Wednesday, August 08, 2018

முதல் பண்பலை ஒலிபரப்பு


 

இன்று வானொலி என்றாலே எஃப்.எம் என்று சொன்னால் மட்டுமே தெரிகின்றது. அந்த அளவிற்கு பண்பலை வானொலிகள் மக்கள் மத்தியில் புகழ்பெற்று விளங்குகிறது. அதற்கு மிக முக்கிய காரணம், அதன் தெளிவு. பண்பலை வானொலியின் ஆய்வு 1930-களில் அமெரிக்காவில் தொடங்கப்பட்டது. ஆனால் யார் முதல் சோதனை ஒலிபரப்பினை செய்தார்கள்? யார் முதல் அதிகாரப்பூர்வ ஒலிபரப்பினை செய்தார்கள் போன்றவற்றில் இன்றும் சர்ச்சை உண்டு.

 

எட்வின் ஆம்ஸ்ட்ராங் அவர்களால் W2XMN எனும் வானொலியில், முதல் பண்பலை ஒலிபரப்பானது சோதனை முறையில் ஒலிபரப்பப்பட்டது என்று சொன்னாலும், 1937-ல் W1XOJ எனும் வானொலி மசாசூட்ஸில் தனது முதல் பண்பலை  சோதனை ஒலிபரப்பினை செய்ததுவும் வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது. 1939, 24 ஜூலையில் முறையான பண்பலை ஒலிபரப்பு தொடங்கப்பட்டதாக ‘ரேடியோ ஆன்லைன்’ இணையதளம் கூறுகிறது. இப்படியாக பண்பலை வானொலியின் வரலாறு சென்றாலும், இந்தியாவில் முதல் பண்பலை ஒலிபரப்பானது, 23 ஜூலை 1977-ல் சென்னையில் அகில இந்திய வானொலியால் தொடங்கப்பட்டது. இதற்கான ஆன்டனாக்கள், தூர்தர்ஷன் டவரில் அமைக்கப்பட்டது.

No comments: