Sunday, September 13, 2009

புதிய ஐ.ஆர்.சி அறிமுகம்

சர்வதேச வானொலி கேட்கின்ற பெரும்பாலான நேயர்கள் கடிதம் எழுதும் பொழுது இந்த ஐ.ஆர்.சி-யை இணைத்து அனுப்புவர். அது சரி, ஐ.ஆர்.சி என்றால் என்ன? ஆங்கிலத்தில் இண்டர்நேசனல் ரிப்ளே கூப்பன் என்பதன் சுருக்கமே ஐ.ஆர்.சி. இதனை ஐக்கிய நாடுகள் சபையினர் வெளியிடுகின்றனர். உலகின் அனைத்து நாடுகளின் தபால் துறையினரும் இந்த ஐ.ஆர்.சி-யை ஏற்றுக்கொண்டு அந்த அந்த நாட்டின் தபால் தலையை வழங்குவர்.ஒரு சில வானொலிகள் ஐ.ஆர்.சி-யை அனுப்பினால் மட்டுமே வண்ண அட்டை மற்றும் நிகழ்ச்சி நிரல் பட்டியல்களை அனுப்புவர். காரணம் பொருளாதார நெருக்கடி காரணமாக இவை ஐ.ஆர்.சி-யை நேயர்களிடம் கேட்கின்றனர்.

பத்து ஆண்டுகளுக்கு முன்பு சிறிய அளவில் இருந்த ஐ.ஆர்.சி தற்பொழுது தபால் அட்டை அளவில் வெளியிடப்பட்டு வருகிறது. சமீப காலமாக நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை புதிய ஐ.ஆர்.சி-யை வெளியிட்டு வருகின்றது.பாப்புவா நியு கினியா, மத்திய ஆப்பிரிக்கா மற்றும் கிரீன்லாந்து போன்ற நாடுகளின் வானொலிகளுக்கு எழுதும் போது ஐ.ஆர்.சி-யை இணைத்து அனுப்பினால் மட்டுமே பதில் அனுப்புவர். தற்பொழுது உள்ள ஐ.ஆர்.சி வரும் டிசம்பர் 2009-டன் நிறைவடைகிறது.இந்தியாவில் உள்ள தபால் நிலையங்களில் ஒரு ஐ.ஆர்.சி-க்கு ரூ. 15-க்கான தபால் தலைகளை வழங்குவர்.

ஆனால் அதே ஐ.ஆர்.சி-யை இங்கு வாங்க வேண்டும் என்றால் ரூ. 50 கொடுக்கவேண்டும். ஆனால் தற்பொழுது ரூ. 50 கொடுத்தாலும் ஐ.ஆர்.சி கிடைப்பதில்லை.மாநிலத்தின் தலைநகரில் உள்ள தலைமைத் தபால் நிலையங்களில் கூட இன்று ஐ.ஆர்.சி கிடைப்பது அரிதாக உள்ளது. அடுத்த ஆண்டு வெளி வருகின்ற புதிய ஐ.ஆர்.சி-யாவது இந்தியாவில் கிடைக்குமா?வெளிநாடுகளில் உள்ள ஹாம்கள் இந்த ஐ.ஆர்.சி-யை விற்பனை செய்கின்றனர். தேவைப்படுவோர் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரிகள்: Emails: EA5KB@telefonica.net, EA7FTR@gmail.com, EB7AEY@gmail.com

No comments: