Friday, November 30, 2012

செயற்கை ஏரியில் பீகிங் பல்கலைக்கழகம்

எனது ஐந்தாவது நாள் சீனச் சுற்றுப்பயணம் மிகவும் மறக்க முடியாத ஒன்றாக இருந்தது. அதற்கான காரணத்தினை நீங்களே இந்தக் கட்டுரையின் முடிவில் அறிவீர்கள்.

 

காலையில் எங்களது பல்கலைக்கழக மாணவர்களுக்காக நான் தாயாரிக்கும் ஆவண படத்திற்கான காட்சிகளை சீன வானொலியின் பல்வேறு பகுதிகளில் எடுத்தேன். அதன் பின் நட்புப் பாலம் நிகழ்ச்சிக்கான ஒலிப்பதிவில் தமிழ் பிரிவின் நிபுனர் தமிழன்பன் அவர்களுடன் கலந்து கொண்டேன்.

 

மதிய உணவுக்கு பின்  தமிழ் பிரிவின் பணியாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்தனர். அவர்களுக்காக ஒரு மணி நேரம் "இந்தியாவில் வானொலி: நேற்று, இன்று, நாளை" என்ற தலைப்பினில் ஒரு சிறப்புரை ஆற்றினேன்.

 

மதியம் நாங்கள் சென்றது பீகிங் பல்கலைக்கழகம். 1902ல் தொடங்கப்பட்ட இந்தப் பல்கலைக்கழகத்திற்கு என்னுடன் அன்பான இலக்கியாவும், பண்பான மேகலாவும் வந்தனர்.

 

பல்கலைக்கழகத்தில் பல்வேறு இடங்களை சுற்றிப்பார்தாலும் மறக்க முடியாத இடம் அந்த பல்கலைக்கழகத்தில் உள்ள செயற்கை ஏரி. நம்பமுடியாத அளவில் அந்த ஏரி ஒரு செயற்கையான ஆற்றுடன் இணைக்கப்பட்டு இருந்தது. அதில் பணி கட்டியாகி இருந்தது.

 

மேலும் பல்கலைக்கழகத்தினில் நாங்கள் இதழியல் மற்றும் மக்கள் தொடர்பு துறைக்கு சென்றோம். அதன் பின் மிகப் பெரிய பல்கலைக்கழக நூலகத்திற்கு சென்றோம். கல்வியாளராக இந்த இடங்கள் எனக்கு மிகுந்த மன மகிழ்ச்சியைத் தந்தது. 

 

தமிழ்பிரிவின் பயண திட்டத்தில் இந்த இடம் இல்லை, ஆனாலும், எனது வேண்டுதலை ஏற்று  தேன்மொழி இதனை கலைமகளோடு இணைந்து இந்த ஏற்பாட்டினை செய்து இருந்தார்கள்.

 

இதற்காக பல முன் ஏற்பாடுகளை செய்தவர் இலக்கியா.  ஆக ஐந்து நாட்கள் பயணம் இனிதே நிறைவடைந்து நாளை ஆறாவது நாள் பயணமாக நாங்கள் செல்ல உள்ள இடம் பீஜிங்கின் மிக முக்கியமான எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் விற்கும் இடம்.

 

உலகில் உள்ள அனைத்து வகையான வானொலிப் பெட்டிகளும் கிடைக்கும் ஒரே இடம். கலைமணி இதற்காக பல ஏற்பாடுகளைச் செய்தார். நாளை என்னுடன் துணையாக  வருபவர் மீண்டும் சரஸ்வதி.

 

– அன்புடன் தங்க.ஜெய்சக்திவேல்

 

 

போதிசத்துவரும் லாமாக் கோவிலும்

நண்பர்களே எனது நான்காவது நாள் சீனப் பயணமாக நான் இன்று சென்ற இடம் லாமாக் கோவில். காலையில் நேயர் விருப்பம் நிகழ்ச்சிக்காக எனது விருப்பப் பாடல்களை பதிவு செய்தேன். அந்த நிகழ்ச்சியின் தயாரிப்பாளர் சரஸ்வதி இன்று என்னுடன் அந்த நிகழ்ச்சியை பதிவு செய்தார்கள்.

 

அதன் பின் நாங்கள் இன்று மதியம் இந்தியன் கிட்சன் எனப்படும் இந்திய உணவுகள் மட்டுமே பரிமாறப்படும் உணவகத்திற்கு சென்றோம். என்னுடன் சரஸ்வதி மற்றும் மோகன் வந்தனர். மிகவும் அருமையான உணவு வகைகளை அங்கு சாப்பிட்டு மகிழ்ந்தோம்.

