Saturday, August 13, 2016

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் முழு நேர வானொலி

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் முழு நேர வானொலி பண்பலை அலைவரிசை விரைவில் தொடங்கப்பட உள்ளது.
சிறியவர்கள் முதல் பெரியவர் வரை அனைவரும் தற்போது பண்பலை அலைவரிசையில் பாடல்களைக் கேட்டு வருகின்றனர். அதனால் பல முன்னணி நிறுவனங்கள், கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள் பண்பலை வானொலி மூலம் சேவையை அளித்து வருகிறது.
அதன் வரிசையில் தற்போது திருமலை திருப்பதி தேவஸ்தானமும் சேர உள்ளது. கடந்த 2006-ஆம் ஆண்டு கல்வி சேவைக்காக தேவஸ்தானம் ஓரியண்டல் கல்வி நிறுவனம் என்ற பெயரில் ஒரு பண்பலை அலைவரிசையை தொடங்க உரிமம் பெற்றது.
2007-ஆம் ஆண்டு 50 வாட் ஒலிபரப்பு திறன் கொண்ட (ச்ழ்ங்வ்ன்ங்ய்ஸ்ரீஹ்) பண்பலையை தொடங்கியது. அதன் மூலம் திருப்பதி நகரைச் சுற்றி 10 கி.மீ. சுற்றளவுக்கு பண்பலை சேவை தொடங்கப்பட்டது. இந்த பண்பலை அலைவரிசை மூலம் தற்போது 10 மணிநேரம் நிகழ்ச்சிகள் ஒலிபரப்பட்டு வருகிறது.
இதை மேலும் விரிவுபடுத்த தேவஸ்தான அதிகாரிகள் முடிவு செய்து வரும் 20-ஆம் தேதி முதல் 250 வாட் ஒலிபரப்புத் திறன் கொண்ட முழுநேர பண்பலை அலைவரிசையை தொடங்க ப்பட உள்ளது. இதற்காக புதிய குழு ஒன்றை தேவஸ்தானம் ஏற்படுத்தி உள்ளது.
Source: Dinamani

No comments: