Friday, November 26, 2010

புலிகளின் குரல் - சிறப்பு ஒலிபரப்பு


புலிகளின் குரல் சிற்றலையில் - corrected

புலிகளின் குரல் இன்று மாலை(26-11-2010) சிற்றலை வானொலியில் கேட்கலாம்

0400-0500 IST PM on 17880
0730-0830 IST PM on 6230
0830-1000 IST PM on 13860

Don't miss to listen today
(Jaisakthivel, Via DXLD)


புலிகளின் குரல் சிற்றலையில்

புலிகளின் குரல் இன்று மாலை(26-11-2010) சிற்றலை வானொலியில் கேட்கலாம்

0400-0500 IST PM on 17880
0730-0830 IST PM on 6230
1000-1130 IST PM on 13860

Don't miss to listen today
(Jaisakthivel, Via DXLD)

Tuesday, November 23, 2010

World Radio TV Handbook (WRTH) 2011

WRTH team proud to present the 65th edition of the bestselling directory of global broadcasting on LW, MW, SW and FM.


The Features section this year has the history of Radio St Helena, reviews of the latest equipment, an intriguing look back at some classic 80s & 90s receivers, a visit to AFN in the Florida Keys and much more, including our
regular Digital Update.


The remaining pages are, as usual, full of information on:


• National and International broadcasts and broadcasters
• Clandestine and other target broadcasters
• MW and SW frequency listings
• Terrestrial TV by country

• Extensive Reference section


What is WRTH?

World Radio TV Handbook or WRTH is now in its 65th year. It is the most accurate and complete guide to the world of radio on LW, MW, SW and FM, available in any form.


It is divided into the following sections


Features - This section is in full colour and contains reviews of receivers and ancillary equipment, articles on topical issues such as digital radio, interviews with broadcasters, reception conditions, colour maps showing the location of SW transmitters, and other topics of interest to Listeners and DXers.


National Radio - This section covers the world's domestic radio services. The listings are by country and include all stations broadcasting on LW, MW and SW, and most stations broadcasting on FM, together with contact details.


International Radio - Full details of all broadcasters transmitting internationally are given in this section and are listed by country. The schedules shown are the 'B' or 'winter' SW frequencies as supplied by the broadcasters and confirmed by monitoring, together with any LW or MW frequencies used. It also contains a sub-section showing Clandestine and Other Target Broadcasters arranged by target country. The 'A' or 'summer' schedules, along with updates to broadcaster details, are available as a pdf download from this website in May each year.


Frequency Lists - This section contains MW frequency lists grouped by frequency within regions, lists of all international and domestic SW broadcasts in frequency order, and international SW broadcasts in English, French, German, Portuguese and Spanish, and DRM transmissions shown by UTC.


Television - The TV section has details of the main terrestrial national broadcasters, large regional networks, and some local stations, arranged alphabetically by country.


Reference - This section has tables and listings of: International and Domestic Transmitter sites, Standard Time and Frequency Transmissions, DX Club information, International Organisations, and other essential information.

To see what other people think of WRTH please read the commentsmade about WRTH 2010, or go right ahead and order a copy of WRTH 2011.


Also click the following link for order.

 
(Jaisakthivel, Ardic DX Club, India)


Monday, November 22, 2010

சிற்றலை நேயர்களின் சங்கமம்!





சிற்றலை நேயர்கள் - தோஷிமிச்சி ஹோடாகே
வானொலி கேட்பது ஒரு பொழுதுபோக்கு என்ற நிலை மாறி, வாழ்க்கையில் அது ஒரு முக்கிய அம்சமாகிப்போனது.  துல்லியமான டிஜிட்டல் ஒலிபரப்பு, இணையதளம் மூலமான ஒலிபரப்பு, செயற்கைக்கோள் மூலமான ஒலிபரப்பு, பண்பலை வானொலி, சிற்றலை வானொலிகளுடன் ஏராளமான தொலைக்காட்சி அலைவரிசைகளும் சேர்ந்து அறுசுவை விருந்து வைக்கின்றன.  இது குறித்து சர்வதேச வானொலி பத்திரிகை ஆசிரியர் ஜெயசக்திவேலிடம் பேசினோம்...

""வானொலி ஒலிபரப்பில் மத்திய அலை, பண்பலை ஆகியவை மூலம் அதிக தொலைவுள்ள பகுதிகளுக்கு ஒலிபரப்பு செய்ய முடியாது. ஆனால் சிற்றலை வானொலி ஒலிபரப்பு மூலம் குறைந்த செலவில் அதிக தொலைவுக்கு ஒலிபரப்பு செய்ய முடியும்.

சிற்றலை வானொலி ஒலிபரப்பின் அடிப்படையில் ஹாம் ரேடியோ எனப்படும் அமெச்சூர் வானொலி ஒலிப்பரப்பு முறை உருவாகி உலகம் முழுவதும் பிரபலமானது.

அதனாலேயே, அமெச்சூர் வானொலி ஒலிபரப்பாளர்கள் சிற்றலை வானொலி நேயர்களாக மாறுவதும், சிற்றலை நேயர்கள் அமெச்சூர் வானொலி ஒலிபரப்பாளர்களாக மாறுவதும் வழக்கமான ஒன்றாகவே இருந்துவருகிறது.

மத்திய அலை, பண்பலை ஆகியவற்றின் எல்லைகளுக்கு அப்பால் உள்ள மக்களுக்கு தகவல்களை தெரிவிக்க சிற்றலை ஒலிபரப்பு அவசியம் என்பதால் எல்லா நாடுகளிலும் சிற்றலை வானொலி ஒலிபரப்பு தவிர்க்க முடியாததாகிவிட்டது.

இத்தகைய ஒலிபரப்புகளை கேட்பவர்கள் அந்த நிகழ்ச்சி மற்றும் அது ஒலிபரப்பான அலைவரிசை, நேரம் உள்ளிட்ட விவரங்களை அந்த நிலையத்துக்கு கடிதம் மூலம் தெரிவித்தால் அந்த விவரங்களைச் சரிபார்த்து, அதற்கான அடையாள அட்டை (க்யு.எஸ்.எல்.) சம்பந்தப்பட்ட வானொலி நிலையத்தில் இருந்து நேயருக்கு அனுப்பப்படும்.

இவ்வாறு, பல்வேறு ஒலிபரப்புகளை கேட்டு, அதற்கான அடையாள அட்டைகளைச் சேகரிப்பது அஞ்சல் தலை சேகரிப்பு போல மிகவும் பிரசித்தமானது.

இத்தகைய சிற்றலை நேயர்கள் ஒருவருக்கொருவர் தொடர்பை ஏற்படுத்துவதற்காக பல்வேறு நாடுகளில் சிற்றலை வானொலி நேயர் மன்றம் தொடங்கப்பட்டது. இதில் தற்போதைய நிலையில் நியுசிலாந்தில் உள்ள நேயர் மன்றம் மிகவும் பழமையானது. அதனை அடுத்து ஜப்பான் போன்ற நாடுகளில் செயல்படும் நேயர் மன்றங்கள் வருகின்றன.

இந்த நேயர் மன்றங்கள் சார்பில் சர்வதேச அளவிலும், அவ்வப்போது சிற்றலை ஒலிபரப்பு நிறுவனங்களும் நேயர்களின் கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்கின்றன.

இதில் பென்சில்வேனியாவில் சில ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற சிற்றலை நேயர்கள் கூட்டத்தில் 20 ஆயிரம் பேர் பங்கேற்றனர். உலகில் அதிக எண்ணிக்கையில் சிற்றலை நேயர்கள் பங்கேற்ற கூட்டம் என இது சிறப்பு பெற்றது.

இதுவரை வெளிநாடுகளிலேயே இத்தகைய கூட்டங்கள் நடைபெற்ற நிலையில் இந்தியாவில் உள்ள சிற்றலை நேயர்களை ஒருங்கிணைத்து கூட்டம் நடத்த வேண்டும் என்ற திட்டம் நிறைவேறாமலேயே இருந்துவந்தது.

தற்போது இப்படிப்பட்ட நேயர்கள் ஒரே இடத்தில் சங்கமித்த அரிய நிகழ்வு அண்மையில் பொள்ளாச்சியின் புளியம்பட்டியில் நடந்தது. அமெச்சூர் வானொலி ஒலிபரப்பாளர் சங்கங்கள் நடத்திய இந்த நிகழ்ச்சியில்  60-க்கும் மேற்பட்டோர் சிற்றலை நேயர்கள் எனப் பதிவு செய்து, கூட்டத்தில் பங்கேற்றனர்.  இவர்களைத் தவிர அமெச்சூர் ஒலிபரப்பில் ஈடுபட்டுள்ள 400-க்கும் மேற்பட்டோரும் பங்கேற்றனர். தமிழகத்தில் இருந்து வந்தவர்கள் மட்டுமல்லாது, அமெரிக்கா, ஜப்பான், வியட்நாம், கொரியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து வந்திருந்த சிற்றலை நேயர் மன்ற நிர்வாகிகளும் இதில் பங்கேற்றது சிறப்பாக அமைந்திருந்தது.

அரிதானது எனக் கருதப்படும் தொலைதூரத்தில் உள்ள சிறிய சிற்றலை ஒலிபரப்பு நிறுவனங்களிடம் இருந்து தாங்கள் பெற்ற கியு.எஸ்.எல். அட்டைகளைப் பரஸ்பரம் பரிமாறிக் கொண்டது அனைவருக்கும் மகிழ்ச்சி அளிப்பதாக இருந்தது'' என்றார்.

""சிற்றலை வானொலி கேட்பது என்பது, வெறும் பொழுதுபோக்கு சார்ந்த விஷயம் மட்டுமல்ல, முதலில் பல்வேறு மொழிகளை அடையாளம் காண உதவும் ஒரு பெரிய கருவியாக அமைந்துள்ளது. அதற்கு பிறகு, வெவ்வேறு நாடுகளின் கலாசாரம், பண்பாடு மற்றும் தற்போதைய நிகழ்வுகளை இருந்த இடத்திலிருந்தே அறிந்து கொள்ள உதவும் ஊடகமாக அமைந்துள்ளது.

40 ஆண்டுகளுக்கு முன்னர் ஜப்பானில் பள்ளிகளில் தொடங்கப்பட்ட வானொலி நேயர் மன்றங்கள் மூலம் சிற்றலை வானொலி கேட்கும் பழக்கம் எங்களிடம் பிரபலமானது. ஜப்பானியர்கள் ஆங்கிலம் உள்ளிட்ட உலகின் பிற மொழிகளைக் கற்றுக் கொள்ளும் அளவுக்கு அந்தப் பழக்கம் ஊக்கமளித்தது என்றால் அது மிகையல்ல.

ஆனால், புதிய தலைமுறையினரிடம் போதிய ஊக்கமின்மை காரணமாக சிற்றலை வானொலி கேட்கும் பழக்கம் மெல்ல மெல்ல நலிந்து வருவது எங்களைப் போன்றவர்களுக்கு வருத்தம் அளிப்பதாக அமைந்துள்ளது'' என ஜப்பானில் இருந்து இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காகவே வந்திருந்த ஜப்பான் சிற்றலை வானொலி நேயர் மன்றத்தின் நிர்வாகக் குழு

உறுப்பினர் தோஷிமிச்சி ஹோடாகே கூறினார்.

தமிழகத்தில் 40 வயதை கடந்தவர்களில் சுமார் 50 லட்சம் பேர் சிற்றலை வானொலி நேயர்களாக உள்ளனர்.

""ஜெயின்ட் ஹெலினா, வாய்ஸ் ஆப் அமெரிக்கா, வாய்ஸ் ஆப் துருக்கி, ரேடியோ ருமேனியா உள்ளிட்ட பல நிலையங்களின் ஒலிபரப்புகள் தமிழக சிற்றலை நேயர்களிடம் பிரபலமானதாக உள்ளன. இருப்பினும், புதிய தலைமுறை அமெச்சூர் ஒலிபரப்பாளர்கள் பலரிடம் சிற்றலை வானொலி ஒலிபரப்பு இன்னமும் பிரபலமாகாத ஒன்றாக மாறிவருகிறது. இத்தகைய கூட்டங்களைத் தொடர்ந்து நடத்துவதன் மூலமே சிற்றலை ஒலிபரப்புகளை கேட்பதில் உள்ள சுவாரஸ்யத்தை அடுத்த தலைமுறையினருக்குப் புரியவைக்க முடியும்'' என்றார் ஜெய சக்திவேல்.

20ஆம் ஆண்டில் புலிகளின் குரல் வானொலி

ஒர்நாட்டின் அரசாங்கத்தின் நிலையினையும், பன்னாடுகளின் நிலையினையும் மக்களுக்கு தெரிவிக்கும் கருவியாக காணப்படுவது ஊடகங்கள். ஊடகங்களின் நிலையில்தான் மக்கள் தங்கிஇருக்கின்றார்கள். அச்சு ஊடகங்கள் இலத்திரனியல் ஊடகங்கள் என்று மக்களுக்கு கருத்து கூறும் ஊடகங்களாக காணப்படுகின்றன.

இவ்வாறுதான் விடுதலைக்காக போராடிக்கொண்டிருக்கும் போரளிகளால் தமது விடுதலையினையும் விடுதலை தொடர்பாக மக்களுக்கான கருத்துக்களையும் வழங்கும் ஊடாகமாக 21ஆம்நாள் நவம்பர் மாதம் 1990 ஆண்டு புலிகளின் குரல் வானொலி தமிழ்த் தேசியத்தலைவர் அவர்களினால் தொடங்கிவைக்கப்படுகின்றது.

யாழ்குடாநாட்டினை முதன்மையாக கொண்டு அன்றைய காலப்பகுதியில் விடுதலைப்புலிகளின் செயற்பாடுகள் காணப்படுகின்றன, யாழ்ப்பாணத்தில் மக்கள் செறிந்துவாழும் நிலையில் யாழ்ப்பாண கோட்டைக்கு அருகில் வைத்து பண்பலையில் 98 அதிர்வெண்ணில் புலிகளின் குரல் வானொலி இயங்கிக்கொண்டிருந்தது.

தமிழீழ விடுதலையினை சீர்குலைக்கும் நோக்கில் சில தீயசக்திகளின் எதிர்ப்புக்களுக்கு மத்தியிலும்,நாசகார வேலைகளுக்கு மத்தியிலும் புலிகளின் குரல் தனதுசெயற்பாட்டினை மக்கள் மத்தியில் முன்னெடுத்துசெல்கின்றது.

சிறீலங்காப்படையினரின் வன்னிஇனஅழிப்பின் போது ஆறிற்கு மேற்பட்ட தடவை ஸ்ரீலங்காபடையின் வான்தாக்குதல்களைஎதிர்கொண்டு 2007 ஆம்ஆண்டு 11மாதம் 27 ஆம்நாள்கிளிநொச்சியில் அமைந்துள்ள புலிகளின் குரல் வானொலியின் நடுப்பணிமனை மீது சிறீலங்கா வான்படையினர் நடத்திய ஊடக அடக்குமுறையின் வான்தாக்கதலின போது வானொலியின் அறிவிப்பாளர் உள்ளிட்ட மூன்று பணியாளர்களை இழந்துள்ளது.

நாட்டுப்பற்றாளர்களான அறிவிப்பாளர் இசைவிழி, மற்றும் தொழில்நுட்டபவியலாளர்களான சுரேஸ்லிம்பியோ, தர்மலிங்கம் ஆகியோரை இழந்தது பின்னர் 23 தாடவைக்கு மேல் இடப்பெயர்வுகளை சந்தித்து முள்ளிவாய்கால் வரை மக்களுக்கான செய்தியினையும் விழிப்பினையும் சொல்லிக்கொண்டிருந்த நிலையில் மே மாதம் 15 ஆம்நாளுடன் தனது செயற்பாட்டினை பண்பலையில் இடைநிறுத்தியது, அதாவது ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களின் உரிமைக்குரலாகவும், எதிரியின் பொய்மைக்கு எதிரான, உண்மைக்குரலாகவும், ஓங்கிஒலிக்கவேண்டும் என்ற தமிழீழ தேசியத்தலைவர் அவர்களின் விருப்பத்துடன் செயற்பட்டுக்கொண்டிருக்கும் ஊடாகமாக அன்று புலிகளின் குரல் காணப்படுகின்றது, கடந்த ஆண்டு மே மாதத்தின் பின்னர் புலிகளின் குரல் வானொலி தனக்கான அறிவிப்புக்களை இணையத்தளத்திலும் செய்கோளிலும் தற்போதும் மேற்கொண்டுவருகின்றது அந்தவகையில் எதிர்வரும் மாவீரர் நாள் சிறப்பு ஒலிபரப்புக்களை சிற்றலை ஊடாக உலத்தமிழ்மக்களுக்கும் செய்கோள் மற்றும் பண்பலை ஊடாகவும் மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இன்றையநாள் வானோசை 20ஆம் ஆண்டில் புலிகளின் குரல் வானொலியோடு இணைந்துகொண்டிருக்கம் நேயர்கள் மற்றும் தமிழ் உறவுகள் அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

Thanks to Mr. Kalyan Kumar

Monday, November 01, 2010

தமிழோசை அலைவரிசை மாற்றம்

 
பிபிசி உலக சேவை
பிபிசி உலக சேவை

அக்டோபர் 31 ஆம் தேதி,2010 (ஞாயிற்றுக்கிழமை) முதல் தமிழோசை அலைவரிசைகளில் மாற்றம் இடம்பெறுகின்றது.

தமிழோசை நேயர்கள் மறு அறிவித்தல் வரும் வரை

41 மீட்டரில் 7600 கிலோ ஹேர்ட்ஸ்

31 மீட்டரில் 9605 கிலோ ஹேர்ட்ஸ்

25 மீட்டரில் 11965 கிலோ ஹேர்ட்ஸ்

49 மீட்டரில் 6135 கிலோ ஹேர்ட்ஸ்

ஆகிய சிற்றலை வரிசைகளிலும்

இலங்கை நேயர்கள் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் பண்பலை வலையமைப்பு மூலமாகவும் கேட்கலாம்