 

அங்கு ஜெயங்கொண்டத்தில் இருந்து வந்து சீனாவில் பத்து ஆண்டுகளாக பணியாற்றி வரும் செந்தில் நாதன் எனும் நண்பரை சந்தித்தேன். அவரிடம் நீண்ட நேரம் பேச்சுத்தமிழில் பேசியது மகிழ்ச்சியாக இருந்தது. அப்பொழுது நமது நண்பர் திரு.கலைவாணன் ராதிகா அவர்களை நினைத்துக் கொண்டேன்.

 

அந்த இந்தியன் கிட்சன் அமைந்துள்ள இடம் உலகின் அனைத்து நாடுகளின் தூதரகங்கள் அமைந்துள்ள அதிமுக்கியப் பகுயாகும். இதனால் அங்கு பல்வேறு நாட்டினரைக் காண முடிந்தது.

 

அதன் பின் நாங்கள் சென்றது லாமா கோவில். மிகவும் அருமையான, அமைதியான கோவில். அங்கு நம் நாட்டில் கோவில்களில் பக்தி ஏற்றுவது போன்று, இங்கும் புத்த பெருமானுக்கு வரும் பக்தர்கள் பக்தி ஏற்றுகிறார்கள். மிகவும் அருமையான வாசனை அதில் வருகிறது. நம் ஊர் பக்தியைப் போல் அல்லாது, இது மிகப் பெரிதாக உள்ளது. அதில் பல்வேறு உருவங்கள் அச்சிடப்பட்டுள்ளன. 

 

அங்குள்ள புத்தர் சிலைகள் பலவற்றின் பெயர்கள் நமது தமிழ் பெயருடன் ஒன்றிணைகிறது. மிக  முக்கியமாக சாக்கியமுனி, போதிசத்துவர், சிம்கநாதா மற்றும் பைசாஜ்ஜிய குரு போன்ற பெயர்களைக் கூறாலாம்.

 

மாலையில் நாங்கள் சென்றது லோட்டஸ் தெரு. அடேங்கப்பா... என்றது மனது, காரணம் அவ்வளவு வகையான மதுக்கடைகள்.  அங்கே எந்தக்கடையிலும் நம் ஊரைப் போன்று கூட்டம் இல்லை. பெரிய பெரிய டின்னில்களில் தான் மது வகைகளை விற்கிறார்கள். ஆனால் அங்கு நான் காபி மட்டுமே குடிதேன் என்றால் யாரும் நம்ப மாட்டீகள். எனக்கான காபியை ரூ.180 கொடுத்து சரஸ்வதி வாங்கிக் கொடுத்தார்கள்.

 

அதன் பின் மாலையில் நாங்கள் சீன தேசிய அக்ரோபடிக் குழுவின் நடனத்தினைக் காண சென்றோம். முதலில் நான் நினைத்தேன், இது சாதாரண சர்கஸ் நிகழ்ச்சி தானே என்று. அதன் பின் தான் உணர்ந்தேன் எவ்வளவு அருமையான இந்தக் கலையை சாதாரண சர்கஸ் என்று நினைத்துவிட்டேன் என்று.

 

அவ்வளவு அற்புதமாக இருந்தது.  அதில் ஆடப்பட்ட Buck Jump, Butterfly dancing, Bamding ball, Color umbrellas, Advancement tumbling மற்றும் Bicycle skill போன்றவற்றை ஒரு வார்த்தையில் சொல்லிவிட முடியாது. அதைப் பற்றி விரிவாக உங்களுடன் விரைவில் பகிர்ந்துகொள்கிறேன்.

 

என்ன ஒரு ஒற்றுமை, என்ன ஒரு திறமை. காண கண் கோடி வேண்டும். வாழ்நாளில் கண்டிப்பாக இது போன்றதொரு விளையாட்டினை அனைவரும் ஒரு முறையேனும் காண வேண்டும். மீண்டும் அடுத்த கட்டுரையில் சந்திப்போம் - தங்க.ஜெய்சக்திவேல்

 

Sunday, November 25, 2012

விமான நிலையத்தில் சோனி ஐ.சி.எப்.7600 ஜி.அர்

வணக்கம், இன்றைய நாள்  பல திரில் அனுபவங்களுடன்  இலங்கையில் சென்றது. நமது சீன வானொலி பயணத்தில் முதல் நாள். நான் ஏற்கனவே கூறியபடி இன்றைய தினம் ஒரு முக்கிய இடத்திற்கு திரு.விக்டர் குனதிலகே  அழைத்துச் செல்வதாகக் கூறியிருந்தர்கள். அனால்  அந்த இடத்திற்கு செல்ல முதலில் நான் விமான நிலையத்தினைவிட்டு  வெளியே வர வேண்டும். அப்படி வரும் போது நடந்த முக்கிய நிகழ்வினை உங்களோடு பகிர்வது  அவசியம். காரணம் இது போன்ற அனுபவம் வருங்காலத்தில் உங்களுக்கு ஏற்படாமல் தவிர்க்க அது வசதியாக இருக்கும்.


எங்கு சென்றாலும் முதலில் வானொலிப் பேட்டிகள் எங்காவது விற்கப்படுகிறதா என்று ஆராய்வது எனது வழக்கம். அதே போன்று இந்த முறை நான் கொழும்பு பண்டாரநாயகே சர்வதேச விமான நிலையத்தில் இருந்த பிரத்தியோக சோனி கடைக்கு சென்றேன். சோனி நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட பொருட்கள் மட்டுமே அங்கு விற்கப்பட்டது. அங்கு இருந்த பணியாளரிடம் சோனி ஐ.சி.எப்.7600 ஜி.அர்  மாடல் எண்  கொண்ட வானொலி பெட்டி இருக்கிறதா என்று கேட்டேன். அதற்கு அவர் நீங்கள் வாங்க விரும்பினால் சிறப்பான விலையில் தருகிறேன் என்றார். ஆனால், அதற்கான பணத்தினை நீங்கள் அமெரிக்க டாலரில் மட்டுமே தர வேண்டும் என்றார்.

சரி என்று கூறி  வானொலிப் பெட்டியைக் காட்டுமாறு கூறினேன். அதன் பின் அவர் காட்டிய வானொலி பெட்டி நான் கேட்ட மாடல் அல்ல. அவர் காட்டியது ஐ.சி.எப்.30 எனும் மாடல் எண்  கொண்ட டிஜிட்டல் வானொலிப் பெட்டி. விலை 109 அமெரிக்க டாலர் எனக் கூறினார்.   இந்திய ரூபாயில் 5600 வருகிறது. ஆனால்  நான் கேட்ட வசதிகள் அதில் இல்லாததால் வாங்கவில்லை. இன்னும் ஒரு சில பழைய மாடல் கொண்ட ஒரு சில வானொலிப் பெட்டிகளை காட்டி வாங்குமாறு வற்புறுத்தினார். ஆனால் அவற்றின் விலை தான் சற்று அதிகாமாக இருந்தது.

விமான நிலையத்தினை விட்டு வெளியே  வரும் போது ஏற்பட்ட அனுபவத்தினை இன்னும் கூறவில்லையே. நான் இலங்கைக்காக  தனியான விசா எடுக்கவில்லை. காரணம் எனக்கு இலங்கை வழியாக விமானம் என்பதால் அவர்களே விமான நிலையத்தில் டிரான்சிட் விசா வழங்குவார்கள். அனால் என்னிடம் முதலில் அவர்கள் கேட்டது. நீங்கள் விமான நிலையத்தினை விட்டு வெளியே செல்வதானால் மட்டுமே உங்களுக்கு டிரான்சிட் விசாவினை வழங்குவோம். அதுவும் உங்களுக்காக பதிவு செய்யப்பட்ட ஹோட்டல் ரசீதை காண்பித்தால் மட்டுமே அதுவும் சாத்தியம் என்று கூறிவிட்டனர்.

இது என்ன புது குழப்பம் என்று எண்ணி நொந்து போனேன். காரணம் விக்டர் அவர்களை காலை 9.30க்கு விமான நிலையத்தின் வெளியே உள்ள தபால் அலுவலகம் முன் சந்திப்பதாக கூறியிருந்தேன். பொதுவாக இந்த மாதிரியான டிரான்சிட் விசாவின் பொது அவர்களே நமக்கான ஹோட்டலை  பதிவு செய்துவிடுவதுதான் வழக்கம். அனால் அன்று அப்படி அவர்கள் செய்யவில்லை. இதனால் அவர்கள் என்னை வெளியில் விடவேண்டும் என்றால் நான் ஹோட்டல் பதிவு செய்த விபரத்தினைக் கூற வேண்டும். என் நிலைமையை யோசித்து பாருங்கள். 

வெளியில் செல்ல முடியாவிட்டால், விக்டர் அவர்கள் எனக்காக செய்த ஏற்பாடுகள் அனைத்தும் வீண்! ஒரே குழப்பத்தில் இருந்த எனக்கு மற்றும் ஒரு பிரச்சனை தயாராக காத்து இருந்தது. அது என்ன? வெளியில் சென்றேனா! விக்டரை சந்தித்தேனா? அடுத்த பதிவில் அதனைக் கூறுகிறேன். காரணம் விமானம் பீஜிங் செல்ல வந்துவிட்டதாக அறிவிப்பு ஒலித்துக்கொண்டு இருக்கிறது.




Saturday, November 24, 2012

பீஜிங் பயணத்தில் இலங்கை

வணக்கம் நண்பர்களே , நான் தற்பொழுது சீன வானொலிக்கான பீஜிங் பயணத்தில் இலங்கை பண்டாரநாயகே சர்வதேச விமான நிலையத்தில் உள்ளேன். இன்று நண்பரும் முதுபெரும் டிஎக்ஸ்ருமான திரு.விக்டர் குணதிலகே அவர்களை சந்திக்க உள்ளேன். விக்கட அவர்கள் வாய்ஸ் அப் அமெரிக்காவின் முழு நேர கண்காணிப்பாளர். அவரிடம் இல்லாத வானொலிப் பெட்டிகள் இல்லை எனக் கூறலாம். இன்று முழுவதும் அவருடன் தான் எனது பொழுது கழிய உள்ளது.

வானொலி பயணத்தில் பலபுதிய நண்பர்களை சந்திப்பது என்றுமே ஒரு மகிழ்ச்சியைக் கொடுக்கும். ஏற்கனவே திரு.விக்டர் அவர்களை சென்னையில் வைத்து சந்தித்தாலும், இன்று அவரை அவரின் நாட்டில் வைத்து சந்திப்பதில் எனக்குமகிழ்ச்சியைத் தருகிறது.




இன்றைய பயணத்தில் ஒரு சில மிக்கிய இடங்களை இலங்கையில் காண ஏற்பாடு ஆகியிருக்கிறது. அவை எந்த இடங்கள் என்பதை அறிந்து கொள்ள ஆர்வமாக இருப்பீர்கள். நானும் தான் அதே ஆர்வத்துடன் உள்ளேன். காரணம் இதுவரை அவர் கூறியது ஒன்று தான். ஆம், "உங்களை ஒரு முக்கிய இடத்துக்கு அழைத்து செல்கிறேன், தாயாராக இருங்கள்" என்பது தான் அது. மீண்டும் உங்களை இரவு வலைப்பூ வழியாக சந்திக்கிறேன்.

Monday, November 12, 2012

பொது ஒலிபரப்பு சேவையில் 65 ஆண்டுகள்

பொது ஒலிபரப்பு சேவையின் 65-வது ஆண்டு நவம்பர் 12, 2012 அன்று இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் பொதுத்துறை ஒலிபரப்பு என்றால், அது "அகில இந்திய வானொலி'தான்.
ஒவ்வொரு ஆண்டும் 12 நவம்பரை பொது ஒலிபரப்பு சேவை நாளாக கொண்டாடக் காரணம், மகாத்மா காந்தி குருúக்ஷத்திர நகரில் உள்ள அகில இந்திய வானொலி மூலம் பாகிஸ்தானில் இருந்து வந்த அகதிகளுக்கு ஆறுதல் செய்தியை வழங்கினார். இது நடந்தது 12 நவம்பர் 1947. எனவே அந்த நாளையே பொது ஒலிபரப்பு சேவையின் நாளாக இன்று வரை அகில இந்திய வானொலி கொண்டாடி வருகிறது.
இதில் ஒரு ஆச்சரியம் என்னவெனில், மகாத்மா காந்தி முதலும் கடைசியுமாகச் சென்ற ஒரே வானொலி நிலையம் இதுதான்.
பொதுமக்கள் தகவல்களைப் பெறவும், அவர்களின் அறிவாற்றலை கல்வி கற்பிப்பதன் மூலம் வளர்க்கவும், அதே சமயத்தில் மகிழ்ச்சியூட்டவும் செய்வதே நோக்கமாகும். அது இன்றளவும் அகில இந்திய வானொலியில் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
இந்தியாவில் பொது ஒலிபரப்பு சேவையானது இந்திய ஒலிபரப்பு நிறுவனம் என்ற பெயரில் 1927இல் தொடங்கப்பட்டது. 1936இல் அகில இந்திய வானொலி எனப் பெயர் மாற்றம் அடையும் வரை இது வேகமாக வளர்ந்தது.
அதன் பின் பொது ஒளிபரப்பு சேவையில் தூர்தர்சனும் இணைந்து கொண்டது.
1990இல் தனியார் தொலைக்காட்சிகள் வரும்வரை தனிக்காட்டு ராஜாவாக இருந்தது தூர்தர்சன். இந்தியாவில் 1970இல் தொடங்கப்பட்ட தூர்தர்சன் பொது ஒளிபரப்பு சேவையில் முடி சூடா மன்னனாகத் திகழ்ந்தது ஒரு காலம். 600 ஒளிபரப்பிகளைக் கொண்டு இந்தியாவின் அனைத்து இடங்களையும் சென்று சேர்ந்த முதல் தொலைக்காட்சி இதுவாகும்.
இன்று உலகின் இரண்டாவது மிகப்பெரிய தொலைக்காட்சி நிறுவனமாக தூர்தர்சன் இருக்கிறது.
பிரசார் பாரதி (இந்திய ஒலி-ஒளிபரப்பு கார்ப்பரேஷன்) நவம்பர் 23, 1997இல் அமைக்கப்பட்டது. இதன் நோக்கமே, அரசின் எந்த ஊடகமும் அதன் கட்டுப்பாட்டில் இல்லாமல் தனித்துச் சுதந்திரமாக மக்களுக்கான சேவையைச் செய்ய வேண்டும் என்பதே ஆகும். 1990இல் நாடாளுமன்றத்தில் பிரசார் பாரதி சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் செப்டம்பர் 15, 1997இல் தான் நிறைவேற்றப்பட்டது.
இதன் மூலம் அரசு ஊடகங்களான அகில இந்திய வானொலி மற்றும் தூர்தர்சன் சுதந்திரமாகச் செயல்பட பிரசார் பாரதி சட்டம் வழிவகை செய்தது.
வானொலி மற்றும் தொலைக்காட்சி சேவையில் இன்று பிரசார் பாரதி உலகின் முன்னணி நிறுவனமாக உள்ளதில் நமக்கெல்லாம் பெருமையே. அரசின் 250க்கும் மேற்பட்ட வானொலிகள் மற்றும் 50க்கும் மேற்பட்ட தொலைக்காட்சிகள் முறையே 350க்கும் மேற்பட்ட வானொலி ஒலிபரப்பிகள் மற்றும் 1400க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி ஒளிபரப்பிகள் மூலம் இந்திய நாட்டின் மூலை முடுக்குகளையெல்லாம் சென்றடைகிறது. இதன் மூலம் 40 கோடி மக்கள் பயனடைகின்றனர்.
போட்டிகள் இன்றி அமையாது உலகு. போட்டி ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும். அது மனிதனை நல்வழிப்படுத்துவதாக இருக்க வேண்டும். ஒலி, ஒளிபரப்பு சேவைக்கு தனியார் துறையும் போதுமான பங்களிப்பு அளித்து நாட்டின் வளர்ச்சி மட்டுமல்லாது தனி மனிதனின் வளர்ச்சியிலும் முக்கிய பங்காற்றட்டும்.
-தினமணி கருத்துக் களம் 12-11-2012
 

Thursday, November 08, 2012

’இந்தியாவில் பொது ஒலிபரப்பு சேவையில் சாதித்ததும் தவறவிட்டதும்’

மேற்கண்ட தலைப்பிலான கருத்தரங்கத்தில்சாதனைப் படைத்த தமிழ் அறிவிப்பாளர்கள்குறித்து நான் பேசவுள்ளேன்.

விபரங்களுக்கு அழைப்பிதலைக் காணவும் 

Thursday, November 01, 2012

புதிய அலைவரிசையில் இலங்கை வானொலிகள்

இலங்கையில் உள்ள பண்பலை வானொலிகள் அலைவரிசையை மாற்றம் செய்துள்ளது. விரிவான விபரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது