எம்.ஓ.பி. வைஷ்ணவ் மகளிர் கல்லூரி (தன்னாட்சி) தனது எம்.ஓ.பி. சமுதாய வானொலி நிலையம் 107.8 MHz. சார்பில் தேசிய வானொலி கருத்தரங்கை நடத்துகிறது. "சமுதாய சேவையை கொண்டாடும் 20வது தேசிய வானொலி கருத்தரங்கு" என்ற தலைப்பில் இந்த கருத்தரங்கு நடைபெற உள்ளது.
இந்த கருத்தரங்கின் தொடக்க விழா கல்லூரியின் இரண்டாம் தளத்தில் உள்ள கலையரங்கில் மார்ச் 12, 2025 காலை 9.30 மணிக்கு நடைபெறுகிறது. தமிழக அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் அதிகாரமளிப்புத்துறை அமைச்சர் திருமதி பி. கீதா ஜீவன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கருத்தரங்கைத் தொடங்கி வைக்கிறார். மேலும், சமுதாய வானொலி முன்னோடி டாக்டர். ஸ்ரீதர் ஆர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்கிறார்.
* முன்னாள் இயக்குனர் திரு. எம்.எஸ். பெருமாள், தூர்தர்ஷன் கேந்திரா, சென்னை அவர்கள் "சமுதாய வானொலிக்கான பயனுள்ள திட்ட மேலாண்மை" என்ற தலைப்பில் உரையாற்றுகிறார்.
* சென்னை பல்கலைக்கழகத்தின் இதழியல் மற்றும் தகவல் தொடர்புத் துறையின் உதவிப் பேராசிரியர் திரு. ஜெய்சக்திவேல் அவர்கள் "சமுதாய ஈடுபாடு மூலம் மக்களுக்களுடன் பாலங்களை உருவாக்குதல்" என்ற தலைப்பில் உரையாற்றுகிறார்.
இந்த கருத்தரங்கு சமுதாய வானொலியின் முக்கியத்துவம் மற்றும் அதன் பங்களிப்பு குறித்து விவாதிக்க ஒரு தளமாக அமையும். மேலும், சமுதாய வானொலி துறையில் உள்ள சவால்கள் மற்றும் வாய்ப்புகள் குறித்து நிபுணர்கள் மற்றும் பங்கேற்பாளர்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்கிறார்கள்.
இந்த கருத்தரங்கில் கலந்து கொள்ள வானொலி நேயர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும், இது தொடர்பான கூடுதல் தகவல்களைப் பெற கல்லூரியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்வையிடலாம்.
No comments:
Post a Comment