Saturday, May 30, 2009

சூரியப்புள்ளியும் சிற்றலை வானொலியும்: பகுதி - 3

ஒளியின் வேகம் 1 வினாடிக்கு 30 லட்சம் கி.மீ. 1 வினாடியில் 3 லட்சம் கி.மீட்டரை கடக்கும் ஒளி ஒரு ஆண்டில் அதாவது (365X24X3600) வினாடியில் கடக்கும் கி. மீட்டரில் (315 மி.கி.மீ) அதாவது 31 கோடியே 53 லட்சத்து 60 ஆயிரம் கி.மீ. ஆகும். அந்த ஆரம்ப சூரியர்களின் மையத்திலிருந்து புறப்பட்ட ஒளி, அதன் உடலை விட்டு வெளியே வருவதற்கே 50 ஆண்டுகள் பிடிக்கும் என்றால் அவற்றின் உருவ அளவை எண்ணிப் பாருங்கள்.

இதன் காரணமாகவே, அவற்றில் நீடித்து வாழ முடியவில்லை. வெகுவிரைவில் வேகமாக எரிந்து அணைந்துவிட்டன. நமது சூரியன் 10 மில்லில்யன் (10 நூறு கோடி) அதாவது, ஆயிரம் கோடி ஆண்டுகளுக்கு நின்று எரியக்கூடியது (ஏற்கனவே சுமார் 5 பில்லியன் ஆண்டு வாழ்க்கை முடிந்து விட்டதால் நம் சூரியன் நடுவயதில் உள்ளான்) இன்னும் 5 மில்லியன் ( 5 நூறு கோடி அல்லது 500 கோடி) ஆண்டுகளுக்கு சூரியன் வெப்பத்தை உமிழ்ந்தபடி இருப்பான்.

ஆனால் ஆதி சூரியன்கள் ஒரு மில்லியன் ஆண்டுகளே எரிந்து வாழ்ந்து, சூப்பர் நோவாக்களாக வெடித்து அல்லது கரும்துளைகளாகச் சுருங்கிப் போய் விட்டன. அவை சூப்பர் நோவா-ஆக பெரும் தீப் பிழம்புடன் வெடித்து சிதறி வெளியிட்ட பொருட்கள் திரண்டுதான் இன்றைய சூரியர்கள் உருவானார்கள். சூரியன்கள் என்பது நமது சூரியன் மட்டுமல்ல, சூரியனைப் போல் பல லட்சம் மடங்கு பெரிதான நட்சத்திரங்களையும் சேர்த்துத் தான். எனவே பலமுறை ஏற்பட்ட சூப்பர் நோவாக்களின் வெடிப்பாலும் கரும்துளைகளாலும் பல விண்மீன்கள் தோன்றின. நாம் இன்று பார்த்துக் கொண்டு இருக்கும் ஆகாய விண்மீன்கள் இரண்டாம், மூன்றாம் அல்லது நான்காம் சந்ததிகளான சூரியர்களே ஆவார்கள். (நம் குடும்பத்தில் மகன், பேரன், கொள்ளுப்பேரன் என்பதைப் போல்.
தொடரும்...
- கிழக்கு தாம்பரம் வி. பாலசுப்ரமணி, அலைபேசி: 99520 67358

Thursday, May 28, 2009

சீன வானொலியின் இலவச பயணத்திற்கு தேர்வு செய்யப்பட்ட தமிழக நேயர்


சீனப்பயண‌த்தின் தொடர்ச்சியாக மே‍‍ 27ஆம் மாலை சிச்சுவான் தலைநகரில் அமைந்துள்ள மூன்று லட்சம் சதுரமீட்டர் அளவில் அமைந்துள்ள வரலாற்று புகழ் மிக்க அருங்காட்சியத்தை பார்த்தேன். என்னுடன் தலைவர் தி.கலையரசி அவர்கள் வந்ததால், பல விளக்கங்களை அவர் தெரிவித்தது பயன்மிக்கதாய் இருந்தது. இந்த அருங்காட்சியைப் பார்த்தால் பண்டைய மக்களின் வாழ்க்கை நிலையை தெரிந்துகொள்ள‌ வாய்ப்பு உண்டு. மூவாயிரம் ஆண்களுக்கு முந்தைய சீன சுச்சுவான் வரலாற்றை நினைவு படுத்தும் இந்த அருங்காட்சியகத்தில், பழங்கால‌ மாதிரி கிராமம் ஒன்று தத்துரூபமாக அமைக்கபட்டு, அன்றைய மக்கள் வாழ்ந்த எளிமையான சூழலை நினைவுபடுத்துகிறது.

அருமையான சிச்சுவான் என்று உலகளவில் நடத்தப்பட்ட பொது அறிவுப் போட்டியின் பரிசு வழங்கும் நிகழ்ச்சி, 27ம் நாள் சாங் து நகரில் நடைபெற்றது. இந்தியா, அமெரிக்கா, பிரான்ஸ், ஸ்விட்சர்லாந்து, பிரேசில், ருமேனியா, தென்கொரியா உள்ளிட்ட 10 நாடுகளைச் சேர்ந்த நேயர்கள், சிறப்பு பரிசுகள் பெற்றனர். அவர்கள் சிச்சவான் மாநிலத்தின் சில சுற்றுலா இடங்களுக்குச் சென்று அங்குள்ள அழகான காட்சிகளை கண்டு ரசிப்பார்கள்.

• சிச்சுவான் தலைநகரிலிருந்து முனுகப்பட்டு பி.கண்ணன்சேகர் 2009-05-28
• பரிசளிப்பு விழாவில் கண்ணன் சேகர் 2009-05-27
• சிறப்பு நேயரின் உணர்வு 2009-05-27
• தியெனான்மென்னில் சிறப்பு நேயர் 2009-05-26
• பெய்ஜிங் வந்தடைந்த முனுகப்பட்டு பி. கண்ணன் சேகர் 2009-05-24
தியெனான்மென்னில் சிறப்பு நேயர்
ஒலிப்பதிவுக் கூடத்திலிருந்து முனுகப்பட்டு. பி. கண்ணன் சேகர் பேசுகிறேன்
பெருஞ்சுவர் பற்றி

(Source: http://tamil.cri.cn/1/2009/05/27/104s85218.htm)

சூரியப்புள்ளியும் சிற்றலை வானொலியும்: பகுதி - 2

கதிர்வீச்சு முதலில் வெடிப்புடன் துவங்கி, 400,000 ஆண்டுகள் கழித்து பிரபஞ்சம் குளிர்ந்து இருளடையத் துவங்கியது. உற்பத்தியான ஹைட்ரஜன் அணுக்கள் எல்லா கதிர்களையும் உறிஞ்சிக் கொண்டன. பரவெளி எங்கும் சமமாய், அணுவிற்கும் அடிப்படை நிலையில் உள்ள ஒரே பொருள் பரவியிருந்தது. அதற்கு சுயஒளி இல்லாததால் எங்கும் இருள் சூழ்ந்து இருந்தது. மெல்ல மெல்ல அப்பொருள் இணைந்து முதல் அணுவாகிய ஹைட்ரஜனுடன் தோன்றியது. அந்தத் தோற்றத்தின் போது ஆகாயமெங்கும் நுண்அலையாக மின்காந்த ஆற்றல் வெளிப்பட்டது. எனவே, ஆரம்ப காலத்தில் பரவெளியில் ஆதி அணுவான ஹைட்ரஜனும், கூடவே வெளிவந்த மின்காந்த அலையுமே பரவி இருந்தது. வெளிச்சமும் ஒரு துளிகூட இல்லை. இப்படியே 100 மில்லியன் ஆண்டுகள் ஆகாயம் ஒரு நட்சத்திரமும் இன்றி ஒரே சமமாக கிடந்தது.

பிறகு, ஆங்காங்கே ஆற்றல் நிலைகளில் ஏற்பட்ட தடுமாற்றங்களால், சீராகப் பரவியிருந்த ஆகாயத்தில் (திரிந்து போன பால் கெட்டித் தட்டுவது போல்) ஆதி தாரகைகளின் விதைகள் உருவாயின. அந்த விதைகளை நோக்கி பொருட்கள் குவியக் குவிய அவை பெரிதாகி விண்மீன்களாயின. அவ்விண்மீன்களின் நடு இதயப்பகுதியில் ஏற்பட்ட நெரிசலால் பொருள்கள் இணைந்து அணுக்கரு இணைப்பாற்றல் துவங்கி அதன் பயனாக ஆகாயத்தில் காமா கதிர்வீச்சுடன் முதல் ஒளி தோன்றியது. எங்கும் பிரகாசமாக தாரகைகள் ஜொலிக்க ஆரம்பித்தன. (அறிவியலில் அணுக்கரு இணைப்பாற்றல் பற்றி அறிய ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின் சமன்பாடு, மேக்ஸ் பிளாங்கின் குவான்டம் கொள்கை உதவுகின்றன)
நம் பூமியைப்போல் பல லட்சம் மடங்கு பெரிதாக உள்ள சூரியனையே நாம் கண்டு வியக்கிறோம். ஆதி தாரகைகள் நம் சூரியனைப் போல் இன்னும் 100 ஆயிரம் முதல் பல மில்லியன் (10 லட்சம்) மடங்கு பெரிதானவை. அவற்றின் குறுக்களவு 10 முதல் 100 ஒளி ஆண்டுகள் விரிந்திருந்தது. (1 ஒளி ஆண்டு என்பது ஒளி அதன் வேகத்தில் ஒரு ஆண்டில் கடக்கும் தூரம்)
தொடரும்...
- கிழக்கு தாம்பரம் வி. பாலசுப்ரமணி, அலைபேசி: 99520 67358

Tuesday, May 26, 2009

சூரியப்புள்ளியும் சிற்றலை வானொலியும்: பகுதி - 1


அன்பான நண்பர்களே!
சர்வதேச வானொலி இதழின் மூலம் மீண்டும் உங்களைச் சந்திப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி. தமிழ் கட்டுரைகள் எழுதிய அனுபவம் அதிகம் இல்லாததனால் என் கட்டுரையில் பிழைகள் இருப்பின் மன்னிக்கவும். வானொலி சம்பந்தமான பல தகவல்களை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி. அவை உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும் என கருதுகிறேன்.

நம்மில் பலருக்கு நம் பூமி, மற்ற கோள்கள், சூரியன், விண்மீன்கள் எவ்வாறு தோன்றின என்று அறிவியல் அடிப்படையில் தெரிந்திருக்க நியாயம் இல்லை. நிலம், நீர், காற்று, தீ, ஆகாயம் ஆகிய ஐந்து (பஞ்சம்) க்கும் அப்பாற்பட்டு விரிந்திருக்கும் ஒன்றை விஸ்வம் - பிரபஞ்சம் என்கிறார்கள். இந்த சொல் பிரபஞ்சம் அறிவியலிலும் அதே பொருளில் பயன்படுத்தப்படுகிறது. பனிக்காலங்களில் காலையில் வீட்டின் சன்னல் கதவுகளைத் திறந்து சூரிய ஒளியை அனுமதிக்கும் போது புகைபோன்று காற்றில் உள்ள புழுதி எழுதுவது போல தோன்றும் காலியான ஒரு அறையில், காற்றில் தூசிகள் அந்தரத்தில் நிற்பதாகக் கற்பனை செய்து கொள்ளுங்கள். அந்த தூசிகளில் ஒன்றுதான் நமது சூரியன். பூமி, நிலா ஆகிய கோள்களும் மற்ற தூசிகள் பிற நட்சத்திரங்கள் அதாவது வேறு சூரியன்களாகும். இந்த தூசிகளைத் தவிர்த்து மீதி இருக்கும் காலி இடத்தை பிரபஞ்சம் என்கிறோம். அறைக்கு நான்கு சுவர்கள் என்ற எல்லை வரம்பு உள்ளது. ஆனால் பிரபஞ்சத்துக்கு அம்மாதிரி எல்லை ஏதுமில்லை. அது எப்போதும் விரிந்து சென்று கொண்டே இருக்கிறது.

அமாவாசை இரவில் நாம் வானத்தில் காண்பது பல்லாயிரம் நட்சத்திரங்கள். ஆனால் அவை அனைத்தும் நமது ஆகாய வெளியில் அண்டையிலிருக்கும் ஒரு சிறு பகுதியே. இன்னும் பல கோடி தாரகைகள் ஆகாயமெங்கும் பல பில்லியன் ஒளியாண்டுகள் பரப்பளவுக்கு பரவி உள்ளது. அவற்றை நம்மால் பார்க்க முடியாது. சிறந்த தொலைநோக்கி மூலமும், ஹப்புள் போன்ற விண்வெளி தொலைநோக்கி மூலம் நாம் பல புதிய நட்சத்திரக் குவியல்களைக் கண்டு பிடித்துள்ளோம். இந்தக் குவியல்களைத்தான் கேலக்ஸி (உடு மண்டலம்) என்கிறோம்.

வைரங்களை வாரி இரைத்தது போல் கண்சிமிட்டும் நட்சத்திரங்கள் அடங்கிய நமது ஆகாயம் ஒரு காலத்தில் இருண்டு கிடந்தது. கிட்டத்தட்ட 12 அல்லது 15 பில்லியன் (10 அல்லது 100 கோடி) அதாவது 1200 முதல் 1500 கோடி ஆண்டுகளுக்கு முன் இந்த ஒட்டுமொத்த ஆகாயமும் அதில் நிரம்பியுள்ள சகல ஒளி ஒளியற்ற பொருட்களும் ஒரு புள்ளியிலிருந்து பெரு வெடிப்பால் வெடித்துக் கிளம்பின என்று அறிவியல் வல்லுநர்கள் கூறுகிறார்கள். இந்த பெருவெடிப்புக்குப்பின் விரிந்த ஆகாயம் 100 மில்லியன் அல்லது நூறு கோடி ஆண்டுகளுக்கு இருண்டு கிடந்தது. தொடரும்...


- கிழக்கு தாம்பரம் வி. பாலசுப்ரமணி, அலைபேசி: 99520 67358

Wednesday, May 20, 2009

'பெண்மை வாழ்க' புத்தகமாக


வேரித்தாஸ் தமிழ் பணியில் ஒலிபரப்பான 'பெண்மை வாழ்க' நிகழ்ச்சி தற்பொழுது 110 பக்கங்கள் கொண்ட புத்தகமாக வெளியாகியுள்ளது. இதனை எழுதியவர் திரு. பா.மூர்த்தி. இவர் தற்பொழுது புதுக்கோட்டை மாவட்ட காவல் துறைக் கண்கானிப்பாளராக பணியாற்றி வருகிறார். இந்த நூலானது முற்றிலும் இலவசமாக நேயர்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. நூல் தேவைப்படுபவர்கள் தொடர்புகொள்ள வேண்டிய முகவரி:
அருட்தந்தை. டென்னிஸ் வாய்ஸ்,
துணை இயகுனர்,
சாந்தோம் கலைத்தொடர்பு நிலையம்,
150, லஸ் கோவில் சாலை,
மயிலாப்பூர்,
சென்னை - 600004.

பிபிசி தமிழோசைக்கு பிரபாகரன் அவர்கள் கடந்த காலங்களில் வழங்கியுள்ள பல பிரத்தியேக செவ்விகள்

Photo: BBC Tamilosai Programme Guide (Oct 1994 - March 1995)

இலங்கையில் விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் அவரது பல தளபதிகளுடன் சுட்டுக்கொல்லப்பட்டதாக இலங்கை இராணுவம் அறிவித்துள்ளது.

தமிழோசை உட்பட பிபிசிக்கு பிரபாகரன் அவர்கள் கடந்த காலங்களில் பல பிரத்தியேக செவ்விகளை வழங்கியுள்ளார்.

அவ்வாறு அவரால் வழங்கப்பட்ட சில செவ்விகளை நேயர்கள் இங்கு கேட்கலாம்.

முதலில், 1987 ஆம் ஆண்டு, சார்க் மாநாடு முடிந்தவுடன் தமிழோசையின் சார்பில் சங்கர் அவர்கள் பிரபாகரனை செவ்வி கண்டிருந்தார்.

1987 ஆண்டு வழங்கிய செவ்வி

1991 இல் இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதியில் கடுமையான மோதல்கள் நடந்துகொண்டிருந்தபோது பிபிசியின் செய்தியாளர் கிறிஸ் மோரிஸ் அவர்கள் இலங்கைக்கு சென்றிருந்தார். அப்போது அவருக்கு பிரபாகரன் செவ்வி ஒன்றை வழங்கியிருந்தார்.

1991 இல் வழங்கப்பட்ட செவ்வி

தமிழோசையின் முன்னாள் மூத்த தயாரிப்பாளர் ஆனந்தி சூரியப் பிரகாசம் அவர்களுக்கு பிரபாகரன் அவர்கள் இரண்டு முக்கிய செவ்விகளை வழங்கியிருந்தார்.

அதில் முதலாவதாக 1994 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட செவ்வியை இங்கு கேட்கலாம்.

1994 இல் வழங்கப்பட்ட செவ்வி



மற்றுமொரு செவ்வி ஆனந்திக்கு 1995 இல் பிரபாகரனால் வழங்கப்பட்டது.

1995 இல் வழங்கப்பட்ட செவ்வி

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் தனது இறுதி மாவீரர் நாள் உரையில் (2008 ஆம் ஆண்டு), உலக நாடுகளும் இந்தியாவும் தம் மீதான தடையை நீக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.

உலக நாடுகள் தடைகளை நீக்கி தமது போராட்டத்தை அங்கீகரிக்க வேண்டும் என்றும், அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இறுதி மாவீரர் உரையின் தொகுப்பு

(Source: BBCTamil.com)

Monday, May 18, 2009

பாஸ்கர் நெப்பொலியன் மறைவு...

சர்வதேச வானொலி நேயரும் நமது சர்வதேச வானொலி இதழின் துணை ஆசிரியருமான தஞ்சை பாஸ்கர் நெப்பொலியன் கடந்த வெள்ளி (15-05- 2009) அதிகாலை 4.30-க்கு தஞ்சாவூர் அருகில் உள்ள கந்தர்வக்கோட்டை எனும் இடத்திற்கு அருகில் இரண்டு சக்கர வாகனத்தில் தனது நண்பருடன் வருகையில் எதிரே வந்த லாரியால் மோதப்பட்டு அதே இடத்தில் அகால மரணமடைந்தார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். அவரது குடும்பத்தார்க்கு ஆழ்ந்த இரங்களைத் தெரிவிக்கும் அதே சமயத்தில் அவரது ஆத்மா சாந்தியடைய எல்லொருக்கும் பொதுவான இறைவனை வேண்டுகிறோம். உலகின் பல்வேறு வானொலிகளுடன் தொடர்பு வைத்திறுந்த ஒரு அருமையான வானொலி நண்பரை நாம் இழந்துவிட்டோம். - ஆசிரியர் குழு

டிஜிட்டல் பக்கம்


ஈட்டன் நிறுவனம் இந்த ஆண்டு பல புதிய வானொலிப் பெட்டிகளை அறிமுகப்படுத் தியுள்ளது. அந்த வகையில் "சேட்டிலைட் 750' எனும் இந்த புதிய வானொலி பெட்டியில், பல புதிய தொழில் நுட்பங்களை அறிமுகப்படுத்தியுள்ளனர். நெட்டலை, மத்திய அலை, சிற்றலை, பண்பலை மட்டுமல்லாது ஏர் கிராஃப்ட் அலைவரிசைகளையும் இந்த வானொலிப் பெட்டியில் கேட்கலாம்.

எஸ்.எஸ்.பி. அலைவரிசைகளைக் கேட்கும் வசதியினையும் இந்த வானொலிப் பெட்டியில் செய்துள்ளனர். தெளிவான ஒலிபரப்புகளைக் கேட்க பல பில்டர்களை வழங்கியுள்ளதால், தெளிவில்லாத ஒலிபரப்பு களையும் தெளிவுபடுத்த வசதிகள் பலவற்றை இந்த வானொலி கொண்டுள்ளது.

ஏர் கிராப்ட் அலைவரிசையானது 118 மெ.ஹெ. முதல் 137 மெ.ஹெ. வரை இதில் கேட்கலாம். அதே போன்று சிற்றலை வரிசையானது 1711 கி.ஹெ. முதல் 30000 கி.ஹெ. வரை தொடர்ச்சியான அலை வரிசைகளை இதில் கேட்கலாம்.

பெரிய திரையுடன் கூடிய சிக்னல் மீட்டரும் இதில் உள்ளது. மேலும் டியூனிங் வசதியானது பெரிதாக உள்ளதால் எளிதாக டியூன் செய்ய முடிகிறது. இந்த வானொலிப் பெட்டியில் உள்ள ஸ்பீக்கர் பெரிதாக உள்ளதால் தெளிவாக ஒலிபரப்புகளை கேட்க உதவுகிறது.

இன்னும் இரண்டு மாதங்களில் உலகெங்கும் விற்பனைக்கு வரவுள்ள இந்த வானொலிப் பெட்டியின் விலை விபரங்கள் அறிவிக்கப் படவில்லை. சேட்டிலைட் 750 வானொலிப் பற்றிய மேலதிக விபரங்களை www.etoncorp.com இணைய முகவரியில் காணலாம்.

Saturday, May 16, 2009

Voice of Tamil Elem in Madras - 1986

I have had a great support ,encouragement and motivation from a number of DX friends . Two of them with whom I continue to interact the most since our first meeting in 1978 are Tripti Ranjan Basu and Babul Gupta. During the days of publication of Asian DX Review in the 1980s the slogging would be done by TRB while BG did the designing of the bulletin and the weekend meetings would be held in my Hostel room.Equally long is my association with Sudito Ghose who is still my first source for technical queries. In the early eighties I met Prodyut Bannerjee with whom I continue to have a special relationship because of our common interest in the tropical bands and the mediumwaves and more so because we both happen to be of the same age. As a sailor and a keen DXer Prodyut would fascinate us with his exotic recordings , qsls all spiced up with his humor . A class friend of mine from my Medical School, Asis Kundu was with me for the DX expeditions , would lend his hand for the work for the bulletin and even accompanied me to search for the Voice of Tamil Elem in Madras in 1986. Ever since I met Kanwarjit Sandhu at his place in Ludhiana in 1986 we struck up a special bond and after the demise of Asian DX review it was the bulletin run by him - UDXL which kept up my DX links.

What about my other DX friends with whom I could not keep up regular touch all through these years, who nevertheless have a special place in my heart ? It was at Alok Dasguptas place , the Indian DX club International Hq in 1978 that I met TRB,BG SG and all. He had featured me in an interview for Adrian Peterson's Radio Monitors International which used to be aired over the Sri Lankan Broadcasting Corporation.Pratap Shankar Mazumdar was also an active IDXCI worker and so was Surajit Kumar Dey who was somewhere between a DXer and a Ham.Dr Swapan Chowdhury, the "Doctor" as we called him first showed us the digital frequency readout in his Panasonic receiver in the early eighties.During my trips to Madras now renamed Chennai I struck up a good rapport with B Sreedhar of HAP India and B Padaki who was one of the first TV Dxers in India. Manosij Ganguly the young enthusiast who used to be active with AIR frequency information even turned up to visit me at Aligarh where I stayed for some time.The two other younger DXer friends from Kolkata were Priyanjit Ghosal and Subrata Sengupta.My only overseas DX friend Peter Bunn from Australia turned up in the middle of religious riots at Aligarh. However, I managed to take him through a trip of the external services transmitters of All India Radio against all the odds and even had the station engineer serving us a sumptuous lunch.

This page will not be complete withought mention of my wife Paromita .She is half a DXer and a full friend ever encouraging. In private I have heard her say that she hates when I shift from station to station with little pause !.
(Thanks to Supratik Sanatani athena_eye@vsnl.com, http://www.geocities.com/supratiksanatani)

Friday, May 15, 2009

இந்த மாத "திட்டம்" இதழில் வானொலி தொடர்பான கட்டுரைகள்...


இந்திய அரசின் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் வெளியிடப்பட்டுவரும் மாத இதழான "திட்டம்", இந்த மாதம் ஊடகங்களை மையப்படுத்திய சிறப்பிதழாக வெளிவந்துள்ளது. இதில் சென்னை அகில இந்திய வானொலி இயக்குனர் திரு. சீனிவாசராகவன் அவர்களின் கட்டுரை உட்பட ஏராளமான வானொலித் தொடர்பான கட்டுரைகள் இடம் பெற்றுள்ளது. வானொலி நேயர்கள் அவசியம் படிக்க வேண்டிய இந்த மே சிறப்பிதழின் விலை ரூ.10/- மட்டுமே.
கிடைக்கும் இடம்:
ஆசிரியர்,
திட்டம்,
சாஸ்த்ரி பவன்,
ஹாடோஸ் சாலை,
சென்னை - 600 006,
தொலைபேசி: 044 2827 2382

தமிழகதில் புதிதாக 5 வானொலி நிலையங்கள்


கல்வி நிறுவனங்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்த சமுதாய வானொலி உரிமங்கள் தற்பொழுது என்.ஜி.ஓ-களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் விரைவில் திருச்சி, திருச்சங்கோடு மற்றும் குமாரபாளையத்தில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கும், மதுரை மற்றும் நாகப்பட்டினத்தில் உள்ள அரசு சாரா தொண்டு நிறுவனத்திற்கும் சமுதாய வானொலி தொடங்க அனுமதி கிடைத்துள்ளது. இதன் மூலம், இந்தியாவிலேயே அதிக சமுதாய வானொலிகள் உள்ள மாநிலமாக, நமது தமிழ்நாடு உள்ளது, வானொலி நேயர்களாகிய நமக்கெல்லாம் பெருமையே!

Thursday, May 14, 2009

வானொலி துணைவன்

"ரேடியோ எப்படி இயங்குகிறது?" சமீபத்தில் சென்னை கிழக்கு பதிப்பகத்தின் "பிராடிஜி' நிறுவனத்தால் வெளியிடப் பட்டுள்ள கையடக்க புத்தகம். என். சொக்கன் அவர்களால் எழுதப்பட்டுள்ள இந்தப் புத்தகத்தைப் பற்றி இவர் கூறும்போது, ""தகவல், அறிவு, இசை, கொண்டாட்டம் என்று நம்மைத் தொடர்ந்து மகிழ்வித்துக் கொண்டிருக்கும் ரேடியோவின் வியப்பூட்டும் கதை'' தான் இந்த நூல் என்கிறார்.

80 பக்கங்களில் வெளிவந்துள்ள இந்த நூலில் அதிசய அலைகள், மின் காந்தமும் மசாலா தோசையும்!, மின்சாரக் காந்தம், அலை பாயுதே, கம்பிகள் இல்லாத உலகம், அலைவழித் தந்தி, கொடுக்கல் வாங்கல், கைப்பிடிக்குள் உலகம், ஒலிப்பதிவு - ஒலிபரப்பு, இருவழிப் பாதை, அன்றும் இன்றும் என்றும் ஆகிய 12 தலைப்புகளில் எளிதாக அனைவருக்கும் புரியும் வண்ணம் ஆசிரியர் எழுதியுள்ளார். நூலின் கூடுதல் சிறப்பாக ஒன்பது படங்களை தேவையான இடங்களில் வெளியிட்டுள்ளனர்.

நம்மில் பலருக்கு இன்றும் எப்.எம்.மிற்கு விரிவாக்கம் தெரியாது. அதே போன்று ஏ.எம். என்று ஒன்று உள்ளது பற்றியும் அறிய மாட்டார்கள். இவைகளை எளிய தமிழில் படத்துடன் விளக்கியுள்ளார். நூலின் விலை ரூ. 25 தேவைப்படுவோர் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:

New Horizon Media Pvt. Ltd.,
33/15, Eldams Road,
Alwarpet,
Chennai - 600 018.
Ph: 044 - 4200 9601.
E-mail: mchokkan@gmail.com

Tuesday, May 12, 2009

பிபிசி தமிழோசையின் காலை சிறப்பு செய்திகள்

லண்டன் : இலங்கை நிலவரம், இந்திய மக்களவைத் தேர்தல் ஆகியவை குறித்து கூடுதல் செய்திகளை வழங்கும் வகையில் 10 நாட்களுக்கு தினமும் காலையிலும் சிறப்பு செய்திகளை ஒலிபரப்பவுள்ளது பிபிசி தமிழோசை வானொலி.

இன்று முதல் வரும் 20ம் தேதி வரை இந்திய நேரப்படி தினமும் காலை 7 மணிக்கு 15 நிமிடம் இந்த சிறப்புச் செய்தித் தொகுப்பு ஒலிபரப்பாகும். இந்த ஒலிபரப்பை 19 மீட்டர் (15285 kHz), 16 மீட்டர் (17515 kHz) சிற்றலைவரிசையில் கேட்கலாம்.

மேலும் www.bbctamil.com இணையத் தளத்திலும் கேட்கலாம்.

இது குறித்து பிபிசி தமிழோசை தலைவரான திருமலை மணிவண்ணன் கூறுகையில்,

இலங்கை யில் நடந்து வரும் விவகாரங்கள், இந்திய மக்களவைத் தேர்தலை கருத்தில் கொண்டும், இது குறித்த செய்திகளை உடனுக்குடன் நேயர்களுக்கு வழங்கவும் வழக்கமான எங்கள் செய்தித் தொகுப்போடு (இந்திய-இலங்கை நேரப்படி தினமும் இரவு 9.15 மணிக்கு ஒலிபரப்பாவது) இந்த சிறப்பு ஒலிபரப்புக்கும் பிபிசி தமிழ் பிரிவு ஏற்பாடு செய்துள்ளது.

கடந்த காலங்களில் செய்ததைப் போலவே எங்களது நேயர்களை நேரடியாக பாதிக்கும் நிகழ்வுகள் குறித்து இந்த கூடுதலான செய்தித் தொகுப்பை வானொலி, இணையத் தளத்தின் மூலம் உடனுக்குடன் வழங்குகிறோம் என்றார்.

( Thatstamil.oneindia.in 12-05-2009)

எதிரொலி


 அக்டோபர் - நவம்பர் 2008 இதழில் "அந்தி நேரத்து சிந்துகள்" - நாகபூஷணி கருப்பையா அவர்களின் சிறப்பு செவ்வி படித்தோம். பல புதிய தகவல்களை அந்தப் பேட்டியில் அவர் வழங்கியுள்ளார்கள். வானொலி கேட்காதவர்களையும் கேட்க வைத்துவிட்டார். அன்பான சகோதரி சொன்ன அனைத்து தகவல்களும் அருமை. மேலும் டிசம்பர் இதழ் பல பயனுள்ள சிற்றலை ஆன்டனாக்களைப் பற்றிய விபரங்களை வழங்கியது.
- லால் சந்திரன், இலால்குடி

 கோகுலம் கதிர் ஜனவரி மாத இதழில் "உலகெங்கும் தமிழ் முழக்கம்" கட்டுரை பல தகவல்களை வானொலி நேயர்களுக்கு வழங்கியது. சர்வதேச வானொலிகளின் அலைவரிசை விபரங்களும் அந்தக் கட்டுரையில் இடம் பெற்றுள்ளது சிறப்பு. தங்கள் பணி சிறக்க சர்வதேச வானொலி நேயர்கள் சார்பாக வாழ்த்துக்கள்.
- பொருனை பாலு, திருநெல்வேலி

 டிசம்பர் இதழில் கிழக்கு தாம்பரம் வி. பாலு அவர்களின் உதவியுடன் வெளிவந்த "இலகுவான சிற்றலை ஆன்டனாக்கள்" பற்றிய விபரங்கள் தெள்ளத் தெளிவாகவும், படங்களுடனும் வெளிவந்துள்ளது சிறப்பு. எங்களைப் போன்ற வானொலி நேயர்களுக்கு அந்த இதழ் அறிய பொக்கிசமாகும்.
- கே.சி. சிவராஜ், இடப்பாடி

Sunday, May 10, 2009

பிபிசி தமிழோசை சிறப்பு காலை ஒலிபரப்பு

பிபிசி தமிழோசை இலங்கைப் போர் மற்றும் இந்திய தேர்தலுக்காக சிறப்பு காலை ஒலிபரப்பினைத் தொடங்கியுள்ளது. 11 மே முதல் 20 மே 2009 வரை இந்த ஒலிபரப்பினை தினமும் காலை இந்திய நேரம் 0700 முதல் 0715 வரை 19 மீட்டர் 15285 கிலோ ஹெர்ட்ஸ் மற்றும் 16 மீட்டர் 17515 கிலோ ஹெர்ட்ஸ்களில் கேட்கலாம். தேவையின் அடிப்படையில் இந்த ஒலிப்ரப்பானது நீட்டிக்கப்படவும் உள்ளது. (பிபிசி தமிழோசை அறிவிப்பு)

வேரித்தாஸ் தமிழ்பணி உறவுசங்கம விழா 2009


வேரித்தாஸ் தமிழ்பணி இந்த ஆண்டு ஏற்பாடு செய்திருந்த இனிய இதயங்களின் குடும்ப விழாவான "உறவுசங்கம"-விழாவானது கடந்த 09 மே 2009 அன்று காலை 9 மணியளவில் திருச்சி தலைமை தபால் நிலையம் அருகில் உள்ள புனித பவுல் குருத்துவக் கல்லூரியில் வெகு சிறப்பாக நடைபெற்றது. விழாவில் சிறப்புமலர் வெளியிடப்பட்டது. விழாப் புகைபடங்களை கீழ்கண்ட தொடுப்பினைச் சொடுக்கி கண்டு மகிழுங்கள்.

நேயர்களின் ஒரு பகுதி

விழாவில் வெளியிடப்பட்ட மலர்

அருட்தந்தை டென்னிஸ் வாய்ஸ் மற்றும் அருட்தந்தை ஜெரோம் ஆரோக்கிய ராஜ் இருவருக்கும் நடுவில் மூத்த நேயர் விழுப்புரம் ஜமீல் அஹமது.

விழாப் புகைபடங்கள்

அலைவரிசை மாற்றங்கள்


அமெரிக்கா: வானொலிக் குடும்பம்
இரவு ஒலிபரப்பானது தமிழில் இந்திய நேரம் 7.30 முதல் 8.30 வரை 16 மீட்டர் 17810 கி.ஹெர்ட்சில் ஜக்கிய அரபு குடியரசில் உள்ள தாபயா எனும் நகரத்தில் இருந்து ஒலிபரப்பாகிறது. இந்திய நேரம் இரவு 8.30 முதல் 9.30 வரை 31 மீட்டர் 9585 கிலோ ஹெர்ட்சில் ஜெர்மனியில் உள்ள நவுன் நகரத்தில் இருந்து ஒலிபரப்பாகிறது.
தொடர்பு முகவரி:
Tamil Section,
Family Radio (WYFR),
C/oRev. Alexander,
Tekkali – 532 201,
Andra Pradesh,
India


வத்திகான் வானொலி
தனது காலை மறு ஒலிபரப்பில் அலைவரிசை மாற்றத்தினை செய்து உள்ளது. இந்திய நேரம் காலை 7.50 முதல் 8.10 வரை 31 மீட்டர் 9545 கிலோ ஹெர்ட்சில் செயின்ட் மரியா டி கலேரியா ஒலிபரப்பு தளத்தில் இருந்து செய்கிறது.

Friday, May 08, 2009

ரேடியோ வேரித்தாஸ் ஆசியாவின் "உறவுச்சங்கம விழா"

நேயர்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டு இருக்கும் ரேடியோ வேரித்தாஸ் ஆசியாவின் "உறவுச்சங்கம விழா" வரும் 9 மே 2009 நடைபெற உள்ளது. மேலதிக விபரங்களுக்கு அழைப்பிதழை காணவும்.



History of Radio Veritas Asia

Radio Veritas Asia looks for more efficiency in face of decreasing funding

Thursday, May 07, 2009

Hello FM RJ Kaushi: Interview

Radio Host should sound Genuine

A livewire on air, Kaushi connects with Chennai every morning through her show 'Eepeeko 106.4'. According to her, offering something different to listeners is vital. She loves travelling, is adventurous and believes in the mantra 'Be happy and keep others happy too'.

What made you choose Radio Hosting?
I didn't choose radio… radio chose me!

Basically I'm a student of electronic media. I was in my college final year when me and a few of my college friends happened to attend an audition for radio jockeys, more out of curiosity than anything else! Surprisingly it clicked! Few weeks of rigorous training followed and as I liked the team I was working with, I took up radio hosting as part-time assignment.

Everyday, after college, I used to host the evening drive-time show called 'Cummercut'. The fun part was that my friends at college were as excited as me about this and it was one of my friends who suggested the name for my show.

Though I never thought I'd be a radio host myself, I've enjoyed listening to radio since my childhood days.

What are the pros & cons of the job?
Radio hosting is so much fun! Enjoying good music, playing it to whole city, talking your heart out and making people like you for what you are doing…Could there be a better job that one could ask for?

Cons…? Yes, of course! Sometimes we have to shy away from ice creams and cold drinks to maintain our voice. Giving in to temptations can sometimes result in some undesired special effects.

If not radio hosting, then what?
If not radio hosting then maybe one could've caught me on some news channel reporting a story or fighting for a cause.

Describe your most memorable radio moment?
It would be my first show and my first-ever live jock link. I was thrilled, nervous, excited, fervent, passionate, ecstatic and scared, all at the same time! I knew the expectations were high…and I didn't want to let them down. I even had a few RJ's with me in the studio for support! My friends were also glued to the radio sets to hear me on air for the first time. I was fast, energetic and breathless, they said. I had put all my life in to it! I finished my first jock link and came out of the studio eager to get some feedback, and was surprised to see my teammates waiting. They cheered and hugged me! Have never felt so special ever in my life.

Was there anyone or anything that inspired you to take up this profession?
Yup! It was during an inter-college cultural event, where my friend and I performed together in an on-stage competition. The judge for the event was so impressed that he went ahead to say that I would have a brilliant future if I chose radio as a career. The judge for the event was one of the prominent names in the radio industry! He later happened to be the person who trained me and shaped me as a radio host! If not for him I would've never been here.

Another inspiring event was when my most favorite radio jockey chose me as his favorite student radio jockey among many others, in a college cultural event.

What is your USP?
Being myself. Eventhough I haven't figured out what kind of a person I am. I bet the listeners are as confused as I am, pleasantly though.

What are the essential requirements for being a radio host?
Flair for language and expression of thoughts, a healthy and friendly personality. Clarity in speech is also important. But, honesty is the key virtue.

How do you prepare yourself for every show?
I connect with Chennai every morning from 7 to 10, with my take on the day's news and views. This warrants me to go through newspapers and magazines every morning. News channels and the Internet help me stay updated. Before every show of mine I make it a point to go through the songs scheduled for the show and think of interesting ways to present them to the listeners. I also listen to any of my favorite songs in full volume in the studio before starting with the show! It helps increase my energy level.

Does hosting a particular prime slot matter to you?
Not at all! I would rather like to experiment with different time bands and show formats. At anytime of the day I want to make sure the listener's enjoy what they listen to! I would want my show time, no matter when, to be known as primetime.

What is that one most important factor that makes listeners connect to an RJ?
Radio hosts should sound genuine. Trying to fake, putting on an accent, trying to be hip might put off listeners. When we have this 'I mean what I say' attitude in our voice, listeners might just like us for what we are.

A radio station is known by its RJs, particularly in these times when all stations sound alike. Would you agree?
Apart from radio hosts, there are other things that set a radio station apart from others, like the music they play, the overall soundscape of the channel, the content, the creative quotients and the show formats! But there could be nothing better than people tuning into your station to listen to you!

Where do you see yourself a decade from now?
Two years back I couldn't have told you I would be a radio host today! Whenever I plan something in life, the cosmos conspires to make sure that things don't work out the way I want them to! But at the end of it all, things turn out to be good for me… better than I could have planned for! So, I'm not complaining! The moral of the story is to give your best to whatever you are doing currently and have fun. That's exactly what I've been doing! A decade is too long a period to foresee! At best, I see myself ten years wiser and ten years younger.

A radio jockey is "born" or "made"?
Born. Or may be made too. Or born to be made an RJ could also be a possibility. Thank God, they can't be cloned.

What would be your message to the budding radio hosts?
Be genuine and honest with the medium, be passionate about what you do and make sure you have something different to offer your listeners. That's when we'll stand out from the rest. Most importantly Khush raho aur sabko khush rakho! (Be happy and keep others happy too).

Snapshot Queries
The 5 most important things in life-
1) Parents 2) People
3) Experimenting and learning 4) Travel and adventure
5) Solitude for self-introspection

When not on-air-
I am off-air! ha ha !
I live by the mantra-
To be good on air, have no airs.
Will never forget-
My first live jock link on air.
Can't stand-
People spitting on roads.
Love listening to-
Any music depending upon my mood.
Love watching-
With butter popcorns and cold drink any kind of movie should seem good.
(Source; radioduniya.in)

Big 92.7 FM Chennai’s New ‘Slow Motion Sunday’

In its endeavor to ensure absolute listener delight and super weekends, Big 92.7 FM, announces a change in its Sunday FPC for its Chennai Station. The new FPC is tailor made for Chennai and carefully put together after detailed understanding listener preferences and mapping of body clocks. Offering infotainment along with an excellent music mix, 'Slow Motion Sunday' is all about slow, soft and soothing music along with information and Kollywood updates to ensure Chennai-ites get their dose of relaxed, fun entertainment. Through this offering, the Station is ensuring listeners have a relaxed Sunday, which is slow paced and helps them unwind. As part of its music offerings, the Station has introduced the 'Slow Motion Sunday Mix' where the music will be slow tempo and relaxing.

Speaking about the change in the Sunday FPC, Mr. P.B Ramaswamy, Cluster Director - Big 92.7 FM Tamil Nadu said "At Big 92.7 FM, it is our endeavour to offer listeners a wholesome entertainment mix and this new offering is in perfect keeping with it. Sunday's are lazy for most Chennai-ites who want to relax after a busy week. We are confident that the local populace is going to love our offering as we share their slow motion Sunday's with them." (radioduniya.in)