகோதரர்கள் இரண்டு சகோதரிகள். கொழும்பில் விவேகானந்த மேட்டில் பிறந்தவர். ஸ்ரீகதிரேசன் வீதி, புனித மரியாள் பாடசாலையில் முதலில் படித்தார். பிறகு நெல் வீதி அரசினர் மத்திய மகா வித்தியாலயத்திற்கு படிக்கும் போது நடித்த "கண்ணகி" நாடகத்தை பார்த்த வானொலி நாடகத்தயாரிப்பாளர் "சானா" இவரை வானொலி நாடகங்களில் நடிக்க அழைத்தார்.
கலைக்குடும்பம் - இவரது கணவரான சி. சண்முகமும் இலங்கை வானொலியின் அறிவிப்பாளராக இருந்ததோடு வர்த்தக சேவையில் ஒலிபரப்பான ஏராளமான தனி நாடகங்கள், தொடர் நாடகங்கள் என்பனவற்றையும் மேடை நாடகங்களையும் எழுதியவர். இவர்களது பிள்ளைகளான சந்திரமோகன், சந்திரகாந்தன் இருவருமே வானொலி அறிவிப்பாளர்களாக சமகாலத்தில் இருந்தவர்கள். மகள் வசந்தி வானொலி மேடை நாடகங்களில் நடித்தவர்.
வானொலி நிகழ்ச்சிகள் - சானா சண்முகநாதன் காலத்திலிருந்து பி.விக்னேஸ்வரன் காலம் வரை வானொலி நாடகங்களில் நடித்தவர். இவர் நடித்த முதல் வானொலி நாடகம் என். எஸ். எம். இராமையாவின் "விடிவெள்ளி" என்பதாகும். வானொலியில் ´பொதிகைத் தென்றல்´ என்ற இலக்கியச் சுவையுள்ள நிகழ்ச்சியை தயாரித்து வழங்கியவர்.
மேடை நாடகங்கள் - சானாவின் நெறியாள்கையில் "அசட்டு வேலைக்காரன்", முருகையனின் ":விடியலை நோக்கி", சுஹேர் ஹமீட்டின் நெறியாள்கையில் "தேரோட்டி மகன்", சி. சண்முகத்தின் "ஸ்புட்னிக் சுருட்டு".
மறைவு - இராஜேசுவரி சண்முகம் யாழ்ப்பாணம் சென்று கொழும்பு திரும்புவதற்காக புறப்பட்ட வேளையில், மாரடைப்பு ஏற்பட்டு யாழ்ப்பாண வைத்தியசலையில் அனுமதிக்கப்பட்டு அங்கு காலமானார். (http://www.adaderana.lk/tamil/news.php?nid=23980)
1950 களில் இலங்கை வானொலியில் சானா சண்முகநாதன் நாடகத் தயாரிப்பாளராக இருந்தபொழுது வானொலி நாடகங்களில் நடிப்பதற்காக இவர் வானொலித்துறைக்கு வந்து தொடர்ந்து நீண்ட காலமாக நடித்தவர்.
ஆரம்பத்தில் தற்காலிக அறிவிப்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு பின்னர் தமிழ் வர்த்தக சேவையில் நிரந்தர அறிவிப்பாளராக நியமிக்கப்பட்டார்.
வாழ்க்கை வரலாறு - அம்மா அண்ணாமலையம்மாள், அப்பா பிச்சாண்டிபிள்ளை ஆகியோரின் மூத்த மகள். இரண்டு சகோதரர்கள் இரண்டு சகோதரிகள். கொழும்பில் விவேகானந்த மேட்டில் பிறந்தவர். ஸ்ரீகதிரேசன் வீதி, புனித மரியாள் பாடசாலையில் முதலில் படித்தார். பிறகு நெல் வீதி அரசினர் மத்திய மகா வித்தியாலயத்திற்கு படிக்கும் போது நடித்த "கண்ணகி" நாடகத்தை பார்த்த வானொலி நாடகத்தயாரிப்பாளர் "சானா" இவரை வானொலி நாடகங்களில் நடிக்க அழைத்தார்.
கலைக்குடும்பம் - இவரது கணவரான சி. சண்முகமும் இலங்கை வானொலியின் அறிவிப்பாளராக இருந்ததோடு வர்த்தக சேவையில் ஒலிபரப்பான ஏராளமான தனி நாடகங்கள், தொடர் நாடகங்கள் என்பனவற்றையும் மேடை நாடகங்களையும் எழுதியவர். இவர்களது பிள்ளைகளான சந்திரமோகன், சந்திரகாந்தன் இருவருமே வானொலி அறிவிப்பாளர்களாக சமகாலத்தில் இருந்தவர்கள். மகள் வசந்தி வானொலி மேடை நாடகங்களில் நடித்தவர்.
வானொலி நிகழ்ச்சிகள் - சானா சண்முகநாதன் காலத்திலிருந்து பி.விக்னேஸ்வரன் காலம் வரை வானொலி நாடகங்களில் நடித்தவர். இவர் நடித்த முதல் வானொலி நாடகம் என். எஸ். எம். இராமையாவின் "விடிவெள்ளி" என்பதாகும். வானொலியில் ´பொதிகைத் தென்றல்´ என்ற இலக்கியச் சுவையுள்ள நிகழ்ச்சியை தயாரித்து வழங்கியவர்.
மேடை நாடகங்கள் - சானாவின் நெறியாள்கையில் "அசட்டு வேலைக்காரன்", முருகையனின் ":விடியலை நோக்கி", சுஹேர் ஹமீட்டின் நெறியாள்கையில் "தேரோட்டி மகன்", சி. சண்முகத்தின் "ஸ்புட்னிக் சுருட்டு".
மறைவு - இராஜேசுவரி சண்முகம் யாழ்ப்பாணம் சென்று கொழும்பு திரும்புவதற்காக புறப்பட்ட வேளையில், மாரடைப்பு ஏற்பட்டு யாழ்ப்பாண வைத்தியசலையில் அனுமதிக்கப்பட்டு அங்கு காலமானார். (http://www.adaderana.lk/tamil/news.php?nid=23980)
நினைவலைகளில் சிரேஸ்ட வானொலி அறிவிப்பாளர் இராஜேஸ்வரி சண்முகம்
இலங்கை வானொலியின் மூத்த அறிவிப்பாளர் இராஜேஸ்வரி சண்முகம் மறைவு!
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் மூத்த வானொலி அறிவிப்பாளர் வானொலிக்குயில் திருமதி இராஜேஸ்வரி சண்முகம் இன்று காலமாகிவிட்டார். தமிழ் வானொலிகளின் வரலாற்றில் தனக்கென தனியிடம் பதித்துள்ள ராஜேஸ்வரி சண்முகம் யாழ்ப்பாணத்தில் இன்று காலமானதாக உறவினர்கள் தெரிவித்தனர். அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும் என உறவினர்கள் தெரிவித்தனர். ராஜேஸ்வரி சண்முகம் உலகப் புகழ் பெற்ற தமிழ்ப் பெண் அறிவிப்பாளர்களில் முன்னணியில் திகழ்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. (உலகத் தமிழர்.காம் 24/04)
@@@@@@
வானொலிக் குயில் இராஜேஸ்வரி சண்முகம் காலமானார்
வானொலிக் குயில் என்று செல்லமாய் அனைவராலும் அறியப்பட்ட திருமதி இராஜேஸ்வரி சண்முகம் இன்று காலமாகிவிட்டார். இலங்கை வானொலி வரலாற்றில் தனக்கென தனியிடம் பதித்துள்ள அன்னார் யாழ்ப்பாணத்தில் இன்று காலமானதாக உறவினர்கள் தெரிவித்தனர். அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும் என உறவினர்கள் தெரிவித்தனர். (அதரெண.காம் 24/03)
@@@@@@
வானொலிக் குயில் இராஜேஸ்வரி சண்முகம் காலமானார்!
வானொலிக் குயில் என்று செல்லமாய் அனைவராலும் அறியப்பட்ட திருமதி இராஜேஸ்வரி சண்முகம் இன்று காலமாகிவிட்டார்.
இலங்கை வானொலி வரலாற்றில் தனக்கென தனியிடம் பதித்துள்ள அன்னார் யாழ்ப்பாணத்தில் இன்று காலமானதாக உறவினர்கள் தெரிவித்தனர்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும் என உறவினர்கள் தெரிவித்தனர். (படலை.காம் 24/03)
@@@@@@
இலங்கை வானொலி அறிவிப்பாளர் ராஜேஸ்வரி சண்முகம் மரணம்
பிரபல அறிவிப்பாளர் இராஜேஸ்வரி சண்முகம் காலமானார்!இலங்கை வானொலியின் பிரபல அறிவிப்பாளர் ராஜேஸ்வரி சண்முகம் இன்று காலமானார். (தமிழ்வெளி.காம் 24/03)
@@@@@@
புங்குடுதீவைப் புகுந்த இடமாகக் கொண்ட சிரேஸ்ட வானொலி அறிவிப்பாளர் இராஜேஸ்வரி சண்முகம் காலமானார்
வானொலிக்குயில் என்று செல்லமாக அழைக்கப்படும், பிரபல வானொலி அறிவிப்பாளர் இராஜேஸ்வரி சண்முகம் இன்று காலமானார்
தமிழ் வானொலி வரலாற்றில் இராஜேஸ்வரி சண்முகம் என்கிற இந்தப் பெயர் காலத்தால் அழிக்க முடியாத ஒரு வரலாறு. இராஜேஸ்வரி சண்முகம் அவர்கள் இலங்கை வானொலியில் 35வருடங்களுக்கு மேலாக பணியாற்றினார்.
கொழும்பை பிறப்பிடமாக கொண்ட இராஜேஸ்வரி சண்முகம் இலங்கை வானொலியில் ஒலிபரப்பான நாடகங்களில் யாழ்ப்பாண பேச்சு வழக்கில் பேசி பாராட்டை பெற்றவராவார். சிறந்த செய்தி வாசிப்பாளராகவும், நிகழ்ச்சி தயாரிப்பாளராகவும் திகழ்ந்த இராஜேஸ்வரி சண்முகம் இன்றைய இளையதலைமுறை ஒலிபரப்பாளர்களுக்கு முன்னோடியாக திகழ்ந்தார்.
அன்னாரின் இழப்பு ஈடுசெய்ய முடியாதது. (புங்குடுதீவு.காம் 24/03)
@@@@@@
சிரேஸ்ட வானொலி அறிவிப்பாளர் இராஜேஸ்வரி சண்முகம் காலமானார்
வானொலிக்குயில் என்று செல்லமாக அழைக்கப்படும், பிரபல வானொலி அறிவிப்பாளர் இராஜேஸ்வரி சண்முகம் இன்று காலமானார்
தமிழ் வானொலி வரலாற்றில் இராஜேஸ்வரி சண்முகம் என்கிற இந்தப் பெயர் காலத்தால் அழிக்க முடியாத ஒரு வரலாறு. இராஜேஸ்வரி சண்முகம் அவர்கள் இலங்கை வானொலியில் 35வருடங்களுக்கு மேலாக பணியாற்றினார்.
கொழும்பை பிறப்பிடமாக கொண்ட இராஜேஸ்வரி சண்முகம் இலங்கை வானொலியில் ஒலிபரப்பான நாடகங்களில் யாழ்ப்பாண பேச்சு வழக்கில் பேசி பாராட்டை பெற்றவராவார். சிறந்த செய்தி வாசிப்பாளராகவும், நிகழ்ச்சி தயாரிப்பாளராகவும் திகழ்ந்த இராஜேஸ்வரி சண்முகம் இன்றைய இளையதலைமுறை ஒலிபரப்பாளர்களுக்கு முன்னோடியாக திகழ்ந்தார்.
அன்னாரின் இழப்பு ஈடுசெய்ய முடியாதது.
இரண்டாம் இணைப்பு:
யாழ்ப்பாணத்தில் வைத்து மாரடைப்பால் காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் காலை நேர நிகழ்ச்சியான பொங்கும் பூம்புனல் உட்பட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை திறம்பட வழங்கியதில், ராஜேஸ்வரி சண்முகம் பிரபல்யம் பெற்று விளங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணத்துக்கு சென்று கொழும்பு திரும்புவதற்காக புறப்பட்ட வேளையில், அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு காலமானார். அவரின் பூதவுடல் தற்போது யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. (வாகீசம்.காம் 24/03)
@@@@@@
வானொலிக் குயிலின் குரல் ஓய்ந்தது
வானொலிக்குயில் என்று செல்லமாக அழைக்கப்படும், பிரபல வானொலி அறிவிப்பாளர் இராஜேஸ்வரி சண்முகம் நேற்று (24.03.2012) வெள்ளிக்கிழமை தனது 72ஆவது வயதில் காலமாகியுள்ளார்.
கொழும்பை பிறப்பிடமாக கொண்ட இவர் யாழ்ப்பாணத்துக்கு வருகைதந்து கொழும்பு திரும்புவதற்காக புறப்பட்ட வேளையில், அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையிலேயே காலமாகியுள்ளார்.
தமிழ் வானொலி வரலாற்றில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்த இராஜேஸ்வரி சண்முகம் இலங்கை வானொலி சேவையில் 35வருடங்களுக்கு மேலாக பணியாற்றியுள்ளார்.
அறிவிப்பாளர் இராஜேஸ்வரி சண்முகம் இலங்கை வானொலியில் ஒலிபரப்பான நாடகங்களில் யாழ்ப்பாண பேச்சு வழக்கில் பேசி பலரது பாராட்டையும் பெற்றதுடன், சிறந்த செய்தி வாசிப்பாளராகவும், நிகழ்ச்சி தயாரிப்பாளராகவும் கடமையாற்றி இளைய தலைமுறை ஒலிபரப்பாளர்களுக்கு முன்னோடியாக திகழ்ந்தார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர். (Jaffnatoday.com 24/03)
Friday, March 23, 2012
இலங்கை வானொலி அறிவிப்பாளர் ராஜேஸ்வரி சண்முகம் மரணம்
பிரபல அறிவிப்பாளர் இராஜேஸ்வரி சண்முகம் காலமானார்!
இலங்கை வானொலியின் பிரபல அறிவிப்பாளர் ராஜேஸ்வரி சண்முகம் இன்று காலமானார். ‘வானொலிக் குயில்’ என்று எல்லோராலும் அழைக்கப்படும் ராஜேஸ்வரி சண்முகம் அவர்கள் இலங்கைவானொலியில் 35வருடங்களுக்கு மேலாக பணியாற்றினார்.
கொழும்பை பிறப்பிடமாக கொண்ட ராஜேஸ்வரி சண்முகம் இலங்கை வானொலியில் ஒலிப்பரப்பான நாடகங்களில் யாழ்ப்பாண பேச்சு வழக்கில் பேசி பாராட்டை பெற்றவராவார். சிறந்த செய்தி வாசிப்பாளராகவும், நிகழ்ச்சி தயாரிப்பாளராகவும் திகழ்ந்த ராஜேஸ்வரி சண்முகம் இன்றைய இளையதலைமுறை ஒலிபரப்பாளர்களுக்கு முன்னோடியாக திகழ்ந்தார். (தினக்கதிர் 23/03)
கொழும்பை பிறப்பிடமாக கொண்ட ராஜேஸ்வரி சண்முகம் இலங்கை வானொலியில் ஒலிப்பரப்பான நாடகங்களில் யாழ்ப்பாண பேச்சு வழக்கில் பேசி பாராட்டை பெற்றவராவார். சிறந்த செய்தி வாசிப்பாளராகவும், நிகழ்ச்சி தயாரிப்பாளராகவும் திகழ்ந்த ராஜேஸ்வரி சண்முகம் இன்றைய இளையதலைமுறை ஒலிபரப்பாளர்களுக்கு முன்னோடியாக திகழ்ந்தார். (தினக்கதிர் 23/03)
@@@@@@
பிரபல அறிவிப்பாளர் திருமதி ராஜேஸ்வரி சண்முகம் காலமானார்
பிரபல வானொலி அறிவிப்பாளர் திருமதி ராஜேஸ்வரி சண்முகம் (Rajeshwari Shanmugam) இன்று காலமானார். சுகயீனமுற்று யாழ். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த வானொலிக்குயில் இன்று மாலை குரலடைத்திருக்கிறது. வானொலித்துறையில் நீண்டகால அனுபவமுள்ள ராஜேஸ்வரி சண்முகத்தின் இழப்பு ஈடுசெய்ய முடியாததாகும்.
"வானொலிக் குயில்" என்று செல்லமாய் எல்லோராலும் அழைக்கப்படும் ராஜேஷ்வரி சண்முகம் அவர்களின் இறுதிக் கிரியைகள் பற்றி பின்னர் அறிவிக்கப்படும். (தமிழ் மிரர் 23/03)
"வானொலிக் குயில்" என்று செல்லமாய் எல்லோராலும் அழைக்கப்படும் ராஜேஷ்வரி சண்முகம் அவர்களின் இறுதிக் கிரியைகள் பற்றி பின்னர் அறிவிக்கப்படும். (தமிழ் மிரர் 23/03)
@@@@@@
சிரேஸ்ட அறிவிப்பாளர் ராஜேஸ்வரி சண்முகம் காலமானார்
வானொலிக்குயில் என்று செல்லமாக அழைக்கப்படும், பிரபல வானொலி அறிவிப்பாளர் ராஜேஸ்வரி சண்முகம் (Rajeshwari Shanmugam) இன்று காலமானார்
தமிழ் வானொலி வரலாற்றில் ராஜேஸ்வரி சண்முகம் என்கிற இந்தப் பெயர் காலத்தால் அழிக்க முடியாத ஒரு வரலாறு.
தமிழ் நாட்டில் தூத்துக்குடியில் பிறந்த இவர், சிறு வயதிலேயே இலங்கைக்கு வந்து வாழத் தொடங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
(தமிழ்வின்.காம் 23/03)
அவரது குரலினைக் கேட்க இங்கு சொடுக்கவும்
Subscribe to:
Posts (Atom)






