Friday, July 15, 2016

வங்கதேச மக்களுக்காக பெங்காலி மொழியில் சிறப்பு வானொலி: 6 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் தொடங்குகிறது இந்தியா

கடந்த 1971-ல் வங்கதேச விடு தலைப் போரின்போது பெங்காலி மொழிக்கான சிறப்பு வானொலியை இந்தியா தொடங்கி யது. கொல்கத்தாவில் இருந்து செயல்பட்ட இந்த வானொலியில் இந்திய செய்திகள் மற்றும் நிகழ்ச்சிகள் பெங்காலி மொழியில் ஒலிபரப்பப்பட்டன. இந்தியா விடுதலை அடையும் முன் நம் நாட்டின் ஒரு பகுதியாக இருந்த வங்கதேசத்திலும் (கிழக்கு வங்காளம்) பெங்காலி மொழி பேசப்படுகிறது. இதனால் அகில இந்திய வானொலி நிலையத்தின் சிறப்பு வானொலிக்கு வங்கதேச மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. என்றாலும் கருவிகள் பழுதடைந்ததன் காரணமாக கடந்த 2010-ல் இதன் ஒலிபரப்பு நின்றது. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு வங்கதேசம் சென்றபோது, இது குறித்து அவரது கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது. இதைய டுத்து பழுதான கருவிகளுக்கு பதிலாக அதிக சக்திவாய்ந்த நவீன கருவிகளுடன் சிறப்பு வானொலி நிலையம் மீண்டும் செயல்படத் தயாராகி வருகிறது.
இது குறித்து 'தி இந்து'விடம் அகில இந்திய வானொலி நிலையத்தின் டெல்லி அதிகாரிகள் கூறும்போது, "ஆகாஷ்வாணி மைத்ரீ என்ற புதிய பெயரில் இந்த வானொலி செயல்பட உள்ளது. இதன் தொடக்க விழா கொல்கத்தாவில் ஜூன் 28-ம் தேதி நடைபெற உள்ளது. குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்க உள்ளனர். ஒலிபரப்பு தற்போது 16 மணி நேரமாக அதிகரிக்கப்படுகிறது. தொடர்ந்து வங்கதேச மக்களுக்காக பண்பலை (எப்.எம்) ஒலிபரப்பு தொடங்கவும் திட்டமிடப்பட்டு வருகிறது" என்று தெரிவித்தனர்.
இதுபோல் ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாட்டுக்காக செயல் படும் வானொலி நிலையம் இந்தியாவில்தான் முதன் முதலில் தொடங்கப்பட்டதாக கருதப்படு கிறது. பெங்காலி மட்டுமின்றி, அண்டை நாடுகளிலும் பேசப்படும் இந்திய மொழிகளான தமிழ், இந்தி, உருது, நேபாளி போன்ற வற்றிலும் வானொலி ஒலிபரப்பு செய்யப்படுகிறது.
தமிழ் மொழியில் செயல்பட்டு வரும் தெற்காசிய வானொலி யானது டெல்லி, தூத்துக்குடி, சென்னை ஆகிய இடங்களில் இருந்து ஒலிபரப்பாகிறது. மேலும் பல இந்திய மொழிகளிலும் வெளிநாடுவாழ் இந்தியர்களுக்காக வானொலி அலைவரிசைகள் ஒலிபரப்பப்பட்டு வருகின்றன.

No comments: