Sunday, January 17, 2010

வளரும் நாடுகளில் சமுதாய வானொலி


வளர்ந்த நாடுகள் மற்றும் வளரும் நாடுகளில் உள்ள சமுதாய வானொலிகளின் சேவை எவ்வாறு உள்ளது? மின்னக்கல் இ. செல்வராஜ்,

சமுதாய வானொலிகள் ஒரு குறுகிய வட்டத்திற்குள் அந்த அந்த பகுதிகளில் உள்ள மக்களுக்காக செயல்பட்டு வருபவை ஆகும். வளர்ந்த நாடுகளில் பல ஆண்டுகளுக்கு முன்பே இது போன்ற ஒலிபரப்பு சேவை தொடங்கிவிட்டது. ஆனால் இந்தியா போன்ற வளர்ந்த நாடுகளில் தற்பொழுது தான் இந்த சேவைகளைச் செய்ய அரசு அனுமதி அளித்து வருகிறது.

ஆனால் வளரும் நாடுகளான பிலிப்பைன்ஸ், இலங்கை மற்றும் ஒரு சில ஆப்பிரிக்க நாடுகளில் 10 ஆண்டுகளுக்கு முன்பே இது போன்ற சமுதாய வானொலிகள் தொடங்கப்பட்டுவிட்டது. ஆனால் இந்தியாவில் முதலில் வளாக சமுதாய வானொலியை தொடங்கவே அரசு அனுமதி அளித்தது. சமீபத்தில் தான் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
தமிழத்தில் முதல் வளாக சமுதாய வானொலி அண்ணா எப்.எம், இது சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் செயல்பட்டு வருகிறது. அதே போன்று முதல் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தால் தொடங்கப்பட்ட வானொலி களஞ்சியம் அமைப்பினால் நாகபட்டினத்திற்கு அருகில் செயல்பட்டு வருகிறது.

வரும் காலத்தில் ஒவ்வொரு தாலுக்காவுக்கும் ஒரு சமுதாய வானொலி வரவுள்ளது. குறிப்பாக ராசிபுரத்தில் ஒரு வானொலி என்றும் நாமக்கல்லில் ஒரு வானொலி என பல வானொலிகள் வர வாய்ப்புள்ளது.

No comments: