Sunday, December 23, 2012

பல நூறு ஆண்டுகளின் பழமை


சீனப் பெருஞ்சுவர் பற்றி ஏராளம் சொல்ல வேண்டும். வாரலாற்றுத் தகவல்கள் உங்களுக்கு இணையத்தில் கிடைக்கும். ஆனால் அனுபவப் குறிப்புகள் கிடைப்பது மிகவும் அறிது. எனது அனுபவத்தினில் மனிதாராக பிறந்த ஒவ்வொருவரும் கட்டயாம் தனது வாழ்நாளில் பார்த்தே தீரவேண்டிய ஒரு சில இடங்களை நினைத்து வைத்திருப்போம். அதில் நிச்சயம் இந்த இடத்தினையும் நாம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.


பெருஞ்சுவரில் ஏறுவதற்கான அந்தப் படிகள் பல நூறு ஆண்டுகளின் பழமையான தன்னோடு சேர்த்து பதிய வைத்து இருந்தது. காரணம் அதன் சுவடுகள் மற்றும் பல லட்சம் மக்களின் கால் தடம் பட்டு அவை தேய்ந்து போய் காணப்பட்டது.

மேலே ஏற ஏற காற்றின் வேகம் கூடிக்கொண்டே சென்றது. இதனால் காற்று முகத்திற்கு நேராக பட்டு நமது தோளினை உளர்த்தியது. அந்த சமயத்தில் படிக்கட்டின் மேலே பார்த்தபோது ஒரு அதிசயம் காத்து இருந்தது. அது என்ன! அறிய காத்திருங்கள். சந்திப்போம் நாளை. - தங்க.ஜெய்சக்திவேல் (எழுதி முடித நேரம் நள்ளிரவு 12.45)

Saturday, December 22, 2012

பூஜ்ஜியத்திற்கு குறைவாக நான்கு டிகிரி செல்சியஸ்


தலைநகர் பெய்ஜிங்கில் இருந்து ஒரு மணிநேர மகிழ்வுந்து பயணத்தினை அடுத்து நாங்கள் அடைந்தோம் சீனப் பெருஞ்சுவருக்கு. மிகவும் குளிராக இருந்தது. காற்றும் பலமாக அடித்தது. 40 யுவான் கொடுத்து சீனப் பெருஞ்சுரவிரின் மேல் ஏறுவதற்கான அனுமதி சீட்டினை வாங்கினோம். இங்கு ஒரு மகிழ்ச்சியான விடையம் என்னவென்றால், நாம் கொண்டு செல்லும் வீடியோ மற்றும் டிஜிட்டல் கேமராக்களுக்கு தனியாக பணம் செலுத்த வேண்டியது இல்லை.


நாங்கள் சுவரின் மேல் ஏறுவதற்கு முன் பார்த்த ஒரு அதியசய மிருகத்தினப் பற்றி இங்கு உங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். அது சீன ஒட்டகம். ஆம் அந்த ஒட்டகம், நமது நாட்டில் உள்ளது போன்றது அல்ல. அது சற்றே வேறுபட்டு காணப்பட்டது. அதன் முதுகு சற்றே மேல் தூக்கியவாறும் அதன் முடிகள் பணிபிரதேசத்திற்கு ஏற்றது போன்று அதிகமாக இருந்தது. ஆனால் பாவம் அதன் கண்கள் எதனையோ பரிதாபமாகத் தேடிக்கொண்டு இருந்தது.

சீனப் பெருஞ்சுவரின் மீது ஏறத்துவங்கினோம். காற்று சற்றே அதிகமாக வீசியதில். மோகன் சொன்னார், "இன்று பூஜ்ஜியத்திற்கு குறைவாக நான்கு டிகிரி செல்சியஸ்" என்று. எனக்கு தூக்கி வாரிப்போட்டது. காரணம் நான் ஊட்டி கொடைக்கானல் போன்ற இடங்களில் 18 டிகிரி செல்சியஸை மட்டுமே அனுபவித்து உள்ளோம், அதுவே நமக்கு மிகவும் குளிராக இருந்துள்ளது. இன்னும் சொல்லப் போனால் எனது ஹரித்துவார் மற்றும் சண்டிகர் பயணத்தின் போது கூட10 டிகிரியில் இருந்துள்ளேன். அப்பொழுது எல்லாம் அதுவே மிகுந்த குளிர் என்று நினைத்து உள்ளேன். ஆனால் முதன் முறையாக பூஜ்ஜியத்திற்கும் குறைவான டிகிரியில் இருப்பது மகிழ்ச்சியாகவும் அதே சமயத்தினில் நடுக்கமாகவும் இருந்தது. 

Friday, December 21, 2012

ஓவியாவுடன் சீனப் பெருஞ்சுவருக்கு

எனது சீனப் பயணத்தின் இரண்டாவது நாளில் நான் இன்று சென்றது உலகின் மிகவும் புகழ்பெற்ற இடமான சீனப் பெருஞ்சுவருக்கு. காலை எட்டு மணிக்கு தாயாராகி காலை உணவினை ஓவியாவுடன் இணைந்து சாப்பிட்டோம். இன்றைய காலை உணவும் சீன வானொலியின் பணியாளர்கள் சாப்பிடும் உணவகம் தான். மிகவும் தூய்மையாக வைக்கப்பட்டுள்ள அந்த உணவகத்தில் சீன மற்றும் வெளிநாட்டு பணியாளர்களுக்காக வெளிநாட்டு உணவு வகைகளும் தயாரித்து விற்கப்படுகின்றன.


இன்றைய எனது காலை உணவினை சற்றே சுவையானதாக சாப்பிட விரும்பினேன். அதனால் சீனாவின் பாரம்பரிய ஒரு வகையான அரிசி கஞ்சிஅதனுடன் கீரை ரொட்டி மற்றும் சீன பிரட் ஆம்லெட் ஆகியவற்றினை சாப்பிட்டோம். அதன் பின் ஹிந்திப் பிரிவில் தெரிவு செய்யப்பட்ட சிறப்பு நேயருடன் எனது சீனப் பெருஞ்சுவர் பயணம் துவங்கியது. நேற்றய பயணத்தில் இல்லாத சிறப்பு ஒன்று இன்றைய பயணத்தில் இருந்தது. காரணம் நேற்று என்னுடன் தமிழ் பிரிவில் இருந்து நிறைமதி மட்டுமே வந்தார்கள். ஆனால் இன்று என்னுடன் இரண்டு பேர் தமிழ் பிரிவில் இருந்து இணைந்து கொண்டனர். ஒருவர் ஓவியா மற்றொருவர் மோகன். இன்றைய தினம் என்னுடன் இருவர் சேர்ந்துகொள்ளக் காரணம், சீனப் பெருஞ்சுவரை மையப்படுத்தி ஒரு சிறு ஆவணப்படம் எடுக்க உள்ளோம்.

மேலும் ஒரு நண்பர் என்னுடன் இன்றைய பயணத்துடன் இணைந்து கொண்டார். அவர் நான் ஏற்கனவே கூறிய திரு.ரவிசங்கர் போஸ், ஹிந்திப் பிரிவின் சிறப்பு நேயராக மேற்கு வங்காளத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்டு இன்றைய தினம் முதல் என்னுடன் பெய்ஜிங் சுற்றுலாவில் கலந்துகொள்ள உள்ளார். இதில் எனக்கு என்ன ஒரு மகிழ்ச்சி என்றால், அவரை நான் ஏற்கனவே சந்தித்து உள்ளேன். நீண்ட காலமாக சர்வதேச வானொலிகளைக் கேட்டுக்கொண்டு இருப்பவர்...

Thursday, December 20, 2012

ஒரு முக்கியமான இடத்திற்கு


அதன் பின் மாலையில் நாங்கள் மற்றும் ஒரு முக்கியமான இடத்திற்கு சென்றோம். கலைநயம் மிக்க அந்த இடம் சீனாவின் கலைக்காக மிகவும் புகழ்பெற்றது. முக்கியமாக உலகின் முக்கிய ஓவியர்களின் பாதம் பட்ட இடம் என்று கூறலாம். ஆம் லியோ லீ சாங் எனும் அந்தப் பகுதி ஒரு பழமையான சீனாவின் கிராமப் பகுதியை நம் கண் முன்னே கொண்டுவந்து நிறுத்துகிறது.


அந்தப்பகுதியில் ஓவியம் வரையத் தேவையான தூரிகைகள் மற்றும் அதற்குத் தேவையான வண்ண மைகள் எந்தப்புரம் திரும்பினாலும் விறகப்படுகின்றன. காலத்தால் அழிக்க முடியாத கலைபொக்கிசங்கள் நிறைந்த பகுதியில் எனது கால் தடம் பட்டதில் எனக்கும் மகிழ்ச்சியே. நாளை சீனாவின் முக்கியமான மற்றும் ஒரு நினைவுச் சின்னத்திற்கு செல்ல உள்ளேன். அந்த அனுபவத்தினையும் படிக்க ஆர்வமுடன் இருப்பீர்கள் என நம்புகின்றேன். சந்திப்போம் நாளை.

Wednesday, December 19, 2012

'சொர்கக் கோவிலுக்கு'


காலை சீன வானொலியின் தமிழ் பிரிவுக்கு சென்றேன். அங்கு கடமையாற்றிக் கொண்டு இருந்த துணைத் தலைவர் வாணி உட்பட அனைவரையும் சந்துத்து எனது வணக்கத்தினை வாழ்த்துக்கலையும் தமிழக நேயர்களின் சார்பாகவும் எனது மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் சார்பாகவும் தெரிவித்துக் கொண்டேன். அதன் பின் தமிழ் பிரிவின் கலையகங்களைக் காணச் சென்றேன். மிகவும் அருமையாக இருந்தது.


குறிப்பாக டாஸ்கன் டெக் மற்றும் ஸ்டுடர் கன்சோல்களைப் பார்த்து வியந்தேன். காரணம் இது போன்ற கன்சோல்கள் ஒலிபதிவின் தரத்தினைக் கூட்டக் கூடியது. அதன் பின் சக பணியாளர்களுக்கு நான் திருநெல்வேலியில் இருந்து வாங்கிச் சென்ற தனிச் சிறப்பான இனிப்பினை வழங்கினேன். அனைவரும் அதனை சுவைத்து பார்த்து மகிழ்ந்தனர். மதியம் வாணி, சரஸ்வதி மற்றும் தேன்மொழி ஆகியோருடன் இணைந்து மதிய உணவினை சீன வானொலியின் பிரத்தியேக உணவகத்தில் உண்டோம். உணவின் சுவை மற்றும் மணத்தினை பிரிதொரு பதிவில் நிச்சயம் கூறுவேன்.

மதியம் எனது சுற்றுலாவின் முதல் இடமான 'சொர்கக் கோவிலுக்கு' நிறைமதியுடன் நிறைந்த மனதுடன் சென்றேன். சீன வானொலிக்கு சொந்தமான பிரித்தியேக மகிழ்வுந்திலேயே என்னை அழைத்துச் சென்றார்கள். அந்த வாகனத்தின் முன் புறம் சீன வானொலியின் முத்திரையோடு 'சீன வானொலி நிலையம்' என்று எழுதப்பட்டு இருந்தது எனக்கு மிகுந்த மகிழ்வைத் தந்தது. காரணம் இது போன்ற வானொலிக்கு சொந்தமான வாகனங்களில் செல்வது ஒரு தனி மகிழ்ச்சியையும் மரியாதையையும் எனக்குள் ஏற்படுத்தும். அந்த மகிழ்ச்சியை முழுமையாக அனுபவித்தேன்.
சீனாவின் மிக முக்கிய இடமான சொர்கக் கோவில் பற்றி விரிவான கட்டுரையை எழுத வேண்டும் எனவே அந்த அனுபவத்தினை வேறு ஒரு பதிவில் உங்களோடு நிச்சயம் பகிர்ந்துகொள்வேன்....

Tuesday, December 18, 2012

இலங்கையிலிருந்து சீனாவிற்கு

வணக்கம் நண்பர்களே, இலங்கையிலிருந்து சீனாவிற்கு ஞாயிறு மதியம் வந்து சேர்ந்தேன். விமான நிலையத்திற்கு சீன வானொலி நிலையத்தின் தமிழ் பிரிவில் இருந்து தேன்மொழி அவர்கள் வந்து என்னை வரவேற்று அழைத்துச் சென்றார்கள். நான் இலங்கையில் தங்கியபோது ஏற்பட்ட எனது அனுபவத்தினை விட இந்தப் பயணம் இன்னும் மகிழ்ச்சியாக இருந்தது.

நான் கொழும்புவில் இருந்து புறப்பட்ட போது இலங்கை நேரம் அதிகாலை 1.30. இங்கு சீனாவிற்கு சரியாக மதியம் சீன நேரம் 12.30க்கு வந்து சேர்ந்தேன். அன்றைய தினம் விமானம் சற்று முன்னதாக வந்துவிட்டதாக தேன்மொழி கூறினார்கள்.

விமான நிலையத்தில் இருந்து சரியாக 45 நிமிடப் பயணத்தில் நான் தங்குமிடத்துக்கு வந்து சேர்ந்தேன். எனது சுற்றுப்பயணம் தொடங்கும் நாளுக்கு ஒரு நாள் முன்னதாகவே வந்துவிட்டபடியால் நான் தமிழ்ப் பிரிவின் பணியாளர் திரு.தமிழன்பன் அவர்களுடன் தங்கினேன். அருமையான இரவு உணவினைத் தயார் செய்து கொடுத்தார் தமிழன்பன்.

இரவு ஒரு நல்ல தூக்கத்தினை தூங்கினேன். திங்கள் காலை முதல் எனது முறையான சீனச் சுற்றுலா தொடங்கியது...

Friday, November 30, 2012

செயற்கை ஏரியில் பீகிங் பல்கலைக்கழகம்

எனது ஐந்தாவது நாள் சீனச் சுற்றுப்பயணம் மிகவும் மறக்க முடியாத ஒன்றாக இருந்தது. அதற்கான காரணத்தினை நீங்களே இந்தக் கட்டுரையின் முடிவில் அறிவீர்கள்.

 

காலையில் எங்களது பல்கலைக்கழக மாணவர்களுக்காக நான் தாயாரிக்கும் ஆவண படத்திற்கான காட்சிகளை சீன வானொலியின் பல்வேறு பகுதிகளில் எடுத்தேன். அதன் பின் நட்புப் பாலம் நிகழ்ச்சிக்கான ஒலிப்பதிவில் தமிழ் பிரிவின் நிபுனர் தமிழன்பன் அவர்களுடன் கலந்து கொண்டேன்.

 

மதிய உணவுக்கு பின்  தமிழ் பிரிவின் பணியாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்தனர். அவர்களுக்காக ஒரு மணி நேரம் "இந்தியாவில் வானொலி: நேற்று, இன்று, நாளை" என்ற தலைப்பினில் ஒரு சிறப்புரை ஆற்றினேன்.

 

மதியம் நாங்கள் சென்றது பீகிங் பல்கலைக்கழகம். 1902ல் தொடங்கப்பட்ட இந்தப் பல்கலைக்கழகத்திற்கு என்னுடன் அன்பான இலக்கியாவும், பண்பான மேகலாவும் வந்தனர்.

 

பல்கலைக்கழகத்தில் பல்வேறு இடங்களை சுற்றிப்பார்தாலும் மறக்க முடியாத இடம் அந்த பல்கலைக்கழகத்தில் உள்ள செயற்கை ஏரி. நம்பமுடியாத அளவில் அந்த ஏரி ஒரு செயற்கையான ஆற்றுடன் இணைக்கப்பட்டு இருந்தது. அதில் பணி கட்டியாகி இருந்தது.

 

மேலும் பல்கலைக்கழகத்தினில் நாங்கள் இதழியல் மற்றும் மக்கள் தொடர்பு துறைக்கு சென்றோம். அதன் பின் மிகப் பெரிய பல்கலைக்கழக நூலகத்திற்கு சென்றோம். கல்வியாளராக இந்த இடங்கள் எனக்கு மிகுந்த மன மகிழ்ச்சியைத் தந்தது. 

 

தமிழ்பிரிவின் பயண திட்டத்தில் இந்த இடம் இல்லை, ஆனாலும், எனது வேண்டுதலை ஏற்று  தேன்மொழி இதனை கலைமகளோடு இணைந்து இந்த ஏற்பாட்டினை செய்து இருந்தார்கள்.

 

இதற்காக பல முன் ஏற்பாடுகளை செய்தவர் இலக்கியா.  ஆக ஐந்து நாட்கள் பயணம் இனிதே நிறைவடைந்து நாளை ஆறாவது நாள் பயணமாக நாங்கள் செல்ல உள்ள இடம் பீஜிங்கின் மிக முக்கியமான எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் விற்கும் இடம்.

 

உலகில் உள்ள அனைத்து வகையான வானொலிப் பெட்டிகளும் கிடைக்கும் ஒரே இடம். கலைமணி இதற்காக பல ஏற்பாடுகளைச் செய்தார். நாளை என்னுடன் துணையாக  வருபவர் மீண்டும் சரஸ்வதி.

 

– அன்புடன் தங்க.ஜெய்சக்திவேல்

 

 

போதிசத்துவரும் லாமாக் கோவிலும்

நண்பர்களே எனது நான்காவது நாள் சீனப் பயணமாக நான் இன்று சென்ற இடம் லாமாக் கோவில். காலையில் நேயர் விருப்பம் நிகழ்ச்சிக்காக எனது விருப்பப் பாடல்களை பதிவு செய்தேன். அந்த நிகழ்ச்சியின் தயாரிப்பாளர் சரஸ்வதி இன்று என்னுடன் அந்த நிகழ்ச்சியை பதிவு செய்தார்கள்.

 

அதன் பின் நாங்கள் இன்று மதியம் இந்தியன் கிட்சன் எனப்படும் இந்திய உணவுகள் மட்டுமே பரிமாறப்படும் உணவகத்திற்கு சென்றோம். என்னுடன் சரஸ்வதி மற்றும் மோகன் வந்தனர். மிகவும் அருமையான உணவு வகைகளை அங்கு சாப்பிட்டு மகிழ்ந்தோம்.

 

அங்கு ஜெயங்கொண்டத்தில் இருந்து வந்து சீனாவில் பத்து ஆண்டுகளாக பணியாற்றி வரும் செந்தில் நாதன் எனும் நண்பரை சந்தித்தேன். அவரிடம் நீண்ட நேரம் பேச்சுத்தமிழில் பேசியது மகிழ்ச்சியாக இருந்தது. அப்பொழுது நமது நண்பர் திரு.கலைவாணன் ராதிகா அவர்களை நினைத்துக் கொண்டேன்.

 

அந்த இந்தியன் கிட்சன் அமைந்துள்ள இடம் உலகின் அனைத்து நாடுகளின் தூதரகங்கள் அமைந்துள்ள அதிமுக்கியப் பகுயாகும். இதனால் அங்கு பல்வேறு நாட்டினரைக் காண முடிந்தது.

 

அதன் பின் நாங்கள் சென்றது லாமா கோவில். மிகவும் அருமையான, அமைதியான கோவில். அங்கு நம் நாட்டில் கோவில்களில் பக்தி ஏற்றுவது போன்று, இங்கும் புத்த பெருமானுக்கு வரும் பக்தர்கள் பக்தி ஏற்றுகிறார்கள். மிகவும் அருமையான வாசனை அதில் வருகிறது. நம் ஊர் பக்தியைப் போல் அல்லாது, இது மிகப் பெரிதாக உள்ளது. அதில் பல்வேறு உருவங்கள் அச்சிடப்பட்டுள்ளன. 

 

அங்குள்ள புத்தர் சிலைகள் பலவற்றின் பெயர்கள் நமது தமிழ் பெயருடன் ஒன்றிணைகிறது. மிக  முக்கியமாக சாக்கியமுனி, போதிசத்துவர், சிம்கநாதா மற்றும் பைசாஜ்ஜிய குரு போன்ற பெயர்களைக் கூறாலாம்.

 

மாலையில் நாங்கள் சென்றது லோட்டஸ் தெரு. அடேங்கப்பா... என்றது மனது, காரணம் அவ்வளவு வகையான மதுக்கடைகள்.  அங்கே எந்தக்கடையிலும் நம் ஊரைப் போன்று கூட்டம் இல்லை. பெரிய பெரிய டின்னில்களில் தான் மது வகைகளை விற்கிறார்கள். ஆனால் அங்கு நான் காபி மட்டுமே குடிதேன் என்றால் யாரும் நம்ப மாட்டீகள். எனக்கான காபியை ரூ.180 கொடுத்து சரஸ்வதி வாங்கிக் கொடுத்தார்கள்.

 

அதன் பின் மாலையில் நாங்கள் சீன தேசிய அக்ரோபடிக் குழுவின் நடனத்தினைக் காண சென்றோம். முதலில் நான் நினைத்தேன், இது சாதாரண சர்கஸ் நிகழ்ச்சி தானே என்று. அதன் பின் தான் உணர்ந்தேன் எவ்வளவு அருமையான இந்தக் கலையை சாதாரண சர்கஸ் என்று நினைத்துவிட்டேன் என்று.

 

அவ்வளவு அற்புதமாக இருந்தது.  அதில் ஆடப்பட்ட Buck Jump, Butterfly dancing, Bamding ball, Color umbrellas, Advancement tumbling மற்றும் Bicycle skill போன்றவற்றை ஒரு வார்த்தையில் சொல்லிவிட முடியாது. அதைப் பற்றி விரிவாக உங்களுடன் விரைவில் பகிர்ந்துகொள்கிறேன்.

 

என்ன ஒரு ஒற்றுமை, என்ன ஒரு திறமை. காண கண் கோடி வேண்டும். வாழ்நாளில் கண்டிப்பாக இது போன்றதொரு விளையாட்டினை அனைவரும் ஒரு முறையேனும் காண வேண்டும். மீண்டும் அடுத்த கட்டுரையில் சந்திப்போம் - தங்க.ஜெய்சக்திவேல்

 

Sunday, November 25, 2012

விமான நிலையத்தில் சோனி ஐ.சி.எப்.7600 ஜி.அர்

வணக்கம், இன்றைய நாள்  பல திரில் அனுபவங்களுடன்  இலங்கையில் சென்றது. நமது சீன வானொலி பயணத்தில் முதல் நாள். நான் ஏற்கனவே கூறியபடி இன்றைய தினம் ஒரு முக்கிய இடத்திற்கு திரு.விக்டர் குனதிலகே  அழைத்துச் செல்வதாகக் கூறியிருந்தர்கள். அனால்  அந்த இடத்திற்கு செல்ல முதலில் நான் விமான நிலையத்தினைவிட்டு  வெளியே வர வேண்டும். அப்படி வரும் போது நடந்த முக்கிய நிகழ்வினை உங்களோடு பகிர்வது  அவசியம். காரணம் இது போன்ற அனுபவம் வருங்காலத்தில் உங்களுக்கு ஏற்படாமல் தவிர்க்க அது வசதியாக இருக்கும்.


எங்கு சென்றாலும் முதலில் வானொலிப் பேட்டிகள் எங்காவது விற்கப்படுகிறதா என்று ஆராய்வது எனது வழக்கம். அதே போன்று இந்த முறை நான் கொழும்பு பண்டாரநாயகே சர்வதேச விமான நிலையத்தில் இருந்த பிரத்தியோக சோனி கடைக்கு சென்றேன். சோனி நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட பொருட்கள் மட்டுமே அங்கு விற்கப்பட்டது. அங்கு இருந்த பணியாளரிடம் சோனி ஐ.சி.எப்.7600 ஜி.அர்  மாடல் எண்  கொண்ட வானொலி பெட்டி இருக்கிறதா என்று கேட்டேன். அதற்கு அவர் நீங்கள் வாங்க விரும்பினால் சிறப்பான விலையில் தருகிறேன் என்றார். ஆனால், அதற்கான பணத்தினை நீங்கள் அமெரிக்க டாலரில் மட்டுமே தர வேண்டும் என்றார்.

சரி என்று கூறி  வானொலிப் பெட்டியைக் காட்டுமாறு கூறினேன். அதன் பின் அவர் காட்டிய வானொலி பெட்டி நான் கேட்ட மாடல் அல்ல. அவர் காட்டியது ஐ.சி.எப்.30 எனும் மாடல் எண்  கொண்ட டிஜிட்டல் வானொலிப் பெட்டி. விலை 109 அமெரிக்க டாலர் எனக் கூறினார்.   இந்திய ரூபாயில் 5600 வருகிறது. ஆனால்  நான் கேட்ட வசதிகள் அதில் இல்லாததால் வாங்கவில்லை. இன்னும் ஒரு சில பழைய மாடல் கொண்ட ஒரு சில வானொலிப் பெட்டிகளை காட்டி வாங்குமாறு வற்புறுத்தினார். ஆனால் அவற்றின் விலை தான் சற்று அதிகாமாக இருந்தது.

விமான நிலையத்தினை விட்டு வெளியே  வரும் போது ஏற்பட்ட அனுபவத்தினை இன்னும் கூறவில்லையே. நான் இலங்கைக்காக  தனியான விசா எடுக்கவில்லை. காரணம் எனக்கு இலங்கை வழியாக விமானம் என்பதால் அவர்களே விமான நிலையத்தில் டிரான்சிட் விசா வழங்குவார்கள். அனால் என்னிடம் முதலில் அவர்கள் கேட்டது. நீங்கள் விமான நிலையத்தினை விட்டு வெளியே செல்வதானால் மட்டுமே உங்களுக்கு டிரான்சிட் விசாவினை வழங்குவோம். அதுவும் உங்களுக்காக பதிவு செய்யப்பட்ட ஹோட்டல் ரசீதை காண்பித்தால் மட்டுமே அதுவும் சாத்தியம் என்று கூறிவிட்டனர்.

இது என்ன புது குழப்பம் என்று எண்ணி நொந்து போனேன். காரணம் விக்டர் அவர்களை காலை 9.30க்கு விமான நிலையத்தின் வெளியே உள்ள தபால் அலுவலகம் முன் சந்திப்பதாக கூறியிருந்தேன். பொதுவாக இந்த மாதிரியான டிரான்சிட் விசாவின் பொது அவர்களே நமக்கான ஹோட்டலை  பதிவு செய்துவிடுவதுதான் வழக்கம். அனால் அன்று அப்படி அவர்கள் செய்யவில்லை. இதனால் அவர்கள் என்னை வெளியில் விடவேண்டும் என்றால் நான் ஹோட்டல் பதிவு செய்த விபரத்தினைக் கூற வேண்டும். என் நிலைமையை யோசித்து பாருங்கள். 

வெளியில் செல்ல முடியாவிட்டால், விக்டர் அவர்கள் எனக்காக செய்த ஏற்பாடுகள் அனைத்தும் வீண்! ஒரே குழப்பத்தில் இருந்த எனக்கு மற்றும் ஒரு பிரச்சனை தயாராக காத்து இருந்தது. அது என்ன? வெளியில் சென்றேனா! விக்டரை சந்தித்தேனா? அடுத்த பதிவில் அதனைக் கூறுகிறேன். காரணம் விமானம் பீஜிங் செல்ல வந்துவிட்டதாக அறிவிப்பு ஒலித்துக்கொண்டு இருக்கிறது.




Saturday, November 24, 2012

பீஜிங் பயணத்தில் இலங்கை

வணக்கம் நண்பர்களே , நான் தற்பொழுது சீன வானொலிக்கான பீஜிங் பயணத்தில் இலங்கை பண்டாரநாயகே சர்வதேச விமான நிலையத்தில் உள்ளேன். இன்று நண்பரும் முதுபெரும் டிஎக்ஸ்ருமான திரு.விக்டர் குணதிலகே அவர்களை சந்திக்க உள்ளேன். விக்கட அவர்கள் வாய்ஸ் அப் அமெரிக்காவின் முழு நேர கண்காணிப்பாளர். அவரிடம் இல்லாத வானொலிப் பெட்டிகள் இல்லை எனக் கூறலாம். இன்று முழுவதும் அவருடன் தான் எனது பொழுது கழிய உள்ளது.

வானொலி பயணத்தில் பலபுதிய நண்பர்களை சந்திப்பது என்றுமே ஒரு மகிழ்ச்சியைக் கொடுக்கும். ஏற்கனவே திரு.விக்டர் அவர்களை சென்னையில் வைத்து சந்தித்தாலும், இன்று அவரை அவரின் நாட்டில் வைத்து சந்திப்பதில் எனக்குமகிழ்ச்சியைத் தருகிறது.




இன்றைய பயணத்தில் ஒரு சில மிக்கிய இடங்களை இலங்கையில் காண ஏற்பாடு ஆகியிருக்கிறது. அவை எந்த இடங்கள் என்பதை அறிந்து கொள்ள ஆர்வமாக இருப்பீர்கள். நானும் தான் அதே ஆர்வத்துடன் உள்ளேன். காரணம் இதுவரை அவர் கூறியது ஒன்று தான். ஆம், "உங்களை ஒரு முக்கிய இடத்துக்கு அழைத்து செல்கிறேன், தாயாராக இருங்கள்" என்பது தான் அது. மீண்டும் உங்களை இரவு வலைப்பூ வழியாக சந்திக்கிறேன்.

Monday, November 12, 2012

பொது ஒலிபரப்பு சேவையில் 65 ஆண்டுகள்

பொது ஒலிபரப்பு சேவையின் 65-வது ஆண்டு நவம்பர் 12, 2012 அன்று இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் பொதுத்துறை ஒலிபரப்பு என்றால், அது "அகில இந்திய வானொலி'தான்.
ஒவ்வொரு ஆண்டும் 12 நவம்பரை பொது ஒலிபரப்பு சேவை நாளாக கொண்டாடக் காரணம், மகாத்மா காந்தி குருúக்ஷத்திர நகரில் உள்ள அகில இந்திய வானொலி மூலம் பாகிஸ்தானில் இருந்து வந்த அகதிகளுக்கு ஆறுதல் செய்தியை வழங்கினார். இது நடந்தது 12 நவம்பர் 1947. எனவே அந்த நாளையே பொது ஒலிபரப்பு சேவையின் நாளாக இன்று வரை அகில இந்திய வானொலி கொண்டாடி வருகிறது.
இதில் ஒரு ஆச்சரியம் என்னவெனில், மகாத்மா காந்தி முதலும் கடைசியுமாகச் சென்ற ஒரே வானொலி நிலையம் இதுதான்.
பொதுமக்கள் தகவல்களைப் பெறவும், அவர்களின் அறிவாற்றலை கல்வி கற்பிப்பதன் மூலம் வளர்க்கவும், அதே சமயத்தில் மகிழ்ச்சியூட்டவும் செய்வதே நோக்கமாகும். அது இன்றளவும் அகில இந்திய வானொலியில் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
இந்தியாவில் பொது ஒலிபரப்பு சேவையானது இந்திய ஒலிபரப்பு நிறுவனம் என்ற பெயரில் 1927இல் தொடங்கப்பட்டது. 1936இல் அகில இந்திய வானொலி எனப் பெயர் மாற்றம் அடையும் வரை இது வேகமாக வளர்ந்தது.
அதன் பின் பொது ஒளிபரப்பு சேவையில் தூர்தர்சனும் இணைந்து கொண்டது.
1990இல் தனியார் தொலைக்காட்சிகள் வரும்வரை தனிக்காட்டு ராஜாவாக இருந்தது தூர்தர்சன். இந்தியாவில் 1970இல் தொடங்கப்பட்ட தூர்தர்சன் பொது ஒளிபரப்பு சேவையில் முடி சூடா மன்னனாகத் திகழ்ந்தது ஒரு காலம். 600 ஒளிபரப்பிகளைக் கொண்டு இந்தியாவின் அனைத்து இடங்களையும் சென்று சேர்ந்த முதல் தொலைக்காட்சி இதுவாகும்.
இன்று உலகின் இரண்டாவது மிகப்பெரிய தொலைக்காட்சி நிறுவனமாக தூர்தர்சன் இருக்கிறது.
பிரசார் பாரதி (இந்திய ஒலி-ஒளிபரப்பு கார்ப்பரேஷன்) நவம்பர் 23, 1997இல் அமைக்கப்பட்டது. இதன் நோக்கமே, அரசின் எந்த ஊடகமும் அதன் கட்டுப்பாட்டில் இல்லாமல் தனித்துச் சுதந்திரமாக மக்களுக்கான சேவையைச் செய்ய வேண்டும் என்பதே ஆகும். 1990இல் நாடாளுமன்றத்தில் பிரசார் பாரதி சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் செப்டம்பர் 15, 1997இல் தான் நிறைவேற்றப்பட்டது.
இதன் மூலம் அரசு ஊடகங்களான அகில இந்திய வானொலி மற்றும் தூர்தர்சன் சுதந்திரமாகச் செயல்பட பிரசார் பாரதி சட்டம் வழிவகை செய்தது.
வானொலி மற்றும் தொலைக்காட்சி சேவையில் இன்று பிரசார் பாரதி உலகின் முன்னணி நிறுவனமாக உள்ளதில் நமக்கெல்லாம் பெருமையே. அரசின் 250க்கும் மேற்பட்ட வானொலிகள் மற்றும் 50க்கும் மேற்பட்ட தொலைக்காட்சிகள் முறையே 350க்கும் மேற்பட்ட வானொலி ஒலிபரப்பிகள் மற்றும் 1400க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி ஒளிபரப்பிகள் மூலம் இந்திய நாட்டின் மூலை முடுக்குகளையெல்லாம் சென்றடைகிறது. இதன் மூலம் 40 கோடி மக்கள் பயனடைகின்றனர்.
போட்டிகள் இன்றி அமையாது உலகு. போட்டி ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும். அது மனிதனை நல்வழிப்படுத்துவதாக இருக்க வேண்டும். ஒலி, ஒளிபரப்பு சேவைக்கு தனியார் துறையும் போதுமான பங்களிப்பு அளித்து நாட்டின் வளர்ச்சி மட்டுமல்லாது தனி மனிதனின் வளர்ச்சியிலும் முக்கிய பங்காற்றட்டும்.
-தினமணி கருத்துக் களம் 12-11-2012
 

Thursday, November 08, 2012

’இந்தியாவில் பொது ஒலிபரப்பு சேவையில் சாதித்ததும் தவறவிட்டதும்’

மேற்கண்ட தலைப்பிலான கருத்தரங்கத்தில்சாதனைப் படைத்த தமிழ் அறிவிப்பாளர்கள்குறித்து நான் பேசவுள்ளேன்.

விபரங்களுக்கு அழைப்பிதலைக் காணவும் 

Thursday, November 01, 2012

புதிய அலைவரிசையில் இலங்கை வானொலிகள்

இலங்கையில் உள்ள பண்பலை வானொலிகள் அலைவரிசையை மாற்றம் செய்துள்ளது. விரிவான விபரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது



Saturday, October 27, 2012

புதிய NewStar DR-111 – டிஜிட்டல் வானொலி விமர்சனம்


ஜார்ஜ் ரோஸ்,  பசிபிக் பெருங்கடலில் உள்ள குவாம் திவுகளில் இருந்து செயல்பட்டு வரும் KTWR வானொலியின் அதிர்வெண் மேலாளர், ட்ரான்ஸ் உலக வானொலியில் NewStar DR-111 ஐ பயன்படுத்திய அனுபவங்களை பற்றி எழுதுகிறார்
எங்கள் அலுவலகத்தில் உள்ள சக அலுவலர்களோடு சேர்ந்து நானும் சமீபத்தில் இந்த செங்டு DR-111 டி.ஆர்.எம் வானொலிப்பெட்டியை வாங்கினோம். அதனை குவாம் போன்ற சிறு தீவில் இயக்கி பார்க்க ஆர்வமுடன் இருந்தோம்.
அவர்கள் முதல் கிடைக்க பெற்றது என "சில மற்ற சக சேர்ந்து நான் பெற்றுக்கொள்ளும் ஒரு வாங்கினார். நாம் இந்த ஏற்பி நிகழ்ச்சி எப்படி பார்க்க KTWR குவாம் மிகவும் ஆர்வமாக இருந்தனர், மற்றும் டிஆர்எம் ஒளிபரப்பு அதிகரிக்க துவங்கும் என கேட்பவரின் ஒரு ஏற்பி இருப்பது சாத்தியம் ஆசியா பகுதியில் இங்கே உள்ளது.
எங்கள் முதல் சோதனையினை ரேடியோ நியுசிலாந்து வானொலியின் (RNZI) டிஆர்எம் ஒலிபரப்பினைக் கேட்டோம். எங்களுக்கும் ஒலிபரப்பும் நிலையத்திற்கும் தொலைவு 6500 கிலோ மீட்டர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. அதனைக் கேட்பது மிகவும் சுவாரசியமாக இருந்தது. நாங்கள் RNZI வானொலியை அனலாக் டிரான்ஸ்மிஷன் மற்றும் டி.ஆர்.எம் ஒலிபரப்புகளை ஒப்பிட்டோம். அதில் டி.ஆர்.எம் ஒலிபரப்பு FM தரத்தினில் அருமையாக இருந்தது.
எங்களது சொந்த ஒலிபரப்பினையும் சோதனை செய்து பார்க்க விருப்பங்கொண்டு முதலில் இந்தியாவை நோக்கிய டி.ஆர்.எம் ஒலிபரப்பினைச் செய்தோம். இரண்டாவது சோதனை ஒலிபரப்பினை ஹாங்காங் நோக்கி செய்து பார்த்தோம்.
சோதனை 1: நாம் டிஆர்எம் முறையில் நாங்கள் முழு ஸ்டீரியோ முறையில் 64 QAM பயன்படுத்தி வடகிழக்கு இந்தியாவிற்கு முதல் சோதனை ஒலிபரப்பினைச் செய்தோம். இதற்காக உயர் தரமான இசையை ஜூலை மாத்தில் பதிவு செய்து ஒலிபரப்பினோம். ஒலிபரப்பின் தரம் மிக அறுமையாக இருந்த்து. நாம் தெற்கில் பெங்களூரிலும் வடக்கில் காத்மாண்டுவிலும் இருந்து கேட்டோம். இரண்டு பகுதிகளிலும் நன்றாகவே கிடைத்த்து. DR-111ல் பதிவு செய்யப்பட்ட ஒலிப்பதிவு எங்களுக்கு அனுப்பப்பட்டது. அந்த ஆடியோ கோப்புகள் உயர் ஸ்டூடியோ தரத்துடன் இருந்த்து கண்டு மகிழ்ந்தோம்.
சோதனை 2: அடுத்து நாங்கள் ஹாங்காங் நோக்கி  ஒலிபரப்பு செய்தோம். இதனை நாங்கள் 16 க்யுஏஎம் தரத்தினில் மோனோவில் ஒலிபரப்பு செய்தோம். கட்டடம் நிறைந்த பகுதில் இந்த ஒலிபரப்பினைக் கேட்டோம். இங்கும் எந்தவித தடங்களும் இல்லாமல் தரமாகவே கிடைத்தது.
டி.ஆர்.எம் வானொலிகளில் குறைந்த விலையுள்ள இந்த வானொலியை நான் சர்வதேச வானொலி நேயர்களுக்கு பரிந்துரைக்கிறேன். காரணம் சந்தையில் மிக அதிக வானொலிப் பெட்டிகளுக்கு மத்தியில் இது ஒரு தரமான வானொலி என அடுத்துக் கூறலாம்.
மேலும் தகவலுக்கு செங்டு NewStar வலைத்தளத்திற்கு செல்ல http://www.cdnse.com/

Saturday, October 20, 2012

ரேடியோ பிரினேஸ்ட்ரோவ்ஸ்கி

மால்டோவா: ரேடியோ பிரினேஸ்ட்ரோவ்ஸ்கி - ஐரோப்பிய கண்டத்தில் உள்ள ஒரு நாடு மால்டோவா. ரஷ்யாவில் இருந்து பிரிந்த இந்த நாட்டின் வானொலியும் தற்பொழுது நேயர்கள் எழுதும் கடிதங்களுக்கு வண்ண அட்டையை அனுப்பி வருகிறது. இவர்களது நிகழ்ச்சிகளை ஜெர்மன் மொழியில் நேயர்கள் தினமும் இந்திய நேரம் அதிகாலை 01.15 முதல் 02.15 வரை 7290 கிலோ ஹெர்ட்சில் கேட்கலாம். இவர்களை வான் அஞ்சல் ஊடாகத் தொடர்பு கொள்ள: Radio PMR, ul. Pravdy 31, MD-3300 Tiraspol, Mldov, Email: radiopmr@inbox.ru, WEB: www.radiopmr.org (Partha Sarathi Goswami)

Saturday, October 13, 2012

இலங்கையின் சிட்டி எஃப்.எம்

சிட்டி எஃப்.எம்: இலங்கையின் தலைநகர் கொழும்புவில் இருந்து முற்றிலும் ஆங்கிலத்தில் ஒலிபரப்பாகிவரும் சிட்டி எஃப்.எம் இனி மூன்று மொழிகளிலும் ஒலிபரப்பாக உள்ளதாக அதன் இயக்குனர் ஹட்சன் சமரசிங்கே தெரிவித்துள்ளார். அவ்வப்போது சிங்களத்திலும் ஒலிபரப்பான இந்த வர்த்தக வானொலி,  இனி தமிழிலும் ஒலிபரப்பாவது கண்டு நமக்கெல்லாம் மகிழ்ச்சியே.
இந்த மகிழ்ச்சிக்கு காரணமானவர் நமது முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் ஆவார். அவர் சமீபத்தில் இலங்கை சென்றபோது “நாடு அமைதியாக இருக்க அனைத்து துறைகளிலும் கட்டாயம் மும்மொழிக் கொள்கை அவசியம்” என்று கூறியதன் பயனாக இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது இலங்கை வானொலி. அப்படியே நமக்கும் கொழும்பு சர்வதேச வானொலியைக் கிடைக்கச் ஏற்பாடுச் செய்திருக்கலாம் நமது முன்னாள் குடியரசுத் தலைவர்?.

Saturday, October 06, 2012

‘லோட்டஸ் டவரில்’ 50 வானொலி சேவைகள்

கொழும்பு: சீனாவுடன் இணைந்து 350 மீட்டர் உயரமுள்ள ஒரு மிகப்பெரிய தொலைத்தொடர்பு கோபுரத்தினைக் கட்ட ஒப்பந்தமாகியுள்ளதாக மீடியா நெட்வொர்க் இணையதளம் கூறுகிறது. இந்த கோபுரத்தின் மூலம் தொலைத்தொடர்பு, தொலைக்காட்சி  மற்றும் வானொலி ஒலிபரப்புகளைச் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதாக அந்த செய்தி கூறுகிறது. ‘லோட்டஸ் டவர்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த கோபுரத்தின் மூலம் 50 தொலைக்காட்சி நிலையங்கள், 50 வானொலி சேவைகள் மற்றும் 10 தொலைப்பேசி சேவைகள் செய்யப்பட உள்ளது. தெற்கு ஆசியாவின் மிக உயர்ந்த டவராக இது இருப்பதோடு, உலகின் 19-வது மிக உயர்ந்த டவர் என்ற சிறப்பும் இதற்கு உண்டு. (Source: Asia-Pacific Broadcasting Union)

Saturday, September 29, 2012

திரிகோணமலை: இலங்கை வானொலி

திரிகோணமலை: இலங்கை வானொலியானது சமீப காலமாக திரிகோணமலையில் உள்ள ஒலிபரப்பிகளைக் கொண்டு சோதனை ஒலிபரப்புகளைச் செய்து வருகிறது. இந்த ஒலிபரப்புத் தளமானது ஜெர்மன் வானொலி தனது சிற்றலை மற்றும் மத்திய அலை ஒலிபரப்புகளுக்காக பயன்படுத்தியது ஆகும்.
கடந்த ஆண்டு இந்த தளத்தினைவிட்டு ஜெர்மன் வானொலி சென்றுவிட்டதால், அந்த ஒலிபரப்பிகளை வாடகைக்கு விட இலங்கை வானொலி தீர்மானித்தது. அதன் பயனாக இப்பொழுது அட்வண்டிஸ்ட் உலக வானொலி மற்றும் குடும்ப வானொலி ஆகியவை தனது ஒலிபரப்புகளைத் இங்கே இருந்து அஞ்சல் செய்யத் துவங்கியுள்ளன. இங்கு அமைந்துள்ள மத்திய அலை ஒலிபரப்பி மிகவும் சக்தி வாய்ந்தது ஆகும்.
எனவே அதனைக் கொண்டு இலங்கை வானொலி ‘தென்றல்’ ஒலிபரப்பினைச் தமிழக நேயர்களுக்கு அஞ்சல் செய்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என தமிழக மக்கள் எதிர்பார்கின்றனர். எண்ணம் நிறைவேற ஹட்சன் சமரசிங்கே மனது வைக்கவேண்டும்.

Saturday, September 22, 2012

போல்ஸ்கி வானொலி

போலந்து: போல்ஸ்கி வானொலி - சிற்றலையில் ஒலிபரப்பில் இருந்து கடந்த 30 மார்ச் 2012-ல் போலந்தின்தேசிய வானொலியான போல்ஸ்கி வானொலி நிறுத்திக் கொண்டது. தனது 80 ஆண்டுகால சிற்றலை சேவையில் இருந்து நிறுத்தப்படும் மற்றும் ஒரு பழமையான வானொலியாகும்.

Saturday, September 15, 2012

க்யூ.ஆர் குறியீட்டில் சர்வதேச வானொலி

அறிவிப்பு: உங்களிடம் க்யூ.ஆர் குறியீட்டினை ஸ்கேன் செய்யும் வசதி கொண்ட மொபைல் இருந்தால், அருகில் உள்ள படத்தினை ஸ்கேன் செய்து இனி சர்வதேச வானொலியைப் படிக்கலாம். –ஆசிரியர்

Thursday, September 13, 2012

சர்வதேச வானொலி விழா



சர்வதேச வானொலி விழா (IRF) ஜூரிச், சுவிட்சர்லாந்தில் 12 முதல் 16 செப்டம்பர் 2012 வரை நடைபெற உள்ளது.  உலகின் மிக முக்கிய மற்றும் செல்வாக்கு மிகுந்த நடுத்தர, இசை வானொலிகள் பல இதில் கலந்துகொள்ள உள்ளன.  இது போன்ற பொது விழா நிகழ்வு வடிவம் உலகிலேயே இது தான் முதன் முறை. விழாவில் இசை வானொலி துறையில் புகழ்பெற்ற பல வானொலிகள் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளது. இதற்கென ஒரு தனிப்பட்ட இணைதளம் தொடங்கப்பட்டு, அதிலும் ஒலிபரப்பினை வழங்குகிறது. முகவரி: http://www.internationalradiofestival.com

இந்தோனேசியாவிற்கு இலவச பயணம்



ரேடியோ இந்தோனேசியா(RRI) தனது சிற்றலை நேயர்களுக்கு ஒரு போட்டியை வைத்து, அதில் வெற்றி பெற்றவர்களை இலவசமாக தனது நாட்டிற்கு அழைத்து சிறப்பித்து வருகிறது. இந்தப்போட்டியில் கடந்த ஆண்டு இந்தியாவை சார்ந்த சுவப்பன் சக்ரவர்த்தி இலவச பயணம் மேற்கொண்டார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டின் வெற்றியாளார்கள்:
1. Christian Milling, from Euskirchen, Germany :
2. Tarek Zeidan from Helwan Cairo Egypt.
2. Didarul Iqbal, from Dhaka, Bangladesh :
3. Keith Sedgwick from London, GB
5. Mauno Ritola from Heinävaara, Finland

Wednesday, September 12, 2012

குடியரசு தலைவர் பிரணாப் சென்னை வானொலியைப் புகழ்ந்தார்



சென்னை அகில இந்திய வானொலி (AIR) நிலையத்தினை தமிழ் மொழி மற்றும் கலாச்சாரத்தினை பிரபலப்படுத்துவதில் "மகத்தான" பங்களிப்பிற்காக ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பாராட்டுத் தெரிவித்தார்.
"பல ஆண்டுகளாக தரமான நிகழ்ச்சிகளை தமிழ் மொழி மற்றும் கலாச்சாரத்தினை வளர்த்தெடுப்பதில் சென்னை வானொலியின் பங்களிப்பு அபரிமிதமாக இருந்துள்ளது”. குறிப்பாக கர்நாடக சங்கீதத்திற்கு இது செய்த பங்களிப்பு மிக அதிகம்.

இது இளைஞர்களின் திறனை மெம்படுத்தும் வகையான நிகழ்ச்சிகளை ஒலிபரப்பி வந்துள்ளது மற்றும் பாரம்பரிய இசையை பிரபலப்படுத்த உதவி செய்திருக்கிறது. சென்னை வானொலி இன்று சமூகத்தில் பரந்துபட்ட அனைத்து மக்களுக்கும் உதவுகிறது," என்று கூறினார்.

இந்த நிலையமானது விவசாய விரிவாக்க திட்டங்கள் மற்றும் கல்வி திட்டங்கள் மூலம் விவசாயிகள் மற்றும் மாணவர்களை மெம்படுத்த உதவியது என்றும் குறிப்பிட்டார். சென்னை வானொலி எழும்பூரில் ஒரு சிறிய ஸ்டூடியோவில் சென்னை மாகாணத்தின் ஆளுநர் எர்ஸ்கின் கோமகனால் தொடங்கி வைக்கப்பட்டது.

ஜூன் 16, 1938 அன்று திறக்கப்பட்ட இந்த நிலையமானது ஒரு 250W மத்திய அலை டிரான்ஸ்மிட்டர் கொண்டு தொடக்க காலத்தில் ஒலிபரப்பி வந்தது குறிப்பிட்த்தக்கது. ஜூலை 1954 ல் இருந்து இன்றுள்ள காமராசர் சாலை வளாகத்தில் இருந்து இயக்கப்பட்டு வருகிறது.

Tuesday, September 11, 2012

தமிழோசையின் முன்னாள் தலைவர் ஷங்கரன் சங்கரமூர்த்தி மறைந்தார்


தமிழோசையின் முன்னாள் துறைப் பொறுப்பாளரும் பிரபல ஒலிபரப்பாளருமான ஷங்கரன் சங்கரமூர்த்தி ஞாயிற்றுக்கிழமை லண்டன் மருத்துவமனை ஒன்றில் காலமானார்.

 அந்தக் கம்பீரமான குரலை தமிழோசையின் நீண்ட நாள் நேயர்கள் மறந்திருக்க முடியாது.
சுமார் இரண்டரை தசாப்தங்கள் தமிழோசை மூலமாக வானலைகளில் உலகின் பல்வேறு மூலை முடுக்குகளிலிருந்தும் தமிழோசையைக் கேட்டு வந்த அந்தக்கால நேயர்களை மயக்கிய அந்தக் குரலுக்குச் சொந்தக்காரரான ஷங்கரன் சங்கரமூர்த்தி மறைந்துவிட்டார்.
கடந்த சில மாதங்களாகவே நோய்வாய்ப்பட்டிருந்த சங்கரமூர்த்தி, லண்டன் மருத்துவமனை ஒன்றில் சிறுநீரக மற்றும் இருதய நோயால் காலமானார். அவருக்கு வயது 82. மறைந்த சங்கரமூர்த்தி, 1966லிருந்து 1991 வரை தமிழோசையின் பணியாற்றினார். அவர் பணியாற்றிய காலப் பகுதியில் தமிழோசை வாரமிருமுறை என்ற நிலையிலிருந்து வாரம் ஐந்து நாட்கள் ஒலிபரப்பு என்ற அளவுக்கு வளர்ந்தது.
தமிழோசையில் 1970கள் மற்றும் 80களில் பெரும்பாலும் சஞ்சிகை வடிவில் இருந்த நிகழ்ச்சி, சங்கரமூர்த்தியின் தமிழ்ப் புலமைக்கு ஒரு பெரிய களத்தைத் தோற்றுவித்துத் தந்தது.
ஆழ்ந்த தமிழ்ப் புலமை கொண்ட சங்கரமூர்த்தி, அந்தக் காலகட்டத்தில் ஆங்கில நாடகாசிரியர் ஷேக்ஸ்பியரின் பிரபல நாடகங்கள் பலவற்றையும், கிரேக்க மகாகவி ஹோமரின் இதிகாசங்களான இலியட், ஒடிசி போன்றவற்றையும், தமிழில் கவிதை நாடக வடிவிலேயே தந்து, அவை நேயர்களின் பெரும் வரவேற்பைப் பெற்றன.
மற்றொரு பிரிட்டிஷ் நாடகாசிரியர் ஜார்ஜ் பெர்னார்ட் ஷாவின் புகழ் பெற்ற நாடகமான “பிக்மேலியன்” என்ற நாடகத்தையும் ஷங்கர் தமிழில் மொழிபெயர்த்து, அதில் தமிழ் திரைப்பட நடிகை ராதிகா நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இது தவிர அவரே சொந்தமாக பல வானொலி நாடங்கங்களையும் இயற்றியிருக்கிறார். தமிழோசை நேயர்கள் அடிக்கடி கேட்ட அந்தப் பாடல் கூட அவர் இயற்றி சீர்காழி கோவிந்தராஜன் இங்கே லண்டன் வந்தபோது பாடி ஒலிப்பதிவு செய்யப்பட்ட ஒன்றுதான்.
சங்கரின் மொழிபெயர்ப்புத் திறன் மற்றும் அவரது குரல் வளம், அவருக்கு பல்லாயிரக்கணக்கான விசிறிகளைப் பெற்றுத்தந்தது.
தமிழ் நாட்டுக்கும் இலங்கைக்கும் அவர் பல முறை சென்று நிகழ்ச்சிகளைத் தந்திருக்கிறார்.
(நன்றி: பிபிசி தமிழோசை)

