Monday, February 21, 2011

புலிகளின் குரல் வானொலியை தொடர்ந்து ஒலிக்க உதவுங்கள் – புலிகளின்குரல் நிறுவனம்

அன்பான எமது உறவுகளே,
மே 2009ற்கு பின்னரான இந்த இடர்மிகு காலகட்டத்தில் இத்தனை நாட்களாக இணையத்தளத்திலும் செய்கோளில் இடைவிடாது ஒலித்து வந்த புலிகளில்குரல் வானொலி தற்போது இணையத்தில் மட்டும் ஒலிக்கின்றது என்பதை யாவரும் அறிவீர்கள்.

புலிகளின்குரல் வானொலி (இணையத்தளத்தில் மட்டும்)தொடர்ந்து சேவையாற்றுவது உலகத்தமிழர் அனைவரினதும் கைகளில் தான் தங்கியுள்ளது.

இன்று எமது வானொலி தன்னை இயங்க வைப்பதற்கு மாதம் ஒன்றிற்கு குறைந்தது 500ய+ரோக்களை எதிர்பார்த்து நிற்கின்றது.

(பணியாளர்களின் உணவு,ஒலிப்பதிவுகூட-அலுவலக வாடகை, இணையஇணைப்பு, சேர்வர்)

எத்தனையோ ஆயிரக்கணக்கான தமிழ்மக்கள் வாழும் இந்த உலகத்தில் 50 உறவுகள் மாதம் ஒன்றுக்கு 10யூரோக்களை வழங்கினாலேயே போதுமானதாகும்.

புலிகளின்குரல் வானொலி ஒவ்வொரு தமிழரினதும் தேசிய உடமையாக உள்ளதனால் அனைத்து தமிழ் மக்களும் இதன் வளர்ச்சியல் பங்கெடுக்க உரிமையுள்ளவர்கள்.

போதிய அளவில் பொருளுதவி கிடைக்காதுவிடில் எமது வானொலி அதன் செயற்பாட்டை முழுவதுமாக நிறுத்திவிடும் அபாயம் உள்ளது. ஆகவே நீங்கள் ஒவ்வொருவரும் உங்களால் முடிந்தளவு சிறு தொகைப்பணத்தை மாதாமாதம் எமக்கு அன்பளிப்பாக வழங்க முன் வாருங்கள் என நாம் உங்களை உரிமையுடன் கேட்டுக்கொள்கின்றேம்.

நன்றி

புலிகளின்குரல் நிறுவனம்

15.02.2011

எம்முடன் தொடர்பு கொள்வதற்கு

E.mail info@pulikalinkural.com

http://votradio.com/teradio/Donate.htm

நீங்கள் உதவி செய்த பின்பு மின்னஞ்சல் மூலம் உங்கள் பெயர் விபரங்களை அனுப்பி வைக்கவும்.
(நீங்கள் வீரும்பினால்)நாம் அவைகளை எமது வானொலியின் வளர்ச்சியின் பதிவில் உங்களையும் பதிவு செய்து கொள்வதற்கு- நன்றி-

tamilthai.com 


No comments: