Sunday, March 09, 2014

சிற்றலையின் காதலன்


வானொலியின் மீது ஆர்வம் கொண்டவர்கள் பல ஊர்களிலும் உள்ளனர். நண்பர் எம்.ஆர்.நாகேந்திரன் பல ஆண்டு கால நண்பர். சமீபத்தில் அவரை அவரது சொந்த ஊரான நாகப்பட்டிணம் மாவட்டத்தில் உள்ள விழுந்தமாவடியில்  சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. நண்பர் கல்யாணியிருப்பு எம்.கே.பழனிவேல் அவர்களுடன் சென்று சந்தித்தேன். தான் சிற்றலை வானொலிகளோடு கொண்டு இருந்த தொடர்பினை மலரும் நினைவுகளாக எங்களோடு பகிர்ந்து கொண்டார். 


 தான் உலகின் பல முக்கிய வானொலிகளோடு தொடர்பு கொண்டு உறுப்பினர் எண் வாங்கியதை எம்மோடு பகிர்ந்து கொண்ட போது அவரின் கண்களைப் பார்த்தேன். அதில் ஒரு ஏக்கம் தொக்கி நின்றதைக் காண முடிந்தது.



இன்றும் பல சிற்றலை வானொலி நேயர்கள் நான் உட்பட இவரைப் போன்றே இது போன்ற பொக்கிசங்களை பாதுகாத்து வருகிறோம். கீழே உள்ள இந்த பானாசோனிக் வானொலிப் பெட்டியில் தான் இவர் உலகின் பல வானொலிகளைக் கேட்டுள்ளார். வீட்டின் ஒரு அலமாரியில் நமது சர்வதேச வானொலி இதழ்களைப் பாதுகாத்து வைத்து இருந்தார்.அவற்றைப் பார்கையில் எம் மனதிற்கும் அந்த ஏக்கம் தொற்றிக்கொண்டது.


No comments: