Thursday, April 10, 2014

எண்ணியல் காலத்தில், தொழில் நுட்பத்தின் சீர்திருத்தம்

எண்ணியல் காலத்தில், தொழில் நுட்பத்தின் சீர்திருத்தமானது, உலகளவில் ஊடக நிலைமையில் என்னென்ன எந்த மாற்றங்களை ஏற்படுத்தும்? ஊடகத்துறையின் புத்தாக்க வளர்ச்சி, எந்தெந்த வாய்ப்புகளையும் அறைகூவல்களையும் எதிர்நோக்குகின்றது? ஊடகம் எந்த வழிமுறைகளில் புதிய ஆற்றலை உருவாக்கி, மனித நாகரிகத்தின் வளர்ச்சிப் போக்கில் மேலதிக கடமைகளை ஏற்றுக்கொள்ளும்?போ ஆவ் ஆசிய மன்றத்தின் 2014ஆம் ஆண்டு கூட்டத்தின் போது நடைபெறும் ஒரு கருத்தரங்காக, சீன வானொலி நிலையமும் போ ஆவ் ஆசிய மன்றமும் கூட்டாக ஏற்பாடு செய்யும் ஊடக தலைவர்களின் வட்ட மேசைக் கூட்டம் உலகின் 20 நாடுகளின் ஊடகத் தலைவர்கள் சீனாவின் போ ஆவிற்கு வந்து, எண்ணியல் காலத்தில் ஊடகத்தின் வாய்ப்புகளையும் எதிர்நோக்கும் அறைகூவலை, செய்தி ஊடக புத்தக்கத்தையும் கடமையையும் பற்றி விவாதிப்பார்கள்.

 
போ ஆவ் ஆசிய மன்றத்தின் 2014ஆம் ஆண்டுக் கூட்டத்தின் முக்கிய கருத்தரங்கான செய்தி ஊடகத் தலைவர்களின் வட்ட மேசைக் கூட்டத்தை சீன வானொலி நிலையமும் போ ஆவ் ஆசிய மன்றமும் கூட்டாக நடத்துகின்றன. இக்கூட்டம் ஏப்ரல் 8ஆம் நாள் ஹெநான் மாநிலத்தின் போ ஆவ் நகரில் துவங்கியது. பல நாடுகளைச் சேர்ந்த 20க்கு மேலான செய்தி ஊடகங்களின் தலைவர்கள், ஒன்று கூடி, எண்ணியல் காலத்தில், செய்தி ஊடகங்களின் அறைகூவல்களையும் வாய்ப்புகளையும் பற்றி விவாதிப்பர்.

No comments: