Wednesday, September 25, 2013

இந்த வார வானொலி உலகத்தினை இந்தத் தொடுப்பில் கேட்கலாம்.

இந்த வார வானொலி உலகத்தினை இந்தத் தொடுப்பில் கேட்கலாம். இது தமிழின் முதல் டி.எக்ஸ் நிகழ்ச்சியாகும். வானொலியில் ஞானவாணி பண்பலை 105.6, திருநெல்வேலியில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இரவு 8.30க்கும் சனிக்கிழமை காலை 8.30க்கும் ஒலிபரப்பாகிறது. உங்கள் கருத்துக்களை ஆவலோடு எதிர்பார்கிறோம். கடந்த வார நிகழ்ச்சிகளை www.soundcloud.com/radioworld எனும் இணைய தளத்தில் கேட்கலாம்.

Friday, September 20, 2013

தமிழ் ஒலி வானொலி நேயர் மன்றம் - இலங்கை

1982இல் தமிழ் ஒலி வானொலி நேயர் மன்றம் என ஒரு அமைப்பை ஏற்படுத்தி அதன் சார்பில் தமிழ் ஒலி என்ற காலாண்டு சஞ்சிகையை வெளியிட்டேன். மிகுந்த பொருளாதார சிரமத்துக்கு மத்தியிலும் 1986ஆம் ஆண்டு வரை இந்த சஞ்சிகை வெளிவந்தது. மன்றத்தில் இலங்கை, இந்தியா, மலேசியா, ஜெர்மனி உட்பட வேறும் சில நாடுகளிலிருந்து 1000க்கு மேற்பட்ட உறுப்பினர்கள் சேர்ந்திருந்தார்கள். உறுப்பினர்களில் பலர் எனக்கு மிக்க உறுதுணையாக இருந்ததோடு சஞ்சிகை வெளியீட்டிலும் பல உதவிகள் செய்தார்கள். வெரிதாஸ் வானொலி தமிழ் பணி நல்லாதரவு தந்து சஞ்சிகையை உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்கள் மத்தியில் அறிமுகப் படுத்தினார்கள். பின்னர் பி.பி.சி. தமிழோசை, இலங்கை வானொலி, சென்னை வானொலி நிலையங்களும் ஆதரவு தந்தன. தமிழ் ஒலி சஞ்சிகையின் முதல் இதழை யாழ் ஆயர் 1982 ஜனவரி 14 பொங்கல் நாளில் வெளியிட்டு வைத்தார். அப்போது எடுத்த படம் இது. 

இப்போது சஞ்சிகையின் பிரதிகள் ஒன்று கூட என்னிடம் இல்லை. சில மாதங்களுக்கு முன் தஞ்சாவூர் பேராசிரியர் இளம்பூரணன் அவர்களை சந்தித்தபோது தன்னிடம் ஒரு பிரதி இருப்பதாக கூறி 30 வருடங்களாக அவர் பாதுகாத்து வைத்திருந்த ஒரு பிரதியைக் கொடுத்தார். 

திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருக்கும் நண்பர் ஜெய்சக்திவேல் அங்கே பல்கலைக்கழகத்தில் ஒரு வானொலி ஆவணக் காப்பகம் ஏற்படுத்தப் பட்டிருப்பதாக கூறி இந்த பிரதியை அந்த காப்பகத்தில் சேர்த்துள்ளார். அங்கே உயர் தொழிநுட்பத்துடன் பாதுகாத்து வைக்கப்படும்.. 

1984ஆம் ஆண்டு மன்ற உறுப்பினர்கள் இளஞ்சுடர் என்ற நிகழ்ச்சியை தயாரித்தார்கள். இந்நிகழ்ச்சி இலங்கை வானொலியில் நான்கு வாரங்கள் ஒலிபரப்பானது. இந்த நிகழ்ச்சிக்கு பொறுப்பாக இருந்த திரு விவியன் நமசிவாயம், இலங்கை வானொலி நிகழ்ச்சி தயாரிப்பாளர் திரு ஸ்ரீஸ்கந்தராஜா ஆகியோர் நேரில் வந்து ஒலிப்பதிவு செய்தனர். அப்போது எடுக்கப்பட்ட படங்களையும் இங்கே பார்க்கலாம்.

முகநூலில் திரு. உமாகாந்தன், இலங்கை

வானொலி கேட்டால் வலம் வரலாம் சீனாவை

ஆம்.!வானொலி நேயர்களை அழைத்து ,சீனாவை சுற்றிவரச் செய்த பெருமைஉலக அளவில் சீனவானொலி தமிழ்ப் பிரிவையே சாரும் .உண்மை வெறும் புகழ்ச்சியில்லை . அன்றொரு நாள் (1973-களில் )இப்படித்தான் என் வானொலிப் பெட்டியைத் திருகிகொண்டிருந்தேன். (அப்பொழுதெல்லாம் பொழுது போக்குவதற்கென்று இருந்தது வானொலியும் திரைப்படமும் தானே )இரண்டாவது அலைவரிசையில்திடீரென்று பீகிங் வானொலி நிலையம் தமிழ் ஒலிபரப்பு என்று ஒரு மழலைத் தமிழ்க் குரல் கேட்டது .வியந்து போய்,அதச் சரியாகக் கேட்பதற்கு[ tuning]தடவித் தடவிசரிசெய்து கேட்டேன்.இப்பொழுது போல மின்னியல் வானொலிப் பெட்டி அப்போது அறிமுகமாகவில்லை. 

அன்றிலிருந்து ,ஒலிபரப்பைகேட்டு மகிழ்ந்து கருத்துக் கடிதங்கள்எழுதலானேன் என் கடிதத்தைக் கண்ட திரு .சுந்தரன் அவர்கள் (மேனாள் தலைவர்)மற்றும் கலையரசி எனக்கு நேயர் எண் 05-6436 என அளித்து வாழ்த்தும் காட்சிப் படமும் அனுப்பினார்கள் வானொலி கேட்கக் கேட்க ,உலகச் செய்திகளை அறிந்து கொள்ளும் ஆர்வமும் , நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ளும் ஆற்றலும் என்னுள் முளைவிட்டன 
எல்லோரையும் போல நானும் பரிசுப் பொருள் ஆசையில் தான் தொடர்ந்து நிகழ்ச்சி கேட்டேன்.பின்னர் ஆழமான செய்தி விமர்சனங்களும் .

சீனப் பாரம்பரிய கலாச்சாரங்களின் பரிமாணங்கள்( விருந்தோம்பல், பொதுநோக்கு,இன்முகம், போன்ற 
இவற்றை அறியத் தொடங்கினேன். நிகழ்ச்சியின் பால் அதிக ஈர்ப்பு உண்டாகியது. 
பல்லவி பரமசிவன் பிள்ளையார் சுழி போட்டுத் தொடங்கி வைத்த கருத்தரங்குகளில் கலந்து கொண்டேன்.அங்கே பலதரப்பட்ட நேயர்களின் அறிமுகம், .நட்பு கிடைத்தது. என் நட்பு வட்டமும் , மனமும் விசாலமானது நிகழ்ச்சிகள்:
நிகழ்ச்சிகளில் அறிவிப்பாளர்கள் காட்டும் ஆர்வம் ,ஆழம் ,பக்கச் சார்பில்லா பார்வை, நேயர்களை பங்கெடுக்கச் செய்யும் ஊக்கம்,தூண்டுதல் இவைஎல்லாம் சீன வானொலி தமிழ்ப் பிரிவின் தனித்தன்மை எனலாம்

மேற்கண்ட நிகழ்வுகள் கணினி வருவதற்கு முன் நடந்தவை.
இணைய தளம் தொடங்கியபிறகு நம் வானொலியின் அசுர வளர்ச்சியை சொல்லி மாளாது. கடிதங்கள் அனுப்பிய அடுத்த நாளே பதில் மின்னஞ்சல், இணைய தளம் வழியாக போட்டிகள்,புதிய அறிவிப்புகள் என தமிழ்ப் பிரிவு நாளும் புதிய வடிவம் பெற்று வருகிறது.
அறிவிப்பாளர்கள்;
இளம்தலைமுறையினர் 18 பேர், நிலையத்தில் சுறு சுறு வெனச் சுழன்று பணியாற்றிவருவதை ,நிகழ்ச்சிகள் எங்களுக்குச் சொல்கிறது.
பொன்விழா குறித்த செய்திகள் தமிழக நாளேடுகளில் ,(புதிய தலைமுறை,தீக்கதிர், தினமணி )வலம் வந்துகொண்டிருக்கிறது.
நானும் சிறப்பாக எழுதவேண்டும் என்ற எண்ணத்திலேயே இவ்வளவு நாள் காலம் கடத்திவிட்டேன்.
எனினும் என் பங்களிப்பும் பொன் விழாக் கொண்டாட்டங்களில் ஒன்று கலக்கட்டும் 

முக நூலில் மா.உலகநாதன், திருநீலக்குடி



Saturday, September 14, 2013

இந்த வார வானொலி உலகத்தினை இந்தத் தொடுப்பில் கேட்கலாம்.

இந்த வார வானொலி உலகத்தினை இந்தத் தொடுப்பில் கேட்கலாம். இது தமிழின் முதல் டி.எக்ஸ் நிகழ்ச்சியாகும். வானொலியில் ஞானவாணி பண்பலை 105.6, திருநெல்வேலியில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இரவு 8.30க்கும் சனிக்கிழமை காலை 8.30க்கும் ஒலிபரப்பாகிறது. உங்கள் கருத்துக்களை ஆவலோடு எதிர்பார்கிறோம். இந்த நிகழ்ச்சியை www.soundcloud.com/radioworld எனும் இணைய தளத்திலும் கேட்கலாம்.

Thursday, September 05, 2013

"இன்று ஒரு தகவல்' பற்றி அந்துமணி

வானொலியில், "இன்று ஒரு தகவல்' என்ற நிகழ்ச்சி ஒலிபரப்பானதைக் கேட்டு இருப்பீர்கள்; வானொலியின் பயனுள்ள நிகழ்ச்சிகளில் இதுவும் ஒன்று!
நேயர்களுக்கு வானொலி தரும் இந்நிகழ்ச்சி போன்று, எனக்கு மட்டும், "இன்று ஒரு தகவல்' தந்து கொண்டிருக்கிறார் ஒரு பெண்மணி... அவர் யார், எவர் என்று இதுவரை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை.
என்னுடைய, "லேண்ட் லைன்' தொலை பேசியில் ரெக்கார்டிங் வசதி உண்டு. நான் இல்லாத நேரத்தில் அழைப்பவர்கள் தாங்கள் சொல்ல வந்த சேதியை பதிவு செய்து விடலாம். இந்த வசதியைப் பயன்படுத்தி, அப்பெண்மணி தினம் ஒரு ஜோக் - தகவல் - கிசுகிசு - அறிவிப்பு - செய்தி என, ஏதாவது ஒன்றை பதிவு செய்து விடுகிறார்.
என் தொலைபேசி எண்ணை எப்படி கண்டு பிடித்தார் அல்லது யார் கொடுத்தது என, கண்டு பிடிக்க முடியவில்லை. இருந்தாலும், கொடுத்தவருக்கு நன்றி; பயனுள்ள விஷயங்களை அறிந்து கொள்ள முடிகிறதே...
அன்று அலுவலகம் வந்ததும், "ஆன்சரிங் மிஷினை' இயக்கினேன். அதே பெண்மணியின் குரல்...
"இன்று ஒரு ஜோக்...' என்றவர், சிறிது இடை வெளி கொடுத்து, ஜோக்கைக் சொல்ல ஆரம்பித்தார்...
"அடல்ட்ஸ் ஒன்லி சர்ட்டிபிகேட் பெற்ற படத்தில் ஒரு காட்சி... நீச்சல் குளத்தில் இறங்கப் போகுமுன், கதாநாயகி, தன் உடைகளை ஒவ்வொன்றாகக் கழற்று கிறாள்... கடைசியாக, உள்ளாடைகளை களைய எத்தனிக்கும் சமயம், "விர்'ரென்று ஒரு கார் போகிறது. கார் சென்றதும் பார்த்தால், கதாநாயகி, தண்ணீரில் முகம் மட்டும் தெரிய, நீந்திக் கொண்டிருக்கிறாள்.
"ஒரு சர்தார்ஜி, தினந்தோறும் மூன்று காட்சிகளையும் தொடர்ந்து பார்த்து வந்தார். ஒரு நாள், "சர்தார்ஜியிடம், "இந்த சினிமா அவ்ளோ நல்லாவா இருக்கிறது! விடாமல் பார்க்கிறீர்களே...' எனக் கேட்டார் தியேட்டர் மானேஜர்.
"அதற்கு, "இல்லை... ஒரு நாளாவது அந்தக் கார், ஒரு நிமிடமாவது தாமதமாக வராதா என்ற நம்பிக்கையில் தான் வருகிறேன்... சொல்லி வைத்தாற்போல, அது எப்போதும் போலத்தான் வந்து தொலைக்கிறது...' என்றாராம் சர்தார்ஜி...'
— இந்த ஜோக்கைச் சொல்லிவிட்டு, "ஜோக் எப்படி?' எனக் கேட்டு கலகலவெனச் சிரித்து, தொடர்பைத் துண்டித்திருந்தார்!
சர்தார்ஜிகளை கிண்டலடித்து இங்கு நாம் ஜோக் அடித்துக் கொண்டிருக்க, பஞ்சாபில், இதே ஜோக்கை, மதராசி - அதாவது, தமிழனை மையப்படுத்தி கிண்டலடித்துக் கொண்டிருக்கின்றனர். இந்தியனுக்கு - அது எந்த மாநிலத்தவனாக இருக்கட்டும்... உண்ண உணவிருக்கிறதோ, இல்லையோ... தமாஷ் உணர்ச்சிக்குப் பஞ்சமில்லை!

மறைந்துவரும் தபால் கடிதக்கலை : முருகபூபதி

மின்னஞ்சல், ஸ்கைப், டுவிட்டர், எஸ். எம். எஸ். அறிமுகமானதன் பின்னர் கடிதம் எழுதுவதே அரிதாகிவிட்டது. தற்காலத்தில் படிவங்களையும் ஒன்லைனில் பூர்த்திசெய்து அனுப்பமுடிந்திருப்பதனால் அதிலும் பேனைக்கு வேலையில்லாமல் போய்விட்டது.
காசோலைக்கு ஒப்பமிடுவதற்கு மாத்திரம் பேனை உதவும் காலத்தில் வசதிபடைத்தவர்கள் மாறிவிட்டார்கள்.
எழுத்தாணியும் பனையோலை ஏடுகளும் வெள்ளீய அச்சும் நூதனசாலைக்குச்;சென்றுவிட்டதுபோன்று தபால் முத்திரைகளும் வருங்காலத்தில் ஆவணக்காப்பகத்தில் இடம்பெறலாம். அவுஸ்திரேலியாவில் தபால் நிலையங்களை போஸ்ட் ஷொப் (Post Shop) என அழைக்கிறார்கள். அந்தப்பெயரில்தான் தபால் நிலையம் காட்சிப்பலகையில் துலங்குகிறது.
அங்கே முத்திரை மட்டுமல்ல இனிப்பு சொக்கலெட்ää தண்ணீர்ப்போத்தல் காகிதாதிகள் உட்பட வேறு பொருட்களும் விற்பனையாகின்றன. மக்கள் முத்திரை வாங்குவதும் குறைகிறது. காரணம் கணினிதான்.
வெளிநாடுகளில் வதியும் தமது பிள்ளைகள் மற்றும் உறவினர்களை இலங்கையில் ஏதாவது ஒரு கிராமத்திலிருந்தும் ஸ்கைப்பின் ஊடாக மணித்தியாலக்கணக்கில் பேச முடிகிறது. இந்த இலட்சணத்தில் யார்தான் கடிதம் எழுதி தபாலில் அனுப்பிக்கொண்டிருக்கப்போகிறார்கள்? சம்பிரதாயத்திற்காக திருமண சாமத்தியச்சடங்கு அழைப்பிதழ்கள் தபாலில் வருகின்றன.
இந்தப்பின்னணியிலிருந்துதான் இந்த ஆக்கத்தை எழுதுகின்றேன்.
ஒரு காலத்தில் தினகரன் பிரதம ஆசிரியராகவிருந்தவர் கைலாசபதி. 1982 டிசம்பரில் அவர் மறைந்தார். பதினைந்து ஆண்டுகள் கழித்து குறிப்பிட்ட டிசம்பர் மாதத்தில் – பேராசிரியர் கைலாசபதி வாரம் 06-12-97 முதல் 12-12-97 வரை எனத்தலைப்பிட்டு தினமும் தினகரனில் 6ஆவது பக்கத்தில் (ஆசிரியத்தலையங்கம் பதிவாகும் பக்கம்) கைலாசபதி பற்றிய கட்டுரைகளை அவரை நன்கு அறிந்தவர்களைக்கொண்டு எழுதவைத்தார் அச்சமயம் அதன் பிரதம ஆசிரியராகவிருந்த எனது அருமை நண்பர் ராஜஸ்ரீகாந்தன்.
அச்சமயம் நான் இலங்கை சென்றிருந்திருந்தேன்.
எனது இலங்கை வருகை அறிந்ததும் என்னை உடனடியாக நேரில் சந்தித்து கைலாசபதி பற்றி எழுதித்தருமாறு கேட்டார்.
கணினி அறிமுகமாகியதும் மக்கள் கடிதங்கள் எழுதும் பழக்கம் குறைவாகிக்கொண்டிருந்த காலப்பகுதி. எனக்கு உடனடியாக கைலாசபதியின் அயர்ச்சியற்ற கடிதம் எழுதும் பழக்கம்பற்றி எழுதுவதற்கே பெரிதும் விருப்பமாக இருந்தது.
கடிதக்கலையிலும் பரிமளித்த கைலாஸ் என்ற தலைப்பில் தினகரன் 97 டிசம்பர் 10 ஆம் திகதி இதழில் எழுதியிருந்தேன்.
அதிலிருந்து சில பகுதிகளை இங்கு மீண்டும் பதிவு செய்கின்றேன்.
எத்தனையோ வேலைப்பளுவுக்கு மத்தியிலும் அவர் தமது நண்பர்களுக்கு கடிதம் எழுதவும் – தமக்கு வரும் கடிதங்களுக்கு பதில் எழுதவும் தவறவில்லை என்பது வியப்பானது. மல்லிகைப்பந்தல் 1996 இல் வெளியிட்ட ‘எங்கள் நினைவுகளில் கைலாசபதி’ என்ற நூலில் திரு. ரா. கனகரத்தினம் அவர்கட்கு கைலாஸ் எழுதிய சில கடிதங்கள் அதில் தொகுத்து வெளியிடப்பட்டுள்ளன.
ஏற்கனவே பல ஆண்டுகளுக்கு முன்பு கைலாஸ் நண்பர் கவிஞர் முருகையனுக்கு எழுதிய கடிதங்கள் அடங்கிய ஒரு கோவையை பார்த்திருக்கிறேன். முருகையனே எனக்குக் காண்பித்தார்.
பொதுவாக ஒருவர் மற்றவருக்கு எழுதும் கடிதங்களை பிறர் பார்ப்பதும் வாசிப்பதும் நாகரீகம் அல்ல என்பது பண்பு. அந்தரங்கம் புனிதமானது என்பதனால் இந்தப்பண்பு பின்பற்றப்படுகிறது.
ஆனால் iகாலாஸின் கடிதங்கள் அந்தரங்கமான விடயங்களை அலசுவதில்லை என்பதனால் பகிரங்கமாகின்றன. அதற்கு அவற்றில் ‘அந்தரங்கம்’ இல்லை என்பது மாத்திரம் காரணமல்ல. அவை இலக்கியத்தரமானவை பல ஆலோசனைகளை வழிகாட்டல்களை எடுத்துரைப்பவை என்பதனால் பகிரங்கமானவையாகின்றன.
ஆனால் கைலாஸ்- மற்றவர்களுக்கு எழுதும் கடிதங்கள் – பதில்கள் என்றாவது ஒருநாள் தொகுக்கப்பட்டு வாசகர்களுக்குப் பகிரங்கமாகப் பகிரப்படலாம் என்ற நம்பிக்கையுடன் எதிர்பார்ப்புடன் எழுதப்படவில்லை என்பது சத்தியமானது.
1953 முதல் 1956 வரையில் கைலாஸ் நண்பர் கனகரத்தினத்திற்கு எழுதிய சில கடிதங்கள் தொகுக்கப்பட்ட ‘எங்கள் நினைவுகளில் கைலாசபதி’ என்ற நூலைப்படித்தபொழுதுää பேராசிரியரின் ‘அகம்’ துலாம்பரமாகத்தெரிகிறது. ஆக்க இலக்கியங்களில் படைப்பாளியின் அகத்தை எம்மால் பூரணமாக அறியமுடியாது. ஆனால் கடிதங்கள் அப்படி அல்ல.
ஆக்க இலக்கியங்கள், பத்திரிகைகளில் இலக்கிய இதழ்களில் வெளியாகும். வாசகர் படிப்பர். நண்பர்கள் எழுதும் கடிதங்கள் நண்பர்களின் பார்வைக்கு மாத்திரமே.
ஆனால் அவை இலக்கியத்தரம் கருதி வாசகர் மத்தியில் வலம்வரும்பொழுது அவற்றை எழுதியவரின் அகத்தை நாம் முழுமையாக புரிந்துகொள்ள முடிகிறது.
மகாத்மா காந்தி, பாரதியார், வ.வெ.சு ஐயர், அரவிந்தர், அறிஞர் அஸீஸ், கி. ராஜநாரயணன் முதலானோர் எழுதிய கடிதங்களை பல ஆண்டுகளுக்கு முன்னர் சேகரித்து தொகுத்து வாசகர்களுக்கு வழங்கினார் எழுத்தாளர் மு. கனகராஜன்.
இந்த வகையில் கைலாஸ் முருகையனுக்கும் கனகரத்தினத்திற்கும் எழுதிய கடிதங்கள் – பதில்கள் கவனத்தைப்பெறுகின்றன.
letters1953 இல் ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கும் உத்திமுறையில் தாம் ‘ பரிசோதனைக்கட்டத்தில்’ இருப்பதாகவும் சித்தார்த்தன் என்ற தமது நண்பர் ஆங்கிலப்புலமை மிக்கவராக இருப்பதனால் அவரை மொழிபெயர்ப்புத்துறையில் ஊக்குவித்த தகவலையும் கைலாஸ் கூறுகிறார்.
அதே ஆண்டில் அவர் சிறுகதை எழுதியதையும் அதிலும் தாம் பரீட்சார்த்தமான முயற்சிகளை மேற்கொண்டதையும் சொல்கிறார். மொழிபெயர்ப்பில் தமக்கு ஏற்படும் சிரமங்களையும் ஒப்புக்கொள்கிறார்.
தாம் படித்த படைப்புகள்ää தமிழக இதழ்களில் பிரசுரமான விமர்சனங்கள் ரசித்து நோக்கிய வானொலி நிகழ்ச்சிகள் நாடகங்கள்… இப்படி பல விடயங்களைக் குறிப்பிட்ட கடிதங்களில் அலசுகிறார் கைலாசபதி.
‘கடிதம் எழுதுவதும் ஒரு கலைதான் என்பதைப்படைப்பாளிகளுக்கு உணர்த்திய பேராசான் கைலாசபதியின் இதர கடிதங்களும் தொகுக்கப்பட்டால் பயனுடையதாக இருக்கும் என நம்புகின்றேன்.
1987 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்து வந்துவிட்டேன். இங்கு வந்து அரைநூற்றாண்டு காலமும் கடந்துவிட்;டது.
இக்காலப்பகுதியில் இரண்டாயிரத்துக்கும் அதிகமான கடிதங்களை எழுதியிருப்பேன். கணினி பரிச்சியமானதும் அதன் ஊடாக மின்னஞ்சலில் எழுதிக்கொண்டிருக்கின்றேன். அதனால் தற்காலத்தில் எனக்கும் கடிதம் எழுதி தபாலில் அனுப்பும் வழக்கம் குறைந்Jவருகிறது.
எனக்குவந்தகலைஇலக்கியவாதிகள் மற்றும் சமூகப்பணியாளர்களின் கடிதங்களைத்தொகுத்து 2001இல் கடிதங்கள் என்ற நூலையும் வெளியிட்டிருக்கின்றேன். எண்பது பேரின் கடிதங்கள் அதில் பதிவாகியிருக்கின்றன.
இலங்கையிலும் தமிழகத்திலும் மற்றும் அவுஸ்திரேலியா கனடா உட்பட ஐரோப்பிய நாடுகளில் வசித்த — வசிப்பவர்களின் கடிதங்கள் அவை. எனக்கு கடிதங்கள் எழுதிய எனது அம்மா உட்பட பலர் தற்பொழுது உயிருடன் இல்லை.
அகஸ்தியர் கே.கணேஷ், ராஜஸ்ரீகாந்தன், கனக செந்திநாதன், மு.கனகராஜன், வாசுதேவன், மாணிக்கவாசகர், என்.எஸ்.எம்.ராமையா, இளங்கீரன், திக்கவயல் தருமகுலசிங்கம், வே. இ. பாக்கியநாதன், நா. சோமகாந்தன், சு. வில்வரத்தினம், உடப்பூர் சோமஸ்கந்தர், சிவராஜலிங்கம், வண. ரத்ணவன்ஸதேரோ, சுந்தா சுந்தரலிங்கம், கோ. குமாரவேலு ஆகியோர் அமரத்துவம் எய்திவிட்டனர்.
ஆனால் அவர்களின் கடிதங்கள் நூலில் தொகுக்கப்பட்டதுடன் பொக்கிஷமாகவும் என்வசம் இன்றும் உள்ளன.
ராஜஸ்ரீகாந்தன் கே. கணேஷ் அகஸ்தியர் எனக்கு எழுதிய கடிதங்கள் அநேகம். ராஜஸ்ரீகாந்தனின் கடிதங்கள் பெரும்பாலும் நீண்டவை. இலக்கிய புதினங்களுடன் அரசியல் நிகழ்வு ஆவணமாகவும் திகழ்பவை.
kalasஅவரது மறைவின் பின்னர் எழுதிய ராஜஸ்ரீகாந்தன் நினைவுகள் நூலில் அவரது கடிதங்கள் சிலவற்றையும் வெளியிட்டிருக்கின்றேன்.
தமிழகத்தில் கி.ராஜநாராயணன் பல எழுத்தாளர்களுக்கு எழுதிய கடிதங்களும் பலர் அவருக்கு எழுதிய கடிதங்களும் தொகுக்கப்பட்டு நூலாகியிருக்கிறது. அதுபோன்று தலித் இலக்கியப்போராளி கே. டானியல் அ.மார்க்ஸ-க்கு எழுதிய கடிதங்களும் நூலாகியிருக்கிறது.
புதுமைப்பித்தன் தனது மனைவி கமலாவுக்கு எழுதிய கடிதங்கள் நூலாகக்கிடைக்கிறது.
காதல் மனிதவாழ்வில் இரண்டறக்கலந்தது. காதல் கடிதங்கள் எழுதியவர்களின் காதல் வெற்றியிலும் தோல்வியிலும் முடிந்திருக்கிறது.
காதல்கடிதங்களை எழுதியவர்கள் பிறிதொரு சந்தர்ப்பத்தில் அவற்றை எரித்து அழித்துமிருக்கிறார்கள். ஆனால் காதல் அழிவதில்லை. அதுபோலவே கடிதக்கலையும் அழிந்துவிடாது.
தற்பொழுது யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும் ஜீவநதி இதழ் இலக்கியக்கடிதங்களை வெளியிட்டுவருகிறது.
பண்டிதர் ஜவஹர்லால் நேரு சிறையிலிருந்து மகள் இந்திரா காந்திக்கு எழுதிய கடிதங்களே பின்னர் ‘ உலக சரித்திரம்’ என்ற விரிவான நூலாக வெளியானது.
“ நேருவின் அந்தக் கடிதங்கள் அடங்கிய உலக சரித்திரம் படித்த பின்னர்தான் கம்யூனிஸத்தில் நம்பிக்கை கொண்டதாக தமிழக கம்யூனிஸ்ட் கட்சி தோழர் எம்.கல்யாணசுந்தரம் ஒரு சந்தர்ப்பத்தில் சொல்கிறார்.
கடித இலக்கியங்கள் குறித்த சிந்தனையை வாசகர்களிடத்தே பரப்பவேண்டும் என்ற தொனியில் சிலவருடங்களுக்கு முன்னர் திக்குவல்லை கமால் மல்லிகையில் எழுதியதும் நினைவுக்கு வருகிறது.
கணினி இந்தக்கடிதக்கலையின் மகத்துவத்தை அழித்து அதனை வேறு ஒரு திசைநோக்கி மோசமாகத்திருப்பிவிட்டது என்றும் சொல்ல முடியும்.
கொமண்ட்ஸ் என்ற பெயரில் மோசமான வார்த்தைப்பிரயோகங்களும் அவதூறுகளும் பரவிவிட்டன. போதாக்குறைக்கு எஸ்.எம்.எஸ் குறுந்தகவல்களும் பரிமாறப்படுகின்றன.
அதனால் கடிதங்களுக்கு இனி என்ன வேலை இருக்கிறது என்றாகிவிட்டது மனிதர்களின் வாழ்க்கை.
எனினும் தபால் கடிதங்களினூடான தொடர்பாடல்கள் அரிதாகிப்போனாலும் வேறு ஒரு வடிவத்தில் கடிதக்கலை வளர்ந்துகொண்டுதானிருக்கிறது. தற்பொழுது மின்னஞ்சல் அந்தக்கலையை வளர்க்கிறது. அடுத்த நூற்றாண்டில் இந்தக்கலை வேறு ஒரு வடிவத்தைப்பெறும் என்றும் நம்பலாம்.
-0000-
letchumananm@gmail.com
நன்றி: http://inioru.com/?p=36609

Monday, September 02, 2013

BBC தமிழோசை மாணிக்கவாசகத்திடம் புலனாய்வுப் பிரிவு விசாரணை

இலங்கையின் வவுனியா பிரதேசத்திற்கான பிபிசி தமிழோசை செய்தியாளர், பொன்னையா மாணிக்கவாசகம், இன்று திங்கட்கிழமை, பயங்கரவாதப் புலனாய்வுத் துறை அதிகாரிகளால் விசாரணைக்காக அழைக்கப்பட்டதாக பிபிசி தமிழ் இணையம் தெரிவிக்கிறது.
.
பிபிசி தமிழோசைக்காக கடந்த சுமார் 15 ஆண்டுகளாக வட இலங்கையிலிருந்து பணியாற்றிக்கொண்டிருக்கும் மாணிக்கவாசகத்துக்கு, இந்த அழைப்பாணைக்கான காரணங்கள் குறித்து முன்னதாக அறிவிக்கப்படவில்லை.

விசாரணையின் போது அவரது வழக்குரைஞருடன் இருக்கவும் அவருக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

விசாரணையின்போது, மாணிக்கவாசகம் மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இரண்டு விசாரணைக்கைதிகளிடமிருந்து கடந்த சில மாதங்களில் வந்த சில கைத்தொலைபேசி அழைப்புகள், மற்றும் அவர் திரும்ப அவர்களுக்கு விடுத்த அழைப்புகள் பற்றி விசாரிக்கப்பட்டார்.

மகசின் சிறைச்சாலை நீண்ட காலமாகவே அங்கு விசாரணையின்றி மற்றும் நீதி வழிமுறைகளின்றி தடுத்து வைக்கப்பட்டிருக்கும் நூற்றுக்கணக்கான தமிழ் சிறைக்கைதிகள் விஷயத்தில் செய்திகளில் அடிபட்டுக்கொண்டிருக்கிறது. இந்தக் கைதிகள் விடுதலைப்புலிகளுடன் தொடர்புகொண்டதாக சந்தேகிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் மீது முறையான நீதிமன்ற விசாரணைகள் நடத்தப்படவேண்டும் அல்லது அவர்கள் உடனடியாக விடுதலை செய்யப்படவேண்டும் என்று மனித உரிமை அமைப்புகள் கோரி வருகின்றன.

ஒரு செய்தியாளர் என்ற வகையில் பல ஆண்டுகள் விசாரணையின்றி தடுத்து வைக்கப்பட்டிருக்கும் சிறைக்கைதிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினரிடமிருந்து இது போன்ற தொலைபேசி அழைப்புகள் வருவது சகஜம் என்று மாணிக்கவாசகம் அதிகாரிகளிடம் தெரிவித்தார்.

அவர்கள் பொதுவாக தங்களது பிரச்சினைகளை விவாதிப்பதுடன், தாங்கள் விரைவாக விடுதலை ஆக ஏதேனும் வாய்ப்பு இருக்கிறதா என்றும் கேட்பார்கள் என்றும் அவர் கூறினார்.

பல தொலைபேசி அழைப்புகள் விடுக்கப்பட்டு, எடுக்கப்படுவதற்கு முன்னர் துண்டிக்கப்படும் போது, அவ்வாறான அழைப்புகளை (missed calls) , தனது தொழில் ரீதியான கடமைகளின் ஒரு பகுதியாக, தான் திரும்ப அழைத்ததாகவும் அவர் கூறினார்.

பிபிசியின் செய்தியாளராக இலங்கையின் வட பகுதியில் நீண்டகாலம் இருப்பதால், தனது தொலைபேசி எண்கள் பலருக்குத் தெரிந்திருக்கும் என்றும் அவர் கூறினார்.

மாணிக்கவாசகத்துக்கு எதிராக ஏதேனும் வழக்கு பதியப்படுகிறதா என்பது குறித்தோ அல்லது அவர் மீண்டும் விசாரணைக்காக அதிகாரிகளை சந்திக்கவேண்டியிருக்குமா என்பது குறித்தோ எந்தத் தகவலும் அவருக்குத் தரப்படவில்லை.
(நன்றி:பிபிசி தமிழ் Via http://riskyshareef.blogspot.in/)