Friday, December 31, 2010

வானொலி மஞ்சரி மாத இதழ் மற்றும் ஒலிபரப்புக் கலை நூல்களை படிக்க

 வானொலி மஞ்சரி மாத இதழ் மற்றும் ஒலிபரப்புக் கலை நூல்களை படிக்க சொடுக்கவும் கீழ்கண்ட தொகுப்பினை



Thursday, December 02, 2010

Ham Exam Model Question Paper

ASOC Model Question paper available


The sample question paper for ASOC exam is now available in the WPC website as follows:

http://wpc.dot.gov.in/DocFiles/Saple%20Q-Paper%20for%20ASOC.pdf

(Jose Jacob, VU2JOS)



MAdurai PARD VAANOLI AGAIN ON AIR

Posted by: "James Madurai" pardmadurai@hotmail.com 
Mon Nov 29, 2010 9:06 pm (PST) 
 
Dear friends, 
Greetings from PARD VAANOLI. 
The Lightening effect that spoiled our Transmitter, Computers, UPS, Sound Systems and household wirings in our Station on 22nd September, made us to unable to broadcast our programmes for the past two months. I wrote this to the forum and many of the members in the forum wrote their concern in the hard situation that we faced. I would like to thank all the members who were with us. Now things are get replaced and we are in the air from yesterday. 
We have made a short video on this and it can be viewed in the following link:
http://www.youtube.com/watch?v=zHRrWBhNa-E
We once again thank all our moral supporters and hope we will achieve more than before for the benefit of the community with which we are working. 
James. (Via Jose Jacob, VU2JOS)

Wednesday, December 01, 2010

SLBC Testing on 1125 kHz


SLBC is conducting tests on 1125 kHz 1530-1630 from today. Just 20kW and music.  Appreciate any reports you can get especially from the South.  You can e-mail reports to Mr. V Kuganesan <kuganesan@yahoo.com>. 

(Jose Jacob, dx_india list ViaG. Victor A. Goonetilleke 4S7VK)  

__._,_.___

__,_._,___

Friday, November 26, 2010

புலிகளின் குரல் - சிறப்பு ஒலிபரப்பு


புலிகளின் குரல் சிற்றலையில் - corrected

புலிகளின் குரல் இன்று மாலை(26-11-2010) சிற்றலை வானொலியில் கேட்கலாம்

0400-0500 IST PM on 17880
0730-0830 IST PM on 6230
0830-1000 IST PM on 13860

Don't miss to listen today
(Jaisakthivel, Via DXLD)


புலிகளின் குரல் சிற்றலையில்

புலிகளின் குரல் இன்று மாலை(26-11-2010) சிற்றலை வானொலியில் கேட்கலாம்

0400-0500 IST PM on 17880
0730-0830 IST PM on 6230
1000-1130 IST PM on 13860

Don't miss to listen today
(Jaisakthivel, Via DXLD)

Tuesday, November 23, 2010

World Radio TV Handbook (WRTH) 2011

WRTH team proud to present the 65th edition of the bestselling directory of global broadcasting on LW, MW, SW and FM.


The Features section this year has the history of Radio St Helena, reviews of the latest equipment, an intriguing look back at some classic 80s & 90s receivers, a visit to AFN in the Florida Keys and much more, including our
regular Digital Update.


The remaining pages are, as usual, full of information on:


• National and International broadcasts and broadcasters
• Clandestine and other target broadcasters
• MW and SW frequency listings
• Terrestrial TV by country

• Extensive Reference section


What is WRTH?

World Radio TV Handbook or WRTH is now in its 65th year. It is the most accurate and complete guide to the world of radio on LW, MW, SW and FM, available in any form.


It is divided into the following sections


Features - This section is in full colour and contains reviews of receivers and ancillary equipment, articles on topical issues such as digital radio, interviews with broadcasters, reception conditions, colour maps showing the location of SW transmitters, and other topics of interest to Listeners and DXers.


National Radio - This section covers the world's domestic radio services. The listings are by country and include all stations broadcasting on LW, MW and SW, and most stations broadcasting on FM, together with contact details.


International Radio - Full details of all broadcasters transmitting internationally are given in this section and are listed by country. The schedules shown are the 'B' or 'winter' SW frequencies as supplied by the broadcasters and confirmed by monitoring, together with any LW or MW frequencies used. It also contains a sub-section showing Clandestine and Other Target Broadcasters arranged by target country. The 'A' or 'summer' schedules, along with updates to broadcaster details, are available as a pdf download from this website in May each year.


Frequency Lists - This section contains MW frequency lists grouped by frequency within regions, lists of all international and domestic SW broadcasts in frequency order, and international SW broadcasts in English, French, German, Portuguese and Spanish, and DRM transmissions shown by UTC.


Television - The TV section has details of the main terrestrial national broadcasters, large regional networks, and some local stations, arranged alphabetically by country.


Reference - This section has tables and listings of: International and Domestic Transmitter sites, Standard Time and Frequency Transmissions, DX Club information, International Organisations, and other essential information.

To see what other people think of WRTH please read the commentsmade about WRTH 2010, or go right ahead and order a copy of WRTH 2011.


Also click the following link for order.

 
(Jaisakthivel, Ardic DX Club, India)


Monday, November 22, 2010

சிற்றலை நேயர்களின் சங்கமம்!





சிற்றலை நேயர்கள் - தோஷிமிச்சி ஹோடாகே
வானொலி கேட்பது ஒரு பொழுதுபோக்கு என்ற நிலை மாறி, வாழ்க்கையில் அது ஒரு முக்கிய அம்சமாகிப்போனது.  துல்லியமான டிஜிட்டல் ஒலிபரப்பு, இணையதளம் மூலமான ஒலிபரப்பு, செயற்கைக்கோள் மூலமான ஒலிபரப்பு, பண்பலை வானொலி, சிற்றலை வானொலிகளுடன் ஏராளமான தொலைக்காட்சி அலைவரிசைகளும் சேர்ந்து அறுசுவை விருந்து வைக்கின்றன.  இது குறித்து சர்வதேச வானொலி பத்திரிகை ஆசிரியர் ஜெயசக்திவேலிடம் பேசினோம்...

""வானொலி ஒலிபரப்பில் மத்திய அலை, பண்பலை ஆகியவை மூலம் அதிக தொலைவுள்ள பகுதிகளுக்கு ஒலிபரப்பு செய்ய முடியாது. ஆனால் சிற்றலை வானொலி ஒலிபரப்பு மூலம் குறைந்த செலவில் அதிக தொலைவுக்கு ஒலிபரப்பு செய்ய முடியும்.

சிற்றலை வானொலி ஒலிபரப்பின் அடிப்படையில் ஹாம் ரேடியோ எனப்படும் அமெச்சூர் வானொலி ஒலிப்பரப்பு முறை உருவாகி உலகம் முழுவதும் பிரபலமானது.

அதனாலேயே, அமெச்சூர் வானொலி ஒலிபரப்பாளர்கள் சிற்றலை வானொலி நேயர்களாக மாறுவதும், சிற்றலை நேயர்கள் அமெச்சூர் வானொலி ஒலிபரப்பாளர்களாக மாறுவதும் வழக்கமான ஒன்றாகவே இருந்துவருகிறது.

மத்திய அலை, பண்பலை ஆகியவற்றின் எல்லைகளுக்கு அப்பால் உள்ள மக்களுக்கு தகவல்களை தெரிவிக்க சிற்றலை ஒலிபரப்பு அவசியம் என்பதால் எல்லா நாடுகளிலும் சிற்றலை வானொலி ஒலிபரப்பு தவிர்க்க முடியாததாகிவிட்டது.

இத்தகைய ஒலிபரப்புகளை கேட்பவர்கள் அந்த நிகழ்ச்சி மற்றும் அது ஒலிபரப்பான அலைவரிசை, நேரம் உள்ளிட்ட விவரங்களை அந்த நிலையத்துக்கு கடிதம் மூலம் தெரிவித்தால் அந்த விவரங்களைச் சரிபார்த்து, அதற்கான அடையாள அட்டை (க்யு.எஸ்.எல்.) சம்பந்தப்பட்ட வானொலி நிலையத்தில் இருந்து நேயருக்கு அனுப்பப்படும்.

இவ்வாறு, பல்வேறு ஒலிபரப்புகளை கேட்டு, அதற்கான அடையாள அட்டைகளைச் சேகரிப்பது அஞ்சல் தலை சேகரிப்பு போல மிகவும் பிரசித்தமானது.

இத்தகைய சிற்றலை நேயர்கள் ஒருவருக்கொருவர் தொடர்பை ஏற்படுத்துவதற்காக பல்வேறு நாடுகளில் சிற்றலை வானொலி நேயர் மன்றம் தொடங்கப்பட்டது. இதில் தற்போதைய நிலையில் நியுசிலாந்தில் உள்ள நேயர் மன்றம் மிகவும் பழமையானது. அதனை அடுத்து ஜப்பான் போன்ற நாடுகளில் செயல்படும் நேயர் மன்றங்கள் வருகின்றன.

இந்த நேயர் மன்றங்கள் சார்பில் சர்வதேச அளவிலும், அவ்வப்போது சிற்றலை ஒலிபரப்பு நிறுவனங்களும் நேயர்களின் கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்கின்றன.

இதில் பென்சில்வேனியாவில் சில ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற சிற்றலை நேயர்கள் கூட்டத்தில் 20 ஆயிரம் பேர் பங்கேற்றனர். உலகில் அதிக எண்ணிக்கையில் சிற்றலை நேயர்கள் பங்கேற்ற கூட்டம் என இது சிறப்பு பெற்றது.

இதுவரை வெளிநாடுகளிலேயே இத்தகைய கூட்டங்கள் நடைபெற்ற நிலையில் இந்தியாவில் உள்ள சிற்றலை நேயர்களை ஒருங்கிணைத்து கூட்டம் நடத்த வேண்டும் என்ற திட்டம் நிறைவேறாமலேயே இருந்துவந்தது.

தற்போது இப்படிப்பட்ட நேயர்கள் ஒரே இடத்தில் சங்கமித்த அரிய நிகழ்வு அண்மையில் பொள்ளாச்சியின் புளியம்பட்டியில் நடந்தது. அமெச்சூர் வானொலி ஒலிபரப்பாளர் சங்கங்கள் நடத்திய இந்த நிகழ்ச்சியில்  60-க்கும் மேற்பட்டோர் சிற்றலை நேயர்கள் எனப் பதிவு செய்து, கூட்டத்தில் பங்கேற்றனர்.  இவர்களைத் தவிர அமெச்சூர் ஒலிபரப்பில் ஈடுபட்டுள்ள 400-க்கும் மேற்பட்டோரும் பங்கேற்றனர். தமிழகத்தில் இருந்து வந்தவர்கள் மட்டுமல்லாது, அமெரிக்கா, ஜப்பான், வியட்நாம், கொரியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து வந்திருந்த சிற்றலை நேயர் மன்ற நிர்வாகிகளும் இதில் பங்கேற்றது சிறப்பாக அமைந்திருந்தது.

அரிதானது எனக் கருதப்படும் தொலைதூரத்தில் உள்ள சிறிய சிற்றலை ஒலிபரப்பு நிறுவனங்களிடம் இருந்து தாங்கள் பெற்ற கியு.எஸ்.எல். அட்டைகளைப் பரஸ்பரம் பரிமாறிக் கொண்டது அனைவருக்கும் மகிழ்ச்சி அளிப்பதாக இருந்தது'' என்றார்.

""சிற்றலை வானொலி கேட்பது என்பது, வெறும் பொழுதுபோக்கு சார்ந்த விஷயம் மட்டுமல்ல, முதலில் பல்வேறு மொழிகளை அடையாளம் காண உதவும் ஒரு பெரிய கருவியாக அமைந்துள்ளது. அதற்கு பிறகு, வெவ்வேறு நாடுகளின் கலாசாரம், பண்பாடு மற்றும் தற்போதைய நிகழ்வுகளை இருந்த இடத்திலிருந்தே அறிந்து கொள்ள உதவும் ஊடகமாக அமைந்துள்ளது.

40 ஆண்டுகளுக்கு முன்னர் ஜப்பானில் பள்ளிகளில் தொடங்கப்பட்ட வானொலி நேயர் மன்றங்கள் மூலம் சிற்றலை வானொலி கேட்கும் பழக்கம் எங்களிடம் பிரபலமானது. ஜப்பானியர்கள் ஆங்கிலம் உள்ளிட்ட உலகின் பிற மொழிகளைக் கற்றுக் கொள்ளும் அளவுக்கு அந்தப் பழக்கம் ஊக்கமளித்தது என்றால் அது மிகையல்ல.

ஆனால், புதிய தலைமுறையினரிடம் போதிய ஊக்கமின்மை காரணமாக சிற்றலை வானொலி கேட்கும் பழக்கம் மெல்ல மெல்ல நலிந்து வருவது எங்களைப் போன்றவர்களுக்கு வருத்தம் அளிப்பதாக அமைந்துள்ளது'' என ஜப்பானில் இருந்து இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காகவே வந்திருந்த ஜப்பான் சிற்றலை வானொலி நேயர் மன்றத்தின் நிர்வாகக் குழு

உறுப்பினர் தோஷிமிச்சி ஹோடாகே கூறினார்.

தமிழகத்தில் 40 வயதை கடந்தவர்களில் சுமார் 50 லட்சம் பேர் சிற்றலை வானொலி நேயர்களாக உள்ளனர்.

""ஜெயின்ட் ஹெலினா, வாய்ஸ் ஆப் அமெரிக்கா, வாய்ஸ் ஆப் துருக்கி, ரேடியோ ருமேனியா உள்ளிட்ட பல நிலையங்களின் ஒலிபரப்புகள் தமிழக சிற்றலை நேயர்களிடம் பிரபலமானதாக உள்ளன. இருப்பினும், புதிய தலைமுறை அமெச்சூர் ஒலிபரப்பாளர்கள் பலரிடம் சிற்றலை வானொலி ஒலிபரப்பு இன்னமும் பிரபலமாகாத ஒன்றாக மாறிவருகிறது. இத்தகைய கூட்டங்களைத் தொடர்ந்து நடத்துவதன் மூலமே சிற்றலை ஒலிபரப்புகளை கேட்பதில் உள்ள சுவாரஸ்யத்தை அடுத்த தலைமுறையினருக்குப் புரியவைக்க முடியும்'' என்றார் ஜெய சக்திவேல்.

20ஆம் ஆண்டில் புலிகளின் குரல் வானொலி

ஒர்நாட்டின் அரசாங்கத்தின் நிலையினையும், பன்னாடுகளின் நிலையினையும் மக்களுக்கு தெரிவிக்கும் கருவியாக காணப்படுவது ஊடகங்கள். ஊடகங்களின் நிலையில்தான் மக்கள் தங்கிஇருக்கின்றார்கள். அச்சு ஊடகங்கள் இலத்திரனியல் ஊடகங்கள் என்று மக்களுக்கு கருத்து கூறும் ஊடகங்களாக காணப்படுகின்றன.

இவ்வாறுதான் விடுதலைக்காக போராடிக்கொண்டிருக்கும் போரளிகளால் தமது விடுதலையினையும் விடுதலை தொடர்பாக மக்களுக்கான கருத்துக்களையும் வழங்கும் ஊடாகமாக 21ஆம்நாள் நவம்பர் மாதம் 1990 ஆண்டு புலிகளின் குரல் வானொலி தமிழ்த் தேசியத்தலைவர் அவர்களினால் தொடங்கிவைக்கப்படுகின்றது.

யாழ்குடாநாட்டினை முதன்மையாக கொண்டு அன்றைய காலப்பகுதியில் விடுதலைப்புலிகளின் செயற்பாடுகள் காணப்படுகின்றன, யாழ்ப்பாணத்தில் மக்கள் செறிந்துவாழும் நிலையில் யாழ்ப்பாண கோட்டைக்கு அருகில் வைத்து பண்பலையில் 98 அதிர்வெண்ணில் புலிகளின் குரல் வானொலி இயங்கிக்கொண்டிருந்தது.

தமிழீழ விடுதலையினை சீர்குலைக்கும் நோக்கில் சில தீயசக்திகளின் எதிர்ப்புக்களுக்கு மத்தியிலும்,நாசகார வேலைகளுக்கு மத்தியிலும் புலிகளின் குரல் தனதுசெயற்பாட்டினை மக்கள் மத்தியில் முன்னெடுத்துசெல்கின்றது.

சிறீலங்காப்படையினரின் வன்னிஇனஅழிப்பின் போது ஆறிற்கு மேற்பட்ட தடவை ஸ்ரீலங்காபடையின் வான்தாக்குதல்களைஎதிர்கொண்டு 2007 ஆம்ஆண்டு 11மாதம் 27 ஆம்நாள்கிளிநொச்சியில் அமைந்துள்ள புலிகளின் குரல் வானொலியின் நடுப்பணிமனை மீது சிறீலங்கா வான்படையினர் நடத்திய ஊடக அடக்குமுறையின் வான்தாக்கதலின போது வானொலியின் அறிவிப்பாளர் உள்ளிட்ட மூன்று பணியாளர்களை இழந்துள்ளது.

நாட்டுப்பற்றாளர்களான அறிவிப்பாளர் இசைவிழி, மற்றும் தொழில்நுட்டபவியலாளர்களான சுரேஸ்லிம்பியோ, தர்மலிங்கம் ஆகியோரை இழந்தது பின்னர் 23 தாடவைக்கு மேல் இடப்பெயர்வுகளை சந்தித்து முள்ளிவாய்கால் வரை மக்களுக்கான செய்தியினையும் விழிப்பினையும் சொல்லிக்கொண்டிருந்த நிலையில் மே மாதம் 15 ஆம்நாளுடன் தனது செயற்பாட்டினை பண்பலையில் இடைநிறுத்தியது, அதாவது ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களின் உரிமைக்குரலாகவும், எதிரியின் பொய்மைக்கு எதிரான, உண்மைக்குரலாகவும், ஓங்கிஒலிக்கவேண்டும் என்ற தமிழீழ தேசியத்தலைவர் அவர்களின் விருப்பத்துடன் செயற்பட்டுக்கொண்டிருக்கும் ஊடாகமாக அன்று புலிகளின் குரல் காணப்படுகின்றது, கடந்த ஆண்டு மே மாதத்தின் பின்னர் புலிகளின் குரல் வானொலி தனக்கான அறிவிப்புக்களை இணையத்தளத்திலும் செய்கோளிலும் தற்போதும் மேற்கொண்டுவருகின்றது அந்தவகையில் எதிர்வரும் மாவீரர் நாள் சிறப்பு ஒலிபரப்புக்களை சிற்றலை ஊடாக உலத்தமிழ்மக்களுக்கும் செய்கோள் மற்றும் பண்பலை ஊடாகவும் மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இன்றையநாள் வானோசை 20ஆம் ஆண்டில் புலிகளின் குரல் வானொலியோடு இணைந்துகொண்டிருக்கம் நேயர்கள் மற்றும் தமிழ் உறவுகள் அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

Thanks to Mr. Kalyan Kumar

Monday, November 01, 2010

தமிழோசை அலைவரிசை மாற்றம்

 
பிபிசி உலக சேவை
பிபிசி உலக சேவை

அக்டோபர் 31 ஆம் தேதி,2010 (ஞாயிற்றுக்கிழமை) முதல் தமிழோசை அலைவரிசைகளில் மாற்றம் இடம்பெறுகின்றது.

தமிழோசை நேயர்கள் மறு அறிவித்தல் வரும் வரை

41 மீட்டரில் 7600 கிலோ ஹேர்ட்ஸ்

31 மீட்டரில் 9605 கிலோ ஹேர்ட்ஸ்

25 மீட்டரில் 11965 கிலோ ஹேர்ட்ஸ்

49 மீட்டரில் 6135 கிலோ ஹேர்ட்ஸ்

ஆகிய சிற்றலை வரிசைகளிலும்

இலங்கை நேயர்கள் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் பண்பலை வலையமைப்பு மூலமாகவும் கேட்கலாம்


Friday, September 17, 2010

Cancellation of RSD 2010

We at Radio St. Helena are also VERY SAD to have to announce the cancellation of RSD 2010. The problems with the tower holding the 3-element Yagi antenna are such that we simply had no choice. There is no chance to fix the tower in the next six weeks, but RSH is quite confident that we will be able to broadcast a RSD 2011 program next year. At the moment, I am investigating the possibility of setting up a wire antenna as a temporary measure, but I am not at all sure whether we will be able to do that. The technical resources on the VERY REMOTE island of St. Helena are not so good. If anything needs to be ordered from England, then it takes a lot of time and effort. (Robert Kipp via Yimber Gaviria via playdx2003 ml via Roberto Scaglione, Sept 11, shortwave yg via DXLD)

Saturday, August 28, 2010

Hamfest India 2010 HF Contest

The 19th Hamfest of India is to be held at Pollachi in Tamilnadu
during November 13-14, 2010. On this occasion, the Organizing
Committee of Hamfest India 2010 has the pleasure in inviting all VU
Hams to participate in the HF Contest whose details are as follows:

Phone Contest:

Start Date & Time: Saturday October 2, 2010, 0600 Hrs IST
End Date & Time:  Sunday October 3, 2010, 1800 Hrs IST

CW Contest:

Start Date & Time: Saturday October 9, 2010, 0600 Hrs IST
End Date & Time:  Sunday October 10, 2010, 1800 Hrs IST

Bands:  7 & 14 MHz.

Category: Single Operator

Exchange: RST plus Serial numbers.

The contest is open to and among VU Hams only. Contacts with Dx hams
by VU hams are invalid.

The same station can be contacted once per band.

Points: Each QSO carries one point.

Multiplier: 10 Point for each station contacted from Pollachi,
irrespective of bands.

Total Score: No.of QSO points x No. of Multipliers

Log: Entries to reach on or before Wednesday, 25 October 2010 by post
/ courier to:

Hamfest India 2010 HF Contest

c/o Mr.S.Vijayan, VU2WDP
2 / 140 Raju Nagar,
Chinnampalayam, Pollachi - 642 001
Tamilnadu

Or by email to

hamfestindia2010@gmail.com with the subject line "HFI 2010 Phone
Contest" or HFI 2010 CW Contest"

 A Committee shall evaluate the entries received.  The decision of the
Judges will be final and
binding in declaring the results & contest winners.

All those who send their logs will be given "Participation Certificate".

The Contest Winners will be awarded Mementos & Certificates during the
HFI-2010 function.

73

S.Vijayan, VU2WDP
General Convener

Hamfest India 2010

(Via vuhams yg)

Sunday, August 15, 2010

AIR Monitoring observations

AIR Monitoring observations of Aug 14, 2010 in Tirunelveli, Tamil Nadu, Deep south of India.


kHz Kw Station SIO

3945 50 Gorakhpur 222
4760 10 Leh 222
4775 50 Imphal 222
4800 50 Hyderabad 232
4810 50 Bhopal 222 at 1400
4820 50 Kolkata 222 with Interference
4830 50 Jammu Nil

4837.5 10 Gangtok 222
4840 50 Mumbai 232
4850 50 Kohima  Nil
4860 50 Kingsway Nil
4880 50 Lucknow 222
4895 50 Kurseong 212 at 1400
4910 50 Jaipur  322
4920 50 Chennai 444
4940 50 Guwahati 222
4950 50 Srinagar 222
4960 50 Ranchi Nil 
4965 50 Shimla 222
4970 50 Shillong 222
4990 50 Itanagar Nil
5010 50 Thiruvananthapuram 343
5015 50 Delhi Nil
5040 50 Jeypore 222 with Interference
5050 10 Aizawl 232
6030 50 Delhi 222

6085 50 Delhi 222 with Interference
9425 500 Bengaluru 333
9470 250 Aligarh 222 with Interference
9575 50 Delhi 222 with Interference
9835 50 Delhi 222 with Interference
9870 500 Bengaluru 333

FM

105.6 - Gyan Vani, Tirunelveli


MW

576 AIR Alappuzha

612 AIR Bengaluru

630 AIR Thrissur

684 AIR Kozhikode

720 AIR Chennai

738 AIR Hyderabad

765 AIR Dharwad

900 AIR Kadapa

936 AIR Tiruchi

999 AIR Coimbatore

1053 AIR Tutucorin

1161 AIR Thiruvananthapuram

1269 AIR Madurai


Receiver: Sony ICF 2010D


Monitor by 
Jaisakthivel, 

Monday, June 21, 2010

'கலைக்கோலம்" சற்சொரூபவதி நாதன்

.

கல்வி

சற்சொரூபவதி நாதன் என்பவர் இலங்கையில் 40 வருடகாலம் ஒலிபரப்புத்துறையில் அறிவிப்பாளராகவும், செய்தி வாசிப்பாளராகவும் விளங்கும் ஒரே தமிழ்ப் பெண் ஆவார்

ஆரம்பக் கல்வியை யாழ் இந்து மகளிர் கல்லூரியிலும், உயர் கல்வியை சென்னைப் பல்கலைக் கழகத்திலும் பெற்று விஞ்ஞானப் பட்டதாரியானவர். பின்னர் பெளத்த மகளிர் கல்லூரியில் விஞ்ஞான ஆசிரியையாக பணியாற்றியவர்.

ஒலிபரப்புத்துறை

1965ல் ஒலிபரப்புத்துறையில் இணைந்து கொண்டு அறிவிப்பாளரானார். நாடகத்துறை, பூவையர் பூங்கா, பாடசாலை மாணவர் கல்வி நிகழ்ச்சி என்பனவற்றோடு, 'கலைக்கோலம்" சஞ்சிகை நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கினார். 1970ம் ஆண்டில் சிறந்த அறிவிப்பாளராக தெரிவு செய்யப்பட்டு, ஜனாதிபதி விருதைப் பெற்றவர். ஒலிபரப்பாளருக்கான 'உண்டா' விருதையும் பெற்றிருக்கிறார்


கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

Monday, June 14, 2010

இலங்கை மெல்லிசை பிதா : எஸ். கே. பரராஜசிங்கம்


எஸ். கே. பரராஜசிங்கம்

எஸ். கே. பரராஜசிங்கம் (கட்டுவன், யாழ்ப்பாணம்), இலங்கை வானொலியின் மூத்த அறிவிப்பாளர்களில் ஒருவரும், மெல்லிசை, கர்நாடக இசைப் பாடகருமாவார். இலங்கை மெல்லிசை பிதா என்றறியப்படுபவர். சர்வதேச "உண்டா" விருதினைத் தம் வானொலிப் பணிக்காகப் பெற்றுக் கொண்டவர். தனது சகோதரரான வைத்தியகலாநிதி எஸ். கே. மகேஸ்வரன் உடன் இணைந்து கர்நாடக கச்சேரிகள் செய்திருக்கிறார். வானொலியில் "விவேகச் சக்கரம்" என்ற பொது அறிவு நிகழ்ச்சியை நடத்தியவர்.

மெல்லிசைப் பாடல்கள்

இலங்கை வானொலியின் வர்த்தக சேவையில் விளம்பர நிறுவனம் ஒன்றின் சார்பில் காவலூர் ராசதுரைதயாரித்து வழங்கிய நிகழ்ச்சி ஒன்றில் இவரது பாடல்கள் ஒலிக்கத் தொடங்கியதே இலங்கையில் தமிழ் மெல்லிசையின் ஆரம்பம் என்று கருதப்படுகிறது. இவரது மெல்லிசைப் பாடல்கள் 'ஒலி ஓவியம்' என்ற பெயரில் 1994ல் ஒலி நாடாவாக வெளியிடப்பட்டது. பின்னர் கனடாவில் 'குளிரும் நிலவு' என்ற தலைப்பில் குறுந்தட்டாக வெளிவந்தது.


வெளி இணைப்புக்கள்

Monday, June 07, 2010

செய்திகள் - வாசிப்பது எஸ். புண்ணியமூர்த்தி

எஸ். புண்ணியமூர்த்தி ஊர்காவற்றுறை, கரம்பொன் கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட பிரபல அறிவிப்பாளரும், செய்தி வாசிப்பாளருமாவார். தனது திறமையினால் பின்னர் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தமிழ் செய்திப்பிரிவின் பணிப்பாளராக நியமனம் பெற்றார். வானொலி அஞ்சல், நேர்முக வர்ணனையில் புகழ் பெற்றவர்.கண்டதும் கேட்டதும் செய்திச்சுருள், வளரும் பயிர், எமது அதிதி, சுழலும் ஒலிவாங்கி, நாளைய சந்ததி, இசைச் சங்கமம், இசையும் கதையும் ஆகிய நிகழ்ச்சிகளை தயாரித்து வழ்ங்கியவர்.தனது வானொலி அனுபவங்களை " செய்திகள் - வாசிப்பது எஸ். புண்ணியமூர்த்தி" என்ற பெயரில் ஆங்கில நூலாக எழுதி வெளியிட்டிருக்கிறார்.

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

Saturday, June 05, 2010

பிபிசி நேயர் எண்ணிக்கை அதிகரிப்பு

பிபிசியின் உலகச் செய்திகளை வானொலியிலும் தொலைக்காட்சியிலும், இணையதளம் மூலமாகவும் அறிந்துகொள்கின்ற நேயர்களின் வாராந்திர எண்ணிக்கை முன்பில்லாத அளவுக்கு 24 கோடியாக அதிகரித்துள்ளது.

சிற்றலை வரிசை மூலம் பிபிசி வானொலி நிகழ்ச்சிகளை கேட்பவர்கள் எண்ணிக்கையில் 2 கோடி குறைந்துள்ளது என்றாலும்கூட, மொத்த நேயர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்தியாவிலும் வங்கதேசத்திலும் சிற்றலை நேயர்கள் எண்ணிக்கை வீழ்ச்சி கண்டுள்ளது.

பிபிசி நிகழ்ச்சிகளை தொலைக்காட்சியிலும் இணையம் மூலமாகவும் பெறுகின்ற புதிய நேயர்கள் கோடிக்கணக்கில் வந்து சேர்ந்துள்ளது இந்த அதிகரிப்புக்கு வழிவகுத்துள்ளது.

பிபிசி செய்திகள் பல வெளிநாடுகளில் உள்ள நேயர்களைச் சென்றடைவதற்கான முக்கிய வழியாக ஒரு காலத்தில் விளங்கியது சிற்றலை வானொலி ஒலிபரப்புகள்தான். ஆனால் தற்போது மக்களிடையே சிற்றலை ஒலிபரப்புகளைக் கேட்கின்ற வழக்கம் மிக வேகமாகக் குறைந்துவருகிறது.

பிபிசி தனது நிகழ்ச்சிகளை மென்மேலும் சிற்றலை வானொலி ஒலிபரப்பிலிருந்து பண்பலை வானொலி ஒலிபரப்புக்கும், தொலைக்காட்சிக்கும் இணையதளத்துக்கும் மாற்றி வருகிறது.

இந்த மூன்று வகையான சேவைகளிலும்தான் பிபிசி செய்திகளுக்கான நேயர்கள் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

வானொலி, தொலைக்காட்சி, இணையதளம் என்று பல வகைகளிலும் செய்திகளை வழங்குவது என்ற பிபிசியின் உத்தி வெற்றிபெற்றுள்ளது என்பதை இந்த நேயர் எண்ணிக்கை அதிகரிப்பு காட்டுவதாக பிபிசியின் உலகளாவிய செய்திச் சேவைகள் பிரிவுகான இயக்குநர் பீட்டர் ஹாரக்ஸ் தெரிவித்துள்ளார்.

உலக சேவையை நடத்துவதற்கு அடுத்த மூன்று ஆண்டுகளுக்கான நிதியை பிரிட்டிஷ் வெளியுறவுத் துறையிடம் இருந்து பெறுவதற்கான ஆயத்தப் பணிகளை பிபிசி நிறுவனத்தார் தற்போது மேற்கொண்டு வருகின்றனர்.

பெரிய அளவில் செலவுக் குறைப்புகளை அறிவிக்க பிரிட்டிஷ் அரசாங்கம் எண்ணியுள்ள நிலையில், பிபிசி உலக சேவைக்கான நிதியைப் பெறுவதில் வெளியுறவுத் துறையுடன் பிபிசி நிறுவனத்தார் அதிகம் விவாதிக்க வேண்டியிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Wednesday, June 02, 2010

மீண்டும் தமிழகத்தில் இலங்கை வானொலி

மீண்டும் தமிழகத்தில் ஒலிக்கத் துவங்கியது இலங்கை வானொலி. கடந்த ஜூன் 1 முதல் சோதனை முறையில் ஒலிபரப்ப உள்ளதாக கூறிய இலங்கை வானொலி ஜூன் 2 முதல் தனது சோதனை ஒலிபரப்பினை தமிழக நேயர்களுக்காக மத்திய அலையில் (873 கி. ஹெ) தொடங்கியுள்ளது. காலை 7 முதல் 11 மணி வரை இந்த சோதனை ஒலிபரப்பினை தமிழக நேயர்கள் கேட்கலாம். இது படிப் படியாக வழமையான ஒலிபரப்பாக்கப் படும் என இலங்கை வானொலியின் இயக்குனர் ஹட்சன் சமரசின்கே தெரிவித்துள்ளார்.

Tuesday, May 25, 2010

வீ. ஏ. கபூர்: முதலாவது முஸ்லீம் வானொலி அறிவிப்பாளராவர்

மர்ஹூம் வீ. ஏ. கபூர் - கிழக்கு மாகாணத்தில் தோப்பூர் என்ற இடத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட மூத்த வானொலி அறிவிப்பாளர். ஒலிபரப்புத்துறையில் அறிவிப்பாளர், நிகழ்ச்சித்தயாரிப்பாளர், கட்டுப்பாட்டாளர், பணிப்பாளர் என்ற பதவிகளை வகித்தவர். 1953ல் இலங்கை வானொலி அறிவிப்பாளராக இணைந்து கொண்ட இவரே முதலாவது முஸ்லீம் வானொலி அறிவிப்பாளராவர்.

தமிழ் தேசிய சேவையிலும் பின்னர் முஸ்லீம் சேவையிலும் பணியாற்றிய இவர் முஸ்லீம் சேவையில் பல நாடகங்களை தயாரித்து வழங்கியிருக்கிறார்.

இவரது வாழ்க்கை பற்றி

கல்லடி உப்போடையிலுள்ள சிவானந்த வித்தியாலயத்தில் தனது ஆரம்பக் கல்வியைப் பெற்றார். 1949ல் இடை நிலை, உயர் கல்வி பெறுவதற்காக கொழும்பு சாகிராக் கல்லூரியில் சேர்ந்தார். சிறந்த கல்விமான் ஆன ஏ. எம். ஏ. அஸீஸ் அப்போது ஷாகிராக் கல்லூரியில் அதிபராகவும், பேராசிரியர் கா. சிவத்தம்பி, தினகரன் பிரதம ஆசிரியராக இருந்த ஆர். சிவகுருநாதன் இவரது சக மாணவர்களாகவும் இருந்தார்கள்.

ஒலிபரப்புத்துறையில் ஆர்வம் கொண்டிருந்த இளைஞனான வீ. ஏ. கபூர் தனது கல்லூரி அதிபர் அஸீஸ் அவர்களின் உதவியினால், வானொலியில் நடைபெற்ற 'எங்களூர்' என்ற நிகழ்ச்சியில் தனது ஊரான 'தோப்பூர்' பற்றிய தனது பிரதியை வாசித்து வானொலிக்குள் காலடி எடுத்து வைத்தார். தொடர்ந்து பெப்ரவரி 20, 1953ல் செய்திகள் வாசிப்பவராக, அறிவிப்பாளராக அறிமுகமானார்.

'20 கேள்விகள்', 'குறுக்கெழுத்துப் போட்டி', மலயகக் கலைஞர்கள் பங்பற்றிய 'குதூகலம்' போன்ற பல நிகழ்ச்சிகளை தயாரித்து வழ்ங்கியவர். வானொலியில் நேர்முகவர்ணனை செய்வதில் புகழ்பெற்ற வி. ஏ. கபூர், அணிசேரா நாடுகளின் மகாநாடு, சுதந்திர தின விழாக்கள் என்பவனற்றில் நேர்முக வர்ணனையாளராக பணியாற்றினார்.

1967க்குப் பின்னர் முஸ்லீம் நிகழ்ச்சிப் பிரிவில் இணைந்து கொண்ட இவர் கட்டுப்பாட்டாளராகவும், பணிப்பாளராகவும் சேவையாற்றினார்.

Tuesday, May 18, 2010

Internet Radio

Inquire Now
USB2.0 Internet Radio with 128MB Memory, and Remote Control

Shenzhen Consons Electronic Technology Ltd
Credit Check

Monday, May 10, 2010

ராஜகுரு சேனாதிபதி கனகரத்தினம்

ராஜகுரு சேனாதிபதி கனகரத்தினம் இலங்கையில் வடமேல் மாகாணத்தைச் சேர்ந்த முதலாவது தமிழ் வானொலி அறிவிப்பாளர். திரையிசைப் பாடல் வரிகளை சங்க காலப் பாடல்வரிகளோடு தொடர்பு படுத்தும் "பொதிகைத் தென்றல்" முதலான இலக்கியச் சுவையுள்ள நிகழ்ச்சிகளை தயாரித்து வழங்கியவர். திரையுலகின் பல கலைஞர்கள், கவிஞர்கள் பற்றிய பல சிறப்பு நிகழ்ச்சிகளை வழங்கியவர்.


கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

Tuesday, May 04, 2010

ரேடியோ சிலோன் சுந்தா ....



சிநேகமாய் ஒலிக்கும் சுந்தரக்குரல் .....
------------------------------------------------

ரேடியோ சிலோன் சுந்தா ....
---------------------------------


தனி மனித வாழ்வில் எங்கே ஒரு சம்பவம் நிகழ்ந்தாலும் அங்கே என் பாடல் ஒன்று ஒலிக்கும் என்றார் கவியரசர் கண்ணதாசன்.

அதேபோல ....ஈழத்து ரசிகர்களைப் பொறுத்தவரை......அவர்களின் வாழ்க்கையோடு ஒன்றிக் கலந்து அவர்கள் உணர்வுகளையும் கனவுகளையும் சிநேகமாய் வருடிக் கொடுத்ததில் இலங்கை வானொலி வகித்த பங்களிப்பை வெறும் வார்த்தைகளால் மட்டும் விளக்கி விட முடியுமா?

இலங்கை வானொலியை ஆய்ந்து .... அறிந்து ....உணர்ந்து .... தெளிந்து .... ரசித்த சுகமான அந்த நினைவலைகளை மறுபடியும் மறுபடியும் அசை மீட்கத் தெரிந்த இலங்கை ரசிகர்களுக்கு மட்டுமே அந்த அருமை பெருமையின் ஆழம் புரியும்.

அத்தகைய சிலோன் ரேடியோவில் கணீரென்ற குரலாலும், அழகுத் தமிழ் உச்சரிப்பாலும், நடிகராகவும், அறிவிப்பாளராகவும் நேயர்களை வசப்படுத்தி.... வானொலியின் வரலாற்றுப் பக்கங்களில் தனி முத்திரையைப் பதித்தவர்.... ப, ரேடியோ சிலோன் சுந்தா என அழைக்கப்படும் ஒலிபரப்பாளர் திரு. வீ. சுந்தரலிங்கம் அவர்கள் .

இவரது செம்மையான உச்சரிப்பில் உலாவந்த செய்தி வாசிப்பையும், நேர்த்தி மிக்க நேர்முக வர்ணனைகளையும், கீர்த்திமிக்க இசைத் தொகுப்பு நிகழ்ச்சிகளையும், பாய்ந்து வரும் சிங்கம் என பலன் தருவது டியுறோல் போன்ற பளபளப்பான விளம்பரங்களையும் அவ்வளவு சீக்கிரம் மறந்து விட முடியுமா என்ன?

இன்னும் ... இன்னும் .... எத்தனை நினைவலைகள் ?....நேயர்களை சிந்திக்க வைத்த பஞ்சபாணம், விவேகச் சக்கரம் போன்ற நிகழ்ச்சிகளிலும் நம்மோடு சிநேகமாக உறவாடிய அந்த சிங்காரக் குரல் .... அரை நூற்றாண்டுக்கு மேலாக வசந்தத் தமிழ் வாசனையை வான் அலைகளில் பரப்பியது.

இலங்கை ரசிகர்களை மட்டுமல்ல தென்னிந்திய வானொலி ரசிகர்களையும் வசீகரித்த திரு. சுந்தா அவர்கள் எழுதிய 'மன ஓசை' என்ற நூலில் இருந்து ஒரு பகுதியை ரசிகன் வாசகர்களுக்காக இங்கே தொகுத்துத் தருகின்றோம்.

வானொலியில் நேர்முக வர்ணனைகள் எங்கள் காலத்தில் மிகவும் பிரபலமானதொரு நிகழ்ச்சி.

தொலைக்காட்சி வராத காலம். முழுக்க முழுக்க மக்கள் வானொலி வர்ணனைகளையே கேட்டுக் கொண்டிருப்பார்கள்.

ஒவ்வொரு கணமும் விழிப்பு, விழிப்பு, விழிப்பு, விரைந்து நுண்மதியுடன் செயற்படும் ஆற்றல், சுய பொறுப்புணர்வு-இவையே நல்ல ஒரு ஒலிபரப்பாளனாவதற்கு இன்றியமையாத அடிப்படைகள் என்பதனையே இந்த அனுபவங்கள் எல்லாம் எமக்கு உணர்த்தி நின்றன.

இந்த அனுபவக் களத்திடை வானொலி வர்ணனைகளின் போதும் சில வேளைகளில் பிழைகள் வந்து சேரும். இவற்றை உடனுக்குடன் ஈடுசெய்ய முடியாமலிருக்கும் விளைவாக நிகழ்ச்சி முடிய பத்திரிகைகளின் கிண்டல் கேலிகளைச் சந்திக்க நேரிடும். இவற்றையெல்லாம் பொறுத்துக்கொள்ள வேண்டியதுதான்.

நான் வானொலியில் இணைவதற்கு முன்னால் கூட இவ்வாறே வர்ணனைகள் தொடர்பான கஷ்டங்களைப் பார்த்திருக்கிறேன்.
இலங்கையின் முதல் பிரதமர் டி.எஸ். சேனநாயக்காவின் இறுதி ஊர்வல வர்ணனை நடந்து கொண்டிருந்தது.

காட்சியை வர்ணித்த அறிவிப்பாளர் உணர்ச்சி மேலிட ஒப்புமை தேடி மிதிலைக் காட்சி போல என்று விளாசி விட்டார். இறுதி ஊர்வலத்தை மிதிலைக் காட்சியுடன் ஒப்பிடுவதா?

மறுநாள் காலை பத்திரிகையில் விமர்சனங்கள்....இதுபோலவே பிரிட்டிஷ் மகாராணியார் இலங்கை விஜயத்தின் போதான வர்ணனையிலும் சுவார°யமான சங்கதிகள்.

ஆபரணங்கள் ஏதும் அணியாமல் எளிமையான வெள்ளையுடுப்பில் வருகிறார் என்று சொல்ல நினைத்த வர்ணனையாளர், வாய் தடுமாறி ஆடை ஆபரணங்கள் இல்லாமல் மகாராணியார் அழகாக வருகின்றார் என்று வர்ணித்துவிட்டார்.

எப்படி இருக்கும்? பத்திரிகைகள் சும்மா விடுமா?

ஒருவிதத்தில் பத்திரிகை கண்டனங்கள் அவசியமும் கூட. அவை எமது எச்சரிக்கை உணர்வினுக்கு துணை செய்தன.

இத்தனை அனுபவ விழிப்புடனும் வர்ணனைகளிலே அதீத உணர்ச்சிக்குள்ளாகி விமர்சனங்களை எதிர்கொண்ட அனுபவம் ஒன்று எனக்கும் நேர்ந்ததை இங்கு குறிப்பிட வேண்டும்.

மறைந்த பிரதமர் டி.எஸ். சேனநாயக்காவின் உருவச் சிலை திறப்பு விழா வைபவம் பாராளுமன்ற வளாகத்தில் நடந்து கொண்டிருந்தது.

டி.எஸ். சேனநாயக்கா அவர்களின் புதல்வர் டட்லி சேனநாயக்கா தந்தையின் சிலைக்கு மாலை அணிவிப்பதாக ஏற்பாடு.

இந்த நிகழ்ச்சியை பார்த்த வேளை வர்ணனையாளராக இருந்த என் மனதில் எனது தந்தையார் பற்றிய நினைவுகள் விஸ்வரூப தரிசனமாகியிருக்க வேண்டும்.

மகன் தந்தைக்கு ஆற்றும் இந்த மலர் ஆராதனைப் பற்றி குறிப்பிடும் போது மிகை உணர்ச்சியுடன் அதிகமாகவே கதைத்து விட்டேன்.

நிகழ்ச்சி முடிந்து திரும்பி நிலையத்துக்கு வந்தபோது எனது சகா ஒருவர் உனது நடிப்பு நன்றாக இருந்தது என்று கேலி செய்தார்.

என்னுடைய அன்றைய மனநிலையை அவர் அறிய நியாயமில்லை. அந்த வகையில் அவர் கேலி செய்தது சரிதான். என்னைப் பொறுத்தவரை , இது ஒரு நல்ல பாடமாக இருந்தது.

அதாவது வர்ணனைகள் செய்யும்போது சொந்த உணர்ச்சிகளுக்கு இடம் தரக்கூடாது. நிகழ்வுகளை தெளிவாக - அழகாக , கேட்கும் நேயர்களின் அகத்திரைக்குக் கொண்டுவந்து விடுவதே எமது முக்கிய கடமையாகும்.

இந்த அனுபவ பாடங்கள்தான் பின்னால் ஒரு நல்ல வர்ணனையாளனாக நான் பாராட்டுப் பெற வழிவகுத்தன.

என் ஒலிபரப்பு அனுபவக் களத்திடை மகிழ்ச்சியும் புகழும் தேடித்தந்த அப்போலோ வர்ணனை பற்றிய நினைவுகள் என்றும் இனிமையானவை.

அப்பொழுது நான் இலங்கை வானொலியிருந்து இலங்கை பாராளுமன்ற சமகால மொழிபெயர்ப்பாளராக தெரிவு செய்யப்பட்டிருந்தேன்.

அன்றைய இலங்கை வானொலி இயக்குனர் நாயகம்(டைரக்டர் ஜெனரல்) நெவில் ஜயவீர அவர்களிடமிருந்து ஓர் அழைப்பு வந்தது.

சந்திர மண்டலத்துக்கு மனிதன் பயணிக்கப் போகின்றான்.
வாய்ஸ் ஓப் அமெரிக்கா என்ற அமெரிக்க வானொலி நிலையம் தொடர்ச்சியாக (மூன்று, நான்கு நாட்கள்)வர்ணனை செய்ய உள்ளது. வாய்ஸ் ஓப் அமெரிக்கா ஒலிபரப்பை இயர்போன் மூலம் காதில் வாங்கியபடி உடனடியாக தமிழிலும் சிங்களத்திலும் தாமுடியுமா என்று அவர் கேட்டார்.

என்னோடு பாராளுமன்றத்தில் இருந்த சிங்கள அறிவிப்பாளர் அல்பிரட்டும் கூட இருந்தார்.

பெரியதொரு சவாலாக இது எமக்கு இருந்தது.

இரண்டு பேருமே நிச்சயம் முடியும் என்று உறுதி கூறினோம்.

அவர் உடனேயே ஏற்பாடு பண்ணி எங்களை கொழும்பிலே உள்ள அமெரிக்கன் தூதரகத்திற்கு அனுப்பி வைத்தார்.

ஏற்கனவே இத்திட்டம் போல ஜெமினி என்றொரு விண்வெளிக் கலத்தை வானுக்கு அனுப்பிப் பரீட்சித்துப் பார்த்துக் கொண்டிருந்த காலம் அது. அதற்குரிய படங்களையெல்லாம் அவர்கள் திரைப்படங்களாக வைத்திருந்தார்கள். அவர்களே ஏற்பாடு பண்ணி எங்கள் இருவருக்குமாக அவற்றைத் திரையிட வைத்தார்கள்.

திரையிடும் போதுதான் உண்மையாகவே இது எப்படி நடக்கப் போகிறது. எப்படி அவர்கள் பேசப் போகின்றார்கள், என்ன என்ன விடயம் எல்லாம் தேவை என்பது எங்களுக்கு ஓரளவு தெரிய ஆரம்பித்தது. பொறுப்பு மிக அதிகம் என்பதும் புரிய ஆரம்பித்தது. ஆங்கிலத்திலே பேசுவதை தமிழிலோ சிங்களத்திலோ மொழி பெயர்ப்பது ஒன்று.

ஆனால் மறு பக்கத்திலோ அமெரிக்கன் ஆங்கிலம் என்று சொல்லப்படுகின்ற அமெரிக்கர்கள் பேசுகின்ற முறையும் ஆங்கிலத்தையே அவர்கள் பேசினாலும் அதை உச்சரிக்கும் முறையும் இந்த மாதிரியான வான்வெளிப் பிரயாணத்திற்கான சேவையிலே இருக்கின்ற அந்தத் திட்டத்திலே வேலை செய்கின்றவர்கள் பேசுகின்ற சொற்பிரயோகங்களும் பிரயோகித்த சொற்களும் வேறுவிதமாக இருந்தன. இதனைப் படங்களைப் பார்த்த பின்தான் நாம் அறிந்தோம்.

சாதாரணமாக பாராளுமன்றத்திலே பேசுகின்ற ஒரு உரையினைத் தமிழிலோ சிங்களத்திலோ கொடுப்பது போன்றதல்ல இது என்று எங்களுக்குத் தெரியும்.

அமெரிக்கர்களின் இந்தப் பேசும் முறை, இவர்கள் பேசும் மொழி அவர்களுடைய ஆங்கில உச்சரிப்பு, எல்லாவற்றுக்கும் மேலாக இவ் வான்வெளிக் களங்களிலே என்ன மாதிரியான சொற்களை எல்லாம் பிரயோகிக்கின்றார்கள் என்ன மாதிரியெல்லாம் அது இருக்கும் என்பதெல்லாம் எங்களுக்கு புதிதாக இருந்தது.

ஆனால் எங்களுக்கு அமெரிக்கன் தூதரகம் மிகவும் உதவியாக ஒத்தாசையாக இருந்து அந்தப் படங்களை எங்கள் வசதிப்படி எங்களுக்கு எப்போது தேவையோ அப்போதெல்லாம் போட்டுக் காட்டினார்கள். ஒருவகையில் எங்களுக்குப் பயிற்சியளித்தார்கள் என்றே சொல்லவேண்டும்.

இத்தனை உதவிகளையும் ஒத்தாசை செய்த அவர்கள் இந்நிகழ்ச்சி தரமாக அமைய வேண்டும் மக்களுக்குத் தெளிவாக இவை புரிய வேண்டும் என்பதற்காக எங்களுக்கு உதவியாக மேலும் நான்கு பேரை ஆயத்தம் செய்தார்கள்.

பேராசிரியர் குலரத்தினம் , இவர் புவியியல் பேராசிரியராக சர்வகலா சாலையிலே இருந்தவர்.

பேராசிரியர் ஏ.டபிள்யூ. மயில்வாகனம், இவர் பௌதிகவியல் பேராசிரியராக இருந்தவர். ஆனந்த சிவம் என்று ஒரு இளைஞர், அவர் ஒரு விஞ்ஞானி .

திரு. கோபால பிள்ளை மகாதேவா என்ற ஒரு விஞ்ஞானி

இப்படியாக ....நான்கு பேரை அவர்கள் ஆயத்தம் செய்திருந்தார்கள். எங்களுக்கும் சற்று ஓய்வு கொடுப்பதற்காக இப்படியான ஏற்பாட்டை அவர்கள் செய்திருந்தார்கள்.

இதே போல சிங்களத்திலும் அல்பிரட் பெரேராவுக்கும் இதே மாதிரியான ஏற்பாட்டைச் செய்து கொடுத்திருந்தார்கள்.

எங்கள் ஒலிபரப்பு எத்தகைய வெற்றியைப் பெற்றது ? என்பதற்கு சான்றாக சில விஷயங்களைச் சொல்ல நினைக்கின்றேன்.

சந்திர மண்டலப் பிரயாணம் தொடர்பான இந்த ஒலிபரப்பை ஆல் இந்தியா ரேடியோ எங்களைப் போல வர்ணனையாகத் தரவில்லை என்பதாலும், தமிழிலே அது தொடர்பான எந்த நிகழ்ச்சியும் இருக்கவில்லை என்பதாலும் எமது நிகழ்ச்சிக்கு தென்னிந்திய நேயர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது.

முன்பின் தெரியாதவர்கள் கூட ..... கிட்டதட்ட லட்சம் பேர் என்று சொல்லலாம் ..... அவ்வளவு கடிதங்கள் வந்தன.

ஒரு நாள் நான் இலங்கை வானொலி நிலையத்திற்குப் போயிருந்தபோது திரு. நெவில் ஜெயவீர என்னை அழைத்தார்.

அவர் மெல்லியதொரு புன்முறுவலுடன் தனது உதவியாளரைக் கூப்பிட்டு அந்தச் சாவியை எடுத்துவரச் சொன்னார். என்னையும் கூட்டிக்கொண்டு அவருடைய காரியாலயத்திற்குப் பக்கத்திலே இருந்த ஒரு சிறிய அறைக்கு அழைத்துச் சென்று அதைத் திறக்கச் சொன்னார். ஒரு சிறிய அறை அது.

கதவைத் திறந்ததும் அதற்குள் ஆயிரக்கணக்கான கடிதங்கள் அப்படியே குவிந்து வீழ்ந்தன.


என்னைக் கட்டித்தழுவி இவைதான் உமக்கும் எங்களுக்கும் கிடைத்த பரிசு என்றார் பெருமையாக.

அன்றைய அமெரிக்க ஜனாதிபதி இலங்கை வானொலியின் இந்தச் சேவையைப் பாராட்டி அல்பிரட் பெரேராவுக்கும் எனக்கும் தனிப்பட்ட முறையில் தமது கைப்பட கடிதங்கள் எழுதியிருந்தார். கூடவே அமெரிக்க வரலாறு தொடர்பான ஆங்கில நூல் ஒன்றும் ஜனாதிபதியின் கையெழுத்துடன் அன்பளிப்பாக இணைக்கப்பட்டிருந்தது.

இதற்குப் பின்னர் எனது நண்பர்கள் கூட என்னை அப்போலோ சுந்தா என அழைக்கத் துவங்கினர். எனது வாழ்க்கையிலே எனக்குக் கிடைத்த பெரும் பாராட்டாக இதை நான் கருதுகிறேன்.