Monday, September 10, 2012

இந்தியாவின் முதல் 1000 கிலோ வாட் டி.ஆர்.எம்


இந்தியாவின் முதல் 1000 கிலோ வாட் டிஜிட்டல் ரேடியோ மொண்டியல் (டி.ஆர்.எம்) சூப்பர் பவர் ஒலிபரப்பி குஜராத் மாநிலம் ஜாம்நகர் மாவட்டத்தில் உள்ள லியாரே கிராமத்தில் உள்ள அகில இந்திய வானொலியில் தொடங்கப்பட்டது.

 இந்த விழாவில் பேசிய பிரசார் பாரதியின் தலைமை நிர்வாக அதிகாரி திரு. ஜவஹர் சிர்கார், அகில இந்திய வானொலி விரைவில் மற்ற நிலையங்களிலும் டி.ஆர்.எம் எனும் டிஜிட்டல் தொழில்நுட்ப டிரான்ஸ்மிட்டர்களை நிறுவவுள்ளது என்று கூறினார். 
இந்த டிஆர்எம் தொழில்நுட்ப சூப்பர் பவர் ஒலிபரப்பி கொண்டு ஒரே நேரத்தில்  டிஆர்எம், ஏ.எம் மற்றும் சைமல்காஸ்ட் முறைகளில் ஒலிபரப்பும் திறன் வாய்ந்தது ஆகும். இதுவே நாட்டின் முதல் சைமல்காஸ்ட் ஒலிபரப்பி என்பதில் நமக்கெல்லாம் பெருமையே. இந்தத் திட்டத்திற்காக 42 கோடி ரூபாயை அரசு ஒதுக்கியிருந்த்து குறிப்பிட்த்தக்கது.

இந்த ஒலிபரப்பி கொண்டு பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈரான் மற்றும் வட மேற்கு திசையில் உள்ள சில வளைகுடா நாடுகளுக்கும் ஒலிபரப்பப்படுகிறது. அகில இந்திய வானொலியின் வெளிநாட்டு சேவைகளான உருது, சிந்தி மற்றும் பெலுசி ஆகிய மொழிகள் இதன் மூலம் ஒலிபரப்பப்படுகின்றன. மத்திய அலையில் 1071 கிலோ ஹெர்ட்ஸிலும் டி.ஆ.எம் சேவையானது 1080 கிலோ ஹெர்ட்ஸிலும் ஒலிபரப்பப்படவுள்ளது. தற்சமயம் சோதனை ஒலிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. இதில் உருது மற்றும் விவித பாரதியின் நிகழ்ச்சிகள் ஒலிபரப்பாகி வருகிறது.

Saturday, September 08, 2012

புதிய வண்ண அட்டை

அமெரிக்கா: WWRB– ஓவர் கம் மினிஸ்ட்ரியால் நடத்தப்படும் இந்த வானொலி தற்பொழுது, தனது நேயர்களுக்கு புதிய வண்ண அட்டையை(QSL) அனுப்பி வருகிறது. நேயர்கள் அனுப்பும் கடிதங்களுக்கு பதில் எழுதவே தயங்கும் வானொலிகளுக்கு மத்தியில் இந்த வானொலி புதிய வண்ண அட்டைகளை அனுப்புவது ஒரு மகிழ்ச்சிக்கு உரிய செய்தியாகும். இவர்களை நீங்களும் தொடர்பு கொள்ளலாம். வான் அஞ்சல் முகவரி: WWRB, Airline Transport Communications Inc., Listeners Services, P.O. Box: 7, Manchester, TN 37349-0007, USA.
 

புதிய வண்ண அட்டை

ரேடியோ ப்ரீ ஆசியா வானொலியானது தனது 16ஆவது ஆண்டு விழாவினைக் கொண்டாடி வரும் இந்தத் தருணத்தினில் புதிய வண்ண அட்டையை வெளியிட உள்ளது. 1996 செப்டம்பர் 29 அன்று மாண்டரின் மொழியில் தனது முதல் ஒலிபரப்பினை ஆசிய நேயர்களுக்காக செய்தது. ஊடக சுதந்திரம் பறிக்கப்பட்ட நாடுகளுக்காக இந்த வானொலியானது அமெரிக்காவினால் தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. வண்ணமயமான இந்த வண்ண அட்டையில் ஆசிய நாட்டின் வரைபடமும், அதன் மேல் ரேடியோ ப்ரீ ஆசியா முத்திரையுடன் கூடிய மைக்கும் உள்ளது மிக அழகாக உள்ளது. தேவைப்படும் நேயர்கள் அவர்களது நிகழ்ச்சியைக் கேட்டுவிட்டு Reception Report அனுப்பினால் இந்த வண்ண அட்டையை (QSL) அனுப்பி வைப்பர். சேகரிப்பாளர்கள் அனைவரின் கையிலும் இருக்க வேண்டிய முக்கிய வண்ண அட்டை ஆதலால், தவராமல் பெற்றுக்கொள்ளுங்கள். தொடர்பு முகவரி:

            Reception Reports
            Radio Free Asia
            2025 M. Street NW, Suite 300
            Washington DC 20036
            United States of America.  
             email at qsl@rfa.org 

Tuesday, September 04, 2012

பேங்காக் வானிலை வானொலி

தாய்லாந்து: பேங்காக் வானிலை வானொலி – பொதுவாக சாதரண சர்வதேச வானொலிகளே நேயர்களுக்கு வண்ண அட்டைகளை அனுப்ப தயங்குகின்ற இந்த காலகட்டத்தில் பேங்காக் வானிலை வானொலி தற்பொழுது கடிதம் எழுதும் நேயர்களுக்கு வண்ண அட்டைகளை உடனுக்குடன் அனுப்பி வருகிறது. அதுவும் மின் அஞ்சலில் அனுப்பிய கடிதத்திற்கு ஒரு மாத காலத்தினில் பதிலினை அனுப்பியுள்ளது இந்த வானொலி. இவர்களது ஒலிபரப்பானது 8743 அலை எண்களில் இந்திய நேரம் மாலை 05.08-க்கு கேட்கலாம். தொடர்பு கொள்ள வேண்டிய மின் அஞ்சல் முகவரி: info_service@tmd.go.th ApXÕ tmd@metnet.tmd.go.th   (JENSEN – USA, Bruce Jensen)