Sunday, December 06, 2009

சமுதாய வானொலி செய்தி

 குஜராத் பல்கலைக் கழகத்தில் உள்ள தொடர்பியல் துறையால் வளாக சமுதாய வானொலி யானது தொடங்கப் பட்டுள்ளது. இதற்கான தொழில்நுட்ப உதவிகளை பி.இ.சி.ஐ.எல். நிறுவனத்தினர் செய்துள்ளனர்.

 ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள தர்மசாலாவில் புதிய வளாக சமுதாய வானொலியை அமைக்க அரசு அனுமதி அளித்துள்ளது. “திபெத்திய குழந்தைகளின் கிராமியப் பள்ளி” இந்த வானொலியை இயக்க உள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.

 “ஜகோ மும்பை” என்ற பெயரில் புதிய வளாக சமுதாய வானொலி Union Park Residents Association என்ற அமைப்பால் Khar Bandra, Mumbai பகுதியில் தெடங்கப் பட்டுள்ளது.

 தமிழகம், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கே.எஸ்.ஆர் கல்லூரியில் வளாக சமுதாய வானொலி அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

 ஹரியானாவில் உள்ள குர்கானில் இருந்து செயல்பட்டுவரும் The Restoring Force (TRF) என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்திற்கு சமுதாய வானொலியை தொடங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

No comments: