Monday, November 28, 2022

Broadcasting related definitive stamp from India Post!



இரண்டு வகையான அஞ்சல் தலைகளை இந்திய அஞ்சல் துறை வெளியிட்டு வருகிறது. அவை Commemarative Stamp and Definitive Stamp. 1988ல் தொலைக்காட்சி ஒளிபரப்பினை மையப்படுத்தி இந்த definitive அஞ்சல் தலையை 40 பைசாவுக்கு வெளியிட்டது. தற்பொழுது மீடியா தொடர்பான அஞ்சல் தலை சேகரிப்பாளர்கள் மத்தியில் மிகவும் விரும்பி வாங்கும் அஞ்சல் தலையாக இது உள்ளது. 40 பைசா அஞ்சல் தலை இன்று ரூ.10.00 க்கு விற்கப்படுகிறது. அடேங்கப்பா! எத்தனை மடங்கு அதிகமாகிவிட்டது!!

There are two types of postage stamps issued by the Indian Postal Department. They are Commemorative Stamp and Definitive Stamp. In 1988, the definitive postage stamp was issued for 40 paise, focusing on television broadcasts. It is currently the most sought-after stamp among media-related stamp collectors. A 40 paisa stamp is selling for Rs.10.00 today. Atengappa! How many times more!!
Credit: @hazeemmohammed

#indiapost #broadcasting #stamp #philatelic #philatelist #philately #tv #dish #transmitter

Saturday, November 26, 2022

First Special Cover for Community Radio / சமுதாய வானொலிக்காக, முதல் சிறப்பு அஞ்சல் உறை







India Post released a lot of special covers on Radio, but for the community radio, this is the first special cover dedicated to  Community Radio, which is run by an NGO called Snehapoorvam Educational Trust from Thrissur. 'My Radio 90 FM' starts broadcast on Nov. 1, 2022 from Poothole, Kerala.

இந்திய அஞ்சல் துறை  வானொலி தொடர்பாக  நிறைய சிறப்பு அஞ்சல் உறைகளை  வெளியிட்டுள்ளது, ஆனால் சமுதாய  வானொலிக்காக, முதல் சிறப்பு அஞ்சல் உறையை MY RADIO 90 FMக்காக வெளியிட்டது. இது திருச்சூரில் இருந்து சிநேகபூர்வம் கல்வி அறக்கட்டளை என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தால் நடத்தப்படுகிறது. 'மை ரேடியோ 90 எஃப்எம்' நவம்பர் 1, 2022 அன்று கேரளாவின் பூத்தோலில் இருந்து ஒலிபரப்பைத் தொடங்கியது.

(Credits to  @writingfromthewonderland )

Friday, November 04, 2022

மோர்ஸ் கீ ஸ்டாம்ப் | Stamp on Morse Key


கடந்த இரண்டு மாதங்களாக, இந்த அஞ்சல் தலை ஆஸ்திரேலியாவில் வெளியானதில் இருந்து வாங்க வேண்டும் என இருந்தேன். ஆனால், ஒரு அஞ்சல் தலையை வாங்க நாம் ரூ.1200 செலவு செய்ய வேண்டியதாக இருந்தது. அஞ்சல் தலையின் விலை என்னவோ ரூ.60 தான், ஆனால் அஞ்சல் செலவும், கஸ்டம்ஸ் டூட்டியும் விலையை எகிரச் செய்கிறது. எதற்கு அவ்வளவு செலவு செய்ய வேண்டும் என யோசித்துக் கொண்டு இருந்தேன். 
ஆனால் ஆச்சர்யம் பாருங்கள் போஸ்ட்கிராசிங் ஊடாக ஆஸ்திரேலியாவில் இருந்து சகோதரி  கேத்தரின், நம் ஆர்வத்தினை அறிந்து, நாம் கேட்காமலேயே வாங்கி அனுப்பிவிட்டார்.

மீண்டும் ஒரு முறை நிரூபிக்கப்பட்டுள்ளது, உங்களுக்கு தேவையான ஒன்று, சரியான நேரத்தில் உங்களை வந்தடைந்தே தீரும். தேவையற்றது, யார் தடுத்தாலும்  விலகியேத் தீரும். யாரும், எதையும் நமக்கு கிடைக்க வேண்டிய ஒன்றைத்  தடுக்கவியலாது. கிடைக்க வேண்டிய நேரத்தில், கிடைத்தேத் தீரும் என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம். 

A few postcards will surprise us. That kind of thing is this Maximum card from Australia. Thank you Katherine for this lovely Morse Key stamp and postcard.


Wednesday, September 14, 2022

உடுமலையில் நரி வேட்டை (FOX HUNT)

 


நரி வேட்டை என்ற வார்த்தையைக் கேள்விப்பட்டு இருக்கிறீர்களா? வரும் அக்டோபர் 2, 2022 அன்று இந்த நரி வேட்டை உடுமலைப் பேட்டையில் நடைபெற உள்ளது. உடுமலைப் பேட்டையில் எங்கே நரிகள் உள்ளது? என்று ஆச்சரியப்பட வேண்டாம். நரி வேட்டைக்கும் வானொலிக்கும் ஒரு தொடர்புள்ளது. இங்கு நரி என்பது வானொலி ஒலிபரப்பிகளைக் (டிரான்ஸ்மிட்டர்). குறிக்கும். ஹாம் வானொலியில் இது ஒரு வகையான விளையாட்டு ஆகும்.

டிரான்ஸ்மிட்டர் வேட்டை (டி-வேட்டை, என்றும் அறியப்படுகிறது), இதில் பங்கேற்பாளர்கள் ரேடியோ திசைக் கண்டறியும் ஆன்டனாக்களைப் பயன்படுத்தி ஒரு குறிப்பிட்டத் பகுதியில் மறைந்திருக்கும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட ரேடியோ டிரான்ஸ்மிட்டர்களைக் கண்டறியும் ஒரு செயலாகும். இந்த செயல்பாடு ஹாம் (அமெச்சூர்) வானொலி ஆர்வலர்களிடையே மிகவும் பிரபலமானதாகக் உள்ளது. இது தான் வரும் அக்டோபர் 2, 2022 அன்று உடுமலை அமேச்சூர் கிளப்பால் நடத்தப்படுகிறது. மேலதிக விபரங்களுக்கு 99655 61041.

Friday, September 09, 2022

ராணி இரண்டாம் எலிசபெத்: ரேடியோ எச்சரிக்கை ஒலிபரப்பு ‘(Radio Alert Transmission – RATS)’


ரேடியோ அலர்ட் முதல் ஆபரேஷன் லண்டன் பாலம் வரை, ராணி இரண்டாம் எலிசபெத் இறப்பும் வானொலியும்

'ஆபரேஷன் லண்டன் பாலம்'

 'ஆபரேஷன் லண்டன் பிரிட்ஜ்' என்ற மாபெரும் நடவடிக்கை கடந்த ஆண்டு செப்டம்பரில் பத்திரிகைகளுக்கு கசிந்தது. ராணி இறந்த சில மணி நேரங்களில் என்ன நடக்கும் என்பதை இது விவரிக்கிறது. இந்த "ஆவணங்கள்" இங்கிலாந்தின் பொலிட்டிகோ என்ற செய்தி நிறுவனத்திற்கு முதலில் கசிந்தன, இதனை கேள்விக்குரிய நாள், அதாவது  "டி-டே" என்றும் அழைக்கப்படுகிறது.

அவரது இறுதிச் சடங்கிற்கு முன்னதாக, கூட்டத்தைக் கட்டுப்படுத்தவும், பயணக் குழப்பம் ஏற்படுவதை தவிற்கவும் மிகப்பெரிய பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. நூறாயிரக்கணக்கான மக்கள் தலைநகருக்குச் செல்வதால், லண்டனில் கூட்ட நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது.

இறுதிச் சடங்கின் நாள் தேசிய துக்க நாளாக இருக்கும். முன்னதாக ராணியின் மரணச் செய்தியை அதிகாரிகள் தெரிவித்த பிறகு, ரேடியோ எச்சரிக்கை ஒலிபரப்பு '(Radio Alert Transmission – RATS)' மூலம் பத்திரிகையாளர் சங்கம் மற்றும் பிபிசிக்கு தெரிவிக்கப்பட்டது.

ராணி இறப்பினை ஒட்டி சிறப்பு ஒலிபரப்பிற்கு பிபிசி ஏற்பாடு செய்துள்ளது. சிற்றலை வானொலி ஒலிபரப்பினை 15620, 15400, 12065, 11805, 11685, 7325, 6155, 5945 மற்றும் மத்திய அலை 1413 கி.ஹெ கேட்கலாம். இணையத்தில் https://www.bbc.co.uk/sounds நேரலையில் கேட்கலாம்.





Sunday, July 31, 2022

செஸ் ஒலிம்பியாட் சதுரங்கப் போட்டி அஞ்சல் தலை

44th FIDE Chess Olympiad Chennai 2022


Inline image

Inline image



அஞ்சல் தலை சேகரிப்பு என்பது ஏதோ குழந்தைகள் மட்டுமே சேகரிப்பது என்று ஒரு பொது புத்தியுள்ளது.  அது அப்படியானதல்ல. இதில் கிடைக்கும் பொது அறிவு அளப்பரிய ஒன்று. 


மாமல்லபுரத்தில் நடைப்பெற்றுக்கொண்டு இருக்கின்ற சதுரங்கப் போட்டியை மையப்படுத்தி இந்திய அஞ்சல் துறை வெளியிட்டுள்ள இந்த முதல் நாள் கடித உறை (first day cover), சிறப்பு அஞ்சல் தலை, முதல் நாள் முத்திரை ஆகியவை தற்பொழுது அண்ணா சாலை, அஞ்சல் தலை சேகரிப்பு மையத்தில் (Philatelly Beurue) ரூ.5க்கு கிடைக்கிறது (அஞ்சல் தலை மட்டும்).


சென்னையில் பிரமாண்டமாக நடந்த வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வு என்பதால், இந்த அஞ்சல் உறை மற்றும் அஞ்சல் தலையை மறவாமல் வாங்கி வைத்துக்கொள்ளுங்கள். நாளை இதன் மதிப்பு நீங்களே எதிர்பாராத வகையில் மாறும் என்பதில் ஐயமில்லை.


#chess #stamp #olympiad #philatelist #fdc #indiapost #firstdaycover #cancellation

Wednesday, July 20, 2022

Centenary of Sound Recording


Inline image


The Routledge companion to radio and podcast studies


Inline image


வானொலித் தொடர்பாக மற்றும் ஒரு முக்கிய புத்தகத்தினை ரட்லெட்ஜ் (Routledge) பதிப்பகம் கடந்த மாதம் வெளியிட்டுள்ளது. நான் பல வருடங்களாக சொல்லி வந்ததையே இந்த புத்தகத்தின் தலைப்பாக வைத்துள்ளனர்.

வானொலி என்றுமே தமக்கான வெளியைக் கட்டமைத்துக்கொள்ளும் என்பதற்கு இந்த The Routledge companion to radio and podcast studies எனும் தலைப்பே உதாரணம்.

அடுத்தகட்டத்திற்கு எப்படி வானொலி பயணித்துள்ளது என்பதை உலகம் முழுவதும் இருந்து பல ஆய்வாளர்களும் விரிவான கட்டுரைகளை இதில் எழுதியுள்ளனர்.

இந்தியாவில் இருந்து ஹைத்ராபாத் பல்கலைக்கழத்தின் வினோத் பவ்ரளா, கஞ்சன் மாலிக் குழு ஒரு சிறப்பான கட்டுரையை வடித்துள்ளனர்.

சமூக ஊடக காலத்திலும் வானொலிக்கு ஒரு இடம் நிச்சயம் உண்டு என்பதற்கு இந்த நூல் ஒரு சான்று.

தொடக்க கால வானொலியில் இருந்து இன்றைய பாட்காஸ்டிங் வரை எப்படி தன்னை தகவமைத்துக் கொண்டது என்பதை விரிவாக அலசுகிறது இந்த புத்தகம். 

தொகுத்த மியா லின்க்ரெம் மற்றும் ஜெசன் லெவ்கிலியோவுக்கும், வெளியிட்ட ரட்லெட்ஜ் பதிப்பகத்திற்கும் வாழ்த்துகள்.

Tuesday, July 19, 2022

World Listening Day


Inline image



Every year on July 18th, World Listening Day encourages people to take time to listen to the sounds of nature. It's also a day to learn more about field recording.

Listening plays an important role in understanding one another. Listening is also important when trying to understand the world around us. Learning about the relationship between humans and their environment through sound is called acoustic ecology.

You probably hear sounds in your natural environment every day. These sounds might include the rustling of leaves in the wind. The babbling of a brook nearby. Birds singing as the sun rises. Some sounds might be annoying and others more soothing. Acoustic ecologists take sound listening to another level. They take time to really listen to the sounds and interpret their meanings. When sounds begin to change over time, it might indicate there are changes in the environment. When animal sounds begin to disappear it might mean they are losing their habitat.

Those who record these kinds of sounds engage in a practice called field reporting. Some who do this lie on the ground listening for hours at a time. They also travel to different kinds of environments to record sounds. These environments might include forests, deserts, plains, oceans, and mountains. Some also do field recording in urban areas. Those in cities might listen to see how noise pollution is changing the environment. Field reporters know that sounds in any environment are trying to communicate something. All they need to do is stop and listen.

Artists, scientists, ecologists, and others who want to better understand the world's natural environment hold a variety of events on this day. These events include educational seminars, listening parties, and special performances. To participate:

Go outside and take time to listen to the sounds of the world around you.
Learn more about field recording and try to record some natural sounds in the outdoors.
Read the book, "The Tuning of the World" by R. Murray Schafer.
Watch videos online about field recording.
Spread awareness for this day on social media

In 2010, the WLP created World Listening Day. They chose July 18th to commemorate R. Murray Schafer's birthday. Schafer is a renowned Canadian composer, author, and environmentalist. He is best known for his studies on acoustic ecology.

Most people do not listen with the intent to understand; they listen with the intent to reply.

When people talk, listen completely. 

The world is giving you answers each day.Learn to listen.

Happy World Listening Day  🎧

Credit: Jeganath Mani, Stamp Today WG

Tuesday, July 12, 2022

Thursday, June 30, 2022

வானொலி நாளை

தமிழின் வளர்ந்துவரும் முக்கிய ஊடகமான TN MEDIA 24ல் வானொலி தொடர்பாக மூன்று பாகங்கள் கொண்ட நீண்ட பேட்டியினை நண்பர் நேசகானம்  Praba Karan அவர்கள் எடுத்தார்கள்.  அதில் Public Service Broadcasting, All India Radio, External Service, Shortwaves, FM, Internatinal Radio, DAB, DRM, SDR, Ham Radio, Community Radio, Podcasting, Private Radio உள்ளிட்ட இன்னும் பல தலைப்புகளில் பேசியுள்ளோம். அதன் முதல் பகுதியை இந்த தொடுப்பில் கேட்கலாம்.


https://m.youtube.com/watch?v=_rX0oe5S_GU


#PublicServiceBroadcasting, #AllIndiaRadio, #ExternalService, #Shortwaves, #FM, #InternatinalRadio, #DAB, #DRM, #SDR, #HamRadio, #CommunityRadio, #Podcasting, #PrivateRadio #dxing #dx #sw #mw

Inline image

Inline image


Wednesday, March 02, 2022

மார்ஷல் ரோட்டின் வானொலி Audio visual media in Chennai


Inline image



Chennai Book Fair 2022


வரலாற்றினை இன்று சுவாரஷ்யமாக சொல்லுவது ஒரு கலையாகி வருகிறது. சென்னையைப் பற்றி பல புத்தகங்கள் வெளிவந்தாலும், இந்த மூன்று பாகங்கள் கொண்ட "Madras: A 400 year record of the first city of Madras India" தனித்துவமானது. இதனை திரு.எஸ்.முத்தையா தொகுத்துள்ளார்.


இதில் என்னை கவர்ந்த கட்டுரை, சென்னையில் வானொலி வந்த வரலாற்றினைப் பல முக்கியத் தகவல்களுடனும், ஆதாரத்துடனும் பதிவு செய்துள்ளார் திரு.சி.ஆர்.ராமசாமி. 


நானூக் கட்டடம் இருந்த இடத்தினையும், மார்ஷல் சாலையையும் இன்றும் கடக்கும் போது, இந்த புத்தகத்தினை மறக்க முடியாது. கொஞ்சம் விலை அதிகம், என்றாலும் அத்தனை தகவல்களுக்கும், விலை ஒரு பொருட்டல்ல. பழனியப்பா பிரதர்ஸ் வெளியிட்டுள்ளார்கள்.


#சென்னைபுத்தககாட்சி #வானொலி #மார்ஷல்ரோடு #அகிலஇந்தியவானொலி #chennaibookfair 

Sunday, February 20, 2022

வானொலியின் கதை

சென்னைப் புத்தகக் காட்சியில் (2022) இந்த வருடம் கண்ணில் பட்ட முதல் வானொலி புத்தகம் ஞா.மாணிக்கவாசகன் எழுதிய "வானொலியின் கதை". புத்தகத்தின் விலை ரூ.40/- மட்டுமே. 


புத்தகத்தின் சிறப்புகளில் ஒன்று "வானொலி" இதழின் முக்கியப்பக்கங்களை ஆவணப்படுத்தியுள்ளது. குறிப்பாக 1938-ம் வருஷம் ஜூன் மாதம் 16-ம் தேதி வியாழக்கிழமை சென்னை வானொலி நிலையம் - முதல் நாள் நிகழ்ச்சிகளின் அட்டவணையை அப்படியே வானொலி இதழில் இருந்து நகல் எடுத்து வழங்கியுள்ளார் ஆசிரியர். 


சமீபத்தில் தொடங்கப்பட்ட அரசு மற்றும் தனியார் பண்பலை வானொலிகளின் முதல் நாள் ஒலிபரப்பு இப்படி ஆவணப்படுத்தப்பட்டுள்ளதா? என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டும். 1938-ல் இதனை ஆவணப்படுத்தியுள்ளனர். 


சமீபகாலமாக வானொலியை என்ன செய்து கொண்டு இருக்கிறோம் என்பதையும் ஒப்பீடு செய்து தெரிந்து கொள்ளலாம். வரலாறு நம் கண் முன்னே அழிக்கப்பட்டுக்கொண்டு இருக்கிறது.


"ரேடியோ ரிப்பேர் செய்வது எப்படி?" என்ற தலைப்புகளில்  நூல்கள் வந்துள்ள அளவுக்கு ரேடியோ பற்றிய நூல்கள் வரவில்லையே என்ற ஆதங்கம் தான் ஞா.மாணிக்கவாசகனை இந்த நூலினை எழுதத் தூண்டியதாம். அதுவே எனக்கும்!


அரங்கில் நூல் கிடைக்கும் இடம் உமா பதிப்பகம். வானொலி ஆர்வலர்களும், இதழியல் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களும் அரங்கினை தேடி கண்டுபிடித்துக் கொள்வார்கள்!



Inline image



#வானொலி #வானொலியின்கதை #சென்னைப்புத்தகக்காட்சி #chennaibookfair #radio #book

Tuesday, February 15, 2022

வானொலி தொடர்பான மூன்று புத்தகங்கள்

 

 பல்கலைக் கழக மானியக் குழு வைக்கும் தேசிய தகுதித் தேர்வில் (National Eligibility Test) வானொலி புத்தகங்கள்  தொடர்பாக ஒரு கேள்வி கேட்கப்பட்டது குறித்து சமீபத்தில் எழுதியிருந்தேன்.

அதில், வானொலித் தொடர்பான புத்தகங்களை எழுதிய திரு.கோ.செல்வம் (உங்கள் வானொலி), திரு.வெ.நல்லதம்பி (உலகமேலாம் தமிழோசை) மற்றும் தங்க.ஜெய்சக்திவேல் எழுதிய  "உலகவானொலிக
ள்" உள்ளிட்ட புத்தகங்களில் "உலக வானொலிகள்" புத்தகத்தினை தவிர மற்ற இரண்டு புத்தகங்களை பற்றி எந்த விபரமும் இணையத்தில் கிடைக்கவில்லை என்று JNU தமிழ் துறை மாணவர் தமிழ் பாரதி கேட்டிருந்தார். அவருக்காக இந்தப் பதிவு.

 

வானொலி நிகழ்ச்சி தயாரிப்பு பற்றி இலங்கையில் பிறந்து, பிற்காலத்தில் இந்தியாவில் வசித்த சிவ பாதசுந்தரம் எழுதிய "ஒலிபரப்புக் கலை" புத்தகத்திற்கு பிறகு நீண்ட காலமாக வானொலி நிகழ்ச்சி தயாரிப்புக்காக எந்த ஒரு புத்தகமும் வெளியாகவில்லை.

அந்த குறையைப் போக்க வந்த புத்தகம் தான் இந்த கோ.செல்வம் அவர்கள் எழுதிய "உங்கள் வானொலி". 300 பக்கங்களுக்கும் மேல், விரிவாக எழுதப்பட்ட இந்த புத்தகம் தான் ஒரு காலத்தில் வானொலி இதழியல் பயில்வோருக்கு கையேடாக இருந்தது. இன்று இந்த புத்தகம் விற்பனைக்கு கிடைக்கவில்லை என்பது ஒரு வருத்தமான செய்தி.

 


அடுத்து வெ.நல்லதம்பி அவர்கள் எழுதிய "உலகமெலாம் தமிழோசை". இந்த புத்தகம் 2010 வாக்கில் வெளிவந்ததால், ஒரு சில வானொலி ஆர்வலர்களிடம் இருக்க வாய்ப்புண்டு. நமது சர்வதேச வானொலி மாத இதழில் இந்த புத்தகத்தின் மதிப்புரையை எழுதியதால், ஒரு சில நேயர்களும் வாங்கினர். இன்னும் ஒரு சில புத்தக விற்பனையாளர்களிடம் இந்த புத்தகம் கிடைக்க வாய்ப்புள்ளது. சென்னைப் புத்தகக்காட்சியில் துணிந்து தேடலாம்.

இந்த மூன்று புத்தகங்களின் அட்டைப்படத்தினை மாணவர் தமிழ் பாரதிக்காக இங்கே பதிவு செய்கிறேன். "ஒலிபரப்பு கலை" புத்தகத்தினைப் பற்றி விரிவாக மற்றொருப் பதிவில் எழுதுகிறேன்.


Saturday, February 12, 2022

கோடைப் பண்பலையின் உலக வானொலி தின கொண்டாட்டம்

World Radio Day Celebrations-6

Let's celebrate World Radio Day with AIR Kodai FM 100.5. 


கோடைப் பண்பலை (100.5) வானொலியில் நாளை (13-2-2022) ஞாயிறு மதியம் 11.00 மணிக்கு இணைய உள்ளேன். 

வாருங்கள் உலக வானொலி தினத்தினை கோடைப் பண்பலை  வானொலியோடு இணைந்து கொண்டாடுவோம். நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவுள்ள கார்த்திகேயன் அவர்களுக்கும், நிலைய இயக்குநருக்கும் நன்றி!



Inline image


#worldradioday #wrd2022 #Jaisakthivel #ஜெய்சக்திவேல் #உலகவானொலிதினம் #வானொலி #கோடைப்பண்பலை

Friday, February 11, 2022

இணைய வானொலிகளின் நோக்கம் மற்றும் வாய்ப்புகள் / Internet Radio: Purpose and Prospects

World Radio Day Celebrations - 4

Internet Radio: Purpose and Prospects


உலக வானொலி தின கொண்டாட்டங்களில் புது தில்லி நிஸ்கார்ட் அமைப்பு நடத்தவுள்ள வெப்பினாரில் "இணைய வானொலிகளின் நோக்கம் மற்றும் வாய்ப்புகள்" தொடர்பான தலைப்பில் பேச உள்ளேன். வாய்ப்பு இருப்பவர்கள் இணைய வழியில்  கலந்துகொள்ளலாம்.


#niscort #worldradioday #wrd2022 #webinar #jaisakthivel #உலகவானொலிதினம் #வானொலி #வெப்பினார் #ஜெய்சக்திவேல்



Inline image


Thursday, February 10, 2022

உலக வானொலி நாள் சிறப்புக் கருத்தரங்கம்

World Radio Day Celebrations: 3


பன்னாட்டு தமிழ் மற்றும் தொடர்பியல் ஆய்வு மையம்

International Research Centre for Thamizh and Communication Studies(IRCTCS)

தமிழ்நாடு, இந்தியா


உலக வானொலி நாள் சிறப்புக் கருத்தரங்கம்


தலைப்பு 

 "ஆம்! வானொலி இன்று முக்கியமானதும் நம்பகமானதும் ஆகும்"


சிறப்பு பேச்சாளர் :

முனைவர்.தங்க.ஜெய்சக்திவேல்

உதவிப் பேராசிரியர், 

இதழியல் மற்றும் தொடர்பாடல் துறை,

சென்னை பல்கலைக்கழகம்.


நாள் - 13.02.2022

காலை - 10.00மணி


கூகுள் மீட் - 

https://meet.google.com/iuf-rttx-mfk


World Radio Day - Yes To Radio, Yes To Trust



Inline image


#உலகவானொலிதினம் #வானொலி #வெப்பினார் #ஜெய்சக்திவேல்

#WorldRadioDay #unesco #IRCTCS #webinar #jaisakthivel