Monday, December 29, 2008

சீன வானொலி: 20-வது கருத்தரங்கம்


சீன வானொலி நேயர்மன்றத்தின் 20-வது கருத்தரங்கம் வெகு சிறப்பாக நாமக்கல் மாவட்டம் பேளுக்குறிச்சியில் (28-12-2008) நடைபெற்றது. இதில் சீன வானொலியின் நிபுனர்கள் சிவகுமார், கடிகாசலம், ராஜாராம் மற்றும் கிளீட்டஸ் ஆகியோர் பங்கேற்றனர். சீன வானொலி கருத்தரங்க வரலாற்றில் முதல் முறையாக நான்கு நிபுனர்கள் ஒரே மேடையில் சந்திப்பது இதுவே முதல் முறை. விழாவில் 'சீன வானொலி மன்றம்' எனும் காலாண்டு இதழ் வெளியிடப்பட்டது. மேலும் 20 நேயர்களுக்கு சிறந்த நேயர்களுக்கான விருது வழங்கப்பட்டது. விழாவில் கலந்து கொண்ட அனைத்து நேயர்களுக்கும் நினைவுப் பரிசாக 3டி ஒலிம்பிக் வண்ண அட்டை வழங்கப்பட்டது.


'சீன வானொலி மன்றம்' காலாண்டு இதழ்


கருத்தரங்க புகைப்படங்களை காண, கீழகண்ட தொடுப்பினை சொடுக்கவும்
http://picasaweb.google.co.in/bbcsakthi/CRI20thMeet?feat=directlink

Sunday, December 28, 2008

சர்வதேச வானொலி - டிசம்பர் 2008


சிற்றலை வானொலி கேட்கும் நேயர்களுக்கு ஆண்டு இறுதியில் ஒரு பொக்கிஷம்.. ஆம் டிசம்பர் இதழ் 'சிற்றலை ஆன்டனாக்களை நீங்களே செய்ய தேவையான வழிமுறைகளுடன் எளிய தமிழில் வெளிவந்துள்ளது' 10 வகையான ஆன்டனாக்கள் படத்துடன் விளக்கப்பட்டுள்ளது இதழின் மற்றும் ஒரு சிறப்பு. ஆண்டு சந்தா அனுப்பி இதழின் வளர்ச்சியில் பங்கு பெறுங்கள். விபரங்களுக்கு: +91 98413 66086

Saturday, December 27, 2008

சர்வதேச வானொலி - நவம்பர் 2008


வெளிவந்துவிட்டது நவம்பர் சர்வதேச வானொலி இதழ். இந்த இதழில் இலங்கை வானொலியின் புகழ்பெற்ற அறிவிப்பாளர் நாகபூசணி கருப்பையா அவர்களின் சிறப்பு செவ்வி இடம்பெற்றுள்ளது. வளமையானத் தொடர்களுடன் 24 பக்கங்களில் வெளிவந்துள்ள இந்த இதழைப் படிக்க கீழ்கண்ட தொடுப்பினைச் சொடுக்கவும்.
http://vaanoliulagam.googlepages.com/Nov2k8.pdf
உங்களின் இல்லதிற்கே இதழ் வர... தொடர்பு கொள்க 98413 66086. ஆண்டு சந்தா ரூ.100/-

Monday, December 22, 2008

சீன வானொலி பொது அறிவுப் போட்டி


சீன வானொலி "அழகான சிச்சுவான்" பொது அறிவுப் போட்டியை தற்பொழுது வைத்துள்ளது. நேயர்கள் இணையம் வாயிலாக கலந்துகொள்ள சிறப்பு இணைய பக்கத்தினை வடிவமைத்து உள்ளது. அதன் முகவரி
http://210.51.185.203:8080/jingsai/English/Default.aspx?language=English

Friday, December 19, 2008

உங்கள் விருப்பம் பகுதிக்கு...


நேயர்கள் வானொலிக்கு கடிதம் எழுதுவது போல், உங்கள் விருப்பம் பகுதிக்கும் கடிதம் எழுதுவது வழக்கம். இதோ மாதிரிக்கு சில.. இவை அச்சிடப்பட்டு அனுப்பப்படுவது இங்கு குறிப்பிடத்தக்கது

Thursday, December 18, 2008

உலகில் மூத்த தமிழ் ஒலிபரப்பாளர்

B.B.C. யின் சென்னை அலுவலகத்தில் பணியாற்றும் ஜெய்சக்திவேல் ஒரு வானொலி கலைக் களஞ்சியம் (என்சைகிளோபீடியா) என்றால் அது மிகையல்ல. உலகின் அத்தனை வானொலிகள், குறிப்பாகத் தமிழ் வானொலிகள் பற்றிய குறிப்புக்களை தன் விரல் நுனியில் வைத்திருக்கிறார்

பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கையெழுத்துப் பிரதியாக ஆரம்பிக்கப்பட்டு, பிறகு தட்டச்சு செய்து நட்பு வட்டத்துக்குள் மட்டும் வினியோகிக்கப்பட்டு வந்த "சர்வதேச வானொலி" முதன் முறையாக அச்சு வாகனம் ஏறுகிறது. "தினமலர்" நாளிதழ் நிறுவனரின் பேரன் தினேஷ், கொழும்பு "வீரகேசரி" நாளிதழின் சென்னை அலுவலகத்தில் பணிபுரியும் அருண், ஜெய்சக்திவேல் ஆகியோரின் கூட்டு முயற்சி இது.

இதன் வெளியீட்டு விழாவும், "கரிசல்" திரைப்படக் கழகத்தின் துவக்க விழாவும் திருநெல்வேலி, வண்ணரப்பேட்டை, அறிவியல் வளாக அரங்கில் 25.4.08 காலை முதல் மாலை வரை முழு நாள் விழாவாகநடைபெற்றது.

திரைப்பட இயக்குனர் மாரிமுத்து, குறும்பட இயக்கத்தின் திருநாவுக்கரசு ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். 'விழி-வழித் தொடர்பு' (Visual Communication) கல்வி பயிலும் மாணவர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். அன்று வானொலியின் பிதாமகன் மார்க்கோனியின் பிறந்த நாளும் கூட.

வானொலியின் வரலாறு, வளர்ச்சி, இப்போதைய பயன்பாடுகள், வருங்கால சாத்தியக் கூறுகள், வானொலியில் குரலை வைத்துக் கொண்டு என்னென்ன ஜகஜ்ஜால வித்தைகள் எல்லாம் செய்யலாம் என்று நாற்பது நிமிடங்கள் பேசினேன். "ஆக்ராவின் கண்ணீர்" என்ற வானொலி நாடகத்தில் அக்பர் சக்கரவர்த்தியாக நடித்த இரண்டு காட்சிகள் உச்சம்.

உள்ளூர் வானொலிகளில் பணியாற்றும் பல இளஞர்கள் - இளைஞிகள் வந்திருந்தார்கள். "வானொலியில் இப்படியெல்லாம் விஷயமிருக்கிறது என்பது எங்களுக்குத் தெரியவே தெரியாது. யாரும் சொல்லிய்ம் தரவில்லை" என்று சொன்னபோது, இப்போதைய வானொலியின் தரம் எனக்குப் புரிந்தது. கேட்க வேதையாக இருந்தது.

அழைபிதழில் என்னை, "உலகில் மூத்த தமிழ் ஒலிபரப்பாளர்" என்று என்னைக் குறிப்பிட்டிருந்தார்கள். அது எவ்வளவு தூரம் சரி? என்னை விட மூத்தவர்களான பூர்ணம் விஸ்வநாதன், இலங்கையின் முனைவர் கார்த்திகேசு சிவத்தம்பி, "ரேடியோ மாமா" சரவணமுத்து ஆகியோர் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் யாரும் இப்போது களத்தில் இல்லை என்பது மட்டுமல்ல, என்னைப்போல் 58 வருட அனுபவம் என்பது யாருக்கும் இல்லை என்பது என்னையே ஆச்சரியப்பட வைத்த சுவாரஷ்யமான தகவல்.

பெண்களில் இலங்கையின் ராஜேஸ்வரி ஷண்முகம், விசாலாக்ஷி ஹமீது (இவர் BH ன் துணைவியாரல்ல) BBC ஆனந்து சூர்யபிரகாஷ், லண்டன் 'சன்ரைஸ் வானொலி' யின் யோகா தில்லை நாதன் ஆகியோர் என் அளவு அனுபவத்தில் நெருங்கி வரக் கூடியவர்கள்

ஷோபனா ரவி, சரோஜ் நாராயணசாமி ஆகியோர் அரசில் பணியாற்றியவர்கள் ஆகவே கூடிப்போனால் அவர்களது அனுபவம் 40 ஆண்டுகளை தாண்டிப்போக வழியில்லை என்றும் கூறப்படுகிறது. BH அப்துல் ஹமீதின் அனுபவ வயது 45 ஆண்டுகள்.

இந்தத் தகவல்கள் என்னை உற்சாகப் படுத்துவதுடன், முதுமையாக அல்ல, மிக இளமையாக உணரச் செய்கின்றன

நிலை உயரும்போதும் பணிவு கொள்ளும் சாத்தான்குளம் அப்துல் ஜப்பார் .
நன்றி:முத்தமிழ் குழுமம்
http://groups.google.com/group/muththamiz

சீன வானொலி 20-வது கருத்தரங்கின் புதிய அழைப்பிதழ்.


தற்பொழுது திரு. ராஜாராம் அவர்களும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ளார்கள்

Thursday, December 11, 2008

சீன வானொலியின் 20-ஆவது கருத்தரங்க அழைப்பிதல்.






நன்றி: கெ. செந்தில், பேளுகுறிச்சி.
தொடர்பு கொள்ள 9486756357, 9894321892

Friday, November 21, 2008

இலங்கை: வெற்றி எப்.எம்மின் நிர்வாகி கைது

இலங்கையில் ஊடகத்துறையை சேர்ந்த திரு லோஷன் அவர்கள், வெற்றி எப்.எம் மேலாளராக / இயக்குனராக இருக்கிறார்...

அவர் சிரீலங்கா அரசாங்கத்தால் சனிக்கிழமை அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார்...

வெற்றி எப்.எம்மின் மற்றொரு நிர்வாகியான சஞ்ஜெய்யும் கைது செய்யப்பட்டுள்ளார்...

பயங்கரவாதிகளுடன் தொடர்புவைத்திருந்தார் என்று அவரை கைது செய்யப்பட்டபோது அளிப்பட்ட குற்றச்சாட்டு சீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது...

கைது செய்யப்பட்டவர் இப்போது எங்கே இருக்கிறார் என்ற தகவல் கூட அவருடைய குடும்பத்தாருக்கு தெரிவிக்கப்படவில்லை...

இது ஜனநாயகமா ? இது தான் ஊடகவியலாளர்களை நடத்தும் முறையா ?

பயங்கரவாதிகளோடு தொடர்புள்ளவர் எப்.எம் நடத்திக்கொண்டு, வீட்டில் வாழ்ந்துகொண்டு இருந்தார் என்று கூறுவதை ஏற்றுக்கொள்ளமுடியாது...

ஊடகவியலாளர் என்ற அடிப்படையில் அவருக்கு எந்த இயக்கத்தினரையும் தொடர்புகொள்ளவோ, சந்திக்கவோ கூட உரிமை உள்ளது....

அவர் எங்கே அடைத்து வைக்கப்பட்டுள்ளார் என்று கூட அறிவிக்காமல் இருக்கும் சிரீலங்கா அரசு தான் பயங்கரவாத செயலில் ஈடுபட்டுள்ளத்து...

ஊடகவியளார்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கவேண்டிய அரசு, பத்திரிக்கை சுகந்திரத்தை காக்கவேண்டிய அரசு, இப்படி செயல்படுவது முறையல்ல...

உடனே சர்வதேச அளவிலான அழுத்தங்கள் தந்து, லோஷன் அவர்களை காக்க நடவடிக்கை எடுக்க சர்வதேச சமுதாயம் தன்னால் ஆன முயற்சிகளை எடுக்கவேண்டும்...

பத்திரிக்கை சுகந்திரம் காக்கப்படவேண்டும்...

மனித உரிமைகள் காக்கப்படவேண்டும்...

பேச்சுரிமை, எழுத்துரிமை ஆகியவை நிலைநாட்டப்படவேண்டும்...

அவரது உயிருக்கு எந்த விதமான ஆபத்தும் ஏற்பட்டிருக்காது என்று நம்புகிறேன், அவர் நல்லபடியாக திரும்ப வரவேண்டும் !!!

சீரீலங்கா அரசாங்கத்துக்கு என்னுடைய கண்டனங்களை இந்த பதிவு மூலமாக தெரிவித்துக்கொள்கிறேன்...

வலைப்பதிவு உலகில் இருக்கும் ஊடகவியளாலர்கள் இந்த நிகழ்வை தமிழக முதல்வரின் பார்வைக்கு உடனே கொண்டுசெல்லவேண்டும் என்று தெரிவித்துக்கொள்கிறேன்...!!!

Source: http://tvpravi.blogspot.com

Tuesday, November 18, 2008

ஒரு நாள் மட்டும் ஒலிபரப்பும் வானொலி


பதிவர் சந்திப்பு நிகழ்ந்த அந்த சனிக்கிழமை ஒரு விஷேசமான நாள். ஒவ்வொரு வருடமும் ஒரு நாள் மட்டும் ஒலிபரப்பும் ஒரு வானொலி நிலையம் உள்ளது. அதன் பெயர் ரேடியோ செயின்ட் ஹேலீனா. அது தெற்கு அட்லான்டிக் பெருங்கடலில் அமைந்துள்ளது. அன்றைய தினம் அவர்கள் இந்திய நேயர்களுக்காக ஒரு மணி நேரம் மட்டும் ஒலிபரப்பினர். அந்த ஒலிபரப்பினைக் கேட்கத் தாயார்படுத்திக் கொண்டு இருந்ததால் எங்களது பதிவுலக நண்பர்கள் சந்திப்பில் கலந்து கொள்ள இயலவில்லை. நீங்களும் அந்த ஒலிபரப்பினை கேட்க எனது ஆங்கில பக்கத்தினை சொடுக்கலாம் www.dxersguide.blogspot.com

dxersguide

Hi everyone, I posted an episode to my podcast, Jais podcast.

Click this link to check it out:
Radio St. Helena on 15 Nov 2008

- Jai


dxersguide



Thursday, November 06, 2008

தமிழ் சிற்றலை வானொலிகள் (26 அக்டோபர் 2008 முதல் 29 மார்ச் 2009)

வானொலி I நேரம் I அலைவாரிசை I மீட்டர்

தமிழ் நாதம் (இந்தியா) I 0530-0615 காலை I 7360,9835,9910,11740,11985,13795 I 41,31,25,22
0445-0545 மாலை I 7270,13710,15050,15770,17810,17860 I 41,22,19,16
IBC தமிழ்-இங்கிலாந்து I 0530-0630 காலை I 7205 (5935,6045 - A08) I41
அ.இ.வா (இந்தியா) I0545-0815 காலை I 4920 I 60
0830-1000 காலை I 7160 I 41
1240-0300 மதியம் I 7160 I 41
0530-1105 இரவு I 4920 I 60
பீபா (இங்கிலாந்து) I 0600-0630 காலை I 5885 I 49
வோரித்தாஸ்-பிலிப்பைன்ஸ் I 0600-0630 காலை I 11935 I 25
0730-0800 இரவு I9520 I 31
ஆத்மீக யாத்திரை (அமொரிக்கா) I 0630-0700 காலை I 6140 I 49
வத்திகான் வானொலி (வத்திகான்) I 0630-0650 காலை I 5915,7335 I 49,41
0750-0810 காலை I12070 I 22
0820-0840 இரவு I 9310,11850,13765 I 31,25,22
FM கோல்ட் (சென்னை) I 0700-1000 காலை I 7360 I 41
சீன வானொலி I 0730-0830 காலை I 11870,13715 I 25,22
0830-0930 காலை I 1360,013735 I 22
0730-0830 இரவு I 9570, 9665 I 31
0830-0930 இரவு I 9730,13600 I 31,22
பிபிசி தமிழோசை I 0915-0945 இரவு I 6135, 7205,9540 I 49,41,31
அ.இ.வா (திருவணந்தபுரம்) I 1108-1200 மதியம் I 7290 I 41
அ.இ.வா (அந்தமான்) I 0500-0530 மாலை I 4760 I 60
ஆசிய சேவை (இலங்கை) I 0500-0700 மாலை I 7190,11905 - A08 I 41,25
ஆட்வண்டிஸ்ட் வானொலி (அமொரிக்கா) I 0830-0900 இரவு I 11985 I 25
I 1100-1130 இரவு I 11695 I 25
Family Radio (அமொரிக்கா) I 0730-0830 இரவு I 17810 I 16
I 0830-0930 இரவு I 13655 I 22
HCJB (ஆஸ்திரேலியா) I0815-0830 இரவு(சனி மட்டும்) I 15425 - A08 I 19

Wednesday, November 05, 2008

சர்வதேச வானொலி செப்டம்பர் - அக்டோபர் 2008

வெளிவந்து விட்டது இந்த மாத சர்வதேச வானொலி இதழ்.

இந்த இதழில்...

  • இலங்கை வானொலி சிவராஜா தக்கீசன் சிறப்பு செவ்வி
  • ஆண்டு விழா போட்டி முடிவுகள்
  • அலைகளுக்கென்ன வேலி
  • ரேடியோ பிராஹா - ஒரு கண்ணோட்டம்
  • தமிழ் சிற்றலை வானொலிகளின் புதிய அலைவரிசை பட்டியல்

என பல்வேறு புதியத் தகவல்களுடன் வெளிவந்துவிட்டது.
இதழின் ஆண்டு சந்தா ரூ. 100/-
தொடர்புகளுக்கு: 98413 66086
வாங்குவதற்கு முன் பார்க்க வேண்டாமா?!
படிக்க ஆர்வமுள்ளவர்கள், சொடுக்கவும் கீழ்கண்ட தொடுப்பினை
http://vaanoliulagam.googlepages.com/Oct2k8F.pdf

Thursday, October 02, 2008

ஆல் இந்தியா ரேடியோ பூர்ணம் விஸ்வநாதன் மரணம்

பிரபல குணச்சித்திர நடிகர், நாடக இயக்குநர் பூர்ணம் விஸ்வநாதன் இன்று மாலை மரணமடைந்தார். அவருக்கு வயது 78. தமிழ் திரையுலகில் மறக்கமுடியாத சில நடிகர்களுள் முக்கியமானவர் பூர்ணம் விஸ்வநாதன். 1945ல் ஆல் இந்தியா ரேடியோவில் செய்தி வாசிப்பாளராக தன் பணியைத் தொடங்கிய விஸ்வநாதன், தன் குரல் வளத்தால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.1947ம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைந்த செய்தியை ஆல் இந்தியா ரேடியோவின் தமிழ்ச் செய்தியில் முதன் முதலில் கிழக்காசிய நாடுகளுக்கு அறிவித்த பெருமை இவருக்கு உண்டு. தமிழ் சினிமாவில் ரசிகர்களின் கண்களைக் குளமாக்கும் இரக்க சுபாவமுள்ள பல பாத்திரங்களில் நடித்த பெருமையும் இவரை சாரும்.ரஜினியுடன் இவர் வித்தியாசமாக நடித்த தில்லு முல்லு, நினைத்தாலே இனிக்கும் படங்கள் இன்றும் மறக்க முடியாதவை.கமல்ஹாசனுடன் மகாநதி, மூன்றாம் பிறை படங்களில் மிக அற்புதமாக நடித்து ரசிகர்களின் பாராட்டுக்களைப் பெற்றார்.விதி, வறுமையின் நிறம் சிவப்பு, மூன்றாம் பிறை, புதுப்புது அர்த்தங்கள், கேளடி கண்மணி, ஆண் பாவம் என இவர் பங்கேற்ற மிகச் சிறந்த படங்களின் எண்ணிக்கை ஏராளம்.சினிமாவைத் தவிர, நாடகத்திலும் மிகுந்த ஈடுபாடு காட்டியவர் விஸ்வநாதன். தனது பூர்ணம் தியேட்டர்ஸ் மூலம் பல நெகிழ்ச்சியூட்டும், அர்த்தமுள்ள நாடகங்களைத் தந்தவர்.மறைந்த எழுத்துலக மேதை சுஜாதா, பூர்ணம் விஸ்வநாதனுக்காகவே எழுதிய நாடகங்கள் அன்புள்ள அப்பா, ஊஞ்சல், அப்பாவின் ஆஸ்டின் கார்... இன்னும் பல.சமீப காலமாக இவர் உடல் நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தார். காய்ச்சல் அதிகமானதன் காரணமாக சில தினங்களுக்கு முன் அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இன்று காலை அவருக்கு நினைவு தப்பியது. மாலை 4 மணிக்கு அவர் மரணமடைந்தார். தமிழ் கலைத்துறைக்கு பெரும் இழப்பு பூர்ணம் விஸ்வநாதனின் மரணம்.
Thanks to http://thatstamil.oneindia.in

Monday, September 15, 2008

சர்வதேச வானொலி ஆகஸ்ட் - செப்டம்பர் 2008

வெளிவந்து விட்டது இந்த மாத சர்வதேச வானொலி இதழ்.

இந்த இதழில்...
* ஆசியாவின் முதல் தமிழ் வானொலி
* விலையும் குறைவு.. பயனும் அதிகமுள்ள வானொலி
* ஒலியுதிற்காலம்
* ரூ. 4000/- விலை கொண்ட டிஜிடல் வானொலி
* வருடத்தில் ஒரு நாள் மட்டும் ஒலிபரப்பும் வானொலி

என பல்வேறு புதியத் தகவல்களுடன் வெளிவந்துவிட்டது.
இதழின் ஆண்டு சந்தா ரூ. 100/-
தொடர்புகளுக்கு: 98413 66086
வாங்குவதற்கு முன் பார்க்க வேண்டாமா?!
படிக்க ஆர்வமுள்ளவர்கள், சொடுக்கவும் கீழ்கண்ட தொடுப்பினை

விரல்நுனியில் SMS விடு தூது-2

CRI SMS NET
பாண்டிச்சேரியிலிருந்து தினந்தோறும் தமிழக நேயர்களிடையே சென்றடையும் CRI SMS NET. சீன நாட்டின் கலை, பண்பாடு, இலக்கியம், சுற்றுலா, விளையாட்டு என அனைத்துத் துறைத் தகவல்களையும் அக்குவேறு ஆணி வேறாக அலசி உடனுக்குடன் தகவல் தருகிறது இந்த CRI SMS NET . இந்த CRI SMS NET-ல் பிறந்தநாள், திருமணநாள் வாழ்த்து செய்திகள் இடம் பெறாது. அதுபோல் மற்ற வானொலிகள் பற்றிய தகவல்களும் தற்போது இடம்பெறுவது இல்லை.
தொடர்புகொள்ள:
எஸ்.செல்வம் - 99769 90808,
என். பாலகுமார் - 98423 13233

DG SMS NET
மின்னக்கல் என்ற சிறிய கிராமத்திலிருந்து வரும் கிராமத்து மின்னல். அனைத்து சிற்றலை வானொலிகள் பற்றிய நேரம், அலைவரிசை, போட்டித் தகவல்கள், தொடர்பு முகவரி எனப் பல்வேறு தகவல்கள் தரும் மினி WRTH. (SW,MW,FM) பண்பலை, சிற்றலை, மத்திய அலை கேட்கும் நேயர்களின் தகவல் சுரங்கம். உள்ளூர் வானொலி முதல் உலக வானொலிகள் வரை அனைத்துத் தகவல்களையும் DG SMS NET மூலம் பெற முடியும்.
தொடர்புக்கு:
மின்னக்கல் செல்வராஜ்-99428 33661

RVA SMS NET
வேரித்தாஸ் தமிழ்ப்பணி- உலகத் தமிழர் நெஞ்சங்களில் நீங்கா இடம்பெற்ற வானொலி. வேரித்தாஸ் வானொலியைத் தமிழர்கள் மத்தியில் மேலும் அதிக நேயர்களிடையே சென்றடையும் வண்ணம்வழிவகை செய்திட இனிய இதயங்கள் திமிரி. கண்ணன் சேகர், செல்லூர் என்.சீனிவாசன் இருவரும் இணைந்து நடத்திடும் RVA SMS NET நெட் இது. முழுக்க முழுக்க வேரித்தாஸ் வானொலியை மையப்படுத்தியே தகவல்கள் பரிமாறப்படுகின்றன. தொடர்புக்கு,
கண்ணன் சேகர்-98949 76159
செல்லூர் என்.சீனிவாசன்-99941 26668

நெல்லை SMS NET
திருநெல்வேலியிலிருந்து சிலோன் ரேடியோ நேயர் கோபால் அவர்களால் நடத்தப்படுகிறது. இந்த நெல்லை SMS NET மூலம் பெரும்பாலும் இலங்கை வானொலி பற்றிய தகவல்கள் பரிமாறப்படுகின்றன. ஏறத்தாழ 400 நேயர்களைச் சென்றடையும் நெல்லை SMS NET இது.நேயர்கள் செவிகளைத் தாலாட்டி ரசனையை வளர்க்கும் இலங்கை வானொலி அன்றுமுதல் இன்றுவரை தனது பெருமையை யும், புகழையும் தக்க வைத்துள்ளது என்பதை இந்த நெல்லை SMS NET சிறப்பாக செயல்படுவதை வைத்தே கூறிவிடலாம்.
தொடர்புக்கு:
திருக்களூர் கோபால்- 98429 50035, 98429 50075

பொள்ளாச்சி SMS NET
என். லட்சுமணன் அவர்களால் ஏராளமான நேயர்களை சென்றடைந்த தமிழகத்தின் பிரபலமான SMS NET. தனது வேலைப்பளு காரணமாகத் தற்போது நிறுத்தி¬ வைத்துள்ளதாகக் கூறும் லட்சுமணன், விரைவில் தனது SMS NET சேவையைத் தொடருவார்.
தொடர்புக்கு:
என். லட்சுமணன் - 98650 16402

SMS NET என்பது பொழுதுபோக்க அல்ல, நம் பொழுதைப் பயனுள்ளதாக்கி விரல்நுனியில் வந்து தகவலை சேர்க்கும் SMS விடு தூது. -வண்ணை கே. ராஜா

Sunday, September 07, 2008

SMS விடு தூது...

SMS -குறுந்தகவல் செய்திப் பரிமாற்றம் - தற்போதைய வாழ்க்கையில் தவிர்க்க முடியாத விஷயமாகஉள்ளது. காரணம், காலை முதல் இரவு வரை பல்வேறு காரணங்களுக்காக மாணவர்கள் முதல் தொழிலதிபர்கள் வரை எளியமுறையில் விரைவாக செய்திகளைப் பரிமாறிக்கொள்ள SMS வசதியைப் பயன்படுத்துகிறார்கள். அந்த வகையில் வானொலி நேயர்கள் மத்தியில் SMS Net பிரபலமாகஉள்ளது.

SMS Net(எஸ்.எம்.எஸ் நெட்) என்றால் என்ன? நீங்கள் தமிழகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் நெட் அமைப்பாளரிடம் உங்கள் கைத்தொலைபேசி எண்ணைப் பதிவு செய்துவிட்டால் போதும். தினமும் தகவல்கள் உங்கள் விரல்நுனிக்கு வந்து சேர்ந்து விடும். ஒவ்வொரு தகவலும் அனைத்து உறுப்பினர்களுக்கும் எந்த விதத் தடையுமின்றி வந்துசேரும்.

உதாரணமாக உங்களுக்கு அடுத்தவாரம் பிறந்தநாள் வர இருக்கலாம். இந்தத் தகவலை நெட் ஆபரேட்டரிடம் பதிவு செளிணிதுவிட்டால் போதும். உங்கள் பிறந்த நாளன்று அனைத்து நேயர்களுக்கும் எஸ்.எம்.எஸ் மூலம் சென்றடையும். அனைவரும் உங்களை வாழ்த்தும் போது நீங்கள் அடையும் மகிழ்ச்சியை அளவிட முடியாது. இதுபோன்ற நினைவூட்டல்கள் பிறந்தநாளுக்கு மட்டுமல்ல, முக்கிய வானொலி நிகழ்ச்சி ஒலிபரப்பாகும் நேரம், வானொலிப் பேட்டிகள், வானொலி ஆண்டுவிழா, சிறப்பு நிகழ்ச்சிகள்ஒலிபரப்பாகும் நேரம் போன்றவற்றையும் நினைவூட்டத் தவறுவதில்லை. திருமணநாள், பிறந்தநாள் வாழ்த்துக்களை நேயர்களிடம் பரிமாறிக் கொள்ளும் வகையில் செயல்பட்டு நட்புறவை வளர்க்கும்எஸ்.எம்.எஸ் நெட் பற்றி என்னவென்று சொல்வது!

சிற்றலை வானொலி கேட்போருக்குப் பிரபல வானொலிகள் ஒலிபரப்பாகும் நேரம், அலைவரிசை, முகவரி போன்றவற்றைத் தேடிக்கண்டுபிடிப்பது மிகவும் சிரமமான விஷயம். இந்தத் தகவல்கள் தெளிவாக அனைத்து நேயர்களுக்கும் எஸ்.எம்.எஸ் நெட் மூலமும் சென்றடைகின்றன.பிரபல சிற்றலை வானொலிகளில் அவ்வப்போது நடத்தப்பெறும் போட்டிகள் பற்றியும், அதில் பங்குபெறும் முறையும் உடனுக்குடன் எஸ்.எம்.எஸ் செய்திகளாகப் பரிமாறப்படுகின்றன. முகம் தெரியாத பல்வேறு முகவரிகள்இந்த SMS Net மூலம் தகவல்களைப் பெறுவதோடு நட்புறவை வளர்த்துக்கொண்டு பல்வேறு சமூக நலப்பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

SMS Net -உங்கள் வாழ்வில் புது அனுபவங்களை ஏற்படுத்தித் தருகின்றன. பங்கேற்க மறந்த வானொலிப் போட்டிகள் இப்போது இல்லை. எல்லாமே SMS Net தரும் தகவல் மழையால்தான்.வானொலி கேட்பதில் தகவல் பெறலாம், இசை கேட்கலாம், அதையும் தாண்டி தமிழக நேயர்களிடையே நட்புறவை வளர்க்கும் SMS Net என்ற உறவுப்பாலங்கள் மென்மேலும் வளர்ந்தால்தான் வானொலித் துறையும் வளரும். நேயர்களிடையே ரசனை மட்டுமல்ல, நட்புறவும் வளரும். வயது, கல்வித்தகுதி, ஜாதி, மதம் தாண்டி நம்மை இணைக்கும் வானொலி கேட்கும் ஆர்வம் பெருக நட்பு வட்ட சங்கிலி (SMS Net) நிறையப் பெருகவேண்டும். தமிழகத்தில் உள்ள SMS Net-களின்விபரம் நாளை.. -வண்ணை கே. ராஜா

Saturday, September 06, 2008

தமிழகத்தைச் சேர்ந்த ஹாம்களுக்கு அழைப்பு; சாருஹாசன் பேட்டி - பாகம் 4

ஆந்திர அரசு தங்களுக்குக் கொடுத்த விருது பற்றி?
ஒரு சமயம் இரவு 12 மணிக்கு ஆந்திர கலெக்டர் அலுவலகத்தில் இருந்து ஹாமில் தமிழகத்தைச் சேர்ந்த ஹாம்களுக்கு அழைப்பு வந்தது. அந்த சமயத்தில் நான் மட்டுமே அந்த அலைவரிசையில் இருந்தேன். ஆந்திராவில் புயலின் காரணமாக உணவுப்பொருட்களை ஏற்றிக் கொண்டு பெங்களூரில் இருந்து வரும் ஹெலிகாப்டருக்கு சென்னையில் பெட்ரோல் போட வேண்டும் என்று கூறினார்.நானும் உடனே அவர்களை அலைவரிசையிலேயே இருக்கச் சொல்லி, எங்களது வீட்டின் கீழ்த் தளத்தில் அதிர்ஷ்டவசமாக அந்த சமயத்தில் இந்தியன் ஆயில் உதவி பொது மேலாளர் தங்கியிருந்தார். அவரை அழைத்து அலைவரிசையில் பேசச் சொல்லி, நானே ஆந்திர கலெக்டரின் சார்பில் கடிதம் எழுதி, ஹெலிகாப்டருக்கான எரி பொருளை வாங்கிக் கொடுத்தோம். இந்த சேவைக்காக எனக்கு ஆந்திர அரசு விருதினைக் கொடுத்தது. இதுவும் ஹாம் வானொலியில்மட்டுமே அன்று சாத்தியமாக இருந்தது.

மோர்ஸ் குறியீட்டினைப் பயன்படுத்தியபோது ஏதேனும் மறக்க முடியாத அனுபவம்?
1960களில் பெரும்பாலான ஹாம் உபயோகிப்பாளர்கள் மோர்ஸ் குறியீட்டினைப் பயன்படுத்தியே வெளிநாட்டில் உள்ள ஹாம் வானொலி ஒலிபரப்பாளர்களைத் தொடர்பு கொண்டு வந்தனர். ஒருசமயம் நான் கீயில் ஒலிபரப்பி வரும்போது ஸ்காட் என்ற பெயரில் ஒருவர் மறுமுனையில் இருந்து எனக்கு பதில் அனுப்பினார். உடனே அவரிடம், நீங்கள் விண்வெளிவீரர் ஸ்காட்தானே?Óஎன்று கேட்டேன். உடனே, அவர் Òநீங்கள்தான் முதல் தடவையாக என்னைக் கண்டு பிடித்துள்ளீர்கள். நான் எத்தனையோ முறை இந்த மோர்ஸ் ஒலிபரப்பில் வந்துள்ளேன். ஆனால் முதன்முறையாக நீங்கள்கண்டு பிடித்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சிÓ என்றார். அந்த கால கட்டங்களில் ஸ்காட் மிகப் பிரபலம்.

ஹாம் வானொலியின் வருங்காலம் எப்படி இருக்கும்?
பலர் நினைக்கிறார்கள், தொழில் நுட்பம் வளர்ந்து வருவதால் ஹாம் வானொலியும் மறைந்துவிடும் என்று. ஆனால் அது மறைந்து விடாது. காரணம் புதிய தொழில்நுட்பங்களோடு இணைந்துசெல்லவல்லது இந்த ஹாம் ரேடியோ. உதாரணமாக இணையத்தோடு இணைந்து இன்று ஹாம் வானொலியைக் கேட்கலாம், என்ற அளவிற்கு இதன் தொழில்நுட்பம் வளர்ந்துள்ளது.

தொலைதூர நேயர்களோடு பேசிய அனுபவம் ஏதேனும் உண்டா?
நிறைய உண்டு. சுவாரஸ்யமான சம்பவம் கூட ஒன்று உண்டு. நான் எனது ஹாம் ரேடியோவில் எப்.எம் அலைவரிசையைக் கேட்டுக் கொண்டிருந்தபோது, சீனாவில் இருந்து ஒருவர் அதே அலைவரிசை யில் வந்தார். எனக்கு ஆச்சரியம் என்னவெனில் எப்.எம் அலைவரிசை 80 கிலோமீட்டருக்கு மேல் போகாது. அப்படியிருக்க இது எப்படி சாத்தியம்? அதன்பிறகு எனது நண்பர் மூலம் இதற்குத்தீர்வு கிடைத்தது. அயனி மண்டலத்தில் இரண்டு லேயர் நெருங்கும்போது அதனுள் இந்த எப்.எம் அலைவரிசை புகுந்து, எங்கு ஓட்டை உள்ளதோ, அங்கு அது இறங்கிவிடும். அது போன்றே இன்று ஏராளமானோர் ஒரு சில சமயங்களில் தொலைதூரப் பண்பலையைக் கேட்க முடிகிறது.
சந்திப்பு: தங்க. ஜெய்சக்திவேல், வண்ணை கே. ராஜா (முற்றும்)

Friday, September 05, 2008

ராஜிவ் காந்தியும் ஒரு ஹாம்: சாருஹாசன் பேட்டி - பாகம் 3

ஹாமில் மறக்க முடியாத அனுபவம் ஏதேனும் உண்டா?
ஏராளம் உண்டு. அதில் ஒரு குழந்தையின் உயிரைக் காப்பாற்றி யதை மறக்க முடியாது. ஒரு சமயம் இரவு 11 மணிக்கு HAM-ல் ஒரு பெண்ணின் குரல், தனது கணவர் ஹாம் என்றும், அவர் அந்த சமயம் ஊரில் இல்லை. இந்த சமயத்தில் தனது குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் போய் விட்டது என்று கூறினார். நான் உடனே அவர்களை அதே அலைவரிசையில் தொடர்ந்து இருக்கச் சொல்லிவிட்டு மற்றொரு டாக்டரை தொலைபேசியில் அழைத்து, அவரும் ஹாமாக இருந்ததால் ஹாம் அலைவரிசையில் வரச்சொல்லி, குழந்தையின் நிலையை விசாரித்து உடனே மருத்துவமனைக்குஅழைத்து வந்து, இரவோடு இரவாக அறுவைச் சிகிச்சைசெய்து குழந்தையைக் காப்பற்றினார். அவரின் பெயர் டாக்டர் கஜா. அவரது வீட்டில் அனைவருமே ஹாம் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவத்தை இன்றும் என்னால் மறக்க முடியாது.

ஹாம் வானொலியின் சிறப்பு என்ன?
ஏராளமான சிறப்புகள் உள்ளன. உதாரணமாக ஒன்று. ஒருசமயம் ஒரு ஹாம் உபயோகிப்பாளரின் கார்திருடப் பட்டுவிட்டது. உடனே அவர் ஹாம் வானொலியில் தன் கார் திருடப்பட்டு விட்டதாகக் கூறினார். அந்த சமயத்தில் ஹாம் வானொலியில் இருந்த ஒருவர், அந்த எண்கொண்ட கார் விமான நிலையம் தாண்டி சென்று கொண்டிருப்பதாகத் தகவல் கொடுத்தார். உடனே அந்தத் தகவல் போலிஸ்க்குத் தெரியப் படுத்தப்பட்டு, அந்தப்பகுதி போலிஸாரால் பிடிக்கப்பட்டது. இது போன்று இன்னும் ஏராளமான நன்மைகள் அந்தக் காலகட்டத்தில் ஹாம் வானொலியைப் பயன் படுத்துவதால்இருந்தன.

ராஜிவ் காந்தியும் ஒரு ஹாம் வானொலி பயன் பாட்டாளர் எனக் கேள்விப்பட்டோம்...?
ஆம், ராஜீவ் காந்தியும் ஒரு ஹாம் உபயோகிப்பாளர். பிரதமர் ஆவதற்கு முன்பு தினமும் ஹாம் அலைவரிசையில் வருவார். அந்த சமயங்களில் அவருடன் பேசிய மிகச் சிலரில் நானும் ஒருவன். இதுஅவருக்குத் தெரியாது. அதன்பின் அவர் ஹைதராபாத் வந்தபோது தேசிய அமெச்சூர் வானொலி இன்ஸ்டிடியூட்டில் இருந்து பேசினார். அந்த சமயத்தில் அவருடன் பேச முடியவில்லை என்பதில் இன்றும் வருத்தமே.

வெளிநாட்டு ஹாம்-களுடன் பேசிய அனுபவம்?
நான் பெரும்பாலும் இங்கிலாந்து ஹாம்களுடன் பேச விருப்பப்படுவேன். அதற்காக இரவு 12 மணிவரை விழித்துக்கொண்டு இருப்பேன். காரணம், இங்கிலாந்தில் அப்பொழுது மாலைநேரம். அந்த சமயத்தில்தான் ஏராளமான ஹாம்கள் அலைவரிசையில் வருவர். ஒரு சிலநாட்கள் அவர்களுடன் விடிய விடிய பேசிய அனுபவங்களும் உண்டு. (தொடரும்)

Thursday, September 04, 2008

சாருஹாசன் பேட்டி - பாகம் 2

ங்களுடைய Call Sign பற்றி?

1962இல் நான் தேர்வு எழுதி ஹாம் உரிமம் வாங்கினேன். எனது Call sign VU2 SCU. அந்த நேரத்தில் எனது வக்கீல் பணியில் தீவிரமாக இருந்ததால் Call Sign-ஐப் புதுப்பிக்கத் தவறிவிட்டேன். இதனால் மீண்டும் ஒருமுறை புதிதாக விண்ணப்பித்து Call Sign-ஐ வாங்க வேண்டியதாயிற்று. 1982இல் அதே Call Sign-ஐப் பெற்றேன்.

தாங்கள் பயன்படுத்திய ஹாம் வானொலிப் பெட்டிகள் குறித்து?
அந்த காலகட்டங்களில் ஹாம் வானொலிப் பெட்டிகளின் விலை அதிகமாக இருந்தது. மேலும் இந்தியாவில் அவை விற்பனைக்குக் கிடைக்காது. எனக்குத் தேவையானவற்றை ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்தேன். அப்பொழுது என்னிடம் VHF மற்றும் UHF-இல் செயல்படக்கூடிய சாதனங்கள் இருந்தன. இதற்காக 20 மீட்டர் மற்றும் 40 மீட்டரில் ஒலிபரப்புவதற்காக Long Wire ஆண்டனாவைப்பயன்படுத்தி வந்தேன்.

ஹாம் வானொலியில் ரிபீட்டர் என்றால் என்ன?
VHF அலைவரிசைகளில் ஹாம் வானொலியைப் பயன்படுத்தும்போது அது நீண்டதொலைவுக்குச் செல்லாது. எனவே இது போன்ற ரிபீட்டர்கள் VHF ஒலி அலையைப்பெற்று மீண்டும் சக்தி கூட்டி மேலும் ஒலிபரப்பும். இதனால் VHF ஒலி அலைகள் நீண்ட தொலைவுக்குச் செல்லும். அன்றைய காலகட்டத்தில் ஒரு ரிப்பீட்டரின் விலை குறைந்தது ஒரு லட்சம் ரூபாய். காரணம் அதில் 'டியூப்ளெக்சர்' என்ற ஒன்றின் மீது தங்கமுலாம் பூசியிருப்பார்கள். ரிப்பீட்டரைப் பயன்படுத்தவும் தனியான உரிமம் வேண்டும். ஆனால் உரிமம் இல்லாமலேயே அதில் பல பரிசோதனைகளைச் செய்து பார்த்தேன்.

தங்களைப் போன்று நடிகர்கள் வேறு யாராவது ஹாம் உரிமம் பெற்றுள்ளனரா?
நடிகர்களில் என்னைப்போன்றே எனது சகோதரர் கமல்ஹாசன் ஹாம் உரிமம் வைத்துள்ளார். அவரது Call sign VU2 HAS. அதேபோன்று எனது சகோதரர் சந்திரஹாசனின் Call sign VU2 SCH. ஆக்டிவாக இருக்கும் நடிகர்களில் ஹாம் வானொலியில் அடிக்கடி பேசுபவராக மம்மூட்டி உள்ளார். தனதுநடிப்புக்கு இடையிலும் அவ்வப்போது ஹாம் அலைவரிசையில் வருவார். அதேபோன்று ஆந்திர நடிகர் பிரசாந்தும் ஹாம் வானொலி உரிமம் வைத்துள்ளார். (தொடரும்)

Wednesday, September 03, 2008

சாருஹாசன் சிறப்புப் பேட்டி - பாகம் 1

சாருஹாசன் என்றால் நம் எல்லோருக்கும் அவர் ஒரு சிறந்த நடிகர் என்று மட்டுமே தெரியும். ஆனால் அவர் வானொலியோடும் தொடர்பு கொண்டவர் என்பது மிகச்சிலருக்கு மட்டுமே தெரியும். ஹாம் வானொலித்துறையில் பழுத்த அனுபவம்கொண்ட இவரை ஒரு மாலை வேளையில் நமது சர்வதேசவானொலி நேயர்களுக்காக அவரது இல்லத்தில் சந்தித்தோம்.

ஆழ்வார்ப்பேட்டையில், முர்ரேஸ் சாலையில் உள்ள அவரது வீட்டைப்பற்றி அங்குள்ளவர்களிடம் யாரைக் கேட்டாலும் மணிரத்தினம் வீடா என்றே கேட்கிறார்கள். 77 வயதாகும் சாருஹாசன் தற்பொழுது தனது மகள் சுஹாசினியுடன் வசித்து வருகிறார். இரண்டு வருடங்களுக்கு முன்பு பாரிஸில் ஏற்பட்ட ஒரு விபத்தில் இரண்டு வருட காலம் நகர முடியாமல் இருந்தவர் இப்பொழுது பழைய சுறுசுறுப்புடன் நம்மோடு ஹாம் வானொலி பற்றி உரையாடியதன் எழுத்து வடிவம் இந்த இதழில் இடம்பெறுகிறது.

வானொலித் துறையில் ஆர்வம் வந்தது எப்படி?
பரமக்குடியில் இருக்கும் ஒரு மாணவனை காரைக்குடியில் உள்ள ஒரு கல்லூரிக்கு சேர்க்கச்சென்று இருந்தேன். அங்குள்ள மாணவர் விடுதியில் அந்த மாணவனைத் தங்க வைத்துவிட்டு வரும்போது, அருகில் உள்ள ஒரு அறையில் இன்ஜினியரிங் படிக்கும் மாணவர் ஒருவர் தபால் அலுவலகங்களில் தந்தி அடிப்பதுபோல் ஏதோ செய்துகொண்டு இருந்தார். அவரிடம் அது என்ன என்று ஆர்வமுடன்கேட்டேன். அதற்கு அவர், அது மோர்ஸ் கீ என்றும், அதன்மூலம் வெளிநாடுகளில் உள்ளவர்களுடன் தொடர்பு கொள்ளலாம் என்றும் கூறினார். அவரது பெயர், சாரி. அவரது Call signVU2SR. அதன்பின் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் அவரிடம் சென்று மோர்ஸ் கற்றுக்கொண்டேன். அதன்பின் அவர் ஜெர்மனிக்கு சென்று விட்டார். அதுவே முதன்முதலில் ஹாம்ரேடியோ மீது ஆர்வம் வரக் காரணமாக இருந்தது.

முதன் முதலில் ஹாம் வானொலியில் பேசியது பற்றி?
உண்மையைக் கூற வேண்டுமாயின் முதலில் ஹாம் வானொலியில் நான் பேசியது எனது Call signல் அல்ல. சாரி அவர்கள் ஜெர்மனி சென்று விட்டதால் அவரது Call sign-ல் பேசினேன். இதை VU2LE எனும் ஹாம் உபயோகிப்பாளர் கேட்டுவிட்டு, Òநீ சாரி அல்ல, உனதுபெயர் என்ன?Ó, என்று ஹாம் ரேடியோவில் கேட்டதுதான் தாமதம். உடனே வானொலிப்பெட்டியை நிறுத்திவிட்டு வெளியே வந்துவிட்டேன். அதன்பின் அவர் யார் எனக் கண்டுபிடித்து, அவரிடமே மீண்டும் பயிற்சி பெற்றேன். அவர் பெயர் பாலகிருஷ்ணன்.

அந்தக் காலகட்டத்தில் இருந்த ஹாம் வானொலி லைசன்ஸ் பெற்றோரின் எண்ணிக்கை?
நான் ஹாம் வானொலி உபயோகிக்க உரிமம் வாங்கியபோது இந்தியாவில் இருந்த ஹாம் வானொலிக்கு உரிமம் பெற்றோரின் மொத்த எண்ணிக்கையே 400தான். ஆனால் 1980களில் சென்னையில் மட்டுமே ஹாம் வானொலிக்கு தேர்வு எழுதியவர்கள் 6000 பேர். அந்த சமயத்தில் இந்தியாவிலேயே அதிக ஹாம் வானொலி உபயோகிப்பாளர்கள் இருந்த மாநிலமாக தமிழகம் இருந்தது, அடுத்த இடத்தில் கேரளா இருந்தது. (தொடரும்)

Tuesday, September 02, 2008

எம்.ஜி.ஆருக்கு தமிழ்வாணன் வழங்கிய மக்கள் திலகம் பட்டம்

லங்கை வானொலி நிகழ்ச்சியில் சமீபகாலமாக ஏராளமான மாற்றங்கள் நடைபெற்றுவருகின்றன. அந்த வகையில் கடந்த 02.03.2008 அன்று காலை 7.05 முதல் 7.45 வரை இலங்கை சர்வதேசவானொலி ஒலிபரப்பிய 'தொடுவானம்' நிகழ்ச்சியில் மணிமேகலைப் பிரசுரத்தின் ரவி தமிழ்வாணன் இந்திய நேயர்களுடன் தொலைபேசி மூலம் நேரடியாக உரையாடியது இலங்கை வானொலி வரலாற்றில் மிக முக்கியமான நிகழ்ச்சியாகும்.

ஒரு எழுத்தாளன் என்பதற்கு, ஒருவன் தோளில் பை, ஜிப்பா, பைஜாமா போட்டுக்கொண்டு வந்தால் அவனை எல்லோருக்கும் அடையாளம் தெரியும். அந்த வடிவத்தை மாற்றி அமைத்தவர் தமிழ்வாணன்தான். எப்படி என்றால் தமிழ்வாணன் என்பதற்குபதில் ஒரு கருப்புக் கண்ணாடி தொப்பி படமாக வரையப்பட்டு அனுப்பினால் மணிமேகலைப் பிரசுரத்துக்கு வந்து சேர்ந்துவிடும், அதேபோன்று லேனா தமிழ்வாணனுக்கு கருப்புக்கண்ணாடிவரைந்தால் போதும். தபால் உரிய முகவரிக்கு வந்து சேர்ந்துவிடுகிறது. தனக்கு அதுபோன்று ஒரு அடையாளம் இல்லை என்று சொல்லி ஆதங்கப்பட்டார் ரவி தமிழ்வாணன்.

மணிமேகலைப் பிரசுரத்தில் ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட பிரபலமானவர்களுடைய முகவரிகளை வெளியிட்டுள்ளது பற்றி நிகழ்ச்சியில் கூறினார். உலகத்தில் எந்த இடத்தில் தமிழர்கள் வசிக்கின்றார்களோ அந்தந்த இடங்களுக்குச் சென்று அவர்களுடன் கலந்து உரையாடியதைப் பெருமைப்படக் கூறினார். இலங்கைக்கு ஐந்து முறை சென்று, மலைப்பிரதேசங்களில் வாழ்கின்றவர்களிடம் நான்கு முறை அவர்களின் பழக்க வழக்கங்களை அறிந்துகொண்ட அனுபவத்தை நேயர்களுடன் நிகழ்ச்சியில் பகிர்ந்து கொண்டது பல நேயர்களின் மனதினைத் தொட்டது. காரணம் அந்த மக்கள் என்னசெய்கிறார்கள் மற்றும் எப்படி வாழ்கிறார்கள் என்பதை நானும் நன்கு அறிவேன்.

எம்.ஜி.ஆருக்கு எத்தனையோ பட்டங்கள் கிடைத்திருந்தாலும், தமிழ்வாணன் வழங்கிய மக்கள் திலகம் பட்டம்தான் எம்.ஜி.ஆருக்கு மிகவும் பிடித்தது என்று நிகழ்ச்சியில் சொன்னது பலருக்குப் புதிய செய்தியாக இருக்கலாம். கே.பாலாஜி திரைப்படத்தில் கதாநாயகன், நாயகிக்கு ராஜா- ராதா என்று பெயர் இருப்பதுபோல் எழுத்தாளர் சுஜாதா அவருடைய கதையில் கணேஷ்-வசந்த் என்றும், தமிழ்வாணன் துப்பறியும் நாவல்களில் சங்கர்லால் வருவதை இலங்கை வானொலி நேயர்கள் கேட்டவிதம், அதற்கு ரவி தமிழ்வாணன் பதிலளித்தவிதம் அனைவரின் மனதையும் கவர்ந்தது.

இலங்கை வானொலி அறிவிப்பாளர்கள், சக பணியாளர்களைப் பற்றி ஒரு வாழ்க்கை வரலாற்றுப் புத்தகம் வெளியிடுவதாகநிகழ்ச்சியில் அறிவித்தது, இலங்கை வானொலி நேயர்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சியை நிச்சயமாகத் தரும். இலங்கை சர்வதேச வானொலியில் நேரடி தொலைபேசி உரையாடல் நிகழ்ச்சியில்கலந்துகொண்ட முதல் நபர் ரவி தமிழ்வாணன் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் இதே சர்வதேச வானொலியில் 14.05.2006 அன்று காலை 9.05க்கு ஒலிபரப்பு முடிகின்ற தறுவாயில் எனக்காக சிறப்பு ஒலிபரப்பு என்று கூறி பதினைந்து நிமிடங்கள், அதாவது 9.20 வரை நீடிக்கப்பட்டு, அன்றைய அறிவிப்பாளர் திருமதி. விசாலாட்சி ஹமீது அவர்கள்எம்.ஜி.ஆர் நடித்த நான்கு பாடல்களுக்கு விளக்கம் கேட்டு அந்தப் பாடலை ஒலிபரப்பு செய்தார்கள். இந்த வாய்ப்பு அந்த சர்வதேச வானொலியில் முதன் முதலில் நேயர் என்ற முறையில் எனக்குக் கிடைத்தது. - வள்ளியூர் ஏ.பி.எஸ். ரவீந்திரன்

Monday, September 01, 2008

வானொலிப்பெட்டியின் விலை ரூ.2,40,000?!

டிஜிட்டல் வானொலிப் பெட்டிகளில் மற்றும் ஒரு புதிய வானொலிப்பெட்டி சந்தைக்கு வந்துள்ளது. ஜப்பான் ரேடியோ கம்பெனியால் தயாரிக்கப்பட்ட இந்த வானொலிப் பெட்டியானது கடந்த மாதம் விற்பனைக்கு வந்தது. NRD-630 மாடல் எண் கொண்ட இந்த வானொலிப்பெட்டியானது, புதிய தொழில்நுட்பங்கள் பலவற்றைத் தன்னகத்தே கொண்டு வெளியிடப்பட்டுள்ளது.

90 கிலோ ஹெர்ட்ஸில் இருந்து 30,000 கிலோ ஹெர்ட்ஸ் வரை ஒலிபரப்பும் அனைத்து வானொலிகளின் ஒலிபரப்புகளையும் தெளிவாக இந்த வானொலியில் கேட்கலாம். ஒரு ஹெர்ட்ஸ் என்றவாறு நகரும் வகையில் இது உள்ளது. அதாவது 7275.000 என்று இதன் கேட்கும் திறன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் துல்லியமான ஒலிபரப்பினைக் கேட்கலாம். LSB, USB, AM, CW மற்றும் RTTY ஆகிய வடிவங்களில் ஒலிபரப்பாகும் நிகழ்ச்சிகளை இதில் தெளிவாகக் கேட்கலாம். இந்த வானொலிப்பெட்டியின் Bandwidth முறையே 6, 3, 2.7, 0.5 மற்றும் 0.3 என்ற வகையில் வழங்கப்பட்டுள்ளது.

300 அலைவரிசைகளைத் தன்னகத்தே பதிவு செய்து வைத்துக்கொள்ளும் திறன் இந்த வானொலிப்பெட்டியில் உள்ளது. நான்கு வகையான டியுனிங் வசதியைக் கொண்ட இந்தவானொலிப்பெட்டியிலேயே ஸ்பீக்கர் இணைக்கப்பட்டுள்ளதோடு, தெளிவான பெரிய டிஸ்பிளே உள்ளதால், எளிதாக சிற்றலை வானொலிகளை உடனுக்குடன் டியுன் செய்ய முடிகிறது.மேலும் இதில் Passband Shift, DBV, S-Meter, Squelh, Dimmer மற்றும் AGC பிரிவு ஆகியவை வானொலிப்பெட்டிக்கு மேலும் வலுசேர்க்கின்றன.

பெரும்பாலும் கண்காணிப்பு பணிக்காக மட்டுமே இது போன்ற வானொலிப்பெட்டிகள் பயன்படுத்தப்படுகின்றன. காரணம், இது பெரிதாக இருப்பதோடு மட்டுமின்றி விலையும் மிக அதிகமானதாகவே உள்ளது. 16 இன்ச் ரேக்கில் மட்டுமே வைக்கக்கூடியதாக உள்ள இந்த வானொலிப்பெட்டியின் இந்திய விலை ரூ.2,40,000 ஆகும். தனி மனிதர்களால் வாங்க முடியாத இந்த வானொலிப்பெட்டி பற்றிய மேலதிக விபரங்களுக்குத் தொடர்புகொள்ளவும்: http://www.universal-radio.com/

Saturday, August 30, 2008

டி.எக்ஸிங் பற்றிய அடிப்படைத் தகவல்கள்

வானொலி உலகம்
  • இலவசமான ஆடியோ எடிட்டரை download.com ™ wavepad audio editor என்ற மென்பொருளைபதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
  • அகமதாபாத் அகில இந்திய வானொலி புதிய இணையதளத்தினைத் தொடங்கியுள்ளது.முகவரி: http://www.airahmedabad.in/
  • இந்தியன் ஆன்லைன் குழுமத்தில், ஜூலை முதல்வாரத்தில் இருந்து ரேடியோ தைவான் தனதுஅமெரிக்கஒலிபரப்பியை நிறுத்த உள்ளது.
  • அகில இந்திய வானொலி புதிதாக லட்சத் தீவுகளில் உள்ள கவரட்டி என்னுமிடத்தில் புதிதாக உள்ளூர் வானொலியைத் தொடங்க உள்ளது.
  • புகழ் பெற்ற சோனி 2010 (ஐ.சி.எப்) விற்பனைக்கு வந்துள்ளது. தொடர்புகளுக்கு: friedheim@juno.com
  • உலக அளவில் உள்ள ஒலிபரப்பிகளை ஒரு சேர ஒரே இணையதளத்தில் காணhttp://www.shortwavesites.googlepages.com/
  • தொலைக்காட்சி அலைவரிசையில் ஒலிபரப்பும் வானொலிகளின் விபரங்களை அறிய http://www.vhfdx.net/
  • டி.எக்ஸிங் பற்றிய அடிப்படைத் தகவல்களைக் காண சொடுக்கவும் http://www.dxworld.com/
  • டி.எக்ஸிங் பற்றி உடனுக்குடன் அவ்வப்போதைய தகவல்களைப்பெற http://www.dxinfocentre.com/
  • உலகெங்கும் உள்ள தீவிர சிற்றலை வானொலி நேயர்களைப் பற்றிய விபரங்களுக்குhttp://www.maps.dxers.info/
  • வானொலிகளில் ஒலிபரப் பான முக்கிய நிகழ்ச்சிகளைக் கேட்க http://www.broadcastdialoge.com/
  • ரேடியோ மியான்மார் ஆங்கிலப் பிரிவை மாலை 5.30 க்கு 5040, 5915, 5985 அலை எண்களிலும், மியான் மார் இராணுவ வானொலியை 5770 அலை எண்களிலும் கேட்கலாம்.
  • இந்தியாவில் செயல்பட்டு வரும் தனியார் பண்பலை வானொலிகளின் விபரங்களைக்காண www.qsl.net/vu2jos/pvt/commercial.htm
  • ரேடியோ பிராக் 85வது ஆண்டு சிறப்பு நிகழ்ச்சிகளைக் கேட்க www.radio.cz/en/issue/103758
  • சீன வானொலி தமிழ்ப்பிரிவு அன்றாட சீன மொழி எனும் புதிய நிகழ்ச்சியை (வியாழன், சனி) தொடங்கியுள்ளது. - தொகுப்பில் உதவி: கா.அருண்

Friday, August 29, 2008

இலங்கை வானொலியின் அறிய புகைப்படம்

மீபத்தில் இலங்கை வானொலி வெளியிட்டுள்ள நிகழ்ச்சிகள் பற்றிய விபர அட்டையில் இந்த அறிய புகைப்படத்தினை வெளியிட்டுள்ளது. 1940-களில் எடுக்கப்பட்ட இந்த புகைபடத்தில் இலங்கை ஒலிபரப்பு கூட்டு ஸ்தாபனத்தின் முகப்பு மிக அழகாக கருப்பு வெள்ளையில் வெளியிடப்பட்டுள்ளது. புகைப்பட உதவி: சிவராஜா தக்கீசன்

Thursday, August 28, 2008

தமிழ் மையம் ஜெகத் கஸ்பார் சிறப்பு பேட்டி - பாகம் 3

தாங்கள் சமுதாய வானொலிக்காக ஒரு அமைப்பினை ஏற்படுத்தினீர்கள், அது எந்தஅளவில் உள்ளது?
சமுதாய வானொலி தொடர்பாக வேலைகளில் இருக்கும் பொழுது தான் நான் ‘திருவாசகத்தினை சிம்பொனியில்’ தயாரிக்கத் துவங்கியிருந்தோன். இளையராஜாவோடு இணைந்து செயல்பட்ட அந்தக்கால கட்டத்தில் அவரால் ஏராளமான பொருள் இழப்புக்கு ஆளாக்கப்பட்டேன். அந்த சமயத்தில் நான் திருவாசகத்தினை எடுக்காமல் சமுதாய வானொலித் துறையில் இறங்கி இருந்தால், இன்று தமிழ் நாட்டில் ஒரு தாக்கத்தினை நிச்சயமாக ஏற்படுத்தி இருந்திருப்பேன். அதன் பின் தமிழ் மையத்தினூடாக மரபுச் சார்ந்த கலைகளில் ஒரு கவனம் செலுத்தத் தொடங்கினேன். அதனுடைய விளைவாகத்தான் இன்று நமக்கு ‘சென்னைச் சங்கமம்’ கிடைத்தது. பாரம்பரிய மரபுக்கலைகளுக்கு ஒரு புத்துயிரும், புத்தெழிச்சியும் கிடைத்தது.

தமிழ் மையம் வேறு எந்தப் பணிகளைச் செய்து வருகிறது?
அடித்தட்டு மக்கள் சார்ந்த பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து செயல்பட்டு வருகிறோம். குறிப்பாக ஏழைகளுக்கான கல்வி, நவீனத்துவத்தின் கனிகளை ஏழை மாணவர்களுக்கு எப்படி கொண்டு போய் சேர்ப்பது போன்ற வகையில் இயங்குகின்றோம். மனதிற்கு திருப்தியான வகையில் இந்தப் பணிகள் சென்று வருகிறது.

வேரித்தாஸ் - சென்னைச் சங்கமம் : எது மகிழ்ச்சி அளிக்கிறது?

வேரித்தாஸ் தமிழ்பணி என்னை உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களுக்கு அறிமுகப்படுத்தியது, குறிப்பாக புலம் பெயர்ந்து வாழும் தமிழ் மக்களுக்கு எனக் கூறலாம். திருவாசகமும், சென்னை சங்கமமும் தமிழக மக்களுக்குக் என்னை அறிமுகப்படுத்தின.

தங்களால் தொடங்கப்பட்ட Intamil24.com இணைய வானொலி எந்த அளவிற்கு உள்ளது?
Intamil24.com நன்றாக தொடங்கி, நன்றாகவேச் செயல்பட்டது ஒரு குறுகிய காலம். ஆனால் மீண்டும் அதில் ஒரு கவனம் செலுத்தி அதனைக் கட்டியெழுப்பத் தவறிவிட்டேன் என்றுதான் சொல்ல வேண்டும். காரணம் ‘சென்னை சங்கமம்’ போன்ற புதிய செயல்பாடுகளில் இறங்கிவிட்டதால், நேரமின்மைக் காரணமாக நிறுத்த வேண்டியதாக ஆனது.

சென்னைச் சங்கமம் வானொலியோடு இணைந்து செயல்படுமா?
இந்த கேள்வியை வானொலிகளிடம் கேட்க வேண்டும். வானொலி நிலையங்கள், இதனை மக்களுக்கு எடுத்துச் செல்லவேண்டும், இதைப் பற்றிய திறணாய்வுகள், விமர்சனங்கள் மற்றும் புதிய பார்வைகளை வானொலிகளும் நேயர்களுக்கு வைக்கலாம். நேயர்களும் வானொலி ஊடாக எங்களுக்கு வைத்திருக்கலாம். உலக வானொலிகளோடு ஒன்றிணைந்து, ஒரு சுற்றுலா நிகழ்வாக, உலக தமிழர்கள் தாழ் தமிழகத்தோடு ஒரு நிகழ்வாக ஒவ்வோரு வருடமும் நடத்தலாம். சர்வதேச தமிழ் வானொலிகளுக்கு இதன் மூலம் ஒரு வேண்டுகோளை வைக்கிறேன்.

சிற்றலை வானொலியின் எதிர்காலம் எப்படி இருக்கும்?
நீங்களும் நானும் முடிவு செய்கின்ற விசயமாக இந்தக் கேள்வி இருக்காது. தொழில்நுட்பம்தான் இதனை முடிவு செய்யும். தொழில் நுட்பம் எளிமைப்படுவதோடு மலிவானதாகவும் மாறும். வரும் காலத்தில் தொலைக்காட்சி, வானொலி, இணையம், செய்தித்தாள் போன்ற அனைத்தும் ஒரு வாயில் வழியாக வெளிவரும் நிலைமை வெகு சீக்கிரத்தில் வரும்.

வருங்காலத்தில் சமுதாய வானொலித் தொடங்கும் எண்ணம் உள்ளதா?
Community Radio எனப்படும் ‘சமுதாய வானொலி’ இன்னும் என் மனதை விட்டு முழுமையாகப் போகவில்லை. மனதில் ஆசை இருக்கிறது. ஆனால் ஆண்டவன் ஒரு நாளைக்கு 24 மணிநேரம் தான் தந்திருக்கிறான். முன்னர் 18 மணிநேரம் உழைக்க முடிந்தது, இப்பொழுது 12 மணிநேரம் தான் உழைக்க முடிகிறது. சந்திப்பு : தங்க ஜெய்சக்திவேல் -98413 66086.

Wednesday, August 27, 2008

தமிழ் மையம் ஜெகத் கஸ்பார் சிறப்பு பேட்டி-பாகம் 2

வானொலிகளுக்கு இன்று பல்வேறு வகைகளில் போட்டி உள்ளது. இது பற்றி தங்களின் கருத்து?
என்னைப் பொருத்தவரையில், இதனை இரண்டு கோணங்களில் பார்க்க விரும்புகிறேன். ஒன்று, நான் ஏற்கனவே சொன்னது போன்று எதிர்வரும் 50 அல்லது 100 நூறு ஆண்டுகளில் பிரச்சனைகள் தீரும் என்று நான் நினைக்கவில்லை. ஒரு சுதந்திரமான தேசிய வானொலிகள் அல்லது தள வானொலிகள் எனப்படும் Local Radios சென்று சேர முடியாத இடங்களுக்கு சிற்றலை சென்று சேர முடியும்.இதற்கு இராணுவத் தடைகள் மட்டு மல்லாது எல்லாத் தடைகளையும் ஊடுறுவிக் கொண்டு போகும் ஆற்றல் இதற்கு உண்டு.

அந்தக் களத்தில் சிற்றலை தொடர்ந்து வாழும். உதாரணமாக தமிழ் ஈழ நிலப்பரப்பினை எடுத்துக் கொள்ளலாம். அங்கே உள்ள அரசு ஊடகங்களும் பொய் சொல்கிறது. இங்கே உள்ள இந்திய ஊடகங்களும் பொய் சொல்லும் போது, இந்த சிற்றலை வானொலிகள் உண்மையின் உரைகல்லாகத் திகழ்கிறது. இந்த பணியைச் செவ்வனேச் செய்தால் நிச்சயமாக வரும் காலத்திலும் அதற்கு ஒரு இடம் இருக்கிறது.

இரண்டாவது, எளிதாக அனைத்து மக்களையும் சென்றடைய வேண்டும் என்றால், பண்பலை வானொலிகளோடு ஒரு புரிந்துணர்வு அவசியம் தேவைப்படுகிறது. சிற்றலையினுடையத் தரமான உள்ளீடுகளை (Content) இது போன்ற பண்பலை மற்றும் மத்திய அலை வானொலிகளில் ஒலிபரப்புச் செய்யலாம். உதாரணமாக வேரித்தாஸின் நிகழ்ச்சிகளும், பிபிசியின் நிகழ்ச்சிகளும் சூரியன் எப்ஃஎம்மில் ஒலிபரப்பலாம். இது போன்றதொரு ஒப்பந்தம் விரைவில் வரும், அப்படி பண்பலை வானொலிகளோடு கைகோர்த்துச் செல்லாவிடில், வரும் காலம்,சிற்றலை வானொலிகளுக்கு ஒரு கேள்விகுறியாக ஆவதற்கு வாய்ப்பு உண்டு.

வேரித்தாஸ் தமிழ்பணியில் பெற்ற அனுபவம் ‘தமிழ் மையத்திற்கு’ எந்த அளவில் பயன்படுகிறது?
வேரித்தாஸில் பணியாற்றியபோது எனக்கு கிடைத்தப் பரந்து விரிந்த அறிவு, உலகத்தைப் பார்கின்ற விதம், மானுடப் பிரச்சனைகளை அனுகுகின்றவிதம், என்னுடைய உலகப் பார்வையையே மாற்றிப்போட்டது என்றால் அது மிகையில்லை. தமிழ் மக்களினுடையப் பிரச்சனைகளைக் கூட, உலக அரங்கிலே நின்று கொண்டு பார்க்கின்ற பொழுது, புதிய பரிமாணங்கள் நமக்கு கிடைக்கிறது. அந்த வகையில் என்னைக் கேட்டால் வேரித்தாஸ் அனுபவம் என்பது, எனக்கு விலைமதிக்க முடியாதஅனுபவமாகத் தான் உள்ளது.

தமிழ்பணியில் பணியாற்றிய காலந்தொட்டு இன்று வரைத் ஏதேனும் நேயர்கள் உங்கள் தொடர்பில் உள்ளனரா?
நேயர்களோடு தொடர்ந்து தொடர்பில் இருக்க எனக்கும் ஆசை இருந்தது. ஆனால் வாழ்க்கை என்பது புதிய பணிகளை நம் மீது சுமத்துகிறது. அவற்றை நாம் எடுத்துக் கொள்கின்ற பொழுது, மனித உறவுகளைப் பேணுவதில் ஒரு பின்னடைவு வரத்தான் செய்கிறது. உண்மையைச் சொல்லப் போனால் இப்பொழுது யாருடனும் தொடர்பு இல்லை. ஆனால் மானசீகமாக நினைக்கையில், இப்படியெல்லாம் நல்ல நேயர்கள் அப்பொழுது இருந்தார்கள், இன்றைக்கும் கூட போடிப்பட்டிபுதூர்செல்வராஜ், மோப்பிரிபாளையம் தங்கராஜ் போன்றவர்கள் நினைவில் நிற்கிறார்கள், பத்தாண்டுகள் கடந்து விட்டாலும் கூட ஒரு சில நேயர்கள் எழுதியக் கடிதங்களை இன்றும் என்னால் மனப்பாடமாகச் சொல்ல முடியும். உதாரணமாக கழுவாஞ்சிக்குடி ஒந்தாச்சி மடம் காந்தகுமார் ஆகட்டும், அண்மையில் படுகொலைச் செய்யப்பட்ட தர்மரத்தினம், வவுனிக்குளத்தில் இருந்துஎழுதிய பேதுரு பிள்ளை ஆகியோர் எழுதிய கடிதங்கள் இன்றும் எனது மனதில் நிழலாடுகிறது. (தொடரும்..)

Tuesday, August 26, 2008

பிக் எப்.எம் ஆர்.ஜே தீனா


சென்னை பிக் எப்.எம் ஆர்.ஜே தீனா கின்னஸ் புத்தகத்தில்

கின்னஸ் சாதனைப் புத்தகத்தின் படி இதுவரை இத்தாலியில் உள்ள ரேடியோ பிபிஎஸ் ஐ அறிவிப்பாளர் ஸ்டெபெனோ வெனேரி 135 மணி நேரம் தொடர்ந்து அறிவிப்பு செய்ததே சாதனையாக கருதப்பட்டது. அந்த சாதனையைச் சென்னை பிக் எப்.எம்மின் அறிவிப்பாளர் தீனா 26 ஆகஸ்ட் 2008 இரவு 8 மணிக்கு முறியடிக்க உள்ளார்.

இவர் ஏற்கனவே லிம்கா சாதனைப் புத்தகத்தில் 97.2 மணி நேரம் தொடர்ந்து அறிவிப்பு செய்து இந்திய சாதனைப் படைத்துள்ளார். கனடாவில் ஒலிபரப்பாகி வரும் கீதவானி தமிழ் வானொலியில் சுரேஸ் எனும் தமிழர் தொடர்ந்து 120 மணி நேரம் அறிவிப்பு செய்து கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார் என்பதுவும் இங்கு குறிப்பிடத்தக்கது.
மேலதிக விபரங்களுக்கு

சர்வதேச வானொலிகளில் இருந்து எமக்கு வந்தவை-2

ஜப்பான் : ரேடியோ ஜப்பான் (இந்திப் பிரிவு) : புதிய நிகழ்ச்சி நிரல் பட்டியல், வண்ண அட்டைகள்.
தைவான் : ரேடியோ தைவான் இண்டர்நேசனல் : 2008 நேயர் கருத்தாய்வுப் படிவம், நிகழ்ச்சி நிரல்பட்டியல்.

சீனா : சைனா ரேடியோ இண்டர்நேசனல் (ஆங்கிலப் பிரிவு): மெசன்ஜர் இரு மாத இதழ், வண்ணஅட்டைகள், நிகழ்ச்சி நிரல் பட்டியல், இலவச கடித உறைகள், சீன மொழி பாடத்தின் மூன்று சிடிக்கள், ஒலிம்பிக் பொம்மைகளின் காகித கத்தரிப்புகள்.

லிபியா : வாய்ஸ் ஆஃப் ஆப்பிரிக்கா : புதிய நிகழ்ச்சி நிரல் பட்டியல், தர ஆய்வுப் படிவம், தபால் தலைகள், வண்ண அட்டை. (Listeners Affairs, Voice of Africa, P.O. Box: 4677, Tripoli, Libya, E.mail:africavoice@hotmail.com)

ஸ்பெயின் : ரேடியோ எக்ஸ்டிரியர் டி எஸ்பனா: புதிய நிகழ்ச்சி நிரல் பட்டியல், வண்ண அட்டை, மூன்று வெவ்வேறு ஸ்டிக்கர்கள்.

துருக்கி : வாய்ஸ் ஆஃப் துருக்கி: வண்ண அட்டை, துருக்கி மேப், புத்தக அடையாள அட்டை, 70-வது ஆண்டு ஸ்டிக்கர் முத்திரை ஸ்டிக்கர், தபால் தலைகள், சுற்றுலா இலக்கியம், மற்றும் புதிய நிகழ்ச்சி நிரல் பட்டியல்.

ஸ்வீடன் : ரேடியோ ஸ்வீடன் : புதிய நிகழ்ச்சி நிரல் பட்டியல், ஸ்வீடன் வானொலியின் 70 ஆண்டுவரலாறு, வண்ண அட்டை.

சிங்கப்பூர் : அட்வெண்டிஸ்ட் உலக வானொலி : புத்தக அடையாள அட்டை, ஸ்டிக்கர், உலக நேரகண்டுபிடிப்பான், 2008 பாக்கெட் நாள்காட்டி, வேவ்ஸ்கேன் வண்ண அட்டை, ஒலிம்பிக் தபால் தலைகள்.

இந்தியா : அகில இந்திய வானொலி (வெளிநாட்டு சேவை) : வெளிநாடு மற்றும் உள்நாட்டுச்சேவைகளுக்கான நிகழ்ச்சி நிரல் பட்டியல்.

அமெரிக்கா : பேமிலி ரேடியோ : பொது விவாத மேடை ஆங்கில சிடி, பைபிள் சிடிக்கள், நிகழ்ச்சி நிரல் பட்டியல், வண்ண அட்டை, கிருஸ்துவ இலக்கியங்கள், பேமிலி ரேடியோ காலாண்டு செய்தி இதழ்.

ஈரான் : ஜ.ஆர்.ஜ.பி ரேடியோ : நிகழ்ச்சி நிரல் பட்டியல், மாஹ்ஜுபா மாத இதழ்.

அமெரிக்கா : ரேடியோ ஃபிரீ ஆசியா : ஹென்ரிச் ஹெர்ட்ஸின் வரலாறு அடங்கிய வண்ண அட்டை.

கொரியா : கொரியன் புராட்காஸ்டிங் சர்வீஸ்: விண்வெளி வீரர்களை மையப்படுத்திய வண்ண அட்டை,நிகழ்ச்சி நிரல் பட்டியல், வானொலி வரலாற்றுப் புத்தகம்.

தொகுப்பில் உதவி : மீனாட்சிபாளையம் கா. அருண், நாமகிரிப்பேட்டை கவித்துளி சக்தீஸ்வரன்,எடப்பாடி க.சி.சிவராஜ், தலைஞாயிறு பி.எஸ். சேகர்.

Monday, August 25, 2008

தமிழ் மையம் ஜெகத் கஸ்பார் சிறப்பு பேட்டி-பாகம் 1

வேரித்தாஸ் தமிழ்பணியின் ஊடாக சிற்றலை நேயர்கள் மத்தியில் பரவலாக அறியப்பட்டவர்,இன்று ‘திருவாசகம்’ மற்றும் ‘சென்னை சங்கமத்தின்’ ஊடாக வானொலி கேட்காத நேயர்கள் மத்தியிலும் வெகுவாக அறியப் பட்டவர், அருட்பணி ஜெகத் கஸ்பார் ராஜ்.தமிழ் பணியில் ஏழு ஆண்டுகாலம் பணியாற்றிய போது பல்வேறு முன்முயற்சிகளை மேற்கொண்டார்.அதில் மிக முக்கியமானது ‘உறவுச் சங்கம’ விழாக்கள். நேயர்கள் மத்தியில் புகழ்பெற்ற இந்த சங்கம விழாக்கள் இன்றும் தொடர்ந்து நடைபெறுகிறது. ‘நாம் நண்பர்கள்’ எனும் நேயர்களின் முகவரிகள் அடங்கிய தொகுப்பினை வெளியிட்டது தமிழ் சிற்றலை வானொலி வரலாற்றில் முதல் முறை எனலாம். அதன் மூலம், இன்றும் தொடர்பில் உள்ள நேயர்கள் ஏராளமானோர், ஜெகத் கஸ்பார் அவர்களுக்கு நன்றி சொல்லக் காத்திருக்கின்றனர். தனது பல்வேறு அவசரப் பணிகளுக்கு இடையிலும், நமது இதழின் ஆண்டு மலருக்கு அவர் வழங்கியச் சிறப்புச் செவ்வி இதோ......

இன்றைய சூழ்நிலையில் சர்வதேச வானொலிகளின் முக்கியத்துவம் எந்த அளவில் உள்ளது?
எனக்கு, நிபுணத்துவ ரீதியாக இதற்கு பதில் சொல்லத் தெரியாது. ஆனால் ஒரு அனைத்துலகவானொலியில் ஏறக்குறைய ஏழு ஆண்டுகாலம் கடமையாற்றினேன் என்ற வகையில், பதில் சொல்லமுடியும். வெகுஜன ஊடகங்கள் கையில் எடுத்துக்கொள்ளாத, அணுகாத மானுடப் பிரச்சினைகளை,சமூகப் பிரச்சினைகளை அணுகினால் அவை தொடர்ந்து முக்கியத்துவம் பெறுவதாக இருக்கும்.அவற்றுக்கு என ஒரு சிறு தளத்தினை வரையறுத்துக் கொண்டோ, அல்லது வெறும் செய்தியைதருவதோ அல்லது விளம்பரங்களுடன் கூடிய போழுதுபோக்கு நிகடிநச்சிகளைத் தருவது என்றால்,அதைத் தருவதற்கு இங்கு வெகுஜன வானொலிகள் நிறையவே இருக்கின்றன. அவற்றை விரும்பிக் கேட்பவர்கள், அறிவுத்தகவல்களைக் கூட ஒரு புதிய கோணத்தில் இருந்து திறனாய்வுடன் ஆழமாக ஒரு விசயத்தினைப் புரிந்து கொள்வது இங்கு சாத்தியமில்லை என்றுதான் சொல்லவேண்டும்.

சிற்றலை வானொலி கேட்கும் நேயர்கள் இன்று எங்கு அதிகமாக உள்ளனர்?பொதுவாகவே சிற்றலை ஒலிபரப்புகளைக் கேட்கக்கூடிய நேயர்கள் பெரும்பாலும் பிரச்சனை நடக்கின்றப் பகுதிகளில்தான் அதிகமாக உள்ளனர். குறிப்பாக யுத்தங்கள் நடக்கின்றப் பகுதிகளில் நேயர்கள் மிக அதிகமாகக் கேட்கின்றனர். இந்தப் பகுதிகளில் உள்ள நேயர்களுக்காகச் சரியாகப் பணியாற்றினால் சிற்றலை வானொலிகளுக்கு நல்ல வரவேற்பு இருக்கின்றது. (தொடரும்..)

Sunday, August 24, 2008

சர்வதேச வானொலிகளில் இருந்து எமக்கு வந்தவை-1

இந்தியா : ஃபீபா வானொலி: சகோதரி செல்வி அவர்களின் கடிதம், மற்றும் நிகழ்ச்சி நிரல் பட்டியல்.

ஜெர்மனி : வாய்ஸ் ஆப் ஜெர்மனி : Margot Forbes அவர்களின் கடிதம் , ஜெர்மனி வானொலிப் பற்றிய புதிய பாக்கெட் புத்தகம், கைப்பை, பேட்ஜ், பேனா, ஜெர்மனி Map, டி.சர்ட், பாட்டில் திறப்பான், கீ செயின் உலகப் பந்து, செல்போன் தொங்கான், மாணிட்டரிங் படிவம்.

செக் குடியரசு : ரேடியோ பிராக்: புதிய நிகழ்ச்சி நிரல் பட்டியல், 85-ஆவது ஆண்டு சிறப்பு வண்ண அட்டை மற்றும் பென்சில் சீவும் கத்தி.

சீனா : சைனா ரேடியோ இண்டர்நேசனல் (தமிழ் பிரிவு): சீனத் தமிழொலி இதழ், ஒலிம்பிக் வண்ண அட்டை, சகோதரி மீனா அவர்களின் கடிதம், இலவச கடித உரைகள்.

இந்தியா : டிராண்ஸ் உலக வானொலி: கிருஸ்துவ இலக்கியப் புத்தகம், நிகழ்ச்சி நிரல் பட்டியல்.

ஆஸ்திரேலியா : சி.வி.சி. வானொலி : டி.சர்ட், தொப்பி, டவல், கங்காரு பொம்மை, பேனா, கைப் பட்டை ரப்பர்-2, 2008 நாள்காட்டி, பூமராங், ஸ்டிக்கர், கிருஸ்துவ இலக்கிங்கள் , சி.டி .

அமெரிக்கா : வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா : புதிய நிகழ்ச்சி நிரல் புத்தகம், புத்தக வடிவ நாள்காட்டி.

வத்திகான் : வத்திகான் வானொலி : தமிழ் மற்றும் ஆங்கில மாத இதழ்கள்.

ஆஸ்திரேலியா : ஹெச்.சி.ஜெ.பி : புதிய நிகழ்ச்சி நிரல் பட்டியல், இலவச கடித உரை, செய்தி இதழ், வண்ண அட்டை, தபால் தலைகள்.

இங்கிலாந்து : ஃபீபா வானொலி : புதிய நிகழ்ச்சி நிரல் பட்டியல்.

கனடா : ரேடியோ கனடா இண்டர்நேசனல் : புதிய நிகழ்ச்சி நிரல் பட்டியல், ஸ்டிக்கர்.

அமெரிக்கா : கிறிஸ்துவ அறிவியல் சென்டினல் ரேடியோ : புதிய நிகழ்ச்சி நிரல் பட்டியல், சென்டினல்இதழ்கள்.

இங்கிலாந்து : பிபிசி உலக சேவை (ஆங்கிலப் பிரிவு) : புதிய நிகழ்ச்சி நிரல் பட்டியல்.

நெதர்லாந்து : ரேடியோ நெதர்லாந்து : புதிய நிகழ்ச்சி நிரல் பட்டியல், வெவ்வேறு வண்ணங்களில் மூன்று சிறிய ஸ்டிக்கர்கள்.

Saturday, August 23, 2008

விவித பாரதி பொன்விழாப் பாடல் - கவிஞர் வைரமுத்து

பல்லவி

பாட்டுக்கொரு புலவன்பாரதி-
திரைப்பாட்டுக்கு எங்களது
விவித பாரதி
பொன்விழாக்காணுகின்ற
விவித பாரதி-நாங்கள்பூத்தூவி வாழ்த்துகிறோம்
வாழ்க பாரதி.

சரணம்-1

மறக்காத நிகழ்ச்சியெலாம் கேட்டுக் கேட்டு
மரக்காது கொண்டவரும் இனிக்கு தென்றார்
சுரக்காதா தேன் கிண்ணம் நெஞ்சுக் குள்ளே
சுவைக்காதா என்று பலர் காத்திருப்பார்

இருகாது கொண்டவர்நம் நிகழ்ச்சி கேட்டால்
இனிக்காது தேனென்பார்; மேலும் கேட்க
இரு காதாபோ தாதாமேனி எங்கும்
இருக்காதா செவிகளென ஏங்கிப் போவார்.

சரணம்-2

தமிழ்க்குலமே! தமிழ்க்குலமே!
தங்கமகன்வேண்டுகிறேன்
நமக்காக நாளெல்லாம் இமைக்காமல் பணியாற்றும்
நிலையத்தார் மனம்போல நினைவோடு உறவாடிக்

கலைத்தேரில் வலம்வருவோம் காலமகள் வீதியிலே!
செவியெல்லாம் நாவாகச் செந்தமிழில் சிந்திவிழும்
கவியெல்லாம் தேனாகக் காலமெலாம்
வாழ்ந்திருப்போம் பொன்விழாக் காணுகின்ற
புதிய விவித பாரதியை
எண்ணத்தில் ஏற்றி எந்நாளும் மகிழ்ந்திருப்போம்.
____________
* சென்னை அகில இந்திய வானொலியின் விவித பாரதி தனது பொன் விழாவினைக் கொண்டாடிவருகிறது. அதனை ஒட்டி கவிஞர் வைரமுத்து இயற்றிய பாடல் இது. இவர் 1970-களில் இங்கு பகுதி நேர அறிவிப்பாளராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
- நன்றி: விவித பாரதி நிலைய இயக்குனர்

Friday, August 22, 2008

ஹாம் வானொலியின் கலங்கரை விளக்க நிகழ்ச்சி: புகைப்படங்கள்

கடந்த 15/8/2008 அன்று மாமல்லபுரத்தில் நடைபெற்ற சர்வதேச ஹாம் வானொலியின் கலங்கரை விளக்க நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை கீழ்கண்ட தொடுப்பினைச் சொடுக்கி காணலாம்.

Thursday, August 21, 2008

என் அருமை நண்பன்-நேஷனல் RX-M50 (பாகம்- 4)

நேஷனல் மாடலில் இன்னொரு வசதியும் உள்ளது. வானொலிப்பெட்டியைக் கேட்கும்போது மற்றவர் களுக்குத் தொல்லை ஏற்படாத வண்ணம் நாம் மட்டும் ஒலியைக் கேட்க இயர்ஃபோன் எனப்படும் செவிபேசியைப் பொருத்துவதற்கு 3.5 மி.மீ அளவுள்ள ஒரு துளை உள்ளது. இதில் செவிக்கானகருவியைப் பொருத்திவிட்டால், ஸ்பீக்கர் வழியாக வரும் ஒலி தடைசெய்யப்பட்டு, நம் காதுகளுக்குமட்டும் அந்தக் கருவிமூலம் கேட்கும். இரவு நேரங்களில் மற்றவர்கள் தூங்கும்போது நாம் சிற்றலையில் அலை எண்தேடல் (Scan) செய்யும் போது இது உதவியாக உள்ளது.

உதாரணமாக ரேடியோ அர்ஜென்டீனா தென் அமெரிக்காவிலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்காக ஆங்கிலம், இத்தாலியன், பிரென்ச், ஜெர்மன், ஸ்பானிஷ், போர்ச்சுகீஸ் போன்ற சேவைகளை இந்திய நேரப்படி இரவு 00.30 மணிமுதல் அதிகாலை 03.30 வரை வழங்கி வருகிறது. இதனை 19 மீட்டரில் 15,345 KHz கேட்கலாம். இதற்கு வெளி ஏரியலும், இயர்ஃபோன் வசதியும் மிகவும் உதவுகின்றன. இதேபோல் நியூஜிலாந்து ரேடியோ (RNZI), ரேடியோ ஆஸ்திரேலியா (ABC) போன்றவை இரவு 11.30 மணி முதல் 01.30 வரை ஒலிபரப்பு செடீநுவதை 31 மீட்டரில் கேட்கலாம்.

இரவு நேரங்களில் 45 நிமிடஒலிநாடாவில் ஒலிப்பதிவு செய்யும்போது, இயர்போன் பயன்படுத்தினால் ஒலியைத் தடைசெய்துஒலியையும் மிகவும் குறைத்துவிடலாம். ஒலிப்பதிவு முடியும்போது Auto Stopஉள்ளதால், காசெட்முடிவுக்கு வந்ததும் நின்றுவிடும். ஆனால் வானொலிப் பெட்டி தொடர்ந்து வேலை செய்து கொண்டுஇருக்கும். இந்த முறையில் இரவு நேரங்களில் நாமும் சிறிது ஓய்வு எடுத்துக் கொள்ள வாய்ப்பு உள்ளது. தீவிர Dxers அதிகாலை அல்லது இரவு நேரங்களில் சிற்றலையில் புதிய வானொலிகளைத் தேடுவதை எளிதாகக் கருதுகின்றனர். அந்த சமயத்தில் உள்நாட்டு சேவைகளின் பாதிப்பும் இருப்பதில்லை.

“நேஷனல்” மாடல் AC மின் ஆற்றலிலும், 6W DC மின்னாற்றலிலும் இயங்கக்கூடியது. ஹஊAC தடை ஏற்படும் போது நாம் நான்கு பெரிய 1. 5 டார்ச்சு பேட்டரிகளை பொருத்தி வைத்தால், மின்தடை ஏற்படும்போது, மின்னாற்றல் ஒயரை நீக்கிவிட்டபின், வானொலிப்பெட்டி பேட்டரியின் மின்னாற்றலில் தொடர்ந்து இயங்கும். இதனால் மிக முக்கிய நிகழ்ச்சிகளை ஒலிப்பதிவு செய்யும்போதும், கேட்கும் போதும் மின்தடை பாதிப்பினால் ஏற்படாது. மேலும் ஒவ்வொரு நாட்டிலும் பயன் படுத்தப்படும் மின் அழுத்தத்திற்கு ஏற்ப 110-127/ 200-200/ 230-250 Volt மின் அழுத்த வசதி உள்ளதால் சரியான மின் அழுத்தத்தைத் தேர்வு செய்யலாம். இந்த மாடலின் அளவு 29.4x129x99.5 cm ஆகும். இதன் எடை பேட்டரி இல்லாமல் 1.5 கிலோவும், பேட்டரியுடன் 2 கிலோவும் ஆகும். (தொடரும்..) - சென்னை வி. பாலு

Wednesday, August 20, 2008

QSL வண்ண அட்டை போட்டி

தைவான் : ரேடியோ தைவான் இண்டர்நேசனல்: ஒவ்வொரு ஆண்டும் இந்த வானொலியானதுநேயர்களிடம் ஏதேனும் ஒரு வகையில் கருத்தாய்வினை நடத்தும், அந்த வகையில் இந்த வருடத்திற்கான கருத்தாய்வானது தற்பொழுது நடைபெற்று வருகிறது. கருத்தாய்வில் கலந்து கொள்பவர்களுக்கு நினைவுப்பரிசினை வழங்க உள்ளது. கருத்தாய்வில் கலந்துகொள்ள விரும்புபவர்களும்,கருத்தாய்வுப் படிவத்தினைப் பெற்றவர்களும் உடனே பூர்த்தி செய்து அனுப்ப வேண்டியமுகவரி. English Section, Radio Taiwan International, P.O Box: 4914, Safdarjung Enclave, NewDelhi - 110 029.

அமெரிக்கா: அட்வெண்டிஸ்ட் உலக வானொலி: சிற்றலை நேயர்கள் மத்தியில் புகழ் பெற்ற ‘வேவ்ஸ்கேன்’ நிகழ்ச்சி இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு ஒரு புதிய போட்டியை அறிவித்திருந்தது. போட்டியில் பங்கு பெறுபவர்கள் தங்களிடம் உள்ள QSL வண்ண அட்டையில் A to Z வரிசையில் 26 எழுத்துக்களை கொண்டதாகத் திரட்ட வேண்டும். உதாரணமாக A என்றால் என்றால் Australia, B என்றால் Bangaladesh என்ற வகையில் திரட்டி அனுப்ப வேண்டும். புதுமையான இந்தப் போட்டிக்கு உலக அளவில் நேயர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு. http://www.awr.org/

இந்தியா : ஃபீபா வானொலி : நம்மில் பலருக்கு இந்த வானொலி தமிழில் ஒலிபரப்பி வருவது தெரியும். அதே போன்று தமிழில் வெளிவரும் ‘செய்திமடல்’ பற்றியும் தெரியும். ஆனால் பெரும்பாலான நேயர்களுக்கு, இவர்கள் ஆங்கிலத்தில் அனுப்பிவரும் News Letter பற்றித் தெரியாது. முற்றிலும் இலவசமாக நேயர்களுக்கு அனுப்பப்படும் இந்த இதழைப்பெற ஆங்கிலத்தில் தொடர்பு கொள்ளவேண்டிய முகவரி : News Bullettin, FEBA India, P.O.Box: 25066, Bangalore- 560 025. E.Mail : febaindia@vsnl.com

Tuesday, August 19, 2008

என் அருமை நண்பன்-நேஷனல் RX-M50 (பாகம்- 3)


சிற்றலை வானொலிகளைக் கேட்க டெலஸ்கோப்பிக் ஆன்டெனா மிகவும் உதவுகிறது. சிலவீடுகளில் ஜன்னல் மூலைகளில் வானொலிப் பெட்டியை வைத்துக் கேட்கும் போது, ஒலியின் தரம்உயர்ந்து காணப்படும். இதனை அட்டெனுவேஷன் (Attenuation) என்கிறோம். எனவே சிற்றலை கேட்பவர்கள் “பேட்டரி” மூலம் வானொலி பெட்டியை இயக்கி, வீட்டின் பல பகுதிகளில் வைத்து சோதனை செய்தால் ஒலியின் தரம் சில மூலைகளில் அதிகமாகவும், தெளிவாகவும் இருக்கும்.

பொதுவாக, நமது நாட்டுக்கு நல்ல திறனுடன் ஒலிபரப்பப்படும் வானொலிகளைக் கேட்க டெலஸ்பிக் ஆன்டெனா போதுமானது. ஆனால் சில வெளிநாட்டு வானொலிகள் சக்தி உள்ளவைகளாக இருந்தபோதும், வெகு தொலைவிலிருந்து எந்த வித அஞ்சல் வசதியில்லாமல் நேரடியாகஒலிபரப்பு செய்யும் போது வெளி ஏரியல் தேவைப் படுகிறது. உதாரணமாக ரேடியோ அர்ஜென்டீனா,பிரான்ஸ், நியூஜிலாந்து, ஈக்வடார், ஸ்வீடன் போன்ற நாடுகளின் வானொலிகளை வெளி ஏரியில் மூலம்தெளிவாகக் கேட்கலாம்.

சிலசமயம் வானொலிகள் மற்ற நாடுகளுக்கான சேவைகளை ஒலிபரப்பு செய்யும்போது அவை நமக்காக இல்லாவிட்டாலும் நாம் வெளி ஏரியல் மூலம் தெளிவாகக் கேட்கலாம். சிற்றலை நேயர்களுக்கு QSL எனப்படும் அத்தாட்சி அட்டை சேகரிக்கும் ஆர்வம்உள்ள அவர்கள் அவசியம் வெளி ஏரியலைத் தேர்ந்தெடுத்து வெகுதொலைவில் உள்ள வானொலிகளைத் தேடலாம். வெளி ஏரியல் டெலஸ்கோப்பிக் ஆன்டெனாவுடன் இணைத்ததும் பல மடங்கு தெளிவாகக் கேட்கும். சிற்றலை நேயர்கள் வானொலி கேட்கும் போது கணினி, தொலைக் காட்சி, ட்யூப் லைட், மிக்ஸி போன்ற சாதனங்களை நிறுத்திவிட்டால் அவை எழுப்பும் மின்காந்த அலைகளின் இடையூறு குறையும்.

வெளி ஏரியல் உபயோகிக்கும்போது ‘எலக்ட்ரானிக் சோக்’ பொருத்தப்பட்ட ட்யூப்லைட்டு களைத் தவிர்ப்பது நல்லது. “எலக்ட்ரானிக் சோக்” வானொலியின் சமிக்ஞைகளை (Signal) அழுத்துவதால், சிற்றலை வானொலிகள் சரிவரக் கேட்பதில்லை,அடிக்கடி மின்னிக்கொண்டு இருக்கும் ட்யூப்லைட்டுகள் ரேடியோ ஒலிகளைப் பெரிதும் பாதிக்கும்.“சோக்” பழுதடைந்தால் “பர்ர்ர்” என்ற “வண்டு பறக்கும்” சத்தம் கேட்கும், பொதுவாக இவைகளை“மனித இடையூறுகள்” என அழைக்கலாம். (தொடரும்..) - சென்னை வி. பாலு

Monday, August 18, 2008

சென்னையில் அதிக மக்கள் விரும்பும் பண்பலை: பாகம்- 2

ரேடியோ மிர்ச்சியும், சூரியன் எப்.எம்மும் கிட்டத்தட்ட ஒரே சமயத்தில் ஆரம்பிக்கப் பட்டவைதாம். சூரியனை விட மிர்ச்சி முன்னணியில் இருப்பதற்கு நேயர்களுக்கு அதிக அளவில் அவர்கள் கொடுக்கும் பரிசுகளைக் காரணமாகச் சொல்லலாம். ரேடியோ மிர்ச்சி பண்பலை பிரபல ஆங்கில நாளேடான 'டைம்ஸ் ஆப் இந்தியா' நிறுவனத்திற்குச் சொந்தமான தாகும். அதுவும், அவர்கள்முன்னணியில் இருப்பதற்கு மற்றொரு காரணமாக சொல்லப்படுகிறது. ஆனால், மிர்ச்சியின் சென்னை மண்டலத் துணைத் தலைவர் சந்தீப் சுத் இதுபற்றிக் கூறுகையில் "டைம்ஸ் ஆப் இந்தியா இதழ், பிரபலமான நாளேடு என்பதனை மறுப்பதற்கில்லை. அதே சமயம், நாங்கள் தமிழகத்தில் பண்பலையை ஆரம்பிக்கும் போது 'டைம்ஸ் ஆப் இந்தியா' தமிழகத்தில் கிடையாது. உண்மையைச் சொன்னால், நாங்கள் தான் 'டைம்ஸ் ஆப் இந்தியா' சென்னையில் பிரபலமாக உதவி இருக்கிறோம்" என்கிறார்.

2008 எப்.எம் கருத்துக்கணிப்புகளின் முடிவுகளில் சில பின்வருமாறு:
Top '5' FMs in Chennai
1.Radio Mirchi (98.3)
2.Suriyan FM (93.5)
3. FM Rainbow
4. Radio One, Big FM
5. Hello FM & Aahaa FM

ஆண்களில் தங்களுக்கு மிகவும் பிடித்த RJ-வாக தீனாவைத் தேர்வு செய்துள்ளனர். பெண்களில் தங்களுக்கு மிகவும் பிடித்த RJ-வாக அனுவைத் தேர்வு செய்துள்ளனர். சூரியன் பண்பலை நிறுவனத்தைத் தொடர்பு கொண்டு இந்த வெற்றி குறித்து கருத்துக்களை அறிய முற்பட்டோம். எவ்விதமான பதிலும் இல்லை. சினிமா போஸ்டர்களையும், அரசியல் கட்சி பேனர்களையும் மட்டுமே கண்டு ரசித்த பொதுமக்களின் பார்வைக்கு ரேடியோ ஒன் பண்பலை முதன்முறையாகத் தங்கள்நிகழ்ச்சிகளைப் பற்றிய சுவரொட்டிகளை விளம்பரத் திற்குப் பயன்படுத்தியது.

தொடர்ந்து மற்ற பண்பலைகளும் இதே யுக்தியைப் பயன்படுத்தத் தொடங்கியதைப் பெருமையாகக் கருதுகின்றனர், நிறுவனத்தினர். "எங்களுடைய நிறுவனம் வட மாநிலத்தவருக்கு சொந்தமானதாக இருந்தாலும்கூட, தமிழ்ப்பண்பலைகளின் வரலாற்றில் தமிழனின் பெருமையை முன்னிறுத்தி ஆங்கிலக் கலப்பில்லாமல் நிகழ்ச்சிகளை வழங்கி வருகிறோம்" என்கிறார் பிக் எப்.எம்மின் தலைமை நிகழ்ச்சித் தயாரிப்பாளரான சுசித்ரா.

பிக் எப்.எம் அண்மையில் நடத்திய போட்டி ஒன்றில் வெற்றி பெற்றவர்களைத் தமிழ் சினிமாவில் பாடுவதற்கான வாய்ப்பினைப் பெற்றுத் தந்துள்ளது என்பதுகுறிப்பிடத்தக்கது- விரைவில் பிக் எப்.எம்மின் நேயர்களின் குரலை தமிழ் சினிமாவில்ஒலிக்கக் காத்திருக்கிறது. ஆஹா பண்பலையின் விளம்பரமான 'பொழுதுபோக்கின் உச்சகட்டம்' என்ற வாசகங்கள் சென்னை வீதிகளை வியக்க வைத்தன. ஆஹா பண்பலை பிரபலங்களின்அணிவகுப்போடு நேயர்களுக்கு இசை விருந்து படைத்துவருகிறது என்கிறார்கள் நேயர்கள்.

