Thursday, March 29, 2012

வானொலி உரிம ஏலத்தில் ரூ.1,500 கோடி வருவாய் எதிர்பார்ப்பு

 மத்திய அரசு, எப்.எம். ரேடியோ 3வது பிரிவு ஏலத்தில் ரூ.1500 கோடி வருவாய் ஈட்ட திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் கூடுதலாக பல நகரங்களில் தனியார் வானொலி சேவை விரிவுபடுத்தப்படுத்துவதற்கான உரிமம் வழங்கும் இந்த ஏலத்தை மார்ச் மாதத்திற்குள் நடத்த முடியுமா என்பது சந்தேகமே என்று மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.

இதன் மூலமாக இந்தியாவில் தனியார் எப்.எம். ரேடியோ சானல்கள் சுமார் 1 லட்சம் மக்களை சென்றடையும் என்றும், மொத்தம் 227 நகரங்களில் எப்.எம். சானல்கள் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. (தினமணி, புதுடெல்லி, மார்ச் 20, 2012)

No comments: