Tuesday, February 13, 2024

உலக வானொலி நாள் சிறப்பு நிகழ்ச்சிகள்

 





அனைவருக்கும் உலக வானொலி நாள் வாழ்த்துகள்.

இன்றும் நாளையும் பல்வேறு ஊடகங்களில் உலக வானொலி நாள் சிறப்புப் பேட்டியை வழங்கியுள்ளேன்.

இதில் என்ன விஷேசம் எனில், convention ரேடியோவில் இருந்து (அகில இந்திய வானொலி), சமுதாய வானொலி (ஆலயம் எஃப்.எம், சேனா எஃப்.எம்), இளந்தென்றல் (இணைய வானொலி), வாட்ஸப் வானொலி மற்றும் பாட்காஸ்ட் வானொலி என அனைத்து விதமான வானொலிகளிலும் இந்த முறை பேட்டியை வழங்கியுள்ளேன்.

ஒலியின் வடிவங்கள் மாறலாம்!
ஆனாலும் வானொலி, வானொலிதானே?!



Monday, February 12, 2024

அகில இந்திய வானொலிக்கு ஒரு மணி மகுடம்!



பன்முகப் பார்வையில் அகில இந்திய வானொலி புத்தகம் வெளியிட முடிவானதும், அதில் எழுத வேண்டியவர்களின் பெயர் பட்டியலைத் தயாரித்தோம். சொன்னால் நம்பமாட்டீர்கள், 128 பேர் வந்தார்கள்.

யாரையும் விட்டுவிடக்கூடாது என்று அனைவரிடமும் தொடர்ந்து கட்டுரையைக் கேட்டு வந்தோம். அப்படிக் கேட்டவர்களில் ஒரு சிலர் உடனடியாகக் கொடுத்தனர். இன்னும் ஒரு சிலர் எழுதியும் கொடுக்க முடியாமல் போனது.

அப்படியானவர்களுக்காகவே தொகுதி-2 வெளியிடவும் திட்டமிட்டுள்ளோம். யாரேனும் எழுத விரும்பினாலும் எம்மைத் தொடர்பு கொள்ளலாம்.

இதோ 44 முக்கியக் கட்டுரைகளுடன் நூல் நாளை சென்னைப் பல்கலைக்கழகத்தின் இதழியல் துறையில் வெளியிடப்பட உள்ளது. கட்டுரை தலைப்பு மற்றும் எழுதியவர்களின் விபரங்கள்...








Sunday, February 11, 2024

இவுங்க தா சார் இன்னைக்கும் ரேடியோ கேட்குறாங்க!






 உலக வானொலி நாளினையொட்டி "யார் சார் இன்னைக்கு ரேடியோ கேட்குறாங்க? தொகுப்பில் சென்னையின் 16 முக்கிய நேயர்களை ஆவணப்படுத்தியுள்ளோம்

இயந்திர கதியில் இயங்கும் சென்னை போன்ற மெட்ரோ நகரத்தில், இன்றும் லட்சக்கணக்கான வானொலி நேயர்கள் உள்ளனர், அவர்களில் ஒரு பானை சோற்றுக்கு ஒரு பதம் தான் இந்த நேயர்கள்!

யார், யார் அந்தப் பட்டியலில்...
இந்த வலைப்பூவில் (blog) அவர்களின் பெயர் பட்டியலைக் காணலாம்.

வரும் 13 பிப்ரவரி 2024, சென்னைப் பல்கலைக்கழகத்தின் இதழியல் துறையில் காலை 10.00 மணிக்கு இந்த நூல் அந்த நேயர்களின் முன்னிலையிலேயே  வெளியிடப்படுகிறது. அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.

Wednesday, February 07, 2024

இன்னைக்கு யார் சார் ரேடியோ கேட்குறாங்க?



முதல் முறையாக உலக வானொலி நாளில் இரண்டு புத்தகங்களை வெளியிடுகிறோம் என எற்கனவே பதிவிட்டிருந்தேன்.

இரண்டாவது புத்தகத்தின் தலைப்பே சுவரஷ்யமானது. "யார் சார் இன்னைக்கு ரேடியோ கேட்குறாங்க? இது பல வானொலி நேயர்களும் அடிக்கடி எதிர்கொள்ளும் கேள்வி. அந்த கேள்விகளுக்கு பதில் தான் இந்த புத்தகம். இன்றும் இத்தனை நல்லுள்ளங்கள் வானொலியைக் கேட்கிறது.

இந்த புத்தகத்தில் முக்கிய வானொலி நேயர்களை ஆவணப்படுத்தி உள்ளார்கள் எங்களின் இதழியல் துறை மாணவர்கள். மிக முக்கிய புத்தகமாக நான் இதைக் கருதுகிறேன்.

இரண்டாவது புத்தகத்தினை வெளியிட இந்தியாவின் முதல் சமுதாய வானொலியின் இயக்குநர் முனைவர் ஆர்.ஸ்ரீதர் அவர்களும், பெற்றுக்கொள்ள கோடைப் பண்பலையின் மேனாள் நிகழ்ச்சித் தலைவர் முனைவர் பழ.அதியமான் அவர்களும் இசைவு தந்துள்ளார்கள்.

அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். குறிப்பாக சென்னைப் பகுதி வானொலி நேயர்களுக்கு ஒரு ஆச்சர்யம் காத்திருக்கிறது. மறவாமல் வந்துவிடுங்கள்.


Monday, February 05, 2024

பன்முகப் பார்வையில் அகில இந்திய வானொலி புத்தக வெளியீடு

 

உலக வானொலி தினத்தில் இந்த ஆண்டு பன்முகப் பார்வையில் வரிசையில் அகில இந்திய வானொலிக்கான தொகுப்பு வெளிவர உள்ளது. இது வரை பன்முகப் பார்வையில் வரிசையில் சீன வானொலி, இலங்கை வானொலி, பிபிசி தமிழோசை, வேரித்தாஸ் வானொலியை அடுத்து தற்பொழுது அகில இந்திய வானொலிக்கான புத்தகம் வெளிவருகிறது.

இது வரை வெளிவந்த புத்தகங்களை விட, இது 450 பக்கங்கள் கொண்ட பெரும் தொகுப்பாக வெளிவருகிறது. அதுவும் தொகுதி - 1 மட்டுமே இது. இன்னும் நிறையக் கட்டுரைகள் வந்த வண்ணமே உள்ளது. அவற்றைத் தொகுதி - 2இல் தான் கொண்டு வரவேண்டும்.

இத்தனை பேர் அறிவிப்பு வந்தவுடன் எழுதித் தள்ளுவார்கள் எனக் கொஞ்சமும் நினைக்கவில்லை.  பத்து பாகங்கள் வெளியிட்டாலும், எழுதித் தீராத வரலாற்றினைக் கொண்டது அகில இந்திய வானொலி.

பன்முகப் பார்வை வரிசையைத் தொடங்கும் போது 15 வெளிநாட்டுச் சிற்றலை வானொலிகளை ஆவணப்படுத்தத் திட்டமிட்டு இருந்தோம். அதில் ஐந்து வானொலிகளுக்கான தொகுப்பு வெளிவந்துவிட்டது.

இனி வெளிவர இருப்பவை வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா, மாஸ்கோ வானொலி, வத்திகான் வானொலி, சிங்கப்பூர் வானொலி, மலேசிய வானொலி, அட்வண்டிஸ்ட் உலக வானொலி (AWR), TWR வானொலி, HCJB வானொலி, பாகிஸ்தான் வானொலி, ஃபீபா வானொலி ஆகிய தமிழ் ஒலிபரப்பு செய்த, செய்துவரும் சிற்றலை  வானொலிகளை ஆவணப்படுத்த வேண்டியுள்ளது. விரைவில் அவையும் வெளிவரும்.

இது தவிர, புலிகளின் குரல், ஃபேமிலி ரேடியோ, எஸ்.பி.எஸ்.ஆஸ்ரேலியா போன்ற சிறப்பு நிலை வானொலிகளையும் ஆவணப்படுத்த வேண்டியுள்ளது. பார்ப்போம், காலமும், சூழலும் ஒத்துழைத்தால், அனைத்தும் சாத்தியமே.

வாருங்கள் இணைந்து, இந்த வருடத்திற்கான உலக வானொலி தினத்தினை சென்னைப் பல்கலைக்கழகத்தில் கொண்டாடுவோம்.


Sunday, February 04, 2024

உலக வானொலி தினம் 2024

 


உலக வானொலி தினத்தினை ஒட்டி, இந்த வருடம் சென்னைப் பல்கலைக்கழகத்தின் இதழியல், தொடர்பியல் துறையில் "பன்முகப் பார்வையில் அகில இந்திய வானொலி" எனும் நூலினை வெளியிட உள்ளோம்.

அத்துடன் "இன்னைக்கு யார் சார் ரேடியோ கேட்குகிறாங்க?' என்ற நூலினையும் வெளியிட உள்ளோம்.

இது தவிர இன்னும் பல நிகழ்வுகளைத் திட்டமிட்டுள்ளோம்.

நிகழ்ச்சிக்கு
அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்...