இளைய ராஜாவின் மகள் பவதாரணி வழங்கும் நிகழ்ச்சி நேயர்களின் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. 'சர்வதேச வானொலி இதழ்' நடத்திய கருத்துக் கணிப்பு இனி வரும் காலங்களிலும் எவ்வித விருப்பு வெறுப்புகள் இன்றி தொடரும். இதற்கு எல்லா வகையிலும் ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து பண்பலை நிலையங்களுக்கும் எங்களின் மனப்பூர்வமான நன்றிகள். (தொடரும்)

Sunday, August 17, 2008

என் அருமை நண்பன்-நேஷனல் RX-M50 (பாகம்- 2)

நேஷனல் RX-M50 என்ற மாடலில் ரேடியோ பகுதி, கேசட் ரெக்கார்டர் பகுதி என இருவகையான பகுதிகள் உள்ளன. முதலில் வானொலிப் பகுதியைப் பார்ப்போம்.
ரேடியோ பகுதியில் நான்கு அலை வரிசைகள் உள்ளன.

FM - பண்பலை வரிசை 88 Mhz முதல் 108 Mhz வரை.
MW - மத்தியஅலை அலை வரிசை 530 KHz - 1600 KHz
SW 1 – சிற்றலைவரிசை 1 - 2.3 MHz - 2.5 MHz (120 மீ), 3 MHZ - 3.9 MHz (90 மீ), 4 MHz - 5 MHz (75 மீ), 5 MHz - 5.9 MHz (60 மீ), 6 MHz - 6.9 MHz (40 மீ) (120,90,75 மீட்டருக்கான அலைரிசை (2 MHz to 5MHz) ட்ராபிகல் பேண்டு என அழைக்கப்படும். இது வெப்ப மண்டல நாடுகளின் பயன்பாட்டுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது)
SW 2 - சிற்றலைவரிசை 2 - 7 MHz (120 மீ), 9 MHz (31 மீ), 11 MHz (25 மீ), 13 MHz (22 மீ), 15 MHz (19 மீ), 17 MHz (16 மீ), 21 MHz (13 மீ) ஆகியவை அடங்கியது. 26 MHz (11 மீ) இதில் இல்லை.

இந்த அலைவரிசைகள் தொடர்ச்சியாக அமைக்கப்பட்டுள்ளதால், தற்சமயம் உபயோகத்தில் உள்ள சில புற அலைவரிசையில் உள்ள அலை எண்களையும் எளிதில் ட்யூன் (திருத்தம்) செய்யலாம். சில அலைவரிசைகளுக்கு இடையே ஹாம் வானொலிகளுக்கான அலை எண்களில் அவர்கள் பேசிக்கொள்வதையும் கேட்கலாம். எந்த ஒரு வானொலியையும் எளிதில் கண்டறிய டயலும் “முள்” போன்ற நிலைக்காட்டியும் உள்ளதால் ட்யூனிங் திருகை அல்லது குமிழை பயன்படுத்தி நமக்குத் தேவையான வானொலியை அடையலாம். சிற்றலை வரிசையில் பலவானொலிகள் மிக நெருக்கமாக செயல்படும்போது நமக்கு விருப்பமான வானொலியைத் துல்லியமாகக் கண்டறிய ஃபைன்ட்யூனிங் எனப்படும் (துல்லிய திருத்தம்) திருகும் உள்ளது. இதன் மூலம் மிகத் துல்லியமாக ட்யூன்செடீநுது நாம் வானொலியின் ஒலியை தேவையற்ற ஒலிகளிலிருந்து பிரித்துத் தெளிவாகக் கேட்கலாம்.

ரேடியோ, கேசட் ரெக்கார்டர் பகுதிகளைத் தனித்தனியே இயக்க ஒரு ஸ்லைடிங் பட்டன் அல்லதுசறுக்கும் பொத்தான் உள்ளது. அதேபோன்று, அலைவரிசைகளை நம் விருப்பம்போல் தேர்ந்தெடுக்க மற்றொரு சறுக்கும் பொத்தான் உள்ளது. ஒலியின் தரத்தை கூட்டவோ குறைக்கவோ ஒரு திருகு அல்லது குமிழ் உள்ளது. இதைத்தவிர ஒலியின் தரத்தை மிருதுவான, மெல்லிய ஒலி தரத்திலிருந்து கனமாக வெளிப்படும் ஒலியாக மாற்ற ‘குரல்வள’ திருகு உள்ளது. ரேடியோ அல்லது ஒலிநாடாவிலிருந்து வரும் ஒலியை வெளிப்படுத்த 10 செ.மீ. அளவுள்ள மோனோ ஸ்பீக்கர் உள்ளது.

இந்த மாடல்-10 வாட்ஸ் திறன் கொண்டது பானாசோனிக் மாடலில் “18 வாட்ஸ்” ஸ்பீக்கர் உள்ளது.“நேஷனல்” மாடலில் நீட்டி மடக்கக் கூடிய டெலஸ்கோப்பிக் உணர்தண்டு உள்ளது. மத்தியஅலைவரிசைக்கு வானொலிப் பெட்டியின் கைப்பிடியுடன் இணைக்கப்பட்டுள்ள ஃபெர்ரைட் இரும்புத்தண்டு உள்ளது. வானொலிப் பெட்டியை மெதுவாக சுழற்றினால் ஒரு நிலையில் மத்திய அலை வானொலி தெளிவாகக் கேட்கும். அந்த நிலையை தேர்ந்தெடுத்து அந்தக் கோணத்தில் வானொலிப் பெட்டியை வைக்கவேண்டும். (தொடரும்..) - சென்னை வி. பாலு

Saturday, August 16, 2008

ஹாம் வானொலி: சர்வதேச கலங்கரை விளக்க வாரம்

வ்வொரு ஆண்டும் ஆகஸ்டு 15 அன்று அமெச்சூர் வானொலி எனப்படும் ஹாம் வானொலி உபயோகிப்பாளர்கள் சர்வதேச கலங்கரை விளக்க வாரத்தை உலகெங்கும் கொண்டாடுவர். அதன் ஒரு பகுதியாக கடந்த 15 ஆகஸ்ட் 2008 அன்று மாமல்லபுரத்தில் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க கலங்கரை விளக்கத்தில் காஞ்சிபுரம் ஆட்சியர் திரு. மிஸ்ரா அவர்கள் முறைப்படி சர்வதேச கலங்கரை விளக்க வாரத்தை துவக்கி வைத்தார்கள்.

16 முதல் 19 ஆகஸ்ட் வரை உள்ள நாட்களில் உலகெங்கும் உள்ள ஹாம் ரேடியோ உபயோகிப்பாளர்களை மாமல்லபுரத்தில் இருந்து தொடர்பு கொள்ள உள்ளனர்.

மேலதிக விபரங்களுக்கு:
திரு. அஜய்: 098453 55773
திரு.அரசு: 093426 67388

Mr. Arasu, VU2UR Awards Manager, Contest Manager, Monitoring Systems Coordinator of Amateur Radio Society of India (ARSI).

Mr. Ajay, VU2JHM
QSL Manager for VU2LH.
For receiving special QSL card do send your address label with Rs.10/- postage stamp - NOTE no envelop required as we would be sending you QSL thru Special Envelop duly stamped and Pictorial Cancellation which is a collector’s item. Details are on http://www.qrz.com/AT8LH

Note for Editor:

The official working frequencies for the ARLHS are as follows: SSB: 1950-1990: 3950-3990, 7250-7290, 14.250-14.290, 21.350-21.390, 28.350-28.390CW: 1810-1850: 3510-3550, 7010-7050, 14.010-14.050, 21.010-21.050, 28.010-28.050

Friday, August 15, 2008

சென்னையில் அதிக நேயர்கள் கேட்கும் எப்.எம்

அதிகம் பேர் கேட்கும் எப்.எம்

1. ரேடியோ மிர்ச்சி
2. சூரியன் எப்.எம்
3. எப்.எம் ரெயின்போ
4. ரேடியோ ஒன், பிக் எப்.எம்
5. ஹலோ எப்.எம், ஆஹா எப்.எம்

அதிகம் பேர் விரும்பும் நிகழ்ச்சிகள்

1. சுச்சி சபா (சுசித்ரா, ரேடியோ ஒன்)
2. ஹலோ சென்னை, (அஜய், ரேடியோ மிர்ச்சி)
3. ஆஹா காபி கிளப் (சின்மயி, ஆஹா எப்.எம்)
4. ராஜாங்கம் (பாலாஜி-பவதாரிணி: ஆஹா எப்.எம்)
5. நினைத்தாலே இனிக்கும் (அருண்-சூரியன்)

அதிகம் நேயர்கள் விரும்பும் ஆண் RJ

1. தீனா (பிக் எப்.எம்)
2. சங்கர் (சூரியன் எப்.எம் )
3. முரளி (எப்.எம் ரெயின்போ) , சுரேஷ் (ஹலோ எப்.எம்)
4. முத்தமிழ் செல்வன் (எப்.எம் ரெயின் போ)
5. அஜய் ( ரேடியோ மிர்ச்சி), பாலாஜி(ஆஹா எப்.எம்)

அதிகம் நேயர்கள் விரும்பும் பெண் RJ

1. அனு (ரேடியோ ஒன்)
2. சுசித்ரா (ரேடியோ ஒன்)
3. டொசிலா (சூரியன் எப்.எம்)
4. சின்மயி (ஆஹா எப்.எம்)
5. பிரியதர்ஸினி (சூரியன் எப்.எம்)

SMS அனுப்புவர்கள்

1. 90% இல்லை
2. 10% ஆம், அனுப்புகிறோம்

தொலைபேசி நிகழ்ச்சிகளில் பங்கேற்பவர்கள்

1. 55 %பேசுகிறோம்
2. 45 % பேசுவதில்லை

செல்போனில் எப்.எம் கேட்பவர்கள்

1. 60% கேட்கிறார்கள்
2. 30% கேட்பதில்லை
3. 10% உண்டு, கேட்பதில்லை

நேயர்களைக் கவர்ந்த விளம்பரங்களை ஒலிபரப்பிய வானொலி

1. ரேடியோ மிர்ச்சி
2. ரேடியோ ஒன்
3. பிக் எப்.எம்
4. ஹலோ எப்.எம்
5. ஆஹா எப்.எம்

நேயர்களுக்கு அதிக பரிசுகள் தரும் வானொலி

1. ரேடியோ ஒன்
2. ரேடியோ மிர்ச்சி
3. ரேடியோ சிட்டி
4. பிக் எப்.எம்
5. ஆஹா எப்.எம்

(விரிவான விபரங்கள் 'சர்வதேச வானொலி' ஜூலை-ஆகஸ்ட் 2008 இதழில்) இதழைப் படிக்க கீழ்கண்ட தொடுப்பினைச் சொடுக்கவும்.
தொடர்புகளுக்கு: தங்க. ஜெய்சக்திவேல் 98413 66086

Thursday, August 14, 2008

சென்னையில் அதிக மக்கள் விரும்பும் பண்பலை

சர்வதேச வானொலி இதழ் வெற்றிகரமாக தனது புதிய பரிமாணத்தோடு பத்தாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இந்தப் பத்து ஆண்டுகளில் இதழ் படிப் படியான வளர்ச்சியையும், பாராட்டுகளையும், பலதரப் பட்ட மக்களிடமிருந்து பெற்று வருகிறது. நாளுக்கு நாள் பண்பலைகளின் எண்ணிக்கையும், பெருகிக் கொண்டே வருகிறது. சென்னையில் மட்டும் தனியார், அரசுப் பண்பலைகளின் எண்ணிக்கை பத்து. ஒவ்வொரு பண்பலையும் தன்னை முதன்மைப் படுத்துவதில் தீவிரம் காட்டி வருகின்றன. அது ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட சூரியன், ரேடியோ மிர்ச்சி போன்ற பண்பலைகளானாலும் சரி, புதிதாக தொடங்கப்பட்ட ஹலோ,ஆஹா பண்பலையானாலும் சரி. சர்வதேச வானொலி இதழ் முழுக்க, முழுக்க வானொலி சார்ந்த செய்திகளையும், வானொலியின் தொழில் நுட்பங்களின் வளர்ச்சி குறித்த கட்டுரைகளை மட்டுமேவெளியிட்டு வரும் ஒரே தமிழ் இதழ் என்பது அனைவரும் அறிந்த விஷயம்தான். நமது இதழ் பத்தாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்த இனிமையான நேரத்தில் சென்னையில் பண்பலைகளுக்கு மக்கள் மத்தியில் இருக்கும் வரவேற்பினை அறிய முதன்முறையாக எவ்வித விருப்பு, வெறுப்புகளும் இன்றி, சுமார் ஆயிரம் பேரிடம் நேரடியாக சில வினாக்களுடன் தொடர்பு கொண்டோம். அதன்படி, ரேடியோ மிர்ச்சி 98.3 எப். எம், அதிக அளவில் மக்கள் விரும்பும் பண்பலையாக உள்ளது. மக்களுக்கு அதிக அளவில் பரிசுகளைத் தரும் பண்பலையாக ரேடியோ ஒன் மற்றும் ரேடியோ மிர்ச்சியைத் தேர்வு செய்துள்ளனர். தனியார் பண்பலைகளின் படையெடுப்புகளுக்கு இடையேயும், மத்திய அரசின் ரெயின்போ எப்.எம் ஒட்டுமொத்த மதிப்பீட்டில் மூன்றாவது இடத்தைப் பிடித்திருப்பது ஆறுதலான விஷயம். ஆனால், இதனைத் தொடர்ந்து தக்க வைத்துக்கொள்ள இன்னும்முனைப்புடன் செயல்படவேண்டிய கட்டாயத்திலிருக்கிறது ரெயின்போ எப்.எம். இந்தக் கருத்துக் கணிப்பின் முடிவு சில விஷயங்களைத் தெளிவுபடுத்தும் விதமாக உள்ளது. அதன்படி வானொலியில் தாங்கள் கேட்கும் நிகழ்ச்சியானது வெறும் பொழுதுபோக்கு அம்சமாகவோ, அல்லது நேரத்தை வீணடிக்கிற நிகழ்ச்சியாக மட்டுமோ இருந்தால் போதாது என்பதைப் பிரதிபலிப்பதாகவேமக்களின் மதிப்பீடு இருக்கிறது. அதனால்தானோ என்னவோ ஆண்டாண்டுகளாக கோலோச்சி வந்த சூரியன் பண்பலையை மக்கள் கொஞ்சம், கொஞ்சமாக மறக்கத் தொடங்கி விட்டதாகவே தெரிகிறது. (தொடரும்)