Monday, June 30, 2014

இளம் வானொலி தொகுப்பாளர்: 9 வயது மாணவி சாதனை

சென்னையை சேர்ந்த 9 வயது மாணவி இளம் வானொலி நிகழ்ச்சி தொகுப்பாளராக இந்திய அளவில் சாதனை படைத்துள்ளார்.
சென்னை வேளச்சேரி தண்டீஸ்வரம் நகரைச் சேர்ந்தவர் கோபி வெங்கடேசன். இவரது 9 வயது மகள் ராதா ராகமாலிகா.
இவர் ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் 5-ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில், சென்னை சைதாப்பேட்டையில் உள்ள இணையதள ஏஃப்.எம் ரேடியோவில் (ஜ்ஜ்ஜ்.ம்ஹள்ஹப்ஹ.ச்ம்) 1 மணி நேர நிகழ்ச்சியை வெள்ளிக்கிழமை காலை (ஜூன் 6) அவர் தொகுத்து வழங்கினார். இதனை, இளம் வானொலி நிகழ்ச்சி தொகுப்பாளராக இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்டு மற்றும் தமிழ்நாடு புக் ஆஃப் ரெக்கார்டு ஆகியவை அங்கீகரித்துள்ளது. இதற்கான சான்றிதழ்களை இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்டின் நடுவர் விவேக் ராஜா மற்றும் தமிழ்நாடு புக் ஆஃப் ரெக்கார்டின் நடுவர் பாலகிருஷ்ணன் ஆகியோர் வெள்ளிக்கிழமை வழங்கினர்.
இது குறித்து ராதா ராகமாலிகாவின் தத்தை கோபி வெங்கடேஷ், தாய் பாபி ஆகியோர் கூறியது:
சிறு வயதிலிருந்தே படிப்பு, விளையாட்டு, கலை என அனைத்திலும் ஆர்வம் கொண்டவராக ராதா ராகமாலிகா விளங்கி வருகிறார். அதன் ஒரு பகுதியாக, தற்போது இளம் ரேடியோ நிகழ்ச்சித் தொகுப்பாளராகச் சாதனைப் படைத்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. இதற்கான பயிற்சியை கடந்த 6 மாதங்களாக அவர் எடுத்து வந்ததாக அவர்கள் கூறினர்.
நன்றி: http://www.dinamani.com/ First Published : 07 June 2014 

No comments: