Wednesday, September 21, 2011

வாய்ஸ் ஆப் ஜெர்மனி மூடப்படவுள்ளது.

வாய்ஸ் ஆப் ஜெர்மனி - கடந்த மே 18ஆம் தேதி ஜெர்மன் வானொலியால் வெளியிடப்பட்ட பத்திரிகை செய்தி நீண்ட கால ஜெர்மன் வானொலி நேயர்களுக்கு அதிர்ச்சியைத் தருவதாக இருந்தது. ஆம், வரும் நவம்பர் 1, 2011 முதல் தனது சிற்றலை சேவையை இந்தியாவுக்கு செய்யப் போவது இல்லை என அறிவித்துள்ளது. ஜெர்மன், ரஷ்யன், பார்சி மற்றும் இந்தோனேசிய சேவைகளையும் முற்றிலுமாக நிறுத்தவுள்ளதாகவும், இனி ஆங்கில சேவை ஆப்பிரிக்காவுக்கு மட்டுமே செய்யப்படும் என அறியத்தருகிறது அந்த செய்திக்குறிப்பு.

இதைவிட அதிர்ச்சியான தகவல் என்னவெனில் இலங்கை, திரிகோணமலையில் செயல்பட்டு வந்த ஜெர்மன் வானொலிக்கான சிற்றலை அஞ்சல் நிலையம் மூடப்படவுள்ளது. இந்த அஞ்சல் நிலையம் தான் இந்தியாவிற்கான முதல் டி.ஆர்.எம் சேவையைச் செய்தது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. நாள் ஒன்றிற்கு 20 மணிநேரம் இந்த அஞ்சல் பல்வேறு நாடுகளுக்கு இங்கிருந்து ஒலிபரப்பி வந்தது. (இது பற்றிய விரிவான கட்டுரையை “ஜெர்மன் வெளியே? சீனா உள்ளே??” என்ற
தலைப்பினில் இலங்கையின் பிரபல நேயர் விக்டர் குணத்திலகே www.dxasia.info
எனும் இணைய தளத்தினில் எழுதியுள்ளார்கள். – ஆசிரியர்)

No comments: