Friday, November 21, 2008

இலங்கை: வெற்றி எப்.எம்மின் நிர்வாகி கைது

இலங்கையில் ஊடகத்துறையை சேர்ந்த திரு லோஷன் அவர்கள், வெற்றி எப்.எம் மேலாளராக / இயக்குனராக இருக்கிறார்...

அவர் சிரீலங்கா அரசாங்கத்தால் சனிக்கிழமை அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார்...

வெற்றி எப்.எம்மின் மற்றொரு நிர்வாகியான சஞ்ஜெய்யும் கைது செய்யப்பட்டுள்ளார்...

பயங்கரவாதிகளுடன் தொடர்புவைத்திருந்தார் என்று அவரை கைது செய்யப்பட்டபோது அளிப்பட்ட குற்றச்சாட்டு சீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது...

கைது செய்யப்பட்டவர் இப்போது எங்கே இருக்கிறார் என்ற தகவல் கூட அவருடைய குடும்பத்தாருக்கு தெரிவிக்கப்படவில்லை...

இது ஜனநாயகமா ? இது தான் ஊடகவியலாளர்களை நடத்தும் முறையா ?

பயங்கரவாதிகளோடு தொடர்புள்ளவர் எப்.எம் நடத்திக்கொண்டு, வீட்டில் வாழ்ந்துகொண்டு இருந்தார் என்று கூறுவதை ஏற்றுக்கொள்ளமுடியாது...

ஊடகவியலாளர் என்ற அடிப்படையில் அவருக்கு எந்த இயக்கத்தினரையும் தொடர்புகொள்ளவோ, சந்திக்கவோ கூட உரிமை உள்ளது....

அவர் எங்கே அடைத்து வைக்கப்பட்டுள்ளார் என்று கூட அறிவிக்காமல் இருக்கும் சிரீலங்கா அரசு தான் பயங்கரவாத செயலில் ஈடுபட்டுள்ளத்து...

ஊடகவியளார்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கவேண்டிய அரசு, பத்திரிக்கை சுகந்திரத்தை காக்கவேண்டிய அரசு, இப்படி செயல்படுவது முறையல்ல...

உடனே சர்வதேச அளவிலான அழுத்தங்கள் தந்து, லோஷன் அவர்களை காக்க நடவடிக்கை எடுக்க சர்வதேச சமுதாயம் தன்னால் ஆன முயற்சிகளை எடுக்கவேண்டும்...

பத்திரிக்கை சுகந்திரம் காக்கப்படவேண்டும்...

மனித உரிமைகள் காக்கப்படவேண்டும்...

பேச்சுரிமை, எழுத்துரிமை ஆகியவை நிலைநாட்டப்படவேண்டும்...

அவரது உயிருக்கு எந்த விதமான ஆபத்தும் ஏற்பட்டிருக்காது என்று நம்புகிறேன், அவர் நல்லபடியாக திரும்ப வரவேண்டும் !!!

சீரீலங்கா அரசாங்கத்துக்கு என்னுடைய கண்டனங்களை இந்த பதிவு மூலமாக தெரிவித்துக்கொள்கிறேன்...

வலைப்பதிவு உலகில் இருக்கும் ஊடகவியளாலர்கள் இந்த நிகழ்வை தமிழக முதல்வரின் பார்வைக்கு உடனே கொண்டுசெல்லவேண்டும் என்று தெரிவித்துக்கொள்கிறேன்...!!!

Source: http://tvpravi.blogspot.com

No comments: