Friday, February 27, 2009

இலங்கை வானொலியின் புதிய ஸ்டிக்கர்


சமீபத்தில் தமிழகம் வந்த இளம் அறிவிப்பாளர் சிவராஜா தக்கீசன் அவர்கள் வழங்கிய சிட்டி எப்.எம்‍மின் அறிய ஸ்டிக்கரை இங்கே காண்கிறீர்கள்.

Wednesday, February 18, 2009

AM/FM On the Air Radio Vintage Microphone Style


Key Specifications/Special Features:

* Unique Microphone Style
* High sensitive AM/FM Radio
* Bright LED Display(On The Air)
* Powerd by Batteries or Adapter DC5 V
* Digital Clock
* Alarm function DATE
For more details click here

Monday, February 16, 2009

வானொலியை காதலிப்பவர்கள் ஒன்று கூடிய நாள்

மாமல்லபுரம் ஹாம் சந்திப்பு - 2009
கடந்த 14 பிப்ரவரி 2009 காலை காதலர் தினம்... வானொலியை காதலிப்பவர்களும் ஒன்று கூடிய நாள் என்றால் அது மிகையில்லை. திரு. சவ்ஹான் அவர்களின் நினைவாக இந்த வருட கூட்டம் வெகு சிறப்பாக ஹோட்டல் வீராஸில் நடந்து முடிந்தது. கலந்து கொள்ள முடியாதவர்கள் காண அன்றைய நிகழ்வுகளின் புகைப்படங்களை கீழ்கண்ட தொடுப்பினில் காணலாம்...இங்கே சொடுக்கவும்...

Thursday, February 12, 2009

சமுதாய வானொலி: சென்னை பயிற்சிப் பட்டறை


சென்னை அண்ணா பல்கலைகழகத்தில் உள்ள அண்ணா பண்பலை வானொலியில் கடந்த பிப்ரவரி 10,11ஆகிய நாட்களில் இந்தியாவில் உள்ள சமுதாய வானொலி நிலைய இயக்குனர்களுக்கான பயிற்சிப் பட்டறைக்கு இந்திய ஒலிபரப்பு அமைச்சகம் செம்காவுடன் இணைந்து ஏற்பாடு செய்து இருந்தது. இந்த பயிலரங்கிற்கு 42 வானொலி நிலையங்களில் இருந்து வந்திருந்தனர்.

Tuesday, February 10, 2009

இலங்கை வானொலியினூடான மறு ஒலிபரப்பை பிபிசி இடைநிறுத்துகிறது

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் பண்பலை ஊடாக இதுவரை மறு ஒலிபரப்பு செய்யப்பட்டுவந்த பிபிசி தமிழோசையின் ஒலிபரப்பு இன்றோடு இடை நிறுத்தப்படுகிறது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் இந்த மறு ஒலிபரப்பு கடந்த 2002 ஆம் ஆண்டு பிப்ரவரியிலிருந்து நடந்து வந்தது.

கடந்த சில மாதங்களாக, பிபிசி தமிழ், சிங்கள மற்றும் பிபிசி ஆங்கில மொழி நிகழ்ச்சிகளின் மறு ஒலிபரப்பு பல முறை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தால் வேண்டுமென்றே வெட்டப்பட்டுவந்தது என்பது இலங்கை நேயர்களுக்குத் தெரிந்திருக்கும்.

கடந்த ஆண்டு நவம்பர் மாத இறுதியிலிருந்து இந்த ஆண்டு ஜனவரி வரை 17 முறை தமிழோசை நிகழ்ச்சிகள் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தால் வெட்டப்பட்டு வந்த நிலையில், இது குறித்து பிபிசியின் உயர் நிர்வாகம் மூலமாக இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தின் நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

இது போன்று, நிகழ்ச்சியின் ஒரு பகுதியை அல்லது பகுதிகளை இடையில் வெட்டுவது என்பது, பிபிசியின் நிகழ்ச்சிகளின் சுயாதீனத் தன்மையை பாதிப்பதாக அமைகிறது என்பதை பிபிசி இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்துக்கு தெளிவாக்கியது.

பிபிசியின் இந்த முயற்சிகளுக்குப் பின்னரும், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம், பிபிசி நிகழ்ச்சிகளை வெட்டிய சம்பவங்கள் கடந்த வாரத்தில் நடந்தன.

இந்த ஒலிபரப்பு இடை நிறுத்தம் குறித்து கருத்துக் கூறிய பிபிசியின் இயக்குநர் நைஜல் சாப்மன், தொடர்ந்து வேண்டுகோள்கள் விடுக்கப்பட்டபோதும்,இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தின் இந்த வெட்டும் நடவடிக்கைகள் தொடர்வது ஏமாற்றமளிப்பதாக இருப்பதாகக் கூறியிருக்கிறார்.

எமது நேயர்களுக்கு செய்திகளை நடுநிலையாக வழங்குவது என்ற நோக்கத்தில் பிபிசி தனது ஒலிபரப்புக்கு முக்கியமானதாகக் கருதும், செய்திச் சுதந்திரம் பக்கசார்பின்மை மற்றும் பல தரப்புக் கருத்துக்களுக்கு இடமளித்தல் போன்ற விழுமியங்களைப் பேணிவருகிறது என்று கூறும் நைஜல் சாப்மன், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் பிபிசியின் நிகழ்ச்சிகளை இடையில் வெட்டாமல் ஒலிபரப்பும் என்ற உத்திரவாதம் தரும்வரை, பிபிசி நிகழ்ச்சிகளை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் மூலம் ஒலிபரப்புவதை இடை நிறுத்துவது என்பதைத் தவிர வேறு வழியில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

பிபிசி நிகழ்ச்சிகள் மீது ஏதும் புகார்கள், குறைபாடுகள் குறிப்பாக இருந்தால் அது குறித்து பிபிசி விசாரிக்கத் தயாராக இருப்பதாகக் கூறும் நைஜல் சாப்மன், ஆனால் இது வரை இந்த மாதிரி எந்தப் புகாரும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திடமிருந்து வரவில்லை என்பதையும் குறிப்பிட்டிருக்கிறார்.

இலங்கை நேயர்கள் நாளையிலிருந்து எமது நிகழ்ச்சியை சிற்றலை ஒலிபரப்பு மீட்டர் பேண்டுகள், 31ல் 9540 கிலோஹேர்ட்ஸ், 41ல் 7205 கிலோஹெர்ட்ஸ் மற்றும் 49ல் 6135 கிலோஹெர்ட்ஸ் ஆகியவற்றில் கேட்கலாம்.
(Source: http://www.bbc.co.uk/tamil/news/story/2008/07/000000_currentaffairs.shtml)

Friday, February 06, 2009

நாகபட்டிணம் அருகில் ஒரு சமுதாய வானொலி

நாகபட்டிணம் விழுந்தமாவடி அருகில் உள்ள கீழயூரில் 'தானம்' எனும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தால் ஒரு சமுதாய வானொலி தொடங்கப்பட உள்ளது. இதற்கான அனுமதியை சமீபத்தில் இந்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் வழங்கியுள்ளது. இந்த அமைப்பானது ஏற்கனவே காரைக்கால் அகில இந்திய வானொலி மூலம் தனது நிகழ்ச்சிகளை ஒலிபரப்பி வறுவது இங்கு குறிப்பிடத்தக்கது. இந்த வானொலி தொடர்பான மேலதிக விபரங்களுக்கு...
DHAN Foundation
18, Pillaiyar Koil Street
S.S. Colony, Madurai - 625 016.
Tamil Nadu, INDIA
Tel: +91 - 452 - 2610794, 2610805
Fax: +91 - 452 - 2602247
Email: dhan@md3.vsnl.net.in
களஞ்சியம் வானொலி பற்றிய விபரங்களுக்கு..