Saturday, July 30, 2016

வானொலி இயக்குநருக்கு பாராட்டு

தேசிய விருது பெற்ற நாகர்கோவில் அகில இந்திய வானொலி நிலைய இயக்குநர் கீழப்பாவூர் ஆ. சண்முகையாவுக்கு விவசாயிகள் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
நாகர்கோவில் அகில இந்திய வானொலி நிலையம் வர்த்தகம், நேயர் எண்ணிக்கையில் பல மடங்கு அதிகரித்து அண்மையில் தேசிய விருது பெற்றது. மேலும், வானொலியில் விவசாயிகளுக்கு பயன்படும்படியாக பல்வேறு நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப்படுகின்றன. இதையொட்டி, குமரி மாவட்ட விவசாயிகள் சார்பில், விருது பெற்ற வானொலி நிலையத்தின் இயக்குநர் கீழப்பாவூர் ஆ. சண்முகையாவுக்கு நாகர்கோவிலில் பாராட்டு விழா நடைபெற்றது.
நாஞ்சில் நாடு விவசாயிகள் சங்கத் தலைவர் சண்முகம் தலைமை வகித்தார். மாவட்ட வேளாண் உற்பத்திக் குழு உறுப்பினர் செண்பகசேகரன் வரவேற்றார்.
இதில் பொன்.காமராஜ் சுவாமிகள், சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் பொன்னீலன், அகமதுகான், வின்ஸ் ஆன்றோ, வேளாண் இணை இயக்குநர் சந்திரசேனன்நாயர், விடுதலைப் போராளி கொடிக்கால் ஷேக் அப்துல்லா, புலவர் செல்லப்பா, வரலாற்று ஆய்வாளர் டாக்டர் பத்மநாபன், தியாகி முத்துகருப்பன், பழனி சுவாமிகள், உழவர் பெருமன்றத் தலைவர் மீனாட்சி சுந்தரம், டாக்டர் மனகாவலப் பெருமாள் உள்ளிட்ட ஏராளமானோர் பேசினர். சண்முகையா ஏற்புரையாற்றினார். உழவர் மன்றச் செயலர் ஹென்றி நன்றி கூறினார்.
Source: Dinamani

Friday, July 15, 2016

முதல் 10 வானொலி நிலையங்களில் ஒலி 96.8

சிங்கப்பூரில் நேயர்கள் அதிகம் கேட்கும் முதல் பத்து வானொலி நிலையங்களின் பட்டியலில், மீடியாகார்ப்  வானொலி நிலையங்கள், 8 இடங்களைப் பிடித்துள்ளன.
ஒலி 96.8-உம் அந்தப் பட்டியலில் வந்துள்ளது. மீடியாகார்ப்  வானொலி, இந்த ஆண்டு அதன் 80ஆம் ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது.
இந்த ஆண்டு மார்ச் மாதத்துக்கும் சென்ற மாதத்துக்கும் இடையே, Nielsen நிறுவனம் வானொலி தொடர்பான கருத்தாய்வை நடத்தியது.
ஒவ்வொரு வாரமும் அதிகம் கேட்கப்படும் வானொலி நிலையங்களில் பெரும்பாலானவை மீடியாகார்ப்  நிறுவனத்துடையவை என்பது அதன்வழி தெரிகிறது.
ஒலி 96.8-உம் Warna 94 புள்ளி இரண்டும் முதல் பத்து இடங்களில் இருப்பது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார் மலாய், தமிழ் சமூகப் பிரிவின் தலைவர் டாக்டர் சித்ரா ராஜாராம்.
அதிகம் கேட்கப்பட்ட வானொலி நிலையங்களின் பட்டியலிலும் அந்த இரு நிலையங்களும் முன்னணி வகித்தன.
நேயர்களின் கருத்துக்களைத் தொடர்ந்து திரட்டி வருவதாகவும் அவர் சொன்னார்.
ஒலி 96 புள்ளி எட்டின் நேயர்கள், வாரந்தோறும் சராசரியாக 16 மணி நேரத்துக்கும் மேல் வானொலியைக் கேட்பதாகக் கருத்தாய்வு முடிவுகள் காட்டின.
அதிகம் விரும்பிக் கேட்கப்பட்ட பட்டியலின் முதல் மூன்று இடங்களைச் சீன வானொலி நிலையங்கள் பிடித்தன.
தொடர்ந்து மூன்றாவது முறையாக LOVE 97.2 முதல் இடத்தைத் தக்கவைத்துக்கொண்டிருந்தது. 19 புள்ளி 4 விழுக்காட்டினர் அதனைக் கேட்பதாகக் கூறியிருந்தனர்.
இரண்டாம் நிலையில், பதினெட்டரை விழுக்காட்டுடன் YES 933-உம், 17 புள்ளி மூன்று விழுக்காட்டுடன் மூன்றாவதாக CAPITAL 95.8-உம் வந்திருந்தன.
GOLD 905, 987 போன்ற மற்ற மீடியாகார்ப் வானொலி நிலையங்களும் பட்டியலில் இடம்பிடித்திருந்தன.

கல்வெட்டு உடைக்கப்பட்டதை கண்டித்து வானொலி திடலில் பல்வேறு அமைப்புகள் உண்ணாவிரதம்

வானொலி திடல் கல்வெட்டு உடைக்கப்பட்டதை கண்டித்து வானொலி திடலில் பல்வேறு அமைப்புகள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். 

வானொலி திடல் 

புதுவை முதலியார்பேட்டையில் பழமை வாய்ந்த வானொலித்திடல் உள்ளது. இந்த திடலை கடந்த 1950-ம் ஆண்டு ராகவ செட்டியார் என்பவர் பொதுமக்கள் பயனடையும் வகையில் வானொலி பூங்காவாக செயல்பட அனுமதித்தார். இதற்கிடையே கடந்த 10 ஆண்டுகளாக இந்த பூங்காவை சிலர் ஆக்கிரமித்து இருந்தனர். மேலும் அந்த இடத்தை தனியார் ஒருவர் விலைக்கு வாங்கி விட்டதாக கூறப்படுகிறது. 

இதனால் அந்த பகுதியை சேர்ந்த சிலர் வானொலி பூங்கா மீட்புக்குழு என்ற ஒரு குழுவை தொடங்கினர். இந்த குழுவிற்கு தமிழர் தேசிய இயக்க தலைவர் அழகிரி தலைவராக உள்ளார். இவர்கள் வானொலி திடலில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி பொதுமக்களின் பயன்பாட்டிற்கு விட வேண்டும் என்று போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். 

உண்ணாவிரத போராட்டம் 

இந்த நிலையில் வானொலி திடலை மீட்டு தரக்கோரி அழகிரி தலைமையில் பலர் கவர்னரை நேற்று முன்தினம் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அவர் இது தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும் படி தலைமை செயலாளருக்கு உத்தரவிட்டார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு யாரா அடையாளம் தெரியாத நபர்கள் வானொலி திடலில் கடந்த 1950-ம் ஆண்டு அமைக்கப்பட்ட கல்வெட்டை உடைத்து சேதப்படுத்தி உள்ளனர். மேலும் அந்த இடத்தில் ஒரு பகுதியை ஆக்கிரமித்து சுற்றுச்சுவரும் கட்டப்பட்டு இருந்தது. 

இது பற்றிய தகவல் அறிந்த உடன் வானொலி திடல் மீட்பு குழு தலைவர் அழகிரி அங்கு விரைந்து சென்றார். அவர் வானொலி திடலில் கல்வெட்டை உடைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், வானொலி திடல் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து உண்ணாவிரத போராட்டத்தினை தொடங்கினார். அவருக்கு ஆதரவாக மக்கள் உரிமை கூட்டமைப்பு செயலாளர் சுகுமாறன், மனித உரிமைகள் பாதுகாப்பு இயக்க தலைவர் முருகானந்தம், வீரமணி, இன்பசேகரன் உள்பட பல்வேறு சமூக அமைப்புகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். 

சமாதான பேச்சுவார்த்தை 

இது பற்றிய தகவல் அறிந்த உடன் முதலியார்பேட்டை போலீசார் அங்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் போராட்டத்தினை கைவிடாமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையே நள்ளிரவு 11.30 மணியளவில் உண்ணாவிரதம் இருந்தவர்களிடம், தெற்கு போலீஸ் சூப்பிரண்டு குணசேகரன் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்து வைத்தார். அதையேற்று உண்ணாவிரதத்தை கைவிட்டு கலைந்துசென்றனர்.
Source: http://www.dailythanthi.com/

வங்கதேச மக்களுக்காக பெங்காலி மொழியில் சிறப்பு வானொலி: 6 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் தொடங்குகிறது இந்தியா

கடந்த 1971-ல் வங்கதேச விடு தலைப் போரின்போது பெங்காலி மொழிக்கான சிறப்பு வானொலியை இந்தியா தொடங்கி யது. கொல்கத்தாவில் இருந்து செயல்பட்ட இந்த வானொலியில் இந்திய செய்திகள் மற்றும் நிகழ்ச்சிகள் பெங்காலி மொழியில் ஒலிபரப்பப்பட்டன. இந்தியா விடுதலை அடையும் முன் நம் நாட்டின் ஒரு பகுதியாக இருந்த வங்கதேசத்திலும் (கிழக்கு வங்காளம்) பெங்காலி மொழி பேசப்படுகிறது. இதனால் அகில இந்திய வானொலி நிலையத்தின் சிறப்பு வானொலிக்கு வங்கதேச மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. என்றாலும் கருவிகள் பழுதடைந்ததன் காரணமாக கடந்த 2010-ல் இதன் ஒலிபரப்பு நின்றது. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு வங்கதேசம் சென்றபோது, இது குறித்து அவரது கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது. இதைய டுத்து பழுதான கருவிகளுக்கு பதிலாக அதிக சக்திவாய்ந்த நவீன கருவிகளுடன் சிறப்பு வானொலி நிலையம் மீண்டும் செயல்படத் தயாராகி வருகிறது.
இது குறித்து 'தி இந்து'விடம் அகில இந்திய வானொலி நிலையத்தின் டெல்லி அதிகாரிகள் கூறும்போது, "ஆகாஷ்வாணி மைத்ரீ என்ற புதிய பெயரில் இந்த வானொலி செயல்பட உள்ளது. இதன் தொடக்க விழா கொல்கத்தாவில் ஜூன் 28-ம் தேதி நடைபெற உள்ளது. குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்க உள்ளனர். ஒலிபரப்பு தற்போது 16 மணி நேரமாக அதிகரிக்கப்படுகிறது. தொடர்ந்து வங்கதேச மக்களுக்காக பண்பலை (எப்.எம்) ஒலிபரப்பு தொடங்கவும் திட்டமிடப்பட்டு வருகிறது" என்று தெரிவித்தனர்.
இதுபோல் ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாட்டுக்காக செயல் படும் வானொலி நிலையம் இந்தியாவில்தான் முதன் முதலில் தொடங்கப்பட்டதாக கருதப்படு கிறது. பெங்காலி மட்டுமின்றி, அண்டை நாடுகளிலும் பேசப்படும் இந்திய மொழிகளான தமிழ், இந்தி, உருது, நேபாளி போன்ற வற்றிலும் வானொலி ஒலிபரப்பு செய்யப்படுகிறது.
தமிழ் மொழியில் செயல்பட்டு வரும் தெற்காசிய வானொலி யானது டெல்லி, தூத்துக்குடி, சென்னை ஆகிய இடங்களில் இருந்து ஒலிபரப்பாகிறது. மேலும் பல இந்திய மொழிகளிலும் வெளிநாடுவாழ் இந்தியர்களுக்காக வானொலி அலைவரிசைகள் ஒலிபரப்பப்பட்டு வருகின்றன.