Wednesday, September 07, 2011

புதிதாக 806 தனியார் பண்பலைகள்

தனியார் பண்பலை வானொலிக்கான மூன்றாவது கட்ட ஏலத்தினை விட்டுள்ளது மத்தியஅரசு. இதன் மூலம் புதிதாக இன்னும் 806 தனியார் பண்பலை வானொலிகள் இந்தியா முழுவதும் தொடங்கப்பட உள்ளன. இந்த முறை ஏலத்தினை இணையம் மூலமாகவே விட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த ஏலத்தின் மூலம் அரசுக்கு ரூ,1733 கோடி ரூபாய் வருவாய் வரகவுள்ளது.

மேலும் இந்த முறை அந்நிய முதலீடும் 20ல் இருந்து 26 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் 31 புதிய தனியார் தொலைக்காட்சிகளுக்கும் அனுமதியை வழங்கியுள்ளது அமைச்சகம். தற்சமயம் 653 தனியார் செயற்கைக்கோள் தொலைக்காட்சிகள் இந்தியாவில் ஒளிபரப்பாகி வருவதாக மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சர் அம்பிகா சோனி பிடிஐ-க்கு
வழங்கிய ஒரு செவ்வியில் தெரிவித்து உள்ளார். (பொள்ளாச்சி விஜயன் உதவியுடன்)

No comments: